Aggregator

தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

3 months 1 week ago
வெட்கம் கெட்ட சிங்களவன். போயும்… போயும் திருநங்கையின் உடல் உறுப்பை தொட்டுப் பார்த்திருக்கின்றான். இவனால், ஶ்ரீலங்காவுக்கே அவமானம். 54 வயதிலை…. அதை, சுருட்டி வைக்கிறதை விட்டுட்டு… போற வாற இடம் எல்லாம் நீட்டிக் கொண்டு திரிந்தால் செருப்படி வாங்க வேண்டும். ஆமா… 😂

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
இங்கே விமானங்கள் பற்றி நான் எதுவும் பேசவில்லை. மில்லர் சென்று வெடித்து தான் அந்த இடத்தை தகர்க்கவேண்டும் என்ற நிலை அன்றே இருக்கவில்லை.....

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
கரும்புலிகள் உருவான போது புலிகளிடம் சீருடையே இருக்கவில்லை அண்ணை. அந்த சமயத்தில் அவர்களிடம் இருந்தது கடற்புறா எனும் இரு அதிவேக அவுட் போர்ட் மோட்டார் பூட்டிய படகு மட்டுமே. அப்போ விமானத்தை எதிர்க்க 50 கலிபர் கொடு என பூரியையிம் நட்வர் சிங்கையும் கேட்டு கொண்டிருந்த காலம். அந்த காலத்தில் விமானம் வாங்கவில்லை என்பது தவழும் குழந்தை ஒலிம்பிக் 100மீட்டரில் தங்கம் வெல்லவில்லை என ஆதஙப்படுவது போல். இங்கே ஒப்பிட கூடிய காலம் - அனுராதபுர, கட்டுநாயக்கா தாக்குதல் காலங்கள் மட்டுமே. இரெண்டு காலத்திலும், மனம், பணத்துக்கு அப்பால்…. கீழ் கண்ட காரணங்களே பெரிதும் பங்களித்தன அப்போ கிளைடர், இலகு ரக விமானம், கனரக போர்/சரக்கு விமானம் என்பனவே இருந்தன. இதில் கிளைடர் ஆனையிறவு காலத்தில் வன்னியில் ஒன்றாவது இருந்தது. இலகு விமானம் இரெண்டாவது அதன் பின் வந்தது. கனரக விமானங்களை வாங்கும், பேணும், மறைத்து வைக்கும் இயலுமை எப்போதும் இருக்கவில்லை. பேச்சுவார்த்தையின் பின் இவற்றிர்கான வழங்கல் கூட பெரிதும் முடக்கப்பட்டது. ஆகவே புலிகளும் விமானம் வாங்கி ஓட்டி இருப்பார்கள் மக்களிடம் மனம்/பணம் இருக்கவில்லை என்பது சரியான காரணம் இல்லை.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
உங்கள் நூல்களில் வரவில்லை என்றால் அப்படி இல்லை என்பது தானே நீங்கள் சொல்வது. பின்பு ஏன் treaty ஐ நீங்கள் பார்க்க வேண்டும்? ஏன் அரசுகளில் இருக்கும் (கபட சிந்தனை) போல (மறைக்க) சிந்திக்க வேண்டும், அல்லது மறைப்பதை கண்டுபிடிக்க அல்லது குறைக்க சிந்திக்க வேண்டும், குறிப்பாக அணு ஆயுதத்துக்கு வரும் போது? நீங்கள் உங்கள் நூல்களோடு இருங்கள்.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 2 weeks ago
வரலாற்று நூல்களை வாசித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும். நூல்களில் ஒப்பந்தம் அப்படியே இருக்காது (ஏனெனில் ஒப்பந்தமே ஒரு நூல் சைசில் இருக்கும்😂). ஆனால்,புத்தகங்கள் ஒப்பந்தத்தின் இப்படியான விடயங்களைத் தொட்டுச் செல்லும். இது போன்ற சுவாரசியமான விடயங்கள் வரலாற்று நூல்களில் இருக்கும். உங்கள் கேள்வியின் படி நீங்கள் இப்படியான விடயத்தைக் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை வாசித்திருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன். ஆனால், இங்கே இணைக்கும் படி நான் கேட்கப் போவதில்லை! ஏனெனில் பிரின்டில் வாசித்திருப்பீர்கள், அப்படித் தானே😎?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
வேற browserஅ பயன்படுத்திப் பாருங்க. இல்லாட்டி, உங்கட internet historyஅ அழிச்சுப் பாருங்க. Modemத நிப்பாட்டிப் போட்டு திரும்பவும் தொடக்கியும் பாருங்க. VPN பாவிக்கிறீங்களா. அதுவும் சிலவேலை அலுப்படிக்கும். தளத்தில பிரச்சினை இல்லை. நமக்கெல்லாம் தடை இல்லாம வேலை செய்தது. செய்கிறது.

தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

3 months 2 weeks ago
இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லையா?? வேலை திருமணம் வசிப்பிடம். ........போன்றவை

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 2 weeks ago
உங்கள் நூல்களில் treaty ஏதாவது முழுமையாக இருந்ததா? அல்லது ஏதாவது ஒரு treaty ஐ முழுமையாக வாசித்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு treaty க்கும் விபரங்களின் தன்மை, அளவு வேறுபடும். இதில் விபரமாக இருக்கும் - எப்படி சரி பார்ப்பது என்ற முறை கூட. அநேகமாக அது மட்டும் தான் அல்ல என்பதும் இருக்கும் என்று நினைக்கிறன். இதில் உ.ம். செய்ம்மதி கண்காணிப்பு வார்த்தையால் முழு ருசியா / அமெரிக்காஅரச நிலபுலத்துக்கும். (இது ஒரு உ.ம். ஒன்றும் சொல்லாமல் (வேறு முறைகள், அல்லது குறிப்பிட்ட இடங்கள என்று சொல்லாமல் ) கருத்து (இதில்) சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவது.) இப்பொது ஈரானோடு நடக்கும் இழுபறியை பாபார்த்தால் இது வெளிப்டையாகத் தெரியும்.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 2 weeks ago
இப்படிப் பட்ட ஒரு நடைமுறை இருப்பதாக பனிப்போர் காலங்கள் பற்றி நான் வாசித்த எந்த நூலிலும் காணவில்லை (நீங்கள் கேட்க முதல், அவை அனைத்தும் அமெரிக்கர்களால் எழுதப் பட்ட நூல்களும் அல்ல!). ஆனால், "எழுத்தில் இருக்காது, நடைமுறையில் இருக்கும்" என்ற உங்கள் ஏனைய வாதங்கள் போல இதுவும் என நினைக்கிறேன். விமானங்கள் வெளியே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தமைக்கு மிகவும் எளிமையான இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று தயார் நிலை (readiness), இரண்டாவது இது போன்ற விமானங்களை hangar இனுல் நிறுத்தி வைப்பது மிகவும் செலவும், சிக்கலும் கூடிய ஒரு வேலை. எனவே தான் எதிரிப் படைகள் இலகுவில் அணுக இயலாத தொலை தூரத் தளங்களில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். வான் கண்காணிப்பும் இலகு. தாக்குதல் நடந்த இரு இடங்கள் சைபீரியாவின் தூர கிழக்கு-Far East மூலையில் இருக்கின்றன. அமுர் (Amur) நதிக்கு அண்மையான இந்த இடங்களில் வெளியார் கண்காணிப்பில்லாமல் நடமாடுவதே கடினம். இங்கேயே ட்ரக்கில் வைத்து ஏவியிருக்கிறார்கள் என்றால், உக்ரைன் மொஸ்கோவைத் தாக்காமல் பொறுமை காத்து வருகிறது என்று தான் நான் நினைக்கிறேன்😂.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 2 weeks ago
‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’ - சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகுத்தறிவை வளர்க்கவும், அடிப்படை அறிவியல் ஊட்டவும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலை தனது கட்டுரைகள், புத்தகங்கள், உரைகள், மீடியாவின் மூலம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அப்படியே வாழ்ந்தார். ‘ஜோதிடம், திருமண ஜாதகப் பொருத்தம் எல்லாம் பொய்’ என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு அடித்து நொறுக்கிய இவருடைய பகுத்தறிவுவாதி முகம், வலிமை வாய்ந்தது. அதனால்தான், இந்தியாவில் வானியற்பியல் மற்றும் அண்டவியல் (Cosmology) உலகில் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்ற அவர், சமீபத்தில் (மே 20) தனது 87 வயதில் மறைந்தபோது, அறிஞர்கள் வட்டம் தாண்டி, பகுத்தறிவுவாதிகளும் பொதுமக்களும் பகிர்ந்துவருகின்றனர் அவருக்கான புகழஞ்சலியை. மகாராஷ்டிரா டு கேம்பிரிட்ஜ் பட்டம்! 1938-ம் வருடம் மகாராஷ்டிராவில் பிறந்த நர்லிகர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வானியலாளர் ஃபிரெட் ஹோய்ல் (Fred Hoyle)-ஐ தன் மென்டாராக ஏற்று, அவருடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் உருவாக்கிய ஸ்டடி ஸ்டேட் கோட்பாடு’ (Steady State Theory), அவர்களை உலகப் புகழ் பெற வைத்தது. அதாவது, பிரபஞ்சம் பிறந்தது, வளர்ந்தது என்றில்லாமல், எப்போதும் அது ஒரே நிலைமை மற்றும் அடர்த்தியில் இருக்கிறது’ என்றனர். ஜயந்த் நர்லிகர் தலைமைப் பண்பும், தன்னிச்சை ஆய்வுகளும்! இந்தியா திரும்பிய நர்லிகர், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து, கோட்பாட்டு வானியற்பியல் குழுவை தனது தலைமையில் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தினார். தொடர்ந்து, வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (IUCAA - The Inter-University Centre for Astronomy and Astrophysics) நிறுவன இயக்குநரானார். நர்லிகர், தன்னிச்சையான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்பியல் கோட்பாடுகள், கருந்துளைகள், காந்தக் களங்கள், கோள்களின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானக் கொள்கைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், `நேச்சர்' (Nature) உள்பட பல சிறப்பான அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. மூடநம்பிக்கைக்கு எதிராக... ஆய்வு! பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நர்லிகர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வை சமூகம் அடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காக பேசியது, எழுதியதோடு நிறுத்தவில்லை அவர். ஜோதிட மூட நம்பிக்கையைத் தகர்க்க, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு செயற்பாட்டாளரான மருத்துவர் நரேந்திர தபோல்கருடன் இணைந்து, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு, முடிவுகள் வெளியிட்டு, ஜோதிடப் பொய்களை வெளிப்படுத்தினார். ஜாதகம் பொருந்தியவர்கள் எல்லாம் சூப்பராக வாழ்கிறார்களா?! நம் இந்திய திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. உண்மையில், ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைக்கப்படும் தம்பதிகள் அனைவரும் அந்தப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தும் சிறப்பான வாழ்வை வாழ்கிறார்களா என்று, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் சேர்ந்து பல தம்பதிகளிடம் ஆய்வு நடத்தினர். முடிவில், ஜாதகப் பொருத்தம் உள்ள தம்பதிகள், அந்தப் பொருத்தம் இல்லாத தம்பதிகள் என இரு தரப்புமே ஒரே சதவிகிதத்தில்தான் சேர்ந்து வாழ்கின்றனர் என்று தரவுகளுடன் வெளியிட்டனர். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை எனத் தரவுகளுடன் நிரூபித்தனர். அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதிகளின் ஜாதகத்தைப் பரிசோதித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் சற்றேறக்குறைய அதே சதவிகிதத்தில்தான் திருமண முறிவு செய்து கொள்கின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக இவர்கள் நிறுவினார்கள். குணம், திறன், முன்னேற்றம்... ஜாதகத்தின்படி அமையாது! அடுத்தாக இந்த ஜோடி, ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவரது குணம், திறன், முன்னேற்றம் அமையும்’ என்ற மூட நம்பிக்கைகளையும் உடைத்தது. இந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் படிப்பார்கள்... அதுவே இந்த ராசி, நட்சத்திரம் உடையவர்களுக்குப் படிப்பே வராது’ என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அதை நம்பி, சிலர் அதீத தன்னம்பிக்கையில், ‘எல்லாம் நம்ம ஜாதகம் பார்த்துக்கும்’ என உரிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலரோ, ‘என்ன பண்ணுறது, கட்டம் சரியில்ல...’ என்று தங்கள் முன்னேற்ற மின்மைக்கு ஜாதகத்தை சாக்குச் சொல்லி உழைப்பு, முனைப்பில் இருந்து விலகுவார்கள். `ஜாதகம் ஒருவரின் அறிவை தீர்மானிப்ப தில்லை’ என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்த, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பில் சுணக்கமாக உள்ள மாணவர்கள் என 200 மாணவர்களின் ஜாதகங்கள் தொகுக்கப்பட்டு, 53 ஜோதிடர்களிடம் அவை கொடுக்கப் பட்டன. அவர்கள் ’சூப்பராக படிப்பார்கள்’, ‘சுமாராகப் படிப்பார்கள்’ என்று கணித்த ஜாதகங்கள், முரணாக இருந்தன. இவ்வாறு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தாங்கள் ஏற்படுத்தி வந்த பகுத்தறிவு விழிப்புணர்வும், பிரசாரமும் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் பெற்றுத்தந்தன. 2013-ம் ஆண்டு அடிப்படைவாத கொடூர்களால் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஸ்து நன்மை, தீமை... எந்த லாஜிக்கும் இல்லை! நர்லிகர், வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பேசினார். ‘`வாஸ்து என்பது வீட்டின் உள்கட்டமைப்பை அதன் சூழலுடன் இணைக்கும் விதிகளால் ஆனது. ஆனால், அதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும், தீமைகள் விளையும் என்று சொல்லப்படுவதில் எந்த லாஜிக்கும் இல்லை’’ என்று விளக்கினார். வழி காட்டும் ஒளி! நர்லிகர், மாணவர்களுடன் தான் உரையாடும் சந்தர்ப்பங்களை மிகுந்த விருப்பத்துடன் உருவாக்கிக்கொண்டார். அவர்களின் கடிதங்கள், இ-மெயில்களுக்கு பதில் அளிப்பது, பள்ளி கண்காட்சிகளில் கலந்துகொண்டு அவர்களுடன் உரை யாடுவது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரை நிகழ்த்துவது என... எதிர்கால இந்தியாவின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், பகுத்தறிவு வாதிகள் எனப் பலருக்கும் அவரது ஆராய்ச்சிகளும் கருத்துகளும்... வழி காட்டும் ஒளி! Vikatan Plus - 08 June 2025 - ``ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர் | discussion about astrology

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 2 weeks ago
ஆங்கிலத்தில் sitting ducks என்பார்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல், வரிசையில் விமானங்கள் அடி வாங்கியுளன. இந்த மூலோபாய விமான இழப்பு ரஸ்யாவின் அணு ஆயுத மிரட்டலை கூட கேள்விக்குள்ளாக்கி உள்ளதாம். ஏன் என்றால் தொலைதூர நாடுகளை அணு ஆயுதம் கொண்டு தாக்க இப்படியான விமானங்கள் வேண்டுமாம். ஆப்(பு)ரேசன் சிந்தூரில் பாக் இந்திய விமானங்களை மேலே எழும்பவிடாமல் ஆக்கிய போது இந்தியாவுக்கும் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டது நினைவிருக்கலாம். அதனால்தான் ஜெயாங்கரும், அஜித் தோவாலும் வாசிங்கடனுக்கு போனை போட்டு அணுயுத்தம் (பிரம்மோஸ் மூலம்) வர வாய்புண்டு என சொல்லி ஒரு வழியாக டிரம்ப்மூலம் தாம் தொடங்கிய போரை தாமே முடிவுக்கு கொண்டு வந்தனர். விடுதலை புலிகளுக்கு வந்த முதலாவது ஆயுத கப்பல் சர்வதேசபரப்பில் வைத்து எப்போ மூழகடிக்கபட்டது? ஏவுகணை வாங்க அமெரிக்கா போய் பிடி பட்டவர்கள் எப்போ பிடிபட்டார்கள்? இந்த திகதிகளை மீட்டு பார்த்தால் - சமாதான ஒப்பந்தத்தோடு வழங்கல் முற்றாக தடுக்கப்பட்டு விட்டது என்பது தெளிவாகிறது.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 2 weeks ago
சரி அப்படியே வைத்து இருங்கள். ஏனெனில், நீங்கள் தானே treaty விபரங்களை US, ரஷ்யா இடத்தில இருந்து ஒருவராக தீர்மானிப்பது. (இதில் சொல்லப்பட்டு இருபத்து மிக உயர்நிலை ஒப்பந்த அமைப்பு.) சிறு கேள்வி: எங்கு எது நிலைகொண்டுள்ளது என்பது தெரியாமல், எப்படி எந்த முறையாலும் சரி பார்ப்பது? இப்படியான ஒப்பந்தம், இந்த அளவு குறுகிய பக்கங்களில், இந்த அளவு குறுகிய விபரங்கள் மட்டுமா இருக்கும்?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
எனது வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வருகுதில்லை! என்ன காரணமாக இருக்கும்? வேலை இடத்தில் வருகிறது! வீட்டில் this site took too long to respond என்று வருகுது!

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 2 weeks ago
மேலோட்டமாக வாசித்ததிலிருந்து, நேரடியான சோதனைகள் (Onsite Inspections) பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்மதிக் கண்காணிப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. அதற்காக விமானங்களை வெளியே நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது பற்றித் தெளிவாக எதுவும் இல்லை. விடயம் அதுவல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒப்பந்தம் இருந்தாலும் ரஸ்யா தனது விமானங்களை வெளியில் நிறுத்த ஒப்பந்தம் காரணமில்லை. இந்த ஒப்பந்தத்தால்தான் ரஸ்யா பாதிக்கப்பட்டது என்பது போல் நீங்கள் எழுதிய தகவல் தவறானது. நீங்கள் மீண்டும் தாக்குதலுக்குத் தொடர்பற்ற இந்த அறிக்கையை இழுத்து எழுதினால் அதற்குப் பதில் தரப்போவதில்லை. அதுமட்டுமில்லை, இந்த ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் காலாவதி ஆகிறது.