Aggregator

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி; எச்சங்கள், பொருட்கள் தொடர்பில் தகவல் தாருங்கள் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு

3 months ago

03 Aug, 2025 | 10:09 AM

image

(நா.தனுஜா)

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவற்றுடன் கண்டறியப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின், அவர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை தமது அலுவலகத்துக்கு வருகைதந்தோ அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோ அத்தகவல்களை வழங்கமுடியும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டத் தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த மனிதப்புதைகுழி 1994 - 1996 க்கு இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறுகின்றன.

காணாமல்போன மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு எமது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பரந்துபட்ட முயற்சிகளின் ஓரங்கமாக, 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் 12(ஆ) பிரிவின் ஊடாக கீழான கடப்பாடுகளின் பிரகாரம் மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகளை எமது அலுவலகம் கண்காணிப்புவருகிறது.

அதற்கமைய புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்துத் தீர்மானம் மேற்கொள்வதற்கு உதவுமாறு எமது அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்நிலையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய தகவல்கள் இருக்கக்கூடும் என எமது அலுவலகம் நம்புகிறது.

எனவே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் தொடர்பான சாத்தியமான அடையாளங்கள், அவற்றின் உடலியல் அம்சங்கள், உடைகள், முன்னைய காலங்களில் ஏற்பட்டிருந்த காயங்கள் என்பன பற்றிய விபரங்கள், புதைகுழியில் உள்ள எச்சங்களின் நெருங்கிய உறவினர்களைத் தொடர்கொள்ளக்கூடிய தகவல்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து இந்த உடல்கள் இவ்விடத்தில் எவ்வாறு வந்தன என்பது பற்றிய சம்பவங்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை நாம் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை அறிந்த உறவினர்கள், சாட்சிகள் மற்றும் ஏனைய நபர்களை எமது அலுவலகத்pன் பயிற்சிபெற்ற அதிகாரிகள் நேர்காணல் செய்வார்கள். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கு எமது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.

அதன்படி இதுகுறித்த தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின், எமது தலைமை அலுவலகத்துக்கோ அல்லது எமது பிராந்திய அலுவலகங்களுக்கோ எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை வருகைதந்து அல்லது தொலைபேசி ஊடாக எம்மைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/221655

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3 months 1 week ago
முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் – சுமந்திரன் உறுதி! adminAugust 3, 2025 தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜெனீவா தொடர்பான கடிதத்தை தயாரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்கள். நாங்கள் அந்த கூட்டத்திலே பங்கு கொள்ளவில்லை. அதற்கான காரணங்களை ஏற்கனவே எமது கட்சி தலைவர் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார். அவர்கள் அந்த கூட்டத்தில் ஏதோ ஒரு கடிதம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடிதத்தை தயாரித்திருக்கின்றார்கள். தயாரித்த கடிதத்தை எனக்கும் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்கள். கடிதம் தொடர்பாக நாங்கள் கூடி பேசி ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தலைவர் அவர்களுக்கு சொன்னார். அதை சொன்ன பிறகும் கூட எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அதனை தனித்தனியாக அனுப்பி அவர்களுடைய கையொப்பத்தையும் கேட்டிருக்கிறார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கட்சி தீர்மானமாக தான் நாங்கள் செயல்படுவோம். நாங்கள் தனியாக கையொப்பம் வைக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். வேறு பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக நாம் கூடியிருந்தாலும் கூட இந்த விடயமும் ஒன்று இருந்த அடிப்படையினால் அதைப்பற்றி நாங்கள் இறுதியில் பேசியிருக்கிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் சார்பாக எப்படியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் பலதரப்பட்ட எங்களுடைய பிரதிநிதித்துவத்தை சொல்லியிருக்கிறோம். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வந்தபோது கூட 2021ம் ஆண்டு நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதி செய்த ஆவணம், அது சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கையெழுத்திட்டார்கள். அது எமது நிலைப்பாடு. அதில் மாற்றமில்லை. ஆனால் இன்றைய சூழலில் நாங்கள் எதை சொல்ல வேண்டும். அதை எப்படியாக சொல்ல வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஒரு கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறோம். அதன் அடிப்படையில அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு எங்களுடைய மேசையிலே வைத்து கையொப்பம் கேட்கிற கடிதத்தில் நாங்கள் கையொப்பம் இடவில்லை. நாங்கள் அதைவிட தீர்க்கமாக பல விடயங்களை ஆராய்ந்து, நாங்கள் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டிய முறையிலே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதான கட்சி என்ற வகையிலே, உகந்த தருணத்திலே சரியான நேரத்திலே நாங்கள் அதை வெளிப்படுத்துவோம். கடிதம் மூலமாகவோ வேறு விதமாகவோ அதனை செய்வோம். ஆனால் தற்போதைக்கு அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு நீங்களும் கையொப்பம் வையுங்கள் என்று சொல்லி தரும் கடிதத்தில் கையொப்பம் இடுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது – என்றார் https://globaltamilnews.net/2025/218756/

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

3 months 1 week ago
Explorify · Suivre rstepoSondf32g1ith9 215l4uiugulu70tm6mm301i0i0ah729c2ih3f63a · Two high school seniors just rewrote the history of mathematics. Calcea Johnson and Ne’Kiya Jackson, students from St. Mary’s Academy in New Orleans, accomplished what generations of mathematicians thought was impossible, they created a new proof of the Pythagorean theorem using trigonometry, without falling into the trap of circular reasoning. Their discovery stunned the academic world, not only for its brilliance but because it came from two teenagers still in high school. For over 2,000 years, mathematicians believed that any attempt to prove the Pythagorean theorem using trigonometry would inevitably loop back on itself, rendering the argument invalid. Johnson and Jackson, however, approached the problem with fresh eyes. Working as part of a math enrichment program, they independently crafted a proof that cleverly sidestepped the logical pitfalls that had frustrated so many before them. They presented their groundbreaking work in March 2023 at the American Mathematical Society's Southeastern Sectional Meeting, earning praise for their clarity and originality. While they were not the first to explore this avenue, their version was new, independent, and mathematically rigorous. In October 2024, their proof was officially published in the prestigious American Mathematical Monthly, validating their work and placing them in the company of history’s greatest thinkers. What makes this even more inspiring is that these two young Black women challenged centuries of academic assumptions, showing that genius doesn’t need a PhD, just passion, curiosity, and bold thinking. Their story is a powerful reminder that brilliance can come from anywhere, and that young minds are more than capable of solving age-old mysteries when given the opportunity. Follow our page for more incredible stories #MathGenius #PythagoreanTheorem #WomenInSTEM #YoungInnovators #MathHistory #BlackExcellence #STEMEducation....... !

நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !

3 months 1 week ago
நல்லூரானை தரிசித்தார் பிரதமர் ! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441570

நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !

3 months 1 week ago

IMG-20250803-WA0034.jpg?resize=750%2C375

நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250803-WA0017.jpg?resize=600%2C338

IMG-20250803-WA0031.jpg?resize=600%2C338

https://athavannews.com/2025/1441570

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

3 months 1 week ago
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(02) மேலும் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரையில் 117 மனித எலும்புக்கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் கடந்த 13 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 52 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1441565

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

3 months 1 week ago
ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு! ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில், டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார். ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார். அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441578

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

3 months 1 week ago

25-688d006f17fdf.jpg?resize=600%2C375&ss

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில்,
டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார்.

அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1441578

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை

3 months 1 week ago
03 Aug, 2025 | 09:37 AM செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட, ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு: மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால், கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும். காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும். இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள் பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது. பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221650

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை

3 months 1 week ago

03 Aug, 2025 | 09:37 AM

image

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட, ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு:  

மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால்,  கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும்.

காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்

பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. 

மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

01.jpg

02.jpg

https://www.virakesari.lk/article/221650

இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜெனிவாவில் தீர்மானம் ; எந்தவொரு தீர்மானத்தையும் வலுவாக எதிர்கொள்வோம் - அமைச்சர் விஜித ஹேரத்

3 months 1 week ago
03 Aug, 2025 | 09:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அவர் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என தெரிவித்தார். எவ்வாறாயினும் கடந்தகால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலவிவரும் அதிருப்தியை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச கண்காணிப்பையும், அழுத்தத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரிய குழு (Core Group on Sri Lanka) முன்வைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 போன்ற தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே இது அமைய உள்ளது. குறிப்பாக, 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்' (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்த புதிய தீர்மானத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இதன் முக்கிய இலக்குகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221646

இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜெனிவாவில் தீர்மானம் ; எந்தவொரு தீர்மானத்தையும் வலுவாக எதிர்கொள்வோம் - அமைச்சர் விஜித ஹேரத்

3 months 1 week ago

03 Aug, 2025 | 09:14 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து  கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது.

ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில்  கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது.

இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார்.

அவர் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கடந்தகால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலவிவரும் அதிருப்தியை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச கண்காணிப்பையும், அழுத்தத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரிய குழு  (Core Group on Sri Lanka)  முன்வைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 போன்ற தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே இது அமைய உள்ளது.

குறிப்பாக, 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்' (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்த புதிய தீர்மானத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இதன் முக்கிய இலக்குகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221646