Aggregator

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
அது சரி விசுகர் ....ஜேர்மனியில் புலிகளின். உணகவம். புலிகளின். கடை. புலிகளின். கோயில் .... இப்படி நிறையவே முதலீடுகள் இருந்தது இது இங்குள்ள மக்கள் கொடுத்த பணம,. என்னிடம் பணம் சேர்க்க வந்தவர் 30 யூரோ இருந்து 50 யூரோ மாதக் கொடுப்பனவு உயர்ந்தப்படவேண்டும் என்றார் நான் சொன்னேன் சரி தரலாம். ஆனால் இந்த முதலீடுகளை ஏன் செய்கிறீர்கள் ?? இதனால் தான் பணம் பற்றாக்குறை. ஏற்படுகிறது அல்லது தேவைப்படுகிறது என்றேன் அவர் சொன்னார் .....இலங்கையில் புலிகள் இயங்க முடியாத நிலை ஏற்ப்பட்டாலும். விடுதலை போராட்டம் தொடர வேண்டும் அதற்கு நிதி வேண்டும் அந்த நேரத்தில் இந்த முதலீடுகள். வருமானம் தரும் என்றார் .....வெளிநாடுகளில் புலிகளின் முதலீடுகள். எத்தனை பில்லியன் டொலர் ..??,.....இந்த பணம் யார் கொடுத்தார்கள்???? ஆகவே மக்கள் பணம் கொடுக்கவில்லை என்பது சரியா??? இல்லை வெளிநாட்டில் புலிகளின். நிர்வாகிகள் ... நிதியை கையாண்ட விதம் பிழையா ??

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
இவை அனைத்தும் தெரிந்தவை தான். ஆனால் இயக்கம் பணத்தில் திணைத்திருந்தது அங்காங்கே பணம் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படவில்லை என்பது போன்ற கருத்ததையே நான் மறுதலித்தேன். அதற்கு சாட்சியாக வீட்டிற்கு ஒரு பவுண் மற்றும் புலத்தில் சில மக்கள் பாதிக்கப்படக்கூடிய பணச்சேர்ப்புக்கள் அனைத்தும் பணத்தேவையால் அல்லது பணப்பற்றாக்குறையால் முன் தள்ளப்பட்டவையே. அங்கே இருந்தவன் என்ற அடிப்படையில் இதை தான் என்னால் சொல்லமுடியும். மற்றும் படி சண்டை பிடித்த ஒரு தரப்பினர் உலகமே கூட நின்ற போதும் வங்குரோத்து நிலையடைந்து பிச்சை எடுக்கும் நிலையில் மக்களின் ஒரு பகுதியினரின் பங்களிப்புடன் அதே சண்டையை எதிர்கொண்ட தரப்பு செல்வச் செழிப்பானது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
The pitch for the final will be a mixed-soil (red and black) surface in the middle of the square - this is where PBKS opened their season with a win over Gujarat Titans (GT). There is a chance of rain again on the day of the final, but a low one according to forecasts. A reserve day is in place should the final not be completed on Tuesday. இன்றும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்காம்! RCB இந்தவருடம் அஹமதாபாத்தில் ஒரு மேட்ச் கூட விளையாடவில்லையாம்!! எல்லோருக்கும் முட்டைதானோ!!!

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு

3 months 1 week ago
03 JUN, 2025 | 11:01 AM இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதற்காக புறப்பட்டுள்ள கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார். காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார். இந்த கப்பல் கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்டு செல்கின்றோம். ஆனால் இது குறியீட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரீடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. நாங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்பதால் இதனை செய்கின்றோம், ஏனென்றால் நாம் முயற்சிப்பதை இழக்கும் தருணம் நம் மனித நேயத்தை இழக்கும் தருணம் என புறப்படுவதற்கு முன்னர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார். இந்த பணி எவ்வளவு ஆபத்தானதாகயிருந்தாலும் இனப்படுகொலை செய்யப்படும் மக்கள் குறித்து முழு உலகமும் மௌனமாகயிருப்பது போல இது ஆபத்தானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இடைநடுவில் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் ஏழு நாட்களிற்குள் நாங்கள் காசாவை சென்றடைவோம் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216420

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு

3 months 1 week ago

03 JUN, 2025 | 11:01 AM

image

இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதற்காக புறப்பட்டுள்ள கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார்.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

gaza_ship.jpg

இந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார்.

இந்த கப்பல் கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

gretta_gaza_1.jpg

மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்டு செல்கின்றோம். ஆனால் இது குறியீட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரீடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

நாங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்பதால் இதனை செய்கின்றோம், ஏனென்றால் நாம் முயற்சிப்பதை இழக்கும் தருணம் நம் மனித நேயத்தை இழக்கும் தருணம் என புறப்படுவதற்கு முன்னர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த பணி எவ்வளவு ஆபத்தானதாகயிருந்தாலும் இனப்படுகொலை செய்யப்படும் மக்கள் குறித்து முழு உலகமும் மௌனமாகயிருப்பது போல இது ஆபத்தானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gaza_ship_1.jpg

இடைநடுவில் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் ஏழு நாட்களிற்குள் நாங்கள் காசாவை சென்றடைவோம் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216420

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது!

3 months 1 week ago
இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது! adminJune 3, 2025 யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆனந்த விஜயபால கூறினார். இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த மூன்று வயது குழந்தை உட்பட மூவர், தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு திரும்பியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது இளம் தம்பதியினர் மற்றும் மூன்றரை வயது குழந்தை எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://globaltamilnews.net/2025/216293/

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது!

3 months 1 week ago

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது!

adminJune 3, 2025

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.

அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆனந்த விஜயபால கூறினார். இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த மூன்று வயது குழந்தை உட்பட மூவர், தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு திரும்பியதாகவும்  கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது இளம் தம்பதியினர் மற்றும் மூன்றரை வயது குழந்தை எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://globaltamilnews.net/2025/216293/

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஜக்கம்மாவே நண்டுகள் பக்கம்தான், ரஜனிக்காந்த மொடியுலேசனில் வாசிக்கவும்.🤣 அடுத்து உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் உள்ளது ஆனால் இது போல இழுபடாது.

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 1 week ago

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும்.

புதிய விமானம்

பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும்.

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு | New Airbus A330 200 Aircraft To Arrive Sri Lanka

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர விமானக் குழுவில் சேரும் இந்த விமானத்தின் முதல் வருகையை விமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/new-airbus-a330-200-aircraft-to-arrive-sri-lanka-1748921410

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 1 week ago
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும். புதிய விமானம் பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும். இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர விமானக் குழுவில் சேரும் இந்த விமானத்தின் முதல் வருகையை விமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/new-airbus-a330-200-aircraft-to-arrive-sri-lanka-1748921410

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 1 week ago

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும்.

புதிய விமானம்

பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும்.

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு | New Airbus A330 200 Aircraft To Arrive Sri Lanka

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர விமானக் குழுவில் சேரும் இந்த விமானத்தின் முதல் வருகையை விமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/new-airbus-a330-200-aircraft-to-arrive-sri-lanka-1748921410

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி மனிதப் புதைகுழி ; இதுவரையில் 07 மண்டையோடுகள் மீட்பு 03 JUN, 2025 | 09:20 AM யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக, மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது. அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் , திங்கட்கிழமை (02) மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சேராக காணப்பட்டமையால், பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர். https://www.virakesari.lk/article/216408

இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது

3 months 1 week ago
நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; இவ்விவகாரத்தை அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தாதீர் - வெளிவிவகார பிரதி அமைச்சர் 02 JUN, 2025 | 04:59 PM (நா.தனுஜா) புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். அதேவேளை அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதி கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் தீர்க்கப்படும் எனவும், இச்சம்பவத்தை குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிரிக்குமாறும் அவர் சகல தரப்பினரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, 'இலங்கைக்குத் திரும்பிய அகதி அந்தஸ்த்தைக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, குடிவரவுச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நான் அறிவேன். எமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளால் அக்காலப்பகுதியில் பாரிய புலம்பெயர்வு இடம்பெற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இவ்வாறான நபர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், உரிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அருண் ஹேமசந்திர அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேவேளை தற்போது பதிவாகியுள்ள சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் சகல தரப்பினரும் இவ்விவகாரத்தைப் பொறுப்புவாய்ந்த முறையில் அணுகவேண்டும் எனவும், இதனைக் குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வேண்டுகோள்விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/216360

அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி?

3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கவிதா பூரி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற "மக்கள் விஞ்ஞானிக்கு" 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார். சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர். அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் அமெரிக்காவுக்காக பணிபுரிந்த அவர், சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியமான நபராக மாறியது எப்படி? அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, அங்கேயே பணி புரிந்தார். அங்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றியது. அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது "முக்கியமான துறைகளில்" படிப்பவர்கள் உள்பட சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்க நிர்வாகம் "திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும்" என்று அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், விஞ்ஞானி சியான் சேசென் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. அமெரிக்கா பல தசாப்தங்களுக்கு முன்பு செய்த தவறைச் சுட்டிக் காட்டும் விதமாக இந்தச் செய்திகள் வெளியாகின. சியான் சேன்சென் போன்ற திறமையாளர்களை வரவேற்பதற்குப் பதிலாக வெளியேற்றுவதன் அபாயங்கள் ஏற்கெனவே ஒரு காலத்தில் அமெரிக்காவை பாதித்துள்ளன. அமெரிக்கா மீண்டும் தடுமாறி தவறு செய்கிறதா? சீன விஞ்ஞானி சியான் சேசென் போன்ற புத்திசாலித்தனமான நபர்களை வெளியேற்றியது, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தவறு என்று கூறப்பட்டது. இந்நிலையில், முந்தைய கால தவறையே அமெரிக்கா மீண்டும் தொடருமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகிறது. அறிவுத் திறனால் அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது திறமையின் பயனாக அவர் எம்.ஐ.டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார் சீனாவின் ஏகாதிபத்திய வம்சம் முடிவடைந்து, அந்நாடு குடியரசாக மலரக் காத்துக் கொண்டிருந்த தருணத்தில் 1911ஆம் ஆண்டு சியான் சேசென் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த சியான் சேசென்னின் தந்தை ஜப்பானில் பணிபுரிந்து அங்கு பெற்ற அனுபவங்கள் மற்றும் தனது அறிவாற்றலால், சீனாவின் தேசிய கல்வி முறையை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமை மிக்க மாணவரான சியான் சேசென், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்தார். அது அவருக்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சிறப்பு உதவித்தொகையைப் பெற உதவியது. கடந்த 1935ஆம் ஆண்டில் அவர் பாஸ்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தார். அமெரிக்காவுக்கு மெலிதான உடல்வாகு கொண்ட, கண்ணியமான நபராக வந்து சேர்ந்தார். அமெரிக்காவில் அவர், அந்நிய வெறுப்பு மற்றும் இனவாத பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கலாம் என்று வடக்கு ஜார்ஜியா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார். ஆனால், "சீனா (அடிப்படையில்) குறிப்பிடத்தக்க வழிகளில் மாறிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது." மேலும் அறிவுக்கு மதிப்பு கொடுத்தவர்களும் நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்று அவர் நம்புகிறார். கால்டெக் அனுபவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1960இல் எடுக்கப்பட்ட வில்லியம் பிக்கரிங், தியோடர் வான் கர்மா மற்றும் பிராங்க் மலினாவின் புகைப்படம் எம்ஐடியில் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (கால்டெக்) குடிபெயர்ந்த சியான் சேசென், அன்றைய மிகவும் செல்வாக்கு மிக்க விமானப் பொறியாளர்களில் ஒருவரான ஹங்கேரிய குடியேறி தியோடோர் வான் கர்மானிடம் படிக்கச் சென்றார். அங்கு அவர், மற்றொரு முக்கிய விஞ்ஞானியான பிராங்க் மலினாவுடன் இணைந்தார். 'சூசைட் ஸ்குவாட்' என்ற கண்டுபிடிப்பாளர்களின் சிறிய குழுவின் முக்கிய உறுப்பினராக பிராங்க் மலினா இருந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கெட்டை உருவாக்க முயன்ற இந்தக் குழுவினரின் சில பரிசோதனைகள், ஆவியாகும் ரசாயனங்கள் மூலம் தவறாகிப் போனதால், அவர்களின் குழுவை தற்கொலைப் படை என்று அழைத்ததாக "Escape from Earth: A Secret History of the Space Rocket" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃப்ரேசர் மெக்டொனால்ட் பிபிசியிடம் தெரிவித்தார். அவர்களின் அந்தப் பரிசோதனையில் யாரும் இறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நாள், மலினா மற்றும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களுடன் ஒரு சிக்கலான கணிதப் பிரச்னை பற்றிய விவாதத்தில் ஈடுபட்ட சியான், விரைவில் 'தற்கொலைப் படை' குழுவில் ஒருவராக மாறிவிட்டார். அவரும், ராக்கெட் உந்துவிசை குறித்த அடிப்படை ஆராய்ச்சியில் பங்களித்தார். அந்தக் காலகட்டத்தில், ராக்கெட் அறிவியல் என்பது "முட்டாள்கள் மற்றும் கற்பனையாளர்களின் பொருளாக" இருந்தது என்று மெக்டொனால்ட் கூறுகிறார். "ராக்கெட் அறிவியலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணிதத்தில் விருப்பம் இருந்த பொறியாளர்களில் யாருமே அதுதான் எதிர்காலம் என்று கூறி தனது நற்பெயருக்கு ஆபத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்." ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், நிலைமை துரிதகதியில் மாறியது. போர் படைப்பிரிவு 'தற்கொலைப் படை' அமெரிக்க ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது, ஜெட் உதவியுடன் கிளம்புவது தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி கிடைத்தது. குறுகிய ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் புறப்பட ஏதுவாக ப்ரொப்பல்லர்கள் இணைக்கப்பட்டன. கடந்த 1943ஆம் ஆண்டில் தியோடோர் வான் கார்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தை (JPL) நிறுவ ராணுவ நிதியும் கிடைத்தது. சியான் சேன்சென் மற்றும் ஃபிராங்க் மலினா இருவருமே திட்டத்தில் முக்கியமானவர்களாக இருந்தனர். அப்போதைய சீன குடியரசு அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால், அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் சீன விஞ்ஞானி முக்கியப் பங்கு வகிப்பதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. ரகசிய ஆயுத ஆராய்ச்சியில் பணியாற்ற பாதுகாப்பு அனுமதி பெற்ற சியானுக்கு, அமெரிக்க அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் இடம் கொடுக்கப்பட்டது. போரின் முடிவில், உலகின் முன்னணி ஜெட் உந்துவிசை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்தார். தியோடோர் வான் கார்மனுடன் ஜெர்மனிக்கு ஒரு முக்கியமான பணிக்காக அனுப்பப்பட்ட சியான் சேன்சென் அங்கு தற்காலிக லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றினார். ஜெர்மனியின் முன்னணி ராக்கெட் விஞ்ஞானியான வெர்ன்ஹர் வான் பிரவுன் உள்பட நாஜி பொறியாளர்களைச் சந்தித்துப் பேசுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஜெர்மனியர்களுக்கு தெரிந்த அனைத்தையும் சரியாக அறிய அமெரிக்கா விரும்பியது. அந்த தசாப்தத்தின் இறுதியில், அமெரிக்காவில் சியானின் வாழ்க்கை திடீரென நிலைதடுமாறியது. அவரது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. சர்வதேச அரசியலில் மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சியானின் அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாக போற்றப்படுகிறார் கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார். அந்தப் பின்னணியில், சீனர்கள் என்றாலே "கெட்டவர்கள்" என்று பார்க்கும் போக்கு அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாக கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார். "அமெரிக்காவில், சீனாவை நேசித்த காலகட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ நடந்தது, திடீரென நாம் அந்நாட்டை இழிவாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம்," என்று வரலாற்றாசிரியர் பிபிசியிடம் கூறுகிறார். JPL-இன் புதிய இயக்குநர், தங்கள் ஆய்வகத்தில் உளவாளிகள் இருப்பதாக நம்பினார். சில ஊழியர்கள் குறித்த தனது சந்தேகங்களை எஃப்.பி.ஐ உடன் பகிர்ந்து கொண்டார். "அவர்கள் அனைவரும் சீனர்கள் அல்லது யூதர்கள் என்பதை அவர் கவனித்தார்," என்கிறார் ஃப்ரேசர் மெக்டொனால்ட். பனிப்போர் நடந்து கொண்டிருந்தது, மெக்கார்த்தி சகாப்தம் தொடங்கிய அந்த வேளை கம்யூனிச எதிர்ப்பு வீரியமடையத் தொடங்கிய காலம். இந்தக் காலகட்டத்தில்தான் எஃப்.பி.ஐ., சியான், ஃபிராங்க் மலினா மற்றும் பிறரை கம்யூனிஸ்டுகள் என்றும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்றும் குற்றம் சாட்டியது. சியான் சேன்சென் செய்த தவறு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார் கடந்த 1938ஆம் ஆண்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்தின் அடிப்படையில் சியானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமைந்தன. அவர் ஒரு சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை அது காட்டுகிறது. பசடேனா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டமாக அது இருக்கலாம் என்று எஃப்.பி.ஐ சந்தேகித்தது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லை என்று சியான் கூறினாலும், அவர் 1938இல் பிராங்க் மலினாவுடன் இணைந்திருந்தார் என்பதை புதிய ஆராய்ச்சி உறுதி செய்தது. ஆனால் இதனால் மட்டுமே அவர் ஒரு மார்க்சியவாதி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், அந்த நேரத்தில் கம்யூனிஸ்டாக ஒருவர் இருப்பது இனவெறிக்கு எதிரானது என்ற எண்ணம் நிலவியது என ஃப்ரேசர் மெக்டொனால்ட் தெளிவுப்படுத்துகிறார். இந்தக் குழு, பாசிசத்தின் அச்சுறுத்தலையும், அமெரிக்காவில் இனவெறியின் பயங்கரத்தையும் முன்னிலைப்படுத்த விரும்பியதாக அவர் கூறுகிறார். பிரிவினைக்கு எதிரான பிரசாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் கம்யூனிஸ்ட் கூட்டங்களைப் பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உள்ளூர் பசடேனா நீச்சல் குளத்தில் மதிய வேளையில் கறுப்பினத்தவர்கள் குளித்தால், அவர்கள் பயன்படுத்திய குளத்தை, வெள்ளையர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தம் செய்வார்கள். பொமோனாவில் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சூயோயு வாங், சியான் அமெரிக்காவில் இருந்தபோது சீனாவுக்காக உளவு பார்த்ததாகவோ அல்லது உளவுத்துறை முகவராக இருந்ததற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார். இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் சியான் சேசெனின் பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சியான் குற்றமற்றவர் என தியோடோர் வான் உள்பட சியானின் கால்டெக் சகாக்கள் அரசுக்கு எழுதிய கடிதங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த பிறகு, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர், சியானை சீனாவுக்கு நாடு கடத்த முடிவு செய்தார். 1955ஆம் ஆண்டில், தனது மனைவி மற்றும் அமெரிக்காவில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் சீனாவுக்கு கிளம்பிய சியான் சேன்சென், மீண்டும் ஒருபோதும் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இறுதி வரை தனது வாக்குறுதியை சியான் சேன்சென் காப்பாற்றினார். வேறொரு இலக்கை நோக்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1950இல் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நடந்த வழக்கின்போது தனது வழக்கறிஞர் கிராண்ட் கூப்பருடன் சியான் "அமெரிக்காவின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்த சியான் சேன்சென், அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருந்தார். அவரால் இன்னும் அதிகமாகப் பங்களித்திருக்க முடியும். ஆனால், அவர் இவ்வாறு அவமதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது அவருக்கு அவமானம் மட்டுமல்ல, துரோகமும்கூட" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தியான்யு ஃபாங் கூறுகிறார். அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு கதாநாயகனைப் போல் சியான் சேன்சென் வந்தார். ஆனால் அவர் உடனடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அதற்குக் காரணம், சியானின் மனைவி ஒரு தேசியவாதத் தலைவரின் செல்வ மகள். அதுமட்டுமல்ல, பதவி விலகும் வரை சியான் அமெரிக்காவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியிருந்தார். கடந்த 1958இல் சியான் சேன்சென் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானபோது, ஆட்சியின் நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்தார். இதனால் அவர் சுத்திகரிப்பு மற்றும் கலாசாரப் புரட்சியில் இருந்து தப்பிப் பிழைத்தார். சீனாவில் அவரது வாழ்க்கை நிம்மதியாகவும் மேம்பட்டதாகவும் இருந்தது. அவர் சீனாவுக்கு வந்தபோது, அங்கு விண்வெளி அறிவியலைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோளுக்கான பணிகளை அவர் மேற்பார்வையிட்டார். பல தசாப்தங்களாக, அவர் புதிய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்தார். அவரது சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஏவுகணைத் திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சியானின் சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சியான் உதவியுடன் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் திட்டம்தான், பின்னொரு காலத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவப்பட்ட ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்தது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. சியானின் "silkworm" ஏவுகணைகள் 1991 வளைகுடா போரில் அமெரிக்கர்கள் மீதும், 2016இல் ஏமனில் ஹுட்டு கிளர்ச்சியாளர்களால் யுஎஸ்எஸ் மேசன் மீதும் ஏவப்பட்டதாக ஃப்ரேசர் மெக்டொனால்ட் குறிப்பிடுகிறார். "இது காலத்தின் விசித்திரமான சுழற்சி: அமெரிக்கா வெளியேற்றிய சக்தி, திரும்ப அதையே தாக்கியது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் சாங்க்-4 2019ஆம் ஆண்டு நிலவின் வெகு தூரத்தில் கால் பதித்த முதல் செயற்கைக்கோளாக மாறியது சியான் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். அன்று பல விஷயங்களில் பின்தங்கியிருந்த சீனா, தற்போது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பூமியிலும் விண்வெளியிலும் வல்லரசாக வளர்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சியான் இருந்தார். ஆனால் அவரது கதை அமெரிக்காவை பெருமைப்படுத்தும் ஒன்றாகவும் இருந்திருக்கக்கூடும். திறமையுள்ள ஒருவர் எங்கு இருந்தாலும் செழித்து வளர முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் சியான் சேன்சென். கடந்த 2019ஆம் ஆண்டில், சந்திரனின் தொலைதூரப் பகுதியில் சீனா தரையிறங்கிய இடத்திற்கு, அமெரிக்காவில் சியானுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்த விமானப் பொறியாளர் வான் கார்மனின் பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பானது, சீனாவை விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவியது என்று கூறப்படுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14km2jxlzvo

அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி?

3 months 1 week ago

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கவிதா பூரி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற "மக்கள் விஞ்ஞானிக்கு" 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார்.

சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர்.

அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் அமெரிக்காவுக்காக பணிபுரிந்த அவர், சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியமான நபராக மாறியது எப்படி?

அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, அங்கேயே பணி புரிந்தார். அங்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றியது.

அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது "முக்கியமான துறைகளில்" படிப்பவர்கள் உள்பட சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்க நிர்வாகம் "திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும்" என்று அறிவித்தார்.

டொனால்ட் டிரம்பின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், விஞ்ஞானி சியான் சேசென் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. அமெரிக்கா பல தசாப்தங்களுக்கு முன்பு செய்த தவறைச் சுட்டிக் காட்டும் விதமாக இந்தச் செய்திகள் வெளியாகின.

சியான் சேன்சென் போன்ற திறமையாளர்களை வரவேற்பதற்குப் பதிலாக வெளியேற்றுவதன் அபாயங்கள் ஏற்கெனவே ஒரு காலத்தில் அமெரிக்காவை பாதித்துள்ளன.

அமெரிக்கா மீண்டும் தடுமாறி தவறு செய்கிறதா? சீன விஞ்ஞானி சியான் சேசென் போன்ற புத்திசாலித்தனமான நபர்களை வெளியேற்றியது, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தவறு என்று கூறப்பட்டது. இந்நிலையில், முந்தைய கால தவறையே அமெரிக்கா மீண்டும் தொடருமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகிறது.

அறிவுத் திறனால் அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தனது திறமையின் பயனாக அவர் எம்.ஐ.டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார்

சீனாவின் ஏகாதிபத்திய வம்சம் முடிவடைந்து, அந்நாடு குடியரசாக மலரக் காத்துக் கொண்டிருந்த தருணத்தில் 1911ஆம் ஆண்டு சியான் சேசென் பிறந்தார்.

கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த சியான் சேசென்னின் தந்தை ஜப்பானில் பணிபுரிந்து அங்கு பெற்ற அனுபவங்கள் மற்றும் தனது அறிவாற்றலால், சீனாவின் தேசிய கல்வி முறையை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திறமை மிக்க மாணவரான சியான் சேசென், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்தார். அது அவருக்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சிறப்பு உதவித்தொகையைப் பெற உதவியது.

கடந்த 1935ஆம் ஆண்டில் அவர் பாஸ்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தார். அமெரிக்காவுக்கு மெலிதான உடல்வாகு கொண்ட, கண்ணியமான நபராக வந்து சேர்ந்தார்.

அமெரிக்காவில் அவர், அந்நிய வெறுப்பு மற்றும் இனவாத பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கலாம் என்று வடக்கு ஜார்ஜியா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார்.

ஆனால், "சீனா (அடிப்படையில்) குறிப்பிடத்தக்க வழிகளில் மாறிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது." மேலும் அறிவுக்கு மதிப்பு கொடுத்தவர்களும் நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்று அவர் நம்புகிறார்.

கால்டெக் அனுபவங்கள்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1960இல் எடுக்கப்பட்ட வில்லியம் பிக்கரிங், தியோடர் வான் கர்மா மற்றும் பிராங்க் மலினாவின் புகைப்படம்

எம்ஐடியில் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (கால்டெக்) குடிபெயர்ந்த சியான் சேசென், அன்றைய மிகவும் செல்வாக்கு மிக்க விமானப் பொறியாளர்களில் ஒருவரான ஹங்கேரிய குடியேறி தியோடோர் வான் கர்மானிடம் படிக்கச் சென்றார்.

அங்கு அவர், மற்றொரு முக்கிய விஞ்ஞானியான பிராங்க் மலினாவுடன் இணைந்தார். 'சூசைட் ஸ்குவாட்' என்ற கண்டுபிடிப்பாளர்களின் சிறிய குழுவின் முக்கிய உறுப்பினராக பிராங்க் மலினா இருந்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கெட்டை உருவாக்க முயன்ற இந்தக் குழுவினரின் சில பரிசோதனைகள், ஆவியாகும் ரசாயனங்கள் மூலம் தவறாகிப் போனதால், அவர்களின் குழுவை தற்கொலைப் படை என்று அழைத்ததாக "Escape from Earth: A Secret History of the Space Rocket" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃப்ரேசர் மெக்டொனால்ட் பிபிசியிடம் தெரிவித்தார். அவர்களின் அந்தப் பரிசோதனையில் யாரும் இறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாள், மலினா மற்றும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களுடன் ஒரு சிக்கலான கணிதப் பிரச்னை பற்றிய விவாதத்தில் ஈடுபட்ட சியான், விரைவில் 'தற்கொலைப் படை' குழுவில் ஒருவராக மாறிவிட்டார். அவரும், ராக்கெட் உந்துவிசை குறித்த அடிப்படை ஆராய்ச்சியில் பங்களித்தார்.

அந்தக் காலகட்டத்தில், ராக்கெட் அறிவியல் என்பது "முட்டாள்கள் மற்றும் கற்பனையாளர்களின் பொருளாக" இருந்தது என்று மெக்டொனால்ட் கூறுகிறார்.

"ராக்கெட் அறிவியலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணிதத்தில் விருப்பம் இருந்த பொறியாளர்களில் யாருமே அதுதான் எதிர்காலம் என்று கூறி தனது நற்பெயருக்கு ஆபத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்." ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், நிலைமை துரிதகதியில் மாறியது.

போர் படைப்பிரிவு

'தற்கொலைப் படை' அமெரிக்க ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது, ஜெட் உதவியுடன் கிளம்புவது தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி கிடைத்தது. குறுகிய ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் புறப்பட ஏதுவாக ப்ரொப்பல்லர்கள் இணைக்கப்பட்டன.

கடந்த 1943ஆம் ஆண்டில் தியோடோர் வான் கார்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தை (JPL) நிறுவ ராணுவ நிதியும் கிடைத்தது. சியான் சேன்சென் மற்றும் ஃபிராங்க் மலினா இருவருமே திட்டத்தில் முக்கியமானவர்களாக இருந்தனர்.

அப்போதைய சீன குடியரசு அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால், அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் சீன விஞ்ஞானி முக்கியப் பங்கு வகிப்பதில் எந்தச் சிக்கலும் எழவில்லை.

ரகசிய ஆயுத ஆராய்ச்சியில் பணியாற்ற பாதுகாப்பு அனுமதி பெற்ற சியானுக்கு, அமெரிக்க அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் இடம் கொடுக்கப்பட்டது.

போரின் முடிவில், உலகின் முன்னணி ஜெட் உந்துவிசை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்தார். தியோடோர் வான் கார்மனுடன் ஜெர்மனிக்கு ஒரு முக்கியமான பணிக்காக அனுப்பப்பட்ட சியான் சேன்சென் அங்கு தற்காலிக லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றினார்.

ஜெர்மனியின் முன்னணி ராக்கெட் விஞ்ஞானியான வெர்ன்ஹர் வான் பிரவுன் உள்பட நாஜி பொறியாளர்களைச் சந்தித்துப் பேசுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஜெர்மனியர்களுக்கு தெரிந்த அனைத்தையும் சரியாக அறிய அமெரிக்கா விரும்பியது.

அந்த தசாப்தத்தின் இறுதியில், அமெரிக்காவில் சியானின் வாழ்க்கை திடீரென நிலைதடுமாறியது. அவரது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின.

சர்வதேச அரசியலில் மாற்றம்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சியானின் அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாக போற்றப்படுகிறார்

கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார். அந்தப் பின்னணியில், சீனர்கள் என்றாலே "கெட்டவர்கள்" என்று பார்க்கும் போக்கு அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாக கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார்.

"அமெரிக்காவில், சீனாவை நேசித்த காலகட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ நடந்தது, திடீரென நாம் அந்நாட்டை இழிவாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம்," என்று வரலாற்றாசிரியர் பிபிசியிடம் கூறுகிறார்.

JPL-இன் புதிய இயக்குநர், தங்கள் ஆய்வகத்தில் உளவாளிகள் இருப்பதாக நம்பினார். சில ஊழியர்கள் குறித்த தனது சந்தேகங்களை எஃப்.பி.ஐ உடன் பகிர்ந்து கொண்டார். "அவர்கள் அனைவரும் சீனர்கள் அல்லது யூதர்கள் என்பதை அவர் கவனித்தார்," என்கிறார் ஃப்ரேசர் மெக்டொனால்ட்.

பனிப்போர் நடந்து கொண்டிருந்தது, மெக்கார்த்தி சகாப்தம் தொடங்கிய அந்த வேளை கம்யூனிச எதிர்ப்பு வீரியமடையத் தொடங்கிய காலம்.

இந்தக் காலகட்டத்தில்தான் எஃப்.பி.ஐ., சியான், ஃபிராங்க் மலினா மற்றும் பிறரை கம்யூனிஸ்டுகள் என்றும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்றும் குற்றம் சாட்டியது.

சியான் சேன்சென் செய்த தவறு என்ன?

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார்

கடந்த 1938ஆம் ஆண்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்தின் அடிப்படையில் சியானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமைந்தன. அவர் ஒரு சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை அது காட்டுகிறது. பசடேனா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டமாக அது இருக்கலாம் என்று எஃப்.பி.ஐ சந்தேகித்தது.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லை என்று சியான் கூறினாலும், அவர் 1938இல் பிராங்க் மலினாவுடன் இணைந்திருந்தார் என்பதை புதிய ஆராய்ச்சி உறுதி செய்தது.

ஆனால் இதனால் மட்டுமே அவர் ஒரு மார்க்சியவாதி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், அந்த நேரத்தில் கம்யூனிஸ்டாக ஒருவர் இருப்பது இனவெறிக்கு எதிரானது என்ற எண்ணம் நிலவியது என ஃப்ரேசர் மெக்டொனால்ட் தெளிவுப்படுத்துகிறார். இந்தக் குழு, பாசிசத்தின் அச்சுறுத்தலையும், அமெரிக்காவில் இனவெறியின் பயங்கரத்தையும் முன்னிலைப்படுத்த விரும்பியதாக அவர் கூறுகிறார்.

பிரிவினைக்கு எதிரான பிரசாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் கம்யூனிஸ்ட் கூட்டங்களைப் பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உள்ளூர் பசடேனா நீச்சல் குளத்தில் மதிய வேளையில் கறுப்பினத்தவர்கள் குளித்தால், அவர்கள் பயன்படுத்திய குளத்தை, வெள்ளையர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தம் செய்வார்கள்.

பொமோனாவில் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சூயோயு வாங், சியான் அமெரிக்காவில் இருந்தபோது சீனாவுக்காக உளவு பார்த்ததாகவோ அல்லது உளவுத்துறை முகவராக இருந்ததற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் சியான் சேசெனின் பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சியான் குற்றமற்றவர் என தியோடோர் வான் உள்பட சியானின் கால்டெக் சகாக்கள் அரசுக்கு எழுதிய கடிதங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த பிறகு, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர், சியானை சீனாவுக்கு நாடு கடத்த முடிவு செய்தார். 1955ஆம் ஆண்டில், தனது மனைவி மற்றும் அமெரிக்காவில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் சீனாவுக்கு கிளம்பிய சியான் சேன்சென், மீண்டும் ஒருபோதும் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இறுதி வரை தனது வாக்குறுதியை சியான் சேன்சென் காப்பாற்றினார்.

வேறொரு இலக்கை நோக்கி

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1950இல் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நடந்த வழக்கின்போது தனது வழக்கறிஞர் கிராண்ட் கூப்பருடன் சியான்

"அமெரிக்காவின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்த சியான் சேன்சென், அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருந்தார். அவரால் இன்னும் அதிகமாகப் பங்களித்திருக்க முடியும். ஆனால், அவர் இவ்வாறு அவமதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது அவருக்கு அவமானம் மட்டுமல்ல, துரோகமும்கூட" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தியான்யு ஃபாங் கூறுகிறார்.

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு கதாநாயகனைப் போல் சியான் சேன்சென் வந்தார். ஆனால் அவர் உடனடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்படவில்லை.

அதற்குக் காரணம், சியானின் மனைவி ஒரு தேசியவாதத் தலைவரின் செல்வ மகள். அதுமட்டுமல்ல, பதவி விலகும் வரை சியான் அமெரிக்காவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியிருந்தார்.

கடந்த 1958இல் சியான் சேன்சென் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானபோது, ஆட்சியின் நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்தார். இதனால் அவர் சுத்திகரிப்பு மற்றும் கலாசாரப் புரட்சியில் இருந்து தப்பிப் பிழைத்தார். சீனாவில் அவரது வாழ்க்கை நிம்மதியாகவும் மேம்பட்டதாகவும் இருந்தது.

அவர் சீனாவுக்கு வந்தபோது, அங்கு விண்வெளி அறிவியலைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோளுக்கான பணிகளை அவர் மேற்பார்வையிட்டார்.

பல தசாப்தங்களாக, அவர் புதிய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்தார். அவரது சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஏவுகணைத் திட்டம்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சியானின் சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

சியான் உதவியுடன் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் திட்டம்தான், பின்னொரு காலத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவப்பட்ட ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்தது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

சியானின் "silkworm" ஏவுகணைகள் 1991 வளைகுடா போரில் அமெரிக்கர்கள் மீதும், 2016இல் ஏமனில் ஹுட்டு கிளர்ச்சியாளர்களால் யுஎஸ்எஸ் மேசன் மீதும் ஏவப்பட்டதாக ஃப்ரேசர் மெக்டொனால்ட் குறிப்பிடுகிறார்.

"இது காலத்தின் விசித்திரமான சுழற்சி: அமெரிக்கா வெளியேற்றிய சக்தி, திரும்ப அதையே தாக்கியது."

f41af710-3f8a-11f0-b6e6-4ddb91039da1.jpg

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் சாங்க்-4 2019ஆம் ஆண்டு நிலவின் வெகு தூரத்தில் கால் பதித்த முதல் செயற்கைக்கோளாக மாறியது

சியான் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்.

அன்று பல விஷயங்களில் பின்தங்கியிருந்த சீனா, தற்போது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பூமியிலும் விண்வெளியிலும் வல்லரசாக வளர்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சியான் இருந்தார்.

ஆனால் அவரது கதை அமெரிக்காவை பெருமைப்படுத்தும் ஒன்றாகவும் இருந்திருக்கக்கூடும். திறமையுள்ள ஒருவர் எங்கு இருந்தாலும் செழித்து வளர முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் சியான் சேன்சென்.

கடந்த 2019ஆம் ஆண்டில், சந்திரனின் தொலைதூரப் பகுதியில் சீனா தரையிறங்கிய இடத்திற்கு, அமெரிக்காவில் சியானுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்த விமானப் பொறியாளர் வான் கார்மனின் பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பானது, சீனாவை விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவியது என்று கூறப்படுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14km2jxlzvo

இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது

3 months 1 week ago
யாழில் சட்டத்தரணியின் சதியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் சிறை சென்ற துயரம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 75 வயதுடைய சின்னையா சிறிலோகநாதன் என்பவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பலாலியில் வைத்து கைது செய்யப்பட்டார். விளக்கமறியலில்... இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் தொடர்பான வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக அவரது உறவினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட முதியவரின் உறவினர் கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினையை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய அன்றே வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. அரசியல் சூதாட்டம் ஆனால் தற்போது சட்டத்தரணியாக உள்ள அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்றே அவரை சிறையில் அடைப்பதற்காக அனைத்து தந்திரோபாயங்களையும் மேற்கொண்டுள்ளார். குறித்த நபருக்கு ஆதரவாக முன்னிலையாவதாக தெரிவித்த அந்த சட்டத்தரணி, அவர் உள்ளே செல்வதற்கான வேலைகளை மாத்திரம்தான் செய்துள்ளார். அவரை கைது செய்த புலனாய்வுத்துறையினரே கூறினார்கள் அவரை விடுதலை செய்யலாம் என்று, ஆனால் அந்த சட்டத்தரணி அவரை உள்ளே அனுப்புவதிலேயே குறியாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கருத்து தெரிவிக்கையில், நேரடியாக சட்டத்தரணி சுமந்திரன் சதி செய்ததாக குற்றச்சாட்டினார். https://tamilwin.com/article/sri-lankan-refugee-arrested-in-sri-lanka-1748872059