Aggregator
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !
18 Dec, 2025 | 11:17 AM
![]()
நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு
அறிவிக்கப்பட்டதாகவும், இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், டெங்கு நோயை கட்டுப்படுத்த மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால், ஜனவரி முதல் வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் , சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் எனவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன மேலும் தெரிவித்துள்ளார்.
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி!
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி!
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி!
18 December 2025

இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆணையாளரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தை வரவேற்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர்.
குறித்த தீவில் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமையால், இங்கிலாந்தில் வரி செலுத்துவோருக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளமையையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
முன்னதாக உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றில், அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர் என்பதை நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.
எனினும், குறித்த தீர்ப்பை ஆட்சேபித்து, தீவுக்கான ஆணையாளரால் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது மேன்முறையீட்டின் நான்கு காரணங்களும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டன.
அதன்படி, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல் என்ற தீர்ப்பு தற்போது உறுதி செய்யப்பட்ட நிலையில், 60இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை நீண்ட காலத்திற்கு சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமைக்காக, பிரித்தானிய அரசாங்கம் மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக செலுத்த நேரிடும் என, பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்
யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்
யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்
18 December 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தாங்கள் செயற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியிருந்தனர்.
தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர், சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்கலாம் என யோசனை ஒன்றையும் முன்வைத்தார்.
குறித்த யோசனையை சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
பிள்ளையானின் நெருங்கிய சகா கைது
பிள்ளையானின் நெருங்கிய சகா கைது
பிள்ளையானின் நெருங்கிய சகா கைது

கனகராசா சரவணன்
சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாட்களின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை (17) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ம் திகதி (4-8-2025) கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சிஜடி யினர் தேடி வந்துள்ள நிலையில் அவர் குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்துள்ள அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் திரும்பி நாட்டிற்கு வந்துள்ள நிலையில் சம்பவ தினமான புதன்கிழமை காலையில் அவரது வீட்டிற்கு கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையானின்-நெருங்கிய-சகா-கைது/175-369698
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு



சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு-வெலியோயா, முல்லைத்தீவு-திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு-கொக்கிலாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டு, பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அவசர நடவடிக்கையாக, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இராணுவ பொறியாளர் படையினர் உடனடி பழுதுபார்ப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
120 அடி நீளமுடைய, 12 பேகள் கொண்ட, இரு வழி போக்குவரத்திற்கான ‘Compact 100’ கனரக பாலம் அமைக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் துரிதமான பங்களிப்பினால், நாட்டின் வட பிராந்தியத்திலுள்ள இந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயல்புநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.tamilmirror.lk/செய்திகள்/உடைந்த-நாயாறு-பாலம்-புனரமைப்பு/175-369735
எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்! - ரணில் விக்ரமசிங்க
எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்! - ரணில் விக்ரமசிங்க
எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் தாம் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க . நேற்று (17) இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று பிற்பகல் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்காக பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது, அதே நேரம் ஐக்கிய மக்கள் சக்தி விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையாண்டு வருகிறார்.
அந்தக் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், தொடர்புடைய கலந்துரையாடல்களை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இனி அவற்றை இழுத்தடிக்க நேரமில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அடுத்த ஆண்டு முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் மேற்கண்ட விடயங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அந்த விவாதங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு விரும்பினால், அது தனக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று இங்கு குறிப்பிட்ட ரணில் , ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரணில் தலைமைப் பதவியில் இருந்து விலகி சஜித் அல்லது வேறு ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் இங்கு கூறினார். “நான் நீண்ட காலமாக கட்சித் தலைவராக இருந்து வருகிறேன்.
நாட்டின் ஜனாதிபதியானேன். நான் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டேன். மேலும், நாடு ஒரு கடினமான தருணத்தில் இருந்தபோது, நான் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தேன்.
எனவே, இந்த இராஜினாமாவில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
கருத்து படங்கள்
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
முட்டையில் ஆபத்தான ஆன்டிபயாடிக் உள்ளதா? - உணவுப் பாதுகாப்புத் துறையின் விளக்கம்
முட்டையில் ஆபத்தான ஆன்டிபயாடிக் உள்ளதா? - உணவுப் பாதுகாப்புத் துறையின் விளக்கம்

பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் (Nitrofuran) ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை, நாமக்கலில் முட்டை மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
"கடந்த 10 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை," என்று நாமக்கல் மாவட்ட முட்டை ஏற்றுமதியாளர்கள் பிபிசி தமிழிடம் கூறினர்.
புற்றுநோயைப் பரப்பும் காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நைட்ரோஃபுரான் மருந்தை, இந்திய அரசு தடை செய்துள்ளது.
இந்தியாவில் எக்கோஸ் (Eggoz) என்ற தனியார் நிறுவனம் முட்டை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் கலவை இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
உணவுத் தர சோதனைகள் தொடர்பான காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றில் இதுதொடர்பான விவரங்கள் வெளியாகியிருந்தன. எக்கோஸ் நிறுவன முட்டையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது ஒரு கிலோவுக்கு 0.74 மைக்ரோகிராம் அளவுக்கு ஏஓஇசட் (a metabolite of nitrofuran antibiotics) கலவை உள்ளதாக காணொளியில் கூறப்பட்டிருந்தது.
இந்தியாவில் ஏஓஇசட் கலவையை உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளில் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

'ஆபத்தை விளைவிக்கும்' - இந்திய அரசின் எச்சரிக்கை கடிதம்
இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், "குளோராம்பெனிகால் (Chloramphenicol), நைட்ரோஃபுரான்ஸ் (Nitrofurans) ஆகிய மருந்துகளை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் உணவு உற்பத்தி செய்யும் விலங்குகள் வளர்ப்பில் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டது குறித்த கடிதம்' என கூறப்பட்டுள்ளது.
அதோடு, "உணவு உற்பத்தி செய்யும் விலங்குகள் வளர்ப்பு மையங்களில் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். இவற்றின் விற்பனை மற்றும் விநியோகத்தின் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்" எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
உணவு உற்பத்தி செய்யக்கூடிய விலங்குகளில் நைட்ரோஃபுரான் மருந்தைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாகக் கூறப்படும் தகவலை எக்கோஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

எக்கோஸ் நிறுவனம் கூறியது என்ன?
"தங்கள் நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்தின் விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. தீவனம் முதல் விநியோகம் வரை முறையான செயல்முறைகளைப் பின்பற்றுகிறோம்," என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆய்வக அறிக்கைகளை தங்கள் இணையதளத்தில் பொதுவெளியில் வைத்துள்ளதாக, எக்கோஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அதோடு, "எக்கோஸ் நிறுவன முட்டை மாதிரிகளின் ஆய்வக அறிக்கைகளை அனைவரின் பார்வைக்காக பொதுவெளியில் பகிர்ந்துள்ளோம். நுகர்வோரின் பாதுகாப்பும் நம்பிக்கையுமே எங்களுக்கு அவசியம். பண்ணைகளில் எப்போதும் உயர்ந்த தரத்தைப் பின்பற்றி வருகிறோம்." எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் முட்டைகளின் மாதிரிகளை ஆய்வங்களுக்கு அனுப்பும் பணியில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஈடுபட்டு வருகிறது.
சென்னை, நாமக்கலில் ஆய்வு
சென்னையில் சுமார் 15 முட்டைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக, இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் வி.கே.பஞ்சாம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விற்பனையில் இருந்த பிராண்டட் முட்டைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், "அடுத்த வாரம் ஆய்வக முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதன்கிழமையன்று (டிசம்பர் 17) நாமக்கலில் முட்டை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடம் இருந்து உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முட்டை ஏற்றுமதி மையமாக நாமக்கல் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை தினந்தோறும் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்வதாகக் கூறுகிறார், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ்.
நாமக்கலில் இருந்து பிரிட்டன், ஜப்பான் உள்படப் பல்வேறு நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'ஆன்டிபயாடிக் புகார்கள் இதுவரை இல்லை'
"முட்டைகள் அவ்வப்போது ஆய்வகங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்கிறார், நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் தங்க விக்னேஷ்.
"இதுவரை முட்டைகளில் ஆன்டிபயாடிக் இருந்ததாக ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை" எனக் கூறிய அவர், "மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அவசியம்." என செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

பட மூலாதாரம்,Getty Images
இதுதொடர்பாக முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரிவான ஆலோசனை ஒன்றையும் நடத்தியுள்ளனர். ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட முட்டைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மருத்துவர் தங்க விக்னேஷ் தெரிவித்தார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரானை கோழிப் பண்ணைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்துவதில்லை எனக் கூறுகிறார், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ்.
"இந்த மருந்தை கால்நடை மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை. ஆய்வுக்கு முட்டைகளை அனுப்பும்போது தடை செய்யப்பட்ட மருந்து இருந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை," எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
நாமக்கலில் ஒரு முட்டையின் விலை 6.25 ரூபாயாக உள்ளது. வெளிச் சந்தையில் 7.50 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசும் சிங்கராஜ், "விலை அதிகமானதால் முட்டை குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "குளிர்காலங்களில் முட்டை விற்பனையில் வரக்கூடிய வருமானத்தை வைத்து இழப்பு ஏற்படும் காலங்களில் அதை ஈடு செய்துகொள்கிறோம். மற்ற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இதைச் சாதாரண விலையாகவே பார்க்கிறோம்." என்றார்.

பட மூலாதாரம்,Getty Images
'21 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு'
நாமக்கல் மாவட்டத்தில் 21 நாட்களுக்கு ஒருமுறை முட்டைகளை ஆய்வகங்களில் பரிசோதிப்பதாகக் கூறுகிறார், நாமக்கல் கால்நடை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சந்திரசேகர். இவர் கால்நடை உணவியல் துறையில் பணிபுரிந்தவர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாமக்கலில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வகம் உள்ளது. அங்கு முட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. இங்கு முட்டைகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்கம் உள்ளதா என சோதனைகள் நடத்தப்படுகின்றன." என்றார்.
கோழிகளுக்கு வைட்டமின், தாது சத்து, லிவர் டானிக் போன்றவை கொடுக்கப்படுவதாகக் கூறும் அவர், "நைட்ரோஃபுரான் மூலமாக புற்றுநோய் பரவுவதாக சந்தேகம் உள்ளது. ஆகையால் இந்த மருந்து எந்த வகையிலும் கோழிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை." எனக் கூறுகிறார்.
மனித உயிருக்கு ஆபத்தா?
நைட்ரோஃபுரான்களை தொடர்ந்து பயன்படுத்துவது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மருந்தை நீண்டகாலம் பயன்படுத்தும்போது புற்றுநோய், மரபணு பாதிப்பு, ஒவ்வாமை, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி.
"கோழி, மீன் மற்றும் கால்நடைத் தீவனங்களில் இதைப் பயன்படுத்துவதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்," எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அதேநேரம், "முட்டையை சாப்பிடுவதற்குத் தயக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையின் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர் கேசவன்.
"குழந்தைகளுக்கு தினசரி ஒரு முட்டை' வழங்க வேண்டும் என்பதை யுனிசெஃப் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தில் தினசரி ஒரு முட்டை என்பதைச் செயல்படுத்தி வருகின்றனர்" என அவர் குறிப்பிட்டார்.
"தினமும் குறைந்தது ஒரு முட்டையைச் சாப்பிடும்போது முழு புரதச்சத்து கிடைக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இது உள்ளது" எனக் கூறும் மருத்துவர் கேசவன், "அரசின் ஆய்வக முடிவுகள் வெளியாகும்போது கோழி தீவனத்தில் நைட்ரோஃபுரான் கலக்கப்பட்டதா என்பது தெரிய வரும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு