Aggregator

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week ago
இங்கும் உத்தரவாதம் ஒருவர் வழங்கினால் கடன் கொடுப்பார்கள். கேள்விக்குறி தவறி விட்டது, அவர்கள் நோக்கம் கடைசி வரை அவர்கள் முயற்சித்துள்ளார்கள் எனவே (எனக்கு) படுகிறது, இந்த வியாபார தோல்வியினை ஏற்க முடியாதிருக்கும், அப்போது பொதுவாக ஒரு சூதாட்டியின் மனநிலையில் பெரும்பாலும் இருப்பார்கள் என கருதுகிறேன்(Doubling down). நான் கூறிய தொழிலதிபர் தனது திட்டத்தினை 10 ஆண்டு திட்டமாக தொடங்கினார், 8 வது ஆண்டில் அவரது வியாபாரம் லிகுடேசனுக்கு சென்றது, ஆரம்பத்தில் (அந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னரே) தொடர்பு இல்லாமல் போய்விட்டது, அந்த பாதியில் முடிந்த திட்டத்தின் 10 ஆவது ஆண்டில் அவர் தன் வாழ்க்கையினை சுயமாக முடித்திருந்தார் (அந்த வியாபார தோல்வியா அல்லது அதனால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியா இந்த முடிவினை எடுக்க தூண்டியது எனத்தெரியாது). இவர்கள் மீள வந்து வங்கி கடனை அடைக்க கூடிய சூழ்நிலைகள் கூட உருவாகலாம். கடினமான காலகட்டங்களில் கூட இருந்தவர்கள் விலகி சென்றுவிடுவார்கள், இவர்களுக்கு இப்போது மிக சிலரே உறுதுணையாக இருப்பார்கள், இணையத்தில் வெளியாகும் தகவல்கள் அவர்களையும் குழப்பி விடலாம்.

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

1 week ago
சௌக்கியம் சௌக்கியம்.. எல்லோரும் சௌக்கியம்.. மீசாலையும் சௌக்கியம்.. சங்கத்தானையும் சௌக்கியம்.. நுணாவிலும் சௌக்கியம்.. கைதடி சௌக்கியம்.. நாவற்குழியும் சௌக்கியம்.. கச்சாய் சௌக்கியம்.. தனங்கிளப்பும் சௌக்கியம்.. அது மட்டுமல்ல குடத்தனையும் சௌக்கியம்.

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 week ago
நியூஸிலாந்துக்கு எதிராக பெரிய வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியது; சொஃபி டிவைன் ஒய்வு பெற்றார் Published By: Vishnu 27 Oct, 2025 | 12:01 AM (நெவில் அன்தனி) விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் பெரிய வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து, அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. லின்சி ஸ்மித், அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்ட், அலிஸ் கெப்சி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், அமி ஜோன்ஸ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன இங்கிலாந்துக்கு பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. ஜோர்ஜியா ப்ளிம்மர் 43 ஓட்டங்களையும் அமேலியா கேர் 35 ஓட்டங்களையும் அணித் தலைவி சொஃபி டிவைன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலிஸ் கெப்சி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 29.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. அமி ஜோன்ஸ் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்களையும் டெமி போமொன்ட் 40 ஓட்டங்களையும் ஹீதர் நைட் 33 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநாயகி: அமி ஜோன்ஸ் சொஃபி டிவைன் ஓய்வுபெற்றார் நியூஸிலாந்து அணித் தலைவி சொஃபி பிரான்செஸ் மொனிக் டிவைன் இந்தப் போட்டியுடன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 19 வருடங்களுக்கு முன்னர் அவஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான சொஃபி டிவைன், இன்று நடைபெற்ற நியூஸிலாந்தின் இந்த வருடத்திற்கான கடைசி மகளிர் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டி முடிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 159 போட்டிகளில் 144 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய சொஃபி டிவைன் 9 சதங்கள், 18 அரைச் சதங்களுடன் 4279 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். சகலதுறை வீராங்கனையான டிவைன் 111 விக்கெட்களையும் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/228739

கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி

1 week ago
27 Oct, 2025 | 11:11 AM வவுனியா - கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை அவதானித்ததையடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். https://www.virakesari.lk/article/228764

கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி

1 week ago

27 Oct, 2025 | 11:11 AM

image

வவுனியா - கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. 

திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை அவதானித்ததையடுத்து  அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும்  தகவலை வழங்கியுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு   வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். 

IMG_20251027_082934.jpg

IMG_20251027_083117.jpg

IMG_20251027_083226.jpg

https://www.virakesari.lk/article/228764

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

1 week ago
Oct 27, 2025 - 09:35 AM - இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmh8m6pz20188qplpbb297cwt

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

1 week ago

Oct 27, 2025 - 09:35 AM -

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. 

இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 

20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. 

இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. 

குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை 

பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmh8m6pz20188qplpbb297cwt

யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.

1 week ago
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் Oct 27, 2025 - 02:02 PM - உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது. லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை, பெரு, தென் அமெரிக்கா யாழ்ப்பாணம், இலங்கை மெயின், அமெரிக்கா காடிஸ், ஸ்பெயின் ரீயூனியன், ஆப்பிரிக்கா போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா கார்டஜீனா, கொலம்பியா பின்லாந்து, ஐரோப்பா டிப்பரரி, அயர்லாந்து மெக்சிகோ நகரம் கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா சார்டினியா, இத்தாலி லிபர்டேட், சாவ் பாவ்லோ யூட்ரெக்ட், நெதர்லாந்து பார்படாஸ், கரீபியன் ஜெஜு-டோ, தென் கொரியா வடக்குத் தீவு, நியூசிலாந்து தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா குய் நோன், வியட்நாம் சீம் ரீப், கம்போடியா பூக்கெட், தாய்லாந்து இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா துனிசியா, ஆப்பிரிக்கா சாலமன் தீவுகள், ஓசியானியா https://adaderanatamil.lk/news/cmh8vqm3i018iqplpczm4u15f

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week ago
குண்டக்கா ம‌ண்ட‌க்கா கேள்விக்கான‌ ப‌தில் 3 ச‌ரியாக‌ இருக்கு இந்தியா கோப்பை தூக்கினால் இனி வ‌ரும் போட்டியில் அதிக‌ புள்ளி கிடைக்கும் லொள்😁.........................................

வங்கக் கடலில் புயல் உருவாகிறதா? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

1 week ago
மொன்தா புயல் வலுவடைவதால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு Published By: Digital Desk 3 27 Oct, 2025 | 03:08 PM வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் மொன்தா புயல், அதன் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று மற்றும் மழையை ஏற்படுத்தவுள்ள நிலையில், திங்கட்கிழமை (27) இந்தியா 50,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் அவசரகால ஊழியர்களுக்கான விடுமுறைகளை அதிகாரிகள் இரத்து செய்து, பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டனர். இந்த புயல் செவ்வாய்க்கிழமைக்குள் கடும் புயலாக மாறி, பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. "காக்கிநாடா மாவட்டத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது " என ஆந்திரப் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். அதன்படி, சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கை காட்டுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து குடும்பங்களை மாற்ற அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் விரைந்துள்ளன. அங்கு 3.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அண்டை மாநிலமான ஒடிசாவில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டனர். ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன. 1999 அக்டோபரில் ஒடிசாவைத் தாக்கிய புயலில் சிக்கி 10,000 பேர் உயிரிழந்தனர். இந்தியாவை பாதித்த மிகவும் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. சில மாவட்டங்களில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் என வெளியான வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து, தெற்கு மாநிலமான தமிழ்நாட்டின் அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு மிச்சாங் புயலால் ஏற்பட்டதைப் போல கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது. இமயமலை நாடான நேபாளத்தில், செவ்வாய் முதல் வெள்ளி வரை மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், மேலும் மலையேற்றம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இம் மாதம் நேபாளம் முழுவதும் பெய்த கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/228788

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week ago
நீங்கள் 2000 ஆண்டில் ஒரு பெற்றோல் செட்டுடன் ஆரம்பித்து, பின்னர் ஒரு கோலிங்கார்ட்ட நிறுவனத்தை நடத்தி, அதை தகுந்த சமயத்தில் விற்று வெளியேறி, சில நூறு பெற்றோல் நிலையங்களை நாடெங்கும் உள்ள, இப்போதும் இலாபகரமாக இயங்கும் வலையமைப்பை உருவாக்கிய, இரெண்டு Kent University அக்கவுண்டன்சி கிரஜுவேற்சை, ஏதோ கம்பெனி நடத்துவது எப்படி என தெரியாத பச்சைபுள்ளைகள் என்பது போல எழுதுகிறீர்கள். நீங்கள் மேலே சொன்ன விளக்கங்கள் எல்லாம் உங்களை, என்னை இட இந்த தம்பதிக்கு தெரியும். கம்பனி லாவின் தலைசிறந்த வக்கீல்கள் ஆலோசனையும் கிடைத்திருக்கும். ஆனாலும் இப்படி நடந்து கொண்டு, தலைமறைவாகி உள்ளார்கள் எண்டால் …கடைசி சில வருடங்களிலாவது இவர்கள் நோக்கம் வேறாக இருந்துள்ளது என்பதே என் கருத்து.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week ago
இங்கு வியாபாரத்தின் feasibility ஐ பொறுத்து 95% வரை கொடுப்பார்கள். அதேபோல் சில தமிழ் “ஏற்பாட்டாளர்கள்” மூலம் வங்கி அதிகாரிகளை அணுகினால், 80 ரூபா பெறுமதியான வியாபாரத்தை 110 ரூபாய் பெறுமதி என மிகை மதிப்பீடு செய்து, உங்களுக்கு 90 ரூபாய் வங்கி கடனாக வாங்கி தருவார்கள். இதில் நீங்கள் ஏற்பாட்டாளருக்கு ஒரு % வெட்ட வேணும். இது சிறு வியாபாரங்களுக்கு. பல தொழில் வாய்புக்களை இழக்கும் அபாயம் உள்ள பெரிய தொழில்களை 1£ க்கு கூட விற்றுள்ளார்கள், அதேபோல் அரசே வங்கி கடன்களை உத்தரவாதம் செய்வதும் உண்டு, அண்மையில் ஜகுவார் லேன்றோவருக்கு இப்படி சலுகை கொடுத்தார்கள். அதேபோல் வியாபாரத்தை 100% ஏனையோரின் முதலீடு+வங்கி கடனில் வாங்குவது இங்கே சாதாரணம். ஆகவே இப்படித்தான் நடந்தது என தெரியாமல் அந்த பெரியதொகையின் 20% ஆரணி, சஞ்சீவ் சொந்த காசில் போட்டார்கள் என்பது வெறும் ஊகம் என்பதே நான் சொல்வது.

யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.

1 week ago
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா வழிகாட்டி Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது. இந்த அங்கீகாரம் 2025 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட “Best in Travel 2026” என்ற பதிப்பின் ஒரு பகுதியாகும். இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை, Lonely Planet அதன் பண்பாடு, உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்காக சிறப்பாக விளக்குகிறது. யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்வது மிதிவண்டி, டுக்-டுக், பேருந்து அல்லது பேருந்து படகு மூலம் எளிதாக செய்யலாம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை இலங்கை தலைநகரான கொழும்புடன் இணைக்கின்றன, சென்னையிலிருந்து நேரடி விமானங்களும் இயக்கப்படுகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு நயினாதீவு தீவிற்குப் பயணிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன — இந்துக் கோவில் நாக பூஷணி அம்மன் கோவில் மற்றும் பௌத்த நாகதீப விகாரை. புராணக் கதைகளின்படி, புத்தர் இலங்கைக்கு இரண்டாவது முறை வந்தபோது இத்தீவிற்கே வந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும், தீவின் பெயர் இலங்கை நாட்டுப் புராணங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நாக மக்கள் என்பவர்களிடமிருந்து வந்ததாக Lonely Planet தெரிவித்துள்ளது. Lonely PlanetBest in Travel 2026 - Lonely PlanetDiscover Lonely Planet’s top travel destinations for 2026. Explore expertly curated adventures worldwide, from top cities to unforgettable experiences. குறிப்பு : CHATGPT துணை கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்டது

யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.

1 week ago

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா வழிகாட்டி Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது. இந்த அங்கீகாரம் 2025 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட “Best in Travel 2026” என்ற பதிப்பின் ஒரு பகுதியாகும்.

இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை, Lonely Planet அதன் பண்பாடு, உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்காக சிறப்பாக விளக்குகிறது.

“2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிந்ததிலிருந்து, Malabar Home Stay போன்ற குடும்பத்தால் நடத்தப்படும் தங்குமிடங்கள் யாழ்ப்பாணத்தை மீண்டும் ஒரு கலாச்சார சுற்றுலா இலக்காக உயிர்ப்பித்துள்ளன. யாழ்ப்பாணத்தின் நுணுக்கமான வரலாற்றை புரிந்துகொள்ள, போரின்போது தீ வைத்து எரிக்கப்பட்ட பின்னர் புதுப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம், 1619 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ஐந்து மூலையுடைய யாழ்ப்பாணக் கோட்டை, மேலும் Fox Jaffna Resort எனும் சொகுசு விடுதியில் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்ட இரண்டு பங்கர்கள் ஆகியவற்றைக் காணலாம்,” என குறிப்பிடுகிறது.

“யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மணி நேர பேருந்து பயண தூரத்தில் அமைந்துள்ள சிறிய தீவு நெடுந்தீவு (Delft) — தாழ்ந்த பாறைக்கடல், பவளக் கற்களால் வேலி இட்ட வீடுகள் மற்றும் Delft Village Stay போன்ற தங்குமிடங்களுடன் — அமைதியான தீவு. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளுக்கிடையில் மெதுவாக மிதிவண்டியில் சுற்றுவதற்கு இது சிறந்த இடமாகும்.”

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்வது மிதிவண்டி, டுக்-டுக், பேருந்து அல்லது பேருந்து படகு மூலம் எளிதாக செய்யலாம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை இலங்கை தலைநகரான கொழும்புடன் இணைக்கின்றன, சென்னையிலிருந்து நேரடி விமானங்களும் இயக்கப்படுகின்றன.

“எல்லாவற்றிலும் மேலாக, இங்கு உள்ள மக்களின் அன்பும் விருந்தோம்பலும் ஆழமாகப் பதிந்துள்ளன — வெதுவெதுப்பான புன்னகைகள், நுரை நிறைந்த தேநீர் கிண்ணங்கள், நண்டு கறி விருந்துகள் எல்லாம் நிரம்பியிருக்கின்றன,” என்று Lonely Planet குறிப்பிடுகிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு நயினாதீவு தீவிற்குப் பயணிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன — இந்துக் கோவில் நாக பூஷணி அம்மன் கோவில் மற்றும் பௌத்த நாகதீப விகாரை. புராணக் கதைகளின்படி, புத்தர் இலங்கைக்கு இரண்டாவது முறை வந்தபோது இத்தீவிற்கே வந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும், தீவின் பெயர் இலங்கை நாட்டுப் புராணங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நாக மக்கள் என்பவர்களிடமிருந்து வந்ததாக Lonely Planet தெரிவித்துள்ளது.

Lonely Planet
No image previewBest in Travel 2026 - Lonely Planet
Discover Lonely Planet’s top travel destinations for 2026. Explore expertly curated adventures worldwide, from top cities to unforgettable experiences.

குறிப்பு : CHATGPT துணை கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்டது