Aggregator
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
ஆடி மாத சிரிப்புகள்.
சிரிக்கலாம் வாங்க
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க அதிபருக்கான நோபல் பரிசுக்காக 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுவோம் - காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க அதிபருக்கான நோபல் பரிசுக்காக 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுவோம் - காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
21 JUL, 2025 | 05:34 PM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் சங்கத்தினரால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
1948 முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல், கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டன.
அந்த வகையில் பல உலகத் தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயற்பட தைரியமும் தெளிவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது. சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர். ஆனால், அவர் காரியங்களைச் செய்து முடிக்கிறார்.
ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம். உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக டிரம்ப் மாறட்டும் என்றனர்.
மலையகத்தில் கடும் மழை - நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு
மனித புதைகுழிகளை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் தொழில்நுட்பத்தை வழங்குங்கள் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து ஆராயுங்கள் - அரசாங்கத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை
மனித புதைகுழிகளை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் தொழில்நுட்பத்தை வழங்குங்கள் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து ஆராயுங்கள் - அரசாங்கத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை
Published By: RAJEEBAN
21 JUL, 2025 | 04:12 PM
மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என பரிந்துரைத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது.
இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 25 பக்க அறிக்கை முன்வைக்கின்றது.
நபர் ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மனித உரிமையை மிக மோசமாக மீறும் செயல் என்பதை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக தெற்கில் கிளர்ச்சி வடக்குகிழக்கில் ஆயுத மோதல்கள் குறித்த சூழமைவின் பின்னணியில்.
பல ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதில் குடும்பங்கள் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் முக்கிய முயற்சிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கீகரிக்கின்றது.
பொருளாதார சவால்கள் மற்றும் பராமரிப்பு பொறுப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டியிருந்த போதிலும் இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடவும் பெண்கள் முயற்சிகளை வழிநடத்தியுள்ளனர் என்பதை இது குறிப்பாக அங்கீகரித்தது
இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மனிதஉரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கடந்த கால விசாரணை ஆணையங்களால் 27000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன என்பதையும் காணாமல் போனோர் தொடர்பான 21000க்கும் மேற்பட்ட புகார்களை காணாமல்போனோர் அலுவலகம் பெற்றுள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தது.
மே 17 மற்றும் 18 2009 அன்று பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்த பின்னர் 1000க்கும் மேற்பட்ட காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கண்டுபிடிப்புகளையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது.
மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பிரச்சினையை குறிப்பாக எடுத்துக்காட்டியது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
வழமையான சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமான இபலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்கான குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கான பரந்துபட்டஅதிகாரங்களை கொண்ட புதிய நிரந்தர நிறுவனமொன்றை உருவாக்கவும்
ஆட்கொணர்வு வழக்குகள்பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றின் விரைவான முடிவை உறுதி செய்வதற்குத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
வலுக்கட்டாயமாக காணாமல் போதல் சட்டத்தின் கீழ் ‘பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலை ஒரு குறிப்பிட்ட குற்றமாகச் சேர்க்கவும்
பலவந்தமாக காணாமலாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பண பணமற்ற மற்றும் முன்மாதிரியான சேதங்களுக்கு இழப்பீட்டு வழிகாட்டுதல்களை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில்வகுத்தல்;
ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வலுவான விசாரணை இடம்பெறுவதையும் உறுதி செய்வதற்காக மனித புதைகுழிகளில் உள்ள மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமானநிதி உதவி தொழில்நுட்ப உதவி ஏனைய வளங்களை வழங்குங்கள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் ஒரு தரப்பினராக மாறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இது பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலைமனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக பட்டியலிடுகிறது.
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
இந்தியா – வடக்கு ஊடகத் துறைக்கு தொடர்ந்த ஒத்துழைப்பு வழங்கும் : இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி
இந்தியா – வடக்கு ஊடகத் துறைக்கு தொடர்ந்த ஒத்துழைப்பு வழங்கும் : இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி
Published By: DIGITAL DESK 2
21 JUL, 2025 | 01:43 PM
வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.
இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்: பத்திரிகைத் துறை, கதையாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய உரையாடல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 19ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.
அதில் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவியல் துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றும் போதே துணைத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் இந்தியா வைக்கும் நம்பிக்கையை வலியுறுத்தினார்.
அத்துடன் தொழில்முறை மேம்பாடு மற்றும் திறன்மூட்டலுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்த அக்கறையுடன் செயல்படுவதாக உறுதிபட தெரிவித்தார்.
மேலும் வடமாகாணத்தில் இந்தியா மேற்கொள்ளும் விரிவான ஒத்துழைப்பு முயற்சிகளில் இந்திய வீடமைப்பு திட்டம், பண்டைய கோயில்களின் மறுசீரமைப்பு, புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின் திட்டங்கள், பல்கலைக்கழக கட்டிடங்கள், மற்றும் யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் போன்ற இந்தியாவின் பன்முக செயல்பாடுகள் மானுடய உதவி, கல்வி ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றார்.
குறித்த பயிற்சி பட்டறையில், இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ‘பிஹைண்ட்வுட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சிவதனுஷ் மற்றும் கிருத்திகா மருதநாயகம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டதுடன், ‘தி ஹிந்து’ பத்திரிகையின் பிரதான நிருபர் (தரவுப் பத்திரிகைத் துறை) விஞ்ஞேஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் ‘பிபிசி தமிழ்’ ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் பிரபுராவ் ஆனந்தன் ஆகியோர் மெய்நிகர் ஊடாக கலந்துகொண்டனர்.
அவர்கள் தமது ஊடகத் துறையின் நடப்பு போக்குகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பயிற்சி பட்டறையின் நிறைவில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை இந்திய துணை தூதுவர் வழங்கி வைத்தார்.