1 month 3 weeks ago
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்குவார்களா தமிழ் அரசியல்வாதிகள்
ஞாயிறு, 16 நவம்பர் 2025 05:52 AM

மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மதுபானசாலைக்கான அனுமதி வழங்குபோது இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதன்படி, முதலில் விலைமனு தாரர்கள் தெரிவு செய்தல் மற்றும் விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்கப்படும்.
விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டடுள்ளதா? தூரத்துக்கு அமைய அந்த பகுதியில் மதுபானசாலை அமைக்க முடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படும்.
அதன்படி, அரச அதிகாரிகளினால் இந்த விடயங்களில் எவ்வித தவறும் ஏற்படவில்லை என்றே நிதி அமைச்சின் செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், விலை மனுதாரர்களை தெரிவு செய்யப்படும் போது ஏற்பட்டுள்ள மோசடி குறித்தே அரசாங்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, விலை மனுதாரர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
https://jaffnazone.com/news/52296
1 month 3 weeks ago
திருப்பி அடிக்கிறதுக்கு பலத்தை வளர்க்காமல், குய்யோ மய்யோ என்று கூப்டு போடுவதும், அமெரிக்காவின் கோர்டுக்குள் பதுங்க முனைவதும் யதார்த்தத்தில் ஒன்றுமே விளைவிக்காது, இரான் - இஸ்ரேல், அமெரிக்கா கூட ஒருமுறை அடிக்க போய், திருப்பி வாங்கிய அடியில், தயக்கம் மீண்டும் தடி எடு தண்டெடு என்னும் போக்கை கடைபிடிக்க அது மட்டும் அல்லாமல், இரான் அந்தந்த நாடுகளிலும் உள்ளுக்கு தேனையென்றால் அடிக்க முனைப்புக்களை உருவாக்குவது.
1 month 3 weeks ago
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த சிவில் அமைப்பின் சஞ்சீவ மஹவத்தவிடம், நேற்றையதினம் 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசாரணைகளை எதிர்கொள்ள தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/சிறிதரனுக்கு_எதிராக_விசாரணை_ஆரம்பம்!
1 month 3 weeks ago
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த சிவில் அமைப்பின் சஞ்சீவ மஹவத்தவிடம், நேற்றையதினம் 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசாரணைகளை எதிர்கொள்ள தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
https://newuthayan.com/article/சிறிதரனுக்கு_எதிராக_விசாரணை_ஆரம்பம்!
1 month 3 weeks ago
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். இதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார். https://www.samakalam.com/பருத்தித்-துறைமுகத்தை-அம/
1 month 3 weeks ago
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை
யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார்.
https://www.samakalam.com/பருத்தித்-துறைமுகத்தை-அம/
1 month 3 weeks ago
இந்த பெயரின் குறியீடே, பூகோள அரசியல், குறிப்பாக சீனை தென்னமெரினாவில் இருந்து அகற்றுவது என்னும் முனைப்பு. அதாவது மொன்றோ கோட்பாட்டை ( Monroe Doctrine), அமெரினாய் தவிர வேறு எவரும் தென்னமெரிக்காவில் எந்த விதத்திலும் செல்வாக்கு செலுத்த, அது சம்பந்தப்பத நாடுகளுக்கு நம்மையாக இரு தாலும், அமெரிக்கா தடுக்கும் என்பது அமெரிக்கா கையிலெடுத்து இருப்பது ஆகவே. மற்றவர்கள் அமெரிக்கா / மேட்ற்கு /நேட்டோ தமக்கு கிட்ட வருவதை தடுக்கலாம், தடுப்பார்கள்
1 month 3 weeks ago
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை Nov 16, 2025 - 03:40 PM சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்துள்ளமையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவம் நாளை (17)தொடங்கி ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை 65 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என்றும், குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை இருப்பதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து சபரிமலைக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi1k1beg01nro29n4srza1bj
1 month 3 weeks ago
16 Nov, 2025 | 05:05 PM (இராஜதுரை ஹஷான) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை 2025.11.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. https://www.virakesari.lk/article/230502
1 month 3 weeks ago
16 Nov, 2025 | 05:05 PM

(இராஜதுரை ஹஷான)
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை 2025.11.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
https://www.virakesari.lk/article/230502
1 month 3 weeks ago
அசலங்க, வனிந்து வெளியேற்றம்; குசல் மெந்திஸ் இன்று தலைவர்! Nov 16, 2025 - 12:59 PM இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. காய்ச்சல் காரணமாக அணித் தலைவர் சரித் அசலங்க இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக குசல் மெந்திஸ் இன்றைய போட்டியில் தலைவராகக் கடமையாற்றுவார். மேலும், வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இளம் வீரர் பவன் ரத்நாயக்க இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi1eajl801nlo29no5yibreb
1 month 3 weeks ago
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 1,115 பேர் கைது Nov 16, 2025 - 11:20 AM போதைப்பொருள் ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: ஹெரோயின்: 531 கிராம், ஐஸ் : 754 கிராம், கஞ்சா: 8 கிலோ 953 கிராம், போதை மாத்திரைகள்: 249 மாத்திரைகள் உட்பட பல போதைப்பொருட்கள். மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmi1argth01nio29n2zjtv146
1 month 3 weeks ago
கடும் மழை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு Nov 16, 2025 - 01:56 PM கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடும் மழை, பலத்த காற்று மற்றும் பலத்த இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmi1gbffs01nno29n8exj51qq
1 month 3 weeks ago
இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றி; இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதல் வெற்றி Published By: Digital Desk 3 16 Nov, 2025 | 04:03 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவால் முதல் இன்னிங்ஸில் பெற்ற 189 ஓட்டங்களே அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது. எவ்வாறாயினும், 124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 93 ஓட்டங்களுக்கு சுருண்டு மிக மோசமான தோல்வியைத் தழுவியது. கழுத்துப் பகுதியில் உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் இந்தப் போட்டியில் நேற்றிலிருந்து விளையாடவில்லை. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ண இருதரப்பு தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றில் தென் ஆபிரிக்கா 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு நாட்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா இருந்ததால் இந்தியா அதன் சொந்த மண்ணில் சாதித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருந்ததால் அணி வீரர்களும் இரசிகர்களும் வெற்றிபெற்று விடலாம் என எண்ணினர். ஆனால், அணித் தலைவர் டெம்பா பவுமா 3 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதமும் சுழல்பந்து வீச்சாளர் சைமன் ஹாமன் இரண்டாவது தடவையாக பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. கடைசி 3 விக்கெட்களில் தென் ஆபிரிக்கா பெற்ற 60 ஓட்டங்கள் அதன் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. 29 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த டெம்பா பவுமா மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் மொத்தமாக 183 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 136 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகளை மாத்திரம் அடித்து 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் கோபின் பொஷ்ஷுடன் 8ஆவது விக்கெட்டில் பெறமதிமிக்க 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கோபின் பொஷ் 25 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரைவிட வேறு எவரும் 15 ஓட்டங்களைத் தொடவில்லை. பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் 2 ஓவர்கள் மாத்திரம் வீசிய மொஹம்மத் சிராஜ் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 124 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இந்தியா 34.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது. இந்திய துடுப்பாட்டத்தில் வொஷிங்டன் சுந்தர் 31 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் சைமன் ஹாமர் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 14 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். மாக்கோ ஜென்சன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மஹாராஜ் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களையும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களையும் பெற்றன. இப் போட்டியில் 51 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்திய சைமன் ஹாமர் ஆட்டநாயகனாகத் தெரிவானார். https://www.virakesari.lk/article/230500 RESULT 1st Test, Eden Gardens, November 14 - 16, 2025, South Africa tour of India South Africa 159 & 153 India (T:124) 189 & 93 South Africa won by 30 runs Player Of The Match Simon Harmer, SA 4/30 & 4/21
1 month 3 weeks ago
வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் உதவி கோரல் Nov 16, 2025 - 08:07 AM வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022 பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168 https://adaderanatamil.lk/news/cmi13v8p801ndo29nh6xj9vbz
1 month 3 weeks ago
போலாந்து நாட்டில், வட்டமான மேசை ஒன்றில் சில யேர்மானியர்களை நிறுத்தி, அவர்கள் நாக்கை இழுத்து மேசையில்வைத்து ஆணியடித்து யூதர்கள் கொடுமை செய்ததை கிட்லர் கண்டாராம். தெருவைக் கடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு உதவிபுரியாமல் அங்கு காணப்படும் இளைஞர்களைக் கைதுசெய்து கிட்லர் பெரும் தண்டனை கொடுப்பாராம். மேற்கூறிவற்றை யேர்மன் முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டுள்ளேன்.🤔
1 month 3 weeks ago
1 month 3 weeks ago

காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈
வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல்
இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.
இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும்.
நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது.
Nuraichcholai boys
1 month 3 weeks ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈 வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும். நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது. Nuraichcholai boys
1 month 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44C பகுதி: 44 C / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இந்தியா இலங்கை மரபுக்களுக்கிடையில் வேறுபாடு ஏன்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] அலகாபாத் தூணில் உள்ள ராணியின் ஆணை கருவாகியின் அறச் செயல்களைக் குறிக்கிறது "கடவுளின் பிரியமானவரின் ஆணைப்படி, எல்லா இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு, இரண்டாவது ராணியின் பரிசாக இருந்தாலும், ஒரு மாமரமாக இருந்தாலும், ஒரு மடமாக இருந்தாலும், தர்மம் செய்யும் நிறுவனமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நன்கொடையாக இருந்தாலும், அது அந்த ராணியின் ... இரண்டாவது ராணி, திவலாவின் தாயாரின் பெருமைக்கு கணக்கிடப்பட வேண்டும்." என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை பாரம்பரியம் மகிந்த என்று அழைக்கப்படும் ஒரு மகனைக் குறிப்பிடுகிறது, அவர் இலங்கைக்கு ஒரு பௌத்த மதப் போதகராக அல்லது தூதராக அனுப்பப்பட்டார் என்று சொல்லுகிறது. ஆனால், இந்த மகன், அவன் தாய் தந்தை வாழ்ந்து, இறந்த வட இந்திய பாரம்பரியத்தில் எதிலும் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் சீன யாத்ரீகர் சுவான்சாங் (யுவான் சுவாங்) (ஆங்கிலம்: Xuanzang / Hsuan-tsang, sometimes transcribed Xuan Tsang) மகிந்த உண்மையில் அசோகரின் இளைய சகோதரர் (விடஷோகா அல்லது விகடஷோகா) என்றும், அவர், அசோகனின் மகனாக இருக்க முடியாது என்றும் கூறுகிறார் [The Chinese pilgrim Xuanzang states that Mahinda was Ashoka's younger brother (Vitashoka or Vigatashoka) rather than his illegitimate son. Here Vitashoka was a prince of the Maurya Empire as the only full-brother of Ashoka and the only brother left alive by Ashoka]. அவர் மேலும், பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மகிந்த தேரரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது. என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் 'மகிந்த' கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் (Romila Thapar) பின்வரும் காரணங்களின் அடிப்படையிலும் மற்றும் பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. "சங்கமித்தா" என்ற பெயர், பௌத்த ஒழுங்கின் (சங்க) தோழி என்று பொருள்படும் [The name "Sanghamitta", which literally means the friend of the Buddhist order (sangha)], இது வழக்கத்திற்கு மாறானது [Thapar, Romila (1961). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press, p. 23], ஏன் என்றால் அவள் பிறக்கும் பொழுது புத்த மதத்தில் இருக்கவில்லை. மேலும் இலங்கை ராணியை புத்த மதத்திற்கு நியமிக்க வேண்டும் என்பதற்காக அவள் இலங்கைக்குச் சென்ற கதை மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றுகிறது. அவள் அசோகரின் மருமகன் அக்னிபிரம்மாவை [Agnibrahma] மணந்தார் என்றும், தம்பதியருக்கு சுமனா [Sumana] என்ற மகன் இருந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. அன்று வழக்கத்தில் இருந்த, எக்ஸோகாமி [exogamy / ஒருவன் தனது இனத்துக்குப் புறம்பே தான் மணம் செய்து கொள்ள வேண்டு மென்று கட்டுப் படுத்தும் வழக்க மரபு] தொடர்பான சமகால சட்டங்கள் முதல் உறவினர்களுக்கு இடையே அத்தகைய திருமணத்தை தடை செய்திருக்கும் [Thapar, Romila (1961). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press. p. 24.]. மகாவம்சத்தின் படி, அவர் கன்னியாஸ்திரியாக நியமிக்கப்பட்டபோது அவளுக்கு 18 வயது. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், மேலும் அவரது கணவர் மற்றும் அவரது குழந்தை புனிதப்படுத்தப்பட்டதாக கதை கூறுகிறது. இவ்வளவு இளம் குழந்தையுடன் அவள் கன்னியாஸ்திரியாக அனுமதித்திருக்க வாய்ப்பில்லை [Thapar, Romila (1961). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press. p. 24.]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 45 A தொடரும் / Will follow துளி/DROP: 1902 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44C https://www.facebook.com/groups/978753388866632/posts/32395692390079322/?