Aggregator

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

1 month 4 weeks ago
தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு ? ஆம் ஈழத்தமிழர் நலனுக்கு - இல்லை. இந்த இடத்தில்தான் உங்கள் “நானும் தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவே எழுதுகிறேன்” வேடம் கலைந்து போகிறது 🤣. கள்ளு குடிச்சால் இன்னொரு ஈரல் முளைக்கும்?

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக தரையிறக்கம்

1 month 4 weeks ago
திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியுள்ள பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்படத் தயார் - என்ன நடந்தது? படக்குறிப்பு,அவசரநிலையைத் தொடர்ந்து F-35B விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. கட்டுரை தகவல் கீதா பாண்டே அஷ்ரஃப் படன்ன பிபிசி செய்திகள் திருவனந்தபுரம், கேரளா 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் செவ்வாய்க்கிழமையன்று புறப்பட உள்ளது. F-35பி எனும் அந்த போர் விமானம், "இன்று ஹேங்கரிலிருந்து வெளியே கொண்டு வரப்படும். பிறகு செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் தெரிவித்த விமான நிலைய செய்தித் தொடர்பாளர், அதுகுறித்து, "எங்களிடம் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இல்லை"என்று கூறினார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கித் தவிக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது. அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். திங்கட்கிழமை காலை அதனை ஹேங்கரில் இருந்து வெளியே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, அது புறப்படும் சரியான நேரம் "இன்னும் தெரிவிக்கப்படவில்லை, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும், அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உபகரணங்களை திருப்பி கொண்டு செல்லும் விமானம் எப்போது வரும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன. "கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர். மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

1 month 4 weeks ago

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

Mani Singh SPublished: Monday, July 21, 2025, 21:40 [IST]

MK Stalin Chennai Apollo Hospital

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் லேசான தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி வேறுசில பரிசோதனைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறே உத்தியோகப்பூர்வ கடமைகளை முதல்வர் நிறைவேற்றுவார்.

முன்னதாக, இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ பணிகள் இயக்குனர் அனில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மு.க. ஸ்டாலின் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிகுறிகளை மதிப்பீடு செய்வதற்காக, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டிருந்தது.

https://tamil.oneindia.com/news/chennai/doctors-advise-cm-stalin-to-rest-for-3-more-days-apollo-hospital-new-report-722259.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

விரைவில் முதலமைச்சர் இட்லி சாப்பிட்டார், நலமாக உள்ளார் ?

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் எப்போது? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்

Mani Singh SUpdated: Monday, July 21, 2025, 21:03 [IST]

Udhayanidhi Stalin MK Stalin Chennai Apollo Hospital

சென்னை: முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து இதற்கு பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 2 நாளில் வீடு திரும்புவார்" என்று கூறினார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/when-will-chief-minister-stalin-be-discharged-from-apollo-hospital-udhayanidhi-says-this-722255.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

1 month 4 weeks ago
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை Mani Singh SPublished: Monday, July 21, 2025, 21:40 [IST] சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து வந்தனர். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் லேசான தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி வேறுசில பரிசோதனைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறே உத்தியோகப்பூர்வ கடமைகளை முதல்வர் நிறைவேற்றுவார். முன்னதாக, இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ பணிகள் இயக்குனர் அனில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மு.க. ஸ்டாலின் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிகுறிகளை மதிப்பீடு செய்வதற்காக, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டிருந்தது. https://tamil.oneindia.com/news/chennai/doctors-advise-cm-stalin-to-rest-for-3-more-days-apollo-hospital-new-report-722259.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி விரைவில் முதலமைச்சர் இட்லி சாப்பிட்டார், நலமாக உள்ளார் ? முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் எப்போது? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில் Mani Singh SUpdated: Monday, July 21, 2025, 21:03 [IST] சென்னை: முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதையடுத்து இதற்கு பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 2 நாளில் வீடு திரும்புவார்" என்று கூறினார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/when-will-chief-minister-stalin-be-discharged-from-apollo-hospital-udhayanidhi-says-this-722255.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்

1 month 4 weeks ago
Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 02:26 PM இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள். பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த சிறுவர்களில் ரசானும் ஒருவர் .மூன்று மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரசானை சிஎன்என் ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தித்தது, அவ்வேளை அவள் ஏற்கனவே பட்டினியால் பலவீனமானவளாக உடல் மிகவும் மெலிந்தவளாக காணப்பட்டாள். சிறுமியின் தாயார் தஹிர் அபு டகெர் பால்மா வேண்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார். யுத்தத்திற்கு முன்னர் அவளது உடல்நிலை சிறப்பானதாக காணப்பட்டது, ஆனால் யுத்தம் ஆரம்பித்த பின்னர் மந்தபோசாக்கு காரணமாக அவளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது, அவளை வலுப்படுத்துவதற்கு எதுவுமில்லை என தாயார் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/220540

உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்

1 month 4 weeks ago

Published By: RAJEEBAN

21 JUL, 2025 | 02:26 PM

image

இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள்.

பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

gaza_child_2025_july.jpg

2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த சிறுவர்களில் ரசானும் ஒருவர் .மூன்று மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை  வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரசானை சிஎன்என் ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தித்தது, அவ்வேளை அவள் ஏற்கனவே பட்டினியால் பலவீனமானவளாக உடல் மிகவும் மெலிந்தவளாக காணப்பட்டாள்.

சிறுமியின் தாயார் தஹிர் அபு டகெர் பால்மா வேண்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார்.

யுத்தத்திற்கு முன்னர் அவளது உடல்நிலை சிறப்பானதாக காணப்பட்டது, ஆனால் யுத்தம் ஆரம்பித்த பின்னர் மந்தபோசாக்கு காரணமாக அவளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது, அவளை வலுப்படுத்துவதற்கு எதுவுமில்லை என தாயார் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/220540

அடுத்த 3 உலக டெஸ்ட் சம்பின்ஷிப் இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்தில் நடத்த ஐ.சி.சி. தீர்மானம்

1 month 4 weeks ago
21 JUL, 2025 | 03:15 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும். 2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு ஐசிசி வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது இடம்பெயர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜாவின் மேற்பார்வையில் ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஆகியன கூட்டிணைந்து இதற்கான முயற்சியைத் தொடர்கின்றன. இந்த திட்டம் உயர் செயல்திறன் கொண்ட முயற்சிகள், உள்நாட்டு விளையாட்டு வாய்ப்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆதரவு வழங்குவதையும் இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் உட்பட முக்கிய ஐசிசி உலகளாவிய நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தானை பங்குபற்றச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐசிசி கூறியுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்குள் விரிவான நிருவாக சீர்திருத்தங்களை செய்வதுடன் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமானது பொருத்தமானதாகக் கருதும் நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவன ம் கொண்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/220543

அடுத்த 3 உலக டெஸ்ட் சம்பின்ஷிப் இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்தில் நடத்த ஐ.சி.சி. தீர்மானம்

1 month 4 weeks ago

21 JUL, 2025 | 03:15 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும்.

2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு ஐசிசி வழங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது இடம்பெயர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜாவின் மேற்பார்வையில் ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஆகியன கூட்டிணைந்து இதற்கான முயற்சியைத் தொடர்கின்றன.

இந்த திட்டம் உயர் செயல்திறன் கொண்ட முயற்சிகள், உள்நாட்டு விளையாட்டு வாய்ப்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆதரவு வழங்குவதையும் இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் உட்பட முக்கிய ஐசிசி உலகளாவிய நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தானை பங்குபற்றச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐசிசி கூறியுள்ளது.

அடுத்த மூன்று மாத காலத்திற்குள் விரிவான நிருவாக சீர்திருத்தங்களை செய்வதுடன் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது. 

இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமானது பொருத்தமானதாகக் கருதும் நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை  ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவன ம் கொண்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/220543

மூளாயில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

1 month 4 weeks ago
மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! Published By: DIGITAL DESK 2 21 JUL, 2025 | 06:43 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது தீவிரமாக நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல்களின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இரண்டு தனி நபர்களுக்கிடையிலான சிக்கல், ஞாயிற்றுக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலின்போது, ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளனர். இதன்போது, பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் பொருட்டு, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்றிலிருந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அங்கு பொலிஸ் கண்காணிப்பு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220572

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

1 month 4 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் கட்டுரை தகவல் மேடலின் ஹால்பர்ட் பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார். நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அதிகாரிகளின் அனுமதியின்று இவர் ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்ததாக நசாவ் கவுன்டி போலீஸார் கூறுகின்றனர். 'எனக்கு ஸ்கேன் எடுக்கும்போது நான்தான் உதவிக்காக என் கணவரை உள்ளே அழைத்தேன்' என உயிரிழந்தவரின் மனைவி கூறுகிறார். மேலும் 'உள்ளே நுழைந்ததும் அவரை இந்தக் கருவி இழுத்துவிட்டது. சட்டென்று இயந்திரம் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றார். இயந்திரத்தை அணைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்' என மனைவி ஜோன்ஸ் தெரிவித்தார். எம்ஆர்ஐ இயந்திரம் அவரை உள்ளே இழுத்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இந்த இயந்திரம் துல்லியமாக ஸ்கேன் செய்வதற்காக சக்திவாய்ந்த காந்த ஈர்ப்புகளை கொண்டிருக்கும். அதனால்தான் இந்த அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். உயிரிழந்த நபர் உடற்பயிற்சிக்கு பயன்படும் பெரிய உலோகச் சங்கிலியை உடலுடன் இணைத்திருந்ததால் இயந்திரத்தின் உள்ளே இழுக்கப்பட்டுள்ளார் என நசாவ் கவுன்டி போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலீசார் இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பெயர் கெய்த் என மனைவி ஜோன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். "அவர் எனக்கு குட்-பை சொன்னார். பின் அப்படியே உருக்குலைந்துவிட்டார்" என மனைவி வேதனை தெரிவிக்கிறார். "முழங்காலில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக சென்றபோது, எனது கணவரை நான்தான் உதவிக்கு உள்ளே அழைத்தேன். அவர் 9 கிலோ எடையுள்ள சங்கிலியை அணிந்திருந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக்கொண்டது. அவர் சட்டென்று இயந்திரத்தின் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் அவரை மீட்க முயற்சித்தார். 'மெஷினை அணையுங்கள், 911-க்கு போன் செய்யுங்கள்' எனக் கதறினேன்" என சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் விவரிக்கிறார். இது குறித்து மேலும் அறிய, வல்லுநர்களை தொடர்புகொண்டது பிபிசி. எம்ஆர்ஐ இயந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த காந்தம் சாவி, செல்போன் என எந்த அளவில் உள்ள பொருட்களையும் எளதில் உள்ளே இழுக்கக் கூடியதாகும். இது இயந்திரத்தை பாதிக்கும் அல்லது நோயாளிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம். இதற்கு முன்பு 2001ம் ஆண்டு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது 6 வயது சிறுவன் உயிரிழந்தார். எம்ஆர்ஐ இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்த ஈர்ப்பு, ஆக்ஸிஜன் டேங்கை அறையில் அங்குமிங்கும் இழுத்தது. ஆக்ஸிஜன் டேங்க் அச்சிறுவன் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8dny42pgo

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

1 month 4 weeks ago
அண்ணை எனக்கொரு சந்தேகம், வவுனியா சென்று வந்த நம்ம ஊரவர்கள் எல்லோரும் சலக்கடுப்புக்கு ஏற்பட்டதாக கூறுவார்கள், அது ஏன்? கொதித்து ஆறிய நீரைப்பருகினால் வருவதில்லையாம். நன்றி அண்ணை. 2015 முன்பே மக்கள் குடிநீர் அள்ளும் கிணறுகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஈகோலி அளவு கூடுதலாக இருப்பதால் அடிக்கடி குளோரின் கலப்பார்கள். எதனால் ஈகோலி அளவு கூடுதலாக இருக்கிறது என வினவியபோது சுண்ணக்கற்பாறைகளூடாக கசிந்து கிணற்று நீரை அடைவதாகவும் யாழில் உள்ள எந்த கிணறும் தப்பவில்லை என்றும் கூறினார்கள். முதல் இரண்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, கல்சியச் செறிவு யாழ்ப்பாணத்தவர்களுக்கு பழகிய ஒன்றே. மலசலக்கூட குழிகள் மண்ணுக்குள் கலக்கும் வகையிலேயே உள்ளன. இப்போது இறுக்கமான சட்டம் இருந்தாலும் பொதுச்சுகாதார பரிசோதகர் பரிசோதித்து சென்றபின் கிடங்கின் உள்ளே உடைக்கிறார்கள்.

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

1 month 4 weeks ago
மிகவும் பிற்போக்குத் தனமான, முன் யோசனையற்ற ஒரு கருத்து இது. தந்தையின் பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலைமைகள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன. இதில் பிறக்கும் பிள்ளைக்கு பல சமூக, வேலை வாய்ப்பு நிலை, சில சமயம் குடிவரவு நிலைகளில் கூட சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்காகத் தான் தந்தை பெயரை optional ஆக மாற்றும் தீர்வு. தாயகத்திலும், புலத்திலும் தனியே தாயினால் வளர்க்கப் பட்டு சிறப்பாக வாழும் பிள்ளைகளை நீங்கள் இது வரை கண்டதேயில்லைப் போல!

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்

1 month 4 weeks ago
பதவிக்கு வந்ததிற்கு ..பிள்ளையானை வைத்தே தாயம் உருட்டிகினாம் ..மற்றவை எல்லோரும் மட்டன்பிரியாணி சாப்பிட்டு சந்தோசமா இருக்கினம் ..கிட்டத்தட்ட 9 மாதம் கடந்திட்டுது..

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

1 month 4 weeks ago
நான் எங்கே ஒழுக்க சீலர்கள் என்பதால் ஏனையோரை ஆதரிக்கிறேன் என எழுதியுள்ளேன்🤣. அவர்களை போலவே இவரும் என்றல்லவா எழுதியுள்ளேன். திமுக மட்டும் அல்ல, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தவிர மிகுதி அனைவரும் தமிழ்நாட்டில் பாஜகவோடு என்றோ கூட்டணி வைத்தோர்தான். ஆனால், கூட்டணி வைத்தாலும் - கருணாநிதி, ஜெ, இராமதாஸ், வைகோ, ஆர் எஸ் எஸ் கொள்கைகளை காவவில்லை. சீமான் அப்படி அல்ல. அவர் ஒரு கடைந்தெடுத்த சங்கி. பெரியாரிய கொள்கைகளை எதிர்ப்பதன் மூலம், தமிழ் நாட்டில், பிஜேபி எனும் நச்சு விதை வளர இடைவெளி ஏற்படுத்தி கொடுக்க முயலும் ஐந்தாம்படை சீமான். பயிரிடும் அனைவரும் விவசாயி அல்ல. சிலர் கஞ்சாவும் பயிரிடுவார்கள். சீமான் ஒரு கஞ்சா-விவசாயி. நாட்டுக்கு கேடு. அதே போல் அன்புமணி மீதும் இந்த விடயத்தில் தகப்பன் மீது இருந்த நம்பிக்கை இல்லை.

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

1 month 4 weeks ago
போல்ராசு புதுமையாகத்தான் யோசிக்கிறா...பிறப்புச் சான்றிதழில் அப்பன் பெயர் இல்லையென்றால்...போன் வைத்திருக்கிறபிள்ளையை யார் கண்டிக்கிறதாம்...🤣

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

1 month 4 weeks ago
இனி பொலிசு பொறுப்பில்லையாம்...சி.ஐ.டிதான் பொறுப்பாம்..இனி சுடலையிலும் தகிடுதத்தம் ..தொடரும்..

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

1 month 4 weeks ago
நீர் உவராதல், சலக்கடுப்பு/சிறு நீர் கடுப்பு, கிணற்று நீரின் குடிக்கும் தகுதி, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். நீர் உவராதல் என்பது கடல் நீரின்/பாறைகளின் உவர்த்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக நன்னீர் நிலைகள், கிணறுகளுக்குள் பரவுதல். இது இலங்கை போன்ற சிறிய தீவுகளில், கடலுக்கு அண்மையில் இருக்கும் நீர் நிலைகளில் நிகழக் கூடியது. இது நிகழும் வேகம் மட்டுமே வேறுபடும். உதாரணமாக, உள்நாட்டு யுத்த காலத்தில் எரிபொருள் தட்டுப் பாட்டினால் வடக்கில் கிணறுகளை இறைக்கும் செயல்பாடுகள் குறைவாக இருந்தமையால், அந்தக் காலப்பகுதியில் ஒரு அவகாசம் ஏற்பட்டு நீர் உவராதல் தாமதமாகி இருக்கலாம். இப்போது அந்த வேகம் அதிகரித்திருக்கலாம். இதை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தள்ளிப் போடலாம், முற்றாக இல்லாமலாக்க இயலாது. சலக்கடுப்பு என்பது எங்கள் உடல் நீரைச் சேமித்து முக்கிய தேவைகளுக்காக பத்திரப் படுத்தும் போது, சிறு நீர் வெளியேறும் அளவு குறைவதால் சிறு நீர் வெளியேற்றும் பாதைகளில் ஏற்படும் வலி. இது நீரிழப்பின் (dehydration) ஒரு தற்காலிக அறிகுறி. இதற்கும் நீரில் இருக்கும் கல்சியத்திற்கும் தொடர்பில்லை. இலகுவான தீர்வு, ஒரு தேக்கரண்டி சீனியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இந்த சீனி கலந்த தண்ணீர், குடல் நீரை உறிஞ்சிக் கொள்ள உதவுவதால் உடல் சாதாரண நிலையை உணர்ந்து சிறு நீரை வெளியேற அனுமதிக்கும். சலக்கடுப்பும் நீங்கும். சலக்கடுப்போடு நீரில் இருக்கும் கல்சியத்திற்குத் தொடர்பில்லா விட்டாலும், குடி நீரில் கல்சியம் இருந்தால் சிறு நீரகக் கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கல்சியம் அதிகரித்த குடிநீர் தீங்கற்றது என்று சொல்ல முடியாது. ஒரு கிணற்று நீரின் குடிதண்ணீர் தராதரம் அப்படியானால் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? மேற்கத்தைய நாடுகளில் கிணற்று நீர் சில பகுதிகளில் குடிநீராக இருக்கிறது. அங்கே, குடி நீரில் இருக்கும் வயிற்றோட்டம் தரக் கூடிய பற்றீரியாக்களின் அளவு (Coliform count), கல்சியம், புளோரைட் போன்ற கனியுப்புக்களின் அளவு, என்பவற்றுடன் தீங்கு தரும் இரசாயனங்களின் அளவுகளும் பரிசோதிக்கப் படும். இவற்றை எப்படி நாம் சிறி லங்காவில் பயன்படுத்தலாம்? நகரப் பகுதிகளில் கிணற்றிற்கும், septic tank (?) எனப்படும் மலசலக் குழிக்குமிடையிலான இடைவெளி குறைந்து வருகிறது என்கிறார்கள். இதனால், நகரக் கிணறுகளின் தண்ணீரை நிச்சயம் Coliform count செய்து தரத்தை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். எங்கள் நாட்டில் பாரிய தொழிற்சாலைகள் இல்லாமல், விவசாய நிலங்கள் இருக்கின்றன. இதனால், விவசாய உரங்களில் இருந்து வரும் கழிவுகள், நைற்ரேட் போன்றவை, பரிசோதிக்கப் பட வேண்டும். நகரங்களுக்கு வெளியே இருக்கும் கிணறுகளுக்கு இந்த உரக்கழிவுப் பரிசோதனைகள் முக்கியமாக இருக்கும். எனவே, கிணற்று நீரைக் குடிக்கலாமா என்ற கேள்விக்குப் பதில், வடக்கைப் பொறுத்த வரை 1. பற்றீரியாக்களின் செறிவு. 2. உரக்கழிவின் செறிவு 3. கல்சியத்தின் செறிவு ஆகிய 3 காரணிகளில் தங்கியிருக்கும் ஒரு பதில்.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

1 month 4 weeks ago
இது என்ன தரவுகள் எல்லாம் தாறீங்க… செல்லாது…செல்லாது…. கருணாநிதிக்கு நாக்கு பச்சை கலர் அவர் ஒரு ஏலியன் எண்டு சொன்னாலும் ஏத்துகொள்ள வேண்டும். அதுதான் தன்மானமுள்ள புலம்பெயர் ஈழதமிழனுக்கு அழகு 🤣. மக்ரோனின் அம்மா பிறந்தது 1950. அவரின் மனைவி பிறந்தது 1953. இது என்ன மாடல்? அல்லது நாம் பஞ்சம் பொழைக்கும் நாடு ஒன்றின் தலைவர் என்பதால் கள்ள மெளனமா🤣.

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

1 month 4 weeks ago
நம்ம தல மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்… மோடி ஜிப்பாவ சந்தில வச்சி உருவ நம்ம தல போல யாரும் இல்லை🤣 தல போல வருமா🤣 மல்லாவி எண்டா கிளிநொச்சி பக்கம்தானே🤣