Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 430 online users.
» 0 Member(s) | 427 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,009
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,034
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,502
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,253
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,532
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,746
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,262
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,887
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,935
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,204

 
  பலாலி
Posted by: sethu - 07-20-2003, 08:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (49)

பலாலி விமானநிலைய ஓடுபாதையை மீள்திருத்தம் செய்யும் ஓப்பந்தமொன்றை இந்திய நிறுவனமொன்றுடன் அரசு செய்துள்ளது.

Print this item

  தொலைநோக்குத் துரோகம்
Posted by: கபிலன் - 07-20-2003, 05:31 PM - Forum: புலம் - Replies (107)

தொலைநோக்குத் துரோகம்
புகலிடத் தமிழர்களின் சிந்தனைளைக் குழப்பிஇ காலப்போக்கில் அவர்களை ஈழத்தமிழர் என்ற மனவுணர்விலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியொன்று தொலைநோக்காக திட்டமிடப்பட்டு மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகிறது..
அருகில் உற்றார் உறவுகளின்றி கூடிப்பழகவும் கொண்டாடவும் மனம்விட்டுப் பேசவும் சிலரையே நண்பர்களாகக் கொண்ட புகலிட வாழ்வில்இ பொழுதுபோக்காக எமக்குக் கிடைப்பது பெரும்பாலும் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழகத்திரைப்படங்களும் தொடர்களுமே....இந்த எமது நிலையை பயன்படுத்தி இதையே அடிப்படையாக வைத்து எம்மிடம் வருகின்றன தமிழகத்து தொலைக்காட்சி நிறுவனங்கள். திரைப்பட மோகத்துள் மூழ்கியிருக்கும் எம்மை இவை வெகு இலகுவாகவே ஆட்கொள்ளும் வன்மை படைத்தவையென்பதை யாரும் மறுத்துவிடமுடியாது.
வானொலி நடாத்தப் பணமில்லையென்று பொது மக்களிடம் கையேந்தியோர் இலவசமாக தொலைக்காட்சி தருகிறார்களென்றால் இதன் மூலவேர் என்ன? யாரிட்ட திட்டத்திற்கு இவர்கள் புலத்தில் நிலபாவாடை விரிக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போமா.? தமிழகத்திலிருந்து ஜெயா ரி.வி. புகலிடத்தில் இலவசமாக ஒளிபரப்பப் படுகிறது. ஏன்? எப்படி? இது சாத்தியமாகிறது. இதன் பின்னணியென்ன? இந்தத் தொலைக்காட்சியால் நாமடையும் பெறுபேறுகளென்ன? இலவசமாகக் கிடைக்கிறது என விஷம் அருந்த நாம்தயாரா? ஈழவிடுதலையை முற்றாக மறுதலிக்குமொருவர்இ எமது பொது எதிரிகளின் நெருங்கிய நண்பிஇ தேசியத்தலைவரை கைது செய்து இந்தியாவுக்குக் கொணடுவர வேண்டுமென கூசாமல் சொன்ன நான்காம்தர ஐந்தாம் தர அரசியல் நடாத்துமொருவரின் தொலைக்காட்சிக்கு நாம் ஆதரவு கொடுக்கலாமா? . தன்னைத்தமிழகத் தலைவியாக அவர் பிரசாரம் செய்வதற்காக உருவாக்கிக்கொண்ட தெhலைக்காட்சிக்கு நாம்: ஏன் ஆதரவளிக்க வேண்டும்? ஒருபக்கம் இந்துத்தலைவியாக பாரதீய ஜனதாவுக்கும்இ மறுபக்கம் மதம் மாற்றும் சபைகளின் நிகழ்ச்சிகளை யும்ஒளிபரப்பிக் கொண்டுஇ தமிங்கிலம் பேசும் இந்தத்தொலைக்காட்சிகளை நாம் ஏன் புறக்கணிக்கக் கூடாது? உங்கள் உள்ளக் கருத்துககை பகிர்ந்து கொள்ளுங்களேன். நாம் தமிழகக் தமிழக மக்களுக்கோ கலைஞர்களுக்கோஇ எதிரானவர்களல்ல.அவர்களை எமது உறவுகளாகவே பேணிக்கொள்வோம்.ஆனால் எம்மையறியாமல;எம்மை விழுங்க வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஏன் விழிப்பாயிருக்கக் கூடாது?

Print this item

  இப்படியும் நடக்கிறது....
Posted by: kuruvikal - 07-20-2003, 10:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (93)

16 வயதில் சட்ட பூர்வக் காதல் வெற்றி....பிந்நாளில் என்னவாகுமோ.....சுபமே ஆக வாழ்த்துக்கள்... வேற என்னத்த எழுத முடியும்....காலம் போற போக்கப்பாரு... :roll:

http://thatstamil.com/news/2003/07/20/marriage.html

தந்தையின் இனிசியலை தூக்கி எறிந்து தாயின் இனிசியல் போட்டான் மகன்....ஆண்கள் எங்கும் புரட்சியாளர்கள் தான் போங்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

http://thatstamil.com/news/2003/07/20/tamarai.html

Print this item

  உயிர்காக்க உதவும் Tshirt
Posted by: Alai - 07-20-2003, 08:12 AM - Forum: மருத்துவம் - Replies (1)

<img src='http://www.kumudam.com/tamilulagam/19-07shirt.jpg' border='0' alt='user posted image'>

ரத்தஅழுத்தம், இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன், வெப்ப அளவு உள்ளிட்ட உடல் இயக்கங்களை அளவிட்டு தெரிவித்து உயிர்காக்க உதவும் டி ஷர்ட்டை கண்டுபிடித்து அமெரிக்காவில் வாழும் தமிழர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

இந்த உடல் இயக்கங்களில் ஏதாவது ஒன்று வழக்கத்திற்கு மாறாக கூடியோ குறைவாகவோ இருந்தால் உடனே அந்த ஷர்ட்டில் பொருத்தப்பட்டுள்ள மானிட்டர் எச்சரிக்கை செய்து பாதிக்கப்பட்டவரின் உயிரை காக்க உதவுகிறது. இந்த டி ஷர்ட் இதயச் செயல்பாட்டில் மாறுதல் இருந்தாலும் தெரிவித்துவிடும்.

இந்த அற்புதமான டி ஷர்ட்டைக் கண்டுபிடித்தவர் சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரைச் சேர்ந்த ஜெயராமன் ஆவார். அவரது தந்தை அக்கவுண்டன்ட் ஜெனரலாக பணியாற்றிய ஹைதராபாத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஜெயராமன் சென்னையில் பிடெக், எம்.டெக் முடித்து அமெரிக்காவில் பிஎச்டி படித்து அங்கேயே தற்போது அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

தற்போது விடுமுறையில் சென்னை வந்துள்ள ஜெயராமனின் அற்புதக் கண்டுபிடிப்பான டிஷர்ட்டை டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

இந்த டி ஷர்ட், சாதாரண பருத்தி அல்லது செயற்கை இழைத்துணியில் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட எளிமையான ஆடையாகத்தான் ஆடையாகத்தான் இருக்கும். ஆனால் நூல்களுக்கிடையே முளையில் சென்சார்புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ள ஆப்டிக் பைபர் வயர் இணைத்து நெய்யப்படும். இந்த சென்சார் புள்ளிகள், பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அளவில் சிறியதாக உள்ள கன்ட்ரோல் பாக்ஸ§டன் இணைக்கப்-பட்டிருக்கும். உடலின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், சென்சார் புள்ளிகள் வழியாக கன்ட்ரோல்சிற்கு சென்றுவிடும். அதனை கன்ட்ரோல் பாக்ஸில் உள்ள மானிட்டரில் பார்க்க முடியும்.

நன்றி - குமுதம்

Print this item

  வெங்காயம் - மருத்துவ குணங்கள்
Posted by: Alai - 07-20-2003, 08:04 AM - Forum: மருத்துவம் - Replies (4)

சந்திரா எதாவது முக்கியமான வேலையாக இருக்கும்போதுதான் தலையை வலித்துக்கொண்டு வரும். டாக்டரிடம் போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வேலை காரணமாக தள்ளிப் போட்டுவிடுவாள். சந்திரா படும் அவஸ்தையைக் கண்டு அவளது தாய் வெங்காயத்தை கல்லில் நசுக்கி மைபோல் அரைத்து நெற்றிப்பொட்டில் பத்தாகப் போட்டுவிட்டாள். வெங்காயப் பத்துக் காயக்காய தலைவலி பறந்துவிட்டது. வெங்காயத்திற்கு அப்படியரு அபார சக்தி உண்டா என்று சந்திரா ஆச்சரியப்பட்டுவிட்டாள். வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் கேட்கக் கேட்க ஆச்சரியம் தரும். அதைப் பற்றி டாக்டர் சி.கே. மாணிக்கவாசகம் இங்கே விளக்குகிறார்:

‘‘வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். நேபாளத்தில் வெங்காயம் இறைவனுக்கு நிவேதனம் செய்யப் பயன்படுகிறது. யூதர்களும் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின் பயனைப் பற்றிக் கூறியுள்ளார். அமெரிக்கரும் இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் ‘அலைல் புரோப்பைல் டைசல்பைடு’ (Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம் பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத் தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள் தாது உப்புக்கள் வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும் வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது. நரை தலை வழுக்கையைத் தடுக்கும். உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்திஇ எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள்இ கண் நோய்கள்இ வாத நோய்களை குணமாக்குகிறது.

இனி... வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

2) சம அளவு வெங்காயச் சாறையும் வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விடஇ காது வலி குறையும்.
3) வெங்காயச் சாறு கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கிஇ இளம் சூட்டில் காதில் விடஇ காது இரைச்சல் மறையும்.

4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6) வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள் சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்டஇ கட்டி உடனே பழுத்து உடையும்.

7) வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8) வெங்காயச் சாற்றையும் வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்துஇ வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல்வலி ஈறுவலி குறையும்.

9) வெங்காயப்பூ வெங்காயத்தைச் சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.

10) வெங்காயத்தை அவித்துஇ அதோடு தேன் கற்கண்டை சேர்த்துச் சாப்பிட உடல் பலம் ஏறும்.

11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12) வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13) படை தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

14) திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15) வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.


16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்துவர மேக நோய் நீங்கும்.

18 வெங்காயம் அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட மேகநோய் குறையும்.

19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.’’

நன்றி - குமுதம்

Print this item

  ஐ.நா காலடியில் சரணடையும் புஷ்....
Posted by: kuruvikal - 07-19-2003, 06:10 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

தான்றோன்றித்தனமாக ஐ நா வையும் உலகையும் பகைத்து ஈராக் பிடிக்கப் போன புஷ் இன்று, அங்கு திட்டமிட்டு ஒருங்கமைக்கப்பட்ட சதாமின் கொரில்லாச் சண்டைக்கு முகம் கொடுக்க முடியாமல் 149 படை வீரர்களை (அமெரிக்க கணக்குப் படியே) இழந்து இன்னும் இழக்க இருக்கும் நிலையில் ஐ.நாவின் உதவிக்காக அதன் காலடியில் சரணடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்படுவது ஈராக்கில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் மத்தியில் பெரும் மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருப்பதும், அமெரிக்கப்படை வீரர்களின் தற்போதைய உயிரிழப்பு எண்ணிக்கை 1991 ஈராக் யுத்தத்தில் இழக்கப்பட்ட 147 அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை கடந்திருப்பதும் ஈராக் மக்கள் அமெரிக்க படையினருக்கு எதிராகக் காட்டும் கடும் எதிர்ப்புமே புஷ் தானே ஒதுக்கி வைத்த ஐ .நாவின் உதவி நாடி ஓட வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஐ.நாவும் அதன் ஏனைய அங்கத்துவ நாடுகளும் புஷ்ஷிற்கு உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...இது தான் புஷ்ஷின் இன்றை ஆப்பிழுத்த குரங்கின் நிலை....இது யுத்தத்தை விரும்பும் சில சிங்கள அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடமாக இருக்கும் என்பது வெள்ளிடை மலையாகும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

Print this item

  நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார்
Posted by: Manithaasan - 07-17-2003, 06:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<span style='font-size:25pt;line-height:100%'>நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார். </span>ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தமிழீழத்தின் நாதஇசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர் அமரர் பத்மநாதன் அவர்கள். அவரது இழப்பு தமிழீழ இசையுலகிற்கு பேரிழப்பு. கொழும்பில் காலமாகிய அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று யாழ் கோம்பயன்மணல் மயானத்தில் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தின் முக்கிய அரசியற் பிரமுகர்களும்..பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இறுதியஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.நாதஇசைச்சக்கரவர்த்தியாருக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.

Print this item

  video / voice live
Posted by: Guest - 07-17-2003, 02:04 PM - Forum: இணையம் - Replies (2)

hi friends
please dont ignore this message try this stuff.
everythings r made in flash realy very nice

Voice Board / Video Board / Voice Chat / Video Chat / Private Chat / Text Chat ,,,, Please Visit http://chat.loltamil.com/ enjoy our new services.

thanks
ramesh

Print this item

  ஈ என் டி எல் எப்f
Posted by: sethu - 07-16-2003, 06:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (64)

இற்த தொடுப்பின் 6 வது செய்தியை வாசிக்கவும்.

http://www.virakesari.lk/20030717/politics...s%7Enews.htm#P6

Print this item

  குடியுரிமை
Posted by: Mullai - 07-11-2003, 04:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (11)

சுமார் 1,70,000 மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது

ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட இவர்களுக்குத்தான் எத்தனை பொறுமை.

புலம்பெயர்நது வாழும் நாட்டில் குடியுரிமைக்காக அலையும் நாங்கள் எங்கே. இவர்கள் எங்கே.

Print this item