![]() |
|
தொலைநோக்குத் துரோகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தொலைநோக்குத் துரோகம் (/showthread.php?tid=8281) |
தொலைநோக்குத் துரோகம் - கபிலன் - 07-20-2003 தொலைநோக்குத் துரோகம் புகலிடத் தமிழர்களின் சிந்தனைளைக் குழப்பிஇ காலப்போக்கில் அவர்களை ஈழத்தமிழர் என்ற மனவுணர்விலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியொன்று தொலைநோக்காக திட்டமிடப்பட்டு மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகிறது.. அருகில் உற்றார் உறவுகளின்றி கூடிப்பழகவும் கொண்டாடவும் மனம்விட்டுப் பேசவும் சிலரையே நண்பர்களாகக் கொண்ட புகலிட வாழ்வில்இ பொழுதுபோக்காக எமக்குக் கிடைப்பது பெரும்பாலும் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழகத்திரைப்படங்களும் தொடர்களுமே....இந்த எமது நிலையை பயன்படுத்தி இதையே அடிப்படையாக வைத்து எம்மிடம் வருகின்றன தமிழகத்து தொலைக்காட்சி நிறுவனங்கள். திரைப்பட மோகத்துள் மூழ்கியிருக்கும் எம்மை இவை வெகு இலகுவாகவே ஆட்கொள்ளும் வன்மை படைத்தவையென்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. வானொலி நடாத்தப் பணமில்லையென்று பொது மக்களிடம் கையேந்தியோர் இலவசமாக தொலைக்காட்சி தருகிறார்களென்றால் இதன் மூலவேர் என்ன? யாரிட்ட திட்டத்திற்கு இவர்கள் புலத்தில் நிலபாவாடை விரிக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போமா.? தமிழகத்திலிருந்து ஜெயா ரி.வி. புகலிடத்தில் இலவசமாக ஒளிபரப்பப் படுகிறது. ஏன்? எப்படி? இது சாத்தியமாகிறது. இதன் பின்னணியென்ன? இந்தத் தொலைக்காட்சியால் நாமடையும் பெறுபேறுகளென்ன? இலவசமாகக் கிடைக்கிறது என விஷம் அருந்த நாம்தயாரா? ஈழவிடுதலையை முற்றாக மறுதலிக்குமொருவர்இ எமது பொது எதிரிகளின் நெருங்கிய நண்பிஇ தேசியத்தலைவரை கைது செய்து இந்தியாவுக்குக் கொணடுவர வேண்டுமென கூசாமல் சொன்ன நான்காம்தர ஐந்தாம் தர அரசியல் நடாத்துமொருவரின் தொலைக்காட்சிக்கு நாம் ஆதரவு கொடுக்கலாமா? . தன்னைத்தமிழகத் தலைவியாக அவர் பிரசாரம் செய்வதற்காக உருவாக்கிக்கொண்ட தெhலைக்காட்சிக்கு நாம்: ஏன் ஆதரவளிக்க வேண்டும்? ஒருபக்கம் இந்துத்தலைவியாக பாரதீய ஜனதாவுக்கும்இ மறுபக்கம் மதம் மாற்றும் சபைகளின் நிகழ்ச்சிகளை யும்ஒளிபரப்பிக் கொண்டுஇ தமிங்கிலம் பேசும் இந்தத்தொலைக்காட்சிகளை நாம் ஏன் புறக்கணிக்கக் கூடாது? உங்கள் உள்ளக் கருத்துககை பகிர்ந்து கொள்ளுங்களேன். நாம் தமிழகக் தமிழக மக்களுக்கோ கலைஞர்களுக்கோஇ எதிரானவர்களல்ல.அவர்களை எமது உறவுகளாகவே பேணிக்கொள்வோம்.ஆனால் எம்மையறியாமல;எம்மை விழுங்க வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஏன் விழிப்பாயிருக்கக் கூடாது? - Guest - 07-20-2003 இன்று ஐரோப்பிய நேரத்தில் திரு வண்ணைதெய்வம் அவர்கள் சொன்ன ஒரு கருதது சற்று கனத்தில் எடுக்கப்படவேண்டியது.. எமக்கெல்லாம் ஒரு கவர்ச்சி முகம் தேவைப்படுகிறது.இலவசமாக நஞ்சைத்தந்தாலும் ஏற்றுக்காளளும் வண்ணம்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம் அமெரிக்கன் காட்டிய கோதுமையைகண்டு எமது சத்துமிகு உணவுகளை மறந்தவர்கள் நாம் சீனாக்காரன் காட்டிய இடியப்பம்தான் இப்போது நமது உணவாகியுள்ளது.அதற்குமுதல என்ன இருந்தது...தெரியாது நமக்கு.. இதுதான யதார்த்தம்... யாழ்ப்பாணத்தில் இப்போது பிற்சா ஓடர் பண்ணி சாப்பிடலாம் என நண்பர் ஒருவர் சொன்னார்? எங்கே போகிறோம்??? எதற்காக போராட்டம்?? போராட்ட யுக்தி காலத்திற்கேற்றவாறு தலைமை மாற்றி செல்வதுபோல ஊடக யுக்திகளும் மாற்றப்படவேண்டும் எமது அகல முகத்தை காட்டியாகவேண்டும் இல்லாவிட்டால் வர்த்தக ஊடகங்களால் விளுங்கப்படுவோம். புறக்கணிப்போம் என்பது புறக்கணி என்பதை விட எம் ஊடகங்களை பார்;க்க செய்ய புதுபுது யுக்திகளை கையாள்வோம் என்று சொல்வதே சாலச்சிறந்தது அதற்காக புதிய படம் போடவேண்டும் என்று அவசியமில்லை - இளைஞன் - 07-20-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வணக்கம் கபிலன் அவர்களே...உங்கள் பார்வை சரியென்றாலும், இங்கே வேறு விதமாயும் இந்த விடயத்தை நாம் நோக்கலாம். நீங்கள் கருதுவது போன்று அவர்குளுக்குத் தொலைநுாக்குப் பார்வை இருக்குலாம். ஆனால் அது எந்தளவு வெற்றி அளிக்கும் என்பது சந்தேகமே. என்னால் இந்த விடயத்தை வேறு கோணத்தில் பார்க்க முடிகிறது: 1. தமிழ் மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களில் மெல்ல அடி எடுத்து வைத்து, உலகெலாம் வலம் வருகிறது. இந்த இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளின் வருகை "உலகமெலாம் தமிழ் முழக்கம்" என்பதாய் அமையும். 2. ஈழத்தமிழரின் தொலைக்காட்சி நிறுவனங்களாக இருந்துவரும் தமிழ்த் தொலைக்காட்சி இணையமும் (ttn), தீபம் தொலைக்காட்சியும் ஒற்றுமையான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலைக்குள் தள்ளப்படுவார்கள். 3. ஏற்கனவே இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகள் தமிழ் திரையுலகையும், சின்னத்திரை நாடகங்களையும் முழுமையாக (?) நம்பியிருக்கும் நிலையில், இதுவரை அவற்றை வெறும் இனிப்பாக மட்டுமே பயன்படுத்திய ஈழத் தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களும் முழுமையாக நாடமுடியாது. காரணம் அது தன்மான இழப்பாகவும், எதற்காக இவை தொடங்கப்பட்டனவோ அந்தக் குறிக்கோளை அடையமுடியாது போய்விடும் என்பதாலும் அவற்றைப் புறக்கணித்து, ஈழத்துக் கலைஞர்களையும், இளைஞர்களையும் அரவணைக்கவேண்டிய கட்டாயம் உருவாகும். 4. போட்டிபோடும் வேகமும், வித்தியாசம், புதியன ஆக்கவேண்டும் என்னும் தேவையும், அதன் அடிப்படையிலான தேடலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிகழும். அதேநேரத்தில், திரைப்படங்களிற்கும் சின்னத்திரை நாடகங்களிற்கும் ஈடான, அல்லது அதற்கும் மேலாக மக்களைக் கவரும் புதுயுக்திகளைக் கையாள வேண்டிய கட்டாயம் உருவாகும். அதனால் புலம்பெயர்ந்துவாழும் சூழலையும், புதிய தொழில்நுட்பங்களையும் சரிவரப் பயன்படுத்தவேண்டிய நிலை வரும். 5. பொருளாதார அடிப்படையில் வீழ்ந்தாலும் பரவாயில்லை, இலவசமாகவே வழங்கவேண்டும் என்னும் நிலை ஈழத்தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களிற்கு ஏற்படும். இவை பாதிப்புகள் அல்ல, பயன்பாடுகளே. எது எது வீழ்ந்தாலும், ஒருபோதும் "தமிழ்த் தொலைக்காட்சி இணையம்" வீழாது. இது எனது நம்பிக்கை. இதுதான் நிசம். நிகழ்காலமும் இதுதான், எதிர்காலமும் இதுதான். - GMathivathanan - 07-20-2003 யாரோ..இலவசமா.. தொலைக்காட்சி.. ஆரம்பித்திருக்கிறார்களென்று.. தெரிகின்றது.. ஏதோ..ஒரு.. வனொலி.. நடாத்துபவர்கள்.. ஆரம்பித்த.. தொலைக்காட்சியென்றும்.. தெரிகின்றது.. ஜெயா..வுடன்..இணைந்து.. நடாத்துவதென்றும்.. தெரிகின்றது.. யார்.. என்பதுதாக்.. புரியவில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Guest - 07-20-2003 4. போட்டிபோடும் வேகமும்இ வித்தியாசம்இ புதியன ஆக்கவேண்டும் என்னும் தேவையும்இ அதன் அடிப்படையிலான தேடலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிகழும். அதேநேரத்தில்இ திரைப்படங்களிற்கும் சின்னத்திரை நாடகங்களிற்கும் ஈடானஇ அல்லது அதற்கும் மேலாக மக்களைக் கவரும் புதுயுக்திகளைக் கையாள வேண்டிய கட்டாயம் உருவாகும். அதனால் புலம்பெயர்ந்துவாழும் சூழலையும்இ புதிய தொழில்நுட்பங்களையும் சரிவரப் பயன்படுத்தவேண்டிய நிலை வரும். இதைத்தான் இளைஞன் நானும் குறிப்பிட்டேன்.எதிரியை சாதாரணமாக எடைபோடுவது பல தாற்பரிய விளைவுகளை உண்டுபண்ணும். அடுத்து சண hPவி எனும் பலவான் நுழைய இருக்கிறான் .நாம் கோலியத்தாக இல்லாவிட்டால் காலிதான்! - Kanani - 07-20-2003 நீங்கள் கோலியாத்தாக இருந்தாலும் மக்கள் தாவீதின் ஆட்டம்தான் பிடிக்கும் என்றால்....இன்றைய இளசுகளினது போக்கைச் சொல்லுறன் - TMR - 07-20-2003 GMathivathanan Wrote:யாரோ..இலவசமா.. தொலைக்காட்சி.. ஆரம்பித்திருக்கிறார்களென்று.. தெரிகின்றது.. ஏதோ..ஒரு.. வனொலி.. நடாத்துபவர்கள்.. ஆரம்பித்த.. தொலைக்காட்சியென்றும்.. தெரிகின்றது.. ஜெயா..வுடன்..இணைந்து.. நடாத்துவதென்றும்.. தெரிகின்றது.. யார்.. என்பதுதாக்.. புரியவில்லை..[scroll:19c95fe295]தாத்தாக்கு தெரியாமலா?????????????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உலக அதிசயத்தில ஒண்டு :? :? :? :? [/scroll:19c95fe295] - sethu - 07-20-2003 கபிலன் தரமான கருத்து - இளைஞன் - 07-20-2003 Quote:இதைத்தான் இளைஞன் நானும் குறிப்பிட்டேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் முந்தினத நான் கவனிக்கவில்லை.தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேண்டுமென்றால் சன் தொலைக்காட்சி பலவானாக இருக்கலாம். ஆனால் அது நிலையான, புலம்பெயர் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்ற பலமல்ல. சன் தொலைக் காட்சியின் பலவீனமே திரைப்படத்தையும், சின்னத்திரை நாடகங்களையும் முழுமையாக நம்பியிருப்பது. ஐந்து இந்தியத் தொலைக்காட்சிகள் ஒரே அட்டையோடு(card) பார்க்கக் கூடிய வசதியோடு வருவதால் கட்டாயமாக நம்மவர் தொலைக்காட்சி இலவசமாக ஒளிபரப்பவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப் படுவது நிச்சயம். இந்தியத் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை தனித்தனியே இலவசமாகத் தொடர்ந்து இயங்கக் கூடிய பொருளாதார வசதியில்லை. அடுத்து அவர்கள் கட்டாயமாக ஈழத் தமிழர்களைக் கவர்வதற்கு புதிய நிகழ்ச்சிகளை இணைத்தாக வேண்டும். தனியே திரைப் படங்களாலும், சின்னத்திரை நாடகங்களாலும் கவரமுடியுமா என்பது சந்தேகம். ஈழத்தமிழர் தொலைக்காட்சிகள் கவரவேண்டியவர்கள் யாவர்? அவர்களைக் கவர்வதற்கு என்ன செய்யவேண்டும்? செய்ய முடியுமா? என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பவை எல்லாம் மூன்றாம் இடத்தில். முதலில் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - திறமையாளகளை அரவணைத்தல். உள்ளுக்குள்ளே போட்டியும், தான்தான் பெரியவன், தான் சொல்வதை (சரியோ, பிழையோ) மற்றவர் செய்யோணும் என்னும் எண்ணங்கள் மாறவேண்டும். பயனுள்ளதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கூட்டுமுயற்சி அவசியம். ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்பும் வேண்டும். பார்வையாளர்களில்தான் முதல் பார்வை விழ வேண்டும். அதற்கடுத்தே திட்டமிடல். நடைமுறைப்படுத்துவார்களா நம் ஈழத்தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தார்? சரி...இவற்றைவிடுவோம். புதிய தொழில்நுட்பங்கள் வேண்டும். இவற்றைக் கையாள இளைய சந்ததி கட்டாயம் வேண்டும். இவர்கள் தமது அதிக அளவு நேரத்தைக் குறைந்த சம்பளத்தோடு நிறைவேற்ற தயாரா? ஒரு சிலரைத் தவிர? பணம் செலவளிக்காமல் ஒரு தரமான நிகழ்ச்சியை உருவாக்க முடியுமா? அப்படி உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி மக்களைக் கவருமா? அப்படியென்றால் நம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார பலம் இருக்கிறதா? விளம்பரதாரர்களிடமிருந்து கொள்ளை இலாபம் அடைவதற்கு நம் விளம்பரதாரர்கள் ஒன்றும் பெரிய சந்தையுடையவர்கள் அல்லர். அப்படியிருக்க எப்படி முடியும்? பொருளாதாரத்தில் பலமடைய என்ன செய்யலாம்? விளம்பரங்களைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? பொருளாதாரத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள, துணைத் தொழில்கள் செய்தால் என்ன? தேவை: பொருளாதாரம் தொழில்நுட்பம் துறைசார்ந்தவர்கள் - இளைஞர்கள் - Kanani - 07-20-2003 ஐந்து மாதம் ஐந்து சனலையும் இலவசமாக விட்டால் அனைத்து ஈழவரும் அப்பக்கம் போவர் - இது எம்மவரின்....மாற்றவே (திருத்தவே) முடியாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-20-2003 ஐந்து மாதங்கள் இலவசமாக விடுமளவு அவர்களிடமும் பொருளாதார வசதியில்லை. அதுதான் உண்மை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-20-2003 இளைஞன் Wrote:தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேண்டுமென்றால் சன் தொலைக்காட்சி பலவானாக இருக்கலாம்.தம்பி.. இளைஞன்.. பிரித்தானியாவைப்பொறுத்தவரை.. யதார்த்தம்.. மறுபக்கம்.. வேலைசெய்கின்றது.. நான்.. பார்த்தவரை.. போகும் வீடுகள்.. அத்தனையிலும்.. தீபம்.. தெலைக்காட்சி..தான்.. இருக்கின்றது.. ஒன்றிரன்டு.. வீடுகளில்.. ரிரிஎன்.. தீபம்.. இரண்டும்.. இருக்கின்றன.. சிலரிடம்.. ஸ்கை.. தீபம்.. இரண்டும்.. உள்ளன.. பலரிடம்.. கேபிள்.. தீபம்.. இருக்கின்றது.. ஆகவே.. எது.. முன்னுக்கு..வரும்.. என்று.. சொல்லித்தெரியவேண்டியதில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 07-20-2003 இளைஞா இது யார் பின்னின்று நடத்துவது என்று எனக்கொரு ஊகம்....அது தனி நபரோ அல்லது சிறு நிறுவனமோ அல்ல....ஒரு நாடாக இருக்கத்தான் வாய்ப்புக்கள் அதிகம்... ஐந்து மாதம் என்ன ஐந்து வருடமும் இலவசமாக விட்டாலும் விடுவார்கள் :!: மக்கள் பெரிதும் பார்க்கும் தொலைக்காட்சியை நோக்கியே விளம்பரதாரரும் நிகழ்ச்சி வழங்குனரும் படையெடுப்பர்...அது வழமை...விளம்பரங்களும் நிகழ்ச்சிக்கான ஆதரவுப் பணங்களும் அந்தப்பக்கம் போகும்... தாத்தா சொல்வதுபோல இங்கு ஐக்கிய இராச்சியத்தில் ரிரிஎன் வைத்திருப்பவர்கள் குறைவு....ஸ்கையும் தீபமும்தான் அதிகம்.. பெண்கள் விரும்பிப்பார்க்கும் சீரியல்கள் எந்தப்பக்கம் போகும்? இளசுகள் விரும்பிப் பார்க்கும் சினிமா எந்தச் சனலில் வரும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: நம்மவர் மனது வைத்தாலொழிய....நம்மவர் நிலை :?: :?: :?: - இளைஞன் - 07-20-2003 நீங்கள் சொல்வது சரி... ஆனால் தீபம் வேறு, வரப்போகும் தொலைக்காட்சிகள் வேறு. நமது மக்களில் பெரும்பாலானவர்கள் சின்னத்திரை நாடகங்களையும், திரைப்படங்களையும் அதிகம் இரசித்தாலும், அவர்களிற்கு குறைந்தபட்சம் ஒரு கிழமைக்கு 30 நிமிடங்களாவது தமிழீழம் சார் நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த 30 நிமிடங்களிற்கு தமிழகத் தொலைக்காட்சிகள் தயாரா? இன்னொரு உதாரணம்: தீபம் தொலைக்காட்சியோ, அல்லது தமிழ்த் தொலைக்காட்சி இணையமோ ஒரு திரைப்படக் கலைஞரை கலையகத்திற்கழைத்து நேரடி நிகழ்ச்சி நடாத்தினாலும் அந்த நடிகனிடம் பேசும் நம்மவர்களின் முதல் கேள்வி தமிழீழம் சார்ந்ததே. எனவே இது சிந்திக்கப்பட வேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Kanani - 07-20-2003 30 நிமிட ஈழம்சார் நிகழ்ச்சி செய்து கொடுக்க இல்லாத ஈழவரா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்ப எத்தனை வானொலிகள் இயங்குது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- இளைஞன் - 07-20-2003 அட நீங்கள் வேற - கணணிப்பித்தன்... செய்து கொடுப்பதற்கு நிறையப் பேர் இருக்கினம். ஆனால் ஒளிபரப்புறதுக்கு அம்மாவும்(ஜெயலலிதா - ஜெயா ரிவி), அப்பாவும்(கருணாநிதி - சன் ரிவி) தயாரா? இஞ்ச ஒளிபரப்பினா அங்க பொடாவில அம்மா தன்னைத்தானே கைது செய்யவேண்டி வரும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Kanani - 07-20-2003 நீங்கள் எந்த வகையான நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறீர்கள்? ஈழம் சம்பந்தமாகத்தானே? இளைஞா ஆதரவு தாற மாதிரி மாற்றுக்கருத்துக்களையும் வைக்கலாம்...அது இங்கும் நடக்குது....சொன்னாலும் கேக்கினமில்லை - இளைஞன் - 07-20-2003 "ஆதரவு தாற மாதிரி" என்றாலும் அதைச் செய்வதற்குத் தமிழக "அரசியற்" தொலைக்காட்சிகள் தயாரா என்பதுதான் கேள்வி. - sOliyAn - 07-21-2003 ஆனால் ஒன்றைமட்டும் கூறமுடியும்.. இறுதிவரை நிலைக்கப் போவது என்னவோ நம்மவர் தொலைக்காட்சிதான்.. காரணத்துக்கு ஒன்று சொல்லலாம்.. இந்தியப் படை வந்தபோது எமது போராட்டம் குலைந்தது என கூறியவர்கள் பலர்.. அதைப்போலத்தான் இதுவும்.. ஒன்று வரும்போதுதான் உணர்வுகளும் உக்கிரம் பெறுகின்றன. எல்லாம் நன்மைக்கே! - sOliyAn - 07-21-2003 இந்தியா ஐரோப்பாவை நாடினால்.. நாம் ஈழத்தை நாடலாம்தானே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|