| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 290 online users. » 0 Member(s) | 287 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,062
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,075
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,545
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,258
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,535
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,862
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,268
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,892
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,939
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,205
|
|
|
| கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு ஆறுவிருதுகள் . |
|
Posted by: shanthy - 07-30-2003, 12:17 PM - Forum: சினிமா
- Replies (78)
|
 |
2002ம் ஆண்டுக்கான தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு 6விருதுகள் கிடைத்துள்ளது. தமிழனின் கண்ணீரை , தமிழீழத்தின் வரலாற்றைச் சிதைத்து , தமிழீழத்தின் தியாகத்தை வியாபாரமாக்கிய மணிரத்தினத்தினம் என்கின்ற வியாபாரியின் வியாபாரத்துக்கு 6 விருதுகளாம்.
ஓ....இது வியாபாரிகளின் காலமோ.....? இல்லை சுயநலங்களின் காலமோ.....?
இதுபற்றிய மேலதிக செய்தியைக் கேட்ட தமிழ்க்குரல்.கொம்மில் சென்று கேட்கலாம்.
|
|
|
| தடங்கல் |
|
Posted by: yarlmohan - 07-30-2003, 06:07 AM - Forum: களம் பற்றி
- Replies (59)
|
 |
வணக்கம்,
தவிர்க்க முடியாத காரணத்தால் தளத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை களத்தில் கருத்துக்களை பரிமாறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அக்காலப்பகுதியில் யாழ் இணையத்திலும் சில தளம்பல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
நன்றி
மோகன்
|
|
|
| தேடல் |
|
Posted by: Guest - 07-29-2003, 08:37 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
இன்னோரிடத்திலிருந்ததை இங்கு தருகிறேன்
தேடல்
அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம்.
ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது.
இந்திய சாகித்திய அகாதெமியின் தென்மண்டலக் குழுவினர், "இன்றைய தமிழின் இலக்கிய வரலாறு" எனும்
ஒரு மிகப்பெரிய நூலை மூன்று பெரும் தொகுப்புகளாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
( "A New Comprehensive History of Tamil Literature " in the three volumes
of 540, 460 and 1175 pages respectively) மூன்றாவது தொகுப்பில் எழுதும் முப்பது
கட்டுரையாளர்களில் என்னையும் ஒருவனாகத் தேர்வு செய்துள்ளனர்.
எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு : " தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம், தலித்தியம்"
நான் ஏற்கெனவே எனது "கவிதையின் கதை" நூலுக்காகச் சேகரித்துள்ள கவிதைகள் தவிரவும் இன்னும் பல
நல்ல கவிதைகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நமது நண்பர்களில் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்கள் இந்தத்தலைப்பில் சேர்க்கக் கூடிய -பொருத்தமான
- கவிதைகளை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன். தகுதியான கவிதைகளை கவிஞர் பெயர்,
வெளிவந்த நூல் அல்லது இதழ் ஆதாரத்துடன் தந்தால் உறுதியாகப் பயன்படுத்துவேன் என்பதை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இணையத்தில் கிடைக்கக் கூடிய நூல், இதழ்களில் இத்தகைய கவிதைகள் இருக்குமெனில் அந்தச் சுட்டியை மட்டும்
தெரிவித்தாலும் போதுமானது.
நல்ல கவிதைகள் / கவிஞர்களை தமிழகம் தாண்டியும் 22 இந்தியமொழிகளில் வரக்கூடிய நூலில் அறிமுகப்
படுத்தக் கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்த, நண்பர்களின் உதவியை
எதிர்பார்க்கிறேன்.
நமது மடற்குழுவில் இதனைத் தந்தாலும் நல்லதே (அத்தைகய கவிதைகள் பற்றி, மடற்குழுவில் உள்ள மற்ற
நண்பர்களின் கருத்தையும் அறியலாம்தானே?) மடற்குழுப் பொறுப்பாளர்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள் என்றே
நம்புகிறேன்.
அல்லது, தனி மடலில் எனக்குத் தெரிவித்தாலும் நன்றியுடன் ஏற்பேன்.
பெண்ணியக் கவிதைகளை பெண்களும்,
தலித்தியக் கவிதைகளைத் தலித்துகளும்தான் எழுதியிருக்கவேண்டும் என்பதில்லை.
ஆண்கவியோ, பெண்கவியோ, மரபோ, புதுக்கவிதையோ, ஐக்கூவோ உணர்வின் உண்மையும், கவித்துவமுமே
முக்கியம்.
ஒரு தகவலுக்காக-
"தையல் சொல் கேளேல்" என்று எழுதியவர், ஔவை.
"தையலை உயர்வு செய்" என்று எழுதியவன் பாரதி.
"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு" என்றவர்க்கு மாறாக, "தொப்பை பெருத்தல் ஆணுக்கழகா?" என்று
கேட்டவர் இன்குலாப்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்.
muthunilavan@yahoo.com
|
|
|
| மதுரைத்தங்கத்திற்கும் காந்தக்கண்ணழகிக்கும் |
|
Posted by: Paranee - 07-29-2003, 05:39 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
மதுரைத்தங்கத்திற்கும் காந்தக்கண்ணழகிக்கும் இடையிலே ஒரு ஊடலாம். .
<img src='http://www.thatstamil.com/images11/janani-200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.geocities.com/Hollywood/Set/1876/k-vi-si.jpg' border='0' alt='user posted image'>
thatstamil.com
|
|
|
| .காதல் |
|
Posted by: J.Premkumar - 07-28-2003, 12:32 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
காதல்
கண்களோடு
கண்கள் மோதி
காதலி.........!
அன்பே
உன் நிழல் தொடரும்
இடத்தில் நான்..........!
|
|
|
| பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
|
Posted by: Paranee - 07-28-2003, 05:17 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (49)
|
 |
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தனது 43 அகவைக்குள் காலடி எடுத்துவைக்கும் அன்பு சகோதரர் திரு.சோழியன் அவர்கட்கு எனது பிறந்நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
வாழவேண்டும்
இன்னும் ஓர்; நு}ற்றாண்டு இந்த புூமமீது புகழாரம் சூட்டவேண்டும்
வாழிய வாழிய
|
|
|
| செய்திகள் |
|
Posted by: Paranee - 07-27-2003, 01:15 PM - Forum: களம் பற்றி
- Replies (3)
|
 |
செய்திகள்
வணக்கம் செய்திகள் வழங்கப்படும்போது அவை உங்களால் பெறப்பட்டவையாக இருந்தால் அவற்றை உங்கள் பெயருடன் வழங்குங்கள். அல்லாவிடின் எங்கிருந்துபெறப்பட்டது என இணைப்பை தாருங்கள். ஏனெனில் இங்கு தமிழீழம் பகுதியில் வழங்கப்படும் செய்திகள் யாவும் உதயன், தமிழ்நாதம், ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளில் இடம்பெற்றவையாக இருக்கின்றன. அவற்றை இங்கு இணைக்கும்போது அந்த பத்திரிகையின் பெயரையும் வழங்கிவிடுங்கள். அல்லாவிடின் அதன்மூலம் பல பிரச்சினைகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
இங்கு குருவி அவர்கள் செய்தி வழங்கும்போது எங்கிருந்து பெறப்பட்டது என்பதனை தெளிவாக தருகின்றார். மதிவதனன் ஜயாவும் அப்படியே செய்கின்றார். மற்றவர்கள் அப்படி தருவதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழீழம் பகுதியில் செய்திகள் வழங்குவோர். கவனித்துக்கொள்ளவும்.
நட்புடன்
பரணீதரன்
|
|
|
| கடத்தல் |
|
Posted by: sethu - 07-27-2003, 09:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (38)
|
 |
<span style='font-size:19pt;line-height:100%'>வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
..................... தணிக்கை
</span>
|
|
|
| விலக விலக புள்ளிதானே. . |
|
Posted by: Paranee - 07-27-2003, 05:28 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
வெகுவிரைவில் 20வருட தேசத்தின் வலியினை வரைய இருக்கின்றேன். கன்னி முயற்சியாய் இது அமைகின்றது உங்கள் கரங்களில் தவழ இருக்கும் இந்த மகவை நீங்கள்தான் விமர்சித்து வளர்க்க உதவவேண்டும். நன்றி பரணீ
விலக விலக புள்ளிதானே. .
|
|
|
| பாரதியார் கவிதைகள் |
|
Posted by: தமிழன் - 07-26-2003, 06:19 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
சுதந்திரப் பள்ளு களியாட்டம்
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே
பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும்போச்சே - பிச்சை
ஏற்ப்பாரைப் பணிகின்ற காலமும்போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யுங் காலமும்போச்சே (ஆடுவோமே)
எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு - நாம்
எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத் தோது வோமே (ஆடுவோமே)
எல்லோரு மொன்றென்னுங்க் காலம்வந்ததே - பொய்யும்
ஏமாற்றுந் தொலைகின்ற காலம்வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம்வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)
உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம் (ஆடுவோமே)
நாமிருக்கு நாடுனம தென்பதறிந்தோம் - இது
நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்
பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம். (ஆடுவோமே)
மகாகவி திரு. சு. பாரதி
நன்றி : MSN தமிழர் குழு
http://groups.msn.com/tamilar
|
|
|
|