| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 382 online users. » 0 Member(s) | 380 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
Yesterday, 09:07 AM
» Replies: 28
» Views: 10,250
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,027
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,113
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| 3 நாடுகளில் ஆட்சித் தலைவர்கள் தமிழர் |
|
Posted by: sri - 02-17-2006, 11:07 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
உலகில் இன்று 3 நாடுகளில் தமிழர்கள் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ள செய்தி தமிழர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்களும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக எஸ்.ஆர்.நாதன் அவர்களும், தமிழீழத்தில் தனியரசின் தலைவராக பிரபாகரன் அவர்களும் பதவி வகிப்பது கண்டு உலகத் தமிழர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று 3 நாடுகளில் தமிழர்கள் ஆட்சித் தலைவர்களாகக் காட்சி தருவது சிறப்புடையதாகும். உலகில் வேறு எந்த மொழியினத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழினத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.
http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=2
|
|
|
| இங்கிலாந்தில் இலங்கை தமிழ் பெண் கைது |
|
Posted by: Shankarlaal - 02-17-2006, 10:26 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
<b>Tsunami 'widow' arrested after husband is seen alive</b>
By David Sapsted
(Filed: 17/02/2006)
A mother of three who was supposedly widowed in the 2004 tsunami has been arrested by police after reports that her husband is still alive.
Yohini Shanthakumaran, 26, won the support of her MP and local press after publicising her claim last year that her two-year-old son had been stranded in Sri Lanka after her husband drowned in the Boxing Day disaster.
Sources yesterday said that suspected discrepancies in her story were first detected by insurance investigators working with the Metropolitan Police's tsunami team.
Now there are claims that her husband Shanmugam has been seen in his native Sri Lanka.
Mrs Shanthakumaran, who lives in Gravesend, was arrested by Kent police on suspicion of deception but insisted that she still believed her husband to be dead. She reported his death last March, saying she had not heard from him since he took their son to visit friends in the coastal town of Trincomalee on Christmas Eve 2004.
In a letter to Chris Pond, who was then MP for Gravesham, she said her son had been stranded in Sri Lanka after her husband's death.
She persuaded local newspapers to highlight her story and a charity came forward to offer funds to have the little boy repatriated.
Mrs Shanthakumaran flew to Sri Lanka and brought the boy home, reuniting him with his elder sisters. However, reports of her husband's death were already being investigated. "The Met Police employed a team of insurance investigators alongside the officers looking at each individual case," said a source close to the inquiry.
"They were assessing Mrs Shanthakumaran's life insurance claims relating to her husband."
Members of Gravesend's Sri Lankan community say her husband has been sighted in Sri Lanka, but Mrs Shanthakumaran remains adamant that she has heard nothing from him since the Boxing Day disaster that claimed 230,000 lives.
She said: "He went and did not come back. I think he is dead." Kent police would confirm only that a woman had been held on suspicion of deception and that she had been released on bail.
http://www.telegraph.co.uk/
|
|
|
| கர்நாடக மாநிலத்தில் பரந்தன் ராஜன் கும்பல் |
|
Posted by: Danklas - 02-17-2006, 09:13 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (12)
|
 |
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடும் பரந்தன் ராஜன் கும் பல் தமிழகத்தில் தேர்தல்களத்தில் கலவரங் களை உண்டுபண்னுவதற்காக திட்டம் தீட்டி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளி வரும் தென்செய்தி இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் வரு மாறு:
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதிவேலைகள் செய்வதற்கு புகுந்த பரந்தன் ராஜன் மற்றும் அவரது கும் பலைச் சேர்ந்தவர்கள் தங்குதடையில்லாமல் இயங்கி வந்தார்கள். புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பைத் தோற்றுவித்தார்கள்.
தீய நோக்கத்துடன் தமிழகத்தில் அவர் கள் இயங்குவது நல்லதல்ல, தமிழ்நாட்டின் அமைதியை அது சீர்குலைத்துவிடும் எனக் கருதிய தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றார்கள். அவரும் உடனடியாக செயல்பட்டு பரந்தன் ராஜன் குழுவினரைக் கைதுசெய்து சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார். அதற்கிணங்க அவர்கள் அத்தனை பேரையும் செங்கல்பட்டுச் சிறப்பு சிறை முகாமில் அடைக்கப்பட்டார்கள்.
<span style='font-size:25pt;line-height:100%'><b>இந்திய அரசின் \"றோ\" உளவுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் டில்லியில் இருந்து பறந்தோடி வந்தனர். பரந்தன் ராஜன் குழுவினரை இந்தியாவிற்குள் கொண்டுவந்ததே \"றோ' உளவுத்துறைதான். எதற்காக அவர்கள் கொண்டுவந்தார்கள் என்பது மூடுமந்திர மாகவுள்ளது.</b></span> எனவே, பரந்தன் ராஜன் குழுவினரை விடுவிக்க அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். தமிழக முதலமைச்ச ரைச் சந்தித்துப் பேச அவர்கள் செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. ஏமாற்றத்துடன் டில்லி திரும்பினார்கள்.
சிறையில் இருந்த பரந்தன் ராஜன் குழு வினர் கடந்த மாதம் திடீரென விடுவிக்கப் பட்டனர். இந்தியாவிற்குள் இனிக் காலடி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் அவர்களைத் தமிழக அரசு விடுவித்தது. அதற்கிணங்க அவர்கள் கொழும்பிற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆனால், சில நாள்களுக்கு முன் பரந்தன் ராஜன் குழுவினர் இந்தியா திரும்பி பெங் களூரில் முகாம் அமைத்துள்ளனர். ஏதோ தீய திட்டத்துடன்தான் அவர்கள் திரும்பியிருக்கிறார்கள்என்பது உறுதி. தமிழகஅரசின் அதி காரத்துக்கு அப்பால் கர்நாடக மாநிலத்தில் அவர்கள் தங்கி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுவாக இந்தியாவில் இருந்து வெளி யேற்றப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், இந்தியாவிற்கு மீண்டும் திரும்ப அனுமதிப் பதே இல்லை. [b]ஒரு காரணமும் இன்றி ஈழவேந்தனை வலுக்கட்டாயமாக இந்திய அரசு வெளியேற்றியதைத் தமிழர்கள் மறந்திருக்க முடியாது. இலங்கை சென்ற ஈழவேந்தன் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூ ரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அவர் வந்த போது, இந்திய "றோ' உளவுத்துறையினர் சென்னை விமான நிலையத்திலேயே அவரை மறித் துத் திருப்பி அனுப்பினார்கள். சார்க் நாடு களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கள் எத்தகைய விஸா அனுமதியும் இல்லா மல் "சார்க்' நாடுகளில் எங்கு வேண்டுமானா லும் வந்து போகலாம் என்று "சார்க்' நாடுகள் வழங்கியிருந்த அனுமதியையும் "றோ' உளவு அதிகாரிகள் மதிக்கவில்லை.
ஆனால், பரந்தன் ராஜன் போன்ற சதிகா ரர்களை இந்தியா திரும்ப "றோ' அதிகாரிகள் அனுமதித்திருப்பதும் ஆழமான கேள்விக ளுக்கு இடமளித்திருக்கிறது.
சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிக ளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். அதற்கு நோர்வே செய் யும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றார் என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்க மாக அறிவித்துள்ளார். இந்தச் சமரச முயற்சிகளுக்கு வேட்டுவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரந்தன் ராஜனை இந்திய மண்ணி லிருந்து செயல்பட "றோ' அதிகாரிகள் அனு மதித்துள்ளனர். பிரதமரின் விருப்பத்திற்கு எதிரானது இதுவாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் ஒரு நிலை எடுக்கிறார். ஆனால், அவரது அதி காரிகள் நேர்மாறான நிலை எடுக்கிறார்கள். பிரதமருக்குத் தெரிந்தே இது நடக்கிறதா? அல் லது தெரியாமல் நடக்கிறதா?
தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறவிருக் கும் காலகட்டத்தில் வேண்டாத விபரீதங்களை உருவாக்கி அதன் மூலம் பெரும் கலவரத்தை மூட்டுவதற்காகவே பரந்தன் ராஜன் குழு வினர் "றோ' அதிகாரிகள் உதவியுடன் இங்கு நுழைந்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னால் வெளியேற்றப்பட்ட பரந்தன் ராஜன் குழுவினர் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தமை பற்றி முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்று மத்திய அரசை, தமிழக அரசு வலி யுறுத்த வேண்டும்.
இப்படி அதில் உள்ளது.
http://www.uthayan.com/pages/news/today/11.htm
|
|
|
| புலிகள் ஜெனிவா பயணம் |
|
Posted by: malaravan - 02-17-2006, 07:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவாத்தைக் குழுனர் இன்று காலை 10.00மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான உலங்கு வானு}ர்தியில் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டனர். இக் குழுவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ காவல் துறைப்பொறுப்பாளர் திரு. பா. நடேசன், சாமாதானச் செயலகத்தைச் சேர்ந்த திரு. இ. மாசல், கேணல் ஜெயம் ஆகியேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், பொதுமக்கள் எனப் பலர் வழியனுப்பிவைத்தனர்.
http://www.tamilkural.com/newtamilkural/in...d=769&Itemid=52
மலரவன் மலரினி
|
|
|
| கள நிர்வாகக் குழுவின் அவசர கவனத்திற்கு .... |
|
Posted by: cannon - 02-17-2006, 01:22 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (9)
|
 |
கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!
யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார்.
இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!!
இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்!
இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா???????????
|
|
|
| குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம் |
|
Posted by: கறுப்பன் - 02-16-2006, 09:22 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
[size=24]குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம்
பிப்ரவரி 16, 2006
சென்னை:
நடிகை குஷ்புவின் ஆபாசப் படத்தை வெளியிட்ட மேக்ஸிம் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kushbocc-350.jpg' border='0' alt='user posted image'>
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ், மேக்ஸிம் பத்திரிக்கை எங்கிருந்து அச்சாகி வெளியிடப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. இதனால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
தற்போது பத்திரிக்கை ஹரியானாவுக்கு அருகே உள்ள தொழிற்பேட்டையில்தான் அச்சிடப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதன் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரது முகவரிகளும் கிடைத்துள்ளன. விரைவில் தமிழக போலீஸ் படை அங்கு சென்று அனைவரையும் கைது செய்யவுள்ளது.
சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவர் முன் ஜாமீன் கோரி டெல்லியில் மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற 2 பேர் குறித்துத் தெரியவில்லை. விரைவில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் நடராஜ்.
இறங்கி வருகிறது மேக்ஸிம்:
இந் நிலையில் குஷ்புவின் ஆபாசப் படம் பிரசுரிக்கப்பட்டது தொடர்பாக சமரசமாக போய் விடலாம், பகிரங்க மன்னிப்பு கேட்க தயார் என்று மேக்ஸிம் பத்திரிக்கையின் சார்பில் குஷ்புவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு ஒரு பெண்ணின் உடலை, குஷ்புவின் முகத்தை சேர்த்து ஆபாசமான படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது மேக்ஸிம். கொந்தளித்துப் போயுள்ள குஷ்பு, மேக்ஸிமிடம் ரூ. 3 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விவகாரம் பெரிதாவதால் மேக்ஸிம் நிறுவனம், குஷ்புவுடன் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக மேக்ஸிம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீச்சல் உடைப் பிரச்சினை தொடர்பாக தொலைபேசி மூலம் நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளோம். அத்தோடு இரண்டு சமரச யோசனைகளையும் தெரிவித்துள்ளோம்.
வழக்கறிஞர் மூலம் குஷ்புவிடம் தெரிவித்த அந்த சமரச யோசனைகளை இப்போது பொதுமக்களிடம் வெளியிடுகிறோம்.
குஷ்புவின் புகைப்படத்தை, நகைச்சுவையாக பார்ப்பதற்கென, கலை நோக்கத்தோடு வெளியிட்டோம். அது உண்மையான படம் அல்ல, போலியானது என்ற வாசகத்தையும் படத்திற்குக் கீழே குறிப்பிட்டிருந்தோம். எனவே குஷ்புவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த படத்தை நாங்கள் வெளியிடவில்லை. வேறு உள்நோக்கமும் இல்லை.
ஆனாலும் குஷ்பு மன வருத்தம் அடைந்ததாகக் கூறியதையடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளோம்.
மேலும், சமரச யோசனைகளையும் அவரிடம் தெ¶வித்திருந்தோம்.
அதன்படி சென்னையிலிருந்து வெளியாகும் அனைத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள், பத்திரிகைகளில் மேக்ஸிம் பத்திரிக்கை ஆசிரியரின் மன்னிப்பை வெளியிடுவதோடு, குஷ்புவோடு கூட்டாக பத்திரிக்கை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம்.
இதில் ஏதாவது ஒன்றை குஷ்பு ஏற்றுக் கொள்ளலாம் எனவும் அவரிடம் தெரிவித்துள்ளோம்.
குஷ்புவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்த இதழில் குஷ்புவின் புகைப்படம் வெளியான அதே அளவில் மன்னிப்பும் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமரசத்தை குஷ்பு ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.
|
|
|
| கலாவுக்கு நேர்ந்த களேபரம் |
|
Posted by: கறுப்பன் - 02-16-2006, 09:19 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>கலாவுக்கு நேர்ந்த களேபரம்</span>
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kala1-350.jpg' border='0' alt='user posted image'>
ஹீரோக்களால், தயாரிப்பாளர்களால், இயக்குனர்களால் ஹீரோயின்கள் சில நேரம் செக்ஸ் சில்மிஷத்தில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது உண்டு. ஆனால் டான்ஸ் மாஸ்டர் கலா, வித்தியாசமான பிரச்சினையை சந்தித்துள்ளார்.
ஷýட்டிங் ஸ்பாட்டின்போது ஹீரோக்கள் தேவையில்லாமல் கட்டிப் பிடிப்பது, கட்டி உருளும்போது (பாடல் காட்சிகளின்போதுதான்) கண்ட கண்ட இடங்களில் கையை வைப்பது, முத்தமிடும் காட்சிகளில் அழுத்தமாக உம்மா பதிப்பது, சில நேரங்களில் கடித்து வைப்பது என ஹீரோயின்களுக்கு சில நேரம் சிக்கல் ஏற்படுவதுண்டு.
இதுமாதிரியான நேரங்களில் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளை சில ஹீரோயின்கள் உடனுக்குடன் தண்டித்து விடுவதுண்டு. உதாரணம், கலாபக் காதலன் படப்பிடிப்பின்போது இறுக்கிக் கட்டிப் பிடித்த ஆர்யாவை, ஹீரோயின் ரேணுகா மேனன் அறைந்தது, ஏய் நீ அழகா இருக்கே படப்பிடிப்பின்போது உதட்டைக் கடித்த ஷாமுக்கு ஹீரோயின் ஸ்னேகா கொடுத்த பளார் என நிறையச் சொல்லலாம்.
இப்போது இதேமாதிரியான ஒரு சிக்கல் டான்ஸ் மாஸ்டர் கலாவுக்கும் ஏற்பட்டுள்ளது. சுரேஷ்கோபி, மம்தா ஜோடி நடிக்கும் லங்கா என்ற மலையாளப் படப்பிடிப்பின்போது கலாவுக்கு இந்த களேபரம் நடந்துள்ளது.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kala2-350.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையை மையமாகக் கொண்டு உருவாகும் படம் லங்கா. இதன் வெளிப்புறப் படப்பிடிப்பு சமீபத்தில் மங்களூரி நடந்தது. பாடல் காட்சி ஒன்றை அங்கு படமாக்கினார்கள். சுரேஷ் கோபி, மம்தா இருவரும் பாடல்காட்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். கேமராமேன் ஷாஜி காட்சியை சுட ரெடியாக இருந்தார்.
டான்ஸ் மாஸ்டர் கலா, நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்து விட்டு லைட்டிங் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அனைத்து விளக்குகளையும் ஆஃப் செய்து விட்டு மீண்டும் ஆன் செய்ய திட்டமிட்டனர்.
ஏற்கனவே அந்த இடம் மிக இருட்டாக இருந்துள்ளது. இந் நிலையில் அனைத்து விளக்குகளும் ஆஃப் செய்யப்பட்டன. மீண்டும் ஆன் செய்ய சற்றே தாமதமாகியுள்ளது. இந் நிலையில், கலா திடீரென கூக்குரலிட்டுள்ளார். உடனடியாக விளக்குகள் எரிய விடப்பட்டன.
அப்போது கலா முகம் இருண்டு போய், மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். என்ன ஆச்சு என்று கேமராமேன், இயக்குநர் உள்ளிட்டோர் கேட்டபோது, லைட் பாய்களில் சிலர் தனது உடம்பில் கை வைத்து விட்டதாக கொந்தளித்துக் கூறினார்.
இதைக் கேட்டதும் ஷýட்டிங் ஸ்பாட் அதிர்ச்சியில் மூழ்கியது. இதை நான் இப்படியே விடப் போவதில்லை. என்ன நினைத்துக் கொண்டு விட்டார்கள் என கோபத்தில் குமுறிய கலாவை உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தி, சமாதானப்படுத்தினார்கள். அதன் பின்னர் அங்கிருந்த லைட் பாய்களை (எல்லோருமே கேரள வாசிகள்) விசாரித்துள்ளார்கள்.
ஆனால் யாருமே தாங்கள் அவ்வாறு செய்ததாக ஒத்துக் கொள்ளவில்லையாம். அதற்கு மேல் தீவிரமாக விசாரித்தால் வேறு மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டு விடுமே என்று நினைத்து அந்த லைட்டிங் யூனிட்டை மொத்தமாக அப்படியே மாற்றி விட்டு வேறு யூனிட்டை வைத்து காட்சியை சுட்டு ¬முத்தார்களாம்.
ஹீரோயின்களுக்கு ஏற்படுவதைப் போல கலாவுக்கு ஏற்பட்டு விட்ட இந்த களேபரம் மலையாளப் படவுலகிலும், தமிழ்த் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தசம்பவம் குறித்து இதுவரை கலா யாரிடமும் புகார் செய்யவில்லையாம்.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/sneha12ea-500.jpg' border='0' alt='user posted image'>
நடிகை ஸ்னேகாவின் சகோதரரை திருமணம் செய்து துபாயில் சிறிது காலம் செட்டிலாகியிருந்த கலா பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு தீவீரமாக கலைச் சேவையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|