| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 312 online users. » 0 Member(s) | 309 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,250
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,117
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| இன்னமும் திருந்தவில்லையா ? |
|
Posted by: Paranee - 11-20-2003, 05:24 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (7)
|
 |
இன்னமும் திருந்தவில்லையா ?
வணக்கம் !
வேதனையான ஓர் உண்மை.
சாதி இனம் மதம் வேண்டாம் என்று புதியதோர் யுகம்நோக்கி தாய்நிலம் நடைபோட நெற்கதிர் இடையே விசச்செடிகளாய் அண்மையில் யாழ் மாநகர எல்லைக்குள் நடந்த சாதிப்பிரிவினை மனதை நெருடுகின்றது.
இந்த அரேபிய மண்ணில் பிறந்து வளர்ந்து 5 ஆண்டுகள் இங்கே இருந்து பெற்றோருடன் தாய்நிலம் சென்று அங்கு தன் கல்வியை ஆவலுடன் தொடங்க முற்பட்ட வேளை சொந்த ஊரிலேயே அமைந்துள்ள பாடசாலையில் சாதி குறைந்தவர்கள் என ஓதுக்கப்பட்ட ஓரு வேதனையான சம்பவம் நேற்று கேள்வியுற்றேன். மனதை மிக மிக நெருடிச்சென்றது அந்த சோககதை. எத்தனையோ பாடசாலைகளில் விண்ணப்பித்தபோது காலம் சென்றுவிட்டது தற்போது பாடசாலையில் இடம் இல்லை. அடுத்த ஆண்டு நீங்கள் சேரலாம் என்று சொல்லி நிராகரித்தபோது இந்த பாடசாலையில் போதிய இடமிருந்தும் சாதிகுறைந்தவர் என்று அந்த பிஞ்சின் கல்வியில் வெட்டு வீழ்ந்திருக்கின்றது. ஆங்கிலக்கல்வி கற்ற அந்த பிஞ்சு தாய் மண்ணில் தாய்மொழிதான் கற்கவேண்டும் என்ற பெற்றோரின் ஆவலினால் அங்கு சென்று இன்று எதுவுமற்ற நிலையில் இருக்கின்றது. இதற்கு என்ன செய்யமுடியும் சொல்லுங்கள். அந்த பாடசாலை அதிபரின் பெயர் பாடசாலை விபரங்கள் தேவையானவர்களிற்கு தனிப்பட்ட முறையில் நான் தருகின்றேன். உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை உடனே எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய ஆசை அந்த பிள்ளைக்கு அதேபாடசாலையில் இந்த ஆண்டே (2004 ) நுழைவு கிடைக்கவேண்டும்.அதற்கேற்ற ஓழுங்கை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்
சாதியை ஓழிப்போம் என்ற தலைவரின் கூற்று வெற்றாகி காற்றோடு கலந்திடாவண்ணம் நிலைநாட்டி வைப்போம்
நம்பிக்கையுடன்
ந.பரணீதரன்
|
|
|
| தாமரை |
|
Posted by: இளைஞன் - 11-19-2003, 09:46 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
<b>தாமரை</b>
<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>
<img src='http://www.yarl.com/forum/files/damrai.jpg' border='0' alt='user posted image'>
தாமரையே!
உன்னை சூரியனின் கதிர்கள்
அன்புடன் அணைத்தாலும் சரி
வெறுப்புடன் எரித்தாலும் சரி
என்றென்றும் தெய்வங்கள் அமரும் தாமரையாக
அன்புடனும் அழகுடனும் இரு!
|
|
|
| கைக்கூ கவிதைகள் |
|
Posted by: aathipan - 11-19-2003, 05:37 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (120)
|
 |
<img src='http://media.gatewaync.com/wsj/photos/specialreports/attack/remember/2pilot2.jpg' border='0' alt='user posted image'>
யாரோ
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி
|
|
|
| மறைவுச்சொல் |
|
Posted by: வலைஞன் - 11-19-2003, 11:26 AM - Forum: களம் பற்றி
- Replies (2)
|
 |
<b>மறைவுச்சொல்</b>
அனைத்துக் கருத்துக்கள நண்பர்க்கும் வணக்கங்கள்!
நீங்கள் ஆரம்பத்தில் யாழ் இணையக் கருத்துக்களத்தில் இணைந்த பொழுது நீங்கள் ஒரு மறைவுச் சொல்லினைக் கொடுத்திருப்பீர்கள். பின்பு ஒரு முறை அதனை மறந்திருப்பீர்கள். அதனால் புதிய மறைவுச் சொல்லினை பெற்றிருப்பீர்கள். ஆனால் அந்தப் புதிய மறைவுச் சொல்லினை உங்களுக்கு இலகுவாக ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் உள்ளதா?
அல்லது நீங்கள் கொடுத்த மறைவுச் சொல்லினையே உங்கள் பாதுகாப்புக் கருதி அடிக்கடி மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா?
எது எப்படியாக இருந்தாலும், நீங்களே உங்களது மறைவுச் சொல்லை (Password) மாற்றிக் கொள்ளலாம். இதோ அதற்கான விளக்கம்:
<b>1.</b> யாழ் இணையக் கருத்துக்களத்தில் பதிந்த அங்கத்துவர்களாகிய நீங்கள், முதலில் உங்கள் பயனாளர் பெயரையும்
(Username), மறைவுச்சொல்லையும்(Password) பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும்.
<b>2.</b> கருத்துக்களத்தின் மேற் பகுதியில் யாழ் இணையத்தின் பிரிவுகளுக்கான தொடுப்புகள் இருக்கும்:
முற்றம் - கருத்துக்களம் - விம்பகம் - மடல் - தேடி - நாற்சந்தி
அதன் கீழ் கருத்துக்களத்திற்கான தொடுப்புகள் இருக்கும்:
Home - Search - Memberlist - Statistics - Album - Links - Calendar - Recent Topics -
Nickpage - Staff Site - Ranks - Usergroups - FAQ - Profile - You have no new
messages - Log out [ வலைஞன் ]
<b>3.</b> மேற்கண்ட கருத்துக்களத்திற்கான தொடுப்புகளில், "Profile" என்பதை அழுத்துங்கள்(click).
அதனை அழுத்தியதும் உங்களுக்கான, உங்களைப்பற்றிய தரவுகள் அடங்கிய பகுதி திறக்கப்படும். அதன்
மேற்பகுதியில் பின்வரும் பிரிவுகள் இருக்கும்:
Public - Home - Registering - Profile - Buddylist - Private Messaging
<b>4.</b> மேற்கண்ட தொடுப்புகளில் Register என்பதை அழுத்துங்கள். அதனை அழுத்தியதும் உங்கள் தரவுகளையுடைய ஒரு பக்கம் திறக்கும்.
<b>5.</b> அதில் Password என்கின்ற ஒரு பிரிவு உள்ளது.
<b>மாற்றுதல்:</b>
- முதலாவதாக Current password: என்று ஒன்று உண்டு. அதில் உங்களுடைய தற்போதைய Password இனைக் கொடுக்கவும்.
- இரண்டாவதாக Password: என்று ஒன்று உண்டு. அதில் புதிய Password இனைக் கொடுக்கவும்.
- மூன்றாவதாக Confirm password: என்ற ஒன்று உண்டு. அதில் மறுபடியும் மேலே கொடுத்த புதிய Password இனைக் கொடுக்கவும்.
இறுதியாக அப்பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு சென்று, அங்குள்ள Submit என்பதை அழுத்தவும். பின்பு Logout செய்துவிட்டு மறுபடியும் புதிய மறைவுச் சொல்லினைக் (Password) கொடுத்து உள்நுழையுங்கள்.
நன்றி
|
|
|
| என்னை பற்றி சில வரிகள் |
|
Posted by: tamilan - 11-19-2003, 07:16 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (26)
|
 |
என்னை பற்றி சில வரிகள்
எந்நாடு = இந்தியனுக்கு அடிமைப்பற்றுக் கிடக்கும் தமிழ் நாடு.
என் கொள்கை = தமிழ் நாடு விடுதலை
என் வழிகாட்டி = மறைந்து போன பாவலறேறு.
எனக்கு வழி காட்டிய தாளிகை = அவர் வெளியிட்ட தென்மொழி
அவர் மறைவுக்குப் பின் பட்டிக்கும் தாளிகை = தமிழ் த்ரிபூன் tamil tribune என்ற கணினி இதழ்.
கேள்வி = வேறு தமிழ் நாடு விடுதலைத் தாள்கைகள் கணினியில் உள்ளதா?
|
|
|
| இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. |
|
Posted by: yarl - 11-19-2003, 06:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
thatstamil
நவம்பர் 19, 2003
2 வாரம் முடக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது
கொழும்பு:
இரு வாரகால முடக்கத்திற்குப்பின், இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
அதிபர் சந்திரிகா மூன்று மந்திரிகளின் பதவியைப் பறித்ததோடு, கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தையும் இரு வாரங்களுக்கு முடக்கி வைத்தார். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் தடை ஏற்பட்டது.
இந் நிலையில் சந்திரிகாவும் பிரதமர் ரணிலும் இருமுறை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந் நிலையில் இரு வார கால முடக்கம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று காலை நாடாளுமன்றம் கூடியது.
செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரைரா,
நாடாளுமன்றத்தை முடக்கி வைத்த சந்திரிகாவின் உத்தரவு சட்ட விரோதமானது. நாடாளுமன்றம் சம்பந்தமான முடிவுகளை பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர்தான் அதிபர் அறிவிக்கவேண்டும். ஆனால், தன்னிச்சையாக அதிபர் இந்த முடிவை வெளியிட்டார்.
இதுபோன்று சந்திரிகா வருங்காலத்தில் செயல்பட மாட்டார் என நம்புகிறேன். அவ்வாறு செயல்பட்டால், நாடாளுமன்றம் தானாகவே கூடி, செயல்படும் என்றார்.
|
|
|
| தேசிய குழு அமைக்க சந்திரிகா ரணில் முடிவு |
|
Posted by: yarl - 11-18-2003, 11:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
செய்தி தினமலர்
. இலங்கை: சந்திரிகாரணில் சந்திப்பு
கொழும்பு: அதிபர் சந்திரகாவுடனான பிரதமர் ரணிலின் சந்திப்பு இன்று நடந்தது. முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க தேசிய அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
'உருப்பட்டாப்போலத்தான்'
|
|
|
|