Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னமும் திருந்தவில்லையா ?
#1
இன்னமும் திருந்தவில்லையா ?

வணக்கம் !
வேதனையான ஓர் உண்மை.
சாதி இனம் மதம் வேண்டாம் என்று புதியதோர் யுகம்நோக்கி தாய்நிலம் நடைபோட நெற்கதிர் இடையே விசச்செடிகளாய் அண்மையில் யாழ் மாநகர எல்லைக்குள் நடந்த சாதிப்பிரிவினை மனதை நெருடுகின்றது.

இந்த அரேபிய மண்ணில் பிறந்து வளர்ந்து 5 ஆண்டுகள் இங்கே இருந்து பெற்றோருடன் தாய்நிலம் சென்று அங்கு தன் கல்வியை ஆவலுடன் தொடங்க முற்பட்ட வேளை சொந்த ஊரிலேயே அமைந்துள்ள பாடசாலையில் சாதி குறைந்தவர்கள் என ஓதுக்கப்பட்ட ஓரு வேதனையான சம்பவம் நேற்று கேள்வியுற்றேன். மனதை மிக மிக நெருடிச்சென்றது அந்த சோககதை. எத்தனையோ பாடசாலைகளில் விண்ணப்பித்தபோது காலம் சென்றுவிட்டது தற்போது பாடசாலையில் இடம் இல்லை. அடுத்த ஆண்டு நீங்கள் சேரலாம் என்று சொல்லி நிராகரித்தபோது இந்த பாடசாலையில் போதிய இடமிருந்தும் சாதிகுறைந்தவர் என்று அந்த பிஞ்சின் கல்வியில் வெட்டு வீழ்ந்திருக்கின்றது. ஆங்கிலக்கல்வி கற்ற அந்த பிஞ்சு தாய் மண்ணில் தாய்மொழிதான் கற்கவேண்டும் என்ற பெற்றோரின் ஆவலினால் அங்கு சென்று இன்று எதுவுமற்ற நிலையில் இருக்கின்றது. இதற்கு என்ன செய்யமுடியும் சொல்லுங்கள். அந்த பாடசாலை அதிபரின் பெயர் பாடசாலை விபரங்கள் தேவையானவர்களிற்கு தனிப்பட்ட முறையில் நான் தருகின்றேன். உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை உடனே எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய ஆசை அந்த பிள்ளைக்கு அதேபாடசாலையில் இந்த ஆண்டே (2004 ) நுழைவு கிடைக்கவேண்டும்.அதற்கேற்ற ஓழுங்கை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்

சாதியை ஓழிப்போம் என்ற தலைவரின் கூற்று வெற்றாகி காற்றோடு கலந்திடாவண்ணம் நிலைநாட்டி வைப்போம்

நம்பிக்கையுடன்
ந.பரணீதரன்
[b] ?
Reply
#2
ஊரில் கலாச்சாரத்தை பேணும் அமைப்பு ஒன்று இயங்குகிறதாம்.அங்கு முறையிடச்சொல்லுங்கள்.வழிவகை செய்வார்கள்.
Reply
#3
அப்படித்தான் சொல்லியுள்ளேன். எனினும் அப்படியான அந்த அதிபர்களை ஆசிரியர்களை கண்டித்துவைக்கவேண்டும். கல்வியுடன் விளையாடுகின்றார்கள். எதிர்காலத்து}ண்களாக இருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை உணரமறுக்கின்றார்கள். சுயத்திற்காக வெளிச்சம் தரும் விளக்கை அணைக்க முயல்கின்றார்கள் என்றுதான் கவலை
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஊரில் கலாச்சாரத்தை பேணும் அமைப்பு ஒன்று இயங்குகிறதாம்.அங்கு முறையிடச்சொல்லுங்கள்.வழிவகை செய்வார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#4
இந்த விசச் செடிகளை முளையிலேயே கிள்ள வேண்டும்...மரமாகக் கொடியாக இருந்தவற்றை கிள்ளி எடுக்க எவ்வளவோ செய்ய வேண்டி இருந்தது...ஆனால் புலத்தில் இது நல்லாச் செழித்து வளர்கிறதாமே...கனடாவில் உரம் போட்டு வளர்க்கப்படுகிறதாம்.....உண்மையோ......?! ஒன்று புரிகிறது வரிப்புலி தலைமை வகித்தால்தான் இரண்டு நடக்கும் ஒன்று இனவிடுதலை...அடுத்தது சமூகவிடுதலை...அன்றில் தமிழர் மனத்தை அடக்கி வைப்பது வலுகஸ்டம்....! உள்ள அநியாயங்களுக்கெல்லாம் இப்ப பாவிப்பது மாற்றுக் கருத்து அரசியலும் ஜனநாயகமும்.....!

:twisted: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
புலத்திலும் கடுமையாக உள்ளதாக அனுபவம்
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#6
1995ஆம் அண்டுக்குபின் வடக்கில் குறிப்பாக யாழ்குடாவில் மீண்டும் சாதியம் தலை து}க்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யாழ் குடாவை விட்டு வெளியேறியதும் சாதியம் மிண்டும் அங்கு நுளைந்து விட்டது. பல பாடசாலைகளில் தலித்துக்கள் மறைமகமாகவும் நேரடியாகவும் சாதி வெறியர்களால் அடக்கப்பட்டனர். பண்டத்தரிப்பில் ஒரு பாடசலையில் நடை பெற்ற இந்த சாதிக் கொடுமை பற்றிய விவரணம் ஒன்று கடந்த ஆண்டு சக்திதெலைக்காட்சியில் ஒலிபரப்பாகியபோது நமமு நெஞ்சம் கொஞச்சம் கனத்தது. அனால் தற்போது விடுதலைப் புலிகள் இந்த விடயத்தில் பல இடங்களில் நேரடியாக தலையிட்டு சாதியம் மிண்டும் தலை து}க்காதிரிக்க வழி சமைத்திருக்கிறார்கள். அனால் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் யாழ்குடாவில் அது ஓயவில்லை. மாறாக இராணுவ தலைமைகள் சிலரின் அனுசரணையுடன் சில இடங்களில் சில சாதிமான்கள் தமது ஆதிக்கத்தை காட்ட முனைவதாக வதந்திகள் வருகிறது. இதில் உண்மை இரக்கிறதோ தெரியாது, அனால் சாதியம் என்ற கறையான் மீண்டும் தலைது}க்க அனிமதிக்க கூடாது. கரவை பரணி நீங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை வெளியிட நீங்கள் தயங்க கூடாது. சில விடயங்களை நாம் அவர்களை உரித்துக்காட்டுவதால் தான் திருத்த முடியும். எனவே கரவை அவர்களின் விபரங்களை வெளிவிடுங்கள்!
Reply
#7
Quote:சாதி குறைந்தவர்கள்

இந்த வார்த்தை கூட அவர்களை குறைந்தவர்கள் என்று சுட்டிக்காட்டுவதால் தலித்துக்கள் என்று பாவித்தால் அது நன்றாக இருக்கும்! இது ஒரு பணிவான வேண்டுகோள்!<b>[/size][size=12]</b>
Reply
#8
வணக்கம் ஒரு சந்தோசமான செய்தி
யாழ் அண்ணா கூறியதுபோல் கலாச்சாராத்தை பேணும் குழுவினரால் அந்த பிஞ்சின் கல்வி அதே பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எமக்கு கிடைத்து ஒரு பெரும்வெற்றி. என்றைக்குமே நாம் யாரிற்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதற்கு இது உதாராணம்.

அந்த முகமறியா உறவுகளிற்கு நன்றி கோடிகள்.

மற்றும் இங்கு கருத்துக்களை வைத்த நண்பர்களிற்கும் நன்றிகள்
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)