Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 359 online users.
» 0 Member(s) | 356 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,252
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,030
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,419
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,119
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  தமிழீழத்தேசியமலர் அறிமுகம்
Posted by: yarl - 11-26-2003, 07:13 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (17)

இந்த வருட மாவீார் நாளிலிருந்து தமிழீழத்தேசியமலராக கார்த்திகைப்பூ அறிமுகம் செய்யப்படப்போவதாக தேசிய தொலைக்காட்சி ஒரு தகவல் வெளியிட்டிருந்தது

படமும் கணனி வழி உருவகப்படுத்தி காட்டியிருந்தார்கள்(கணனிவழிப்படுத்திய கலைஞனுக்கு பாராட்டுகள்)

யாராவது கார்த்திகைப்பூ பற்றிய செய்திகள் அல்லது படம் இருந்தால் தரவும்.

Print this item

  மாவீரர் நிகழ்வில் இளம்பரிதி
Posted by: yarl - 11-26-2003, 06:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

உதயன் செய்தி

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதன் முக்கிய நிகழ்வாக லண் டனில் உள்ள எக்ஸெல் (நுஒநடட) மண் டபத்தில் நடைபெறவுள்ளன. மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிக ளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங் கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்று வார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இத் தாலியின் கத்தானியா என்ற இடத்தி லுள்ள டொன்பொஸ்கோ அரங்கில், தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக் கப்பட்டு மாவீரர் நினைவு கூரப்பட்ட னர். எதிர்வரும் 30 ஆம் திகதி பவர்மோ,
லெக்சே ஆகிய மாநிலங்களிலும் எதிர் வரும் 6 ஆம் திகதி றெஜியா, எமி லியா ஆகிய மாநிலங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 29 ஆம் திகதி சுவிட் சர்லாந்து, டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளி லும் எதிர்வரும் 8 ஆம் திகதி பிரிட் டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளி லும் மாவீரர் தின நிகழ்வுகள் நடை பெறும்.
வெளிநாடுகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் தாயகத்திலிருந்து செல்லும் புலிகளின் பிரமுகர் கள் கலந்துகொள்வர்.
லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத் தின் பொறுப்பாளர் கலைக்கோவன் இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் நடைபெறும் நிகழ்வுகளிலும், யாழ்.மாவட்ட அரசியல் துறைப்பொறுப் பாளர் இளம்பரிதி இத்தாலி, ஜேர் மனி ஆகிய நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளிலும், மன்னார் மாவட்ட அரசி யல் துறைப் பொறுப்பாளர் அமிர்தாப் பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வு களிலும் பங்குபற்றி சிறப்புரையாற்று வர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Print this item

  வன்முறைகள் வேண்டாம்
Posted by: ganesh - 11-25-2003, 05:55 PM - Forum: புலம் - Replies (103)

வன்முறைகள் வேண்டாம் தற்போது எமது மக்களுக்குள் இடையே வன்முறைகள் அதிகரித்து வருகின்றது கருத்துக்களத்தில் கூட இந்த நிலமை ஏற்பட்டு வருகின்றது
ஒருவர் அல்லது ஒரு குழு குற்றம் செய்தால்
அவர்களை துரோகி என்றும் அவர்களை ஒழிப்போம் என்று எழுதுகிறார்கள் வேண்டாம்
வேண்டாம் இது போன்ற செயல்கள் முடீந்தால் சட்டநடவடிக்கை எடுங்கள் உதாரணமாக இன்று நடப்பதைப்பாருங்கள்
எத்தனையோ உயிர்கள் பறிக்கப்பட்டன
இப்பொழுது சமாதானமாக வாழவில்லையா
ஆகவே வேண்டாம் வேண்டாம் வன்முறைகள் நாங்கள் எல்லாம் எழுதலாம்
ஆனால் அதனால் பாதிக்கப்படுவது யார் நாங்கள் அல்ல சகலமக்களும் ஆகவே நல்ல ஆக்கங்களுக்கு இனிவரும்காலங்களில் அதிக நேரத்தை செலவுசெய்யுங்கள் சகோதரர்களுக்கடையில் வேண்டாம் சண்டை
சிறியபிரச்சனையை பெரிதாக்காதீர்கள் ஒருவருக்கு கஸ்டம் ஏறபடும்போது எதிரித்தமிழனும் உதவிசெய்வான் இது நமது
கலாச்சாரம் இதனையாரும் மறுக்கமுடியாது

கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் எதற்கு?

Print this item

  2003 இல் உச்சம் எட்டிய எயிட்ஸ்
Posted by: kuruvikal - 11-25-2003, 03:08 PM - Forum: மருத்துவம் - Replies (11)

உலகில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருவதுடன் இவ்வாண்டில் அது இதுவரை காலத்துக்குமான உச்ச நிலையை எட்டியுள்ளது....! உலகில் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் இவர்களில் 2.5 மில்லியன் பேர் 15 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்கள்...இவ்வாண்டில் 2003 மட்டும் சுமார் 5 மில்லியன் பேர் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகி உள்ளனர்...மூன்று மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்...!

உலகின் எயிட்ஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக தொடர்ந்து ஆபிரிக்கா விளங்குகிறது...ஆசியாவில் இந்தியாவும் சீனாவும் எயிட்ஸ் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளன....!

ஆபிரிக்காவில் பொஸ்வானாவிலும் சுவாசிலாந்திலும் சுமார் 40 சதவீதம் வளர்ந்தவர்கள் எயிட்ஸ் உடன் வாழ்கின்றனர்...அது மட்டுமன்றி அப்பிராந்திய சில நாடுகளில் ஐந்து கர்பிணித்தாய்மாருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எயிட்ஸ் தொற்றிய தாய்மார் வாழ்கின்றனர்.....!

இப்படியே போனால் மனித இனமும் சுவடுகளாக பூமியில் காட்சியளிக்கும் நாள் அதிக தூரமில்லை....!

:evil: :roll: :!: :evil:

Print this item

  வானதியின் வெளியேறல்
Posted by: vanathi - 11-25-2003, 12:50 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (12)

நானஇ களத்தை விட்ட வெளியெறுகிறேன்.எல்லோருக்கும் நன்றி வணக்கம்.

Print this item

  Ranil's connections!... (இரணிலாரின் தொடர்புகள்!)
Posted by: Kanakkayanaar - 11-25-2003, 09:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நவம்பர் 25, 2003

ஜெயாவுக்கு ரணில் தொலைபேசியில் வாழ்த்து

சென்னை:

டான்சி வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


ரணில் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

*****

நவம்பர் 24, 2003

ரணில், கலாம் இரங்கல்: ரஜினி நேரில் அஞ்சலி

சென்னை:

முரசொலி மாறனின் மறைவுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ...

... இந் நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மாறனின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். ரணில் சார்பில் இலங்கைத் துணைத் தூதர் சுமித் நாகமத்லா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நன்றி தற்சுதமிழ்.கொம் (thatstamil.com) உம் சுரதாவின் உருமாற்றிக்கும்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  சுப்பிரமணியசுவாமியின் கருணை
Posted by: aathipan - 11-25-2003, 03:06 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

ஜனதா காட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி இலங்கை அகதி மாணவர்களுக்கு 2003-2004 ஆண்டுக்கு கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கவேண்டும் என்று வழக்குத்தொடர்ந்து இருந்தார். இதற்கு தலைமைநீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில் இலங்கை அகதிகள் பிரச்சனை மத்திய அரசின்கீழ் வருவதால் அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சனையில் பாதிக்கப்பட்டு இந்தியாவந்த அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது 1991-92ல் தேவையற்றது என்று நீக்கப்பட்டது. இதைத்தொடாந்து தமிழ்நாடு அரசு இதைக்கைவிட்டது. 1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்குவந்தபோதுஇட ஒதுக்கீடு வழங்கினார். அது மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது அறிந்ததே.

Print this item

  49th birthday
Posted by: vasisutha - 11-25-2003, 12:42 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (13)

<span style='color:#d100ff'> பிறந்த நாள் வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
</span>

<img src='http://www.yarl.com/ecards/images/eelam/leader/eelam.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  கருத்தும் நீக்கமும் களமும்...!
Posted by: kuruvikal - 11-25-2003, 12:39 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (42)

வலைஞன் Wrote:வணக்கம் குருவிகள்,

தயவு செய்து தலைப்புடன் சம்பந்த பட்ட கருத்தினை எழுதுக. முதல் கருது நீக்கப்பட்டதற்கான காரணமும் இதுவே! களம் பற்றிய உங்கள் கருத்தினை எழுதுவதற்கான இடம் "உங்கள் கருத்து" என்னும் பிரிவு ஆகும்.

-----------------------------------------------------
வலைஞன் Wrote:வணக்கம் குருவிகள்,

"நண்பர்(கள்).....!" என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட உங்கள் கருத்து அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------
எங்க நினைக்கிறது கிற்றாரோட உலகம் பூரா திரிஞ்சு புகழ் பெற்ற மைக்கல் ஜக்சனே படுகள்ளனா இருக்கேக்க அதை ஒத்ததுகள் எல்லாம் எப்படி இருக்குங்கள்.... அதுக்க மற்றவைக்கு உபதேசம் வேற.....!

உபதேசம் செய்ய முதல் உனக்கு அந்தத் தகுதி உள்ளதா என ஒரு கணம் சிந்தி.....!

சொல்வது மனிதனுக்கு மனிதன்...!
------------------------------------------------------
காரணம்:
1. தலைப்புக்குப் பொருத்தமில்லாத கருத்து.
2. ஒருமையில் கள அங்கத்துவரைச் சுட்டிக் கருத்தாடியமை.

தயவுசெய்து களவிதிகளை மீறாதவாறு தொடர்ந்து கருத்தாடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

நன்றி

எமது கருத்து நீக்கப்பட்டது தொடர்பாக எமது நிலைப்பாடு.....!

வலைஞன் அவர்களே...உங்களுக்குக் கருத்தின் ஆழம் உண்மையில் புரிகிறதா....குறிப்பிட்ட கருத்து யாரையும் பெயர் குறித்து எழுதப்படவில்லை அல்லது குவாட் செய்தும் எழுதப்படவில்லை...அத்துடன் பொதுவாக சமூகத்தை அல்லது மனிதனை விளித்து எழுதும் கருத்துக்கள் ஒருமையில் அமைவது இயல்பு உங்கள் நடவடிக்கையானது சிலரை இக்களத்தில் திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது....நட்புக்கு உபதேசம் செய்யும் ஒருவர் வந்து மூன்று நாளிலேயே களத்தில் கருத்தாடும் விதத்தைக் கண்டு நீங்கள் எல்லோரும் இன்புறுவது தெரிகிறது...இப்படியே உங்கள் களம் அநாகரிகத்திற்கு இடமளிக்குமானால்...நிச்சயம் இக்களம் வருவதை நாம் நிறுத்துவோம்...உங்கள் களத்தில் கருதாட வேண்டும் என்பது எமக்கொன்றும் கட்டாயம் இல்லை....நாம் நாகரிகத்தை தமிழை நேசிப்பவர்கள் அந்தமட்டில்தான் இக்களம் வந்தோம்....!

களப்பொறுப்பாளர்கள் தவிர யாரும் குருவிகளின் தனிப்பட்ட செய்திப் பிரிவுக்கு செய்தி அனுப்புதலைத் தவித்துக் கொள்ளவும்...வானதி எனும் நபர் அனுப்பிய தனிப்பட செய்தி தொடர்பில் நாம் எதிர்காலத்தில் எடுக்கும் செயற்பாடுகளுக்கு அது உதவியாக அமையும்....எனவே தயவு செய்து எமக்கு இது விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கவும்...இது தொடர்பில் இக்களம் தவறாக எமக்கெதிராகப் பயன்படுத்தப்படுமானால் நாம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம்...."

:evil: :twisted: :evil:
-----------------------------------------------------

Print this item

  ரோஜா
Posted by: இளைஞன் - 11-25-2003, 12:13 AM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<b>ரோஜா</b>

<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>

<img src='http://www.yarl.com/forum/files/rose.gif' border='0' alt='user posted image'>

காதல் மலரே!

உன்னிடம்
அணைக்கின்ற அன்பும் இருக்கின்றது!
எதிர்கின்ற கோபமும் இருக்கின்றது!
உன் மென்மையை அனுபவிப்பவர் கண்டு
மயங்கி விடாதே!!!
உன் எதிர்ப்பைக் காட்டி விடு!
இல்லையென்றால் நீ அழிக்க படுவாய்!!!

Print this item