| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 437 online users. » 0 Member(s) | 435 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| றோவின் தயவில் தேசத் துரோகக் கும்பல் ஒன்றின் உதயம்...! |
|
Posted by: kuruvikal - 10-13-2004, 08:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (31)
|
 |
<b>இந்திய உளவுத்துறையின் நேரடி கண்கானிப்பில் தேசவிரோதிகளின் புதிய கூட்டமைப்பு.</b>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/top.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா என்ற தமிழ்த்தேசவிரோதி (வி.முரளீதரன்) என்பவரும் புளொட் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பரந்தன் ராஜனின் சகோதரன் ஞானராசா என்பவரும் புதிய கட்சி ஒன்றை <b>தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் </b>என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார்கள். இருவரும் பண மோசடி கொள்ளை சட்டவிரோத நடவடிக்கைகள் அமைப்பு விதிகளை மீறிய காரணங்களுக்காக கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பாட்டவர்கள். புதிதாக அமைக்கப்பட்ட கட்சியின் தலைவராக கருணாவும் செயலாளராக ஞானராசா (ஈ.என்.டி.எல்.எவ்-முக்கியஸ்தர் தற்போது இந்தியாவில் இருக்கின்றார் பரந்தனை சொந்த இடமாக கொண்டவர்.) என்பவரும் இருப்பார்களென அக் கட்சி பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் சர்வதேச பொறுப்பாளராக இலண்டன் ரிபிசி வானொலி நடத்துனர் Ramarajah என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் டென்மார்க் பொறுப்பாளராக மதி குமாரதுரையும் (திருகோணமலை) சுவீடன் தலைவராக Asian Tribune நடாத்தும் கே.ரி.ராஜசிங்கமும் (வடமராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் மத்தியகுழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை டென்மார்க் வீபோக்கில் இருந்து மதி குமாரதுரை நடாத்துகின்றார் என்பதும் குறப்பிடத்தக்கது
மேலதிக தகவல் மிகவிரைவில் நிதர்சனம் ஆகும்.
தகவல் : நிதர்சனம்.கொம்
|
|
|
| வன்னித்தென்றல் இணையத்திற்கான ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன. |
|
Posted by: Nitharsan - 10-12-2004, 05:23 PM - Forum: இணையம்
- Replies (6)
|
 |
வன்னித்தென்றல் இணையத்திற்கான ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன....
வன்னித்தென்றல் இணையத்தின் தக்களது ஆக்கங்களை இணைக்கவிரும்பும் உலகெங்கும் இருக்கும் தமிழ் இணைய ஆர்வலர்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
குறிப்பாக தாயக விடுதலை உணர்வை வெளிப்படத்தும் கவிதைகள் மற்றும் தாயகத்தில் நீங்கள் பர்த்து ரசித்த திரை மற்றும் குறும்படங்களின் விமர்சனங்கள்,மற்றும் புலம் பெயர் தமிழர்கள் பற்றிய ஆக்கங்கள் மறறும் ஈழத்தின் தொன்மைகள் பற்றிய விபரங்கள் நிழற்ப்படங்கள் என உங்கள் உணர்வுகளை என்னோடும் உலகெங்கும் இருக்கும் எமது தமிழ் சமூகத்தேடும் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஆக்கங்கள் யூனிகோட் முறையிலே பதிவாகின்றத நான் மட்டுமல்ல என் சமூகமும் என்னால் பயனடையவேன்டும்
-நேசமுடன் நிதர்சன்-
<span style='font-size:30pt;line-height:100%'>கைகள் கையெழுத்து வைப்பதற்கு மட்டுமல்ல...
வாய்கள் உண்பதற்றும்டுமல்ல</span>
|
|
|
| மலரின்றி மனதோடு ஓர் வசந்தம்..?! |
|
Posted by: kuruvikal - 10-12-2004, 10:31 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (25)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/roserose.jpg' border='0' alt='user posted image'>
அருவியோடு குருவி
கருவி கொண்டு தருவித்தது
ஒரு கானம்
கருமை கொள் மேகம்
ஆனந்தமாய் ஆட்டம் போட
வியர்த்துக் கொட்டியது
பூமி மட்டும் நனைந்து நாணியது...!
கண்டேன் மங்கையவள் அழகு
அவள் பூத்துக்குலுங்கும் பூவல்லே...!
பூமி மகள் அழகு கண்டு
அதிசயக்க
குருவிதன் அன்பு மலர்
மலர்ந்தாள் மனதோடு நினைவாக...!
கோலம் மாறியது
சிந்து பாடிய சிட்டு
முகாரி இசைத்தது
தனிமை தந்த பரிசு கொண்டு....!
கற்பனையும்
மலரின்றி காணாது வளராது
குருவி கண்டது உண்மை
உணர்ந்தது மலரின் அருமை...!
ஆனால் மலரோ
இன்னும் மெளனமாய்...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| தென்செய்தி புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவருகிறது. |
|
Posted by: hari - 10-12-2004, 09:08 AM - Forum: இணையம்
- Replies (2)
|
 |
உலகத் தமிழர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு 19.1.97 அன்று தொடங்கப்பட்ட தென்செய்தி இதழ் 15.08.2002 வரை 6 ஆண்டு காலத்திற்கு மேலாக வெளிவந்து உலகத்தமிழர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது.
தமிழ் நாட்டு இதழ்கள் இருட்டடிப்புச் செய்த தமிழீழச் செய்திகளையும், உலகத்தமிழர் செய்திகளையும் துணிவாக வெளியிட்ட பெருமை தென் செய்தியையே சாரும்.
தமிழ்த்தேசிய இன உணர்வை வளர்த்தெடுப்பதில் தென்செய்தி ஆற்றிய தொண்டு முதன்மையானதாகும்.
சுருங்கக்கூறின் உலகத் தமிழர்களின் கேடயமாக, வாளாகத் தென்செய்தி திகழ்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது.
தமிழ்த்தேசிய உணர்வு வளர்வதைக்கண்டு அஞ்சிய தமிழக அரசு கொடிய பொடாச்சட்டத்தை ஏவி ஆசி ரியர் பழ. நெடுமாறன் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
ஆட்சியாளன் அடக்கு முறை வெறி அத்துடன் ஓயவில்லை. தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர்கள் சுப. வீரபாண்டியன், கா. பரந்தாமன், மற்றும் பாவாணன், சாகுல் அமீது, தாயப்பன் ஆகியோர் மீதும் பொடாக்கணைகள் ஏவப்பட்டன.
இத்தனைக்கும் மேலாகத் தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டது. தென் செய்தி அலுவலகம் முடப்பட்டு முத்திரையிடப்பட்டது.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நிடவடிக்கைகளின் விளைவாக தென்செய்தி இதழ் வெளிவருவது தடைப்பட்டு விட்டது.
17 மாதங்களுக்குப் பின் பிணையில் வெளிவந்த பிறகு தென்செய்தி மீண்டும் எப்போது வரும் என்பதே தமிழர்களின் கேள்வியாக இருந்தது. ஆனாலும் உடனடியாக அவர்களின் விருப்பத்தை நறைவேற்ற முடியவில்லை.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து தென்செய்தி அலுவலகத்தை மீண்டும் திறப்பதற்கான ஆணை பெறுவதற்குச் சிறிது காலமாயிற்று.
எனவே மீண்டும் தென்செய்தி இதழ் 01.10.04 முதல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கண்டு மகிழ்ந்த பல தோழர்கள் தாமாகவே முன் வந்து தென்செய்தியின் புரவலர் களாகவும், ஆண்டு உறுப்பினர்களாகவும் சேர்ந்தார்கள். இன்றும் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி என்றும் உ ரியது.
மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, தென்செய்தியின் பொறுப்பாசி ரியர் பொறுப்பை நிண்பர் பேரா. சுப. வீரபாண்டியன் ஏற்பதற்கு இசைந்துள்ளார்.
திரு பூங்குழலி துணையாசி ரியர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தென் செய்தி இனி அதிகப்பக்கங்களுடனும், சிறப்புக் கட்டுரைகளுடனும் தொடர்ந்து வெளிவரும்.
தமிழ் மக்களின் பேராதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நிம்பிக்கையுடன் தென்செய்தி புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவருகிறது.
இங்கே சொடுக்கவும்
|
|
|
| புதுவை இரத்தினதுரையின் உலைக்களம் புத்தகத்தில் இருந்து... |
|
Posted by: hari - 10-12-2004, 06:21 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<b><span style='font-size:23pt;line-height:100%'>தாயகத்தை காதல் செய்.</b>
[size=14]அட பைத்தியக்காரக் கவிஞனே!
தாயகத்தை எப்படியடா காதலிக்க முடியும்?
பெண்ணை ஆணும்
ஆணைப் பெண்ணுமே ஆராதிக்க முடியும்.
மண்ணுக்கு மாலையிட முடியுமா?
கட்டித்தழுவி முத்தமிட முடியுமா?
தாயகத்தைக் காதலிக்கச் சொல்லும் கவிஞனே!
உனக்குப் புத்தியென்ன பேதலித்து விட்டதா?
உண்மைதான்.
அன்னைபூமி மீது எனக்கு அளவற்ற காதல்.
எப்படியென்று எடுத்துச்சொல்ல முடியாது
அது கற்பனை கடந்தது.
என் தாய்மடி எத்தனை அழகு!
காலை சேலைகட்டி வந்து
பூச்சூடிப் புன்னகைக்கும் போது
காணக் கோடி விழிகள் வேண்டும்.
மாலைவந்து மயக்கும் எழிலில்
என்மனம் வசமிழந்து போகும்.
இங்கு வேர்பிடித்த ஒவ்வொரு புல்லையும்
நான் விரும்புகின்றேன்.
விரிந்து கிடக்கும் பரந்த வயல்வெளிகளையும்
வந்து கரைதழுவி
தாயவள் சேலை நனைத்து விளையாடும்
கடலையும் நான் காதலிக்கின்றேன்.
வாசமற்றதாயினும்
பூவரசம் பூக்களை நான்
பெரிதும் விரும்புகிறேன்.
பனைகளே எனது கற்பனைச் சுனைகள்.
தென் தமிழீழத்தின் திசையை வணங்குவேன்.
மட்டக்களப்பின் மடியில் தவழ்வேன்.
அங்கு
முழு நிலாக் காலத்தில்
களத்து மேட்டில் கேட்கும் பாட்டும்
கும்மியும் குரவையும்
அம்மானையும் வசந்தன் பாட்டும்
எனக்கு இறக்கை கட்டிப் பறக்க வைக்கும்.
முறுக்கேறிய இராவணன் பூமி
திருக்கோணமலை.
அது அழகின் சிகரம்.
நிலத்தின் முலையென நிமிர்ந்த
கோணேசர் மலைக்கு
பின்னரே வெய்யில்
"வாணிஸ்" பூசும்.
தம்பலகாமத்து நெல் வயல்களில்
வெட்டியடுக்கிய சூட்டின் வாசம்
மூக்கு நுனியை முத்தமிடும் போதே
நாக்கில் நீருறும்.
பச்சையரிசிச் சோறு படுருசி.
பன் குளத்துத் தயிருக்கு எது நிகர்?
வன்னி மண்ணுக்கு என்ன குறை?
கொம்புத் தேனும்
பாலைப்பழக் காலத்துப் பன்றிக் கொழுப்பும்
நந்திக்கடலின் நண்டும்
உண்டு மகிழ்ந்;;தவனுக்கே உண்மை தெரியும்.
"வங்கம் மலிகின்றகடல் மாதோட்டம்"
எங்களது என்ற
தேவாரப் பாட்டைச் காதோரம் ஏற்று.
பாலாவியின் கரையில் பாடு;
காற்றில் கலந்து உலகமெங்கும் உலா வரட்டும்.
தாயகத்தைக் காதல் செய் என்றேன்.
நிலத்தைக் காதலிப்பது எப்படியென்று
நீ என்னைக் கேட்கிறாய்.
தமிழனே!
தாய் மடியில் நீ புரண்டெழவில்லை.
அன்னை மண்ணை அன்பு செய்யவில்லை.
தாயகத்தைக் காதலிக்கவில்லை.
அதனாற்தானே...
ஆறுகோடி தமிழர்கள் இருந்தும் உனக்கொரு "தனிவீடு' கிட்டவில்லை.
அகதியாகி
எத்தனை தெருக்களில்
அலைகின்றாய்.
இரவற் திண்ணையிற்தானே
இன்றும் படுக்கின்றாய்.
முக்குச் சீறக்கூடப் பயந்து
பேச்சிழந்து கிடக்கின்றாய்.
பகைவனின் பாதணிகளுக்குக் கூட
பூசை செய்கின்றாய்.
குடங்கிக் குடங்கிக் கூனாகிப்போனாய்.
அட தமிழனே!
தாய் நிலத்தைக் காதல் செய்து பார்
உன் மேனியிலிருந்து பன்னீர் விசுரும்.
நரைத்த மயிர்கூடக் கறுக்கும்.
ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசம்
உன் கண்ணிலிருந்து வீசும்.
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வோரு காலடிக்குள்ளேயும்
நிலம் கசிந்து நீருறும்.
கீரிமலைக் கேணியை
யாரிடமோ கொடுத்துவிட்டு
தாயகத்தைக் காதலிப்பது எப்படியென்று
என்னிடம் கேட்கின்றாய்.
தாயகம் பேசாது.
ஓரக்கண்ணால் வெட்டி உருவேற்றாது.
கடிதம் எழுதாது.
கட்டிய ணைத்து முத்தமிடாது.
இந்த நாங் கும் இல்லையென்றால்
காதலிக்க முடியாதா?
எந்தப் பேயன் சொன்னவன்?
தாயகம் என் தாய்
தாயகம் என் சக்தி
தாயகம் என் மூச்சு.
வேறொருவன் வீட்டில் விருந்தாளியாக
பட்டுவேட்டியுடன் இருப்பதிலும் பார்க்க
சொந்த வீட்டில்
கோவணத்துடன் இருப்பதே சுகம்.
இறந்த பின்னர் என்னை எரிக்கக்கூடாது
ஏன் தெரியுமா?
என் தாயகம்
எரிகாயங்களுக்கு உள்ளாகக் கூடாது.
என்னைப் புதைப்பதையே விரும்புகின்றேன்.
புதைக்கும் போதும் புற்களின் வேரறுந்து போகாமல்
குழிவெட்டுங்கள்
உப்புப் போட்டுப் புதையாதீர்
நிலம் உவராகிவிடும்
மண்போட்டு மூடினால் போதும்.
மழை பெய்ததும்
வேர்கள் துளிர்த்துக்கொள்ளும்.
என் மண்ணில் நிற்கும் போது தான்
எனக்கு இறக்கை முளைக்கிறது
உனக்கும் அப்படித்தான்
உணர்ந்துகொள்.
ஒரு பெண் உன்னையும்
நீ ஒரு பெண்ணையும்
அல்லது
ஒரு ஆண் உன்னையும்
நீ ஒரு ஆணையும்
காதலிப்பது உன் உரிமை.
ஆனால்
மண்ணைக் காதலிப்பதே உன்னதம்.
தமிழனே!
தாயகத்தைக் காதல் செய்....!
<b><i>புதுவை இரத்தினதுரை</b></i></span>
(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)
|
|
|
| தென்னிந்தியக் கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிக |
|
Posted by: Nitharsan - 10-12-2004, 05:28 AM - Forum: புலம்
- Replies (8)
|
 |
அன்புறவுகளே!
ஈழத்தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்கான போரை புறக்கணித்து. தாயகத்தில் துன்பப்படும் உறவுகளைப்பற்றி ஒரு துளியும் சிந்திக்காது தமிழ்பேசி பிழைப்பு நடாத்தும் தென்னிந்திய தொடர் நாடக கலைஞர்கள், ஒரு தமிழ் வசனத்தினுள் மூன்று ஆங்கில வார்த்தைகளை புகுத்தி நகைச்சுவை எனப்பெயர் பெற்றவர்கள் கனடாவில் நடைபெறும் நிகழ்வொன்றுக்கு (கலக்கல்நைற்) ஈழத்தமிழர்களால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி:
[size=18]தென்னிந்தியக்கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிகழ்வுக்கு அழைக்கலாமா?
அப்படி அழைக்கலமென்றால் அவர்கள் சேகரித்த பணத்தில் ஒரு துளி யாவது ஈழத்தமழர்களுக்கு உதவியதாக உங்களால் கூற முடியுமா?இது என்னால் மட்டுமல்ல ஏராளமானவர்களால் முன்வைக்கப்பட்ட ஓர் விடையம் எங்கே வாதாடலாமா? :?: :?:
நேசமுடன் நிதர்சன்
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
|
|
|
| உயிர் காக்க உதவிடுவீர்... |
|
Posted by: Nitharsan - 10-11-2004, 08:07 AM - Forum: புலம்
- Replies (8)
|
 |
[b]<span style='color:red'>உயிர் காக்க உதவிடுவீர்...
<img src='http://www.geocities.com/vannitendral/Picture1.png' border='0' alt='user posted image'>
[size=12]வவுனியா ஆசிகுளம் குக்கிராமத்தைச்சேர்ந்த செல்வி: கயல்விழி இருதயத்தில் ஏற்ப்பட்டுள்ள தூவாரத்திற்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு இரண்டுலட்சத்து இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் தேவைப்படுகின்றது. குறிப்பிட்ட சிறுமியின் பெற்றோர் வறுமை காரணமாக இவ் சத்திர சிகிசிசையை செய்வதற்கான நிதி வசதியற்றவர்களாக இருக்கின்றனர்,எனவே ஓர் ஜீவனுக்கு உயிர் கொடையளிக்க முன்வாருங்கள்
வைப்பக கணக்கிலக்கம்
Bank of cylon
A.Number:-1-095843-0
தொடர்புகளுக்கு
பாஸ்கி-கனடா
(416) 431-2398
நேரடித்தொடர்புகளுக்கு:
இலங்கை
0094242222724</span>
மன்னிக்கவும் தெளிவான படத்தை என்னால் பெற முடியவில்லை.
நேசமுடன் நிதர்சன்
|
|
|
| கனடாவில் இப்படியும் பேசுகிறார்கள் ஐயோ! ஐயோ! |
|
Posted by: paadai - 10-10-2004, 06:10 PM - Forum: புலம்
- Replies (17)
|
 |
ஜேர்மனியில் அகதி அந்தஸ்து அனுமதிக்கபட்டவர்களை மீண்டும் நாடு செல்லவேண்டுமென கடிதங்கள் பரவலாக அனுப்பப்பட்டுகொண்டிருப்பது எல்லாரும் அறிந்ததே
இந்த நடவடிக்கை என்ன காரணத்தால் இடம்பெறுகிறது
என்பதற்கு கனடாவில் ஒரு விளக்கம் புளக்கத்துக்கு வந்திருக்கு.
அதாவது ஜேர்மனியின் வெளிநாட்டமச்சர் கடந்த மாதம் இலங்கை சென்றிருந்தாராம் அங்கே இங்கிருந்து ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் அமைச்சரை வீதியில் கண்டதும் கேட்டாராம் என்னை நீங்கள் மீண்டும் ஜேர்மனிக்குள்வர அனுமதிக்கவேண்டும் என.இதற்கு அமைச்சர் மறுத்து கூற சந்திப்பு வாக்குவாதமாக மாறியதாம்.இதனால் கோபமடைந்த அமைச்சர் ஜேர்மனி மீண்டதும் அனைத்து இலங்கயர்களையும் திருப்பி அனுப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளராம்.
தகவல் தந்தவட்டாரம் மிகநம்பகமானது(கனடாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்)
ஐயோ ஐயோ யாராவது ஜேர்மன் தமிழர்களை கனேடியதமிழர்களிடமிருந்து காப்பாற்றுங்களேன்?
|
|
|
|