Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 289 online users.
» 0 Member(s) | 287 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  கருணாவின் கட்சியில் மட்டு-அம்பாறையைச் சேர்ந்தோர் எவருமில்லை!
Posted by: Sriramanan - 10-16-2004, 08:32 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (12)

விடுதலைப் புலிகளின் தலைமை கருணா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்ட வேளை விடுதலைப் புலிகளின் தலைமை மட்டு-அம்பாறை மாவட்டங்களைப் புறக்கணிப்பதாகவும் முக்கிய பொறுப்புக்களை வடபகுதியினரே வகிப்பதாகவும் என்று பிரதேச வாதத்தை கக்கிய தேசத்துரோகி கருணா தற்போது ஆரம்பித்துள்ள கட்சியில் அவனைத் தவிர மட்டு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தோர் எவருமில்லை. மாறாக வடபகுதியைச் சேர்ந்த தேசத் துரோகிகளும் சமூக விரோதிகளுமே இவனது கட்சியில் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் பொதுச் செயலராக பரந்தனைச் சேர்ந்த ஞானராஜா, சர்வேதேசப் பொறுப்பாளராக ராமராஜ், டென்மார்க் பொறுப்பாளராக திருமலையைச் சேர்ந்த மதிகுமாரதுரை, சுவீடன் பொறுப்பாளராக வடமராட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் மத்தியகுழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். (கட்சியில் இவர்களைத் தவிர வேறு எவருமில்லை)

இதிலிருந்து மட்டு-அம்பாறை மக்களிற்காக கருணா போராடிவரும் இலட்சணத்தைப் புரிஞ்சு கொள்ளலாம்.

Print this item

  ஆனந்த சங்கரியின் ஆலோசனையா? சுய விளம்பரமா? இல்லை கருணா விற்கு
Posted by: Nitharsan - 10-16-2004, 05:44 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (4)

தமிழர் விடுதலைக் மூட்டணியின் தலைவர் என தானே சொல்லிக் கொண்டவரின் கருத்திலிருந்து முக்கியமான சிறு விடையம்:
<img src='http://www.tulf.org/leader1.jpg' border='0' alt='user posted image'>
ஏறத்தாள அரைநூற்றாண்டு காலமாக அரசியலில் இருக்கும் மூத்த அரசியல்வாதி நான். பெரியார் அமரர் சா.Nஐ.வே.செல்வநாயகம் கியு.சி.உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளேன். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் பெரியார் அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் கியு.சி. அவர்களின் இறுதி நாட்களில் அவர்களுடன் சில நாட்களைக் கழித்த பெருமைக்குரிய கடசித் தமிழ் அரசியல்வாதி நானே.ஆகவே குறிப்பாக எமது மக்கள் சம்பந்தமாகவும் பொதுவாக நம்நாடு சம்பந்தமாகவும் உங்களுக்கு ஆலோசனை வழங்கும் உரிமையும் தகுதியும் எனக்கு உண்டு எனக் கருதுகிறேன். சுயநல நோக்கின்றி என்னால் வழங்கப்படும் ஆலோசனையைத் தீவிரமாகப் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.
இது சுயவிளம்பரமா?
உங்களை பற்றி மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து விட்டீர் போல. நீங்கள் சொன்னது எல்லாம் உண்மையே ஆனால் ஆலோசனை வழங்கும் தகுதி உங்களுக்கிருக்கலாம். உரிமையும் கூட இருக்கலாம் அனால் கடந்த பொதுத்தேர்தலை சற்று திரும்பிப் பாருங்கள்....அன்று உங்களுக்கு ஈ.பி.டீ.பி. யும் புலி எதிர்பாளர்களுமே நண்பர்கள் இன்று எதற்காய் இது.........
இது இவருடைய முதலாவது ஆலாசனை:
முதல்கட்டமாக தயவு செய்து கருணா அவர்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்து பெறுமதிமிக்க உயிர்கள் இரு பகுதியிலும் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்

ஏன் கருணா தாணே உங்கள் நண்பராமே உடனே அவரிடம் சொல்லுங்கள் அரசியல் என்ற பெயரிலே அலையாமல் அண்ணணிடம் மண்டியிடும் படி எத்தனையோ பேர் துரோகம் செய்திருக்கலாம். ஆனால் மன்னிக்க முடியாது ஓர் துரோகியாக கருணா வருவதற்க்கு; நீங்களும் ஓர் காரணம் என்றே நாம் எண்ணுகின்றோம். இன்று நீங்கள் இதைச் சொல்லு முன் இந்தப்பிரச்சினை ஆரம்பித்த நாட்களில் தலைவரால் கொடுக்கப்பட்ட பொது மன்னிப்பை கருணா ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டிருக்கலாம் அல்லவா? ஏன் கேட்க வில்லை
கேள்விகள் நிறைய கேட்க முடியும் ஆனால் பதிளலிக்க நீங்கள் முன்வர மாட்டீர்கள். லண்டனில் இருந்து உங்கள் இணையத்தை நடாத்துபவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எமக்கு (தமிழின உணர்வாளர்களுக்கு) .......
உச்சந்தலையிலிருந்து......
உள்ளங்கால் வரை நனகு தெரியும்....

<span style='font-size:30pt;line-height:100%'>நேசமுடன் நிதர்சன்</span>

Print this item

  புலிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் நேற்று சந்திப
Posted by: Vannam - 10-16-2004, 11:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் நேற்று சந்திப்பு
ஜ வவுனியா நிருபர் ஸ ஜ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2004, 6:04 ஈழம் ஸ
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆலோசகர் ஹரீம் பீரிஸிற்கும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று கிளிநொச்சியில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா அரசாங்க அதிபர் கே.கணேஷ், ஹாPம் பீரிஸ் கிளிநொச்சி செல்வதற்கான பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டதோடு அவரும் இணைந்து சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் முக்கிய செய்தியொன்றை அவர் கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதிலும், சந்திப்பு எங்கே நடைபெற்றது. சந்தித்த விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. என்கிறது புதினம. ;

hவவி:ஃஃறறற.நநடயஅpயபந.உழஅஃiனெநஒ.ளாவஅட?னைசிறீ200409160605027431ரூinசிறீ

Print this item

  டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்....
Posted by: கறுணா - 10-15-2004, 10:26 PM - Forum: அறிமுகம் - Replies (66)

டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்....

இதோ அதோ இதோ வந்துவிட்டேன் களுணா சொறி கறுணா.

டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்.... புர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............

Print this item

  பாவம் இவர்கள்
Posted by: Jude - 10-15-2004, 09:47 PM - Forum: புலம் - Replies (8)

நானும் அவர்களும்

நான்: (ஒஸ்லோவில்)
நான்தான்....
விநாயகமூர்த்தி!
பெயருக்கேற்றாற் போல்தான்
கட்டைப் பிரமச்சாரி.
வயது நாற்பதைத் தொட்டாயிற்று
வழுக்கை விழுந்ததுதம் வசதிதான்
வெள்ளி முடிகள் வெளிப்படவில்லை.
ஒற்றை அறை வாழ்வு.
இண்டைக்கும் "ஓவர்ரைம்" தான்
பாரிய சலவைத் தொழிலகம்
முழங்காலும் மூட்டுக்களும் வலிக்கின்றது
இனிப் போய் சமைக்க முடியாது
நல்ல வேளை - குளிர்ப்பெட்டியில்
பலநாளாய் பாதுகாக்கப்பட்ட
பருப்புக்கறியும் கோழிக்கறியும்
பசியாற்றப் பயன்படும்.
அவர்கள்: (கொழும்பில்)
அம்மாவும்
அத்தானை இழந்த அக்காவும்
அவள் பிள்ளைகளும்
தங்கச்சிமார் இருவரும்
எல்லாரும் என்னை நம்பித்தான்
வசதியான வீடு
வாழ்வை மீறிய வசதிகள்
புதிய காலை ஒவ்வொன்றிலும்
புத்தம் புதிதாய்
மரக்கறிகளும் மாமிசமும்
முதல்நாள் மீதமானதை
மறுநாள் உண்ண முடியாதாம்
சமையலுக்கு மாத்திரமல்ல
சலவை செய்திடக்கூட
சம்பளத்திற்கு ஒருத்தி
வந்து வந்து போகின்றாள்
பிகு: நேற்றும்.....
நிமிடங்களைத் தின்னும்
தொலைபேசி அட்டையொன்றோடு சமர்
பகீரதப் பிரயத்தனமாய்
பலமுறை முயன்று
தொடர்பு கிடைத்தபோது
"அண்ணாமலை தொடர் பார்க்கிறம் ராசா
ஆறுதலாய் எடு....."
அவசரமாய்த் தொடர்பைத் துண்டித்தாள் அம்மா!
சோதியா

இந்தக் கவிதை பல வருடங்களுக்கு முன் கனடாவில் ~~மணியண்ணை ரைட்'' புகழ் பாலச்சந்திரன் எடுத்த திரைப்படமான ~~எங்கோ தொலைவில்'' படத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. எனக்கு ஒரு கேள்வி.

ஏன் இவர்கள் தெரிந்தும் அளவுக்கதிகமான வாழ்வுக்கு பணம் அனுப்புகிறார்கள்? எனது குடும்பத்தினரும் அங்கே தான். தேவையான போது, அவர்களது தேவைக்கேற்ற அளவு அனுப்பி, தாம் மிச்சம் பிடிப்பதில் முதலீடுகளை செய்து இவர்கள் தாமும் முன்னேற முடியுமே? யாருக்காவது பதில் தெரியுமா?

Print this item

  கோரிக்கை எதார்த்தமானது அல்ல
Posted by: விது - 10-15-2004, 09:18 PM - Forum: அறிமுகம் - Replies (5)

"கோரிக்கை எதார்த்தமானது அல்ல"
"இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையின் தற்போதைய வடிவம் எதார்த்தமானது அல்ல" - விடுதலைப்புலிகளுக்கு எழுதிய கடிதம் பற்றி
ஆனந்தசங்கரி செவ்வி
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Print this item

  சூசைக்கு இயக்கத்தில் பிரச்சினையா? அது முழுப்பொய் - பாலா
Posted by: Sriramanan - 10-15-2004, 06:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

கடற்புலிகளின் தளபதி கேணல் சூசைக்கும் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு, முரண்பாடு என்றெல்லாம் தென்னிலங்கை ஊட கங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை@ அடிப்படை ஏதும் அற்றவை- என்று புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் உதயனுக்குத் தெரிவித்தார்.
மேற்படி ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து அவரிடம் நேற்றுமுன்னிரவு கேட்டபோது அவர் கூறியதாவது-
சற்றுமுன்னர் கூட தம்பி சூசையுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன். அப்படியேதும் குழப் பமோ, பிரச்சினைகளோ இல்லை - என்றார்.
இந்தியப் படையுடன் வன்னிக்காட்டின் நித் தியகுளம் பகுதியில் இடம்பெற்ற சண்டையில் தற்போது காவல்துறைப் பொறுப்பாளராக இருக் கும் நடேசன் மற்றும் சூசை போன்றோர் காய மடைந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும் - அச்சமயம் சூசையின் தோள்பட்டையில் ரவை
பாய்ந்தது. அது இப்போது அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளது. தோள்பட்டையில் சற்று நோவு. அதனால், அவர் வீட்டில் தங்கியி ருந்து ஓய்வெடுக்கிறார். அவ்வளவுதான். அதை வேறுவிதமாகச் சித்திரித்து தென்னிலங்கை ஊடகங்கள் கதைகட்டி விடுகின்றன. இதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும்படி அவரே என் னிடம் கோரினார். அதையே உங்களுக்குக் கூறு கிறேன் என்றார் மதியுரைஞர் பாலசிங்கம்.

Print this item

  Mikka Nannri
Posted by: Vannam - 10-15-2004, 03:37 PM - Forum: அறிமுகம் - No Replies

அனைத்து நண்பர்களது பதில்களுக்கும். எனது உளப்புூர்வ நன்றிகள். ஏனி நானும் எழுதலாம் அப்படித்தானே? சந்தோசம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  கட்சிக்கு அங்கீகாரம் கருணாவுக்கு சிக்கல்
Posted by: yarl - 10-15-2004, 10:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

அக்டோபர் 15, 2004
thatstamil.com

இலங்கை: கட்சிக்கு அங்கீகாரம் கருணாவுக்கு சிக்கல்

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவின் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் நிலவுவதாக இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறியுள்ளார்.


தற்போது ராணுவ உதவியுடன் தலைமறைவாக இருந்து வரும் கருணா தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

ஆனால், அந்தக் கட்சி இன்னும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.

இது குறித்து கொழும்பில் இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறுகையில்,

தற்போது வட கிழக்கு மாகாணங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல் ஆணைய சட்டப்படி, தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது.

எனவே கருணாவின் புதிய கட்சியும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட கட்சியாக கருணாவின் கட்சி இயங்குவதாக வெளியாகும் செய்திகள் தவறு என்றார் சேனநாயகே.

சேனநாயகேவின் இந்தப் பேட்டியால் கருணா ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் சட்டப்படி, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே இந்த சட்ட சிக்கலிலிருந்து மீண்டு தங்களது கட்சியை பதிவு செய்வது தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Print this item

  புயல்புகுந்த புூக்கள் ஜேர்மனியில் திரையிடப்படுகின்றது
Posted by: Nitharsan - 10-15-2004, 07:33 AM - Forum: சினிமா - Replies (3)

[size=24]புயல் புகுந்த புூக்கள்
தற்பொழுது ஜேர்மனியில் அனைத்து நகரங்களிலும் திரையிடப்படுகின்றது. ஒவ் வொரு உணர்வுள்ள தமிழரும் பார்க்க வேண்டிய தமிழீழக்காவியம்.
ஜேர்மனியில் தமிழ் ஊடகவியளாலர்களுக்கு எதிராக கெடுபிடிகள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில் இப்படம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது

<img src='http://www.tamilnatham.com/advert/puyal20041014/puyal/puyal.jpg' border='0' alt='user posted image'>

நேசமுடன் நிதர்சன்

Print this item