| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 446 online users. » 0 Member(s) | 444 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| வன்னித்தென்றலின் தொலைபேசி மற்றும் தொலைநகல் (Fax) இலக்கங்கள். |
|
Posted by: Nitharsan - 10-15-2004, 04:13 AM - Forum: இணையம்
- No Replies
|
 |
<img src='http://www.geocities.com/vannitendral/vannithendrals-1.JPG' border='0' alt='user posted image'>
வன்னித்தென்றல் இணையத்திற்கான ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன....
வன்னித்தென்றல் இணையத்தின் தக்களது ஆக்கங்களை இணைக்கவிரும்பும் உலகெங்கும் இருக்கும் தமிழ் இணைய ஆர்வலர்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
குறிப்பாக தாயக விடுதலை உணர்வை வெளிப்படத்தும் கவிதைகள் மற்றும் தாயகத்தில் நீங்கள் பர்த்து ரசித்த திரை மற்றும் குறும்படங்களின் விமர்சனங்கள்இமற்றும் புலம் பெயர் தமிழர்கள் பற்றிய ஆக்கங்கள் மறறும் ஈழத்தின் தொன்மைகள் பற்றிய விபரங்கள் நிழற்ப்படங்கள் என உங்கள் உணர்வுகளை என்னோடும் உலகெங்கும் இருக்கும் எமது தமிழ் சமூகத்தேடும் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஆக்கங்கள் யூனிகோட் முறையிலே பதிவாகின்றத நான் மட்டுமல்ல என் சமூகமும் என்னால் பயனடையவேன்டும்
தொலைநகல் மற்றும்
உங்கள் குரல் மூலமான தகவலை எமக்கு அனுப்பி வைக்க: 1-440-445-5672 என்ற இலக்கத்தை அழைத்து இலக்கம் ஒன்றை அழுத்தி உங்கள் தகவலை பதிவு செய்யலாம் அதே நேரம் இலக்கம் இரண்டை அழுத்துவதன் மூலம் தொலைநகல் பிரதியை அனுப்பிவைக்கலாம்.
-நேசமுடன் நிதர்சன்-
[size=18]கைகள் கையெழுத்து வைப்பதற்கு மட்டுமல்ல...
வாய்கள் உண்பதற்றகு மட்டுமல்ல.......
|
|
|
| வார்த்தைகளால் பேசிட.....! |
|
Posted by: tamilini - 10-14-2004, 01:37 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (34)
|
 |
<img src='http://p.webshots.com/ProThumbs/52/30052_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>
வார்த்தைகளால் பேசிட.....!</b>
உனக்கு உறவாகி
உன் கரம் பற்றிய பின்
உலகமே சிறிதாய் எனக்கு...
எட்ட நின்று உன்னை
கடக்கண்ணால் பார்த்த காலம்..
கொஞ்சம் சுகம் தான்...
இன்று கண்ணாக உனை எண்ணி
வாழ்வது அதைவிட சுகம் தான்..!
ஆவலாய் உன்னை பார்க்க வந்து..
உன்னை கண்டபின் பல பொய் சொல்லி..
அப்பப்பா நான் பட்ட பாடு
சொல்லில் அடங்காது...
பாவி நீ என்னை அறிந்தும்..
பாரா முகமாய் நீ இருந்து
எத்தனை நாள் என் மனதிடம்
ரகசியமாய் அடிவாங்கியிருப்பாய்..
காதல் மனம் அன்பினால் திட்டிவிட்டு
அடுத்தகணம் உன்னை
எண்ணி ரசித்திருக்கும்...
மலைபோல் மனங்களில்
காதல் இருந்தும்
அதைவிட மேலாய் அன்பிருந்தும்..
அதை சொல்லிட முடியாமல்
சின்ன மனங்கள் இரண்டும்
பட்ட பாடு கொஞ்சமா...??
காலம் கை கூடி..
காதல் கனிந்து..
இன்று
எனக்கு நீ உனக்கு
நான் என ஆச்சு..
நாணம் விடுத்து வெட்கம் விளக்கி..
நான் உன்னுடன் பேசும்
நாள் இன்னும் வரவில்லை..
இன்னும் உன் முகத்தை ஒரு
முறை என் கண்களால்
பார்த்திட துடிக்கிறேன் முடியவில்லை...
கால்கள் தான் அழகழகான
கோலம் போடுகின்றன....
அதை நீயும் புரிந்து கொள்கிறாய்..
கோலங்களால் பேசியதை
வார்த்தையால் பேசும்
நாளுக்காய் காத்திருக்கிறேன்..!
யாவும் கற்பனை
|
|
|
| குந்த ஒரு குடிநிலம்-புதுவை இரத்தினதுரை |
|
Posted by: hari - 10-14-2004, 06:27 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
<span style='color:red'>குந்த ஒரு குடிநிலம்</span>
[size=14]வெறும் சடப்பொருளான மண்ணுக்காக
எத்தனை சாவுகள்?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு
ஊடகமான மொழிக்காகவா
இத்தனை மரணங்கள்?
இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.
இந்தப் போரினால் இறந்து போனவர்களுக்குள்ளே
எத்தனை 'பாரதிகள்'
எத்தனை "மக்சிம் கார்க்கிகள்"
எத்தனை "டால்ஸ்டாய்கள்"
எத்தனை "மார்கோனிகள்"
இன்னும்
"ஐசாக் நியூட்டங்கள்"
"மேரிகியுரி" அம்மைகள்
எத்தனைபேர் இருந்தார்களே?
அத்தனை பேரும் அழிந்துவிட்டார்களே!
இப்படி மூக்குநீர் சிந்தி
முட்டைக் கண்ணீர் வடிப்போருண்டு.
விரிந்த இந்த உலகமே
மனிதன் வாழ்வதற்காகத்தானே
இதில் தமிழனுக்குத் தனிநாடு வேண்டுமா?
இப்படிக் கேட்போர் இன்றும் இருக்கின்றனர்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு
முந்தோன்றியது தமிழென்றால்
அந்த முதற் தமிழன்
காலெடுத்து நடந்த நிலம் எது?
அவன் மலம் கழித்துவிட்டு கழுவியது எதனால்?
இப்படி அங்கதம் கமழ ஆரவாரிப்போர் உண்டு.
எல்லாவற்றையும் சேர்த்துக் கோர்த்தால்.....
இவர்கள் எழுப்புவதும்
எதிரொலிப்பதும் என்ன?
சரியாக நிலம் வெளிக்காத "இளம்காலைப் பொழுதுகள்'
பகலாகாது: இரவானது கொடுமையாம்.
சரி
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால்..
"உயிர்ப்புடன் பிறந்தவையெல்லாம் போராடுகின்றன"
இந்தத் தத்துவம்
இவர்களுக்கு மட்டும்
புதைந்துபோன செப்பேடுகள் ஆனது ஏன்?
போராட்டம் பூப்பறிக்கும் வேலையென்று
இவர்களுக்கு பாடம் கற்பித்த பரமபிதா எவன்?
குருதி சொரியாது உரிமை பெற்றதுக்கு
ஒரு உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.
"தமிழீழம்"
இவர்களுக்கு கனவாக இருக்கலாம்.
கைகளில் எட்டாத வானமாக இருக்கலாம்.
போராடும் எங்கள் மக்களுக்கு
கையள்ளி மகிழும் காலடி மண்தான்.
விரிந்த காலுடைய "கும்பிடு பூச்சிகளான"
இவர்களுக்கு
ஆபிரிக்கா அத்தை வீடாகவும்
அமெரிக்கா அக்கா வீடாகவும் இருக்கலாம்.
எங்கே இந்தச் சர்வதேச வாதிகள்
அத்தை வீட்டுக்குள்ளே..
அனுமதியின்றி நுழையட்டும் பார்க்கலாம்?
இவர்களுக்கு
உலகம் ஒரே கூரையின் கீழ் உறங்குகிறதாம்
ஆனால்...
கூரை ஒன்றானாலும்
குடியிருப்புகள் வேறு வேறு என்பது
இவர்களின் அகராதியில் மட்டும்
அச்சழிந்து போய்விட்டதா?
"தமிழீழம்" வெறும் மண்ணாகவா
இவர்களின் கண்களுக்குத் தெரிகிறது?
இந்த மண்ணில் தானே
எங்கள் நூறு தலைமுறையே புதைந்து கிடக்கிறது.
மூன்றடி தோண்டினால் போதுமே
நம் முன்னோர்களின் எலும்புக்கூடுகள் தலை நிமிர்த்தும்.
இங்கு வீசும் காற்றும் வெறும் காற்று மட்டும் தானா?
எங்கள் பரம்பரையின் மூச்சும் அதில் கலந்திருப்பது
இவர்களின் சுவாசத்துக்கு ஏன் தெரியவில்லை?
முற்றத்தில் நிற்கும் பலா மரத்தைக் கீறினால்..
வடிவது பால் மட்டும் தானா?
எங்கள் முந்தையரின்
குருதியும் வியர்வையும் கொப்பளிப்பது
இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
எங்கள் கோவில் வீதிகள்
வெறிச்சோடிப்போன வெறும் வெளிமட்டும் தானா?
யார் சொன்னது?
எமது பாட்டன் ராமன் வேடம் தரித்து
மேடையில் நின்றபோது
பாட்டி தன்னை சீதையாக உருவகித்து
மனதுக்குள்ளே..
மாயமான் கேட்டு நின்ற மண்ணல்லவா?
எப்படி எங்கள் தாய் நிலமும்
அரபுப் பாலைவனமும் ஒன்றாக முடியும்?
இவர்களுக்கு எல்லைகள் தொல்லைகளாக இருக்கலாம்
ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றனவே.
கடலுக்கு நிலமும்
நிலத்திற்கு கடலும் எல்லைகள் ஆகும்போது
எங்கள் தாய் நிலத்துக்குமட்டும்
வேலிகள் வேண்டாமா?
வெள்ளிக்கிழமை விரதச் சாப்பட்டின் பின்னர்
சாணிமெழுகிய திண்ணையில்
சரிந்து படுக்கின்ற இன்பம் இருக்கிறதே
இது இங்கன்றி
வேறுஎந்த மண்ணில் ஏற்படும்?
தாய் மடிதானே சந்தோசம்.
அழகில்லை என்பதற்காக
என்னைப் பெற்ற ஆச்சி
எப்படி அடுத்த வீட்டுக் கிழவி ஆகமுடியும்?
அழகானவள் என்பதற்காக
அடுத்த வீட்டுக் கிழவி
என்னைப் பெற்றவள் ஆகமுடியுமா?
ஊத்தை உடுப்பென்றாலும்
ஆச்சியுடன் ஒட்டியிருக்கும் சுகமிருக்கிறதே
அதைவிடச் சுகம் எதுவுமே இல்லை.
"சப்த சமுத்திரங்களு'க்கும் சொந்தம் கொண்டாடும்
சர்வதேச வாதிகளுக்கு
மட்டக்களப்பு வாவியின் மகிமை தெரியாது.
"நைல் நதி தீரமும்" நமதென்று சொல்பவர்களுக்கு
கீரிமலைக் கேணியின்
ஊற்று நீரின் உன்னதங்கள் புரியாது
"அல்ப்ஸ் மலை' அழகுதான்
அதற்காக
கோணமலை கோரமலை ஆகிவிடாது.
எங்களுக்கு..
பாய் விரித்துப் படுத்துறங்கவும்
அச்சமின்றி ஆடிப்பாடவும்
குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
"எல்லைபோட்ட கொல்லை"
இதுதான் எங்கள் குறிக்கோள்!
புதுவை இரத்தினதுரை
ஆவணி 1993
(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)
<img src='http://www.sangam.org/FB_PHOTOJAFFNA2002/01.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| துரோகக் கும்பலின் கட்சி உருவான செய்தி 100 வீதம் உண்மையே |
|
Posted by: Nitharsan - 10-14-2004, 12:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (17)
|
 |
துரோகக் கும்பலின் கட்சி உருவான செய்தி 100 வீதம் உண்மையே ஆனால் அது பதிவு செய்யப்பட்டதா இல்லையா? என்பது பற்றி மிகச்சரியான விபரங்கள் தெரியவில்;லை.அவர்களது இணையத்திற்கு நான் சற்று முன்னர் சென்று பார்த்தேன். அதை விட ஈ.பி.டி.பி சார்பான இணையமும் உறுதி செய்துள்ளது. அவ்விணையத்தின் பெயரை நான் இங்கு தரும் பட்சத்தில் அவர்களுக்கு உதவிய ஒருவனில் நானும் ஒருவரகிவிடுவேன் எனவே இச்செய்தியை உறுதி செய்ய விரும்புவோர் தயவு செய்து என்னுடைய தனிமடல் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
இவர்களுடைய கட்சியின் செயளாலர் வைத்த கையேழுத்தை இங்கே உங்களுக்காய்த்தருகின்றேன்
<img src='http://www.geocities.com/vannitendral/signature.jpg' border='0' alt='user posted image'>
அடுத்து இக்கட்சியின் தலைவரும் தேசத்துரோகியுமான, வி.முரளிதரனினின் கையேழுத்து அவரது அறிக்கைக்கு கீழே இருந்தது
<img src='http://www.tmvp.org/images/sign.jpg' border='0' alt='user posted image'>
[size=18]உண்மையை உண்மையாய் முதலில் தந்த நிதர்சனம்.கொம் முக்கு எனது நன்றிகள்
நேசமுடன் நிதர்சன்
www.vannithendral.tk
|
|
|
| பாழாய் போன பண்ணர்[பண்ணர்[Funner]என்ற வைரஸை வைத்து ஒரு லொள் |
|
Posted by: kavithan - 10-13-2004, 11:50 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/virus_kavi.gif' border='0' alt='user posted image'>
[u]<span style='font-size:25pt;line-height:100%'><b>பாழாய் போன பண்ணர் [Funner வைரஸ்] </b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>பண்ணாக போன எம் நட்பில் [காதலில்]
சொல்லாமல் பண்ணர் புகுந்ததுவோ..?
பல காலம் தொடர்ந்த எம் நட்பில் [காதலில்]
சில நாளில் வந்த விரிசலா..?
கோபத்தின் உச்சியில்
கோரமாக எழுதிய மின்னஞ்சல்
உன் பாசமான இதையத்தை
பாரமாக்கியதா..?
பாரை கொண்டு கிழித்ததுவா?
பாவி நான் செய்த இச்செயலால்
அன்பான உன் பேச்சு அழிந்து விட்டதா..?
அழகான உன் சிரிப்பு அமிழ்ந்து விட்டதா..?
பாசமான உன் பார்வை மறைந்து விட்டதா..?
பழகிய நாட்கள் பல
பலாச்சுளையாக இனிக்கிறது
ஆனால், பாழாய் போன
சில நாட்கள்
பாவற்காயாக கசக்கிறதே..!
பதறி துடித்து நீ அனுப்பிய
பதிலின் பின் தான்
பாதகன் அந்த பண்ணறின்
பண்பற்ற செயல் கண்டேன்.
பாசமான எங்கள் நட்பை[காதலை]
பங்கு போட துணிந்த பண்ணரை
பாடைகட்டி அனுப்பிடவே
பலவாறு முயன்றேன்
பாதகனின் கொட்டம் அடங்கவில்லை
நோற்ரோனின் கண்ணிலும் மண்ணை தூவி
கண்ட கண்ட இடமெல்லாம்
கணனியில் பூந்து விளையாடினான்...
இனியும் பொறுத்தால் போதாது என்று
பொறுமை இழந்த நான்
யன்னலை[இயங்கு தளம்] அழித்து
புது யன்னலை நிறுவி
இன்று புது பொலிவுடன்..
உன் வரவுக்காக..
நம் நட்பின்[காதலின்] தொடர்புக்காக..
காத்திருக்கிறேன்.
</span>
[கொஞ்சம் நியம்.. மிகுதி கற்பனை]
கவிதன்
13/10/2004
4.24 மாலை
|
|
|
| அநியாயத்திற்கு முகம்கொடுக்கும் ஆரணங்குகள்...??! |
|
Posted by: kuruvikal - 10-13-2004, 09:26 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (2)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/sneha400.jpg' border='0' alt='user posted image'>
பெண்கள் பலவீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. இன்றைய பெண்கள் நன்றாகவே மாறிப்போயிருக்கின்றார்கள். ஒரு நாட்டையே ஆளும் வரைக்கும் முன்னேறி இருக்கும் இன்றைய பெண்களிடம், ஆண்கள் வாலாட்ட முடியாது என்று சொல்லும் அளவிற்கு, பெண்கள் பலவழிகளிலும் பலம் வாய்ந்தவர்களாகி வருகின்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இதை எடுத்துக் கொள்ளலாம். எந்தத் துறையையும் விட்டுவைக்காது, இவர்கள் அகலக் கால் பதிக்கும் போக்கு, ஆணுக்கு சரிநிகரான பெண்கள் என்ற நிலையையே கொண்டுவந்து சேர்த்திருக்கின்றது.ஆனால் பெண் என்பவள் பெரிதாக முன்னேறி இருந்தாலும், இவர்கள் பெறும் ஊதியத்தை நோக்கும்போது, இன்றும் இவர்கள் பலவீனமானவர்க்ள என்று பிரிக்கப்பட்டு வருவதையே நம்மால் காணமுடிகின்றது. உலக நாடுகளெங்கும் இதே நிலைதான் தெரிகின்றது. உலகின் மிகப் பிரபல்யமான காலணி உற்பத்தி நிறுவனங்கள், ஆசிய நாடான தாய்லாந்தின் தொழிற்சாலைகளில்தான் தமது உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றன. குறைந்த செலவில் பெரிதாகச் சம்பாதிக்கும் பேராசையில்தான், இவர்கள், இப்படியான உற்பத்திகளை, இந்த நாடுகளின் தொழிற்சாலைகளில் நடாத்தி வருகின்றார்கள்.
4 டாலருக்கும் குறைவான நாளாந்த வேதனந்தான் இந்தப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதே போல மெக்ஸிக்கோ போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், தொழிற்சாலைகளை நிறுவி, அங்கு பெண்களை வேலைக்கு அமர்;த்தி, மிகக் குறைவான சம்பளத்தையே பெரிய நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன.
ஐ.நா. சபையின் அபிவிருத்திப் பிரிவின் ஓர் அறிக்கையின்படி, உலகின் எல்லா நாடுகளிலும், பெண்கள், ஆண்களை விடக் குறைவாகவே சம்பளம் பெற்று வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பளம் குறைவாக இருக்கும் nது நேரத்தில், இவர்கள் தொழிலாற்றும் நேரம் கூடுதலாக இருப்பதையும் இவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இன்னொரு புள்ளி விபரத்தின்படி, உலக நாடுகளில் வாழும் பெண்களில் 70வீதமானவர்கள் வறியவர்களாகவே இருக்கின்றார்கள். இதில் 45 வீதமானவர்கள், தொழில் செய்வோர், பட்டியலில் இணைகிறார்கள்.
<b>தொழில் செய்யும் ஆணை விடப் பெண்ணுக்கு எப்பொழுதுமே, பல சிக்கல்களைச் சந்திக்கும் நிலை வந்து சேர்வதுண்டு.</b> பாலியல் ரீதியான தாக்கங்களில் இருந்து இவள் தப்ப வேண்டி இருக்கின்றது. வேலைக்கு வந்து வீடு போய்ச் சேர்வதற்குள், பல பிரச்சினைகளுக்கு இவள் முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது. கடந்த 10 வருடங்களில், தொழிலுக்குப் போய்வந்து கொண்டிருந்த மெக்ஸிக்கோ பெண்களில் 350 பேர், இதுவரையில் இறந்திருக்கிறார்களாம்.
<b>பிரித்தானியாவில் , சென்ற வருடம் எடுத்த ஆய்வொன்றின்படி, தொழில் செய்கின்ற பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில், சம்பள வித்தியாசம் இருப்பதன் காரணம்,பாலியல் ரீதியாக இயற்கையாக உள்ள வேறுபாடுதானே ஒழிய, பெண் என்று குறைத்து மதிப்பிடுவதால் அல்ல என்று கூறியிருக்கின்றார்கள். உதாரணமாக நிர்வாகப் பணிகளில், பெண்கள் ஈடுபட இடையூறாக இருப்பது, அவர்கள் தாய்மை அடைவதுதான்.
பிள்ளைகளைப் பராமரிக்க இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதாலோ அல்லது , பகுதி நேர வேலை செய்ய அனுமதிப்பதாலோ, நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படலாம் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.</b>
உலகெங்கும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட வண்ணமாகவே இருக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் 6 மில்லியன் பெண்கள்- அதாவது தொழில் செய்யும் வயதை எட்டிப் பிடித்தவர்களில் 20 வீதமான தொகையினர், வெளிநாடுகளில் ஏழு நாட்களும் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இவர்கள் பலவழிகளிலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றார்கள். இந்தியாவின் 90 வீதமான பெண்கள் தெரு வியாபாரிகளாகவும், குடிசைக் கைத்தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், தொழில் செய்கிறார்கள். இவர்கள் சட்டரீதியாக எந்தப் பாதுகாப்பும் பெறாதவர்கள். கொலம்பியாவில், தங்கள் உரிமைகளுக்காக, தொழிற் சங்கங்களில் இணைந்து குரல் கொடுக்கும் பெண்கள் கொல்லப்பட்டு வருகின்றார்கள். இன்று உலகில், இந்த நாட்டில்தான், பெண்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றார்கள்.
வடக்கு மெக்ஸிக்கோவில், சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் பெண்கள் நிலை மோசமாக இருக்கின்றது. இவர்கள் கர்ப்பிணிகளுக்கான மருத்துவப் பரிசோதனைக்கு உடபடுத்தப்படுகின்றார்கள். அது மட்டுமா? கருத்தடுப்பு மாத்திரைகளும் இவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. ஆபிரிக்காவிலோ, வேலை செய்கின்ற வயதில் இருக்கும் பெண்களில் பெருந் தொகையினர், எயிட்ஸின் தாக்கத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அமெரிக்காவிலோ கர்ப்பிணிகளுக்கான மருத்துவ லீவு, மறுக்கப்பட்டு வருகின்றது. சீனாவில் விளையாட்டுப் பொம்மைகள், உடு;ப்புகள், தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதால், உயிரிழக்கும் பெண்கள் ஏராளம்.
வருடாவருடம் 50,000 பெண்கள் வரை, எல்லை வழியாக விபசாரத் தொழிலுக்காக வேற்று நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வருகின்றார்கள்.
இப்படியாகப் பெண் என்பவள் சமூகத்தில் நசுக்கப்படுவது நன்றாகவே தெரிகின்றது. பலவீனமானவள் என்று சொல்லிக் கொண்டு பெண் எனபவள் பல கொடுமைகளை அனுபவிப்பது தொடர்கின்றது. பெண் என்பவள் பெரிய பெரிய பதவிகளில் இருந்து கொண்டு,ஆண் வர்க்கத்தை கட்டியாள்கின்ற தகுதிக்கு வந்து விட்டாள் என்று நாம் திருப்திப்படுவதற்கில்லை. அவள் பலரின் காலடியில் மிதிபட்டபடிதான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இவளுக்கு விடியல் எப்பொழுது வரப்போகின்றது?
Thanks : sooriyan.com
|
|
|
| ஈழத்தமிழர்களைத் தேடி வரும் புதிய தலையிடி...! |
|
Posted by: kuruvikal - 10-13-2004, 08:38 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (6)
|
 |
<b>தமிழ் மக்களை கொல்ல முஸ்லிம் மதத்தவர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும் என்கிறார் ; ரவூப் ஹக்கீம் </b>
முஸ்லிம் மக்களுக்கு ஊர்காவற்படையினர் என்ற போர்வையில் ஆயுதம் வழங்குவதன் மூலமே எல்லைப்புற கிராமங்களில் வாழும் தமிழ் மக்களை கொன்றும் வாழ்விடங்களில் இருந்து விரட்டியும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க அந்த இடங்களில் குடியேற்ற முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கிழக்கு மாகாணத்தில் எல்லைப்புற கிராமங்களில் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பைப் பலப்படுத்தி கிழக்கு மாகானத்தை அரச படைகள் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொன்டு வரவேன்டுமாயின் உடனடியாக முஸ்லிம் மக்களுக்கு 'ஊர்காவற்படையினர்' என்ற போர்வையில் ஆயுதங்கள் வழங்குவதன் மூலமே இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமெனவும் தெரிவித்ததுடன் எல்லைப்புறக் கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக கிறீஸ்தவ மதத்தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு எனக்கூறிகொண்டு அரசிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று தமிழ் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் சூறையாட முஸ்லீம் மதத்தவர்கள் திட்டம் தீட்டுவதாகவும் அரச படைகளிடம் இருந்து ஆயதம் பெறுவதன் மூலம் அவர்களின் கூலிப்படைகளாக தொழிற்பட்டு வருமானத்தைப்பெற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திட்டம் தீட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.
++++++++++++++++++++++++++++++++++++
<b>முஸ்லீம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர் பாதுகாப்பில் தமிழ் தேசவிரோத குழவினர். </b>
மட்டு அம்பாறை மாவட்டங்களின் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் பாதுகாப்பிலேயே தமிழ் தேசவிரோத குழுவினர் தங்கியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தாக்குதல்களை மேற்கொள்வதாக தெரியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் முஸ்லிம் ஊர்காவற்படையினரும் கூட்டாக இத்தகய செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தகய சம்பவங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கொள்ள ஊர்காவற்படையினருக்கு ஆயுதம் வழங்குவதன் மூலமே எல்லைப்புற கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார் என்று <b>ஊடகத்துறை பிரதியமைச்சர் சேகு இஸ்ஸடீன்</b> நிதர்சனத்திற்கு தெரிவித்தார்.
source : nitharsanam.com
|
|
|
|