![]() |
|
சூசைக்கு இயக்கத்தில் பிரச்சினையா? அது முழுப்பொய் - பாலா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சூசைக்கு இயக்கத்தில் பிரச்சினையா? அது முழுப்பொய் - பாலா (/showthread.php?tid=6605) |
சூசைக்கு இயக்கத்தில் - Sriramanan - 10-15-2004 கடற்புலிகளின் தளபதி கேணல் சூசைக்கும் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு, முரண்பாடு என்றெல்லாம் தென்னிலங்கை ஊட கங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை@ அடிப்படை ஏதும் அற்றவை- என்று புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் உதயனுக்குத் தெரிவித்தார். மேற்படி ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து அவரிடம் நேற்றுமுன்னிரவு கேட்டபோது அவர் கூறியதாவது- சற்றுமுன்னர் கூட தம்பி சூசையுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன். அப்படியேதும் குழப் பமோ, பிரச்சினைகளோ இல்லை - என்றார். இந்தியப் படையுடன் வன்னிக்காட்டின் நித் தியகுளம் பகுதியில் இடம்பெற்ற சண்டையில் தற்போது காவல்துறைப் பொறுப்பாளராக இருக் கும் நடேசன் மற்றும் சூசை போன்றோர் காய மடைந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும் - அச்சமயம் சூசையின் தோள்பட்டையில் ரவை பாய்ந்தது. அது இப்போது அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளது. தோள்பட்டையில் சற்று நோவு. அதனால், அவர் வீட்டில் தங்கியி ருந்து ஓய்வெடுக்கிறார். அவ்வளவுதான். அதை வேறுவிதமாகச் சித்திரித்து தென்னிலங்கை ஊடகங்கள் கதைகட்டி விடுகின்றன. இதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும்படி அவரே என் னிடம் கோரினார். அதையே உங்களுக்குக் கூறு கிறேன் என்றார் மதியுரைஞர் பாலசிங்கம். - shanxp - 10-21-2004 வேலையில்லாதவன் வெட்டி பேச்சு பேசுவான் அதுக்கு நாங்கள் காதுகொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறன் sriramanan நன்றி - Sriramanan - 10-21-2004 shanxp நீங்கள் சொல்வது 100 வீதம் சரியே - TMR - 10-21-2004 ºÃ¢Â¡ ¦º¡ýÉ£í¸û ÃÁ½ý shanxp - Jude - 10-31-2004 மாத்தையாவும் கருணாவும் இயக்கத்தில் மேல் நிலை வரை, அதாவது தலைவருக்கு அடுத்த நிலை என்று பேசப்படும் அளவு வரை உய÷ந்து வந்தவ÷கள். தலைவ÷ உட்பட அனைவருமே இவ÷களை சரியாக கணிப்பிட தவறிவிட்டன÷. இவ÷களில் மாத்தையாவை பற்றி பல பிரச்சினைகள், குறிப்பாக நி÷மலா நித்தியானந்தன் விலக்கப்பட்டதற்கு (1986) காரணமான பிரச்சினை, 1993ல் வன்னியில் மாத்தையா பிரிவு, தலைவ÷ பிரிவு என்று கதைப்பவ÷களுக்கு தண்டனை என்று அறிவிக்கும் அளவுக்கான பிரச்சினை என்பன வதந்திகள் என்று ஒதுக்கப்பட்டன. கருணாவை பற்றி பலரும் குறைகள் சொல்லியும் சொல்லப்பயந்தும் இருந்தன÷. சூசை அவ÷களை பற்றிய வதந்தியும் இவ்வாறான ஒன்றாகவே தெரிகிறது. மருத்துவ சிகிச்சைக்காக தத்துவாசிரியரின் கருத்தை உறுதி செய்வது போல் அவ÷ சிங்கப்பூ÷ போய் வந்தது ஏதோ உண்மைதான். ஆனால் தமிழீழ மக்களின் நன்மைக்காக தலைவ÷ இனியும் எவரிடமும் ஏமாறக்கூடாது. ஒரு மாத்தையாவும் இன்னுமொரு கருணாவும் போதும். |