| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 293 online users. » 0 Member(s) | 291 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,486
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| சாட்டியில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய |
|
Posted by: hari - 10-07-2004, 07:29 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
<b>சாட்டியில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய
சுடுமண் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது
பல்கலைக்கழகக் குழுவின் ஆயு;வுமூலம் வரலாற்றுச் சான்றுகள்</b>
சாட்டியில் தொடர்ச்சியாகத் தொல்லியல் அகல் ஆய்வை மேற்கொண்டுவரும் கலாநிதி ப.பு~;பரட்ணம் தலைமையிலான பல்கலைக் கழகத் தொல்லியல் கற்கைநெறி மாணவர்கள் குழு 2000 வருடங்களுக்கு முற்பட்டதென்பதை நிச்சயப்படுத்தக்கூடிய சுடுமண்ணால் செய்யப் பட்ட மிகப்பெரிய கிணறு ஒன்றை 20 அடி ஆழம் கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுக் குழியிலிருந்து மீட்டு எடுத்துள்ளனர். இக்கிணறு மீட்கப்பட்டபோது அதன் வடிவமைப்பையும் தொழில்நுட்பத்திறனையும் நேரில் பார்வையிட்ட அவ்வூர் பொதுமக்கள் இவ்வளவு நாகரிகம் படைத்த மக்கள் முன்னொரு காலத்தில் எமது பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் என்பதை அறியும் போது தமக்குப் பெருமையாகவும், ஆச்சரியமாக வும் இருப்பதாகக் கூறினார்கள்.
இக்கிணறு அமைக்கப்பட்டதன் நோக்கம், அதன் காலம் தொடர்பாகக் கலாநிதி பு~;பரட் ணத்திடம் எமது செய்தியாளர் கேட்டபோது, இக்கிணறு கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மையத்தில்தான் முதன்முதலில் இயற்கையான பாறையில் வட்டமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்ட தாழியடக்க ஈமச் சின்னத்தைக் கண்டுபிடித்தோம். ஆனால், இம் மேடையைச் சுற்றி பரந்த அளவில் செயற்கை யான வடிவம் கொண்ட பாறைத்தொடர்களும், மட்பாண்ட ஓடுகளும் காணப்பட்டதால் கடந்த மூன்று நாள்களாக அவ்விடத்தில் தொடர்ந் தும் அகழ்வை மேற்கொண்டு வந்தோம். அப் போது முன்பு தாழியடக்க ஈமச்சின்னம் காணப் பட்ட மேடைக்கு வடக்கே மிகச்சிறிய இடை வெளியில் இரண்டு அடிவிட்டமுடைய இன்னொரு குழியடக்க ஈமச்சின்னம் இருந்ததைக் கண்டு பிடித்தோம். அக்குழியடக்க ஈமச்சின்னம் (Pit Burial) இயற்கையான பாறையை வெட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் அக்குழி செயற்கை யாக வடிவமைக்கப்பட்ட கற்களைக் கொண்டு வட்டவடிவில் மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்தது. இந்த ஆய்வின் போது ஐந்தடி ஆழத்தில் இரு கற்படுக்கைகளுக்கிடையே பலவகை எலும்புக் கூடுகளையும் மட்பாண்டங் களையும் கண்டுபிடித்திருந்தோம். இதிலிருந்து இவ்விடம் ஒரு குடும்பத்தின் அல்லது குறிப் பிட்ட ஒரு சமூகத்தின் ஈமச்சின்னங்களாக இருந்துள்ளதை உறுதிப்படுத்த முடிகின்றது. இவ்வாறான ஈமச்சின்னங்கள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இங்கிருந்த ஈமச்சின்னத்திற்குக் கீழே இயற்கை மண்ணை அடையாளம் காண் பதற்காகத் தொடர்ந்து அகழ்ந்த போதுதான் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிணறு ஒன்று இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். பொது வாக இற்றைக்கு 2 ஆயிரத்து 800 ஆண்டுக ளுக்கு முன்பிருந்து தென்னிந்தியாவிலும், இலங் கையிலும் வாழ்ந்த பெருங்கற்காலத் திராவிட மக்கள் தாம் வாழ்ந்த மணற்பாங்கான இடங் களில் நீரை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கிணறுகள் மழை, காற்று போன்ற காரணங் களால் து}ர்ந்து போகாதிருக்க அக்கிணறுக ளைச் சுற்றி சுடுமண் வளையங்களைக் கொண்டு அமைத்திருந்திருந்தனர். இதற்கு தமிழகத்தில் வசவ சமுத்திரம், அதிரம்பாக் கம், வடஇலங்கையில் கிராஞ்சி போன்ற இடங் களில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் சிறந்த சான்றுகளாகும். ஆனால், சாட்டியில் ஈமச்சின்னத்திற்குக் கீழே இச்சுடுமண் கிணறு காணப்பட்டமை பெருங்கற்காலப்பண்பாட்டு மக்களது வாழ்க்கை முறைக்கு முரண்பாடா கத் தெரிகின்றது. இதற்கு முன்பொரு காலத் தில் சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்ட கிணறு இருந்த இடம் பின்னர் ஏதோ ஒரு காரணத்தி னால் கைவிடப்பட்டபோது அவ்விடம் பிற் காலத்தில் ஈமச்சின்னங்கள் அமைக்கும் மைய மாக மாறியிருக்க வேண்டும். இதையே சாட்டி அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள் உறுதிப ;படுத்தலாம்.
சாட்டியில் கண்டுபிடித்த சுடுமண் கிணறு ஏறத்தாழ 20 அடி ஆழத்தில் இருந்து மீட்கப் பட்டது. இது ஐந்து சுடுமண் வளையங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட நான்கடி உயரமான கிணறாகும். இச்சுடுமண் வளையங்கள் ஒவ் வொன்றும் ஒன்றரையடி விட்டமும், இரண்டடித் தடிப்பும் ஓர் அடி உயரமும் கொண்டவை. இது போன்ற கிணறு ஒன்றை 1991 ஆம் ஆண்டு பூநகரியில் கிராஞ்சி என்ற இடத்தில் கண்டு பிடித்திருந்தோம். அது காபன்காலக் கணிப்பின் படி இற்றைக்கு 2 ஆயிரத்து 800 ஆண்டுக ளுக்கு முற்பட்டதென உறுதிப்படுத்தப்பட்டிருப் பதால் அதன் காலத்துடன் சாட்டியில் கிடைத்த சுடுமண்கிணற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சாட்டியில் நீரும் சேறும் நிறைந்த பகுதி யில் நான்கு மண்வளையங்களை பல சிரமத் தின் மத்தியில் மீட்டெடுத்த நாம் அடியில் இருந்த இன்னொரு மண்வளையத்தை முழு மையாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது சுற்றிவர இருந்த பாறைகள் இடிந்து வீழ்ந்து, அதில் மூன்று மாணவர்கள் காயமடைந்ததால் எமது இறுதி முயற்சியைத் தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டியேற்பட்டுள்ளது. ஆயினும், ஏனைய இடங்களில் தொடர்ந்தும் அகழ்வாய் வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய் வுகள் நடைபெறும் இடங்களை எமது துணை வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ், கலைப் பீடாதிபதி பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சத் தியசீலன், புவியியல் துறைத்தலைவர் பேரா சிரியர் கா.குகபாலன், பல்கலைக்கழக ஆசிரி யர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் அரச அதிகாரிகள் எனப் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவது ஆய்வாளர்களுக்கு ஆர்வத்தையும், மகிழ்ச்சி யையும் கொடுப்பதாக உள்ளது.
நன்றி உதயன்
|
|
|
| உருவல் |
|
Posted by: cannon - 10-06-2004, 11:49 PM - Forum: உர?வல?ம? ஊட?ர?வல?ம?
- Replies (19)
|
 |
கனேஸ்சு,
கதை தெரியுமோ "ஆடு நனைகின்றதென்று ஓணாய் அழுததாம்", அது மாதிரித்தான் உம் செயலும், எழுத்தும்,....
|
|
|
| 'சும்மா தொந்தரவு பண்ணாதீங்க! |
|
Posted by: சாமி - 10-06-2004, 10:51 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
பொதுவாக கமல் சர்ச்சைகளை தவிர்க்க விரும்புபவர்தான். சந்தேகமில்லை. ஆனால் வீணாக வம்பு வந்தால் என்ன செய்ய முடியும்? அதற்காக இதை தானே வந்த வம்பு வகையில் சேர்க்க முடியுமா தெரியவில்லை. வெளிநாடு சென்று அங்கு மேடை ஒன்றில், ''எல்லாருமாக சேர்ந்து தமிழை சாகடித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதைக் கேவலமாக நினைக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய?'' என்றெல்லாம் பேசியதும் இவரும் அந்த கோஷ்டியில் சேர்ந்துவிட்டாரா என்று வியந்தவர்கள் உண்டு. டாக்டர் ஜயாவும், திருமாவளவனும், சேதுராமனும் இணைந்தது அரசியல் பிழைப்புக்காகத்தான் என்று கமெண்ட் அடித்தவர்கள் கமலின் இந்த பேட்டியைப் பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த செய்தியின் ஈரம் காய்வதற்கு முன்பே இப்படியொரு அறிவிப்பு கமல் தந்த அதிர்ச்சிதான். என் அடுத்தப் படத்திற்கு பாதி தமிழ் பாதி இங்கிலிஷ் பெயர் வைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வக்காலத்தாக 'விமானம் - ப்ளேன்', 'தொலைப்பேசி - ஃபோன்' போன்றவற்றைக் காட்டி இதெல்லாம் தமிழா ஆங்கிலமா என்ற ரேஞ்சில் பேசியிருக்கிறார். ஆக கமல் இப்போது சொல்ல வருவது என்ன என்று கேட்டால், 'சும்மா தொந்தரவு பண்ணாதீங்க! ஏற்கெனவே ரொம்ப குழம்பிப் போயிருக்கேன்' என்பது போல இருக்கிறது.
அம்பலத்தில் இருந்து எடுத்தது
|
|
|
| யூலை 30 ஈழத்தமிழர் தேசிய தினமா? |
|
Posted by: hari - 10-06-2004, 08:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>[size=16]யூலை 30 ஈழத்தமிழர் தேசிய தினமா?</b>
சிவானந்தன்
பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வந்த
ஈழத்தமிழ் மக்களுக்காக சமயம் காக்க பல
சைவ கோயில்கள் உருவாகின. நன்று, சமயம்
ஒருபுறம், மறுபுறம் வியாபாரம், அதில் ஒரு பகுதி
தாயக பணி என விளம்பரம். யாவும் நன்று.
இப்போது சரி உணர்ந்தது நன்று.
எம் தாய் நாட்டில் ஆக்கிரமிப்பாளர் கிருஸ்தவ
ஆலயங்களை நிறுவி, தமிழர்களை மதம்
மாற்றினார்கள். இங்கு பாழடைந்து கைவிடப்பட்ட
கிருஸ்தவ ஆலயங்களில் சைவக் கோயில்கள்
உருவாகின.
கடந்த யூலை 30 பிரித்தானிய வங்கி விடுமுறை
நாளன்று ரூட்டிங் அம்மன் ஒர் ஆன்மீக விழா
என்று தேரேறி வீதி வழி வந்தார். கொறிஞ்
பாக்கில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அங்கு மேடையில் பொன். பாலசுந்தரம்
அவர்கள் அடியார்களுக்கு கூறிய செய்தி
வியப்பானது. அதாவது ரூட்டிங் அம்மன் தேர்
பவனிவரும் யூலை30 நாளை தமிழர் தேசிய
தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலர்
வேண்டுகோள் விட்டதாக அறிவித்தார்.
பிரித்தானியாவில் நின்று தேசிய தினம்
பிரகடனப்படுத்த அனுமதி, தகமை உண்டா
ஐயாவிற்கு! தாயகத்தில் நின்று குரல் கொடுக்க
வேண்டும். ஐயாவின் சேவை நாட்டிற்கு அவசியம்.
பிரித்தானியாவின் பிச்சை சம்பளம் எடுப்பவர்கள்,
இப்பொழுதும் மகாபாரதம் படிக்கிறார்கள்.
எல்லை காக்க ஆள் இல்லையாம். போய்
முதலில் மண்ணை காப்போம்.
எம் மண்ணில் பல ஆலயங்களில் பூசை
இன்றி ஆக்கிரமிப்பு படையினரால் பூட்டப்பட்டு
உள்ளது. தமிழன் மதவழி பாட்டிற்கு சிங்கள
அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
1977ல் கலவரத்தில் ஆடிவேல் ரதம் பம்பலபிட்டி
நடுவீதியில் பலநாள் கிடந்தது. 1981 கலவரத்தில்
மாத்தளை அம்மனின் புதிய 5 தேர்கள்
எரிக்கப்பட்டன. 1986ல் செல்வந் சந்நிதியில்
புதிய பிரமாண்டமான சந்தன கட்டையில் செய்த
தேர் எரிக்கப்பட்டது.
தமிழன் தாயக மண்ணில் எதிரிகளால்
எரிக்கப்பட்ட தேர்களின் வரலாறு தெரியாது புலம்
பெயர் நாடுகளில் ஓடிவந்து தேர் ஓடுகின்றார்கள்.
வீதி பூராக தேங்காய் உடைக்கின்றார்கள். அன்று
தன் தாயக மண்ணில் நிலைநாட்ட வேண்டிய
உரிமைகளை, செய்யத் தவறி இன்று சைவ
மகாநாடு நடத்துகின்றார்கள். தமிழாராய்ச்சி
மாநாடு யாழ்ப்பாணத்தில் 10.1.1974 ல் நடந்த
படுகொலைகளையும் மறந்து, எமக்கு என்று ஓர்
நாடு அமைக்காது அலைகிறான் தமிழன்.
புலம் பெயர் நாட்டிலா தமிழர் தேசிய தினம்?
உதவும் கரமாக தாயக பணிகளையும், ஆன்மீக
பணிகளையும் செய்யுங்கள். சிங்கள அரசுடன்
சுகபோகம் அனுபவித்தவர்களால், செய்யத்
தவறிய கடமைகளை, எம் பிள்ளைகள் உயிர்
கொடுத்து செய்யும் விடுதலை போராட்டத்தை
கொச்சை படுத்த வேண்டாம்.
<b>தமிழர் விடுதலை போராட்டத்தை
உங்கள் சுயநலத்திற்காக
விற்க வேண்டாம்.</b>
நன்றிஒரு பேப்பர்.கொம்
|
|
|
| இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் |
|
Posted by: AJeevan - 10-06-2004, 12:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்</b>
-டொக்டர் ஜெயலத் ஜயவர்தன
<span style='font-size:22pt;line-height:100%'>சுவிசுக்கு வந்திருக்கும் டொக்டர் ஜெயலத் ஜயவர்தன அவர்கள் அகதிகளுக்கான ஐ.நா தலைமைக்கு ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததை ஐ.நா. அகதிகளுக்கான கமிசனர் ஏற்றுக் கொண்டுள்ளார் என பீபீசி சிங்கள சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இன்று (05.10.2004) குறிப்பிட்டார்.
தற்போதைய இலங்கையின் நிலவரங்கள் சுமுகமாக இல்லாத தருணத்தில் இவர்களை திருப்பி அனுப்ப எண்ணியிருப்பது தவறான முடிவாகும் என குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதை அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டு
அதற்கான நடிவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.</span>
|
|
|
| பூக்கள் திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா டென்மார்க்கில்.. |
|
Posted by: AJeevan - 10-05-2004, 07:40 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
[size=15]<b> பூக்கள்
திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா டென்மார்க்கில் இடம்பெற்றுள்ளது </b>
அலைகள் மூவீஸ் தயாரிக்கும், முத்துமாரி அம்மன் கிரியேசன்ஸ் வழங்கும் பூக்கள் திரைப்படத்தின் இனிய பாடல்களின் இசைத்தட்டு வெளியீட்டு விழா ஞாயிறு மாலை 4:00 மணிக்கு டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள லின்ட் பாடசாலையில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
முதல் தடவையாக தமிழக சினிமா பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுடன் இலங்கைத் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்கி இக்காரியத்தை ஐங்கரன் நிறுவனம் செய்திருந்தது. ஐங்கரன் அதிபர் திரு. கருணாமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சுரத்தட்டை வாசிக்க பழக்கிய நோர்வே சுந்தரமூர்த்தி மாஸ்டர், சங்கீதம் கற்பித்த குமுதினி பிரித்திவிராஜ் ஆகியேரையும், பாடிய பாடகர்கள், ஒத்துழைப்பு வழங்கிய கலைஞர்கள் அனைவரையும் வசந்த் வாழ்த்த, பூக்கள் திரைப்படத்தின் நடிகர் சுகேந்திரா வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேற்படி இசைத்தட்டை சங்கீத, வயலின் ஆசிரியை இசைக்கலைமணி திருமதி குமுதா பிரிதிவிராஜன் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். இசைத்தட்டின் முதல் பிரதியை திரு. சு. சுப்பிரமணியம் எடுத்து வழங்க திருமதி. அகிம்சா டக்ளஸ் எழில்வளவன் பெற்றுக் கொண்டு தனது வாழ்த்துரையைத் தெரிவித்தார். அடுத்த பிரதியை திருமதி சாந்தினி உதயச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர் தபேலாக் கலைஞர் திரு. சௌந்தரராகவன், திரு.தே.உதயச்சந்திரன், புகைப்பட, சங்கீதக் கலைஞர் முரளி, கலைஞர் சண், வயன் தமிழ் இலக்கியமன்றத் தலைவர் திரு. தர்மா, சங்கீதபூசணம் அளவையூர் திலகேஸ்வரன், தவில் வித்துவான் சங்கரதாஸ், நடன ஆசிரியை திருமதி. சுமித்திரா சுகேந்திரா, திருமதி மாலா சத்தியமூர்த்தி, பூக்கள் திரைப்படத்திற்கான பிரதான பாடலுக்கு நாட்டிய அமைப்பை மேற்கொண்ட நடனஆசிரியை சசிதேவி சந்திரபாலன், இசையமைப்பாளர் சோன் லுண்ட் உட்பட பல பிரமுகர்கள் நிகழ்வின்போது உரையாற்றினார்கள்.
அவர் உரையாற்றிய பின்னர், இன்று டென்மார்க் லின்ட் நகரில் சாதனை படைத்த கலைஞர்கள் நாளை உலக அரங்கில் சாதனை படைப்பார்கள் என்று பொறிக்கப்பட்ட பரிசை இசையமைப்பாளர் வஸந்திற்கு வழங்கினார். இவருக்கான சிறப்பு இசைப்பரிசை திரு.வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் வாழ்த்திக் கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பூக்கள் திரைப்படத்தின் காட்சிகளின் சில பகுதிகள் அவ்வப்போது காண்பிக்கப்பட்டது. பாடலைப்பாடிய குணலிங்கம், ஸ்ரலின்டோஸ், அர்ச்சனா, ஜனனி, லோகன், துசான், சாந்தினி, தன்யா ஆகிய கலைஞர்கள் தோன்றி தங்களுடைய அனுபவங்களை வெளியிட்டனர்.
நடிகவிநோதன் செ.யோகராஜா, கவிஞர் பொன்னண்ணா உட்பட திரு.செந்தில்குமரன், திரு.செல்வக்கதிரமலை, திரு. தனபால், நடிகர்கள் ராஜராஜன், ரவி, சிறிகாந்த், வள்ளுவன், சிந்துராஜ், மனோகரன், ராணி மனோகரன், திருமதி. பொன்னண்ணா, கண்ணன், டிலா சச்சிதானந்தம், பத்மா ஜெயராஜ், சு.சிறீராஜன், செ. அர்ச்சனா ஆகியோர் கருத்துரைகள் வழங்கினார்கள்.
நிறைவாக இசைப்பாடல்களுக்கு வரிகள் எழுதிய ஆசிரியர் கி.செ.துரையின் நன்றியுரை இடம் பெற்றது. உலகமெல்லாம் பரந்திருக்கும் ஈழத் தமிழன் பூக்களைப் போல உலகமெல்லாம் நிறைந்திருக்கிறான். பூக்களை அழிக்க முடியாது அதுபோல ஈழத்தமிழினத்தையும் அழிக்க முடியாது என்பதே இத்திரைப்படத்தின் கருத்து என்றார்.
இந்த நிகழ்ச்சியை திருவாளர்கள் ஜெயராஜ், ஜெயமுரளிசர்மா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இறுதியில் அனைவருக்கும் நன்றிகூறிய இசையமைப்பாளர் வசந்த், பாராட்டுக்கள் மட்டும் முக்கியமல்ல குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள் திருந்துவதற்குக் காத்திருக்கிறோம் என்று கூறி, தயவு செய்து பாடல்களை கணினியில் பிரதிபண்ணி நமது முயற்சிகளுக்கு சிரமம் தர வேண்டாம் என்று அன்போடும், தன்னடக்கத்துடனும் கேட்டுக் கொண்டார்.
http://www.eelampage.com/index.shtml?id=20...52034097260&in=
Thanks:"Saldhaanj"
|
|
|
| 'சுகம் சுகமே" படப்பிடிப்பிற்காக ஈழத்தமிழ் கலைஞர்கள் பயணம் |
|
Posted by: AJeevan - 10-05-2004, 07:30 PM - Forum: சினிமா
- Replies (4)
|
 |
<b><span style='color:brown'>'சுகம் சுகமே\"
படப்பிடிப்பிற்காக ஈழத்தமிழ் கலைஞர்கள் கனடாவிலிருந்து ஸ்ரீலங்கா, இந்தியா பயணம்</b>
ஜனகன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மற்றுமொரு திரைப்படமான 'சுகம் சுகமே" எனும் ஈழத் தமிழர்களின் திரைக்கதையைக் கொண்ட திரைப்படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்காக, ஒக்டோபர் மாதம் 2ம் திகதி மாலை, ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்திலிருந்து இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டு கலைஞர்கள் புறப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே பல திரைப்படங்கள் ஈழத்தமிழர்களால் தயாரிக்கப்பட்டு கனடிய மண்ணிலும் பல நாடுகளிலும் திரையிடப்பட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. அண்மைக் காலமாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பிற்காக ஈழத்துத் திரைப்படக் கலைஞர்கள் செல்ல ஆரம்பித்துள்ளார்கள். இவ்வருடம் வெளியான 'மெதுவாக உன்னைத்தொட்டு" என்ற 'பரா" தயாரிப்பில் உருவான திரைப்படம் உட்பட சில படங்கள் வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதை-வசனத்தில் உருவாகும் 'சுகம் சுகமே" திரைப்படத்தின் சில படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை இந்திய படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் இக்குழுவில், தயாரிப்பாளர் எஸ்.ஸ்ரீமுருகன், இயக்குனர் ரவி அச்சுதன், டெமிசன் அல்வின் ஆகியோரும் அடங்குகின்றனர். இலங்கையிலுள்ள பல முன்னணிக் கலைஞர்களும், தென்னிந்திய தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரையுலக நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்கவுள்ளார்கள் என்பதோடு பல கனடிய முன்னணிக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளார்கள் என இதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இக்குழுவினர் மீண்டும் கனடா திரும்பிய பின்னர் மேலதிக படப்பிடிப்புக்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடரும் என்றும், வருகிற வருடத்தில் 'சுகம் சுகமே" திரைப்படம் திரைக்கு வரும் என்றும் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஸ்ரீமுருகன் மேலும் தெரிவித்துள்ளார். </span>
http://www.eelampage.com/index.shtml?id=20...051949487259&in
Thanks:"Saldhaanj"
|
|
|
|