| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 310 online users. » 0 Member(s) | 308 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,486
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| மண் கடந்ததும் கண் கெட்டவர்கள் |
|
Posted by: hari - 10-02-2004, 09:51 AM - Forum: புலம்
- Replies (1)
|
 |
எழுதியவர் எழிலன்
Wednesday, 29 September 2004
பல்லாண்டுக்காலமாக ஜெர்மனியில் வாழ்ந்துவிட்டு, இன்று ஜெர்மனியப் பிரஜையாகவே நான் ஆகியிருந்தாலும்கூட, என் நிறமும் என் குணங்களும் என்னை இதயத்துள் அந்நியனாகவே வைத்துக் காட்டுகின்றன.
எனது ஜெர்மன் நண்பர்களும் என்னிடம் எவ்வளவுதான் அந்நியோனியமாகப் பழகினாலும் இந்த அந்நிய மனப்பான்மையின் தாக்கம் நிறையவே உண்டு. தவிர்க்க முடியாத நெருக்கமும் அதே போல தவிர்க்கவே முடியாத தவிர்ப்புமாக அந்நியத்தின் தாக்கத்தை அனுபவிப்பவன் நான்.
இப்படியான சூழ்நிலையிலே, தாய்மொழியைக் கற்றுக் கொள்ளவே கிடைக்காமல் போய்விட்ட சூழ்நிலையிலே வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கு இருக்கிற சிரமங்கள் சொல்லிப் புரியாது.
அவர்கள் எவ்வளவுதான் வந்த நாட்டு மொழியில் தேர்ந்திருந்தாலும் தாய்மொழியின் இனிமையை உணர்ந்து, அதில் இலயித்து, ஏங்குவதை சொல்லிப் புரியாது. நீங்களும் அவ்வாறான குழந்தைகளின் பெற்றோராய் இருந்து, அந்தக் கடுமைமிக்க கொடுமையை அனுபவித்தால் மட்டுமே அது புரியும்.
சட்டங்கள் வழங்கிவிடும் சில உரிமைகள் நமக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனால் அவை செயற்கையானவையே. சட்டம் மாற்றப்பட்டால் அந்த உரிமைகள் காற்றோடு பறந்தும் விடலாம். அவ்வளவுதான்.
இங்கெல்லாம் வசதியான விசா கிடைத்துவிட்டவர்களில் பலரும் அது கிடைக்காத தமது இன மக்களையே இளப்பமாகவும் ஏளனமாகவும் பார்ப்பதும், விசா கிடைக்கும் வரை அப்பாவிபோல இருக்கும் சிலர், அது கிடைத்ததும் தாங்கள் ஏதோ குபேர பரம்பரையினர் போல இராஜநடை போட்டு நடந்து காட்டுவதும் வேடிக்கையான வெளிநாட்டுக் கேவலங்கள்.
நம்மை நாமே மதித்துக் கொள்வதற்கு முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குள்ள முதல் தகுதி மற்றவர்களை மதிக்கும் மனப்பக்குவத்தை அடைந்திருப்பதுதான் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
அயல்நாட்டுக்கு வந்து பாருங்கள். ஒரு நிறுவனத்தில் வேலை செய்கின்ற பலநாட்டு மக்களும் தாம் பொதுவாக சந்தித்துக்கொள்ளும்போது அந்நாட்டு மொழியில்தான் பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் தத்தமது நாட்டு மக்களைச் சந்தித்து விட்டாலோ எவர் இருந்தாலும் சரி, கவலைப்பட மாட்டார்கள். தமது தாய்மொழியிலே மட்டுமேதான் அதுவும் பிறமொழி எதையுமே கலக்காமல் சுத்தமாக அதில் மட்டும்தான் பேசிக் கொள்வார்கள்.
ஆனால் ....
இந்தத் திரைகடல் ஓடித் திரவியம் தேடும் செந்தமிழ்ச் செல்வங்களைப் பாருங்கள். அந்நியர் முன்னிலையில் தமது மொழியில் பேசுவதை ஓர் அவமானம் போல எண்ணிக்கொண்டு, தங்களுக்குள் ஆங்கிலத்திலோ ஜெர்மனிலோ அல்லது பிரெஞ்ச்சிலோ தான் பேசுகிறார்கள்.
மற்ற மொழிக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது நமக்கு அவர்களின் மொழி சரியாகத் தெரிந்திருந்தாலொழிய புரியாது.
இரண்டு தமிழர்கள் பேசிக்கொண்டால் அங்குள்ள அத்தனை நாட்டுக்காரருக்கும் முழுக்கதையும் புரிந்துவிடும். காரணம், இவர்களின் சுயமரியாதையுணர்வு அற்ற மனப்பான்மையால் தங்களுக்குள்ளும் அந்நாட்டு மொழியிலேயே வேண்டுமென்றே பேசிப் போலி கௌரவத்தைத் தேடுவதுதான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை இப்படித்தான் அயல்நாட்டுத் தமிழர்களில் பலரும் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் கௌரவமா அவமானமா தென்படுகின்றது?
இதை, இங்கே செய்தாலென்ன அங்கே செய்தாலென்ன ? எங்கே செய்தாலும் வெட்கத்துக்குரிய செயல்தானே!
என்றைக்கு நாம் நமது மனதில் சுயமரியாதைக்கு முதலிடம் கொடுக்கத் துணிகிறோமோ அப்போதுதான் எந்த வளர்ச்சியிலும் சொந்த வளர்ச்சிக்கான திட்டங்களைத் தேடும் மனப்பான்மை வளர முடியும்.
மிக உயர்ந்த நிலையிலிருந்த தமிழும் தமிழினமும் இன்று தனக்கென்ற ஒரு நாடுதானும் இல்லாதிருப்பதும் எங்கும் தனித்துவத்தை நிலைநிறுத்த இயலாதிருப்பதும் பிறமொழி ஊடுறுவலால் வந்ததென்பதல்ல. பிறமொழிக்குள் நமது கௌரவத்தையும் சுயமரியாதையையும் அடகு வைத்ததால் வந்த பலனேயாகும்.
இன்று தமிழ் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் திரைப்படப் பெயர்களிலும் பாருங்கள். வேண்டுமென்றே கவர்ச்சிக்காக ஆங்கில வார்த்தைகளைத் தேவைக்கதிகமாகப் பாவித்தே தலைப்பிடுகிறார்கள்.
ஆங்கில அல்லது வேறெந்த மொழிப் பத்திரிகைகள், திரைப்படங்களைப் பாருங்கள். தத்தம்மொழியின் மதிப்பைக் குறைக்கும்படியாக அவர்கள் அவ்வாறு செய்வதேயில்லை.
தமிழருக்குள் புகுந்துவிட்ட, தமிழ் தெரிந்த அன்னிய தமிழ் விரோதிகளும் அவர்களுக்குத் துணைபோகும் தமிழ்த் துரோகிகளும் கூடத்தான் பத்திரிகைகளில் தமிழின் தனித்துவத்தைத் திட்டமிட்டுக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ என்றுகூட எண்ண இடமிருக்கின்றது.
தமிழ் படிக்கும் போது தமிழைத்தான் படிக்க வேண்டும். தமிழால் ஆங்கிலம் படிக்குமளவிற்கு ஆங்கிலமோ இதர அன்னிய மொழிகளோ தரம் குறைந்தனவல்ல. ஆங்கிலேயன் தன்மொழியால் தமிழ் படிக்கவில்லை. வேறெந்த மொழியினனும் தன்மொழியால் தமிழ் படிக்கவில்லை.
நாம் மட்டும் ஏன்?
இரவல் கோவணம் மானத்தை மறைத்தால் அது தற்காலிகமே.
கோவணம் பறிபோகும்போது, கூடவே மானமும் போகும். இந்த உணர்வு கேவலமானது. அவமானமானது. வெட்கத்துக்கு உரியது.
மானவுணர்வு நம்மை இனியாவது தூண்டி எழ வைக்காதா? எழுத்தாளர் விரல்களைச் சுட்டு வைக்காதா? நமது கண்கள் திறந்திருக்கின்றன. ஆனால் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். இது சரியல்லவே!.
சொல்வார் சொல்லட்டும்; கேட்பார்க்கு மதி வேண்டும்.
தெருவுக்கொரு மேடை கட்டி, முக்குக்கொரு சங்கம் வைத்து, தாமே தமிழ் வளர்க்கும் மேதாவிகள் என்று பறையடிக்கும் பரிதாபிகள் அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் தங்கள் வளர்ச்சிக்கு ஏற்றபடியாகவே திட்டங்கள் அமைத்து, சட்டங்கள் இயற்றி, சிந்திக்கத் தெரியாத மக்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு, அவர்களைச் சிந்திக்க முடியாதபடி செய்துவைத்துக் கொண்டு, மிகவும் திறமையாக சமுதாயத்தை ஏய்த்துக் கொண்டு வளர்ந்து வருகின்றார்கள்.
மக்களின் மத்தியில் இவர்கள் தாம் திட்டமிட்டபடி, பகைமையையும் வெறுப்புணர்வுகளையும் புரிந்துணர்வின்மையையும் விதைத்துக்கொண்டே, உலகளாவிய சேவையாளர்களாக உலகத்தையே ஏய்த்துவிட முயன்று கொண்டிருக்கின்றார்கள்.
கடல் கடந்து வாழ்பவர்களைக் கடவுளின் பிரதிநிதிகளைப் போல, எண்ணி ஏமாந்து நிற்கும் தாயக மக்களின் அறியாமையின் பலவீனத்தை இவர்கள் மிக நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
வெறும் அரச பிச்சையில் வாழ்பவன்கூட, உயர்ந்த கட்டிடத்தின் முன்நின்று படமெடுத்து அனுப்பிவிட்டு, அக்கட்டிடம் தனது அலுவலகம் என்று நம்ப வைக்கப் பார்க்கிறான்.
நான் தமிழகம் வந்திருந்தபோது, ஒரு ஜெர்மன் மாப்பிள்ளையைப்பற்றி விசாரித்தார்கள். அன்னார் டாக்டருக்குப் படிக்கிறாராமே என்றார்கள். எனக்கு அவரைத் தெரியும். அவர் இங்கேயுள்ள ஒரு உணவகத்தில், ஒரு தட்டுக்கழுவி என்பதும் தெரியும்.
இவர் எப்படி டாக்டராக....? கொஞ்சம் கூட விசாரித்துவிட்டு ஆவன செய்யுங்கள் என்று மட்டுமே சொல்லிவிட்டு வந்தேன்.
இன்னொரு மாப்பிள்ளைக்குப் பெண் பேசப்படும் போது கூறப்பட்ட பட்டம் "மாப்பிள்ளை கார் வைத்திருக்கிறாராம்"
அங்கே கார் ஆடம்பரப் பொருளாயிருக்கலாம். இங்கே அது அத்தியாவசியப் பொருள். அதுவும் எவரும் எப்போதும் எதுவித தடையுமின்றிக் கடனுக்கு வாங்கிவிடக் கூடிய மிகச் சாதாரணமான பொருள். இதை எப்படி உயர்வாகக் காட்டி, இங்குள்ள குப்பைகளுக்கு அங்கெல்லாம் மலர் வளையம் சூட்டுகின்றார்கள் என்பதைப் பாருங்கள்.
பெண் கொடுப்பதும் பெண் எடுப்பதும் வெளிநாட்டில் வாழ்கிற ஒரே தகுதியை மட்டும் வைத்து எடுக்கப்பட்டால், பெரும்பாலும் புதர்கள் பூஞ்சோலைகளாகவும் கருங்கல் வைரமாகவும் கழிநீர் குடிநீராகவுமே காட்டப்படும் என்பதை தயவு செய்து அவதானித்துக் கொள்ளுங்கள்.
பிழைப்புக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட சிலதுகள், இங்கு வந்தபின், பணத்தில் சற்று உயர்வு கிடைத்ததுமே உலகமகா மக்கள் போலவும் தாய்மொழியிலே கற்றறியேன் தமிழறியேன் ஆங்கிலமே நானறிவேன் கால்மேல் கால்போட்டுத்தான் காரியமாற்றுவேன் என்று நம் மக்களிடமே நாக்கூசாது பொய்யுரைத்து பெயர் தேட விழையும் காட்சிகளும்கூட இங்கெல்லாம் சகஜமாகவே இருக்கின்றன.
இவர்களில் எனக்கு வெறுப்பில்லை. ஆனால் இந்தப் போலிகளின் தாக்கத்தால் பல நல்ல உண்மை இதயங்கள் பாதிக்கப்படுவதும் நடக்கின்றதே என்பதைக் காண்கையிலேயே கவலையாகவும் ஆத்திரமாகவும் இருக்கின்றது.
பொய்மையின் பொக்கிஷங்களெல்லாம் புதுவுலகப் பிறவிகளாக வலம் வரும் வெளிநாட்டு வாழ்க்கையில் கவர்ச்சி இருக்கலாம். உண்மையான கௌரவம் இருக்கின்றதா?
வெட்கத்துக்குரிய கௌரவமல்லவா இது!
இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால்-
தமிழ்; வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, வேறு பிறமொழியறியாத போலியர்கள் பலர் பிறர் மொழிகளைப் பழித்துத் தமிழைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில்மட்டும் வீராவேசமாகக் கோஷம் போடுவதும், வெள்ளைக்காரனிடம் கைகட்டி வாய்பொத்தி உதவிக்காக நிற்பதும்தான்.
தமிழ் மக்களிடம் ஒரு விதமாகவும் வெள்ளைக்காரர்களிடம் இன்னொருவிதமாகவும் நடந்து கொள்ளும் இந்த மேதாவிகள் தம்மை விட்டால் யாருமில்லை என்ற மாயையைப் பல இடங்களில் இங்குள்ள சட்டங்களை வைத்தே உருவாக்கிப் பரவ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் இவர்களை அடையாளம் காண்பதில் தவறு செய்தால் சமுதாயத்தை விழுங்கி ஏப்பமிடும் புதியதொரு சமுதாயம் உருவாகிவிடும் ஆபத்து நிறையவே இருக்கிறது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
இங்கே வெளிநாடுகளில் புத்தம்புதுக் காளான்களாகப் பல மதப்பரப்பிகளின் சங்கங்கள் வழிநெடுக கொத்தவால் சாவடிச் சில்லறைக் கடைகளைப் போல நிரம்பி, வழிந்து கிடக்கின்றன.
" நோயா? வைத்தியர் வேண்டாம் நாமிருக்கப் பயமேன்? " என்று இந்தப் பரப்பிகள் பசப்ப, அதை நம்பி ஓடவும், ஓர் ஏமாளிக் கூட்டம் உண்டு.
விசா கிடைப்பதில் பிரச்சினையா? இவர்களுடன் ஒட்டினால் அவர்கள் மேலே கடவுளுடன் பேசி ஆவன செய்து தந்துவிடுவார்கள்.
கடன் தொல்லையா? நேரே அங்கே ஓடுங்கள். ஒரே செபத்தில் எல்லாமே சரிவந்து விடும்.
இப்படியாக வைத்திய மனைகளும் வங்கிகளும் தேவைப்படாத அளவுக்கு பக்தி முற்றி நிற்கும் சபைகள் இங்கெல்லாம் உண்டு. சில நல்ல கள்ளர்கள் இவற்றை நன்கு பயன்படுத்தியும் கொள்கின்றார்கள்.
இன்னொரு புறத்தில்...
இந்தக் கூட்டங்களை எதிர்த்து "நாம் இந்துக்கள் நமது சமயமே உண்மை" அது இது என்று கொதிக்கும் இன்னொரு எதிர்ப்படையும் இருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இந்துமதக் காப்பாளர்கள் நத்தார் பண்டிகைக்காக அரசாங்கம் காசு கொடுக்கும்போது, முன் நின்று கையொப்பம் இட்டு விட்டு, எம்மதமும் சம்மத வாசிகளாக அரச உதவிக் காசைச் சுருட்டிக் கொண்டு நடையைக் கட்டுவதுதான்.
காசுக்கும் உதவிக்கும் மதபேதமில்லை. பணம் பெற்று வந்தபின் திரைமறைவில் மதாதி வீரர்களாக தோற்றம்.
தெய்வ நம்பிக்கைக்கும் இம்மனிதர்களின் செய்கைகளுக்கும் முடிச்சுப் போடப்போனால் எல்லாருமே நாத்திகராகவே மாறிப் போவார்கள். அத்துணை இத்தியாதிகள் இங்கிருக்கிறார்கள்.
கல்வியிலும் சரி, கடவுள் பக்தியிலும் சரி, நிதானமும் பொறுமையும் மதித்தொழுகும் பண்பும் இருந்தாக வேண்டும்.
மனதில் இல்லாத கடவுளை மதத்தில் தேடுவதும், கருத்தே இல்லாத நோக்கத்தோடே கல்வியைத் தேடுவதும், வெறுங் கயிற்றைக் கடலில் வீசி மீன்பிடிக்கும் முயற்சியேயாகும்.
எதிர்பார்ப்பு பிரமாதமானதாயிருக்கலாம். ஆனால் நிறைவேறுமா? அது சாத்தியம்தானா?
நாம், நமது, நமக்கு என்று சில உண்டு. அவற்றை நம்மால் இயன்றளவுக்குப் பின்பற்ற முயல வேண்டும். எங்கு சென்றாலும் எங்கு நின்றாலும் தன்னிலை தவிர்த்துக் காட்டிப் பெருமை தேடல் கூடாது.
நமது தனித்துவத்தில் குறையிருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்வதை விடுத்து தனித்துவத்தையே விடுத்துவிட்டு, அன்னியத்தில் நம்மைப் பிரதிபலிக்க முற்படுவது முகமூடியை முகத்தின் முன் வைத்துக் கொண்டு, நான் வேறு ஆள் என்று அடையாளம் காட்டிக் கொள்ள முற்படும் பலவீனமேயாகும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
மதித்து நடத்தலை விட்டு மதிப்பிறங்கி நடத்தல் நல்லதல்ல. அல்லவா!
(இவ்வாக்கம்: எழிலனின் 'பலவீனப் பவிசுகள்' நூலில் வெளிவரவிருப்பது.)
நன்றி தமிழமுதம்
|
|
|
| உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் |
|
Posted by: hari - 10-02-2004, 07:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
தமிழ்ப் பற்று கொண்ட அனைவரும் அறிந்த பெயர் காசி ஆனந்தன். உணர்ச்சிக் கவிஞர் என்று சி.பா.ஆதித்தனாரால் போற்றப்பட்டவர். பாரதியின் விடுதலை வேட்கையும், பாரதிதாசனின் தமிழ் உணர்வும் இவரது கவிதைகளில் காணலாம். போராட்டமே வாழ்வாகவும் கொண்ட கவிஞர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எழுதிய கவிதைகள் காரணமாக சிங்களச் சிறையில் வாடியவர். பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் இவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது. அப்போது நமது இணைய தளத்தில் அவரது கவிதைகளை வெளியிட அனுமதி அளித்தார். இதோ பாரதியின் உணர்ச்சிப் பெருக்கமும், பாரதிதாசனின் சீற்றமும் கொண்ட காசி ஆனந்தனின் கவிதை, என ஆரம்பிக்கிறார் தட்ஸ்தமிழ் ஆசிரியர் அனுஷிராம்
கவிதைக்கு இங்கே அழுத்தவும்[/url]
|
|
|
| சின்ன சின்ன கவிதைகள்..........! |
|
Posted by: kavithan - 10-02-2004, 07:40 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<b><span style='font-size:30pt;line-height:100%'>பொங்குதல் [கவிதன்]</span>
<span style='font-size:25pt;line-height:100%'>
உழவர்கள் பொங்குவது தைப்பொங்கலில்.
தமிழர்கள் பொங்குவது பொங்குதமிழில்.</span>
[u][b]<span style='font-size:30pt;line-height:100%'>இளைஞ்ஞர் யுவதிகள் [கவிதன்]</span>
<span style='font-size:25pt;line-height:100%'>
எம். எஸ். என் இல் சற் பண்ணுவோம்
எடுயுக்கேசனில் பெயில் பண்ணுவோம்
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்புவோம்
கோப்பி சொப்பில் மீற் பண்ணுவோம்.
நாங்கள் யார்?</span>
[b][u]<span style='font-size:30pt;line-height:100%'>காதல் சாதல் [ஈழத்துபித்தன்-கவிதை தோட்டத்தின் வாசகன்]</span>
<span style='font-size:25pt;line-height:100%'>என்னை மறந்துவிடு
என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டாய்
நானே நீ என்று ஆன பின்
எப்படியெடி என்னை மறப்பது.</span>
[u][b]<span style='font-size:30pt;line-height:100%'>அன்பு [சுயா-கவிதை தோட்டத்தின் வாசகி]</span>
<span style='font-size:25pt;line-height:100%'>முத்துக்கு சிப்பி சொந்தம்
ரோஐக்கு முள்ளு சொந்தம்
அன்னைக்கு பிள்ளை சொந்தம்
எனக்கு ஒன்று சொந்தம்
அதுதான் உங்கள் அன்பு.</span>
[u][b]<span style='font-size:30pt;line-height:100%'>தந்தை யார் என தெரியாத ஒரு சிறுவன்/ சிறுமி </span>
<span style='font-size:25pt;line-height:100%'>
யாருக்கும் கிடைக்காத ஓன்று
எனது அம்மா.
யாருமே அறியாத ஒன்று
எனது அப்பா.</span>
[u]<span style='font-size:30pt;line-height:100%'>[b]காதலித்து திருமணம் செய்வது</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'>தூக்கு கயிற்றுக்கும்
தாலிக் கயிற்றுக்கும்
இடையில் நடக்கும் யுத்தம்</span>
http://www.kavithan.yarl.net
|
|
|
| One dead in Mannar and curfew declared |
|
Posted by: AJeevan - 10-01-2004, 07:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
<b>One dead in Mannar and curfew declared</b>
Curfew was imposed Friday morning in Mannar following a shoot out.
Meera Ismail Saideen, 35, was fatally shot late Thursday in Pesalai, near Mannar town, a police official said.
Angry residents set fire to a LTTE office accusing the Tamil Tigers responsible for the shooting.
Authorities are discussing whether to continue with the curfew.
The Tamil National alliance has accused the police of acting in a partial manner in bringing the situation under control
|
|
|
| ""நான் சினிமாவில் நடித்தேன்; நிஜ வாழ்வில் நடிக்கவில்லை!'' |
|
Posted by: yarl - 10-01-2004, 11:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
""நான் சினிமாவில் நடித்தேன்; நிஜ வாழ்வில் நடிக்கவில்லை!'' * பி.பி.சி.,க்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஜெ., புதுடில்லி: ""நான் சினிமாவில் கேமரா முன் நடித்திருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நடித்ததில்லை,'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
"பிபிசி டிவி' க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனக்கு முற்போக்கு சிந்தனையும் பொறுப்பும் இருக்கிறது. எதையும் வெளிப்படையாகப் பேசுவேன். வழக்கமான அரசியல் வாதிகளைப்போல நான் இல்லாமல் நேர்மையாக இருப்பதால் என்னை தவறாக புரிந்து கொள்கின்றனர். சினிமாவில் கேமரா முன் நடித்திருக்கிறேன். நிஜவாழ்க்கையில் நடித்தது இல்லை. நான் அரசியலுக்கு வந்தது முதல் "மீடியா' க்கள் எனக்கு எதிராகவே செயல்படுகின்றன.
நான் நிஜவாழ்க்கையில் நடித்ததில்லை. எப்போதும் உண்மை பேசவே விரும்புகிறேன். அது முனை மழுங்கியதாக தோன்றினால் அப்படியே இருக்கட்டும். என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர். அதில் "மீடியா'க்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
நான் பொறுப்பற்ற நபர் அல்ல. அப்படி சொன்னால் அது உண்மைக்கு புறம்பானது. என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அதற்கு "மீடியா'க்களே முழுக்காரணம். நான் அரசியலுக்கு வந்த போதிருந்தே அவர்கள் எனக்கு எதிராக செயல்படுகின்றனர். ஆணாதிக்க அரசியலில் நானாக வளர்ந்த பெண் நான். ஆசியாவின் பிற பெண் அரசியல்வாதிகளைப் போல எனக்கு பெரிய பின்னணி எதுவும் கிடையாது. மீடியாக்கள் எனக்கு எதிராக செயல்பட இதுவும் காரணமாக இருக்கலாம்.
ஆண்களை மீறி பெண்கள் அரசியலில் சாதிக்கலாம் என இந்திரா நிருபித்தார். அவருக்கு ஜவஹர்லால் நேருவின் மகள் என்ற பின்பலம் இருந்தது. இலங்கையில் பண்டாரநாயகே பிரதமராக இருந்ததால் அவரது மனைவி ஸ்ரீமாவோ பிரதமராக முடிந்தது. பாகிஸ்தானில் பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ பிரதமராக இருந்தார்.
வங்கதேசத்தில் கலிதாவின் கணவர் ஜியா <உர் ரகுமான் பிரதமராக இருந்தார். ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரகுமான் அந்நாட்டுக்கே விடுதலை பெற்று தந்தவர். எனக்கு அப்படி எந்த பின்னணியும் கிடையாது. அரசியலில் நானாக வளர்ந்தேன். யாரும் தங்க தாம்பாளத்தில் தாங்கி என்னை வளர்க்கவில்லை.
இந்த உலகமே ஒரு நாடக மேடை. எல்லோரும் எப்போதும் அதில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். நான் வெளிப்படையாக இருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் எனக்கில்லை. அந்த வகையில் நான் வழக்கத்திலிருந்து மாறுபட்ட அரசியல்வாதி. ஆனால், அரசியலில் சிறிது நடிப்பு தேவைப்படுகிறது.
பத்திரிகைகளும் "மீடியா' க்களும் பாரபட்சமாக, நீதிக்கு புறம்பாக, அடிப்படை ஆதாரமின்றி என்னைப்பற்றி விமர்சிக்கின்றன. பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை மக்கள் நம்பியிருந்தால் நான் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. நான் இப்போது அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்திருக்க முடியாது. இந்த பேட்டிக்கு ஒப்புக்கொண்டதற்காக வருந்துகிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
கடந்த லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சி ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் போனது. இந்த தேர்தல் முடிவுக்கு வெட்கப்பட வேண்டியதில்லை. எங்களது ஓட்டு வங்கி அப்படியே இருப்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. தனியாக எங்கள் கட்சி ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இது சிறப்பான வெற்றி என்றே கருதுகிறேன்.
அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது நிர்வாகத்தில் எனக்கு இருக்கும் உரிமை. மாநில நலனுக்கு எதைச்செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும். சிலரை பதவியில் நியமிக்கும்போது மாநில நலனுக்கு அவர்கள் உகந்தவர்களாக இல்லையென்றால், நிர்வாகம் சரியில்லை என்றால் அமைச்சர்களை மாற்றித்தானே ஆகவேண்டும். பத்திரிகைகளும், சிலரும் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அமைச்சர்களை மாற்றாமல் இருக்க முடியாது.
பொது இடங்களில் எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களும் என் காலில் விழுவதை மட்டும் பெரிது படுத்துகின்றனர். கருணாநிதி காலடியில் எப்போதும் அவரது கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் விழுந்து கிடக்கின்றனர். அதை நீங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். என் காலில் யாரும் விழுந்தால் ஊதிப்பெரிதாக்குகின்றனர்.
பெரியவர்களில் காலைத்தொட்டு ஆசி பெறுவது இந்திய மரபு. நான் அதை வேண்டாமென்றுதான் சொல்லி இருக்கிறேன். இப்போதெல்லாம் பொது இடங்களில் அப்படி யாரும் செய்வதில்லை. அது நிறுத்தப்பட்டு விட்டது. அதை நான் பகிரங்கமாக கண்டித்து இருக்கிறேன். இனி அப்படி செய்யமாட்டார்கள்.
என்னைப்பற்றி நானே சொன்னால் நான் முற்போக்குவாதி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன். மென்மையான சுபாவம் கொண்ட பொறுப்பான தலைவி. தமிழக வரலாற்றில் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நான் இப்போது உழைப்பதுபோல வேறு யாரும் உழைத்தது கிடையாது என திட்டவட்டமாக கூறுகிறேன்.
நான் ஜோதிடத்தையும், எண் கணிதத்தையும் நம்புகிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது. அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பொதுமக்களும் பத்திரிகைகளும்தான் அப்படி சொல்கின்றனர். ஆங்கிலத்தில் கையெழுத்திடும்போது கடந்த சில ஆண்டுகளாக எனது பெயரில் கூடுதலாக ஒரு எழுத்தை சேர்த்து கையெழுத்திடுகிறேன். அது எனது உரிமை. அதற்கு உங்களிடம் எந்த விளக்கமும் தரவேண்டிய அவசியமில்லை. நான் தற்போது முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே கையெழுத்தை மாற்றி விட்டேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவரது இந்த பேட்டி இன்று இரவு 10 மணிக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கும் "பிபிசி' யில் ஒளிபரப்பாகிறது.
சோனியா வெளிநாட்டவர்; கருத்தில் மாற்றமே இல்லை: ""சோனியா வெளிநாட்டவர் என்ற கருத்தில் எனக்கு எந்த மாற்றமும்இல்லை,'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சோனியா பற்றி ஜெயலலிதா கூறியதாவது:
சோனியாவைப்பற்றி இந்த பேட்டியில் விவாதிக்க விரும்பவில்லை. அவர் வெளிநாட்டவர் என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. சோனியா மட்டுமல்ல, வெளிநாட்டில் பிறந்த யாரும் இந்தியாவில் உயர் பதவிக்கு வரக்கூடாது என்ற கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.
சோனியாவை புகழ்ந்து டில்லியில் நான் எதுவும் கூறவில்லை. அவர் பிரதமர் பதவி ஏற்காதது நல்ல முடிவு என்றுதான் கூறினேன்.
தேர்தல் பிரசாரத்தில் சோனியாவை விமர்சனம் செய்தேன். அது தேர்தலுக்காக நடந்தது. அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதமில்லை. வெளிநாட்டவர் விவகாரத்தில் எனது கருத்து என்ன என்பதை நாடே நன்கறியும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
dinamalar
|
|
|
| இப்படியும் நடக்குது அட கடவுளே!!!! |
|
Posted by: raahul - 10-01-2004, 10:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
இப்படியும் நடக்குது அட கடவுளே!!!!
சந்நியாசியாகின்றார் அமைச்சர் டக்ளஸ்! ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்நியாசியாகின்றாராம்.. புலிகளின் தாக்குதல்களிற்களிற்கு எதிராக தான் ஆயுதம் துக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார். 15வருடங்களாக ஆயுதம் தூக்கி ஒரு புலியைக கூட கொலை செய்ய துணிவற்ற தலைவரும் அவரது கட்சியும் ஊடகவியலாளர்களையும், அப்பாவி மக்களை கொலை செய்வதற்கே தம்வசமுள்ள துப்பாக்கிகளை பாவித்து வந்துள்ளனர். அவற்றையா? இனிமேல் பாவிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அப்படியானால் இனிமேல் வெள்ளைவேட்டியை களைந்துவிட்டு காவி உடுத்து சன்னியாசியாக போகின்றாரா? என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
|
|
| சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005 |
|
Posted by: shanmuhi - 10-01-2004, 08:56 AM - Forum: தமிழும் நயமும்
- Replies (20)
|
 |
சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005
எழுத்தாளப் பெருமக்களுக்கு!
இனிய வணக்கங்களுடன்....
பூவரசு இனிய தமிழ் ஏடு 2005 தைத்திங்கள் முதல் தனது 15வது ஆண்டுக்கான கலை, இலக்கியப்பணியில் அடியெடுத்து வைக்கிறது.
புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துறைக்கு புத்துணர்வூட்டவும், புதிய பல படைப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும், உருவாகிவரும் புதியதலைமுறைக்கு தமிழை அறிமுகம்செய்துவைக்கவும் என்று உருவான பூவரசு, இன்று உலகின் பல தேசங்களிலும் வாழ்கின்ற கலை இலக்கிய ஆர்வலர்களினதும் படைப்பாளர்களினதும் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பணியாற்றும் சிற்றிதழ்களில் ஒன்றாக இது தனது பணியைத் தொடர்ந்த போதும், ஆர்வமிகக்கொண்ட வாசகர்கள் படைப்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களிடமிருந்துவரும் உற்சாக வார்த்தைகளே சாட்சி.
இதுகாலவரை பூவரசால் நடத்தப்பெற்ற இலக்கியப்போட்டிகளில் ஏராளமான படைப்பாளர்கள் பங்குகொண்டு சிறப்பித்திருந்தார்கள். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே பூவரசின் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஒருபோதும் வரையறை செய்யாதபோதும், இதுகாலவரை, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஆனால் இம்முறை பூவரசின் 15வது ஆண்டுக்கான போட்டிகளை அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்மட்டத்தில் நடாத்தலாம் என்று பூவரசு கலை இலக்கியப்பேரவை தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் இப்போட்டிகளில் பங்குகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
இந்துமகேஷ்
(பூவரசு கலை இலக்கியப்பேரவை -ஜெர்மனி, சார்பாக)
பூவரசு கலை இலக்கியப் பேரவை - ஜெர்மனி நடாத்தும்
அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான
சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005
சிறுகதை: நீங்கள் விரும்பிய கருவினைக்கொண்டதாக அமையலாம்.
கட்டுரை: 'மனிதர் மனிதராக...' என்ற தலைப்பில் அமையவேண்டும்.
கவிதை: 'அங்கிங்கெனாதபடி...' என்ற தலைப்பில் அமையவேண்டும்
(மரபுக்கவிதையாக அல்லது புதுக்கவிதையாக அமையலாம்)
பொதுவிதிகள்:
* சிறுகதைகள் சாதாரணத் தாளின் (யு4) அளவில் 5பக்கங்களுக்குள்ளும், கட்டுரைகள் 3 பக்கங்களுக்குள்ளும், கவிதைகள் இரண்டு பக்கங்களுக்குள்ளும் அமையலாம்
* போட்டிகளுக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் இதுவரையில் வேறு எந்தப் பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ பிரசுரமாகாததாகவும், வானொலி, இணையத்தளம் போன்ற ஊடகங்களில் வெளிவராததாகவும், வேறு படைப்புக்களின் தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ இல்லாததாகவும் அமைந்திருக்கவேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும்.
* படைப்பாளர்கள் தமது பெயர்;, முகவரியுடன், போட்டிக்கென அனுப்பப்படும் ஆக்கமானது தனது சொந்தப் படைப்பே என்றும், வேறு எதனதும் மொழிபெயர்ப்போ தழுவலோ இல்லை என்றும், ஏற்கனவே பிரசுரமாகவோ வெளிவரவோ இல்லை என்றும் உறுதிப்படுத்திய கடிதத்தை இணைத்து அனுப்பவேண்டும்.
* பரிசுக்குரிய ஆக்கங்களை பூவரசு கலை இலக்கியப் பேரவையால் நியமிக்கப்படும் நடுவர் குழுவினர் தேர்வு செய்வார்கள்.
* பரிசுக்குரியனவாகத் தேர்வுபெறும் படைப்புக்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும்.
(ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த பிறநாடுகளில் வாழும் படைப்பாளர்கள் பரிசுபெறும் பட்சத்தில் அவர்களுக்குப் பணப்பரிசில் வழங்கப்படும்.)
ஆங்கங்களை அனுப்பவேண்டிய முகவரி:
`Poddikal 2005`
Poovarasu,
Postfach 10 34 01,
28 034 Bremen,
Germany.
மின்னஞ்சல்மூலம் அனுப்புவதாயின்:
Poovarasu_Germany@hotmail.com எனும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்
|
|
|
| நெஞ்சத்தை வருடும் ... |
|
Posted by: Thusi - 09-30-2004, 08:39 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
போ த பீப்பிள் (For the People) என்ற பெயரில் வெளிவந்த மலையாளப் படத்தை போ ஸ்ருடன்ற்ஸ் (Four Students) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அதனால் படத்தினைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. ஆனால் அதிலுள்ள பாடல்கள் நன்றாக இருக்கின்றன.
குறிப்பாக 'லஜ்ஜாவதியே எனை அசத்துற ரதியே' என்று தொடங்கும் பாடல் மனதை வருடிச் செல்கிறது. எமது பால்யப்பருவ ஞாபகங்களை மீண்டும் கொண்டுவருகிறது. கவிஞரின் அனுபவ ரீதியான யதார்த்தமான கவிவரிகளும், இசையமைப்பாளரின் பொருத்தமான இசையும், பாடகரின் வித்தியாசமான குரலும் (இசையமைப்பாளரே பாடியுள்ளார்) நெஞ்சை நிறைக்கின்றன. கவிவரிகள் நாங்கள் சிறுவயதில் செய்த குறும்புகளை மீண்டும் மனக்கண்ணில் கொண்டுவந்து அதனை நினைத்து ஏங்கவைக்கின்றன. ஏன் நாங்கள் வளர்ந்தோம். அப்படியே கள்ளங்கபடமில்லாத மழலைகளாகவே வாழ்ந்து மடிந்திருக்கக்கூடாது என்று எண்ண வைக்கிறது. போலியும் பகட்டும் வஞ்சமும் நிறைந்த இன்றைய நாகரிக உலகில் எங்கும் பிணக்குகள் தான். ஆனால் அந்த மழலைகள் மட்டும் பட்டாம்புூச்சிகளாச் சிறகடிக்கின்றன.
சிறகடிக்க வைத்த பாடலின் இரண்டு சரணங்களையும் தந்திருக்கிறேன். (வழக்கம் போலவே இதிலும் ஆங்கில வார்த்தைகள் கலந்திருக்கின்றன. ஆங்கிலப் பாடல்களை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், தமிழ்ப்பாடல்களில் கலந்துவருகின்ற ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது)
“புூவரசம் இலையிலே பீப்பீ செய்து ஊதினோம்.
பள்ளிக்கூடப் பாடம் மறந்து பட்டாம்புூச்சி தேடினோம்.
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம்.
பனங்காயின் வண்டியில் பசுமாட்டுத் தொழுவத்தைச்
சுற்றி வந்து பம்பாய்க்குப் போனதாகச் சொல்லினோம்
அடடா வசந்தம். அதுதான் வசந்தம்.
மீண்டும் அந்தக் காலம் வந்து
மழலையாக மாற்றுமா?
……..
காவேரி நதியிலே து}ண்டில்கள் போட்டதும்
கண்ணே உந்தன் து}ண்டில் முள்ளில் குட்டித்தவளை விழுந்ததும்
கைக்கொட்டிக் கேலிசெய்த ஞாபகங்கள் மறக்குமா?
கட்டவண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்துவிட்டு ராஜராஜன் என்றதும்
அடடா வசந்தம் அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும்
காதல் மறந்து போகுமா?
உங்களுக்கும் ஞாபகங்கள் இருக்கும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
|
|
|
|