Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 316 online users.
» 0 Member(s) | 313 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,073
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  குடில்களில் கூத்தடிக்க விருப்பமா...?!
Posted by: kuruvikal - 12-09-2004, 02:35 AM - Forum: இணையம் - Replies (3)

<b>குடில்களில் கூத்தடிக்க விருப்பமா...இதே இந்த இணைப்பில் போய் தமிழ் குடில்களில் கூத்தடித்து மகிழுங்கள்...!</b>

http://www.thamizmanam.com/tamilblogs/readers.php

Print this item

  தினேஸ் இராஜரத்தினம்.
Posted by: ஊமை - 12-09-2004, 02:29 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

தினேஸ் இராஜரத்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என புதினம் இனையம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை வேறெந்த இணையமோ அன்றி பத்திரிகைகளோ இதனை வெளியிடவோ உறுதி செய்யவோ இல்லை. இதில் உண்மை எந்தளவில் உள்ளது ?

Print this item

  பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...!
Posted by: kuruvikal - 12-09-2004, 02:14 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (216)

<b>10.</b> காத்திருக்கும் விளையாட்டு: அவளை அழைத்தீர்கள், அவள் இல்லையென்றதால் திரும்ப அழைக்கச் சொல்லி செய்தி அளித்தீர்கள், ஆனால் பதில் வராமல் இருக்கிறது.

எதனால்: அவளுக்கு உங்களைப் பிடிக்கிறது, ஆனால் உங்களைத் தொடர்பு கொள்ள மிகுந்த ஆவலாக இருப்பதைப் போல் அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனவே காத்திருக்கிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: ஓரளவு நேரம் கழிந்த பிறகு மீண்டும் அழைத்து, அவளுக்கு செய்தி கிடைத்ததா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகும் பதில் இல்லையென்றால் புரிந்து கொண்டு விலகி விடுங்கள்.

<b>9.</b> தூண்டில் விளையாட்டு: "நான் இந்த டிரஸ்ல கொஞ்சம் குண்டாத் தெரியறேன்.. இல்லையா?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்கிறாள்.

எதனால்: உங்கள் கருத்து அவளுக்கு முக்கியம் என்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே நேரத்தில் அவளது கருத்தை ஒப்புக் கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்பது போல் கேள்வியை அமைத்து எப்படி பதில் சொல்வது என்று புரியாத சிக்கலில் உங்களை ஆழ்த்தி விடுகிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: கவனமாக இருக்க வேண்டும். தூண்டிலில் அகப்பட்டு விடக் கூடாது. பதில் சொல்ல ரொம்ப யோசிக்கக் கூடாது. "அப்படியெல்லாம் இல்லையே, நீ அழகாத் தான் இருக்கிறே" என்பது போல் பதில் சொல்லுங்கள். உள்ளூர மகிழ்ந்தாலும், "சும்மா பொய் சொல்றே" என்று உங்களை மேலும் டபாய்ப்பாள். உறுதியாக, "நீ எது போட்டாலும் என் கண்ணுக்கு அழகாத்தான் தெரிவே" என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுங்கள்.

<b>8.</b>'எனக்கு அதெல்லாம் தெரியாது' விளையாட்டு: உங்களை ஒரு வேலையைச் செய்ய வைக்க "எனக்கு அதெல்லாம் செய்யத் தெரியாது, நீயே செஞ்சிடேன்" என்று சொல்வாள்.

எதனால்: அவளுக்கு அது தெரிந்து தான் இருக்கும். ஆனால் செய்வதற்குப் பிடிக்காமலோ அல்லது சோம்பேறித்தனத்தினாலேயோ அப்படிச் சொல்வாள். உதாரணமாக வீட்டு கணினியில் ஒரு புதிய மென்பொருளை நிறுவுவது.

நீங்கள் செய்ய வேண்டியது: ரொம்பப் பெரிய வேலைகளாக இருக்காது என்பதால் ரொம்ப முணுமுணுக்காமல் நீங்களே செய்து விடுவது நலம். இருந்தாலும் செய்யும் போது அவளை அழைத்து வைத்துக் கொண்டு கற்றுத் தர முயற்சிக்கலாம். அடுத்த தடவையாவது தப்பிக்கப் பார்க்கலாம்.

<b>7.</b> 'கேட்பது கிடைக்காது' விளையாட்டு: நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ (வேறு எது, எல்லாம் அது தான்), அது கிடைக்காதபடிக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருப்பாள்.

எதனால்: தன்னை உங்களுக்கு ஒரு சவாலாக முன்னிறுத்துவது மட்டும் அவளது நோக்கமாக இருக்காது. நீங்கள் அவளுக்காக எவ்வளவு தூரம் மெனக்கெடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது: அவளுக்காக இயன்றதைச் செய்யுங்கள். செய்ய இயலுபவற்றைப் பற்றிச் சொல்லுங்கள். வார்த்தைகளை விட காரியம் அதிகம் "பேசும்" என்பதை நினைவில் கொள்ளவும்.

<b>6.</b> 'ஒரு முக்கியமான விஷயம் பேசணும்' விளையாட்டு: நீங்கள் உங்களுக்கு மிகப் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டை டி.வி.யில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, "உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று வந்து நிற்பாள்.

எதனால்: உங்களுக்கு அவளா, விளையாட்டா, எது முக்கியம் என்று சோதனை செய்கிறாள். அவளுக்கு எந்த வித சூழ்நிலையிலும் உங்களுடைய முழு கவனம் கிடைக்கிறதா என்று சோதிக்கிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: ம்யூட் பட்டனை ஐந்து நிமிடம் அழுத்தி விட்டு ஒழுங்கு மரியாதையாக அவள் சொல்வதைக் கேளுங்கள். மாறாக, "அப்புறம் பேசலாமே" என்றெல்லாம் ஜல்லியடிக்க நினைத்தால் டி.வி.யை முழுவதுமாக அணைத்து விடவும். அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு உங்களுக்கு திட்டு விழப் போகிறதே, கேட்க வேண்டாமா?

<b>5.</b> 'சேவைகளுக்கு விலையாக பொருட்கள்' விளையாட்டு: அவளுக்குப் பிடிக்காத சில சேவைகள் அவளிடமிருந்து எதிர்பார்க்கப்படும்போது ஏதாவது பொருள் வேண்டுமென்று கேட்பாள். "ஊர்ல இருந்து எங்கம்மா கண் ஆப்பரே்ஷன் செஞ்சுக்க வர்றாங்க" என்று நீங்கள் சொல்லும் போதே இதை எதிர்பார்க்கத் துவங்கி விடலாம்.

எதனால்: இதற்கெல்லாம் 'எதனால்' சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இது பெண்களுக்கு மட்டும் உரியதல்ல, மனித சுபாவம்.

நீங்கள் செய்ய வேண்டியது: 'காரியம் ஆகவேண்டுமானால் கழுதையின் காலைக் கூடப் பிடித்துத் தான் ஆக வேண்டும்' என்பது தமிழ்ச் சமுதாய ஆன்றோரின் முதுமொழி. அவ்வப்போது இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் இதை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தி விடாமல் இருப்பது உங்கள் சாமர்த்தியம்.

<b>4.</b> எதிர்மறை உளவியல் விளையாட்டு: அவளுக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லாமல், அதற்கு நேரெதிராக ஒன்றைச் சொல்வாள். அப்புறம் நாம் அதைச் செய்யாமல் விட்டதற்குக் கோபித்துக் கொள்வாள். உதாரணமாக, 'வீட்டை இன்னிக்கு நான் சுத்தம் செஞ்சுடறேன்" என்று சொல்வாள். இதன் அர்த்தம், 'நீ சுத்தம் செஞ்சுடு' என்பது ஆகும். அது புரியாமல் நாம் ஹாயாக பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தால், 'ஏன் வீட்டை சுத்தம் செய்யலை?' என்று திட்டு விழும். குழப்பமாக இருக்கிறதா? என்ன செய்வது, ஆண்டவன் அப்படித்தான் படைத்துத் தொலைத்திருக்கிறான்.

எதனால்: இது எதனால என்று அறியப்படவில்லை. It is a given.

நீங்கள் செய்ய வேண்டியது: அவள் எதிர்மறை உளவியல் விளையாட்டை விளையாடினால் அநேகமாக நீங்கள் தோற்றுப் போவீர்கள். நீங்கள் செய்யாமல் விட்ட வீடு சுத்தம் செய்யும் காரியத்தை அவள் எந்த அளவு முணுமுணுப்புடன் செய்து முடிக்கிறாள் என்பதைக் கவனித்து, ஒத்தாசைக்குப் போங்கள். வேறொன்றும் செய்வதற்கில்லை.

<b>3.</b> 'மனசில் இருப்பதைக் கண்டுபிடி' விளையாட்டு: இது எதிர்மறை உளவியல் விளையாட்டைப் போன்ற மற்றொரு வடிவம்.அவள் மனசில் இருப்பதை அவள் சொல்லாமல் கண்டுபிடிக்குமாறு கேட்பாள்.

எதனால்: அவளை நீங்கள் உண்மையாக நேசித்தால் அவள் மனசில் இருப்பதெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பது அவளது எதிர்பார்ப்புக்கான லாஜிக். என்ன எழவு லாஜிக்கோ!

நீங்கள் செய்ய வேண்டியது: இதுவா, அதுவா என்று இஷ்டத்துக்கு எதையாவது சொல்ல ஆரம்பிக்கும் முன், ஓரளவு, "என்னம்மா வேணும், உன்னை சந்தோஷமா வச்சுக்கறது தானே எனக்கு எப்பவும் முதல் கடமை" என்று கொஞ்சம் தாஜா செய்து வைப்பது உதவும்.

<b>2.</b> மௌன விளையாட்டு: நீங்கள் ஏதோ தப்பு செய்து விட்டதால் உங்களைக் கண்டுகொள்ளாமல், உங்களோடு பேசாமல், கோபத்தால் மௌனமாக இருப்பாள். மௌனமாக இருப்பதால் என்ன தப்பு என்று உங்களுக்கு விளங்காது.

எதனால்: கோபத்தை வெளிப்படுத்துகிறாள். அது உங்களை காயப்படுத்துகிறதா என்றும் பரிசோதிக்கிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: 'ஏன் இப்படி கோபத்தில் இருக்கிறாய்?" என்று திருப்பித் திருப்பி மட்டும் கேட்டுத் தொலைக்காதீர்கள். இரண்டொரு முறை கேட்டு பதில் வரவில்லையா, முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஒதுங்கி விடுங்கள். கோபம் கொஞ்சம் குறைந்து நிதானம் அடைந்து, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரத்துவங்கும் போதோ, அல்லது அவள் உங்கள் மேல் தலையணையை எறிய ஆரம்பிக்கும் போதோ, அப்போது தான் நீங்கள் உள்ளே நுழைய ஏற்ற தருணம். போய் அணைத்துக் கொண்டு அப்புறம் விசாரணையில் ஈடுபட்டு, தருகின்ற தண்டனையை அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

<b>1.</b> 'இறுதி எச்சரிக்கை' விளையாட்டு: "தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி என் கைக்கு அந்தப் பட்டுப் புடவை வரலை, அவ்வளவு தான்" என்பது போன்ற மிரட்டல்கள் இந்த வகையின் கீழ் அடங்கும்.

எதனால்: மிரட்டல் உண்மையாவதற்கும் பிசுபிசுத்துப் போவதற்கும் இணையான வாய்ப்புகள் உண்டு. வெற்று மிரட்டல்கள் அவ்வப்போது கொடுத்து உங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஒரு மாஸ்டர் ப்ளானின் ஒரு பகுதி.

நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு என்ன செய்ய வேண்டுமென்பது அவரவர் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மேல்Kind குழுமம் ஓரளவுக்குத் தான் உங்களின் சொந்த விவகாரத்தில் தலையிட முடியுமென்று ரீஜன்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி... http://malekind.blogspot.com/ (தகவல் : சென்னைத் தமிழில் இருக்கிறது)

Print this item

  Windows
Posted by: Vaanampaadi - 12-08-2004, 08:37 PM - Forum: நகைச்சுவை - Replies (1)

<img src='http://img84.exs.cx/img84/6817/cbkbillgates27un.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  மலரும் மங்கையும்
Posted by: kuruvikal - 12-08-2004, 04:56 PM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

<img src='http://kuruvikal.yarl.net/archives/gopikaw-515.jpg' border='0' alt='user posted image'>

<b>கதிரவனின்
பொற்கரங்கள் தீண்ட
மலர்ந்து
காதல் வயமான மலர்களே...
வண்டுகள்
அழைப்பதும் தான் ஏன்...???!
முதல் காதலன் விட்டு
காதலின் பெயரால்
சல்லாபிக்கவா...??!
ஓஓ.....
அதுதான் மனிதப் பெண்டிரும்
மலர்கள் ஆகினரோ....!
அட கம்பா...
நீ கில்லாடி
உவமை காட்டி
உண்மை செப்பினாய்....!
நாம் தான்
புரிதலின்றி
கடலாம் ஆழமாம் என்று
பிதட்டியபடி
புரிதலில்லா மூடராய்...!</b>

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  halloooooo
Posted by: simran2005 - 12-08-2004, 04:10 PM - Forum: அறிமுகம் - Replies (27)

வணக்கம் நான் சிம்மாறான்
வந்துள்ளேனுங்க வரவேப்பிர்களா
யாழ்கழ உறவினர்களே

Print this item

  Farty time
Posted by: Double - 12-08-2004, 03:16 PM - Forum: நகைச்சுவை - Replies (11)

<img src='http://www.crazylanka.com/ranilcbk1.jpg' border='0' alt='user posted image'> [size=9]Thanks to crazylanka.com

Print this item

  கணணிகளை மூளையும் இயக்கும்
Posted by: kuruvikal - 12-08-2004, 12:38 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (3)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40604000/jpg/_40604755_brain_cursor203b.jpg' border='0' alt='user posted image'>

பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்ட கேசர் அசைவுகள்...நீலம் குறிப்பது வேகம் குறைந்த அசைவுகளையும் சிவப்பு குறிப்பது அதிவேக அசைவுகளையும்...!(இமேஸ் பிபிசி.கொம்)

மூளையில் இருந்து எழும் சிந்தனைக்கு ஏற்ப நிகழும் மின்னிரசாயனம் மாற்றங்களின் அடிப்படையில் கணணிகளை இயக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்...!

குரங்குகளின் மூளையுள் சத்திரசிகிச்சை மூலம் பதிக்கப்பட்ட மின்முனைகள் (Electrodes) பெறும் மின் அழுத்த வேறுபாடுகளுக்கு ஏற்ப கணணியில் கேசர்களை (cursor) இயக்க முடிந்ததை அடிப்படையாகக் கொண்டு 64 மின்முனைவுகள் கொண்டமைக்கப்பட விசேட தலைக்கவசத்தை அணிந்த இரண்டு சாதாரண நபர்களினும் இரண்டு பகுதியாக மூளைத் தொழிற்பாடு செயலிழந்தவர்களிலும் இப்பரிசோதனை செய்யப்பட்ட போது அவர்களால் இரு பரிமாமன கேசர் அசைவுகளை துல்லியமாக செய்ய முடிந்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது....! குறிப்பாக பகுதி மூளைத் தொழிற்பாடுழந்தவர்கள் அதிகம் கணணியில் கேசர்களை இயக்கி உள்ளமையானது...எதிர்காலத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படும் வெளி உறுப்புக்களை (கை கால் போன்றவை) இயக்க வசதி செய்ய இவ்வாராய்ச்சி அதிகம் பலனளிக்கும் என்றும் ஆனால் முப்பரிமான அசைவுகள் இன்னும் சாத்தியமாகவில்லை என்றும் தெரிவிக்கிறது அவ்வாய்வறிக்கை....!

இங்கு சிந்தனைக்கு ஏற்ப மூளையில் நிகழும் மின்னிரசாயன மாற்றங்கள் மூலம் பெறப்படும் மின்னிலை மாற்றம் மின்முனைகளால் உணரப்பட்டு நுட்பமான சிக்கல் மிக்க பகுப்பாய்வு (Complex algorithms) மின்சுற்றுக்களால் அவை கணணியை இயக்கும் மின்னலைகளாக மாற்றம் செய்யப்படுவதாக எளிய முறையில் இவ்வாராய்ச்சியின் அடிப்படையை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்...!

மேலதிக தகவலுக்கு...

Print this item

  தடங்கல்
Posted by: yarlmohan - 12-08-2004, 12:22 PM - Forum: களம் பற்றி - Replies (12)

நாளை 09ம்திகதி மாலை 9:00மணிக்கும் நள்ளிரவு 12:00 மணிக்கும் (Eastern Standard Time) யாழ்தளத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இக்காலப்பகுதியில் server update செய்யப்படவிருப்பதாலேயே இத்தடங்கல் ஏற்படவுள்ளது.

Print this item

  ஈராக் தீவிரவாதிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர் விடுதலை
Posted by: MEERA - 12-07-2004, 09:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

ஈராக் தீவிரவாதிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர் விடுதலை
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2004, 22:09 ஈழம் ஸ
ஈராக் தீவிரவாதிகளினால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான தினேஸ் தர்மேந்திரா ராஜரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வத்தளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இவர் குவைத்திலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் சாரதியாகப் பணியாற்றி வந்த சமயம் தொழில் நிமித்தம் ஈரானுக்கு சென்ற போது பிடிக்கப்பட்டார்.

இவர் இன்று விடுதலையானதை குவைத்திலுள்ள இலங்கைக்கான தூதுவர் அகமது இர்சாத் உறுதிப்படுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார

நன்றி - புதினம்.

Print this item