| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 315 online users. » 0 Member(s) | 312 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,073
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| உயி÷ பல்வகைமை |
|
Posted by: KULAKADDAN - 12-09-2004, 11:59 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (9)
|
 |
உயி÷ பல்வகைமை எனபடுவது ஒரு வரையறுக்கபட்ட பிரதேசத்தில் காணப்படும் தாவர,விலங்குகள், மற்றும் உயிரிகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்
சூழலில் காணப்படும் ஒவ்வொரு அங்கியும் உயிா் வலையமைப்பின் ஒரு அங்கமாகும். பூமியில் காணப்படும் ஒவ்வொரு தாவர இனமும் உயிா் வாழ்கை சக்கரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறன. உயி÷ பல்வகைமையை பெணுவது உயிா் வலையமைப்பை பாதுகாப்பதற்கு அத்தியாவசியமாகும்
புதிதாக அறியபடும் இனங்களிலும் அழிக்கப்படும் உயிாிகள் அதிகம்
தொடரும் ....... :roll:
|
|
|
| இது உதயன் பத்திரிகையின் செய்தி |
|
Posted by: ஊமை - 12-09-2004, 08:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட
தினே~; தர்மேந்திரா விடுதலையா?
உறுதிப்படுத்த முடியவில்லையாம்!
ஈராக்கில் முஸ்லிம் தீவரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான தினே~; தர்மேந்திரா ராஜரட்ணம் விடுவிக்கப் பட்டுவிட்டார் எனச் செய்திகள் வெளிவந்த போதும் அதனை ஊர்ஜிதப்படுத்த முடியா திருப்பதாக கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.
ஈராக் தீவிரவாதிகளினால் தடுத்து வைக் கப்பட்டிருந்தவர்களில் ஒரு குழுவினர் விடுதலை செய்யபட்டுள்ளனர் எனவும்ää அவர்களில் இலங் கையரான தினே~; தர்மேந்திரா உள்ளாரா என்பது பற்றி அறிய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருவதாகவும் அமைச்சின் ஊட கப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளைää இலங்கையரின் விடுதலை குறித்து உறுதியான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தொடர்புகளைத் தாங்கள் ஏற்படுத்தியுள்ளனர் எனக் குவைத்திலுள்ள இலங்கைத் தூதுவர் அஹமட் இ~hக் தெரி வித்திருக்கின்றார்;.
தினே~; கடமையாற்றிய நிறுவனத்துடன் இது தொடர்பான பேச்சு நடத்தப்பட்டிருப்பதா கவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள
|
|
|
| நான் தேடும் வதனம்...! |
|
Posted by: kuruvikal - 12-09-2004, 06:02 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/fineartcard1thm.jpg' border='0' alt='user posted image'>
<b>புன்னகைக்கும்
பிஞ்சு மனமே
நின் வதனம் கொண்ட
அழகுக்கில்லை நிகர்...!
தாயே
நீயும் அந்த
இறைவனின் வடிவம் தானே...
வளர்ந்தால் மட்டும்
எங்கிருந்து வருகுதந்த
சூதும் வஞ்சகமும்
பொறாமையும் போட்டியும்..!
இறைதன்மை போய்
பேயாய் வருவதேனம்மா..?!
என்று காண்பேன் - உன்னில்
இளமையிலும் இறைவனை
அன்று
நானும் உன்
அன்புத் தோழனாய் தோழியாய்
அவதரிக்க வேண்டுமே..! </b>
நன்றி - மீள் பிரசுரம்... http://kuruvikal.yarl.net/
|
|
|
| தமிழ் எம்.பி.க்களின் உசார் |
|
Posted by: குத்தூசி - 12-09-2004, 01:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழ் எம்.பி.க்களின் உசார்
தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் சபைக்குள் எதையுமே உருப்படியாகப் பேசாமல் வெறுமனே சென்று வருகின்றார்கள் என்று ஆரம்பத்தில் தமிழ் மக்கள் பரவலாகக் குறைபட்டுக் கொண்டார்கள். ஆரம்ப நாட்களில் தங்கள் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லையே என்ற விரக்தியிலும் ஆத்திரத்திலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களே பெரும் அடாவடி த்தனங்களில் இறங்கி அமளிதுமளிகளை ஏற்படுத்தினார்கள். சபாநாயகரைத் தெரிவு செய்வதற்காகக் கூடி ய முதல் நாளே இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத வகையிலான வெட்கக் கேடான, காட்சிகளை சபை கண்டது. அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவரே சொங்கோலைச் சபைக்கு வெளியே தூக்கிக்கொண்டு சென்று சில மணித்தியாலங்கள், ஒளித்துவைத்திருந்த நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபை கண்டது.
ஆனால், இப்போது அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களோ அல்லது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களோ பெரும் ரகளைகளில் ஈடுபடுவதை அநேகமாகக் காண முடி யவில்லை. மாறாக, அண்மைக்காலமாக தமிழ் உறுப்பினர்கள் - அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் - தங்களின் நிலைப்பாடுகளை தன்னுறுதியுடன் வெளிக்காட்டுவதில் முனைப்பைக் காட்டுவதைக் காணக்கூ டியதாக இருக்கிறது; சில சந்தர் ப்பங்களில் சபையின் நடுவே குழுமி சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு அமர்க்க ளமும் செய்கிறார்கள். ஆரம்ப நாட்களில் அரசாங்கத் தரப்பினர் நடந்து கொண்டதைப் போன்று அநாகரிகமான செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்பு உறுப்பினர்கள் ஈடுபடவி ல்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை அனுர்;டிப்பதற்கு கடந்த மாத இறுதியில் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த வைபவங்களில் குழப்ப நிலை ஏற்படுவதற்கு காரணமாயமைந்த இரானுவத்தினரின் தலையீட்டை ஆட்சேபித்து சபைக்குள் சபாநாயகரின் ஆசனம் முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூடிய போது செங்கோலுக்கு ஊறு நேர்ந்துவிடக் கூ டும் என்ற அச்சத்தில் படைக்கலச் சேவிதர் அவர்களை நோக்கி விரைந்த வேளை, செங்கோலுக்கு எதையும் செய்து அநாகரிகமாக நடந்துகொள்ளப் போவதில்லை என்று அவர்கள் உறுதியளித்து தங்கள் பக்குவத்தை வெளிக்காட்டிய சந்தர்ப்பத்தை இங்கு நினைவுபடுத்துவது அவசியமானதாகும்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பதால் தங்களுக்கு ஏற்படுகின்ற விரக்தியையும் வேதனையையும் அடிக்கடி சபைக்குள் வெளிப்ப டுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டும்போது அரசியலமைப்பை அவர்கள் மீறுவதாக ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) உறுப்பினர்களும் ஜாதிக ஹெல உறுமயவினரும் ஆவேசம் அடை கின்றனர். அத்தகைய சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கும் வாதங்களுக்கு, பதிலளிக்கும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தென்னிலங்கையில் இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்குவர் என்றும் எச்சரிக்கைகளை விடுக்கிறார்கள்.
இதனிடையே, இன்னொரு தமிழ் எம்.பி.யான தியாகராஜா மகேஸ்வரன் தான் சார்ந்த ஐ.தே.க.வின் கட்டுப்பாட்டை, வரவு-செலவுத் திட்ட குழுநிலை வாக்கெடுப்பின்போது செயற்பட்டி ருக்கிறார். வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத் தரப்புடன் சேர்ந்து ஐ.தே.க.வாக்களித்த போதிலும், மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் சேர்ந்து எதிராகவே வாக்களித்தார். அதேபோன்றே நேற்று முன்தினம் திங்கட்கிழமை பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான வாக்கெடுப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்த போதிலும், மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்புடன் சேர்ந்து எதிராகவே வாக்களித்தார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க குறித்தும் பண்டாரநாயக்கா குடும்பம் குறித்தும் சபைக்குள் சில தினங்களுக்கு முன்னர் மகேஸ்வரன் தெரிவித்த கருத்துகளைக் காரணம், காட்டி அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மகேஸ்வரனின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடந்த வாரம் மறுத்தி ருந்தார்.
பாராளுமன்றம் கூ டும் ஒவ்வொரு நாளிலும் ஒழுங்குப் பத்திரத்தில் அமைச்சர்களிடமிருந்து வாய் மூல விடைகளைப் பெறுவதற்காக, மகேஸ்வரனின் இரு கேள்விகள் இடம்பெற் றிருக்கும். கடந்த வாரம் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்த மறுப்புக்கு பதிலடி யாக நேற்று முன்தினம் அரசாங்கத்திடம் இனிமேல், கேள்விகளைக் கேட்கப் போவதில்லை என்று அறிவித்தார் மகேஸ்வரன். இதனால் பெரும் சங்கடமான, நிலைக்குள்ளான சபாநாயகர் லொக்குபண்டார மகேஸ்வரனிடம் 'நீங்கள் கேள்விகளை, வாபஸ் பெறுகிறீர்களா" என்று கேட்டார். 'எனக்கு விளங்கும் சிங்களத்தில் தான் சொல்கிறேன். நான் எந்தக் கேள்வியை யும் கேட்கப் போவதில்லை" என்று பதிலளித்தார்.
இவ்வாறாக, பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் இப்போது துணிச்சலுடன் தன்முனைப்பாக செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள். பண்டாரநாயக்கா குடும்பம் குறித்து கடந்த மாத இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் என்.ரவிராஜ் ஆற்றிய கடுமையான உரைக்கு சில தினங்களுக்கு முன்னர் அநுரா பண்டாரநாயக்கா தனிப்பட்ட விளக்கமொன்றை அளித்து அவரை விமர்சித்திருந்தார். அநுரச பண்டாரநாயக்காவுக்கு பதிலளிக்கு முகமாக மீண்டும் நேற்று முன்தினம் விளக்கமொன்றை அளித்த ரவிராஜ், பண்டாரநாயக்கா குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்தியம்பினார். எதிர்க்கட்சியில் இருந்த போது சகோதரி திருமதி குமாரது ங்கவை கர்ணகடூ ரமாகத் தாக்கிப் பேசிய அநுரா பண்டாரநாயக்க இப்போது அவருக் காக முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் ரவிராஜ் சாடினார்.
பாராளுமன்ற அரசியல் தங்களுக்கு, விடிவைத் தருமென்ற நம்பிக்கை, இல்லையென்றாலும், தமிழ் எம்.பி.க்களின் தற்போதைய உசார் எமது கவனத்தை வெகுவாக ஈர்க்கவே செய்கின்றன.
லங்காசிறியிலிருந்து சுடப்பட்டது
நன்றி லங்காசிறி இணையநிர்வாகி திரு
சிறீகுகன் அவர்கட்கு
|
|
|
| மகனை கருணை கொலை செய்ய தாய் கெஞ்சல் |
|
Posted by: aathipan - 12-09-2004, 11:34 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
20 வருடமாக உயிருக்கு போராட்டம்: மகனை கருணை கொலை செய்ய தாய் கெஞ்சல்: நீதிமன்றம்-ஆந்திர அரசு கைவிரிப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகன் வெங்கடேஷ். இவருக்கு தற்போது 25 வயதாகிறது. வெங்கடேசுக்கு 6 வயதாக இருந்த போது மஸ்குலர் டிஸ்டோரிபி என்ற ஜீன்கள் தொடர்பான நோய் ஏற்பட்டது. இந்த நோயினால் வெங்கடேசின் உடலில் சதை வளர்ச்சி தடைபட்டது.
6 வயது முதல் 9 வயதுவரை ஓரளவு நடக்க முடிந்த வெங்கடேஷ் 9 வயது முதல் 11 வயது வரை நடக்க முடியாமல் அடிக்கடி கீழே விழுந்தார். 11 வயதுக்கு பிறகு அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்.
வெங்கடேசுக்கு மருத்துவ செலவு அதிகமாகவே அவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். தாய் சுஜாதா மட்டும் மகனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.
மகனுக்கு வீல்சேர் வாங்கி கொடுத்து சினிமாவுக்கு அழைத்து செல்வது, சுற்றுலா கூட்டி செல்வது என மகனை ஓரளவு திருப்திபடுத்தி வந்தார். அத்துடன் பி.காம். வரையும் படிக்க வைத்தார்.
இதற்கிடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெங்கடேசின் உடல் நிலை மிகவும் மோசமாகிப்போனது. மூச்சு விடுவதற்கே கஷ்டப்பட்ட அவர் வெண்டிலேட்டர் மூலம் சுவாசித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆயுர்வேதா, சித்தா என அனைத்து மருத்துவ முறைகளிலும் அவரை குணப்படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால் அனைத்துமே தோல்விதான். இறுதியாக அவரை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை குணபப்டுத்த முடியாத டாக்டர்கள் இன்னும் 6 மாதம்தான் என்று நாள் குறித்துவிட்டனர்.
இதற்கிடையே வெங்கடேஷ் தான் யாருக்கும் பயன்படா விட்டாலும் தன் உறுப்புகளா வது யாருக்காவது பயன்படட் டுமே என்ற முடிவுக்கு வந்தார். தனது ஆசையை நிறைவேற்ற தன்னை கருணை கொலை செய்ய ஏற்பாடு செய்யுமாறு தாயிடம் வேண்டினார். இது தொடர்பாக தன் கைப்பட ஒரு லட்டரையும் எழுதி வைத்துள்ளார்.
மகனின் வேண்டு கோளை கேட்ட சுஜாதா அதிர்ச்சி அடைந்தார். நாள்பட மகன் படும் அவதியை காண சகிக்காமல் மகனின் வேண்டுகோளை அவரும் ஏற்றுக் கொண்டார். வெங்கடேஷ் ஏற்கனவே தனது கண்களை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு தானமாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். கிட்னி உள்பட மற்ற உறுப்புகளையும் அவர் தானமாக வழங்க முன்வந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ் பத்திரி டாக்டர்களிடம் தனது மகனை கருணைக் கொலை செய்யுமாறு சுஜாதா கெஞ்சினார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சுஜாதா தனது மகனை கருணை கொலை செய்ய ஆந்திர அரசுக்கும் கோரிக்கை வைத்தார். ஆனால் ஆந்திர அரசும் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இதைத் தொட்ர்ந்து சுஜாதா ஆந்திர மாநில ஐகோர்ட்டிலும் தனது மகனை கருணைக் கொலை செய்யுமாறு மனு போட்டார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளே கொஞ்சம் பதட்டம் அடைந்தனர். வெங்கடேஷ் தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால் அவர்தனது உறுப்புகளை தானமாக வழங்கிட எழுதிய கடிதத்தையும் காண்பித்தார்.
ஆனால் கருணைக் கொலை செய்ய முடியாது என்று கைவிரித்த நீதிபதிகள் தேவேந்தர் குப்தா, நாராயண ரெட்டி ஆகியோர் ஆந்திர மாநில மருத்துவத்துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில் இந்த நோயை குணப்படுத்த முயற்சி செய்யுமாறு கூறி இருந்தனர். நோயை குணப்படுத்த வழியில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
கருணைக் கொலைக்கு சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் கைவிரிக்க, நோயை குணப்படுத்த மருத்துவத்துறையில் வழியில்லை என்று டாக்டர்களும் கை விரிக்க தற்போது வெங்கடேஷ் கோமா நிலையில்...
எனது மகன் இன்னும் சில நாளில் இறந்து விடுவான். எனவே அதற்குள் அவனை கருணை கொலை செய்து அவனது உறுப்புகளை பிற ருக்கு தானமாக கொடுங்கள். அவன் இறக்கும் வரை காத் திருந்தால் அவனது உறுப்புகள் கெட்டு யாருக்கும் பயன்படா மல் போய் அவனது ஆசை நிராசையாகி விடும் என்று சுஜாதா மீண்டும் மீண்டும் டாக்டர்களிடம் கெஞ்ச வெங்கடேஷ் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
நன்றி மாலை மலர்
|
|
|
| எவன் சொன்னவன் ?...தொ. சூசைமிக்கேல் |
|
Posted by: hari - 12-09-2004, 07:17 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<span style='color:red'>எவன் சொன்னவன் ?...</span>
-- தொ. சூசைமிக்கேல்( tsmina2000@yahoo.com )
<img src='http://img107.exs.cx/img107/3215/hari1.gif' border='0' alt='user posted image'>
[size=14]
மாபெரும் வீரர்தின மண்டபத்தைக் கண்டபின்னர்,
மண்ணைத் தழுவியந்த மாலைகள் மணந்தபின்னர்,
யாவரும் நாநடுங்கி அஞ்சலி புனைந்தபின்னர்,
யான்மட்டும் என்ன செய்வது? - எழுச்சிக் கவி
யாப்பதை யார் தடுப்பது?...
போர்ப்படை நாயகனும் போற்றலுறு சேனைகளும்
பொன்னிகர் தென்னவர்தம் புத்திரரும் சோதரரும்
தீர்க்க விழிகளுடன் தீபச்சுடர் ஏற்றுவது
சிலிர்த்திடும் காட்சி அல்லவா? - அருந்தமிழா,
தியாகத்தின் மாட்சி அல்லவா?
தீயின்செந் நாக்குகளே! தீண்டுமட்டும் தீண்டிடுங்கள்!
தீயவன் சூதுதன்னைச் சுட்டுக் கரி ஆக்கிடுங்கள்!
தாயினைக் கேவியழச் செய்த தறுதலைகட்குத்
தண்டனை வேண்டுமல்லவோ? - அதைத் தமிழன்
தந்திட வேண்டுமல்லவோ?
வீரத் தழும்புகொண்டு வெஞ்சினக் கவசம்கொண்டு
வெற்றிக் கனிபறிக்கும் வேட்கைமிகு ஏக்கம்தன்னை
ஆரத் தழுவிக்கொண்டு அண்ணனொடு தம்பியெலாம்
அறிதுயில் கொள்கின்றாரடா! - அதோ, பார்! பார்!
அவர் நம்மைக் காண்கின்றாரடா!
வெல்லும் படைநடத்தத் தம்மைத்தந்த வேங்கைகளும்
வீரத் தளபதியின் கூடநின்ற சிங்கங்களும்
அல்பகல் ஈழமண்ணை எண்ணியெண்ணிக் கண்ணுறங்கும்
அஞ்சலி மஞ்சம்இது பார்! - தமிழனுக்கோர்
ஆலய முற்றம்இது பார்!
ஆகாயம் பார்த்தவண்ணம் அண்ணாந்து கிடக்கின்றார்,பார்!
ஆகா!எம் அண்ணன்தம்பி தங்கைகளின் அழகுபார்!
சாகா வரம்படைத்த சாதனையின் நாயகர்கள்
சாட்சியம் தீட்டுவதைப் பார்! - தமிழ் இனத்தின்
தனித்துவம் காட்டுவதைப் பார்!
கண்ணில் குளங்களோடும் கைக்குழந்தை யோடும்வந்து
கல்லறைத் தோட்டங்களில் காத்திருக்கும் தங்கைகளே!
உம்மைச் சதிபுரிந்த ஊறுமதி கூறுபட
ஒருதினம் குறித்திடுங்கள்! - உறங்குவோரை
உடன்வர அழைத்திடுங்கள்!
காலக் கணக்கனுக்கு நான்விடுக்கும் கேள்வியிது:
கையில்நீ வைத்திருக்கும் புத்தகத்தின் பக்கமொன்றில்
ஈழத் தமிழனுக்கும் ஏன்ஒதுக்க வில்லை,இடம்?
எத்தனை நாள்இத் தண்டனை? - தர்மத்தின் முன்னே
ஏன் இந்த ஓர வஞ்சனை?
எட்டுத் திசைமருங்கும் ஏறுநடை போட்ட குலம்:
ஏழு கடல்வெளியும் வீரமுடன் ஆண்ட குலம்:
கெட்டவர் புன்மதியின் கீழடங்கிப் போவதுண்டோ?
கேட்கட்டும் போர்முழக்கம்தான்! - எதிரிகட்குக்
கிட்டட்டும் ஓர் விளக்கம்தான்!
புத்தனைப் போற்றுபவன் பூமியெங்கும் ரத்தமடா!
புண்ணியப் போர்வையில் புறப்பட்டதோ மூர்க்கமடா!
எத்தனை காலம்இந்த எத்தரைச் சகிப்பதடா!
எண்ணிடு நாட்களை இன்று! - எவன் சொன்னவன்
ஈழம் ஓர் சொப்பனம் என்று?...
முந்தைய கவிதைகள்
என்ன செய்யும் ?...
உரிந்துபோன உரிமைகள் !!
|
|
|
| தத்துவ முத்துக்கள் |
|
Posted by: aathipan - 12-09-2004, 06:35 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.
மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.
நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம். வள்ளலார்
ஆகாரப் பொன்மொழிகள்
* பசித்த பின் புசிக்க வேண்டும்.
* உண்பதை குறைத்து மெல்லுவதை அதிகப்படுத்த
வேண்டும்.
* வாரம் ஒரு முறையாவது உண்ணாவிரதம் மேற்கொண்
டால் குடல்கள் ஓய்வு பெற்று ஆரோக்கியம் பெருகும்.
* சமைக்கப்படாத, ஆனால் விரைவில் ஜீரணிக்ககூடிய
உணவை உட்கொள்ளப்பழகு.
* கோபத்துடன் உண்ணகூடாது.
* வாய் துர்நாற்றம் பழுதடைந்த வயிற்றின் அறிகுறி.
* இரண்டு வேளையே ஒரு நாளைக்கு போதுமான
உணவு. ஆனால் அந்த வேளை தவறாமல் உண்ண
வேண்டும்.
* நிமிர்ந்து, தரையில் அமர்ந்து வாய் பேசாமல்
ஆண்டவனை தியானித்த பின்பே உண்ண வேண்டும்.
|
|
|
| தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பவரா நீங்க... |
|
Posted by: aathipan - 12-09-2004, 06:16 AM - Forum: மருத்துவம்
- Replies (9)
|
 |
வாஷிங்டன்: நீங்கள் தொடர்ந்து தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்துபவரா? அப்படியென்றால் உங்கள் நரம்பு மண்டலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் துறை பேராசிரியர் ஒருவர் ஆய்வு குறித்து கூறியதாவது:
ஒருவர் தொடர்ந்து தலைமுடிக்கு ஷாம்பூவும், கைகளுக்கு லோஷனும் பயன்படுத்தி வந்தால் அவரது நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஷாம்பூ மற்றும் லோஷன்களில் உடலில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையுள்ள பொருட்கள் உள்ளன. செல்களுக்கு இடையே தகவல்களை அனுப்பும் நரம்பு கட்டமைப்பை இவை பாதிக்கின்றன. அதன் உச்சகட்டமாக நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த ஆபத்து குறித்து சிறிய வகை எலிகளிடம் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது எலிகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது. இந்த சோதனை தற்போது துவக்க அளவிலேயே உள்ளது. தீவிரமாக தொடர்ந்து ஆய்வு நடத்திய பிறகே இறுதி முடிவுகள் தெரிய வரும்.இவ்வாறு அந்த பேராசிரியர் கூறினார்.
|
|
|
| மலேசிய தமிழ் இலக்கிய கருத்தரங்கு |
|
Posted by: aathipan - 12-09-2004, 05:50 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (2)
|
 |
மலேசிய தமிழ் இலக்கிய கருத்தரங்கு
சென்னையில் நடைபெறுகிறது
சென்னை, டிச.9-
சென்னையில் மலேசிய தமிழ் இலக்கிய கருத்தரங்கு நடைபெறுகிறது.
மலேசிய தமிழ் இலக்கியம்
"மலேசிய தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் சென்னை `பென்ஸ் பார்க்' ஓட்டலில் கருத்தரங்கு நடக்கிறது. வருகிற சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த கருத்தரங்கு நடைபெறும்.
கவிஞர் வைரமுத்து, கருத் தரங்கை முன்னின்று நடத்துகிறார். "மலேசியத் தமிழ்ச் சமுதாய பின்புலமும் அதுபற்றிய எழுத்துக்களும்", "மலேசிய தமிழக்கவிதை இலக்கியம்", "மலேசியாவில் தமிழ் உரை நடை இலக்கியம்", "மலேசியாவில் கலைப்படைப்புகள்" ஆகிய தலைப்புகளில் மலேசிய படைப்பாளிகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கிறார்கள்.
33 மலேசிய படைப்பாளிகள்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் ஆதி குமணன், மலேசியத் தமிழ் எழுத் தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், முரசுநெடுமாறன், ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட 33 மலேசியப் படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள்.
முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன் _ எழுத்தாளர் சிவசங்கரி _ நல்லி குப்புசாமி _ கவிஞர் அப்துல்ரகுமான் _ இந்திரா பார்த்தசாரதி _ நடிகர் பார்த்திபன் சென்னைத் தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் ஏ.நடராசன் _ யு.எம். கண்ணன் _ காவ்யா சண்முக சுந்தரம் ஆகியோர் கருத்தரங்கில் பங்கு கொள்கிறார்கள்.
மாலை 6 மணிக்கு நிறைவு விழாவில் காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி ஸ்ரீபால் தலைமையில் "மலேசியத் தமிழ் இலக்கியம் _ ஓர்அறிமுகம்" என்ற ஆய்வு நூலை இயக்குனர் பாரதிராஜா வெளியிடுகிறார். கவிஞர் வைரமுத்து முதல் பிரதியை பெற்றுக் கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார்.
விருந்து
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அன்று மாலை 4 மணிக்கு மலேசியத் தமிழ் எழுத் தாளர்களுக்கு அண்ணா அறிவா லயத்தில் தேநீர் விருந்து அளிக் கிறார். அன்றிரவு 8மணிக்கு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விருந்தளிக்கிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட வெற்றித் தமிழர் பேரவையைச் சார்ந்த ராஜசேகர், காதர் மைதீன், செல்லத்துரை, ராயபுரம் குண சேகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
|
|
|
|