![]() |
|
எவன் சொன்னவன் ?...தொ. சூசைமிக்கேல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எவன் சொன்னவன் ?...தொ. சூசைமிக்கேல் (/showthread.php?tid=6242) |
எவன் சொன்னவன் ?...தொ. சூசைமிக்கேல் - hari - 12-09-2004 <span style='color:red'>எவன் சொன்னவன் ?...</span> -- தொ. சூசைமிக்கேல்( tsmina2000@yahoo.com ) <img src='http://img107.exs.cx/img107/3215/hari1.gif' border='0' alt='user posted image'> [size=14] மாபெரும் வீரர்தின மண்டபத்தைக் கண்டபின்னர், மண்ணைத் தழுவியந்த மாலைகள் மணந்தபின்னர், யாவரும் நாநடுங்கி அஞ்சலி புனைந்தபின்னர், யான்மட்டும் என்ன செய்வது? - எழுச்சிக் கவி யாப்பதை யார் தடுப்பது?... போர்ப்படை நாயகனும் போற்றலுறு சேனைகளும் பொன்னிகர் தென்னவர்தம் புத்திரரும் சோதரரும் தீர்க்க விழிகளுடன் தீபச்சுடர் ஏற்றுவது சிலிர்த்திடும் காட்சி அல்லவா? - அருந்தமிழா, தியாகத்தின் மாட்சி அல்லவா? தீயின்செந் நாக்குகளே! தீண்டுமட்டும் தீண்டிடுங்கள்! தீயவன் சூதுதன்னைச் சுட்டுக் கரி ஆக்கிடுங்கள்! தாயினைக் கேவியழச் செய்த தறுதலைகட்குத் தண்டனை வேண்டுமல்லவோ? - அதைத் தமிழன் தந்திட வேண்டுமல்லவோ? வீரத் தழும்புகொண்டு வெஞ்சினக் கவசம்கொண்டு வெற்றிக் கனிபறிக்கும் வேட்கைமிகு ஏக்கம்தன்னை ஆரத் தழுவிக்கொண்டு அண்ணனொடு தம்பியெலாம் அறிதுயில் கொள்கின்றாரடா! - அதோ, பார்! பார்! அவர் நம்மைக் காண்கின்றாரடா! வெல்லும் படைநடத்தத் தம்மைத்தந்த வேங்கைகளும் வீரத் தளபதியின் கூடநின்ற சிங்கங்களும் அல்பகல் ஈழமண்ணை எண்ணியெண்ணிக் கண்ணுறங்கும் அஞ்சலி மஞ்சம்இது பார்! - தமிழனுக்கோர் ஆலய முற்றம்இது பார்! ஆகாயம் பார்த்தவண்ணம் அண்ணாந்து கிடக்கின்றார்,பார்! ஆகா!எம் அண்ணன்தம்பி தங்கைகளின் அழகுபார்! சாகா வரம்படைத்த சாதனையின் நாயகர்கள் சாட்சியம் தீட்டுவதைப் பார்! - தமிழ் இனத்தின் தனித்துவம் காட்டுவதைப் பார்! கண்ணில் குளங்களோடும் கைக்குழந்தை யோடும்வந்து கல்லறைத் தோட்டங்களில் காத்திருக்கும் தங்கைகளே! உம்மைச் சதிபுரிந்த ஊறுமதி கூறுபட ஒருதினம் குறித்திடுங்கள்! - உறங்குவோரை உடன்வர அழைத்திடுங்கள்! காலக் கணக்கனுக்கு நான்விடுக்கும் கேள்வியிது: கையில்நீ வைத்திருக்கும் புத்தகத்தின் பக்கமொன்றில் ஈழத் தமிழனுக்கும் ஏன்ஒதுக்க வில்லை,இடம்? எத்தனை நாள்இத் தண்டனை? - தர்மத்தின் முன்னே ஏன் இந்த ஓர வஞ்சனை? எட்டுத் திசைமருங்கும் ஏறுநடை போட்ட குலம்: ஏழு கடல்வெளியும் வீரமுடன் ஆண்ட குலம்: கெட்டவர் புன்மதியின் கீழடங்கிப் போவதுண்டோ? கேட்கட்டும் போர்முழக்கம்தான்! - எதிரிகட்குக் கிட்டட்டும் ஓர் விளக்கம்தான்! புத்தனைப் போற்றுபவன் பூமியெங்கும் ரத்தமடா! புண்ணியப் போர்வையில் புறப்பட்டதோ மூர்க்கமடா! எத்தனை காலம்இந்த எத்தரைச் சகிப்பதடா! எண்ணிடு நாட்களை இன்று! - எவன் சொன்னவன் ஈழம் ஓர் சொப்பனம் என்று?... முந்தைய கவிதைகள் என்ன செய்யும் ?... உரிந்துபோன உரிமைகள் !! - kuruvikal - 12-09-2004 யதார்த்தக் கவி... கவிக்கு வாழ்த்துக்கள்... இணைத்த நண்பருக்கு நன்றிகள்...! - kavithan - 12-10-2004 கவி அருமை.. எழுதியவருக்கு வாழ்த்துக்களும் இணைத்த ஹரி அண்ணாவுக்கு நன்றிகளும் .. - KULAKADDAN - 12-10-2004 நன்றி - Saniyan - 12-10-2004 கவிதை அற்புதம் . . . வாழ்த்துக்கள் . . தொடரட்டும் உங்கள் பணி . . . |