Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 326 online users.
» 0 Member(s) | 324 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,072
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,499
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  e.n.d.l.f
Posted by: Rajan - 12-07-2004, 07:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

தமிழ் நாட்டில் இயங்கிய ஈ.என்.டி.எல்.எவ்
அங்கத்தவர் அனவரையும் பரந்தன் ராஜன்
உட்பட அகதிமுகாமில் அடைத்து
விட்டார் ஜெயலலிதாஅம்மா அம்மாவுக்கு
ஒரு போடு

Print this item

  Computer Technology
Posted by: Vaanampaadi - 12-07-2004, 06:25 PM - Forum: நகைச்சுவை - Replies (3)

<img src='http://img85.exs.cx/img85/1633/f1icomputerfun.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  உரிந்துபோன உரிமைகள் !! -- தொ. சூசைமிக்கேல்
Posted by: hari - 12-07-2004, 04:05 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

[size=16]உரிந்துபோன உரிமைகள் !!

-- தொ. சூசைமிக்கேல்
<img src='http://www.c-r.org/accord/sri/accord4/images/refugees.gif' border='0' alt='user posted image'>
[size=14]
மானிடனாய் வாழுதற்கு ஞாலமதில் உரிமை!
மறத்தமிழன் ஆளுதற்கு ஈழமதில் உரிமை!
ஊனுயிரைப் பேணுதற்கு யாவருக்கும் உரிமை
உள்ளதடா, செந்தமிழா! உணர்வாய், உன் உரிமை!

ஊனென்றும் உயிரென்றும் உள்ளது நம் மண்ணே!
உலகிலெவன் அதைப்பறிக்க வருவான், நம் முன்னே?
ஏனென்று கேட்காமல் இருப்பவனோ கோழை:
ஈழமதன் உரிமைக்காய் ஏந்திடடா, வாளை!

உரித்தான பொருட்களுக்கே உரிமையெனும் நாமம்:
உரிந்துவிட்டால் மானமிகு மனிதனுக்கோ நாணம்!
மரித்தாலும் மறித்தாலும் உரிமைகளின் நியாயம்
மறுபடியும் மறுபடியும் மலையளவு பாயும்!...

தங்கையரும் தமக்கையரும் தந்தையரும் தாயும்
தன்னிறைவாய் நடம்புரிந்த நாடெங்கள் உரிமை!
பொங்கிவரும் யாழ்நாடன் புலம்பெயராப் பாணன்
போற்றிவந்த பொன்ஈழ நாடெங்கள் உரிமை!

எனதுநிலம் எனதில்லம் எனக்கில்லை என்றால்
என்னபொருள் காண்பாய், ஏ! "உரிமை" எனும் சொல்லே!
கனல்விழியின் அனல்வழியே காட்சிதரும் ஈழம்
கண்டெடுக்கும் நாள்வரைக்கும் "உரிமை" வெறுஞ் சொல்லே!!...

உரிந்துபோன உரிமைகளே, உயிர்த்தெழுங்கள் மீண்டும்!
உதிராத மலர்க்கொத்தாய் உலவுங்கள் யாண்டும்!
எரிந்தபடி யாம்புரியும் உரிமைகளின் வேள்வி,
எத்தனைநாள் என்பதுதான் ஈழமகன் கேள்வி!

முந்தைய கவிதை
என்ன செய்யும் ?...

Print this item

  ¯¾Å¢
Posted by: thanigai - 12-07-2004, 03:34 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (8)

There is any way to attach image to a thread?. :?:

Print this item

  பிடி இறுகுகிறது!இனி தப்பவே முடியாது!போலீசிடம் புதிய ஆதாரங்கள
Posted by: ஜீவன் - 12-07-2004, 03:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

http://www.tamiloosai.com/oosai.asp?id=3386&catID=0

ஜீவன்

Print this item

  yahoo mailஇன் அளவு 250mb
Posted by: thanigai - 12-07-2004, 03:26 PM - Forum: இணையம் - Replies (7)

yahoo mailஇன் அளவு 250MB ¬¸ Á¡ற்ற ÀðÎள்ளÐ.[/url]

Print this item

  வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR)
Posted by: Kanani - 12-07-2004, 02:50 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (1)

<b>வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்
NorthEast Secretariat on Human Rights (NESOHR) </b>


வடகிழக்கு மனித உரிமைகளுக்கான செயலகம் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கூட்டு உடன்படிக்கை, இன ரீதியான பாரபட்சத்தின் அனைத்து வடிவங்களையும் இல்லாதொழிப்பதற்கான அமைப்பு, மனித உரிமைகள் தொடர்பான ஏனைய கருவிகள் ஆகியவை எமது மக்களுக்கு எதிரான வன்;;முறையைக் குறைப்பதற்கு பயன்விளைவுள்ள வகையில் பங்களிப்புச் செய்யவில்லை என்பதை உணர்ந்து, தேசிய சர்வதேச ரீதியில் மனித உரிமைகள்;, அடிப்படைச் சுதந்திரங்கள் என்பவை தொடர்பான அறிவை மேம்படுத்தவும் அவற்றுக்கு மதிப்பளிக்கவும் தனிநபர், குழுக்கள், நிறுவனங்களுக்கு இருக்கும் உரிமையையும் பொறுப்பையும் மனதில் ஏற்று வடக்குக் கிழக்கிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் உருவாக்கப்பட்டது.

வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் NESOHR வடகிழக்கிலுள்ள அனைவரதும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தலை நோக்கமாகக் கொண்டது.

<i>அதன் செயற்பாடுகள்:</i>

Idea மனித உரிமை மீறல்கள் தொடர்பான சான்றுகளைச் சேகரிப்பதுடன் அவை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவதற்கும், ஆவணப்படுத்துவதற்குமென இடம் பெயர்ந்தோர் வாழும் முகாம்கள், தடுப்புக் காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் போன்றவற்றுக்கு செயலாய்வுக் குழுக்களை அனுப்பும்.

Idea வடகிழக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அவசர மேல் முறையீடுகள், பத்திரிகைத் தகவல்கள், அறிக்கைகள், வெளியீடுகள் போன்றவற்றை விநியோகிக்கும்.

Idea தேசிய சர்வதேசிய ரீதியிலான வெளியீடுகள், மாநாடுகள், கருத்தரங்குகள், கல்விச் சுற்றுலாக்கள், போன்றவற்றினு}டாக தனிநபர்கள், குழுக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கி அவற்றை வளர்த்தெடுக்கும்.

Idea தகவல்களைப் பெறும்பொருட்டு பரஸ்பர ரீதியில் நன்மையளிக்கும் கூட்டுறவை விருத்தி செய்வதற்கும், வடகிழக்கில் மனித உரிமைக் கலாச்சாரத்தை மதிக்கவும் வளர்த்தெடுப்பதற்குமான செயற்பாட்டை ஆரம்பித்து வைப்பதற்கும் தேசிய சர்வதேசிய அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பை உருவாக்கும்.

செயலகம் உங்களுக்கு எப்படி உதவும்?

Arrow எல்லா மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்களையும் ஆய்வு செய்தல்

Arrow இலவச சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுத்தல்

Arrow உங்களுக்குத் தேவையான மனித உரிமைகளின் பாதுகாப்பை விசாரித்தறியும் மனிதத்துவத்தை மதித்தல்

Arrow மனித உரிமைகள் பற்றிய கல்வியை வழங்கல்

NESOHR பட்டாயத்தின் மூல ஏற்பாடுகள்

இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியில் வாழுகின்ற எல்லா மக்களது உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் நிசோர் அமைப்பு கடப்பாட்டைக் கொண்டுள்ளது. சர்வதேச மனித உரிமை பிரகடனம், சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பாளர்கள், ஆபிரிக்க நாட்டின் மனித உரிமைகள் பிரகடனம், பெண்களுக்கெதிரான எல்லாவகையான பாகுபாடுகளையும் ஒழிக்கும் மாநாடு, சிறுவர்களின் உரிமைகளுக்கான மாநாட்டு கருத்துக்களையும், ஐ.நா.வின் குறைந்த அளவிலான கைதிகளின் பராமரிப்பு விதிகளையும் தனது பட்டயத்தில் கொண்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் நல்ல நோக்கத்திற்கான சூழ்நிலையிலும் அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்படவோ, செயலிழக்கப்படவோ மாட்டாது. மேலும் மனித உரிமைகள் செயலகம் வடக்குக் கிழக்கில் வாழும் சுதந்திர வேட்கைகொண்ட ஒவ்வொருவரினதும் குடியியல் உரிமைகளை நம்பிக்கையுடனும் எந்த மரியாதையுடனும் பற்றிநிற்கிறது.

குடிசார் அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் போன்ற அடிப்படை உரிமைகள் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளை பாதுகாக்கும் அம்சங்களை மனித உரிமைகள் பட்டயம் உள்ளடக்கியுள்ளது. சிறுவர், பெண்கள் போன்ற குறிப்பிட்ட வகையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியையும் தம் வேலைத்திட்டத்தில் அடக்கியுள்ளது. அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது பெண்கள், சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் தனது அவசர வேலைத்திட்டத்தில் கொண்டுள்ளது.

Print this item

  அவள் உண்மை முகம்....!
Posted by: kuruvikal - 12-07-2004, 12:11 PM - Forum: கவிதை/பாடல் - Replies (54)

<img src='http://kuruvikal.yarl.net/archives/face.jpg' border='0' alt='user posted image'>

<b>ஓர் கணம்
என் உயிர்க்குலை அதிர்ந்தது
என்னை நானே
ஸ்பரிசித்துப் பார்த்தேன்
உடலோடு உயிர் இருக்கோ என்று
இருக்கிறது என்றதும்
இதயத் துடிப்பை தடவிப் பார்த்தேன்
சாதாரணமாகத் துடித்தது
பதட்டமே இல்லாமல்
மனம் மட்டும் பதறியது போல்....!
காரணம்...
சடைகள் அவிழ்த்து
சவரி முடி பறக்கவிட்டு
பவளப் பற்கள் கோரமாக
கொவ்வையிதழ் குருதி சொட்ட
நீண்ட நகங்களில் இரத்தம் காய
கண்கள் கொப்பளிக்க
இரத்தம் தோய்ந்த புடவை கட்டி
கோரமாய் அவள்
என் உயிர் குடிக்கும்
பிசாசாய் கண்ணாடியில்....!
நேற்றுவரை அவளுக்காய்
நான் அலங்கரிக்க
பார்த்துப் பார்த்து தேய்ந்து போன
அதே கண்ணாடியில்
இன்று அவள்
உண்மை முகம்....!
நேற்றுவரை என்னை அலங்கரித்தவள்
இன்று....
இன்னொருவனை அலங்கரிக்க
நான் அலங்கோலமானேன்
மனதோடு....
அவளைச் சுமந்ததால்....!</b>

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  ஜித்தாவில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்
Posted by: Nitharsan - 12-07-2004, 03:57 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

சவுதி அரேபியா ஜித்தாவில் நடைபெற்ற அமெரிக்க துதரகம் மீதான தாக்குதலில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்
கண்டியைச் சேர்ந்த மெகமட் ஜப்பர் சாகிட் என்பவர் கொல்லப்பட்டவராவர். பேருவளையைச் செர்ந்த அப்துல் யாவ்பர் முகமது நொருஸ் என்பவர் சிறு காயங்களுக்குள்ளானதாக தெரிய வருகிறது
ஆதாரம் : சூரியன் எப். எம் காலைச் செய்திகள்

-நேசமுடன் நிதர்சன்-

Print this item

  சூரியன் எப்.எம் இப்பொது இணையத்தினுடாக உல கெங்கும்
Posted by: Nitharsan - 12-07-2004, 03:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

இலங்கையில் முதல்தர வானொலியாக கருதப்படும் 24 மணிநேர தமிழ் வானொலியான சூரியன் எப்.எம் இப்பொது இணையத்தினு}டாக உல கெங்கும் வலம் வருகின்றது. மிகவும் துல்லியமான ஒலியுடன் எந்த வித தடங்கல்களும் இல்லாத ஒலிபரப்பு உண்மை செய்திகள் இன்னும் பல பல்சுவை நிகழ்ச்சிகள் ஒருமுறை கேட்டுப்பாருங்க
இந்த இணைப்பில் அழுத்தி நேரடியாக வானொலியைக் கேட்கலாம்
http://66.246.59.69:8400/listen.pls
இந்த இணைப்பு அவர்களது முதற்ப்பக்கத்திற்கானது
www.uthayamfm.com
சூரியனின் உத்தியோக பூர்வ இணையம்:
இப்போது உதயம் எப்.எம்மினூடாக இணைய வலம் வருகிறது...
-நேசமுடன் நிதர்சன்-

Print this item