| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 276 online users. » 0 Member(s) | 273 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,071
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,498
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| Mrs.Sirimao Bandaranayake |
|
Posted by: Vaanampaadi - 12-05-2004, 10:06 PM - Forum: நகைச்சுவை
- Replies (14)
|
 |
Mrs.Sirimao Bandaranayake in Heaven
Mrs. Bandaranayake went to heaven. As she stood in front of St.Peter at Pearly Gates, she saw a huge wall of clocks behind her.
She asked, "What are all those clocks?"
St. Peter answered, "Those are Lie-Clocks. Everyone on Earth has a Lie-Clock. Every time you lie the hands on your clock will move. " Oh," said Mrs.B.
"who's clock is that?" asked Mrs.B
That's <b>Mother Teresa's</b>. The hands have never moved indicating that she never told a lie.
" Who's clock is that one in the left?"
That's <b>Abraham Lincoln's </b>clock. The hands have only moved twice telling us that Abraham only told 2 lies in his entire life.
Where is Chandrika's clock?" asks Mrs. B.
<b>"Chandrika's clock is in Jesus' office. He's using it as a table fan."</b>
|
|
|
| Why did Chicken Crossed the Road? |
|
Posted by: Vaanampaadi - 12-05-2004, 09:29 PM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
Why did Chicken Crossed the Road?
Answers from the people listed, when they were asked, "Why did the chicken cross the road?" The original answer for this old joke is a simple "The chicken crossed the road to get to the other side" [simple as that!]
However the people below gave different answers.
Chandrika Kumaranatunga:
It was a result of the 17-year rule of the UNP. I will appoint a commission to look into that matter.
Ranil Wickramasinghe:
The UNP as a national party will oppose any such move by any chicken to cross roads. We will hold a Satyagraha, and file a violation of fundamental rights case in the Supreme Court.
G. L. Peiris:
The chicken didn't actually cross the road. I can prove this to you by using the statistics released by the Central Bank. There have been such instances in other developing countries as well... This shows very good economic growth.
Anuruddha Ratwatte:
The road will be crossed within a matter of months. (After four years): The chicken has crossed 96% of the road, the rest will be crossed within a couple of months.
Anura Bandaranaika:
The chicken crossed the road so that it could be in the opposition.
late M. H. M. Asraff:
Ask the chicken to come back immediately. Otherwise we will withdraw all support to any chicken...
C.V.Goonaratne:
The chicken crossed the road to end the 17 year old curse of bribery, corruption, and terror... Upon reaching the other side of the road, the chicken will ensure a new era of prosperity.... and a real difference.
Mangala Samaraweera:
There aren't any chicken crossing any roads. It is a deliberate lie woven by the United National Party to defame the government of her excellency Chandrika B. Kumaranatunga.
|
|
|
| தீர்ப்பு...! |
|
Posted by: kuruvikal - 12-05-2004, 08:48 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/SCARAB3.jpg' border='0' alt='user posted image'>
<b>பூஞ்சோலை எதற்கு
என் சோலை போதும்
மாமரத்து மலரெடுத்து
மகத்தான கவி படிக்க....
மலருக்கு உண்டு ஓர் அழகு
அது கண்டு மயங்கும் இளைய வண்டு
மதியிழந்து வந்து
மண்டியிட்டுப் போகும்
வாடா மலரை வாட வைக்க....!
மலருக்குள் உண்டு அமிர்தம்
அதில் அமிழ்ந்தே களிக்க
காத்திருக்கும் கருவண்டு
கண்டதும் கொண்டதும்
கதை முடித்து காலி செய்யும்...!
மலருக்குள் உண்டு மென்மை
அது உணரத் துடிக்கும் வண்டு
மெல்ல வரும் பதுமையாய்
பதுங்க மலர் இடங்கொடுத்தால்
கட்டும் மடம் மலரே கலங்க....!
மலருக்கு உண்டு உணர்வு
அது தேடிக் கலக்க வரும் வண்டு
உறவில் தன் நிலை மட்டும் கொள்ளும்
சுழன்றடிக்கும் சிறகுக் காற்றில்
மலர் படும்பாடு உணரா....!
இத்தனையும் வக்கணையாய் செய்து
மலர் தாண்டி மலர்
வசந்தம் கண்டு களித்து
வந்த வழி போகும் வண்டு...!
மலர்கள் கதறி அழும் கோலம்
மனமிருந்தால் மன்னிக்காது....!
பாவம் வண்டு...
மலரின் போலித்தனம் அறியா
வஞ்சனையில் சிக்கியதறியா
திமிரோடு மலர் விட்டு மலர் பறக்க....
மலரின் சொத்தாய் சுமையாய் மகரந்தம்
அது காவ அழைக்கும் மலருக்கு
மாதவி கோவலனாய் வண்டு....!
அறியாமல் பற்றும் மலரின் சுமை கொண்டு
காவிச் செல்லும் உடல் நோக....!
இப்போ யாருக்காய் வருந்துவது...
மலருக்கா வண்டுக்கா....???!
யாருக்காயும் ஏங்க முடியவில்லை
வஞ்சனையாய் வண்டை அழைத்ததும்
மலரல்லோ....
வந்த வேலை முடிந்தது என்று
தேவை முடித்து
வஞ்சகமாய் எண்ணியதும் வண்டெல்லோ...!
வஞ்சனைக்கு வஞ்சனை
வாஸ்தவமான தீர்ப்பு
இயற்கை எழுதியது....!
அதை....
மனிதரும் திருப்பி எழுதுகிறார்
தமக்குள் தாமே
நாகரீகப் போர்வை போர்த்தி...!</b>
நன்றி.... http://kuruvikal.yarl.net/
|
|
|
| சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள் |
|
Posted by: hari - 12-05-2004, 04:35 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள்
<b> பழ. நெடுமாறன்</b>
மகாபாரதத்தில் சகுனி சூதாட அழைத்துத் தருமனைத் தோற்கடித்துக் காட்டிற்கு விரட்டலாம் எனத் துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். அந்த ஆலோசனை வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுத்தது. முடிவில் பாரதப் போர் மூண்டு துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழிந்தனர். யோசனை சொன்ன சகுனியும் மாண்டான். இது பழைய பாரதக் கதை.
இலங்கை இனப் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு நார்வே நாடு நன்முயற்சி எடுத்து விடுதலைப்புலிகளையும் சிங்கள அரசையும் போர் நிறுத்தம் செய்ய வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வழி வகுத்தது. சில காரணங்களினால் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும் என நார்வே மட்டுமன்று உலகநாடுகள் அனைத்துமே வற்புறுத்தி வருகின்றன. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசும் அவ்வாறே வற்புறுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படியேனும் இதைக் கெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுப் புதிய சகுனிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த அக்டோபர் 30ஆம் நாளன்று தில்லியில் அரசியல் தரகரான சுப்பிரமணியசாமி ஒரு மாநாடு கூட்டியுள்ளார். இந்த மாநாட்டில் "இந்து' பத்திரிக்கையின் ஆசிரியர் என். இராம், சி.பி.ஐ.இன் ¬முன்னாள் இயக்குநர் டி. ஆர். கார்த்திகேயன், சிங்களக் கைக்கூலியான டக்ளஸ் தேவானந்தா உட்படப் பலர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். இலங்கையிலுள்ள தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொண்டு அதனுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை இந்த மாநாடு ஏற்க மறுத்திருக்கிறது. ""சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையிலுள்ள சகல தரப்புப் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என இந்த மாநாடு ஏற்க வலியுறுத்துகிறது'' என ஒரு தீர்மானத்தை இந்த மாநாடு நிறைவேற்றியுள்ளது.
முட்டாள்களின் சொர்க்கத்தில் இவர்கள் இருப்பதையே இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்குள் நடைபெற்ற இரு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலத்தில் "புலிகளே ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள். அவர்களுடன் மட்டுமே சிங்கள அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.' என்ற கோரிக்கையை ¬முன்வைத்துப் போட்டியிட்ட தமிழ்த்தேசிய அணியைச் சேர்ந்தவர்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம் விடுதலைப் புலிகள் தான் தங்களுடைய உண்மையான பிரதிநிதிகள் என்பதை ஈழத்தமிழர்கள் உலகிற்குப் பகிரங்கமாகத் தெரிவித்து விட்டார்கள்.
ஆனால் சுப்பிரமணியசாமி, என். இராம் போன்ற தமிழ்ப் பகைவர்கள் மாநாடு கூட்டி ஈழத்தமிழர்களின் தீர்ப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது என்பது அடாத செயலாகும். அதிலும் அந்த மாநாட்டில் பேசிய என். இராம் இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி போலத் தன்னைக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் பின்வருமாறு பேசியிருக்கிறார்.
"" 1991 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கை என்பது தொடர்ச்சியாகவும் எத்தகைய மாறுபாடு இல்லாமலும் நின்று நிலைத்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா 6 பிரதமர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் இலங்கை பற்றிய கொள்கையில் எத்தகைய மாற்றமும் இல்லை'' என அறிவித்திருக்கிறார்.
உண்மையைத் திரித்துக் கூறுவதில் "" இந்து'' பத்திரிக்கை போலவே அதன் ஆசிரியர் இராமும் திகழ்கிறார். இலங்கை இனப்பிரசினை என்பது 1980களில் தீவிரமடைந்தது. 1981ல் யாழ் நூலகம் சிங்கள வெறியர்களால் எரிக்கப்பட்டது. 1983இல் கொழும்பில் 3,000க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விளைவாகத் தமிழ்நாடு கொந்தளித்தது.
எனவே, இந்திய அரசு இப்பிரச்னையில் தலையிட வேண்டிய இன்றியமையாமை உருவாயிற்று. 1980களில் என்ன நடந்தன என்பதை மூடி மறைத்து என். இராம் பேசியுள்ளார். பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறை என்பது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது. ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு எதிராக நடத்திய திட்டமிட்ட இனப் படுகொலையை இந்திரா கடுமையாகக் கண்டித்தார். "அதைப் பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இருக்க ¬முடியாது' என்ற எச்சரிக்கையும் செய்தார். "எந்த அன்னிய நாடும் இலங்கையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது' என்றும் கூறினார். ஈழத் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி சிங்கள அரசுக்கு ஆணையிட்டார். தன்னுடைய அரசியல் ஆலோசகரான ஜி. பார்த்தசாரதியை அதற்காக அனுப்பி வைத்தார்.
வேறு வழியில்லாமல் ஜெயவர்த்தனா அரசு ஈழத்தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா தயங்கியபோது ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கு இந்திய இராணுவத்தின் மூலம் போர்ப் பயிற்சி அளித்து ஆயுத¬ம் கொடுக்கத் தவறவில்லை பிரதமர் இந்திரா. அவர் படுகொலை செய்யப்படாமல் போயிருந்தால் இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டும் பல நடவடிக்கைகளை அவர் எடுத்து இருப்பார் என்பதில் ஐயமில்லை.
இந்திராவின் மறைவினால் பிரதமர் பதவியேற்ற இராஜீவ்காந்திக்கு இலங்கை இனப்பிரச்சினையில் மட்டுமன்று மற்ற எந்தப் பிரச்சனையிலும் போதுமான அனுபவமில்லை என்பதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை ஜெயவர்த்தனா திட்டமிட்டு ஏமாற்றினார். அவர் விரித்த வலையில் இராஜீவ் விழுந்தார். இதன் விளைவாக இந்திய இலங்கை உடன்பாடு 1987ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சனையில் அவர்களின் சம்மதம் இல்லாமலும் அவர்களின் பங்களிப்பு இல்லாமலும் இராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்த உடன்பாடு என்பது இந்தியாவிலுள்ள பல கட்சிகளாலும் மிகக் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாயிற்று.
ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை அமளிப்படையாக மாறி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துத் தானும் பேரிழப்பிற்கு ஆளாயிற்று. ஜெயவர்த்தனாவுக்குப் பின்னால் அந்த நாட்டின் குடியரசு தலைவர் பொறுப்பை ஏற்ற பிரேமதாசா இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஈழத்தமிழர்களும் விரும்பாமல் சிங்களர்களும் வெறுத்து ஒதுக்கக்கூடிய அவமானகரமான சூழ்நிலை உருவாயிற்று.
இதற்கிடையில் பிரதமர் இராஜீவ் பதவி இழந்தார். புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற வி.பி. சிங் இந்திய அமைதிப்படையைத் திரும்பப் பெற்றார். இலங்கை இனப் பிரச்சனையில் அவர் நிலைப்பாடு மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறியது. அதற்குப் பின்னால் பதவியேற்ற பிரதமர்கள் பலரும் இந்தப் பிரச்சனையில் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். பிரதமர் இராஜீவ் செய்த தவற்றைச் செய்ய இவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தினார்களே தவிர சிங்கள அரசுக்கு ஆதரவான நிலையை எடுக்கவில்லை.
மேற்கண்ட உண்மைகளை அடியோடு திரித்தும் மறைத்தும் என். இராம் பேசியிருப்பது என்பது அவருடைய தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது. இங்கு பேசுவதோடு மட்டும் இவர் நிற்கவில்லை. அக்டோபர் 25ஆம் நாளன்று கொழும்புக்குச் சென்று என். இராம் அங்குக் காமினி திசநாயகாவின் நினைவுநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
யார் இந்தக் காமினி திசநாயகா? ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இவர் இருந்தபோது யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கிருந்த மிகப்பெரிய நூலகத்தை எரிக்குமாறு இலங்கை இராணுவத்தை ஏவியவர் காமினி திசநாயகா ஆவார். தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த யாழ் நூலகத்தை அடியோடு எரித்துச் சாம்பல் ஆக்குவதற்குப் பொறுப்பாளர் காமினி திசநாயகா ஆவார். தமிழ்ப் பகைவரான காமினி திசநாயகா நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற என். இராம் தானும் ஒரு தமிழ்ப் பகைவன் என்பதை நிலைநறுத்திக் கொண்டிருக்கிறார்.
அங்குப் போய் இவர் பேசிய பேச்சு என்பது தமிழர்களுக்கு எதிராகச் சிங்களர் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதேயாகும். "இலங்கையின் ஆளும் கட்சியான இலங்கைக் சுதந்திரக் கட்சியும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றுபட்டு நின்று இலங்கை இனப் பிரச்சினைக்குப் பொதுக் குறைந்தபட்சத் திட்டம் ஒன்றை அளிக்க வேண்டும். அப்போதுதான் புலிகளை ¬முறியடிக்க முடியும். 1980களில் இந்தியா கையாண்ட கொள்கை தவறானது. வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தியது' என்று கூறியிருக்கிறார்.
அதாவது பிரதமர் இந்திராகாந்தி கையாண்ட கொள்கை தவறானது என்று இராம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்திராகாந்தியின் கொள்கை தவறானது என்று குற்றம் சாட்டிய இவரைத் தற்போதைய காங்கிரஸ் அரசு எந்த அளவுக்கு நம்பும் என்பது கேள்விக்குரியதே.
மேலும் ஒரு படி மேலே சென்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாகக் தன்னைக் கருதிக் கொண்டு பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"இந்தக் காலகட்டத்தில் இலங்கை அமைதி முயற்சியில் நேரடியாக இந்தியா பங்கேற்க ¬முடியாது என்றும் இந்தியச் சட்டப்படி பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுடன் சமமாக உட்கார்ந்து இந்தியா பேச¬முடியாது' என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் இப்பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் இராம் அவர்களோ அதற்கு நேர் எதிர்மாறாக ஒரு கருத்தைக் சொல்லியிருக்கிறார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசு பேச முடியாது என்று சொல்லும் இவர், அதே இந்திய அரசு தடை செய்யப்பட்ட நாகாலாந்து, மணிப்பூர் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மறைத்துப் பேசியிருக்கிறார். மேலும், இந்திய அரசின் சார்பில் இன்னொரு அறிவிப்பையும் என்,இராம் செய்திருக்கிறார். "இந்தியாவிலிருந்து இலங்கையைப் பிரிக்கும் பாக் நீரிணையை அண்டிய பகுதியில் மூன்றாவது கடற்படை உருவாவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது தனித் தமிழ் ஈழம் உருவாவது, இடைக்கால நிர்வாக சபை யோசனைகள் போன்றவற்றையும் இந்தியா ஏற்காது' என்ற அறிவித்திருக்கிறார். இவ்வாறு அறிவிக்கும் அதிகாரத்தை யார் இவருக்குக் கொடுத்தது?
அது மட்டுமன்று, ஜப்பான் உட்பட இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள பல நாடுகள் கடற்புலிகள் அமைப்பை அங்கீகரித்து அதனுடன் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொள்ள வேண்டுமென்று சிங்கள அரசை வற்புறுத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் எந்த அதிகாரத்தில் இவர் இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று நாம் ஆராய்வோமானால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். தமிழுக்கும் தமிழருக்கும் இவர் பிறவிப் பகைவர். மேலும் உயர்சாதித் திமிர் இவரை இப்படிப் பேசவைக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த காரணத்தைச் சொல்ல முடியும்?
தமிழ்ப்பகைவர்களான இந்தச் சகுனிகளைத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால்தான் இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இந்தியாவிலேயோ, இலங்கையிலேயோ மக்களிடம் அறவே செல்வாக்கு இல்லாத இந்தச் சகுனிகளின் தீய யோசனைகளுக்குச் செவிசாய்க்கும் அரசுகள் துரியோதனன் கும்பலுக்கு ஏற்பட்ட கதியை நினைத்துப் பார்க்க வேண்டும்.
(தென்செய்தி நவம்பர் 15-30 இதழில் வெளியான கட்டுரை)
thatstamil
|
|
|
| Miss World 2004 |
|
Posted by: kuruvikal - 12-05-2004, 02:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
<b>உலக அழகியாக பெரு நாட்டு அழகி தேர்வு</b>
<img src='http://www.thatstamil.com/images25/missworld250.jpg' border='0' alt='user posted image'>
2004ம் ஆண்டின் உலக அழகியாக பெரு நாட்டைச் சேர்ந்த மரியா ஜூலியா மன்டில்லா கார்சியா (20) தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தென் சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 107 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் அழகி சயாலி பகத் கலந்துகொண்டார்.
முதல் தடவையாக இந்த முறை அழகிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் தொலைபேசி, இணையதளம், எஸ்.எம்.எஸ். வழியாக உலக அழகியைத் தேர்ந்தெடுத்தனர்.
அவர்களின் தேர்வுப்படி 2004ம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை பெரு நாட்டைச் சேர்ந்த மரியா ஜூலியா மன்டில்லா கார்சியா தட்டிச் சென்றார்.
டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த கிளாடியா ஜூலிசா கிரஸ் ரோட்ரிக்ஸ் (18 ) 2வது இடத்தையும், அமெரிக்காவைச் சேர்ந்த நான்சி ரண்டாலுக்கு (24) 3வது இடத்தையும் பெற்றனர்.
உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட கார்சியாவுக்கு ரூ.45 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதுதவிர மேலும் பல பரிசுகளும் வழங்கப்பட்டன.
உயர்நிலை பள்ளிக்கூட ஆசிரியை ஆகவேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறிய கார்சியா, அறக்கட்டளை ஒன்றை அமைத்து உதவிகள் செய்யப் போவதாகவும் கூறினார்.
அடுத்த ஆண்டு உலக அழகிப் போட்டியும் சீனாவிலேயே நடைபெறுகிறது.
---------------------------------
<b>Miss Peru wins world beauty title </b>
Miss Peru beat off more than 100 other contestants
Miss Peru, Maria Julia Mantilla Garcia, has been crowned Miss World 2004 at a glittering event held in China.
Miss Dominican Republic Claudia Julissa Cruz Rodriguez was runner-up, and Miss USA Nancy Randall came third.
thatstamil and bbc.com
|
|
|
| அம்மாவின் அட்வைஸ்!!!!!!! |
|
Posted by: cannon - 12-05-2004, 12:51 PM - Forum: சினிமா
- Replies (4)
|
 |
ஆபாசத்தை வளர்க்க வேண்டாம் :roll: :roll:
திரைப்படங்களில் வன்முறை, ஆபாசத்தை வளர்த்துவிடாதீர்கள் :!: . சமூக அக்கறையோடு
படைப்புக்களை தாருங்கள் :!:
என்றார் ஜெயலலிதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| ஒப்பந்தத்துக்க எதிராக புலம்பெயர்ந்தமக்கள் பொங்கி எழவேண்டும் |
|
Posted by: Nitharsan - 12-05-2004, 07:03 AM - Forum: புலம்
- Replies (11)
|
 |
இந்திய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக
புலம்பெயர்ந்த மக்கள் பொங்கி எழவேண்டும்
பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு மற்றும் மாவீரர் தினம் ஆகிய தமிழீழத் தேசிய நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் காண்பித்த எழுச்சியைக் காட்டி இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ள உத்தேசித்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிலுள்ள ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனை ஈழத் தமிழர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது -
'தமிழ் மக்கள் எல்லா நாடுகளிலும் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தி இலங்கையுடன் செய்துகொள்ள உத்தேசித்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தக்கோரி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் து}தரகங்களில் மகஜர்களைக கையளித்து தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த விடயத்தில் உள்ள காத்திரத்தை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டு சமாதானம் என்ற பெயரில் இலங்கை அரசு போடும் இரட்டை வேடத்தையும் தெரிந்து கொள்ளும். வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யும் இந்த பேரணிகளுக்கு அங்குள்ள இந்திய நிறுவனங்கள் கடைகள் அரசு சாரா அமைப்புக்கள் கழகங்கள் இந்தியாவின் பல்வேறு சமூகங்கள் ஆகியவற்றிடமிருந்தும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம்.
'இதேவேளை தென்னிந்தியத் திரைப்படத் துறையினரிடமும் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கோரவேண்டும். தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள ஈழத் தமிழர்களால் பலகோடி ரூபா பணம் பெரும் லாபமாக் கிடைக்கிறது என்றால் மிகையில்லை. அதாவது அவர்களது ஊதியத்துக்கு ஈழத் தமிழர்களது பங்கு மிகப்பெரியது. ஆகவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனஅழிப்பு நடவடிக்கைக்கான உதவியை இந்திய அரசு மேற்கொள்ள அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
'பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்ட தமது நாட்டுப் படையினருக்கு உதவி செய்ய காலை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்துக்கொடுத்த தென்னிந்தியத் திரையுலகம் தமது அரசின் நடவடிக்கையால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படும் இந்த இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தமது நியாயமான கரிசனையைக் காண்பிக்க வேண்டும். நேரடியாக அல்லது தமிழ்நாடு அரசின் ஊடாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
'மக்கள் சக்தியால் மட்டுமே இந்த முற்தடுப்பு நடவடிக்கையை செம்மையாக செய்துமுடிக்கலாம்."
நன்றி: புதினம்.கொம்
எனது கருத்தக்கள்:
அப்படி திரைப்பட துறையினர் செய்யத்தவறின் அவர்களது திரைப்படங்களை தமிழீழத்தமிழர்களின் திரையரங்கு களிலிருந்த புறக்கணிக்க வேண்டும். அது மட்டு மன்றி தமிழ் நாட்டு ஊடகங்கள் முதல் இந்தியாவின் அனைத்து ஊடகங்களுக்கும் உங்கள் எதிர்ப்பைக் காட்டி மின்னஞ்சல் செய்யுங்கள். பாதுகாப்பு ஒப்பதம் என்ற போர்வையில் இன்னோரு முறை இந்தியா ஈழத்தமிழர்களின் விடையத்தில் தவறான வழியில் நுழைவதைத் தடுக்க வேண்டும் எனவே நண்பர்களே! இன்றே ஆரம்பியுங்கள் உங்கள் எதிர்பு நடவடிக்கைகளை சிறு துளிகள் பெரும் வெள்ளமாகும்.. வெள்ளத்தை எதிர் கொள்ள இந்தியா விரும்பாது அதே போல தனது சமாதான திரை கிழிய சிறீலங்காவும் விரும்பாது எனவே நாங்கள் எதிர்போம்........
வெற்றிகள் எமதாகட்டும்...
-நேசமுடன் நிதர்சன்-
|
|
|
| பார்க்க இரசிக்க |
|
Posted by: vasisutha - 12-05-2004, 05:39 AM - Forum: நகைச்சுவை
- Replies (14)
|
 |
<img src='http://www.vikatan.com/av/2004/dec/12122004/p70.jpg' border='0' alt='user posted image'>
நன்றி : விகடன்
|
|
|
|