Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 564 online users.
» 0 Member(s) | 561 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,317
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,070
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  சிறீ லங்கா அரசின் பதில்
Posted by: MEERA - 12-01-2004, 10:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாக சிறீ லங்கா அரசு தனது உத்தியோகபூர்வ கருத்தை இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் திணைக்களம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

போர் நிறுத்தத்தை காப்பாற்ற அரசு உரிய முறையில் செயல்படுகின்றது. போர் நிறுத்த மீறல் காரணமாக சாதாரண பொது மக்கள் மத்தியில் அச்சமும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளது. இதனை நீக்க இனங்களிடையே சமநிலையைப் பேண அரசாங்கம் முயற்சிக்கின்றது.

வடக்கு கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திகளை முன்னிறுத்தி இடைக்கால தன்னாட்சி அதிகார சபை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராகவிருக்கின்றது. இது நோர்வே தரப்பு ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் 5.12.2002ல் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட இணக்கத்திற்கு அமைய இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கின்றது.

எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் நிபந்தனையற்ற பேச்சிற்கு வருமாறு தமது மாவீரர் தின உரையில் கூறியிருப்பது அச்சமூட்டும் பாணியில் அமைந்துள்ளது. அவர் ஒரு நிகழ்ச்சியை மாத்திரம் மையமாக வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருப்பது மறைமுகமாக நிபந்தனைகளை விதித்துள்ளதாக அரசு கருதுகின்றது. அந்த நிபந்தனையானது உண்மையான பேச்சுவார்த்தைக்கு பாதகமாக அமைந்துள்ளது.

2003 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இடை நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்ததையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளை மக்கள் நன்கு அறிவார்கள். இந் நிலையில் நோர்வே தரப்புடன் தாம் தொடர்ந்தும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்.

Print this item

  ஆயுத சனநாயகம் படும்பாடு...!
Posted by: kuruvikal - 12-01-2004, 09:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

<b><span style='font-size:21pt;line-height:100%'>திருகோணமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவை ரத்துச் செய்யக் கோரி
ஈ.பி.டி.பி.தாக்கல் செய்த மனு தள்ளுபடி....! கூட்டமைப்புக்கு 35 ஆயிரம் ரூபா அபராதச் செலுவுத் தொகை செலுத்தவும் பணிப்பு...!</b>

கடந்த பொதுத் தேர்தலின்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்புப் பெற்ற வெற்றி செல்லுபடியாகாதென உத்தரவிடக் கோரியும்ää தேர்தலை ரத்துச் செய்யக்கோரியும் ஈ.பி.டி.பினர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தள்ளு படி செய்தது. அத்துடன்ää அபராதச் செலவுத் தொகையாக 35 ஆயிரம் ரூபாவை தமிழ்க் கூட்டமைப்பினருக்குச் செலுத்தும்படியும் உத்தரவிட்டது.

தேர்தல் நீதிமன்றமாக இயங்கிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் இமாம் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு - கிழக் கில் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டி யிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டி பெரும்பான்மையான ஆசனங் களைக் கைப்பற்றியிருந்தது. திருகோணமலை யில் ஷபோனஸ் ஆசனத்துடன் இரு ஆசனங்கள் கூட்டமைப்புக்குத் கிடைத்தன.

தேர்தல் வாக்களிப்பு நேர்மையான முறையில் இடம்பெறவில்லை என்றும் - தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் - எனவேääதேர்தல் முடிவுகளைச் செல்லுபடி யற்றதென அறிவிக்கவேண்டும் என்றும் கோரி ஈ.பி.டி.பியினர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

சட்டமா அதிபர்ää தேர்தல் ஆணையாளர்ää தேர்தலில் போட்டியிட்ட எம்.பிக்களான கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட வேட்பாளர்கள் 7 பேர் என 100 பேர் வரையிலானோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அந்த மனு மீதான விசாரணைகளின் முடிவில் நேற்று நீதியரசர் இமாம் தீர்ப்பளித்தார். வழக்கைத் தள்ளுபடி செய்த அவர்ää தமிழ்க் கூட்டமைப்புக்கு 35 ஆயிரம் ரூபா அபராதச் செலவுத் தொகையை ஈ.பி.டி.பி. செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தமிழ்க் கூட்டமைப்புச் சார் பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன்ää எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சட்டத்தரணி எம்.பாலேந்திரனின் ஆதரவுடன் ஆஜராகி வாதாடினர். ஈ.பி.டி.பியினர் சார்பில் கலாநிதி கொஸ்தா ஆஜராகி இருந்தார்.

யாழ்ப்பாணத்திலும் தேர்தல் முடிவுகளை ரத்துச்செய்யக் கோரி ஈ.பி.டி.பியினர் இத்தகையதொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவும் மேன்முறையீட்டு நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. </span>

uthayan.com

இச்செய்தி தொடர்பாக உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்...!

தலைவர் வே பிரபாகரனின் மாவீரர் தின உரையோடு கருணா என்ற துரோகியும் ஒரு மாவீரர் உரை என்று ஒன்றை சில பேரினவாதச் சக்திகளின் உளவுச் சக்திகளின் துரோகச் சக்திகளின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் தூண்டுதலின் பேரில் வழங்கியிருந்தார்...அதைத் தூக்கிப்பிடிக்கும் ஜேவிபி.... புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்றும் அவர்களுடன் இடைக்கால நிர்வாகசபை தொடர்பில் பேசின் மீண்டும் தெற்கில் ஆயுதப் புரட்சி வெடிக்கும் என்று இன்று எச்சரித்திருக்கும் இவ்வேளையில் ஆயுத சனநாயகக் கும்பல்களின் போலி அரசியல் வெற்றுவேட்டுப் பிரச்சாரங்கள் மக்களின் ஆணைக்கு முன் அடிபணியும் விதமாக இந்த சிறீலங்காவின் நீதிமன்றத் தீர்ப்பே வந்திருப்பது மக்களின் சக்தியின் வலிமையை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்துள்ளது.

அதேவேளையில் இடைக்கால நிர்வாகமே தமிழீழமோ தமிழ்மக்களுக்காக அவர்களின் பிள்ளைகளான புலிகள் மக்கள் தலைமை தாங்கிக் கேட்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.... அதை மக்களும் முன்னின்று செய்ய வேண்டிய சூழ்நிலை பேரினவாதிகளாலும் மக்கள் விரோத துரோக சக்திகளாலும் உருவாக்கப்படுவதை மக்கள் கவனிக்கத் தவறக்கூடாது...!(our view)

Print this item

  ¾õÀ¢Â¡¸ þÕóÐ ¾¨ÄÅá¸.. -¿ýÈ¢ ¾¢ÉìÌÃø
Posted by: selvanNL - 12-01-2004, 04:12 PM - Forum: தமிழீழம் - Replies (4)

Print this item

  Eela Thamil shop; Indian shop
Posted by: KULAKADDAN - 12-01-2004, 03:26 PM - Forum: புலம் - Replies (1)

Near my residance , I meet sinhales,
They saiid there are some indian shops,
I went there and I found all those are EEla tamil shops.
They purposely say like that.
I thought, they got a satisfaction via that

Print this item

  «ñ¼¡Å¡....
Posted by: selvanNL - 12-01-2004, 02:43 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (6)

<b>புலிகளின் வரைவை அரசு அமுல்படுத்த முனைந்தால் தெற்கில் ஆயுதக்கிளர்ச்சி வெடிக்கும் என்கிறது ஜே.வி.பி</b>
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை தமது எதிர்ப்பையும் மீறி அரசு அமுல்படுத்துமானால் தென்னிலங்கையில் இளைஞரகள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைமை உருவாகும் என்று, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
--------------------------------------------------
ÅÊ§Åø ¸¨¾ì¸¢È Á¾¢Ã¢ ¦Ã¡õÀ º¢ýÉÀ¢û¨Çò¾ÉÁøÄ¡ þÕìÌ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  பிரிவு...!
Posted by: kuruvikal - 12-01-2004, 02:16 PM - Forum: கவிதை/பாடல் - Replies (103)

<img src='http://kuruvikal.yarl.net/archives/heart.jpg' border='0' alt='user posted image'>

<b>உலகை இருள் பிரிந்தால்
விடியல்
விடியலை தேசம் பிரிந்தால்
அடிமை
உள்ளத்தை துன்பம் பிரிந்தால்
மகிழ்ச்சி
உவகையை உணர்வு பிரிந்தால்
பேராசை
உடலை உடல் பிரிந்தால்
ஜனனம்
உடலை உயிர் பிரிந்தால்
மரணம்
உணவை உண்ணப் பிரிந்தால்
விரதம்
உணர்வை உண்ணப் பிரிந்தால்
சடம்
உலகை நீர் பிரிந்தால்
ஆவி
ஆகாயம் நீர் பிரிந்தால்
மழை
பருவத்தை பெண் பிரிந்தால்
கிழவி
பெண்ணை மானம் பிரிந்தால்
மிருகம்
தாயைச் சிசு பிரிந்தால்
தனியன்
தனியன் பாசம் பிரிந்தால்
தறுதலை
மலரை தென்றல் பிரிந்தால்
வாசம்
வாசத்தை நுகரப் பிரிந்தால்
மாசு
மனதை ஆசை பிரிந்தால்
வெறுமை
வெறுமையை மனது பிரிந்தால்
பாரம்
சமூகத்தை கல்லாமை பிரிந்தால்
பலம்
கல்வியை சமூகம் பிரிந்தால்
அறியாமை
தோல்வியை தேசம் பிரிந்தால்
விடுதலை
போரை வீரம் பிரிந்தால்
தோல்வி
கலகத்தை உலகம் பிரிந்தால்
அமைதி
கலகம் உலகைப் பிரிந்தால்
ஏமாற்றம்
கடவுளைக் காணப் பிரிந்தால்
கவலை
கவலையை மனிதன் பிரிந்தால்
சுகம்
செல்வத்தை நீ பிரிந்தால்
செலவு
செலவை நீ பிரிந்தால்
கஞ்சன்
ஏழ்மையை நீ பிரிந்தால்
உதவு
உதவியை உலகம் பிரிந்தால்
அநாதை
விழிப்பை நீ பிரிந்தால்
துயில்
விளிப்பை நீ பிரிந்தால்
மூடன்
கனவை நீ பிரிந்தால்
நிஜம்
நிஜம் உன்னைப் பிரிந்தால்
கனவே காட்சி
காதலை காமம் பிரிந்தால்
அன்பு
அன்பை உணரப் பிரிந்தால்
அவதி
சுத்தத்தை அசுத்தம் பிரிந்தால்
சுகம்
சுகத்தை உடல் பிரிந்தால்
நோய்
பாவத்தை நீ பிரிந்தால்
நிம்மதி
நிம்மதி தான் பிரிந்தால்
வருத்தம்
வாழாக் காதல் பிரிந்தால்
வளம்
வளமான காதல் பிரிந்தால்
வறட்சி
இதயம் இணையப் பிரிந்தால்
இன்பம்
இணைந்த இதயம் பிரிந்தால்
துன்பம்
அவளை நான் பிரிந்தால்
ஏக்கம்
அவள் என்னைப் பிரிந்தால்
என்னவோ....???!
எனக்கு இருள்...!</b>

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  அமெரிக்காவின் சனநா(ய்+அ)கம்...!
Posted by: kuruvikal - 12-01-2004, 01:12 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<b>அமெரிக்காவில் இந்தியரின் கேஸ் ஸ்டேசன் எரிப்பு</b>

அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தில் சீக்கியர் ஒருவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இனவாத அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


சரப்ஜித் சிங் என்பவர் செஸ்டர்பீல்டில் இந்த கேஸ் ஸ்டேசன் வைத்துள்ளார். இதனை ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததோடு, ஆசியர்களுக்கும் வெள்ளையர் அல்லாதோருக்கும் எதிரான வாசகங்களை சுவர்களில் பெயிண்டால் எழுதிவிட்டுப் போயுள்ளது.

கடந்த 24ம் தேதி நடந்த இச் சம்பவத்துக்கு அமெரிக்காவின் சீக்கிய மத மற்றும் கல்விக் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குலுக்குப் பின் அமெரிக்காவில் இனரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இத் தாக்குதல்கள் இரு மடங்காகிவிட்டதாக எப்.பி.ஐயே தெரிவித்துள்ளது.

that'stamil.com

Print this item

  ஐயோ ஐயோ ஒசாமா
Posted by: Jega - 12-01-2004, 04:05 AM - Forum: நகைச்சுவை - Replies (3)

நீண்ட தாடியும்
இலாவகமான முகமும்
ஒல்லியான மேனியையும் கொண்ட
ஒசாமா பின் லேடன் ச்ற்று நேரத்துக்கு முன் திருவிழாவிலே காணாமல் போய்விட்டார்
தகவல் தெரிந்தோர்
யாழ் இனையத்தளத்துடன் தொடர்புகொண்டு தகவல் தரவும்
நல்ல தகவலுக்கு புஸ் மாமாவால் தகுந்த சன்மானம் வழங்கப்படும்
இப்படிக்கு தாயார்.......... பாத்திமா ஒசாமா
அஸ்ஸலாம் அலைக்கும்

Print this item

  நாங்கள் உங்கள் பக்கத்திலிருந்து விலக நினைக்கிறோம்
Posted by: ஊமை - 12-01-2004, 03:21 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (3)

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கள் இணையத்தளத்தில் நாங்கள் எழுதும் கருத்துக்களுக்கு நாமே பொறுப்பாளிகள். அந்த வகையிலே நாம் எழுதும் கருத்துக்களை நீங்கள் திருத்தம் அல்லது தடை செய்தால் அதன் பின்னர் அது எப்படி எங்கள் கருத்தாகும். கருத்துக்களம் என்றால் நாங்கள் எங்கள் தனிப்பட்ட கருத்துக்களை எழுதுவதே கருத்துக்களம் அதில் நாங்கள் உங்களுக்குப் பிடித்த கருத்துக்களை மட்டுமா எழுத வேண்டும் ?? அப்படிஎன்றால் மோகன் அண்ணா உங்களிடம் ஜனநாயகம் இல்லையே ? நாங்கள் ஒருகருத்தை எழுதினால் அதை நீக்காது பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அவர்களின் கருத்தையும் எழுதவிடவேண்டும். ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு இணையத்தளம் நடாத்தும் நீங்கள் இப்படி ஜனநாயகம் இல்லாது நடக்கலாமா ?

அடுத்தது திரு. கறுணா என்பவர் எம்மோடு தகாத வார்த்தைகளால் பேசுகிறார் அதனால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இல்லையென்றால் இத்தோடு நிறுத்திவிட்டு எந்த பக்கங்ககளில் ஜனநாயகம் உள்ளதோ நாங்கள் அங்கு சென்று எமது கருத்துக்களை எழுதுவதை தொடருகிறோம்.

இப்போது எந்தப் பக்கங்கள் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறோம்.

ஊமை

Print this item

  பாரீசில் காட்சியும் கலந்துரையாடலும்
Posted by: AJeevan - 12-01-2004, 12:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (28)

<img src='http://www.yarl.com/forum/files/lee05122004_nbsp_copy.jpg' border='0' alt='user posted image'>

Print this item