| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 184 online users. » 0 Member(s) | 181 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| மணிமேகலையின் குறும்பட காட்சியும் - கலந்துரையாடலும் |
|
Posted by: mukilan - 11-29-2004, 06:49 PM - Forum: குறும்படங்கள்
- Replies (2)
|
 |
பாரிசில் குறும்ட இயக்குநர், பெண்ணிலைவாதி, கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்ட லீனா மணிமேகலையின்
குறும்படங்களுடனான
"காட்சியும் - கலந்துரையாடலும்" நிகழ்வு எதிர்வரும் 05. 12. 2004 ஞாயிறு 17.00 மணிக்கு சலனம் சார்பில் நடைபெறுகிறது.
ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்!
நடைபெறுமிடம்:
ASCES
5 Place de la Bastille de Stalingrad
75010 Paris
Mo: Jaures
|
|
|
| புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் |
|
Posted by: MEERA - 11-28-2004, 08:26 PM - Forum: புலம்
- Replies (59)
|
 |
தை 2005 முதல் இங்கிலாந்தில் இருந்து ஆரம்பமாகிறது ஒரு வானொலி பொழுது போக்கினை மையமாகக் கொண்டு.
இவ் வானொலியானது அரசியலை தவிர்த்து பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?
நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.
உரியவர்கள் கவனத்தில் எடுப்பார்கள்.
இவ் வானொலி ஆரம்பிக்காடுவதற்கு முன்னர் எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினால் இவ் வானொலியுடன் தொடர்புடையவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சுலபமாக இருக்கும்.
நன்றி-
(இந்த தகவலை மின்னஞ்சல் மூலம் தந்த தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் அன்பு உறவிற்கு நன்றிகள்.)
[/b]
|
|
|
| பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது |
|
Posted by: aathipan - 11-28-2004, 11:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
துõத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
செய்யாத குற்றத்திற்காக 19 மாதம் சிறையிலிருந்தேன். அப்போது, என்னை வெளியே கொண்டு வாருங்கள் என்று யாருடைய தயவையும் நாடவில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருமங்கலம் கூட்டத்தில் பேசியது உண்மை தான். ம.தி.மு.க., தமிழக தமிழர் நலனில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது.
இலங்கையில் தற்பொழுதுள்ள சந்திரிகா அரசு தமிழர் பிரச்னையில் நல்ல தீர்வைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ரணில் விக்ரமசிங்கே தீர்வுக்கு முயற்சித்தார். ஆனால், சந்திரிகா மிகத் தந்திரமாக பார்லி.,யைக் கலைத்து அமைச்சர் பதவிகளைப் பறித்தார். பெருமளவு ஆயுதங்களை பாக்., சீனா போன்ற நாடுகளிலிருந்து வாங்கி குவித்துள்ளார். எந்த நேரத்திலும் மீண்டும் அவர் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடும். ஈழத்தில் அமைதி பிறக்கட்டும். அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழட்டும். இது தமிழக மக்களின் விருப்பம். சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதில் தவறேதுமில்லை. இலங்கையில் மீண்டும் போர் மூண்டு அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுவிடக்கூடாது என்பது தான் என் கவலை.
துண்டு பிரசுரம்: திருமங்கலத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நான் பேசியது என்ன என்பதை என் மீதான பொடா வழக்கு முடிந்ததும் துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகிப்பேன்.
முதல்வர் ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் நியாயமாக நடக்காது என வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது சுப்ரீம் கோர்ட். தமிழகத்தில் எங்கே நீதியிருக்கிறது? எனவே, ஜெ., தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.
|
|
|
| இப்ப பந்து சந்திரிகா பக்கம் என்ன செய்ய போகிறா? |
|
Posted by: Nada - 11-28-2004, 11:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (20)
|
 |
மேதகு பிரபாகரன் உரையிலருந்து ஒரு பகுதி
இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
1977 இலை ஒரு வர் அறைகூவல் விட்டார் போரா சமாதானமா என்று அப்போது அப்பாவி மக்களின் சொத்தக்களை அழித்துவிட்டு சவால்விட்டவர் ஜே.ஆர் காலம்தான் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு அதே பதவியிலிருக்கும் சந்திரிகாவுக்கு தலைவர் அறைகூவல் விடுத்துள்ளார். இடம்பொருள்பார்த்து அடிப்பதில் தலைவருக்கு நிகர் தலைவரேதான். 30 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள் தலைவருடைய மதிநுட்பம் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்ப அம்மா சுடுதண்ணி குடித்த --- மாதிரி ஓடித்திரிவா என்ன செய்வது வினைவதைத்ததேசம்அதைத்தானே அறுவடை செய்யவேண்டும்.
ஆனால் அவ கடைசிவரைக்கும் திருந்த மாட்டார் .தமிழீழம் தந்துதான் அவ இருப்பார்
இல்லாவிட்டால் அவவுக்கு மனம் ஆறுதலடையாது. அவ தன்னுடைய எஜமானர்களை உலக அரங்கில் மீண்டும் ஒரு தடவை அவமானப்படுத்தித்தான் விடுவா ..இப்ப பந்து சந்திரிகா பக்கம் என்ன செய்ய போகிறா?
|
|
|
| பேரன்புடையீர் |
|
Posted by: thiru - 11-27-2004, 08:38 PM - Forum: அறிமுகம்
- Replies (27)
|
 |
பேரன்புடையீர்,
வாசலில் நின்று வந்தனம் சொல்லி வந்ததன் நோக்கம் சொல்லி வந்தது யார் எனச் சொல்லி நுழையவேண்டியவிடத்து சொல்லாது நுழைந்தமைக்குப் பொறுத்தருள்வீர்.
எனது பெயர் திரு என்பதோடு சரி. அப்பாற் சொல்ல என்வசம் எந்தச் சிறப்பும் கிடையாது.
ஏதோ என்னாலியன்றளவு செய்யமுடிவதைச் செய்துகொள்கிறேன்.அம்மட்டே!
ஆதலின் இத்துடன் எனது அறிமுகத்தை நிறைவுசெய்கிறேன்.
-திரு
|
|
|
| கார்த்திகைப் புூ புூத்திடும் நாள் |
|
Posted by: thiru - 11-27-2004, 08:20 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
[size=18]கார்த்திகைப் புூ புூத்திடும் நாள்
<b>--புதுவை இரத்தினதுரை--</b>
எழுதும் வரிகளே உருகிக் கசியும்
கவிதை இவர்.
அடையாளமற்றிருந்த இனமொன்றின்
முகவரி இவர்.
விதி வலியதல்ல
வலியதே விதியாகிறது என
எழுதிய புதுவிதியிவர்.
பிறப்புக்கு இறப்பால் அர்த்தம் சொல்லி
சிறப்புற்ற சீவன்முத்தர்கள்.
தலை சாய்த்து வளைந்தாடுவதே
வாழ்வெனக் கருதும் நாணற்புற்களிடையே
நிமிர்ந்தெழும் வழியுணர்த்திய நிர்மலர்கள்.
எப்படியென்றும்
எங்கணம் சாத்தியமானதென்றும் அறிய
நாளைய ஆய்வுக்காரர்களுக்காக
நடப்பட்டுள்ள கல்வெட்டுக்கள்
நேற்று இருந்ததெனவும்
இடையில் இல்லாதழிந்ததெனவும்
மீண்டும் இன்று முளைத்தெழுந்ததெனவும்
சொல்லப்படும் இனமானத்தினதும்
வீரத்தினதும் சொந்தக்காரர்கள்.
குச்சுக்குடிசைகளின் கூரைமேற் சுடர்ந்த
தாமிர கலசங்கள்.
அறியப்பட்டனவாகவும்
அதிகம் அறியப்படாதனவாகவும்
கல்லறை கிடக்கும் காலச்சாட்சிகள்.
வீரத்தின் மணிமுடி தரித்து
ஒரு காலம் இப்படியும் இருந்தோமெனச் சொல்லி
புதைக்கப்பட்ட காலப்பெட்டகங்கள்
ஈழத்தமிழருக்கு எழுப்பம் அருளிய
தேவப் பிறவிகள்
படைகொண்ட பரம்பரையென
மீண்டும் நிறுவிய மகுடர்.
சிதையுண்டு சிதிலமாகிய தேசிய கோபுரத்தை
புனரமைத்து வர்ணம் புூசியோர்.
இவனால்இதுமுடியுமெனக் கணித்து
தலைவனுக்கு இடது வலது ஆனோர்.
சாவு வாழ்வின் முடிவல்ல
தொடக்கமுமாகலாம்எனச்சொல்லி
வாழ்வுக்குப் புதிதான வழிகாட்டிகள்.
வருடமொரு கவிதையால்
இவர்களை வரையமுடியாது.
கார்த்திகை மாதத்தில் புூப்பதால்
மற்றவைகளிலிருந்து மாறுபட்டு
அதிசயமாய் விளைவதால்
கானகத்தில்கரைந்துறைவதால்
கழுத்தில் நஞ்சணிவதால்
மஞ்சளும்சிவப்புமாய் மலர்வதால்
கார்த்திகைப் புூவே
மாவீரருக்குக் கனகச்சிதமானது.
இவரே கார்த்திகைப் புூ
மாவீரர் நாள்
கார்த்திகைப் பூ புூத்திடும் நாள்.
<b>நன்றி: </b>ஈழநாதம் (27-11-2004)
<b>கணனித் தட்டச்சு :</b> திரு (ரஷ்யா)
|
|
|
|