| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 326 online users. » 0 Member(s) | 324 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,072
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,499
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| சவுதியில் அமெரிக்க தூதரகத்துள் தீவிரவாதிகள்...! |
|
Posted by: kuruvikal - 12-06-2004, 03:43 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40601000/jpg/_40601061_jeddah203.jpg' border='0' alt='user posted image'>
<b>ஜெட்டா யுஎஸ் தூதரகத்தில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை பிடித்தனர்</b>
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் அமெரிக்கர்கள் உள்பட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளதாகத் தெரிகிறது.
இன்று பிற்பகலில் தூதரகத்தின் அருகே பலத்த குண்டு வெடிப்புச் சத்தமும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் சுடும் சத்தமும் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் தீவிரவாதிகள் தூதரகத்துக்குள் புகுந்துவிட்டனர்.
இப்போது அவர்களுக்கும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் மற்றும் சௌதி போலீசாருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. தூதரக வளாகத்துக்குள் இருந்து தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டவாறு உள்ளது.
அந்தப் பகுதிக்கு சௌதி ராணுவ கமாண்டோக்கள் விரைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு காரணமாக தூதரகத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்து எரிந்து கொண்டுள்ளது.
தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கரோல் காலின் கூறுகையில், இன்னும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து ரியாதிலும், தரன் நகரிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன என்றார்.
வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் சூசன் பிட்மேன் கூறுகையில், இந்த துப்பாக்கிச் சண்டையில் தூதரகத்துக்குள் எத்தனை சாவுகள் நேர்ந்தன என்று தெரியவில்லை. எத்தனை அமெரிக்கர்கள் இறந்தார்கள் என்றும் தெரியவில்லை என்றார்.
சௌதியில் 2003ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரை 90 பேர் வரை அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதலில் பலியாகியுள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.
thatstamil and bbc.com
|
|
|
| கட்டுநாயக்க விமானப்படைத்தளத் தாக்குதல் வீடியோ விபரணம் |
|
Posted by: Sriramanan - 12-06-2004, 08:59 AM - Forum: குறும்படங்கள்
- Replies (22)
|
 |
கட்டுநாயக்க விமானப் படைத் தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் மீது நடாத்தப்பட்ட வீரமிகு தாக்குதலின் வீடியோ விபரணம்.
இந்த வீடியோ விபரணத்தில் தாக்குதலை நடாத்தியவர்களால் ஒளிபதிவு செய்யப்பட்ட சில காட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நன்றி: ஈழத்தமிழ் இணையம் http://www.eelatamil.com
தற்காலிக ஒரு முயற்சியாகவே கட்டுநாயக்க விடியோ விபரணத்தை ஈழத்தமிழில் போட்டிருந்தேன். ஆனால் எனது எதிர்பர்பை மீறி அதிக நேயர்கள் விடியோ விபரணத்தைப் பார்த்ததால் தளத்தில் பாண்ட்வித் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒருசில நாட்களில் கட்டுநாயக்க விடியோ விபரணம் உங்களுக்காக மீண்டும் தளத்தில்............
|
|
|
| மெல்ல வாய் திறக்கும் தமிழகம் |
|
Posted by: kuruvikal - 12-06-2004, 08:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (78)
|
 |
அண்மையில் தமிழக அரசியல் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் வன்னி சென்று மாவீரர் தின நிகழ்வுகளிலும் பின்னர் கொழும்பில் நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழர் கூட்டமைப்பினரையும் சிறீலங்காப் பிரதமரையும் சந்தித்துப் பேசியும் தனது உள்ளக் கிடக்கைகளைக் கொட்டி இருந்தார்....
இதோ இப்போ பல கிராமியக் கதைகளை திரைக்குக் கொண்டு வந்த தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் குரல் இப்படி வருகிறது....
[b]புலிகளின் உயிர் தியாகம்: பாரதிராஜா பாராட்டு
தமிழ் ஈழம் அமைவதற்காக விடுதலைப் புலிகள் செய்த உயிர்த் தியாகம் போற்றத்தக்கது என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
இலங்கை ராணுவத்தினருடனான சண்டையில் இறந்த 17,800 புலிகளின் நினைவைப் போற்றும் விதமாக யாழ்ப்பாணத்தில் மாவீரர் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கைக்கு பாரதிராஜா பேட்டியளித்தார். அந்தப் பேட்டியை புலிகள் ஆதரவு இணைய தளம் வெளியிட்டுள்ளது.
பேட்டியில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:
நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனது பிறந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வில் இருந்தேன். போரினால் ஏற்பட்ட இழப்புகளை நேரில் பார்க்கும்போது மனதில் மிகுந்த பாரம் உண்டானது.
இத்தகைய இழப்புகள்தான் இந்த மண்ணில் வீரத்தை விதைத்துள்ளது எனக் கருதுகிறேன். மாவீரர்கள் தினத்தில் கலந்து கொண்டது குறித்த பெருமைப்படுகிறேன்.
புலிகளின் உயிர்த் தியாகம் போற்றத்தக்தக்கது. கடந்த 30 ஆண்டுகளாக தங்களது கொள்கைளை அடைய எவ்வளவு தீரத்துடன் புலிகள் போராடினார்களோ, அதேபோல் தொடர்ந்து போராடினால் தமிழ் ஈழத்தை அடைவது உறுதி.
தமிழக மக்கள் அரும் சாதனைகளையும், மகத்தான வளர்ச்சிகளையும் கண்டுள்ளனர். ஆனால் அவற்றை ஈழத் தமிழர்களின் சாதனைகளுடன் சிறியதாகி விடும். உலகத்தின் எந்த மூலைக்கும் சென்று, சாதனை படைத்த தமிழர்களை சந்தித்தால் அவர்கள் இலங்கை தமிழர்களாக இருப்பதைக் காண முடியும்.
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுடன் நான் உறவாடியபோது, ஒவ்வொருவர் மனதிலும் சொல்வதற்கு ஏராளமான சோகக் கதைகள் இருந்தன.
மாவீரர் தினத்தில் நான் கலந்து கொண்டது என் மனதை உருக்கி விட்டது. போரில் உயிரிழந்த மாவீரர்களின் கல்லறைகளைக் காணும்போது, எனது முதுகுத் தண்டு சிலிர்த்துவிட்டது என்று கூறினார்.
thatstamil.com
|
|
|
| நார்வே தூதுக் குழுவினர் மீது குற்றச்சாட்டு |
|
Posted by: aathipan - 12-06-2004, 07:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகவும், இலங்கை அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையிலும் நார்வே தூதுக் குழுவினர் செயல்படுகின்றனர் என்று ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சி ஜே.வி.பி., என அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா. விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது இக்கட்சி. தற்போது, நார்வே தூதுக் குழுவினர் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளது.
இக்கட்சியின் பொதுச் செயலாளர் சில்வின் சில்வியா கொழும்பில் இருக்கும் நார்வே தூதருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள விவரங்களை "சண்டே லீடர்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
நார்வே துõதுக் குழுவினர் மீது எங்கள் கூட்டணி அரசு கொண்டிருந்த நம்பிக்கை மொத்தமாக வீழ்ந்து விட்டது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தூதுக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் தனி ஈழம் அமைவதற்கே ஆதரவாக உள்ளன. இவ்விஷயத்தில் நீங்கள் இரட்டை நிலையை கடைபிடித்து வருகிறீர்கள். இதன்மூலம் இலங்கை அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டீர்கள். மேலும், புலிகளின் கடற்படை பிரிவிற்கு பயிற்சி அளிப்பதிலும், ஆஸ்லோ மாநாட்டில் புலிகள் நிதியுதவி திரட்டவும் உதவி செய்துள்ளீர்கள்.
இவ்வாறு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அதே பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு செய்தியில், ஜே.வி.பி., சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம், இலங்கை அரசின் கருத்துக்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், ""புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் நார்வே தூதுக் குழுவினர் நல்லெண்ணத்துடனும், கருணை அடிப்படையிலும் செயலாற்றுகின்றனர். ஜே.வி.பி.,யின் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளும் கூட்டணி அரசுக்கும் சம்பந்தமில்லை,'' என்று கூறியுள்ளார்.
|
|
|
|