![]() |
|
நார்வே தூதுக் குழுவினர் மீது குற்றச்சாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நார்வே தூதுக் குழுவினர் மீது குற்றச்சாட்டு (/showthread.php?tid=6273) |
நார்வே தூதுக் குழுவினர் மீது குற்றச்சாட்டு - aathipan - 12-06-2004 கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகவும், இலங்கை அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையிலும் நார்வே தூதுக் குழுவினர் செயல்படுகின்றனர் என்று ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சி ஜே.வி.பி., என அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா. விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது இக்கட்சி. தற்போது, நார்வே தூதுக் குழுவினர் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளது. இக்கட்சியின் பொதுச் செயலாளர் சில்வின் சில்வியா கொழும்பில் இருக்கும் நார்வே தூதருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள விவரங்களை "சண்டே லீடர்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: நார்வே துõதுக் குழுவினர் மீது எங்கள் கூட்டணி அரசு கொண்டிருந்த நம்பிக்கை மொத்தமாக வீழ்ந்து விட்டது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தூதுக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் தனி ஈழம் அமைவதற்கே ஆதரவாக உள்ளன. இவ்விஷயத்தில் நீங்கள் இரட்டை நிலையை கடைபிடித்து வருகிறீர்கள். இதன்மூலம் இலங்கை அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டீர்கள். மேலும், புலிகளின் கடற்படை பிரிவிற்கு பயிற்சி அளிப்பதிலும், ஆஸ்லோ மாநாட்டில் புலிகள் நிதியுதவி திரட்டவும் உதவி செய்துள்ளீர்கள். இவ்வாறு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அதே பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு செய்தியில், ஜே.வி.பி., சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம், இலங்கை அரசின் கருத்துக்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், ""புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் நார்வே தூதுக் குழுவினர் நல்லெண்ணத்துடனும், கருணை அடிப்படையிலும் செயலாற்றுகின்றனர். ஜே.வி.பி.,யின் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளும் கூட்டணி அரசுக்கும் சம்பந்தமில்லை,'' என்று கூறியுள்ளார். - Kanani - 12-07-2004 அனுசரணை பணியை தொடருமாறு சிறிலங்கா அரசு நோர்வேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளில் ஸ்கன்ரி நேவிய நாடான நோர்வே அனுசரணை பணியாற்றி வருவது குறித்து தென்னிலங்கையில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. நியாயத்தின்பால் எவரும் நிற்கும்போது அநியாய வாதிகளுக்கு அது அருவருப்பாக சூத்திரமாகத்தான் தெரியும். :!: சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியாற்றுவதற்கு முதலில் அழைப்பு விடுத்தவர் ஜனாதிபதி சந்திரிகாதான். :!: பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் நோர்வேயின் அனுசரணையை தாறுமாறாக விமர்சனம் செய்தார். பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். :evil: நோர்வே மீது ஜனாதிபதிக்கு ஒரு கசப்பான பார்வையுடன் நோக்கத் தொடங்கினார். சிங்கள இனவாதப் பிக்குகள் கொழும்பிலுள்ள நோர்வே மீது து}தரகம் வரைச் சென்று ஆர்ப்பாட்டம்; செய்து அட்டகாசம் புரிந்து நோர்வேக் கொடியை எரித்து நாசகார நடவடிக்கையில் ஈடுபட்ட போதெல்லாம் அம்மணி மௌனமாகவே இருந்தார். தான் நினைத்தது தமது அபிலாசைகளை இந்த இனவாதப் பிக்குகள் நிறைவேற்றுகின்றனர். என்ற உள்ளுர மகிழ்ச்சி அப்போது அம்மணிக்கு ஏற்பட்டது. :evil: அதற்கு ஒருபடி மேலாக போரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி. ஹெல உறுமய போன்ற கட்சிகள் நோர்வேயின் அனுசரணைப் பணியை துவசம் செய்யும் வகையில் அட்டகாசமாக தென்னிலங்கையில் முழக்கமிட்டனர். நோர்வேயின் சமாதானத் து}துவர் சொல்ஹெய்ம் மீது போலிச் சாயம் புூசி அவது}றான கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன் பின்னர் ஐ.தே.முன்னணி அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியைப் பிடித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசும் அனுசரணைப்பணியை உதாசீனம் செய்து உதறித் தள்ளிவிடவில்லை சர்வதேச சமூகத்தின் பார்வை நோர்வேயின் சமாதான அனுசரணை பணி குறித்து திருப்தியான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதால் புறந்தள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் நோர்வே பிரதிநிதிகள் கொழும்பு வரும்போது அவர்களுக்கு வழங்கும் கௌரவங்கள், வரவேற்பு என்பன எந்தளவிற்கு இன்றைய சிறிலங்கா அரசு நோர்வே மீது அக்கரை காட்டுகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளன. நோர்வே தரப்பினர் இருதரப்புச் சமாதான முயற்சிகளில் காட்டிவரும் வேகம், ஆர்வம் சிறிலங்கா அரச தரப்பிடம் இல்லாத ஒரு சூழ்நிலையில் நோர்வேயின் கருத்துக்களுக்குச் செவிமடுத்துச் சமாதானப் பணியை முன்னேடுப்பதற்கு அரசு தயாராகவில்லை. தற்போது அரசின் ஒரு அங்கமாக செயற்படும் ஜே.வி.பி. நோர்வேயின் அனுசரணைப் பணியை படுமோசமாக விமர்சனம் செய்து வருகின்றது. நோர்வே அனுசரணையிலிருந்து மத்தியஸ்த நிலைக்கு வந்து விட்டதாகவும் தமது ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்துள்ளது. இந் நிலையில் நோர்வேயின் அனுசரணைப் பணியை தொடருமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. தலையாடாமல் வால் ஆடுவது போல் ஜே.வி.பி தன்னிச்சையாக செயற்படுவது ஒருபுறமிருக்க. சமாதானச் சூழல் தற்போது கேள்விக்குறியோடு இருக்கும் நிலையில் நோர்வேயின் அனுசரணைப் பணியை நிறுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரு சிக்கல் நிலையை உருவாக்கவே இன்றைய இனவாதிகள் வலை வீசியுள்ளனர் என எண்ணத் தோன்றுகின்றது. எனவே ஆத்திரம் கொண்டு அனுசரணையாளர்களைப் பேசினால் மட்டும் எதுவும் சாதித்து விட முடியாது. எனவே இன்றைய சிறிலங்கா அரசு சமாதானத்தை முன்னெடுப்பதாயின் அனுசரணை பணியாற்றும் நோர்வேயின் கருத்துக்களுக்கும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் - MEERA - 12-07-2004 நன்றி |