Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 222 online users.
» 0 Member(s) | 219 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,394
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,280
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,622
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,115
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,521
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  நேபாளத்தில் மன்னரில் ஆட்சிப்பிடி இறுகுகிறது
Posted by: Mathan - 02-04-2005, 12:26 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

நேபாளத்தில் மன்னரில் ஆட்சிப்பிடி இறுகுகிறது - எதிர்ப்பை ஒடுக்க அடக்குமுறையா?

நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவத்தின் ஆதரவுடன், ஆட்சியில் தனது பிடியை இறுக்கிவரும் வேளையில், அவரின் செயல்களுக்கு எதிரான கருத்துக்கள், ஈவுஇரக்கமின்றி அடக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

நேபாளத்தின் மையப்பகுதி நகரான பொக்காராவில், சென்ற செவ்வாய்க்கிழமை, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இராணுவம், நள்ளிரவில், மாணவர்களின் விடுதியில் அதிரடிச் சோதனை நடத்தியதாக, நம்பத்தகுந்த தரப்பினர் கூறியதாக, நேபாளத்தின் தேசீய மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது.

விடுதிக்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்துடன் அழுகுரல்கள் கேட்டதாகவும், பல மாணவர்கள் காயமடைந்திருப்பதாக நம்பப்படுவதாகவும், இந்தத் தரப்பினர் தெரிவித்ததாக, மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

குறைந்தது 250 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 50 க்கும் அதிகமானோர் இராணுவப் படைமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது.

தொலைபேசித்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிபிசியின் பிராந்திய நிருபர்கள் எல்லையூடாக இந்தியாவிற்குள் சென்றுதான் செய்திகளை அனுப்புகின்றனர்.

நேபாளத்தின் மிகப்பெரிய கட்சியான நேபாள காங்கிரஸின் 21 தலைவர்கள் மேற்கு நகரான காஞ்சன்பூரில் கைது செய்யப்பட்டு, கட்சியின் பொதுச் செயலாளரும் இன்னோர் மேற்கு நகரில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக எமது நிருபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னர் ஆட்சியைப் பிடித்ததும் ஆற்றிய உரைக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருக்கிறது. ஓர் முக்கிய செய்தித்தாளின் அலுவலகத்தில், இராணுவ அதிகாரிகள் கட்டுரைகளை வரிக்கு வரி பரிசோதிக்கின்றனர். இதற்கு அடுத்திருக்கும் தொலக்காட்சி நிலையத்தில் ஆயுதந் தாங்கிய துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

BBC தமிழ்

Print this item

  சுதந்திர தினம்
Posted by: Mathan - 02-04-2005, 12:22 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (11)

இன்று இலங்கையின் சுந்திர தினம். இந்த பக்கத்தை படித்து பாருங்கள்,

http://mauran.blogspot.com/2005/02/blog-post_04.html

Print this item

  வெஜிட்டேரியன் டி.வி.டி.
Posted by: Vaanampaadi - 02-04-2005, 09:06 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/4-2-2005/04veg.jpg' border='0' alt='user posted image'>
வெஜிட்டேரியன் டி.வி.டி.

ஜப்பான் விக்டர் நிறுவனம் புதிய வீடியோ டிஜிட்டல் டிஸ்கை உருவாக்கி இருக்கிறது. 8 செ.மீ. விட்டம் கொண்ட இந்த வீடியோ டிஸ்க்கில் ரசாயன பொருள்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் கூட மிகக் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முற்றிலும் தாவரங்களை கொண்டே இது தயாரிக்கப்பட்டுள்ளது. பழங்களில் உள்ள பாலி லேக்டிக் அமிலம் மற்றும் தாவர இழைகள் ஆகியவற்றை கொண்டே இந்த டி.வி.டி. மற்றும் சி.டி. ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது.

Maalaimalar

Print this item

  தமிழ் டீவீ நாடகங்களால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெ
Posted by: KATPUKKARASAN - 02-04-2005, 08:00 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (11)

தமிழ் டீவீ நாடகங்களால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகமாகிறது. ஏற்பீர்களா?

Print this item

  பாலியல் - மேலை நாகரீகத்தின் கொடுமை!
Posted by: Mathan - 02-04-2005, 05:07 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

பாலியல் - மேலை நாகரீகத்தின் கொடுமை!

ஜெர்மனியின் வேலைவாய்ப்பு சட்டப்படி எந்தவொரு வேலை நிறுவனத்தில் இருந்து வரும் வேலை அழைப்பையும் மறுத்தால், சில வேலைவாய்ப்பு சலுகைகளை இழக்க நேரிடும். ஜெர்மனியில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதால் அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து, வேலையிழந்ததால் உணவகப் பணியாளராகப் பணி புரியும் ஒரு பெண், ஒரு பாலியல் விடுதியில் இருந்து வந்த 'வேலை' அழைப்பை ஏற்க மறுத்ததால் வேலைவாய்ப்பு சலுகைகளை இழக்க நேரிடுமாம். இதே கொடுமைதான் நெதர்லாண்ட்ஸிலும் போலிருக்கிறது.
டெலிக்ராபில் வந்த செய்தியின் சுட்டி.

என்னதான் நடக்கிறது உலகில்?

மூலம் சுதர்சன்

Print this item

  சுமை
Posted by: shiyam - 02-04-2005, 02:58 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

சுமை
சுகமானதா
இழப்பில் ஏன்
அழுகிறீர்கள்
சுமை சோகமானதா
காதலை ஏன்சுமக்கிறீர்கள்
சுமையை வெறுக்கிறீர்களா
கர்ப்பத்தை ஏன் காக்கிறீர்கள்
சுமை இன்பமென்றால்
பிரிவில் புலம்புகிறீர்கள்
சுமைகள் சிலவிரும்பியே
சுமக்கிறோம்
உறவுகள் நண்பர்கள்
சில விருமபாமல்
சுமக்கிறோம்
எங்கள் அந்தரங்கங்கள்
நாம் பிறந்ததே
சுமக்கத்தான்
சுகமோ சோகமோ
இரண்டும்
இறக்கிவைக்க முடியாதவை

Print this item

  இன்றைய &quot;யாழ்களம்&quot;?
Posted by: cannon - 02-03-2005, 09:43 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (62)

இன்றைய யாழ்கள கருத்துக்கள், கருத்தாளர்கள் சம்பந்தமான எனது மனதில் பட்டதை உங்களோடு பகிர விரும்புகிறேன். இது யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்காகவோ அல்ல, மாறாக யாழ்கள சிறந்த கருத்தாடல்கள் மூலம் பலரையும் கவர வேண்டுமென்பதே!

என்னைப் பொறுத்தவரை இங்குள்ள கருத்தாளர்களை.....

1) எங்கிருந்தாவது வெட்டியொட்டும் ஒரு சிலர்.
2) தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் கருத்தெழுதும் ஒரு சிலர்.
3) கருத்துகளுக்கு தேடித்தேடி "நன்றி", "நன்றி அண்ணா", ... எழுதும் ஒரு சிலர்.
4) கருத்தேயற்று எழுத முற்படும் ஒரு சிலர்.
5) சுய விளம்பரதாரிகள்.
6) குழப்பவாதிகள்.
7) ஆங்கில மோகவாதிகள்........

இப்படிப் பல வகைகள். இப்படியானவற்றிலிருந்து எப்படியாக கருத்துக்களத்தை ஒரு ஆரோக்கியமான களமாக மாற்றுவது? உங்கள் கருத்துக்களைஆரோக்கியமாக பகிருங்கள்.

இன்று பல நாடுகளிலிருந்து பலராலும் கருத்துக்களம் பார்வையிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக "இளைப்பாறுகளம்", "அறிவியற்களம்" போன்றன மிகத்தரமான பக்கங்களாகவே இருக்கும் போது "சிந்தனைக்களம்", "தமிழ்க்களம்" ஏதோ திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை நாமெல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் "யாழ் களத்தை" ஓர் ஆக்கபூர்வமான, முதல்தர தமிழ்த் தகவல் இணையமாக மாற்றலாம்.

Print this item

  உலக நடிகவேள்
Posted by: sethu - 02-03-2005, 08:50 PM - Forum: புலம் - Replies (16)

என்ன கருத்து வேறபாடு அவர் இருவரும் இணைபிரியாத சகோதரங்களே. என்டாலும் இதுக்கை ஏதாவது சளி ஓடுவம் என்டு ரி.பி.சி காறன் பாத்திருப்பார்..

Print this item

  &quot;Baby 81&quot;ன் உண்மையான பெற்றோர்கள் யாரென அடுத்தவாரம் தெரியவரும
Posted by: KaviPriyan - 02-03-2005, 08:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

[b]<span style='font-size:30pt;line-height:100%'>\"Baby 81\"ன் உண்மையான பெற்றோர்கள் யாரென அடுத்தவாரம் தெரியவரும் என நம்பப்படுகின்றது </span>


மேலதிக செய்திகளுக்கு
www.tsunamiineelam.com

Print this item

  த மி ழ் இ ந் தி யா
Posted by: aathipan - 02-03-2005, 08:09 PM - Forum: தமிழும் நயமும் - Replies (9)

<span style='font-size:25pt;line-height:100%'>த மி ழ் இ ந் தி யா


ஆக்கியோர் :

யாழ்ப்பாணத்து நவாலியூர்

திரு. ந. சி. கந்தையா பிள்ளை</span>

Print this item