Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 554 online users.
» 0 Member(s) | 551 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,207
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  வணக்கம் நான் மில்லர்
Posted by: miller - 02-08-2005, 01:17 AM - Forum: அறிமுகம் - Replies (20)

வணக்கம் நான் மில்லர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  பொறுமை சீண்டப்படுகின்றது.
Posted by: Thaya Jibbrahn - 02-08-2005, 12:55 AM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

மீண்டும் மீண்டும்
எங்கள்
பொறுமை சீண்டப்படுகின்றது.

மீண்டும் மீண்டும்
கண்மணிகள்
பறிக்கப்படுகின்றது.

சமாதானத்தின் பெயரால்
எங்கள் தலையில்
சோகம் திணிக்கப்படுகின்றது.

எங்கள் பொறுமை
எல்லை கடந்து
எதிரிகளை இல்லாமற் செய்யும்
வெறியாகிறது.

ஆனாலும் ஆனாலும்
தலையை மிஞ்சும் வாலல்லவே
நாங்கள்-

பொறுத்திருக்கின்றோம்
பெருந்திருவே

ஆனாலும்
எங்கள் சின்ன சின்ன
மூளைகளுக்கு

சமாதானம் சமாதானம்
என்று
ஒன்றொன்றாய் இழப்பதிலும்

சண்டையென்று சொல்லி
மொத்தமாய் அழிவதெனிலும்
மானமுள்ளதாய் படுகின்றது.

என்ன செய்வதாய் உத்தேசம்.??
எதுவெனினும்
நாங்கள் தயார்
உன் பின்னால் அணி திரள-

எங்கள் அடலேறுகளை
வீதிகளில் இழக்கின்ற
வேதனைகள் இனியும் வேண்டாம்.

-தயா ஜிப்ரான் -

Print this item

  மட்டக்களப்பில் சம்பவம்.
Posted by: Thaya Jibbrahn - 02-07-2005, 08:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (12)

www.wtrFm.com

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாமல்கம பிள்ளையாரடி என்ற இடத்தில் இன்று இரவு இடம் பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டஅரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன் உட்பட 4 போராளிகளும் வாகன சாரதியொருவரும் உயிரிழந்துள்ளார்கள்.

வன்னியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் வாகனத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் அவரது மெய்க்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் போராளியொருவரும் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயக்தின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் நாமல்கம என்னும் கிராமத்திலுள்ள பிள்ளையார்கோவிலுக்கு காணிக்கை செலுத்தி விட்டு வாகனத்தில் ஏறிய சமயம் இனந் தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது வரை எத்தகைய கருத்துக்களும் வெளியாகவில்லை.

Print this item

  நீ?????
Posted by: shiyam - 02-07-2005, 08:25 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

அன்றொரு நாள்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்
கொண்டாடினோம்
குதூகலித்தோம்
குட்டி கரணமடித்தோம்
வந்து லீழ்ந்தது எமது
வாய்க்கரிசியென்றும்
மண்ணெண்ணெய் எம்
மண்ணை கொழுத்த
என்று தெரியாமல்
வந்தோரை வரவேற்று
மாலைகள் மரியாதைகள்
ஒருவன் ஏதோ சென்னான்
ஓன்றும்புரியவில்லை
ஒருவர் மெழி யெர்த்தார்
கவலை வேண்டாம்
காப்பாற்றவந்துள்ளோம்
நன்றாய் உங்களை
பார்த்து கொள்வோம்
கைதட்டினோம்
பின்னர் தெரிந்தது
பார்த்து பார்த்து
கொன்றபோது
மொழிபெயர்ப்பு
பிழையென்று
தட்டிய கைகள்
கட்டிவீதியெங்கும்
விலங்குகள்போல்
கட்டிதூக்கியே
கோழிபோல்
உயிருடன் உரிக்கப்பட்டவர்
எத்தனை
அவர்களின்
காமக்கழிவுகழை
வெளியேற்ற
கழிவறைகளாய் போன
எம்மவர் எத்தனை
காணாமல் போனவர்
எத்தனை.
என்ன பார்க்கிறீர்கள்
உங்கள் கேள்வி
சிங்களவன் இத்தனையும்
செய்யவில்லையா??
செய்தான்
அவன் எம்எதிரி
அப்படித்தான்
செய்வான்
ஆனால்
நீ????????????????????????????????????

Print this item

  கௌசல்யன் கொல்லப்பட்டுள்ளார்
Posted by: Vaanampaadi - 02-07-2005, 08:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (19)

கௌசல்யன் கொல்லப்பட்டுள்ளார்

மட்டு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன....


Kousalyan killed in ambush

[TamilNet, February 07, 2005 16:08 GMT]
Mr. E. Kousalyan, head of the Liberation Tigers' political division for Batticaloa-Amparai district was killed in an ambush on the highway to Batticaloa Monday night around 7.45, Sri Lanka military sources said. Three persons who were travelling with him were killed and four were injured including two policemen in the attack which took place between Sri Lanka army garrisons at Welikanda and Punanai, northwest of Battialoa, according the SLA. Mr. Kousalyan was travelling with Mr. Ariyanayagam Chandra Nehru, former TNA MP for Amparai district, who is seriously injured.
The military identified two of the dead as Mathimaran and Kumanan, both members of the LTTE. The injured policemen were providing escort to Mr. Chandra Nehru's vehicle.

Liberation Tigers blamed paramilitary operatives working with the Sri Lankan armed forces for the attack.

Mr. Kousalyan is the most senior LTTE official to be killed after Colombo and Tigers signed a cease fire in February 2002.

He was returning from Vanni after discussing the expansion plans for Tsunami rehabiltation in the east, LTTE sources said.

Meanwhile, LTTE officials in Kilinochchi scotched rumours that Mr. S. Thamilenthi, Head of LTTE's FInancial Division, was among the killed in the ambush. "Mr. Thamilenthi is in Kilinochchi", one of them said.

LTTE officials added that Mr. Kousalyan was accompanied by Vinothan, Puhalan, Senthamil and Nithimaran in his journey Monday from Kilinochchi to Batticaloa.

Print this item

  பூவரசு 15வது ஆண்டுமலர் வெளியீடு
Posted by: sOliyAn - 02-07-2005, 05:22 PM - Forum: புலம் - Replies (6)

<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/bild1a.jpg' border='0' alt='user posted image'><img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/bild1.jpg' border='0' alt='user posted image'>
6ம் திகதி மாசி மாதம் 2005 அன்று பிறேமன்-குக்ரிங் நகரில் மாலை 5 மணியளவில், பூவரசு கலை இலக்கியப் பேரவையின் 'பூவரசு 15வது ஆண்டு மலர்' வெளியீடு சிறப்புற நிகழ்ந்தது.

பேரவை அங்கத்தவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் எனப் பலதரப்பட்ட பிறேமன் வாழ் மக்கள் குழுமியிருக்க, திருமதி உதயகுமார், திருமதி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் மங்கள விளக்கேற்ற, பூவரசு இனிய தமிழேட்டின் ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் வரவேற்புரையுடன் வெளியீட்டு வைபவம் ஆரம்பமாகியது. இந்துமகேஷ் அவர்கள் பூவரசின் ஆரம்ப நிகழ்வுகளை, அப்போது உடனிருந்து தொடர்ந்து உதவுபவர்களை, இடையில் மறைந்தவர்களை எல்லாம் நினைவுகூர்ந்தது மட்டுமன்றி, தொடர்ந்து பூவரசு பரவலாக வந்திருந்தவர்களின் அபிப்பிராயங்களையும் ஒத்துழைப்பையும் கோரினார்.

பூவரசு கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் பக்திப் பாடலுடன் ஆரம்பித்து பூவரசின் பணிகளையும் வளர்ச்சியையும் தொட்டுக்காட்ட, பூவரசு 15வது ஆண்டுமலரின் முதற்பிரதியை பிறேமன் தமிழாலய நிர்வாகி திருமதி கன்னிகா சந்திரபாலன் அவர்கள் வெளியிட, திரு தனபாலசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் சின்னஞ்சிறு மழலை செல்வி தாரிணி உதயகுமாரின் பாடல் சபையோரைக் கவர, செல்வன் ரமணராஜா செல்வரட்ணம், தனது பெற்றோர் ஊட்டிய தமிழை கடந்த 14 ஆண்டுகளாக செழுமையாக்கியது பூவரசே எனக் குறிப்பிட்டு, பூவரசின் ஆக்கங்களும் அதில் வரும் படைப்புகளும் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து இந்துமகேஷ் அவர்கள் எழுதிய பிரபலமான கிறீஸ்துவ பாடலொன்றை செல்வி பென்சியா ஞானசெல்வம் தன்னினிய குரலில் தர, திரு இராஜன் முருகவேல், திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி பெனடிக்ரா ஞானசெல்வம், திரு மகேந்திரமூர்த்தி, திரு உதயகுமார், திரு ரமேஷ் பத்மகரன், திரு தனபாலசிங்கம், திரு ஆனந்தராஜா, திருமதி சித்ரா தங்கராஜா, திரு ஞானசெல்வம் ஆகியோர் பூவரசு இனிய இதழின் சேவைகளையும் சாதனைகளையும் அது வருங்காலத்தில் ஆற்றவேண்டியன பற்றிய ஆலோசனைகளையும் தமது வாழ்த்துக்களையும் கூற, பூவரசு 15வது ஆண்டு மலரின் வெளியீடு ஒரு தரமான இலக்கிய நிகழ்வாக நிறைவெய்தியது.

பூவரசு இனிய இதழின் 15வது ஆண்டு விழா எதிர்வரும் சித்திரை மாதம் நிகழும் என அங்கே உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
Poovarasu, Postfach 103401, 28034 Bremen, Germany.

Print this item

  அரட்டை2
Posted by: kavithan - 02-07-2005, 02:55 PM - Forum: நகைச்சுவை - Replies (113)

மழலையும் கொட்டில் போட்டிட்டே.. தனிக்குடித்தனதுக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  அந்தமானில் இன்று மீண்டும் நில நடுக்கம்
Posted by: Vaanampaadi - 02-07-2005, 01:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

அந்தமானில் இன்று மீண்டும் நில நடுக்கம்

புதுடெல்லி, பிப். 7-

கடந்த டிசம்பர் மாதம் அந்தமானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த நில நடுக்கத்தை தொடர்ந்து அந்தமானில் தினம்தோறும் நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.

இதுவரை 320 முறைக்கு மேல் அந்தமானின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள கமோர்டாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. காலை 5.44 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகளாக பதிவானது.

இந்த பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள். இந்த நில நடுக்கத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

Print this item

  சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை
Posted by: Vaanampaadi - 02-07-2005, 01:20 PM - Forum: சினிமா - Replies (3)

சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை



சென்னை, பிப். 7- சினிமா பட தலைப்பில் கமலுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் -மும்பை எக்ஸ்பிரஸ், எஸ்.ஜே.சூர்யா தயாரித்து இயக்கும் -பெஸ்ட் பிரண்ட் ஆகிய 2 படங்களின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனை தமிழில் மாற்றி வைக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசும் அறிவித்து உள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய -விருமாண்டி படத்திற்கு முதலில் -சண்டியர்† என்று பெயர் வைத்தார். அதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் பெயர் மாற்ற மாட்டேன் என்று கமல் அறிவித்தாலும் பின்னர் -சண்டியர் என்ற பெயரை மாற்றி -விருமாண்டி என்று வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், -படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்பது சரி அல்ல. எதிர்த்து போராட்டம் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருக்காது என்று எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, டைரக்டர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கருத்து தெரிவித்தபோது,-படங்களின் பெயர்களை எதிர்த்து போராட்டம் நடத்த திரையுலகம் அனுமதிக்காது என்று குறிப்பிட்டு உள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவிடம் கருத்து கேட்டபோது கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கவிஞர் வைரமுத்து கூறும்போது,- தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது உணர்வோடு ஊறியதாக இருக்க வேண்டும். அதேசமயம் படத்துக்கு தமிழில்தான்; பெயர் வைக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. நியூயார்க், பின்லேடன் என்று படங்களுக்கு பெயர் வைக்கும்போது அதை யாரும் எதிர்க்க முடியாது. ஏனென்றால் அதற்கு மாற்று பெயர் கிடையாது. ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மட்டுமே அப்படம் வெற்றி அடையும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்றார்.

Print this item

  கம்ப்யூட்டர் வைரஸ் போல் செல்போன் வைரஸ்
Posted by: Vaanampaadi - 02-07-2005, 01:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

கம்ப்யூட்டர் வைரஸ் போல் செல்போன் வைரஸ்


கம்ப்யூட்டர்களை வைரஸhல் செயலிக்க செய்வதுபோல் தற்போது செல்போனை வைரசால் செயலிழக்க செய்துவருகின்றனர்.

கம்ப்யூட்டர் மென்பொருளை வைரஸ் கொண்டு அழிப்பது பழைய கதை. இதனால் பல நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்தக் குற்றங்களை கண்டு பிடிக்க உலகம்; முழுவதும் தற்போது தனி போலீஸ் ;படை உள்ளது. தற்போது செல்போன் இயக்கத்தை வைரஸ் மூலம் ;நிறுத்தும் குற்றங்கள் ;அதிகரித்து வருகின்றன. வெறும் தொலைபேசியாக இருந்த வரை செல்போனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் தற்போது வரும் செல்போன்கள் மினி ;கம்ப்யூட்டர் போல் இருக்கின்றன. இன்டர் நெட், இ மெயில், காமிரா என பல வசதிகள் வந்துவிட்டன. இதனால் அவைகளில் எழுதப்படும் மென் பொருள் கம்ப்யூட்டர் மென்பொருள் போல் பெரிதாக அமைகிறது. வைரஸ்மூலம் தாக்குதல் ;நடத்த இடம் கொடுக்கிறது. தற்போது குறைந்த அளவில் இருந்தாலும் வெகுவிரைவில் இந்த பிரச்சனை பூதாகாரமாக வெடிக்கும் என்கிறhர் லண்டனை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஆடம் லு}ரி.

Print this item