Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 554 online users.
» 0 Member(s) | 551 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,207
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள்
Posted by: Vaanampaadi - 02-08-2005, 11:28 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

23 நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள்

இப்போது குவைத், ஜாம்பியா, மெக்சிகோ உள்பட 23 நாடுகள் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை பயன்படுத்துகின்றன.

பாலிமர் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படும் இந்த வகை கரன்சி நோட்டுகளை கள்ள நோட்டு கும்பலால் அச்சடிக்க முடிவதில்லை.

பிளாஸ்டிக் நோட்டுகள் முதல் முதலாக ஆஸ்திரேலியாவில் 1988-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டன.

Maalaimalar

Print this item

  உள்ளாடைகளில் `சிவன்' படம்
Posted by: Vaanampaadi - 02-08-2005, 11:18 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

உள்ளாடைகளில் கடவுள் படமா?
இந்துக்கள் கடும் எதிர்ப்பு


வாஷிங்டன், பிப்.8-

பெண்களின் உள்ளாடைகளில் கடவுள் படம் இடம்பெற்று இருப்பதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

உள்ளாடைகளில் `சிவன்' படம்

அமெரிக்காவில், இணையதள நிறுவனம் ஒன்று பெண் களுக்கான உள்ளாடை பற்றிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த உள்ளாடை களில் இந்துக்கடவுளான சிவபெருமானின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. ``இந்து என்பதற்காக பெருமைப்படு'' என்பது போன்ற வாசகங்களும் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் `ஓம்' என்ற பெயரிலும் உள்ளாடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்துக்கள் எதிர்ப்பு

இந்த இணையதள நிறுவனத்தின் உள்ளாடைகளில் கடவுளின் படம் இடம்பெற்று இருப்பதற்கு அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பல்வேறு இந்து அமைப்புகளை உள்ளடக்கிய அமெரிக்க இந்துக்கள் தலைமை அமைப்பு உடனடியாக அந்த உள்ளாடைகளை வாபஸ் பெறவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது.

இதே இணையதள நிறுவனம் சீக்கிய மதநம்பிக்கைக்கு எதிரான அடையாளங்களுடன் வெளியிடப்பட்ட உள்ளாடைகளை சீக்கியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சமீபத்தில் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Dailythanthi

Print this item

  சந்திரநேரு அரியநாயகமும் சிங்கள இராணுவ கூலிகளால் பலி
Posted by: Mathuran - 02-08-2005, 08:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

காயம் அடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளும் மன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் இனவெறி பிடித்த சிங்கள இராணுவத்தின் கூலிகளால் படுகொலை,

Print this item

  உலகை வலம் வந்த சாதனைப் பெண்...!
Posted by: kuruvikal - 02-08-2005, 08:57 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40804000/jpg/_40804695_macarthurnew270.jpg' border='0' alt='user posted image'>

Ellen MacArthur (28 ) எனும் இந்த பிரித்தானிய நாட்டுப் பெண்மணி Trimaran எனும் படகு மூலம் விரைவில் உலகைச் சுற்றி வந்து முன்னைய சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்...!இவர் இந்தப் பயணத்துக்கு எடுத்த காலம் 71 நாட்களும் 14 மணித்தியாலங்களும் 18 நிமிடங்களும் 33 செக்கன்களும் ஆகும்...!

இவர் தனது பயணத்தின் 63 ம் நாள் ஒரு திமிங்கலத்துடன் முட்டி மோதும் நிலையை குறுகிய இடைவெளியில் தவிர்த்தும் இன்னும் பல சோதனைகளை எதிர்கொண்டும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்...!

<b>முன்னைய சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்த இப்பெண்மணிக்கு எமது வாழ்த்துக்கள்...!</b>

<img src='http://news.bbc.co.uk/sol/shared/bsp/hi/image_maps/04/11/1099489832/img/round_worldmap4_416.gif' border='0' alt='user posted image'>

பயணப்பாதை...!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40802000/jpg/_40802861_boat_203x152gi.jpg' border='0' alt='user posted image'>

Trimaran எனும் படகு

மேலதிக தகவல் ஆங்கிலம்

Print this item

  வீரவணக்கம்
Posted by: vasisutha - 02-08-2005, 07:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

<img src='http://img178.exs.cx/img178/508/kous8iy.jpg' border='0' alt='user posted image'>



________________

<img src='http://img220.exs.cx/img220/8629/sad5qy1.gif' border='0' alt='user posted image'>

Print this item

  சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Posted by: Mathan - 02-08-2005, 04:21 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (8)

<img src='http://www.new-year.co.uk/chinese/cards/images/cardpic4prev.jpg' border='0' alt='user posted image'>

சீன நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Print this item

  மாலுப் பாண்
Posted by: Mathan - 02-08-2005, 03:58 AM - Forum: சமையல் - Replies (12)

மாலுப் பாண்

சுலபமான சாப்பாடாக அதே நேரத்தில் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் போட வேண்டுமென்றால் கடையில் நான் வாங்கி சாப்பிடும் உணவு மாலுப் பாண்.
சிங்களத்தில் மாலு என்றால் மீன். ஆக மீன்கறியை உள்ளடக்கிய பாண் மாலுப்பாணாயிற்று. மீன் மட்டுமல்லாமல் உருளைக் கிழங்கு, சீனிச் சம்பல் என்று உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு இந்த பாணைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
1. மூன்று பேணி மா
2. மூன்று தேக்கரண்டி ஈஸ்ற் (Yeast)
3. ஒரு தேக்கரண்டி சீனி
4. அரை மேசைக்கரண்டி பட்டர் அல்லது மாஜரீன் அல்லது எண்ணை
5. ஒரு தேக்கரண்டி உப்பு
6. உங்களுக்கு விரும்பிய கறி
7. ஒரு முட்டை மஞ்சற் கரு

செய்முறை
ஈஸ்ற், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் இட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு நிமிடங்களுக்குள் இக் கலவை பொங்கி வரும். இதனை மா, உப்பு, பட்டர் ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதனை சிறிது நேரம் தகுந்த மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். உருண்டைகள் சம அளவாக வருவதற்கு ஒரு வழியை சொல்லுகிறேன். மா கலவையை முதலில் இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இரண்டை நாலாக்கி நாலை எட்டாக்கி எட்டை பதினாறாக்குங்கள். இப்படிச் செய்யும் போது நாங்கள் எடுத்துக் கொண்ட இந்த அளவுக்கு எல்லாமாக 32 சம அளவிலான உருண்டைகளைச் செய்து கொள்ளலாம்.

இதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமான கறியினைச் செய்து கொள்ளுங்கள். மீனோ, இறைச்சியோ, மரக்கறி உணவோ என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று செய்யப் படும் உணவானது கெட்டியாக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் உள்ளிடுவது போல் கறியினை இட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் எண்ணை தடவிய தட்டில் அழகாக எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள். வேகும் போது இதன் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சற் கருவை ஒரு தூரிகையினால் தொட்டு தடவிவிடுங்கள். முட்டையை விரும்பாதவர்கள் பால் பட்டர் கலந்த கலவையை பூசிக் கொள்ளலாம் அல்லது தேனும் சிறிது தண்ணீரும் கலந்த கலவையைப் பூசிக் கொள்ளலாம்.

இப்பொழுது 150Cயில் 30 நிமிடங்கள் அவனில் சூடாக்கிக் கொள்ளுங்கள்

என்ன கருகாமல் எடுத்துவிட்டீர்களா? பலே. என்ன 32 மாலுப் பாணையும் நீங்களே சாப்பிடப் போகிறீர்களா? என்னங்க நீங்க..

நன்றி - Indrany

Print this item

  முதுகுவலி
Posted by: Mathan - 02-08-2005, 03:26 AM - Forum: மருத்துவம் - No Replies

முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள்

இந்தியாவில் எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போல முதுகுவலியும் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் குறிப்பாக பெண்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

இதனால் இவர்களின் ஆபீஸ் வேலை கெடுவதுடன், மனதளவிலும் பல பாதிப்புகளை அடைகிறார்கள். மனச்சோர்வு, ஒருவித அச்சம் இவர்களைத் தொற்றிக்கொள்கிறது. சமயத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகக் கூட முதுகுவலி வந்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அலுவலகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருப்பதால், வேலை தொடர்பான பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளதும் மன உளைச்சலுக்கு ஒரு காரணமாகும்.

சிலருக்கு ஐம்பது, அறுபது வயதில் முதுகுவலி வரும். அது வயதாவதால் இருக்கலாம். அல்லது வேறு சில பிரச்னைகளாக இருக்கலாம். எதுவாகயிருந்தாலும் ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் போவது புத்திசாலித்தனம்.

முதுகுவலி ஏன் வருகிறது?

நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது (டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.

நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.

சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன் அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும் வலி தெரியும்.

இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால் வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.

யார் யாருக்கு முதுகுவலி வரும்?

நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை மெத்தையில் ((உ_ம்) ஃபோர்ம் மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம் தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம். நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.

பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்?

பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில் முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும் அறிகுறி. இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :

1. படுக்கையில் கவனம் தேவை :

நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :

நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.

7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.

8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.

9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.

முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.

லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது எளிது. ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள் முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளியவழிகள்தான். முயன்று பாருங்கள்.

நன்றி - சந்திரவதனா

Print this item

  மசாஜ்
Posted by: Mathan - 02-08-2005, 03:13 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (4)

இதமான பொழுதுகளில் ஒன்று.

சனி நீராடு என்று சொல்லி ஊரில் சனிக்கிழமைகளில் நீராடுவதும் அதற்கு முன் எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்விப்பதுவும் ஆண்களுக்குரிய விடயங்களாகவே இருந்தன.

மசாஜ் செய்விப்பதற்கென்று ஆண்கள்தான் உரிய இடத்துக்குப் போய்வருவதை நான் கண்டிருக்கிறேன். வீடுகளில் கூட காலை அமுக்கி விடுவதும் கையைப் பிடித்து விடுவதும் ஆண்களுக்கே செய்யப் பட்டன.

பெண்களுக்கு இந்த சுகங்கள் தேவையில்லை என்று கருதி விட்டார்களோ என்னவோ..?

தப்பித்தவறி ஒரு ஆண் அதாவது ஒரு கணவன் தனது மனைவிக்கு கால் கை பிடித்து, அதையும் யாராவது பார்த்து விட்டால் போதுமே. ஊர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரித்தான். மென்று தள்ளி விடுவார்கள்.

ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. பெண்களுக்கு மசாஜ் அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆண்களுக்கும் கிடைக்கும்தான். ஆனால் பெண்களைத்தான் அடிக்கடி மசாஜ் செய்விக்க அனுப்புவார்கள்.

கணினிக்கு முன் அதிகமாக இருப்பவர்கள், நிறைய எழுதுபவர்கள்... என்பதில் தொடங்கி மனஅழுத்தத்துக்கு ஆளானவர்கள் வரை என்று பலரும் தோள்மூட்டுகளிலும், கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் இறுக்கத் தன்மையால் பாதிக்கப் படுகிறார்கள். இந்தப் பாதிப்புகள் பெண்களைத் தாக்குவதற்கான காரணிகள்தான் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்து. இதற்கு மருத்துவரீதியான உடற்பயிற்சியோடு மசாஜ்யும் அவசியம் என்பதுவும் அவர்களின் கருத்து.

இந்த மசாஜ் செய்விப்பது இருக்கிறதே மிகமிக இதமான ஒரு விடயம். இதற்கென்றே படித்த பெண்கள் (ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள்தான் இதில் வல்லுனர்கள்) கைவிரல்களினால் மெதுமெதுவாக எமது தோள்களிலும், முதுகிலும் லாவகமாக அழுத்தி குறிப்பிட்ட நரம்புகளையும் மசில்ஸ்களையும் கண்டு பிடித்து.... அது மிக மிக இதமான விடயம்.

இந்தச் சலுகையை நான் தவற விடுவதே இல்லை. அடிக்கடி வைத்தியரிடம் சென்று எனது தோள்மூட்டு இறுகி விட்டதைச் சொல்லி மசாஜ் செய்விப்பதற்கான அனுமதியை எடுத்து விடுவேன். மருத்துவரின் அனுமதியுடன் செய்விக்கும் போது மருத்துவக் காப்புறுதி நிறுவனமே இதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். ஒரு சிறுதொகையை மட்டுமே நான் கட்ட வேண்டி இருக்கும். (ஒரு தடவை மருத்துவர் எழுதித் தந்தால் ஆறு தடவைகள் மசாஜ் கிடைக்கும். ஆறு தடவைக்குமாக நான் கொடுக்கும் பணம் ஒரு தடவைக்கான பணத்தை விடக் குறைவாகவே இருக்கும்.) ஆனால் இந்த சலுகைகளை எங்கள் தேசத்துப் பெண்கள் அவ்வளவாகப் பயன் படுத்துவதில்லை. நானோ அந்தப் பொழுதுகளை மிகுந்த ஆத்மார்த்தமான உணர்வுடன் அனுபவிப்பேன்.

இந்த மசாஜ்யை கணவன்மார்கள் கூட மனைவியருக்குச் செய்யலாம். கற்றவர்கள் போலச் செய்ய முடியாவிட்டாலும் களைத்துப் போயிருக்கும் மனைவியின் தோள்களை இதமாக அழுத்தி விடுவது மனைவியின் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் மிகவும் இதமாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு மருத்துவர் சொன்னார் இந்தத் தொடுகைகளே உடலின் முக்கால்வாசி வருத்தங்களைத் துரத்தி விடும் என்று.

இதற்கென்று கற்றவர்கள் அன்றி வேறுயாரும் இப்படியான மாசஜ்களை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். உண்மைதான். கற்றவர்கள் போல நரம்புகளைத் தேடி அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் எலும்புகள் அழுத்தப் பட்டு விடும்.

நன்றி - சந்திரவதனா

Print this item

  பொங்கியெரியும் விடுதலைத் தீ-
Posted by: Thaya Jibbrahn - 02-08-2005, 02:39 AM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

பார்க்குமிடமெங்கும்
நீக்கமற
நயவஞ்சகர் வாழும்
பூமியிது.

குள்ளநரிகளெல்லாம்
கூடியிங்கே
கூத்தடிக்கின்றதே.

யாரொடு நோவோம்?

சத்தியப்பிரமாணம்
செய்யும் போதே
தேசத்திற்காய்
செத்துவிடவும்
உறுதிபூண்டவர்கள் தான்.

என்றாலும் என்றாலும்
ஏதிலிகள் போல
தெருவினிலே சாய
பார்த்திருக்க மாட்டோம்.

கௌசல்யன்.

தேசவிடுதலைக் குரலை
தேசமெங்கும் முழங்கிய
விடுதலைப் பறவை.

துரோக வேர்களின்
ஆழம் கண்டறிந்து
தேசம் காத்த தனயன்.

வீதியிலே வீழ்ந்தானோ?
விதிமுடிந்து போனானோ??

நம்ப முடியவில்லை.

இயற்கையும் விதியும்
எதிரிகளுடன் சேர்ந்து
ஒப்பந்தம் போட்டனவோ??

தமிழ்த் தேசம்
அழிப்பதுவாய்
சாபங்கள் இட்டனவோ?
வெல்லும் வரைதான்
உலகம்
விரட்டும்.
வென்ற பின்னர்
வாழ்த்தும்.

இனியோர் புலி விழுவதெனில்
நூறுபகை
அழிந்த பின் என்பதாய்
சபதமொன்று செய்திடுவோம்.

கொக்கரிக்கும் பகைவருக்கும்
புல்லுருவிகளுக்கும்
ஓர் செய்தி...
எரிமலையில் நெருப்பெடுத்து
அடுப்பெரிக்க நினையாதீர்;
இது
பொங்கியெரியும் விடுதலைத் தீ-

Print this item