| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 311 online users. » 0 Member(s) | 308 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,674
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,208
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,523
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அஞ்சலி செலுத்த தமிழ்ச்செல்வன், பானு கிழக்கே விரைவு! |
|
Posted by: Vaanampaadi - 02-09-2005, 11:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
கெளசல்யனுக்கு அஞ்சலி செலுத்த இன்று
தமிழ்ச்செல்வன், பானு கிழக்கே விரைவு!
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்டினன்ட் கேணல் கெளசல்யன், ஏனைய மூன்று போராளிகள் மற் றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு ஆகியோரின் புகழுடல்களுக்கு அர சியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேரில் அஞ்சலி செலுத்துவார்.
இதற்காக அவர் இன்று மட்டக்களப்பு மாவட் டத்துக்குச் செல்கிறார்.
கிளிநொச்சியிலிருந்து அவரையும் அவரது அணியினரையும் இன்று மட்டக்களப்பு கரடிய னாறுப் பகுதிக்குக் கூட்டிச் செல்வதற்காக விசேட யஹலிக்கொப்டர் வசதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை அரசின் சமாதான செயலக வட்டாரங் கள் தெரிவித்தன.
இந்தப் பயண ஏற்பாட்டு நடவடிக்கை தொடர் பாக அரசினதும், புலிகளினதும் சமாதான செய லகங்களுக்கு இடையில் நேற்றுக் கருத்துப் பரிமாறல்களும், தொடர்பாடல்களும் இடம்பெற் றதை அறிய முடிந்தது.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டத் தளபதி கேணல் சொர்ணமும், மட்டு. - அம்பாறை மாவட்டத் தளபதி கேணல் பானுவும் வன்னியில் தங்கியுள்ளனர். கடந்த வாரம் தத்தமது பொறுப்பு இடங்களிலிருந்து விசேட யஹலிகொப் டர்களில் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர்.
அவர்கள் தத்தமக்குப் பொறுப்பான மாவட் டங்களுக்குத் திரும்புவதற்கு நாளை யஹலி கொப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இன்று தமிழ்ச்செல்வன் மட்டக்க ளப்புக்குச் செல்வதால் தளபதி பானுவும் மற்றும் ஐவரும் அவருடன் மட்டக்களப்புக்குச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி சொர்ணம் விசேட யஹலிகொப்டரில் நாளை திருகோணமலை திரும்புவார் எனத் தெரிய வந்தது.
இதற்கிடையில்-
விடுதலைப் புலிகளின் அனைத்து மாவட்ட அரசியல் பொறுப்பாளர்களும் உடனடியாகக் கிளி நொச்சிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார் கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
Uthayan
|
|
|
| புலிகள் கடுஞ்சீற்றம்! விபரீதங்கள் நேராமல் தடுப்பதில் .... |
|
Posted by: Vaanampaadi - 02-09-2005, 11:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
புலிகள் கடுஞ்சீற்றம்!
விபரீதங்கள் நேராமல் தடுப்பதில்
ராஜதந்திர வட்டாரங்கள் தீவிரம்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கெளசல் யன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் மூன்று போராளிகள் உட்பட அறுவர் நேற்றுமுன்தினம் இரவு புனாணைப் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் விடுதலைப் புலிகளின் தலைமையைக் கடுஞ் சீற்றத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
இந்த மோசமான சம்பவத்தையடுத்து இலங் கைத் தீவில் களேபரங்களும், விபரீதங்களும் நேரக்கூடிய ஆபத்தான ஏதுநிலை ஏற்பட்டிருக்கின் றது. நிலைமையைத் தணிப்பதற்கான தீவிர இராஜதந்திர முயற்சிகள் மேற்குலக வட்டாரங் களில் விரைந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அறியமுடிந்தது.
இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் கைவரிசையே இப்படுகொலைகள் எனப் புலிகள் ஆதாரபூர்வமாக நம்புகின்றார்கள் எனச் சில வட்டாரங்களில் கூறப்பட்டது.
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைகள், சமூக விரோதக் குழுக்களைப் பயன் படுத்தி - அல்லது அவற்றின் பெயரைப் பயன்படுத்தி - அரச படைகளே இந்தப் படுபாதகச் செயலைப் புரிந்திருப்பதாகப் புலிகள் நம்புவதால், இப்படு கொலைகளுக்குப் பதிலடி தரும் நடவடிக்கை எந்தவேளையிலும், எந்த இடத்திலும் நிகழலாம் என்ற அச்சம் தென்னிலங்கை வட்டாரங்களில் நிலவுவதை உணரக்கூடியதாக இருந்தது.
நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண் டுள்ள - தற்போதைய அமைதி முயற்சிகளின் அனுசரணைத்தரப்பான - நோர்வே மற்றும் சில மேற்குலக வட்டாரங்கள் இப்படுகொலைகளைய டுத்து பதிலடிகளும் விபரீதங்களும் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் பலதரப்புடனும் நேற்று முன்தினம் இரவே தொடர்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டன எனத் தெரியவந்தது.
எனினும், விடுதலைப் புலிகளின் தலைமை யுடன் தொடர்புகொண்டு தெளிவான உறுதி மொழிகளைப் பெறும் முயற்சியில் நேற்று மாலை வரை அவ்வட்டாரங்கள் வெற்றியடையவில்லை என்று அவ்வட்டாரங்களுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவித்தன.
கெளசல்யன் படுகொலை செய்யப்பட்ட பிர தேசம், முறைமை ஆகியவை குறித்தும், அதை யடுத்து எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் விடுதலைப் புலிகளின் தலைமை பல்வேறு மட்டங்களில் நேற்றுக்கூடி ஆராய்ந்ததாக ஒரு தகவல் தெரிவித்தது.
புலிகளைப் பொறுமை பேணவைக்கும் முயற் சியாக நோர்வேத்தரப்பு, மேற்குலக நாடு ஒன்றின் உயர்வட்டாரங்களும் லண்டனிலுள்ள விடு தலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங் கத்துடன் தொடர்புகொள்ள முயன்றதாகத் தெரி கின்றது.
எனினும், இது விடயத்தில் வன்னியில் புலி களின் தலைமையோடு நேரடியாகத் தொடர்பு கொள்வதே பொருத்தமானது என்பது அத்தரப்பு களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அறிய வந்தது.
Uthayan
|
|
|
| ரஜினி வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்! |
|
Posted by: Vaanampaadi - 02-09-2005, 11:13 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/rajini-350.jpg' border='0' alt='user posted image'>
பிப்ரவரி 09, 2005
ரஜினி வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாபா படத்தை தியேட்டர்களுக்கே நேரஐயாக விற்றார் ரஜினி. இதன்மூலம் ரூ. 5 கோடியில் தயாரான அந்தப் படம் ரூ. 55 கோடிக்கு விலை போனது. இது குறித்த பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக வைத்து ரஜினியை நேரில் அழைத்து விசாரித்தது வருமான வரித்துறை.
நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை இன்வஸ்டிகேசன் பிரிவுக்கு தனது ஆடிட்டர்களுடன் நேரில் வந்து விளக்கம் தந்துவிட்டு வரியையும் முன் கூட்டியே கட்டிவிட்டுத் திரும்பினார் ரஜினி.
இந் நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் சந்திரமுகி படமும் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. பூஜையன்றே படம் விற்பனையாகிவிட்டது.
இதைத் தயாரிப்பது சிவாஜி பிலிம்ஸ் தான் என்றாலும் படத்திற்கு ரஜினிக்கு மாபெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகம் உள்ளிட்ட சில ஏரியா உரிமைகளையும் ரஜினி எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னையில் தற்போது டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. நேற்று மாலை ரஜினி தனது போயஸ் தோட்ட வீட்டிலிருந்து சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் தியேட்டருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது பல கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திறங்கினர்.
வீட்டைச் சோதனையிட வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கவே ரஜினி தனது டப்பிங் வேலையை ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருந்தார். அப்போது ரஜினியின் மனைவி லதாவும் உடனிருந்தார்.
ரஜினி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிக்கிய சில ஆவணங்கள் குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டப வரவு, செலவுகள் பற்றியும் விசாரித்தனர். மேலும் ஐஸ்வர்யாதனுஷ் திருமண செலவுகள், தனுசுக்கு ரஜினி புதிதாக பல கோடியில் வாங்கித் தந்ததாகக் கூறப்படும் பங்களா ஆகியவை குறித்தும் விசாரணை நடத்தினர்.
தெலுங்கில் எடுக்கப்படும் சந்திரமுகி ரூ. 30 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுவது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
சில குறிப்பிட்ட ஆவணங்களை மட்டும் கையோடு எடுத்துக் கொண்ட அதிகாரிகள் மேலும் பல சொத்துப் பத்திரங்களுக்கு வீட்டிலேயே சீல் வைத்து விட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆவணங்கள் குறித்து ரஜினி தனது ஆடிட்டர் மூலம் உரிய விளக்கம் அளிப்பதாக கூறியிருக்கிறார். இந்த சோதனை காரணமாக சந்திரமுகியின் 2ம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி, ஹைதராபாத் செல்ல வேண்டிய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரஜினி வரி பாக்கி எதையும் வைத்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது வருமான வரித்துறை, திமுகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கத்தின் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இச் சோதனைகளில் திமுகவின் 'கைவண்ணமும்' இருக்குமோ என்ற சந்தேகமும் ரஜினி தரப்பில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ரஜினி வீட்டில் திடீர் சோதனை குறித்து அறிந்ததும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் என ரஜினி வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Thatstamil
|
|
|
| போராளிகளின் வித்துடல்கள் கையளிப்பு |
|
Posted by: vasisutha - 02-09-2005, 07:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
News: www.puthinam.com
போராளிகளின் வித்துடல்கள் கையளிப்பு
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் இ.கௌசல்யன் மற்றும் நான்கு போராளிகள் உட்பட்ட ஐவரின் பிரேத பரிசோதனைகள் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடைபெற்றது.
பொலன்னறுவை மாவட்ட நீதிபதி திருமதி எஸ்.சிவபாதசுந்தரத்தின் உத்தரவின் பேரில் இந்த உடலங்கள் நேற்றிரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யனின் வித்துடல் வைத்தியசாலையிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் மன்முணை இறங்குதுறை ஊடாக பண்டாரியாவெளியிலுள்ள அவரது தாயின் இல்லத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டது. மண்முனை - கொக்கட்டிச்சோலை இறங்குதுறை வரை பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இன்று அதிகாலை வரை அங்கு வைக்கப்பட்டு பின்னர் அம்பிலாந்துறையிலுள்ள அவரது மனைவியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இன்று அங்கிருந்து நேரடியாக பட்டிருப்பு பாலம் வழியாக அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் மக்களின் அகவணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
நாளை அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அகவணக்கத்திற்காக வைக்கப்படும்.
இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றி இதுவரை எத்தகைய தகவலும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை குறிப்பிட்ட சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய மூன்று போராளிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் சாரதி ஆகியோரின் உடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து தற்போது அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் உடலம் கொழும்பிலிருந்து இன்று அவரது திருக்கோவில் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கு பொது மக்களின் அகவணத்திற்காக வைக்கப்படவுள்ளது.
|
|
|
| ஐ.நா. செயலாளர் அன்னான் கௌசல்யன் கொலை பற்றி கவலை, கண்டனம். |
|
Posted by: Jude - 02-09-2005, 06:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
http://www.un.org/apps/sg/sgstats.asp?nid=1301
New York, 8 February 2005 - Statement Attributable to the Spokesman for the Secretary-General on Sri Lanka
The Secretary-General condemns the killings of Mr. E. Kaushalyan, a senior political leader of the LTTE Eastern Province Division, and several colleagues traveling with him, when their vehicle came under attack yesterday evening. He extends his sincere condolences and deepest sympathies to the families of all the victims of these callous killings.
The Secretary-General urges all parties to exercise calm and restraint so as to avoid actions that could disrupt the Cease-fire Agreement of February 2002 or the long-term interest of peace in Sri Lanka.
ஐ.நா. செயலரின் இந்த கண்டனம், விடுதலைப்புலிகளை மக்கள் தலைவர்களாக ஐ.நா. செயலர் ஏற்றுக்கொண்டு, சிறிலங்காவை மறைமுகமாக பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும். இது விடுதலைப்புலிகளின் நீண்டகால கடும் உழைப்புக்கு கிடைத்த பெரிய வெற்றி. கௌசல்யன் மாவீரராகி வாங்கித் தந்த வெற்றி இது.
|
|
|
| பூவரசு போட்டிகள் 2005 முடிவுகள் |
|
Posted by: sOliyAn - 02-09-2005, 04:07 AM - Forum: புலம்
- Replies (2)
|
 |
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/poovarasu1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/poovarasu2.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| Banana Muffins |
|
Posted by: Mathan - 02-08-2005, 11:38 PM - Forum: சமையல்
- Replies (9)
|
 |
வாழைப்பழக் கிண்ண கேக் (Banana Muffins)
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/muffin_single.jpg' border='0' alt='user posted image'>
<b>தேவைப்படும் பொருட்கள்</b>
<span style='color:blue'>வாழைப்பழம்-3 (நன்றாக பழுத்த பழம்)
வெண்ணை அல்லது மார்கரின்(Margarine) கட்டி-1 (சுமார் 100கிராம்)
பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி
வனிலா எஸன்ஸ்-1 தேக்கரண்டி
சர்க்கரை - 3/4 கிண்ணம் (சுமார் 150 கிராம்)
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய், இனிப்பேற்றியதும் (sweetened) சரியே - 1/4 மூடி
மைதா மாவு (அல்லது ஆல்பர்ப்பஸ் மாவு - All purpose flour) - 2 கிண்ணம் (சுமார் 400 கிராம்)
பாதாம், திராட்சை, முந்திரி அல்லது சாக்கலேட் துண்டுகள் (விருப்பம்போல்)
<b>செய்முறை</b>
1. வாழைப்பழத்தை நன்றாக மசிக்கவும்.
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/banana.jpg' border='0' alt='user posted image'>
2. மேலே உள்ள அனைத்தையும் நன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/mixing.jpg' border='0' alt='user posted image'>
3. அவன்(oven)-ஐ 350 டிகிரியில் (F) வைக்கவும்.
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/preheat.jpg' border='0' alt='user posted image'>
4. கேக் குழிகள் கொண்ட தட்டில் (muffin plate) ஊற்றவும். ஒட்டிக்கொள்ளாத தட்டு இருந்தால் காகிதக் கிண்ணம் தேவையில்லை. அல்லாவிடில் காகிதக் கிண்ணத்தைக் குழியில் வைத்து, பிறகு மாவை ஊற்றவேண்டும். ஊற்றிய பின் விருப்பம்போல பாதம்/முந்திரிப் பருப்போ, சாக்கலேட் துண்டுகளோ மேலே ஒட்டினாற்போல அலங்கரிக்கலாம். மாவை ஊற்றும்போது குழியில் பாதியளவே நிறையவேண்டும்.
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/cup.jpg' border='0' alt='user posted image'><img src='http://kasi.thamizmanam.com/wiki/media/pouring.jpg' border='0' alt='user posted image'><img src='http://kasi.thamizmanam.com/wiki/media/poured.jpg' border='0' alt='user posted image'>
5. 15-20 நிமிடம் வேகவைத்து எடுத்தால், சுவையான, முட்டைக் கலப்பற்ற வாழைப்பழ கிண்ணக் கேக் தயார்.</span>
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/ready.jpg' border='0' alt='user posted image'>
நன்றி - காசி
|
|
|
| அஜித் Vs விஜய் |
|
Posted by: Mathan - 02-08-2005, 09:57 PM - Forum: சினிமா
- Replies (64)
|
 |
"அஜித்துடன் இணைந்து நடிக்க மாட்டேன்" - விஜய்
பார்க்க பரம சாது, படத்தில் டீசன்ட் லேது... விஜய்யைப் பற்றி இப்படி சுருக்கமாக இப்படிக் கூறலாம். இல்லாவிட்டால் இத்தனை பிரச்சனைக்குப் பிறகும் 'திருப்பாச்சி' படத்தில், "ஆணவம்ங்கிறது செருப்பு மாதிரி. அத நாம் தான் மிதிக்கணும் அதையே தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுனா, நம்மை மிதிச்சிடுவாங்க" என்று அஜித்தை நினைத்து உரலை இடிப்பாரா?
இது மட்டுமல்ல, 'சச்சின்' படத்திலும் அஜித்துக்கு எதிராக சவுண்ட் கொடுக்கிறார். 'ஆல் ரவுண்டா மட்டும் இருந்தால் பத்தாது ஆட்டத்துல ஆல் ரவுண்டரா இருக்கணும்' என அஜித் கார் ரேஸுக்குப் போனதை வம்புக்கிழுக்கிறார்.
இப்படி படத்தில் வீச்சரிவாள் வசனம் பேசி விட்டு நிஜத்தில், இந்தப் பூனையும் பால் குடிக்குமா எபெக்டில் முகத்தை வைத்து, நாங்க நல்ல நண்பர்கள் என்று டயலாக் பேசுவதில் இளைய தளபதிக்கு நிகர் இளைய தளபதிதான்.
இவரின் இரட்டை வேடத்தை நன்றாக புரிந்துக் கொண்ட அஜித், எதிரின்னா எதிரிதான்... என் நண்பனாகிற தகுதி அவனுக்கு இல்லை என்று நேரடியாகவே அட்டகாசம் பண்ண, இப்போது விஜய்யின் பேச்சில் மாற்றம்.
அஜித்துடன் இணைந்து 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் நடித்த மாதிரி மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "அது மட்டும் இனி நடக்கவே நடக்காது. 'ராஜாவின் பார்வையிலே' வளர்ந்து வர்ற நேரம். அதனால் நடித்தேன். இனி அப்படியொரு காம்பினேஷனுக்கு வாய்ப்பேயில்லை" என்று அடித்து கூறுகிறார்.
சேர்ந்து நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. வில்லனுக்கு சவால் விடும் சாக்கில் சக நடிகர்கள் கழுத்தில் கத்தி வைக்காமல் இருந்தால் அதுவே போதும்!
Cine South
|
|
|
| இலங்கையில் யுத்த பீதி ..... BBC |
|
Posted by: Vaanampaadi - 02-08-2005, 06:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
Killing raises Sri Lanka war fear
Kaushalyan is the most senior rebel killed since the ceasefire
The shooting dead of a top Tamil Tiger and five others has raised fears that Sri Lanka could return to civil war.
E Kaushalyan, a rebel political leader, is the most senior Tiger killed since a ceasefire began in February 2002.
Sri Lanka's government has condemned Monday's ambush, saying it increased the risk of a return to conflict.
The rebels, who blame the attack on paramilitaries working with the army, say it is a major blow to peace efforts. The army denies involvement.
Government statement
On Tuesday, Chandranehru Ariyanayagam, a Tamil former member of parliament who was travelling with Mr Kaushalyan, died of injuries sustained in the attack, which took place in government-controlled territory about 40km (25 miles) north-east of Batticaloa.
Four colleagues of Mr Kaushalyan, the rebels' political chief in the east, were also killed. Three others, two of them policemen, were injured in the shooting.
The Sri Lankan authorities deny having anything to do with the attack and say they suspect supporters of a renegade Tiger commander, Colonel Karuna, who split from the rebels in March 2004.
'Grave risk'
In a statement the government said the killings were a violation of the ceasefire.
"The government calls on all concerned parties to prevent further violations of the ceasefire, gravely risking a return to conflict, and instead to support the peace process and move ahead," it said.
The statement said the timing of the attack was "clearly calculated" to disrupt improving relations between the government and the rebels after rifts over the distribution of aid to survivors of the Asian tsunami in December.
Security forces have now been placed on alert in eastern Sri Lanka amid fears that the violence could put pressure on the already fragile peace process. Peace talks stalled in 2003.
The rebels have warned that the attack represents a major setback to the process and blame military intelligence and paramilitaries.
"Definitely it is going to [cause] severe damage between the parties," S Puleedevan, a senior rebel political leader, told Reuters news agency.
The military denies any role in the incident.
"In no way are we involved," spokesman Brigadier Daya Ratnayake said.
Scandinavian peace monitors say the killing is the most serious setback since the ceasefire.
Ambushed
Mr Kaushalyan was travelling from the rebel-held town of Omanthai to Batticaloa when his vehicle came under attack about five or six kilometres from the nearest army checkpoint.
Police are investigating the shooting incident and have not said who they think carried it out.
"This attack was planned ahead and was carried out with precision," Inspector Saman Perera told Reuters.
Since the split between Colonel Karuna and the Tiger leadership, there has been an upsurge of violence in which government and rebel supporters have died in the east, although the month since the tsunami saw a brief lull.
More than 60,000 people have died in violence in Sri Lanka since the rebels began their fight for a homeland for minority Tamils in the island's north and east.
Source : BBC
|
|
|
|