Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 311 online users.
» 0 Member(s) | 308 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,674
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,208
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,523
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  À¼õ ¦º¡øÖõ ¦ºö¾¢..
Posted by: ¸ÅâÁ¡ý - 02-08-2005, 06:11 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (17)

<img src='http://img203.exs.cx/img203/1711/pic20b1on.jpg' border='0' alt='user posted image'>

¸Ç ¿ñÀ÷¸§Ç..þó¾ À¼ò¨¾ À¡÷òÐÅ¢ðÎ ¯í¸û Áɾ¢ø ±Øõ ±ýÉí¸¨Ç þí§¸ ¦º¡øÖí¸§Çý?? :? :?

¿ýÈ¢..

Print this item

  கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த ....
Posted by: Vaanampaadi - 02-08-2005, 06:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த அரச இராணுவ புலனாய்வுத்துறையினரே தாக்குதல் மேற்கொண்டனர்.
செவ்வாய்கிழமை 8 பெப்ரவரி 2005 நெருடன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் பயனம் செய்த வாகனத்தைப் பின்தொடர்ந்து பல மணிநேரம் பயணம் செய்த இலங்கை இராணுவ அதிரடிப்படையினரும் ää அரச புலனாய்வுத்துறையினரும் இணைந்தே தாக்குதலை மேற்கொண்டதாக இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ää கௌசல்யன் பயணம் செய்த வாகனத்தை இராணுத்தினரின் வாகனமொன்று பின்தொடர்ந்து வந்தது ää இவர்கள் நாமல்கம என்ற சிங்களக் கிராமத்தடியில் கௌசல்யனின் வாகனத்தை முந்திக்கொண்டு முன்பக்கமாகச் சென்று வாகனத்தை வீதியின் குறுக்கே நிறுத்தியதுடன் கௌசல்யன் குழுவினரை வாகனத்தை விட்டு இறங்குமாறு சிங்களத்தில் வற்புறுத்தியுள்ளனர்ää சுமார் 6 இராணுவத்தினர் வாகனத்திற்குள் இருந்ததாகவும் அனைவரும் அரச அதிரடிப்படையினரின் சீருடையுடனும் ஆயுதங்களுடனும் காணப்பட்டதாகவும் இவர்களின் கோரிக்கையினை சந்திரநேருவின் மெய்ப்பாதுகாவலர்கள் ஏற்க மறுத்த போது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓவ்வொருவர் மீதும் பல டசின் ரவைகள் பாய்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் பயணம் செய்த வாகனத்திற்கு சுமார் 50 க்கு மேற்பட்ட ரவைகள் பாந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Source : http://www.nitharsanam.com/?art=8666

Print this item

  கௌசல்யன் கொலை செய்யப்பட முதல் இராணுவத்தினரால் ......
Posted by: Vaanampaadi - 02-08-2005, 06:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கௌசல்யன் கொலை செய்யப்பட முதல் இராணுவத்தினரால் இறந்துவிட்டதாக வெளியிடப்பட்ட போராளிகளின் பட்டியல்.
செவ்வாய்கிழமை 8 பெப்ரவரி 2005 குமரப்பா
மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் மீதும் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீதும் தாக்குதல் நடாத்தப்படுவதற்க முதல் இரண்டு மணித்தியாலம் முன்னராக கௌசல்யன் உட்பட மூன்று போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையரச இராணுவத் தகவல்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கியமை தாக்குதலை மேற்கொண்டது அரச படைகள் என்பதனை உறுதிபடுத்தியுள்ளது. மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் மதிமாறன் குமணன் ஆகியோர் கருணா குழுவினரால் கொல்லப்பட்டதாக அரச இராணுவ தரப்பினர் ஆங்கில ஊடகங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவல் இலங்கை நேரம் பிற்பகல் 6 மணியளவில் பரிமாறப்பட்டது. ஆதேநேரம் கௌசல்யனுடன் இறந்த போராளிகளின் பெயர் வேறாகவே இருந்தது. எனினும் மட்டு - அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் பயணம் செய்த வாகனம் இரவு 7.45 அளவில் தாக்குதலுக்கு உள்ளானதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் இன்னெருவர் இறந்ததாகவும் இராணுவம் தகவல்களை வெளியிட்டிருந்தது.

சமாதான காலத்தில் ஒருதலைப்பட்சமான மறைவு யுத்தத்தை கிழக்கு மாகாணத்தில் கட்டவிழ்த்து நாடத்திவரும் இலங்கையரசு அதனை கருணா குழு என்று கூறி அரசியல் மற்றும் இராணுவ நலன் தேடிவருவதுடன் ää பல போராளிகள் இக்காலப்பகுதியில் இராணுவத்தால் கொலை செய்யபடுவதற்கு முதல் கொலைசெய்யப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் ஊடக செய்தி வெளியிட்டு வருவதுடன் அதே நடைமுறையினை நேற்றைய சம்பவத்திலும் கையாண்டுள்ளது.

இதே நேரம் இக்கொலையினை கருணாகுழு என்ற பெயரில் இயங்கும் இராணுவ அதிரடிப்படையினரின் விசேட தாக்குதல் பிரிவினர் செய்தனர் என்பதை வெளிப்படையாக இலங்கை அரச பணத்தில் ஜேர்மனியில் இருந்து இயங்கும் தமிழ்த் தேசவிரோத இணையமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

Source : http://www.nitharsanam.com/?art=8659

Print this item

  தமிழீழ அரசியல்துறை விடுத்த பத்திரிகைச் செய்தி
Posted by: Vaanampaadi - 02-08-2005, 06:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://www.nitharsanam.com/public/new12/sri_ltte.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ அரசியல்துறை விடுத்த பத்திரிகைச் செய்தி
செவ்வாய்கிழமை 8 பெப்ரவரி 2005 கிளிநொச்சியிலிருந்து சொக்கன்
சுனாமித் தாக்கத்தின் விளைவாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் தொடர்பாகத் தலைமைப் பீடத்துடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் திரு. இ.கௌசல்யன் மற்றும் போராளிகள் பயணித்த வாகனத்தை பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை இராணுவ முகாமிற்கும் வாழைச்சேனை புனானை இராணுவ முகாமிற்கும் இடையேயுள்ள பிரதேசத்தில் 07.02.2005 நேற்று மாலை 7.45 மணியளவில் இராணுவ மற்றும் பொலிஸ் சீருடை தரித்தவர்கள் மறித்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன் கேணல் கௌசல்யன்ää மேஜர் புகழன்ää மேஜர் செந்தமிழன்ää இரண்டாம் லெப்டினன் விதிமாறன் ஆகிய நான்கு போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர். அரசியல் பணிக்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினூடாகப் பயணித்த எமது போராளிகள் இரு இராணுவ முகாம்களுக்கு இடையேயுள்ள பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது அப்பட்டமான யுத்தநிறத்த மீறலாகும். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்குமிடையே எய்தப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்த விதிகளை இச்சம்பவம் கேள்விக்குரியதாக்கியுள்ளது.

சம்பவம் நடந்த இடம் மற்றும் சீருடை என்பன இக்கொலைகளில் அரச படைகளின் அனுசரணையை சுட்டிநிற்பவையாய் அமைகின்றன.
மனிதநேயப் பணிக்காக பயணித்த போராளிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட இச்சம்பவம் தொடர்பாகவும் இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாகவும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது அவதானிப்பையும் அறிக்கையையும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தவேண்டும். முன்னெடுத்துச் செல்லப்படும் மனிதநேயப் பணிக்கும் தடைப்பட்டுப் போயிருக்கும் சமாதான முயற்சிகளை மீளத் தொடங்குவதற்கும் இச்சம்பவம் பெரும் பங்கம் விளைவிக்கக் கூடும் என நாம் அஞ்சுகிறோம். இத்தகைய துரோகச் செயல்கள் மூலம் தமிழ் மக்களின் பலத்தை சிதைக்கமுற்படும் சக்திகளை உலகத் தமிழ்ச் சமூகமும் மனிதநேய ஆர்வலர்களும் சர்வதேச சமூகமும் தெளிவாக இனங்கண்டுகொள்ளவேண்டியது அவசியம்.
கௌசல்யன் குழுவினருடன் ஒன்றாகப் பயணித்த முன்னைநாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதஉரிமை ஆர்வலருமான திரு.சந்திரநேரு அரியநாயகம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும். வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து மட்டு அம்பாறை மாவட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விழிப்புடன் செயலாற்றிவந்த இவரது இழப்பு மானுட நேயம்ää மனித உரிமை விழுமியங்களை மதிக்கும் எல்லோருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். இவரது அளப்பரிய சேவையை கருத்திற்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அன்னாரை நாட்டுப்பற்றாளராகப் பிரகடனப்படுத்துகின்றது. அன்னாரது உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Source: http://www.nitharsanam.com/?art=8668

Print this item

  வணக்கம் நிலவன் வந்திருக்கிறேன்
Posted by: Nilavan - 02-08-2005, 05:48 PM - Forum: அறிமுகம் - Replies (19)

வணக்கம் நான் நிலவன் வந்திருக்கிறேன்...

மண்ணைத் தாணடி
விண்ணை தொடும்
மானிடத்தின்
மகந்தவம் அறிய
வானகத்தில் இருந்து
மண்ணகம் நோக்கிய
நிலவனின் பயனம்
வாவென வரவேற்பீரொ!
இல்லை
போவேன விரட்டுவீரொ?
ஏனெனில்-இங்கு
மனிதன் மனிதனாய் இல்லை
அதனால்தான் இக்கேள்வி
வாவென்றால் என்ன
போவென்றால் என்ன
கருத்துக்கள் மட்டும் தருவேன்
நன்றி
_______________________
நிலவன்

Print this item

  அச்சாறு
Posted by: tamilini - 02-08-2005, 04:34 PM - Forum: சமையல் - Replies (25)

அச்சாறு
அச்சாறு இருந்தால் போதும் அதனோடையே இரண்டு கோப்பை சோறு சாப்பிட்டு விடுவேன். இப்போ அல்ல அது ஒரு காலம். இப்பொழுது பலவிதமான சாப்பாடுகள் வந்ததால் அச்சாறு எல்லாம் மறந்து போயிற்று. தமிழருக்கு எப்படி ஊறுகாயோ, அப்படி சிங்களவர்களுக்கு அச்சாறு. அரைத்த கடுகு, மிளகு, வினாகிரி என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான சுவை. என்ன நாக்கு ஊறுகிறதா? சரி விடயத்திற்கு வருவோம்.

தேவையான பொருட்கள்
20 சின்ன வெங்காயம் (நம்ம ஊர் வெங்காயம்)
15 பச்சை மிளகாய் (நடுவில் கத்தியால் கீறிக் கொள்ளுங்கள்)
2 கரட் (மெலிதான நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்)
2 கோப்பை வினாகிரி
2 தேக்கரண்டி கடுகு (நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்)
1 தேக்கரண்டி மிளகுத்தூள்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்களவானது

செய்முறை
முதலில் ஒரு கோப்பை வினாகிரியை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் மெலிதான சூட்டில் வேகவையுங்கள். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மெலிதான சூட்டில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் கரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு மேலதிகமாக காய்கறிகள் தேவையானால் முள்ளங்கி, காலிபிளவர், பீன்ஸ் போன்றவற்றையும் இதேபாணியில் செய்து சேர்த்துக் கொள்ளலாம். )

சூடாயிருக்கும் வினாகிரியில் மற்றைய கோப்பை வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கோதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வையுங்கள்.

இரண்டு நாட்களின் பின்னர் போத்தலின் மூடியைத் திறந்து பாருங்கள். சாப்பிடுவதற்கு அச்சாறு அங்கே தயாராக இருக்கும்.


http://suuvvai.blogspot.com/2005/02/blog-post_08.html

சுடப்பட்டது

Print this item

  &quot;முள்ளை முள்ளால்&quot;
Posted by: Nellaiyan - 02-08-2005, 01:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (17)

நீண்ட கொடிய யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமாகட்டும் சரி பின்னர் சுனாமியினால் ஏற்பட்ட அழிவின் புனருத்தாரனம் என்றாலும் சரி ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்துமே இனவெறி சிங்கள ஏகாதிபத்தியத்தினால் ஏமாற்றப்பட்டே வருகிறார்கள். யுத்த நிறுத்த காலத்தில் தம்மை இராணுவ ரீதியில் பலப்படுத்தியும், கூலிக்குழுக்களின் பெயரில் தொடர் படுகொலைகளை நடாத்தியும் மீண்டுமொரு கொடிய யுத்தத்தை தமிழர்கள் மீது திணிப்பதற்கே சிங்கள அரசு முனைகிறது. மாறாக சுனாமியின் அழிவில் வடக்கு கிழக்கே பாரிய பாதிப்புகளை சந்தித்த போதும் எந்த ஒரு நிவாரணமும் தமிழ் மக்களுக்கு சென்று விடாமல் தடுத்தும், உலகிற்கு வடக்கு கிழக்கான் செய்திகளை இருட்டடிப்பு செய்தும், உலகத்தலைவர்களை வடக்கு கிழக்குக்கு செல்ல விடாது தடுத்தும் தனது கொடிய முகங்களை சிங்கள ஏகாதிபத்தியம் கட்டிக் கொண்டிருக்கிறது.

இருந்தும் உலக நாடுகளால் வடக்கு கிழக்கிற்கு புலிகளுடன் இணைந்து ஒரு கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டிய அழுத்தங்கள் சிங்கள அரசிற்கு ஏற்பட்டு, அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது அதனை தடுக்க வேண்டிய நிலையிலும், மற்றும் சிங்கள இனவெறி கூட்டமைப்பிலுள்ள ஜெ.வி.பியை சமாதானப்படுத்தி அரசை பலப்படுத்துவதற்காகவும் மீண்டும் யுத்தத்தை தமிழர்கள் மீது சிங்கள அரசு திணிக்க முற்படுகின்றது. இதன் முதல் சில கட்டங்களாகவே தமிழர் பகுதியிலிருந்து சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் முகாங்களை இராணுவ சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன. தமிழர் பகுதிகளில் தொடர்ந்து இராணுவ அட்டூளீயங்கள், போராளிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், மீண்டும் கிழக்கில் குடியேற்றங்கள் எனத்தொடர்ந்து இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரம் தொடக்கம் போராளிகள் வேட்டையாடப்படுகிறார்கள்.

* இவைகளை தொடர அனுமதிக்க வேண்டுமா?
* யுத்த நிறுத்தத்தை தமிழர் தரப்புத்தான் கைவிட வேண்டுமா?
* தமிழர்தரப்பு யுத்தத்தை ஆரம்பிப்பதால் உலக நாடுகளின் வெறுப்பை நாம் சம்பாதிக்க வேண்டுமா?

வேண்டாம்! வேண்டாம்!..........

நாமும் முள்ளை முள்ளால் எடுப்போம்! எமக்கும் சிங்கள இராணுவத் தளபதிகள், இனவெறி அரசியல் தலைவர்களை யுத்த நிறுத்தத்தை இறுக்கமாக கடைப்பிடித்துக் கொண்டு வேட்டையாட முடியுமென காண்பிக்க வேண்டும்! சிங்கள இனவெறியாளனுக்கு "கேடுகெட்ட எச்சிலிலை கருணாவின் பெயர்தான்" பதிலளிக்கக் கிடைக்குமென்றால், எமக்கும் "எல்லாளன் படை" இல்லையா? "குட்டக் குட்ட குனிபவர்களும் நாமல்லர்" என்பதை இனவெறியர்களுக்கு காண்பிக்க வேண்டும்! ஆனால் நாமும் இறுக்கமாக யுத்த நிறுத்ததை கடைப்பிடிப்போம்?

இனித் தமிழர்களின் வரலாற்றில் "டக்கிலஸ் கும்பல்", "கருணா கும்பல்", "சித்தார்த்தன் கும்பல்" என்ற பெயர்களே இல்லாமல் களையெடுக்கப் பட வேண்டும். இதற்கும் இந்த யுத்த நிறுத்தக் காலமே சரியான தருனமாகும்.

"விடுதலைப் புலிகளே" நீங்களே எமது பலம்! நீங்களே எமது காவலர்கள்! சமாதானம் என்ற கேலிக்கு உங்களைப் பலியாக்கி எமது பலத்தை இழக்க நாம் அனுமதிக்கோம்!

Print this item

  தாக்குதலால் சமாதனம் பின்னடைவு
Posted by: Vaanampaadi - 02-08-2005, 12:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

Sri Lanka rebels say ambush to severely hit peace bid
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/nws/p/reuters120.gif' border='0' alt='user posted image'>
1 hour, 1 minute ago

By Arjuna Wickramasinghe

WELIKANDA, Sri Lanka (Reuters) - Tamil Tiger rebels on Tuesday accused Sri Lanka's military of ambushing and killing one of its top political figures, and said the attack would severely damage efforts to forge lasting peace after two decades of civil war.


E. Kousalyan, political head of the Liberation Tigers of Tamil Eelam's (LTTE) eastern wing, was shot dead along with three companions late on Monday in a government-controlled area in Sri Lanka's restive east.


A driver and a pro-rebel former member of parliament were also killed. Kousalyan was the most senior rebel killed since a 2002 ceasefire left the Tigers' bloody fight for autonomy in the north and east in limbo.


"Definitely it is going to (cause) severe damage between the parties,"

"It really is a setback for the whole (peace) efforts and the confidence-building measures," he said. "The Sri Lankan military intelligence and the paramilitary groups are always working together targetting the LTTE members."


Sri Lanka's military has denied any hand in the ambush, and suspects a breakaway rebel faction led by renegade commander Karuna -- who used to dominate the area -- was responsible.


The attack took place near the village of Welikanda on a remote stretch of jungle road 500 metres from a no-man's land that separates rebel-held and military-held areas near the Tigers' eastern stronghold of Batticaloa.


Police said they suspected two unidentified gunmen ambushed the van in which Kousalyan was travelling, spraying the vehicle with automatic weapon fire.


WELL-PLANNED ATTACK


"This is the most serious attack since the ceasefire," said Timo Telen, a member of a Nordic team monitoring the truce. "I hope the government and the LTTE will work to ensure that the situation will not escalate."


Reuters correspondents who visited the scene said the van had veered off the road into a paddy field. Two police informants who said they happened to be nearby at the time of the attack pointed to where Kousalyan had been sitting.


The van was full of spent bullet casings, suggesting the gunmen fired from point-blank range.

The bodies of Kousalyan and his three Tiger companions were laid out at a morgue in the nearby town of Polonnaruwa. Each had been hit by around two dozen bullets.


"This attack was planned ahead and was carried out with precision," said Inspector Saman Perera of Welikanda police.


Bickering between the rebels and the government reached fever pitch late last year. The Tigers threatened in November to resume a struggle that has already killed more than 64,000 people on both sides of the ethnic divide.


But the rebels said they had put aside politics after Asia's devastating tsunami to concentrate on reconstruction, stoking hopes Sri Lanka's worst natural disaster could pave the way for long-elusive permanent peace.


Peace talks have been deadlocked for nearly two years over the Tigers' central demand for interim self-rule.


The rebels want the right to govern what they regard as their homeland of Tamil Eelam to be enshrined in the constitution before they will discuss lasting peace.

The government says the rebels must agree to discuss long-term peace first.

(With reporting by Simon Gardner)




<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20050208/i/ra351215074.jpg' border='0' alt='user posted image'>
A Sri Lankan police officer holds bullet shells as he examines a bullet hole on the windscreen of the vehicle that was used by the slain top Tamil Tiger rebel political wing leader E. Kousalyan in Welikanda, Sri Lanka February 8, 2005. REUTERS/Anuruddha Lokuhapuarachchi

------------------------------------------------------------------
Asia - AFP


Sri Lanka on alert, peace bid in trouble as Tiger ambush toll hits six

58 minutes ago Asia - AFP



COLOMBO, (AFP) - Security forces went on alert in eastern Sri Lanka amid fresh fears for the already faltering peace process after the killing of a senior Tamil Tiger rebel leader, military officials said.

E. Koushalyan, leader of the political wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the eastern province, was shot dead with four senior colleagues while they were travelling in the coastal district of Batticaloa on Monday night.


On Tuesday a Tamil politician, former legislator Chandra Nehru who was wounded in the ambush, succumbed to his injuries raising the death toll to six, officials said.


Nehru's Tamil National Alliance (TNA) party is seen as a proxy of Tamil Tigers who have control over 22 TNA legislators in the 225-member parliament.


Koushalyan, who was killed instantly, is the most senior Tiger to be gunned down since Colombo and the rebels began a Norwegian-brokered truce in February 2002.


The pro-rebel Tamilnet.com website said Tigers blamed the attack on "paramilitary operatives working with the Sri Lankan armed forces."


A senior military official denied any involvement but said a security alert was sounded in the area after the killings.


Military officials said they suspected the attack was carried out by a breakaway faction of the Tamil Tigers led by the former number two in the LTTE, V. Muralitharan, better known as Karuna.


President Chandrika Kumaratunga has accused the Tigers of killing over 250 of their rivals since the truce.


The ambush is seen as a setback for Norway's attempts to revive peace talks and its moves to bring the two sides together to coordinate post-tsunami relief. The talks have been deadlocked since April 2003.


The Tigers said Koushalyan was returning from a meeting in the rebel political headquarters of Kilinochchi in the island's north, where they reviewed relief operations, when he was killed.


Norwegian ambassador Hans Brattskar held talks with the Tiger leadership Sunday to try to get the two sides to agree on ways to coordinate foreign tsunami aid.


"It is no doubt that this will be a setback," said a diplomatic source involved in the process. "What is worse is if the Tigers decide to strike back. They could go for individuals."


Military analyst and retired air force chief Harry Gunatillake said Koushalyan's slaying may not affect tsunami-related work but could have an impact on the peace process.


Gunatillake said the peace bid was already on the "backburner" after the December 26 tsunamis which battered more than three-quarters of the island's coastline and killed nearly 31,000 people, most of them in the embattled northeast.


Military officials said Koushalyan's body and those of the other four Tiger activists were at a government hospital and the rebels were expected to hold funerals in an area they control in Batticaloa district.


A local military official said Koushalyan had not told military authorities about his travels Monday so he was not provided with safe passage.


Senior Tigers are often given official security while travelling through government-held areas.

Officials said the military had stepped up checks on vehicles and passengers following the ambush.

More than 60,000 people were killed in the Tamil separatist conflict between 1972 and 2002.

AFP

Print this item

  புலிகளுக்கு அதிக இடமா? வழங்கவே முடியாது என்பதில் ......
Posted by: Vaanampaadi - 02-08-2005, 11:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

பொதுக் கட்டமைப்பில் புலிகளுக்கு அதிக இடமா?
வழங்கவே முடியாது என்பதில் அரசு விடாப்பிடி!
அதனாலேயே இழுபறி நீடிப்பு
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து இலங்கைத் தீவை மீளக் கட்டியயழுப்புவது தொடர்பான பணிகளைக் கையாள்வதற்கான பொதுக்கட்டமைப்பை அரசும், புலிகளும் சேர்ந்து உருவாக்குவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது.
பிரதேச ரீதியில் அமைக்கப்படவிருக்கும் கட்டமைப்பில் புலிகளுக்கு உரிய பெரும்பான் மைப் பங்கு அளிப்பதில்லை என்ற முடிவில் அரசு விடாப்பிடியாக - தீவிரமாக - இருப்பதே இந்த இழுபறிக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட வடக்கு - கிழக்குப் பிரதேச செயலணி ஒன்றை உருவாக்குவதற்குப் புலிகள் யோசனை தெரி வித்துள்ளனர். அந்தப் பதினொரு பேரில் அறு வர் புலிகளாலும், ஏனைய ஐவர் (மூன்று முஸ் லிம்கள் மற்றும் இரு தமிழர்கள்) அரசாலும் நியமிக்கப்படலாம் என்பதே புலிகளின் யோசனை.
ஆனால், அரசுத் தரப்பினால் ஐவரும் (மூன்று முஸ்லிம்கள் மற்றும் இரு சிங்களவர்களும்) புலிகளின் தரப்பில் ஐவருமாக மொத்தம் பத்து உறுப்பினர்களும் அதற்கு மேலதிகமாக ஜனாதிபதியால் ஒரு நிறைவேற்று அதிகாரியும் இச் செயலணிக்கு நியமிக்கப்படலாம் என்பது ஜனா திபதி தரப்பு ஆலோசனை என்று கூறப்படு கின்றது.
வடக்கு - கிழக்குப் பிரதேச செயலணியில் புலிகளுக்கு அதிக இடமளிப்பதன் மூலம் நிர் வாக அதிகாரம் புலிகளுக்குப் போவதற்கு இட மளிக்க முடியாது என ஜனாதிபதி அடித்துக் கூறிவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த சனியன்று கிளிநொச்சியில் நோர்வே அனுசரணைக் குழு சார்பில் நோர்வேத் தூது வர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்தபோதும் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட் டில் மாற்றம் இல்லை என்பதே தெரிவிக்கப் பட்டதாக அறியவந்தது.
இதனால், பொதுக்கட்டமைப்புக்கான இணக் கப்பாடு எட்டப்படாமல் இழுபறிப்படும் நிலை நீடிக்கின்றது.
இந்தச் செயலணியின் நிர்வாக அதிகாரம் புலிகளுக்குச் சார்பாகச் செய்வதை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. கடு மையாக எதிர்க்கும் என்ற காரணத்தைக் காட் டியே அதற்கு இணங்க முடியாது என ஜனா திபதி தெரிவித்துவருகின்றார்.
ஆனால், ஒருபுறம் ஜே.வி.பியைத் தூண்டி விட்டு அந்த நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத் தச் செய்துகொண்டே மறுபுறத்தில் மீள்கட்டு மானப் பணியில் தமது அரசு இயந்திரத்தைப் பலப்படுத்தித் தாம் நினைத்ததைச் சாதிக்க முயல்கிறார் ஜனாதிபதி என்ற அதிருப்தி நிலைப் பாடு புலிகளின் தலைமைக்கு ஏற்பட்டிருப் பதாகத் தெரிகின்றது.
பொதுக்கட்டமைப்பில் இணக்கநிலை எட்டு வதற்கான வாய்ப்புகள் அருகிவருவதாக விடய மறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Uthayan

Print this item

  கெளசல்யனுக்கு லெப்.கேணல் பதவி!
Posted by: Vaanampaadi - 02-08-2005, 11:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

புனாணையில் நேற்று இரவு இடம்பெற்ற அதிரடித் தாக்குதலில் மரணித்த மட்டு. - அம் பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கெளசல்யனுக்கு லெப்.கேணல் பதவி வழங் கப்பட்டிருக்கிறது. அதேபோல் அவருடன் உயிரி ழந்த புகலன், செந்தமிழன் ஆகியோருக்கு மேஜர் பதவிகளும் விதிமாறனுக்கு 2ஆம் லெப்ரினன்ட் பதவியும் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாலை அரசியல்துறை அறிவித்தது.
சம்பவத்தில் சாவடைந்தோருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

Uthayan

Print this item