| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 415 online users. » 0 Member(s) | 411 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வாழ்க்கைத் துணையின் உதவி....! |
|
Posted by: tamilini - 03-31-2005, 02:06 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (18)
|
 |
இதயப் பராமரிப்பில் வாழ்க்கைத் துணையின் உதவி....!
நெடுநாள் வாழ்தல் என்பது நீண்ட ஆயுளோடு கூடிய வாழ்க்கை மட்டுமன்று. அந்த வாழ்க்கை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும்இ உறவினர்களுக்கும் பயன்படும் விதமாய் வாழப்பட வேண்டும்.
கணவன்-மனைவி உறவு உடல் நலனுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் உகந்ததாகும். அவ்வுறவில் ஏற்படும் நல்லவை மற்றும் தீயவனவற்றின் தொடர்ச்சி அல்லது விளைவுகள் வீட்டோடு நின்று விடாமல் அத்தனிப்பட்ட நபரின் பணி மற்றும் இதர வெளிப்புற நடவடிக்கைகளையும் பாதிக்கும்.
'ஆரோக்கியம் என்பது நோயற்ற" பலவீனமற்ற தன்மை மட்டுமல்லாது உளவியல்இ உடலியல் மற்றும் சமூகவியல் சார்ந்த நலனைக் குறிப்பதே" என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. இந்நிய கலாச்சாரத்திற்கும் ஆன்மீகம் முதுகெலும்பாய்த் திகழ்கிறது. ஆன்மிக நலன்இ மகிழ்ச்சி என்கிற இரு சொற்களில் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.
ஆன்மீகத்தில் நிறைவு பெற ஆச்சிர வாழ்க்கை மேற்கொள்பவரும்இ வனாந்தரங்களில் வசிக்கச் செல்பவரும் ஒரு சிலர் தாம். பெரும்பாலோர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுத் தமது கடமைகளை நிறைவேற்றி உளவியல்இ ஆன்மீகம்இ சமூகம் சார்ந்த நலனுக்காய் உழைக்கின்றனர். 'கடமை வீரன்" என்பவன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு மனைவிக்கு நல்ல கணவனாய்இ குழந்தைகளிடம் அன்பு காட்டி ஆதரவு செய்யும் பெற்றோராய்இ தமது தொழிலில் சிறந்து விளங்குபவனுமாவான். பிறரது நலனுக்காய் வாழ்பவனே உண்மையில் வாழ்பவன். சுயநலமி இருந்தும் இறந்தவனாகவே கருதப்படுவான்.
ஒருவரது வாழ்க்கைத்துணை அவரது இதயத்தின் கவனிப்பில் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஆரோக்கியம்இ நீண்ட ஆயுள் இவற்றிலும் முக்கிய பங்கு வகிப்பவராவார். ஆரோக்கியம் என்பது நோயற்ற பலவீனமற்ற நிலைமட்டுமல்லாது உளவியல் உடலியல்இ சமூக ரீதியான நன்மைகளைப் பெற்றிருப்பதுமாகும். இவற்றை ஒருவர் தனித்து நின்று பெற முடியாது. உற்ற துணை அவசியம்.
தாம்பத்தியம் நடத்தும் இருவரில் ஒருவர் மட்டும் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தால் போதாது. அவரது வாழ்க்கைத் துணையும் அத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல்இ தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் எழும். அதன் விளைவாய் குடும்பத்தில் அமைதி கெடும். கருத்து வேறுபாடு உருவாக வாய்ப்புக்கள் இல்லையெனில்இ கணவன்இமனைவி பரஸ்பரம் உற்சாகம்இ அன்புஇ நேர்மறை மனோபாவம் கொண்டு விளங்குவர். இதனால் வாழ்க்கைத்தரம் உயர்ந்து சுற்றுப்புறம் மற்றும் பணி செய்யுமிடத்தில் வெற்றி கிட்டுவதோடு இருவரது உடல் நலமும் ஆரோக்கியமாய்த் திகழும்.
உடம்பில் பொது ஆரோக்கிய கண்காணிப்பிற்கு அப்பால் ஒருவரது இதய நலக் கண்காணிப்பில் அவரது வாழ்க்கைத் துணை மூன்று நிலைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
1. மாரடைப்பைத் தடுத்தல்
2. மாரடைப்பில் இருந்து மீளும்நிலை
3. மாரடைப்பிற்குப் பின் மறுசீரமைப்புக் கட்டத்தில்
மாரடைப்பைத் தடுத்தல்
இந்தியாவில் மாரடைப்பில் பாதிக்கப்படுகிறவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 40-50 வயதுக் கட்டத்தைச் சேர்ந்தவர்களேயாகும். அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள். எனவேஇ இதயப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க அளவிலான பொறுப்பு பெண்களையே சாரும்.
மாரடைப்பைப் பொறுத்தவரை அவற்றிற்கான காரணிகளையோஇ தடுப்பு மருந்துகளையோ பற்றி அறிந்திருக்கவில்லை. நம்மவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அபாய காரணிகள் இவை:
புகைப் பிடித்தல்: படித்தவர்களில் பலருக்கும் இக்காரணியின் ஆபத்தான விளைவு நன்கு தெரிந்திருப்பினும் அக்கருத்தை குடும்பத்தாரோ அல்லது மனைவியோ அதிகாரத் தோரணையில் கூறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.
எனவே புகைப் பிடிக்கும் பழக்கமுடையவரின் மனைவி அக்காரணியின் விளைவுகளை நிதானமாய் அன்புடன் மனதைத் தொடும்; வகையில் எடுத்துரைக்க வேண்டும். மாரடைப்பைத் தடுக்கும் அணுகு முறைகள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.
இரத்த அழுத்தம்: முறையான உடற்பயிற்சிஇ அதிக அளவு உப்பு உட்கொள்வதைத் தவிர்த்தல். ஆல்கஹாலின் அளவைக் குறைத்தல் மிதமிஞ்சி உன்பதைஇ பானங்கள் பருகுவதைக் குறைந்து உடல் பருமனாவதைத் தவிர்த்தல். யோகாஇ தியானம்இ இசைஇ ஆன்மீகக் கூட்டங்களுக்கு செல்லுதல் இவற்றின் மூலம் அமைதி பெறுதல்இ உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகளைக் கண்காணித்தல் இவை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்இ வராமல் தடுக்கவும் உதவும்.
இரத்தக் கொழுப்பினிகள்: உயர் இரத்தக் கொழுப்பினிகளைக் குறைக்க சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளனவென்றாலும்இ மருந்தில்லா நடவக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் அவை கட்டுப்பாடான உணவுஇ உடற்பயிற்சியை உள்ளடக்கியதாகும்.
கொழும்புஇ இனிப்பு இல்லாத உணவு வகைகளையே நோயாளிக்கு வழங்க வேண்டும். ஒரு முட்டையில் 300மி.மி கொழுப்பினி உள்ளது. அசைவ உணவில்இ ஈரல்இ மூளை போன்றவை அதிகக் கொழுப்பினி உடையதாகும். உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறவர் பால்இ பாலகப் பொருள்களைத் தவிர்த்தால் தான் கொழும்புகளின் அளவைக் குறைக்க முடியும். உண்ணத் தக்க பருப்பு கொண்ட கொட்டைகளிலும் உலர்ந்த பழங்களிலும் கொழுப்பினி இல்லையென்றாலும் அவற்றை அதீதமாய் உட்கொள்கிற போது 'கலோரிகள்" கூடி வெயிட் போட நேரும்.
உடற்பயிற்சியில் எடை குறைவதோடு இரத்தக் கொழுப்பினி அளவும் குறையும். மாரடைப்பில் இரத்தக் கொழுப்பினி மற்றும் டரைக் கிளிஸரைடுகள் வலுவான அபாய காரணிகளாய் கருதப்படுகிறவையாகும். தவறாமல் உடற்பயிற்சி செய்து வர நட்பார்ந்த கொழுப்பினி அதிகரித்து மாரடைப்பைத் தடுக்கும்.
மன இறுக்கத்தைச் சமாளித்தல்: மன இறுக்கத்தால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது மாரடைப்பிற்கான எச்சரிக்கையோடு. இதைத்தூண்டும் காரணியுமாகும். எனவேஇ வாழ்க்கைத் துணையாய் அமையும் பெண் கோபம்இ மன இறுக்கத்துக்கான சூழ்நிலைகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்து மாரடைப்பிற்கு வழி வகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளில் பொதுவான விளையாட்டுஇ பொழுதுபோக்குஇ இசை போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தி ஓய்வு வெறுவதன் மூலம் தம்முடைய குடும்பத்தினருடைய மகிழச்சிக்கு வகை செய்யலாம்.
மாரடைப்பு ஏற்பட்ட நிலை: மாரடைப்பின் போது பாதிக்கப்படுபவர் பல்வேறு அச்சங்களுக்காட்படுவார். மரணபயம்இ மீண்டும் மாரடைப்பு வருமோ என்கிற பயம்இ வேலையிழப்பு பற்றிய பயம்இ ஒட்டுமொத்த செயலிழப்புப் பற்றிய பயம். இவை குறிப்பிடத்தக்கவை.
திறமையான மருத்துவரால் சகதிவாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவரின் மனைவி நம்பிக்கையோட இருப்பது முக்கியம்.
கணவர் மருத்துவமனையில் நோய்ப்படுக்கையில் இருந்தாலும் அவரது வீட்டிலும்இ அலுவலகத்திலும் பணிகளுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படவில்லை. எல்லாம் சுமூகமாய் நடைபெறுகின்றது எனக் கூறி உற்சாகமளிப்பது மனைவியின் கடமை. நோயாளியுடன் எவரும் விவாதத்தில் ஈடுபட அவர் அனுமதிக்க கூடாது. பார்வையாளர்கள் சில நிமிடத்திற்கு மேல் அங்கே தங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாமும் கணவரிடம் தீவிர விவாதம் மேற்கொள்ள கூடாது.
மறுசீரமைப்புக் கட்டத்தில்: மாரடைப்பிற்குப் பின் மூன்று இருந்து நான்கு நாட்களில் மறுசீரமைப்புத் தொடங்கும். அந்நிலையில் எவ்வித சிக்கலும் ஏற்படக்கூடாது.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணை மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர் கூறும் அறிவுரைகளை நன்கு கவனித்து. வீட்டிற்குத் திரும்பியதும் முறையாகக் கடை பிடிக்க வேண்டும். அவை விட்டிலேயே சிகிச்சையை எளிதாய்த் தொடர உதவும்.
மாரடைப்பிற்குப்பின் ஆறு வாரத்தில் இயல்பான பாலியல் செயல் முறைகளில் ஈடுபடலாம். ஆனால்இ சில மருந்துகளால் அவ்வாற்றல் பாதிக்கப்படுமெனில்இ மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரும்இ அவரது வாழ்க்கைத் துணையும் மருத்துவரிடம் பிரச்சினைகளை வெளிப்படையாய் விவாதிக்கலாம்.
தங்களுக்குள் கலந்துபேசிஇ அன்போடு வாழும் தம்பதியர் மாரடைப்பு அபாயத்தை தவிர்ப்பதோடுஇ நீண்ட காலத்திற்கு நோயின்றி வாழ முடியும்.
நன்றி: சூரியன்.
|
|
|
| உலகில் விசித்திரமான உயிரினங்கள் |
|
Posted by: thivakar - 03-31-2005, 12:53 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (14)
|
 |
உலகில் விசித்திரமான உயிரினங்கள் இருப்பதை பற்றி நாங்கள் அறிந்திருக்கின்றோம் ஆனால் நேரடியாக பார்க்கவில்லை..ஆனால் அவை மனிதனுக்கு பயந்த உயிரினங்களாகதான் இருக்கின்றன..மனித நடமாட்டத்தை கண்டாலே..ஓடி ஒழித்துக் கொள்வதால் அவைகளை பற்றி அறியமுடியாமல் இருக்கிறது...
கீழே இருக்கும் படத்தில் உள்ள உயிரினம் சவூதி அரேபியாவில் safania என்ற கடற்கரை அண்டிய பிரதேசத்தில் இருப்பதாக் கூறப்படுகிறது.இந்த இடம் அரபிக்கடலுக்கு அண்டிய பகுதியாகவும்.குவைத்தை போடராகவும் கொண்டது இங்கு மக்கள் வசிப்பது இல்லை..ஆமி காம்ஸ்தான் உள்ளது..அங்கு வேலை செய்யும் ஒரு american (Mechanical Engineer) எனக்கு மெயிலில் அனுப்பி இருந்தார்...நானும் எதாவது கணணி மூலமான கிராபிக்ஸ் எனதான் நினைத்தேன்..ஆனால் இங்கு இருக்கும் சவூதிஸ்சும் சொல்லினம் இப்படி இருப்பது உண்மை எண்டு.............
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்??????
|
|
|
| மச்ச ஜாதகம் |
|
Posted by: shanmuhi - 03-31-2005, 10:01 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (24)
|
 |
<b>மச்ச ஜாதகம் - ஆண்களுக்கு</b>
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.
<b>மச்ச ஜாதகம் _ பெண்களுக்கு </b>
ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.
மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொÊÊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.
இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.
கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
Puthumai.Com
|
|
|
| விக்கிபீடியா |
|
Posted by: sunthar - 03-31-2005, 01:24 AM - Forum: இணையம்
- Replies (2)
|
 |
<img src='http://www.geocities.com/tamilarulagam/com.JPG' border='0' alt='user posted image'>
|
|
|
| உளவள வெற்றிமனை திறப்பு |
|
Posted by: gururaja - 03-31-2005, 01:01 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அக்கராயன் பிரதேசத்தில் சந்தோசம் உளவள வெற்றிமனை இன்று திறப்பு
அக்கராயன் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் சந்தோசம் உளவளத்துணை நிலையம் இன்று (30.03.2005) திறக்கப்பட்டது.
போர்ச்;சூழல் காரணமாகவும்ää இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் பின் நகர்ந்த வாழ்வியல் சூழ்நிலைகளுக்குட்பட்டு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான மற்றுமொரு வெற்றி மனையினை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் கிளிநொச்;சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் எனும் இடத்தில் திறந்து வைத்துள்ளது.
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ராஜரட்ணம் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள இவ்வெற்றிமனைத் திறப்புவிழா நிகழ்வானது திருமுறிகண்டி ஆலய பரிபாலனசபையின் நிர்வாக இணைப்பாளரான சபாரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்துää தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றிவைத்தார்.
இதனையடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவி நிறைவேற்றுப்பணிப்பாளர் றீகன் ஏற்றிவைத்தார்.
கட்டடத்தின் பெயர் பலகையினை மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் திருக்குமரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இதனையடுத்து பிரதான விடுதியினை தமிழீழ அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் திறந்துவைத்தார்.
அலுவலகக் கட்டிடத்தினை அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச்; சார்ந்த திருமதி.பரராசிங்கம் சிராணி திறந்துவைத்தார்.
இளைப்பாறு மண்டபத்தினை தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊடகப்பணிப்பாளர் சங்கீதன் திறந்துவைத்தார். தொடர்ந்து சோ.தங்கன்ää கிளிநொச்;சி மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் கெங்காதரன் முதியோர் இல்லப் பொருளாளர் சாந்தலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
சோ.தங்கன் உரையாற்றுகையில்ää தேசியத்தலைவரின் எண்ண வெளிப்பாடாகவே இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டமை பாராட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.
இன்றைய இத் திறப்புவிழா நிகழ்வில் சிறுவர் நலத் திட்டப்பணிப்பாளர் ரவிää நெக்கோட் திட்ட இணைப்பாளர் சுடர்ää திட்டக்கண்காணிப்பகுதி இணைப்பாளர் வே.பாலசுப்பிரமணியம்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள்ää சந்தோசம் உளவள வெற்றிமனைப் பணியாளர்கள்ää போராளிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நன்றி தமிழ்நாதம்
|
|
|
| WTRUK Å¡¦É¡Ä¢Â¢ý ÌÍõÒ.. |
|
Posted by: ¸ÅâÁ¡ý - 03-31-2005, 12:09 AM - Forum: புலம்
- Replies (4)
|
 |
¯Ä¸ò¾Á¢ú ´Ä¢ÀÃôÒ ÜðÎò¾¡ÀÉõ WTRUK ´Õ ¿¢¸ú¢ý §À¡Ð («¾ÅÐ ´Õ º¢É¢Á¡ ºõÀó¾Àð¼ ¿¢¸ú) ƒ§Ã¡ôÀ¢Â §¿ÃôÀÊ þÃ× 22.00 Á½¢ìÌ ¦¾¡¼í¸¢ÈÐ, ¯í¸û Å¢ÕôÀõ ±ýÈ ¿¢¸ú¢ø <b>¾Á¢Æ¢Æ ±Øîº¢ ¸¡Éõ ´ý¨È À츢È×ñð Á£º¢ì ¬¸ ´Ä¢ÀÃôÀ¢ «ó¾ À¡¼Ä¢ý</b> ¦ÀÚÁ¾¢¨Â ̨È츢ýÈ¡÷¸û.
þ¨¾ ¡ÃÅÐ «Å÷¸ÙìÌ ¦¾Ã¢ÂÀÎòÐÅ£í¸Ç¡?? :evil: :evil:
|
|
|
| புல நிகழ்ச்சிகள் |
|
Posted by: சிலந்தி - 03-30-2005, 11:35 PM - Forum: புலம்
- Replies (8)
|
 |
இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பு முதல் நிகழ்வினை மிகச் சிறப்பாக நிகழ்த்தியுள்ளனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஒழுங்குகளுடன் அடம்பெற்மை பாராட்டுக்குரியது;. யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை மிகவும் சிறப்பு. தமிழ் இளையவர்கள் வளர நம்மாலான பங்களிப்புக்களை வழங்க அனைவரும் முன்வரவேண்டும்.
|
|
|
|