| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 339 online users. » 0 Member(s) | 336 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,262
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| டி.வி. பார்த்தா, குழந்தைகள் மக்காகி விடும |
|
Posted by: SUNDHAL - 07-06-2005, 10:31 PM - Forum: மருத்துவம்
- Replies (6)
|
 |
டி.வி. பார்த்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கும் என்று பரவலாகவே கருத்து உள்ளது. எனினும் டி.விக்கும், குழந்தையின் படிப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமொpக்காவில் இது சம்பந்தமாக 3 விதமான முறையில் நடந்த ஆய்வில் பெற்றேhருக்கு கிலி உண்டாக்கும் தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் விவரம் வருமாறு
டி.வி நிகழ்ச்சிகளை கூடுதலான நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு மக்காகி விடும் என்பது உண்மை தான். அதுபோல படுக்கையறையில் டி.வி. இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும்.
பாதிப்பு என்ன?
படுக்கையறையில் டி.வி. இருந்தால் கணிதம், மொழிப் பாடம், வாசிப்பு சோதனை ஆகியவற்றில் குழந்தைகள் குறைந்த மார்க் எடுப்பார்கள்.
5 முதல் 11 வயதுக்குள் அதிகமாக டி.வி. பார்க்கும் குழந்தைகள் கல்லு}hpப் படிப்பில் சாதிக்க தவறி விடுவார்கள்.
3 வயதுக்கு முன் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், குறிப்பிட்ட குழந்தை 6-ல் இருந்து 7 வயது வரை படிப்பில் மட்டமாக இருப்பார்கள்.
இதுபோக கூடுதலான நேரம் டி.வி. பார்ப்பதால் குழந்தைகள் உடல் பருமனாகி விடும். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் வன்முறை காட்சிகள் இடம் பெறும் பட்சத்தில் அந்தக் குழந்தைக்கு அந்த குணம் நாளடைவில் தொற்றி விடும்.
ஆக, டி.வி. நிகழ்ச்சிகளை அளவோடு பார்த்தால் ஒரு பிரச்சினையும் இருக்காது. மணிக்கணக்கில் உட்கார்ந்தால் அறிவுத் திறன் பாதிக்கப்படுவதுடன், பல உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும் என்று இந்த ஆய்வு தொpவிக்கிறது.
|
|
|
| கவிதை வரையலாமா? |
|
Posted by: KULAKADDAN - 07-06-2005, 04:56 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (19)
|
 |
உறவுகளே! இப்பகுதியில் வைக்கப்படும் தலைப்புக்களுக்கு பொருத்தமாக உங்கள் எண்ணங்களில் தோன்றுவதை கவிதையாக்குங்கள்.
1.முதல் வரைந்ததற்கு பதிலாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதாவது தலைப்பை நீங்கள் கருதும் கோணத்தில் இருந்து
2. 10 வரிகளுக்குள் அமைவது சிறப்பாக இருக்கும்
முதல் தலைப்பு
<span style='font-size:30pt;line-height:100%'>பாலையைப் பச்சைப்படுத்தி</span>
முன் தலை வெளிக்க
மூவேலை செய்து
செவ்வாயோடு அலைந்து
செம்மையாக்கிய அக்காவின்
நெற்றி
நேற்றைய செல்லடியில்
மீண்டும் வெறுமையாய்..............
|
|
|
| மாமியார்கள் படுத்தும் பாடு |
|
Posted by: SUNDHAL - 07-06-2005, 03:46 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
ருமேனியாவில் பொடோசானி நகரில் வசிக்கும் ஆண்கள் மாமியார் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதனால் அந்த நகரத்து மனோதத் துவ டாக்டர்கள் கிளினிக்கில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
"நாங்கள் தான் குடும்பத்துத்தலைவர்கள் ஆனால் குடும்பத்தை நாங்கள் நினைத்தபடி நடத்த முடியவில்லை மாமியார்கள் விரும்பிய படியே நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர்களால் மனைவியுடன் சந்தோஷமாக தாம்பத்யம் நடத்த முடியவில்லை.
இதனால் டாக்டர்களிடம் மனைவி மாமியாருடன் சென்று ஆலோசனை பெற்று திரும்புகிறார்கள்.
|
|
|
| திட்டமிட்டபடி விண்ணில் இடம்பெற்ற நேரடி மோதல் |
|
Posted by: adsharan - 07-06-2005, 08:36 AM - Forum: மருத்துவம்
- Replies (3)
|
 |
அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய இம்பெக்டர் என்ற விண் ஆய்வுக்கலம் பூமியில் இருந்து 8.3 கோடி மைல்கள் தூரத்தில் உள்ள டெம்பெல்-1 என்ற வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் சென்று நேற்று திங்கட்கிழமை மோதியது.
வால் நட்சத்திரத்துடன் மோதுவதற்காகவே அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த ஆய்வுக் கலம், 2 மணிநேர பயணத்துக்குப் பிறகு திட்டமிட்டபடி வால் நட்சத்திரத்துடன் மோதியது.
அது மோதிய போது கற்களும், பனிப்பாறைகளும் வால் நட்சத்திரத்தில் இருந்து தெறித்தன. நாம் வாழும் இந்த சூரிய மண்டலம் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் உள்ள நாசா விஞ்ஞானிகள், இந்த மோதலின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால் உருவாகியுள்ள விளைவுகளை வைத்து அதனைக் கணிக்க முடியும் என்று கருதுகின்றனர்.
இந்த மோதலுக்காக நாசா செலவு செய்தது 33.3 கோடி டொலர்கள்.
திட்டமிட்டபடி வால் நட்சத்திரத்தின் மீது ஆய்வுக் கலம் மோதியதை, அதனைக் கொண்டு சென்ற விண்கலம் படம் பிடித்து அனுப்பியதைக் கண்ட நாசா விஞ்ஞானிகள் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இதேவேள, பீப்பாய் அளவுள்ள அந்த விண்கலத்தின் பெயர் `இம்பெக்டர்'. அதை `டீப் இம்பெக்ட்' என்னும் ரொக்கெட் விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் "டெம்பெல் 1" வால் நட்சத்திரம் இந்தியாவில் மும்பை நகரை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதன் மீது 372 கிலோ எடையுள்ள அவ்விண்கலம் மோதும் போது, ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவுக்கு ஏற்பட்டது.
அந்த மோதலின் போது 5,000 கிலோ கிராம் டி.என்.டி. வெடிமருந்தை வெடிக்கச் செய்வதற்கு இணையான சக்தி வெளிப்படுத்தப்பட்டது.
13 கோடி கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் அந்த மோதல் நிகழ்வதால் பூமிக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாது. வால் நட்சத்திரத்தின் பாதையிலும் பெரிதாக மாற்றம் ஏதும் நடக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
|
|
|
| நரை முடியை தடுக்க |
|
Posted by: SUNDHAL - 07-06-2005, 03:17 AM - Forum: மருத்துவம்
- Replies (29)
|
 |
நரைத்த தலைமுடியை மறைக்க இனி டை அடிக்க வேண்டியதில்லை. அழகு சாதனப் பொருட்களும் வேண்டாம். எல்லாம் உங்கள் கையிலேயே உள்ளது.
கை விரல் நகங்களுடன் முடியும் நரம்புகளுக்கும், தலைமுடியின் வேர்களுக்கும் இடையில் நேரடி தொடர்பு உள்ளது. இதனால் ஒரு கையில் உள்ள நகங்களை மற்றெhரு கையில் உள்ள நகங்களுடன் உரசுங்கள். இந்த உரசல் மூலம் மண்டை ஓட்டுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகாpக்கும். இதன்மூலம் நரைத்த முடி உண்டாவது தடுக்கப்படும்.
நகங்களை உரச பிடிக்கவில்லையா? அப்படியானால் மேலும் 2 வழிகள் உள்ளது.
1. காலையில் எழுந்ததும் முன்நெற்றியில் முடி தொடங்கும் பகுதியில் கைகளால் மெதுவாக அழுத்;துங்கள். இப்படிச் செய்வதால் மண்டையோட்டில் செல்லும் ரத்த நாங்களில் உள்ள அடைப்பு நீங்கி, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி வகுக்கும். இதனால் நரைத்த முடி உண்டாவது தடுக்கப்படும்.
2. அடுத்து தலைமுடி நரைப்பதை தடுக்க கபல்பாட்டி என்ற ஸ்பெஷல் யோகாசனம் ஒன்று உள்ளது.
படத்தில் காட்டியபடி தரையில் அமர்ந்து கொண்டு 2 கைகளையும், தொடைகளுடன் சேர்த்து விரைப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உள்ளே இருக்கும் காற்றை 2 மூக்கு ஓட்டைகள் வழியாகவும் வெளியேற்றி, வயிற்றை உள்ளுக்குள் இழுங்கள். எவ்வளவு காற்றை வெளியேற்றுகிறேhமோ, அந்தளவுக்கு வயிறு உள்ளுக்கு சென்று விடும். அப்போது வயிறு பழைய நிலையை அடையும்படி செய்யுங்கள். இப்போது நிறைய காற்றை உள்ளுக்குள் உறிஞ்சிக் கொள்வீர்கள். இதுபோன்ற பயிற்சியை திரும்பச் திரும்பச் செய்யும் போது, நரைத்த முடி தலைகாட்டாது.
|
|
|
| கழுதைக்குத் தாலி கட்டியதும் மழை கொட்டியது |
|
Posted by: SUNDHAL - 07-06-2005, 03:11 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (35)
|
 |
ஆரணி திருமலைசமுத்திரம் ஏரியில் மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் செய்தனர். தாலி கட்டியதும் மழை பெய்த அதிசயம் நடைபெற்றது.
ஆரணி திருமலைசமுத்திரம் ஏரி மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியின் தண்ணீரைத்தான் அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்காக நம்பியுள்ளனர். ஆனால் மழை பெய்யாததால் ஏரி வறண்டு கிடக்கிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். பின்னர் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் சேர்ந்து மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் செய்ய தீர்மானித்தனர்.
ஏரியின் மையப் பகுதியில் இரண்டு கழுதைகளுக்கு புரோகிதர் வைத்து அனைத்து சடங்குகளுடனும், மேளதாளங்களுடன் திருமணம் செய்து வைத்தனர்.
கழுதைக்குத் தாலி கட்டியதும் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு பெண்கள் பொங்கலிட்டு பூஜை செய்தனர்.
|
|
|
|