Yarl Forum
கவிதை வரையலாமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிதை வரையலாமா? (/showthread.php?tid=3965)



கவிதை வரையலாமா? - KULAKADDAN - 07-06-2005

உறவுகளே! இப்பகுதியில் வைக்கப்படும் தலைப்புக்களுக்கு பொருத்தமாக உங்கள் எண்ணங்களில் தோன்றுவதை கவிதையாக்குங்கள்.
1.முதல் வரைந்ததற்கு பதிலாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதாவது தலைப்பை நீங்கள் கருதும் கோணத்தில் இருந்து
2. 10 வரிகளுக்குள் அமைவது சிறப்பாக இருக்கும்



முதல் தலைப்பு

<span style='font-size:30pt;line-height:100%'>பாலையைப் பச்சைப்படுத்தி</span>

முன் தலை வெளிக்க
மூவேலை செய்து
செவ்வாயோடு அலைந்து
செம்மையாக்கிய அக்காவின்
நெற்றி
நேற்றைய செல்லடியில்
மீண்டும் வெறுமையாய்..............


- kavithan - 07-06-2005

பட்டு போன மரத்துக்காயும்
விட்டு போன உறவுக்காயும்
தொட்டு ஒரு மரம் நாட்டுங்கள்
பாலை பசுமையாகும்.


- வெண்ணிலா - 07-07-2005

கவியால் பேசலாம் பகுதிக்குள் ஆரம்பித்திருக்கலாமே குளம் அண்ணா Idea


- Nitharsan - 07-07-2005

பாலையை பச்சையாக்கி!
பாலையிங்கு பசுமையாதே
பாவை உன் வரவைக் கண்டா?
இல்லை உன்
பசுமையான நினைகளை
அதுவும் சுமப்பதாலா?
பாவம் பாலை...
காலையில் மாலையில்
பாலையில் எந்நேரமும்
பாயும் வெயில்...-உன்
பார்வை பட்டதால் தான்
பச்சையாகி விட்டதோ!?
ஆனாலும் பெண்னே!
உனக்காகா!
காந்திருந்து காத்திருந்து...
மீண்டும் பச்சை பாலையாகும்.........


- Nitharsan - 07-07-2005

கவிதை எழுதினாப்பிறகு எனக்கொரு சந்தேகம் கவிதையை வரையேலாது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கவிதை போன்றவர்களை தான் வரையாலாம்.... :wink:


- tamilini - 07-07-2005

Quote:கவிதை எழுதினாப்பிறகு எனக்கொரு சந்தேகம் கவிதையை வரையேலாது.. கவிதை போன்றவர்களை தான் வரையாலாம்....
ஆஆகா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 07-07-2005

கவிதகள் நல்லாயிருக்கு வாழ்த்துகள் தொடாந்து எழுதுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதோட நிதர்ஸன் அண்ணா மாதிரி சூப்பர் கண்டுபிடிப்புகளையும் செய்யுங்க :wink: :wink:


- KULAKADDAN - 07-07-2005

நித்திலா மற்றும் தமிழினி அக்காவும் கவிதை வரையலாமே?


- Thala - 07-08-2005

<b>சலவை</b>]

அடித்து துவைக்கும்
உன்
செயல்களால்
அழுக்காகிப் போனது
உன்னைப்
பற்றிய
சலவை நினைவுகள்....


- KULAKADDAN - 07-08-2005

தல இது மேல சொன்ன தலைப்புக்குள் வருகிறதா? :roll: :roll: :?


- Thala - 07-08-2005

சத்தியமா நான் சுடேல்ல..


- shanmuhi - 07-08-2005

<b>பாலையைப் பச்சைப்படுத்தி</b>

பால் போன்ற நிறமேனி
பட்டுப்போன்ற கரங்களை
பார்த்ததால் கண்ணுறக்கம் இல்லை
பார்க்காவிட்டாலோ மனம் பதறுகிறது
பால் வடியும் முகம் நிதம் கண்டு
பச்சிளம் குழந்தை உந்தன் சிரிப்பினில்
எந்தன் உள்ளம் பச்சை குத்தியது போல்
மாறாத பசுமை நினைவுகளுடன்


- Thala - 07-08-2005

மன்னிக்க வேணும் குழக்ஸ்..
நான் தலைப்பை வேறு இடத்தில.........(சொதப்பீட்டன்)


- Thala - 07-08-2005

அறிவுச்சோலை

பெற்ற மகவை
விட்டெறிந்தார்
போர் எண்று
விட்டு அகன்றார்
அள்ளி அணைத்தது
அன்புக்கரம்
தலைவரின்
காந்தரூபன்
அறிவுச்சோலை....


- Mathan - 07-08-2005

கவிதை நன்றாக இருக்கின்றது நிதர்சன்


- Nitharsan - 07-08-2005

நன்றி மதன்


- aswini2005 - 07-08-2005

கவிதைகள் நன்றாக இருக்கின்றது. நண்பர்களே தொடருங்கோ. குளம் உங்களுக்கு சிறப்பான நன்றிகள். செவ்வாயோடு அலைந்து நல்ல வரி. யதார்த்தத்தை உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்.


- Thala - 07-08-2005

<b>பாலகனுக்கு பால்</b>

தேரென்றார்
திருவிழாவென்றார்
ஊர் கூடி
திருமணமென்றார்.
ஊர் கோடிப் பாலகனுக்கு
பாலில்லை!..
இந்த
பாலையைபச்சைப்படுத்த
அந்த
பாலை வாருங்களேன்...
ஊரெல்லாம் சொல்கிறது
ஊர்வாழத்தான்
திருவிழாவாம்..


கவிதை வரையலாமா? - வினித் - 07-09-2005

;அருவிகளின் அருகில் நடக்கையில் அடிக்கடி திரும்பிப் பார்க்கிறேன் நீ வருகிறாயா என்று பின்புதான் உணர்ந்து கொண்டேன் அது நீயல்ல அருவிகளின் சலசலப்பு என்று;


- வினித் - 07-09-2005

KULAKADDAN Wrote:நித்திலா மற்றும் தமிழினி அக்காவும் கவிதை வரையலாமே?

கவிதையே கவிதை வரையலாமா?????
என்னா நித்திலா அனட் தமிழினி நான் சொல்றது சரியா?