| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 442 online users. » 0 Member(s) | 440 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வசந்தம் முளைவிட...! |
|
Posted by: kuruvikal - 07-25-2005, 07:57 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (32)
|
 |
<img src='http://img114.imageshack.us/img114/8100/love6es.jpg' border='0' alt='user posted image'>
<b>வண்ண மலர்
வார்த்தை கொண்டு
வரவானால் இதயத்துள்
வண்ணம் இவன் வாழ்வும்
வகையாய் ஆனதுவே..!
வரைவிலக்கணங்கள் விதிமுறைகள்
வரைந்தே வாழப்பழகியவன்
வண்ணமவள் வரவோடு - இன்னும்
வளமானானே வடிவானானே...!
வயிற்றுக்குள் பசியும் இல்லை
வயதுக் குழப்படியும் இல்லை
வசதிகள் வாய்ப்புக்கள் தேடி ஓட்டமுமில்லை
வடிவாய்த் தனிமை தந்து
வண்ண மலரவள் நினைவோடு
வகையிலா மொழிகளில் பேசுறான்
வற்றாத ஊற்றாய் மகிழ்ச்சியங்கு பொங்குதே...!
வடிவுக்கு இலக்கணமாய் அவள் முகம்
வசந்தமாய் இவனுள் மலர்ந்தது முதலாய்
வகையில்லாப் புனிதம் தந்து
வகை வகையாய் ஆராதிக்கிறான்
வடிவாய்ச் சொன்னால்
வஞ்சிக் கடவுளாய் அவள்
வரம் வேண்டும் பூசகனாய் இவன்...!
வந்தவள் தங்கினள்
வருத்தம் சிலவும் தந்தனள்
வருந்த முதலே அணைக்கவும் செய்தனள்
வகையிலா தொகையிலா அன்பாலே
வளமாக்கி வாழ்வும் தந்தனள்...!
வஞ்சியவள் வரமான வார்த்தையிலே
வரவானது பாசமழை
வடிவாய் நானும் நனைகிறேன்
வசந்தம் முளைவிட
வந்தவள் ஆகினள் - என்றும் என்
அன்பின் ஜீவனாய்...!</b>
|
|
|
| இப்படியும் சில மனிதர்கள் |
|
Posted by: SUNDHAL - 07-25-2005, 05:24 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
வறுமை காரணமாக, பெற்ற குழந்தையை கோதாவரி ஆற்றில் துõக்கியெறிந்தார் தந்தை. அதிருஷ்டவசமாக தப்பியது குழந்தை.
ஆந்திரா, விஜயவாடா மாவட் டத்தை சேர்ந்த கிருஷ்ணலங்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மதுசூதனராவ். பெட்டிக்கடை வைத்து பிழைத்து வருகிறார். ஏகப்பட்ட கடன் வாங்கிவிட்டதால், வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவித்தார். கடன்களை அடைக்க முடியாமல், இனி வாழ்வதற்கு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். அதனால் தன் இரு குழந்தைகளை யாருக்காவது "தத்து' கொடுத்து விட்டால், அவர்கள் வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கட்டும் என்று நினைத்தார். விசாகப்பட்டிணத்தில் ஒருவர், இவரது மூத்த மகள் ஆறு வயது சுமதியை "வளர்ப்பு மகளாக' ஏற்க சம்மதித்தார். அதற்காக சுமதியை அழைத்துக் கொண்டு கிளம்பினார் மதுசூதனராவ்.
போகும்போதே அவருக்கு ஏகப் பட்ட குழப்பம். "தத்து கொடுக்கும் இடத்தில் தன் குழந்தை சுமதியை நன்றாக நடத்துவரா? ஏதாவது பிரச் னை வந்துவிடுமா? தன்னை போல வே குழந்தையும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுமா?' என்றெல்லாம் குழம்பியபடி இருந்தார். அவர் மனதில் அடுத்தடுத்த சந்தேகங்கள் வர, கடைசியில் குழப்பத்தின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டார்.
இப்படி எதிர்காலத்தில் குழந்தை தவிப்பதை விட, எல்லாருமாக இறப்பதே மேல் என்று எண்ணி, தோலேஸ்வரம் என்ற இடத்திற்கு வந்த போது, அங்குள்ள கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மீதிருந்து தன் ஆறு வயது மகள் சுமதியை தள்ளிவிட்டு விட்டார். எப்படி அவர் அதை செய்தார் என்றே அவருக்கு தெரியவில்லை. "ஐயோ , என் மகளை காப்பாற்றுங்க' என்று கத்தினார்.
அங்கிருந்த சில மீனவர்கள் ஆற்றில் குதித்து, தத்தளித்துக் கொண்டிருந்த சுமதியை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். சிறிய காயங்களுடன் சுமதி தப்பினார். மகளை பார்த்து தந்தை கதறி அழ, மகள் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தபடி இருந்தார். ஆழம் அதிகம் இருந்தும் குழந்தையை விழுங்கவில்லை கோதாவரி ஆறு. நல்லவேளையாக காப்பாற்றிவிட்டது
|
|
|
| காதலித்து திருமணம் முடிப்பவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவை |
|
Posted by: SUNDHAL - 07-25-2005, 05:17 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
எப்போதுமே அதிரடியாக முடிவுகளை எடுக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பார்வை, காதலர்கள் மீது பாய்ந்துள்ளது. குஜராத்தில் காதலிக்க தடை போட்டுள்ளது அவரின் லேட்டஸ்ட் நடவடிக்கை.
"காதல் திருமணங்களை பதிவு செய்ய வேண்டாம்; இருதரப்பு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இல்லாவிட்டால், காதல் திருமணங் களை நிராகரித்து விடலாம்' என்று பதிவுத் துறைக்கு உத்தவிட்டுள்ளது குஜராத் அரசு. பெற்றோர் ஒப்புதல் இல்லாத திருமணங்களை இனி குஜராத் கோர்ட்டுகள் அங்கீகரிக்காது.
குஜராத்தில் கடந்த சில ஆண்டு
களில் 15 முதல் 25 சதவீதம் வரை காதல் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கோர்ட்டுகளில் ஏகப்பட்ட வழக்குகள் குவிந்தன. பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் காதலித்து திருமணம் செய்வது அதிகரிப்பதுடன், போலித் திருமணங்களும் நடப்பது தெரியவந்தது. அதாவது, பெற்றோர் ஒப்புதல் பெற்றது போல சொல்லியும், பெண்களை ஏமாற்றியும் திருமணம் செய்வதும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசுக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்தன.
இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, "இனி பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் யாருடைய திருமணத்தையும் பதிவு செய்யக் கூடாது. கோர்ட்டுகளில் அங்கீகரிக் கும் போது, பெற்றோர் ஒப்புதல் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும்' என்று உத்தரவு போட்டுவிட்டது.
மாநிலத்தில் பெற்றோர் சம்மதம் இல்லாமலும், போலியாகவும், ஏமாற்றும் வகையிலும் திருமணங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. இப்படி தொடர்ந்ததால், அதை தடுக்கவே இப்படி முடிவு எடுத்துள்ளது அரசு'
"இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில மாதங்களாகவே அதிக கடிதங்கள், பெற்றோரிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இப்போது உத்தரவை பாராட்டியும் பலரும் அரசுக்கு நன்றி கடிதங்கள் எழுதி வருகின்றனர்' என்று துணைப்பதிவாளர் கோமேதி கூறினார்.
இனி குஜராத்தில் யாரும் காதல் திருமணம் செய்ய முடியாது. அப்படியே செய்ய விரும்பினால், இரு தரப்பு பெற்றோர் சம்மதம் தேவை. அத்துடன், அவர்களின் கடிதங்களும் தேவை. மேலும், மத அடிப்படையில் செய்யும் போது பூசாரி பற்றிய விவரமும் தேவை. அப்படி இருந்தால் மட்டுமே காதல் திருமணங்கள் பதிவு செய்யப்படும். கோர்ட்டுகளில் இதுதொடர்பாக வழக்குகள் வரும் போது, இப்படிப்பட்ட ஆவணங்கள், முக்கியமானதாக கருதப்படும்.
|
|
|
| என்னமா idea போடுறாங்க |
|
Posted by: SUNDHAL - 07-25-2005, 05:11 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பிரபல கொள்ளைக் கும்பலை சேர்ந்த தம்பதிகள், தாங்கள் சிறையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஒரு தந்திரம் செய்தனர். "எங்களை சிறை வளாகத்தில் உள்ள கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று சிறைத்துறை அமைச்சர் வந்தபோது சொல்ல, அவரும் பக்திப் பரவசத்தை பார்த்து "ஓகே' சொல்லிவிட்டார். ஆனால், இந்த கேடி தம்பதிகள் விஷயத்தில் அதிகாரிகள் தான் கடுப்பாகி உள்ளனர்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் பயங்கர கொள்ளைகள், கொலைகள் செய்து வந்த பல கொள்ளையர்கள் கடந்தாண்டு சரண் அடைந்தனர். அப்படி சரண் அடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ராமஷ்ரே சவுபே, அவர் மனைவி குசுமா நயீன். சவுபேயை "பக்காட் பாபா' என்று அவரின் கூட்டத்தில் அழைப்பர்.
இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு ஜூன் எட்டாம் தேதி சரணடைந்தனர். போபால் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். தம்பதிகள் இருவரும் பார்த்து பேச முடியவில்லையே என்று தினமும் குமுறினர். அதற்கு "பக்காட் பாபா' ஒரு தந்திரம் செய்தார். தன்னை பார்க்க வரும் உறவினரிடம், தன் மனைவியிடம் ஒரு யோசனை சொல்லுமாறும், அமைச்சர் வரும் போது அதை சொல்ல வேண்டும் என்று கூறி, தன் "தந்திரத்தை' சொன்னார்.
அதாவது, "நாங்கள் ரொம்பவும் பக்தி மிக்கவர்கள். நாங்கள் கோயிலுக்கு செல்ல வேண்டுமானால், சிறை வளாகத்தில் ஆண்கள் சிறைப்பகுதியில் தான் கோயில் உள்ளது. அங்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும்' என்பதே அந்த "தந்திர' கோரிக்கை. இதே கோரிக்கையை தானும், தன்னை சேர்ந்தவர்கள் மூலமும் கேட்க முடிவு செய்தான்.
கடந்த மாதம் சிறைத்துறை அமைச்சர் தால் சிங் பிசேன் வந்தார். அவர் முன் கைதிகள் நிறுத்தப்பட்டனர். கொள்ளைக்கும்பல் கைதிகள் எப்படி உள்ளனர் என்று விசாரிக்கும் போது, "பக்காட் பாபா' எழுந்து, "ஐயா, நாங்கள் கடவுள் பக்தி உள்ளவர்கள். ஏதோ அறிவில்லாமல் கொள்ளை, கொலைகளில் இறங்கி விட்டோம். அதெல்லாம் பழைய கதை. நாங்கள் திருந்தி விட்டோம், நாங்கள் கடவுளிடம் பிராயச்சித்தம் கேட்க விரும்புகிறோம். நாங்கள் தினமும் கோயிலுக்கு போக அனுமதிக்க வேண்டும். என்னுடன் என் மனைவியும் பக்தி அதிகம் உள்ளவர். அவரை என்னுடன் தினமும் ஒரு மணி நேரம் வழிபாட்டு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று மன்றாடினார்.
இதைக்கேட்ட அமைச்சர் சந்தோஷப்பட்டார். அதிகாரிகளை அழைத்து உடனே இவர்களை கோயிலுக்கு சென்று பூஜை செய்ய அனுமதியுங்கள்' என்றார். அதிகாரிகள் தயங்கினர். இப்படி கைதிகளை அனுமதித்தால் விபரீதம் ஏற்படும் என்று அவர்களுக்கு தானே தெரியும்.
இப்படி கடந்த காலங்களில் அமைச்சர் சொல்லி கைதிகளுக்கு சலுகை காட்டி அதிகாரிகள் படாதபாடு பட்ட அனுபவ சம்பவங்கள் நிறைய உண்டு. சில ஆண்டுகள் முன்பு, இப்படித்தான் தம்பதி கைதிகள் சந்தித்து பேச அனுமதிக்கலாம் என்று அமைச்சர் சொல்லிவிட்டார். அப்படி அனுமதி வாங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரபல கொள்ளையன் அரவிந்த் கஜ்ஜார். அவனுடன் சிறையில் இருந்த அவன் மனைவி சீமா கஜ்ஜார் சந்திக்க அனுமதி தரப்பட்டது.
சில மாதங்களில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சீமா கஜ்ஜார், ஆறு மாத கர்ப்பம் என்பதே அது. என்ன செய்வது என்றே தெரியாமல் அதிகாரிகள் உறைந்து போயினர். எனினும், சீமாவுக்கு குழந்தை பிரசவம் பார்க்க தனியாக டாக்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இப்படி ஏதும் நடந்து மீண்டும் பிரச்னை கிளம்பி விடக்கூடாது என்று ஜெயில் அதிகாரிகள் கவலை அடைந்தனர். அமைச்சர் சொன்னாலும், ஆரம்பத்தில் அதிகாரிகள் "பக்காட் பாபா' தம்பதிகளை கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால், டி.ஐ.ஜி., விஜயவார்கியா இதுதொடர்பாக உத்தரவு போட்டதும் அதிகாரிகளுக்கு வழியில்லாமல் போய்விட்டது. இந்த கைதி தம்பதி, டி.ஐ.ஜி., வந்தபோது, அமைச்சர் அனுமதித்தும் தங்களை கோயிலுக்கு போக அதிகாரிகள் விடுவதில்லை என்று புகார் கூறிவிட்டனர். அதனால், வேறு வழியின்றி டி.ஐ.ஜி., உத்தரவு போட வேண்டியதாயிற்று.
இப்போது தினமும் மணிக்கணக்கில் பூஜை என்ற பெயரில் "பக்காட் பாபா' தம்பதிகள் கோயிலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். போலீசார் கேட்டால், கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல பாசாங்கு காட்டுகின்றனர்.
|
|
|
| தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து |
|
Posted by: hari - 07-25-2005, 04:00 AM - Forum: தமிழும் நயமும்
- Replies (10)
|
 |
<span style='color:red'>தண்ணீர் தேசம்
கவிஞர் வைரமுத்து </span>
<img src='http://www.webulagam.com/literature/kavita/images/0802_vairamuthu.jpg' border='0' alt='user posted image'>
ஆனந்த விகடனில் வாராந்தம் தொடர்ச்சியாக கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட "தண்ணீர் தேசம்" என்ற தொடர் இலக்கிய கதை, மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது!
இங்கே அழுத்தி பார்க்கவும்!
|
|
|
| வருந்தினால் உயிர் திரும்புமா ? |
|
Posted by: ஊமை - 07-24-2005, 08:21 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (32)
|
 |
லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதி அல்ல என்றும் அவர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் லண்டன் போலீஸ் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளால் லண்டன் நகர மக்கள் கடந்த சில வாரங்களாக பெரும் பீதியில் உள்ளனர். கடந்த 7ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந் நிலையில் கடந்த வாரமும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால் இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
அடுத்தடுத்த இந்த குண்டு வெடிப்பால் லண்டன் நகர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பல இடங்களில் பலத்த பாதுகாப்பு இருந்த போதிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவன் குணடு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளுள் ஒருவன் என்று முதலில் லண்டன் போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவன் தீவிரவாதி அல்ல என்று தெரியவந்துள்ளது. 27 வயதான ஜீன் சார்லஸ் டிமெனஜஸ் என்ற அந்த இளைஞர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 3 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்காக தாங்கள் மிகவும் வருந்துவதாக லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தங்களது நாட்டைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரிட்டன் அரசிடம் பிரேஸில் விளக்கம் கேட்டுள்ளது.
|
|
|
| ஸ்கிரீன்சேவர் உருவாக்க |
|
Posted by: vasisutha - 07-24-2005, 07:27 PM - Forum: கணினி
- Replies (6)
|
 |
<b><span style='font-size:22pt;line-height:100%'>பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க</span>
மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
Screensaver Powerpoint Studio (www.1stss.com)
Screen Time for Powerpoint (www.screentime.com)
Any Saver (www.dgolds.com)
Active Screensaver Personal (www.automatedofficesystems.com)
Showtime (www.alienzone.com)
Apex Powerpoint Screensaver Maker (www.zc2003.com)
மேற்படி சாப்ட்வேர்கள் எல்லாமே ஷேர்வேர் பிரிவைச் சேர்ந்தவை. எனவே இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் பணம் கட்டி அந்த சாப்ட்வேரை நிரந்தரமாக்க வேண்டும்.
பைசா செலவு இல்லாமலே பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன் சேவராக மாற்ற வழி உள்ளது. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இருக்க வேண்டும்.
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளதா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள் பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1) உங்களது பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் பைலைத் திறந்து கொள்ளுங்கள்.
2) File Save As கட்டளையை பவர்பாயிண்ட்டில் கொடுங்கள்.
3) Save as tybe என்ற டிராப்டவுன் லிஸ்ட் பாக்ஸை கிளிக் செய்யுங்கள். அதில் GIF அல்லது JPEG அல்லது PNG பார்மட்டுக்களில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
4) My Documents போல்டரின் கீழுள்ள My Pictures என்ற போல்டருக்கு மாறிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே My Pictures போல்டரில் வேறு ஏதாவது இமேஜ் பைல் காணப்பட்டால் அதை வேறு போல்டருக்கு நகர்த்தி கொள்ளுங்கள். அப்படி நகர்த்தாமல் விட்டால் அந்த இமேஜ் பைலும் நீங்கள் உருவாக்கப் போகிற ஸ்கிரீன்சேவரில் இடம் பெற்று விடும்).
5) பைல் பெயர் ஒன்றை டைப் செய்து Save பட்டனை அழுத்துங்கள்.
6) பிரசண்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் இமேஜ் பைல்களாக உருவாக்கவா என பவர்பாயிண்ட் உங்களிடம் கேள்வி கேட்கும். ஆம் எனப் பதில் கொடுங்கள். Export செயல் முடிவடந்தவுடன் ஒவ்வொரு ஸ்லைடிற்கும் ஒரு இமேஜ் பைலானது My Pictures போல்டரில் வெளிப்பட்டிருக்கும்.
7) பவர்பாயிண்ட் இனி தேவையில்லை. எனவே அதை மூடிவிடுங்கள்.
8) விண்டோஸ் எக்ஸ்பியின் டெக்ஸ்டாப்பில் ஐகான்கள் இல்லாத இடத்தில் ரைட் கிளிக் செய்து Properties கட்டளையைத் தேர்வு செய்யுங்கள்.
9) Screen Saver டேபைக் கிளிக் செய்யுங்கள்.
10) Screen Saver என்ற பகுதியில் உள்ள டிராப்டவுன் லிஸ்ட் பாக்ஸை கிளிக் செய்து My Pictures Slideshow என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
11) விரும்பினால் Settings பட்டனை கிளிக் செய்து ஸ்கிரீன்சேவர் பற்றிய செட்டிங்களை மாற்றுங்கள்.
12) Ok பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவுதான். பவர்பாயிண்ட் பிரசண்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளும் ஒவ்வொன்றாக ஸ்கிரீன் சேவரில் காட்சியளிக்கும். இந்த ஸ்கிரீன்சேவரில் அனிமேஷனைக் காண முடியாது, ஒலியைக் கேட்க முடியாது. இந்த குறைகளைப் பெரிதாக நினைக்காதீர்கள். காரணம், எவ்வித செலவுமின்றி எளிதாக ஸ்கிரீன்சேவரை உருவாக்கி விட்டீர்கள்.
நன்றி
[b]தினமலர் Computer மலர்</b>
http://www.dinamalar.com/2005july22compuma...malar/index.asp
|
|
|
| Tsunami warning issued for Indian Ocean |
|
Posted by: narathar - 07-24-2005, 04:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Tsunami warning issued for Indian Ocean
Sunday, July 24, 2005 Posted: 1640 GMT (0040 HKT)
(CNN) -- A tsunami warning has been issued for the Indian Ocean, sparked by an earthquake with a preliminary magnitude of 7.3 located in the Nicobar Islands, India, the Japan Meteorological Agency said Sunday.
"There is a possibility of a destructive local tsunami in the Indian Ocean," the agency said in a written statement about the earthquake, which struck at 12:02 p.m. ET.
In an hour or less, a tsunami could hit all coasts of the Andaman and Nicobar Islands of India and, in Indonesia, the Indian Ocean coast and Malacca coast of Sumatra.
The U.S. Geologic Survey measured the quake at a preliminary 7.0 magnitude and said it was centered about 690 miles southwest of Bangkok.
http://edition.cnn.com/2005/WORLD/asiapcf/...ning/index.html
|
|
|
| ஜோதிடரை மொய்த்த பிரபலங்கள் |
|
Posted by: SUNDHAL - 07-24-2005, 04:18 PM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
சென்ற வாரம் சென்னையே அல்லோகலகல்லோகலப் பட்டுவிட்டது. இன்னா மேட்டருன்னு கேக்கறீங்களா... இந்தியாவின் ஒண்ணாம் நம்பர் ஜோதிடத் திலகர், நம்பர் ஒன் வாஸ்து வல்லுனர், முதல் எண் நியூமராலஜி நிபுணர், டாப் மோஸ்ட் அதிர்ஷ்டக் கல் வித்தகர் (மொத்தம் நாலு பேரான்னு கேக்காதீங்க, எல்லாம் ஒரே ஆளுதான்)திருதிரு. சுபஸ்வரா99லிங்கர்3 (நியூமராலஜி, நேமாலஜி, பயலாஜிப்படி பேரை இப்படி ரிப்பேர் பண்ணி மாத்தியிருக்காருங்கோ!) சென்னைக்கு (திருட்டு ரயில்ல) வந்திருந்தாரு. ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு லாட்ஜ்(க்கு வெளியே ப்ளாட்பாரத்துல) -அங்கதான் தங்கியிருந்தாரு. நம்ம பிரபலங்கள் சிலர் முக்காடு போட்டு மூச்சுவிடாம அவரைச் சந்திச்சு ஆலோசனை கேட்டுக்கினு வந்திருக்காங்கோ! நாம வுடுவோமா? யாரு யாரு சந்திச்சாங்கோ? இன்னா பேசிக்கிட்டாங்கோ? -நம் நிருபர் கொடுத்த ஒரு ரகசியா ரிப்போர்ட்... ச்சீ, ரகசிய ரிப்போர்ட்! (ஹலோ, ஏக் நிமிட், அதான் ரகசிய ரிப்போர்ட்னு சொன்னோம்ல, இப்படி பப்ளிக்கா படிக்கிறீக, போய் பாத்ரூமுக்குள்ள குந்திகினு கதவை மூடிக்கினு படிங்க!)
ஜூலை இரண்டாம் வாரம் ஒரு இருட்டு வேளை... விஜய டி.ராஜேந்தர் விருட்டென சைக்கிளில் வருகிறார். முகத்தில் முடிக்காடு, தலையில் முக்காடு! (அங்கே நடந்த உரையாடல் அப்படியே குத்துமதிப்பாக!)
விஜய டி.ஆர்: நான் விஜய டி.ஆருங்க! வந்திருக்கேன் வருங்காலத்தைப் பாருங்க!
லிங்கர்: வா மகனே, உன் அடையாளம் தாடி, நீ சிம்புவின் டாடி, சைக்கிளில் வந்திருக்கிறாயே எதை நாடி?
விஜய டி.ஆர்: இது சைக்கிளு, இப்ப என் போராட்ட வெகிக்கிளு, ஏன்னா ஏறிப்போச்சு பெட்ரோலு, "என்னான்னு நீ கேளு'ன்னு மனசாட்சி சொல்லிச்சு! என் காலு பெடலு மிதக்க கௌம்பிச்சு!
லிங்கர்: உங்களுக்கு இப்ப உதட்டில் தோஷம்!
விஜய டி.ஆர்: நம்பளுக்கில்ல சிம்புவுக்கு. அடிச்சான் கிஸ்ஸþ சிம்பு; அதனால் வந்துச்சு வம்பு!
லிங்கர்: உனக்கும் தோஷம் உள்ளது மகனே!
விஜய டி.ஆர்: ஆங்... டமுக்கு டுமுக்கு டாமி, இப்ப நான் என்னா செய்யணும் சாமி?
லிங்கர்: இப்படி ஏப்பம் வந்தால் கூட எதுகை, மோனையில பேசி மொக்க போடுறதை விடணும். பேசறப்போ ஆடாம பேசணும். முக்கியமா வடை விக்கிற ஆயா ஈ ஓட்டுற மாதிரியே கையை ஆட்டிகிட்டு பேசவே கூடாது. இப்ப எடுக்கிற படத்தோட பேரு என்ன மகனே?
விஜய டி.ஆர்: வீராசாமி
லிங்கர்: அதை மாற்ற வேண்டும்.
விஜய டி.ஆர்: ராமதாúஸ சும்மா இருக்காரு. நீங்க ஏன் மாத்தணும்னு சொல்லுறீங்க?
லிங்கர்: ஆங்கிலத்துல ய எத்தனையாவது எழுத்து?
(விஜய டி.ஆர், தன் கை விரல்கள், கால் விரல்கள் எல்லாவற்றையும் உபயோகித்து எண்ணத்தொடங்குகிறார். இருபத்திரெண்டு நிமிடங்கள் கழித்து)
விஜய டி.ஆர்: 22
லிங்கர்: அது உங்களுக்கு ஆகாது. படம் தியேட்டரில் போகாது. ஆங்கில எழுத்து வரிசையில் ய-யோட இடத்தை 27-ன்னு மாத்து. இல்லாட்டி படத்தோட பேரை "லாராசாமி'ன்னு மாத்து. இல்லாட்டி போயிடுவ தோத்து!
விஜய டி.ஆர்: வேற எதையும் மாத்தணுமா?
லிங்கர்: உங்கள் தாத்தாவுக்குப் பெரியப்பாவோட ஒண்ணுவிட்ட தம்பியோட பக்கத்து வீட்டுக்காரரோட பேரு "அங்குசாமி'. ம்ஹீம், அந்த பேர் உங்களுக்கு ஆகாது. அதை "சங்குசாமி'ன்னு மாத்தறது மங்களம்.
விஜய டி.ஆர்: சாமி, என் அரசியல் வாழ்க்கை பிரகாசமா அமைய என்ன பண்ணனும்?
லிங்கர்: அதுலயும் உங்களுக்குப் பேர் தோஷம் இருக்கு! அதனால பிரதோஷத்துக்குப் பிரதோஷம் உங்க பேர்ல இருந்து கடைசி எழுத்தைக் குறைச்சுக்கிட்டே வரணும். வர்ற பிரதோஷத்துல உங்க பேரை "விஜய டி.ராஜேந்த'ன்னு மாத்திடணும். அப்புறம், "விஜய டி.ராஜேந்', இப்படி பண்ணிக்கிட்டே வந்தா...
விஜய டி.ஆர்: எனக்குப் பேரே இல்லாம போயிடும். ஏய், நீ ஒரு போலி. உன்னை நான் ஆக்குறேன் காலி!
- என டென்ஷனாக டயலாக் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் விஜய டி.ஆர்.
மறுநாள்... பகல் வேளை...
எம்.ஜி.ஆரின் பழைய பிரச்சார வேன், ஓசையின்றி வந்து நின்றது. உள்ளிருந்து ரெயின்கோட் அணிந்த ஒரு உருவம் பம்மியபடி இறங்குகிறது. உத்துப் பார்த்தா, அட நம்ம விஜயகாந்த்!
லிங்கர்: வா மகனே, நீ வரவேண்டிய நேரம் வந்துவிட்டது.
கேப்டன்: அதாங்க, அறுத்தது போதும், வருத்தது போதும், பொருத்தது போதும்னு "குபுக்'குனு பொங்கி எளுந்துட்டேன்.
லிங்கர்: அடங்கு, உனக்கு அப்பாயின்மெண்ட் 12 மணிக்குக் கொடுத்திருந்தேனே, அதைச் சொன்னேன்.
கேப்டன்: அர்சியள்ல நான் குதிக்கிற நேரம் சரிதானே?
லிங்கர்: இல்லை உன் வாட்ச் பத்து நிமிடம் பாஸ்ட்டாக ஓடுகிறது.
கேப்டன்: ஒரு கடிகாரத்துல 12 நம்பர் இருக்கு. ரெண்டு முள் இருக்கு. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கு. அதுல 1440 நிமிசம் இருக்கு. அதுக்குள்ள 86400 செகண்ட் இருக்கு... தமிழ்நாட்டுல 25637343 வாட்ச் இருக்கு. அதுல 457865 வாட்ச் ஓடாம இருக்கு...
லிங்கர்: இப்படி எதுக்கெடுத்தாலும் புள்ளி விவரம் சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா, உங்களுக்கு நியூமராலஜில பிரச்சினை வரும்.
கேப்டன்: கண்டிப்பா மாத்திக்கிறேன். மதுரையில மாநாடு நடத்தலாமா?
லிங்கர்: அதுல வாஸ்துக் கோளாறு இருக்கு.
கேப்டன்: அதுக்குத்தான் கூட்டத்தைக் கூட்டி கும்மாளமா பூமி பூசை பண்ணிட்டேனே!
லிங்கர்: இல்லை. உங்கள் வீட்டுக்குப் பால் போடுறவர் ஜாதகப்படி அவருக்கு செவ்வாய் தோஷம்.
கேப்டன்: அதுக்கு நான் என்ன பண்ணனும்? அவரை நிறுத்திரவா?
லிங்கர்: ...ம். அதுக்கு பரிகாரமா செவ்வாய் கிரகத்துல போய் சிம்பிளா ஒரு ஹோமம் பண்ணிட்டு வந்தீங்கன்னா, அவரை நீங்க ஒரு தொகுதியில வேட்பாளராவே நிறுத்தலாம். அப்புறமா உங்களுக்கு "மேடை தோஷம்' இருக்கு. அதனால இனிமே பொதுக்கூட்டங்களில் மேடையில ஏறி பேசாம, மேடைக்கு மேலே மேற்கூரையில ஏறிப்பேசுறது உத்தமம்.
கேப்டன்: நான் என்னோட கட்சி வலர்ச்சிக்கு என்ன பண்ணனும்?
லிங்கர்: தொண்டர்களுக்கெல்லாம் காம்ப்ளான் வாங்கிக்கொடுக்கணும். உங்க கட்சியில "மருத்துவர்' அணி இருக்கிறது நல்லதில்ல. அப்புறம் "வழக்கறிஞர்' அணியில யாரும் கருப்பு கோர்ட் போடுறது ஷேமமில்ல! "மகளிர் அணி'யில "அம்மா' ஆனவங்களைச் சேர்த்துக்கறது நல்லது!
கேப்டன்: யாரோடயும் தேர்தல் கூட்டணி வச்சுக்களாமா...
லிங்கர்: தமிழ்நாட்டுல உங்க ஜாதகம், யாரோட ஜாதகத்தோடயும் பொருந்தல. அலசி ஆராய்ந்து, பிழிந்து, காயப்போட்டு பார்த்ததில் உ.பி.ல மாயாவதியோட பகுஜன் சமாஜ் கூடவும், அமெரிக்காவுல புஷ்ஷோட குடியரசுக் கட்சியோடயும் கூட்டணி வைச்சுக்கிட்டா, தமிழகத்துல உங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு!
கேப்டன்: நீங்கலே என் கட்சிக்கு ஒரு பேரை வச்சுருங்கலேன்.
லிங்கர்: விஜய திராவிட காந்த முன்னேற்ற கழகம்.
கும்பிடு போட்டுவிட்டு குழம்பிப் போய் இடத்தைக் காலி பண்ணினார் கேப்டன்.
அடுத்த நிமிடமே இன்னொரு கேப்டன் (!) வந்தார். அட கங்குலிங்க!
கங்குலி: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
லிங்கர்: நீங்கள் எப்படி ஆக விரும்புகிறீர்கள்?
கங்குலி: ஏன் என்னோட பழைய பார்ம் போச்சு?
லிங்கர்: காரணம் நீங்கள் "ரன்' தமிழ் படத்தைத் திருட்டு விசிடியில் பார்த்தீர்கள். அதனால் லிங்குசாமியின் சாபம் உங்களை இப்படி ஆக்கிவிட்டது.
கங்குலி: அதுக்கு பரிகாரம் என்ன?
லிங்கர்: மூன்று மாதத்திற்கு வாராவாரம் திங்கள்கிழமை மெüனவிரதம் இருந்து நக்மாவிற்கு மாவிளக்கு போட்டீர்கள் என்றால் நிவர்த்தியாகிவிடும்.
கங்குலி: நான் மட்டுமே கேப்டனாக நீடிக்க என்ன பண்ணனும்?
லிங்கர்: நல்லா விளையாடணும். அதுக்கு இப்ப இருக்குற சர்வதேச மைதானங்கள் எதுவுமே உங்களுக்கு ஒத்துவராது. அதனால மைதானத்தின் அளவை 16ஷ்16 அடிகள் இருக்கும்படி கிரிக்கெட் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
கங்குலி: பாவிப்பசங்க. இதுக்கு ஒத்து வர மாட்டாங்களே! வேற எதுவும் பண்ண முடியுமா? என் பேட்டுல எதுவும் கோளாறா?
லிங்கர்: உண்மைதான் மகனே.
கங்குலி: அதுக்கு என்ன பண்ணனும்?
லிங்கர்: சானியா மிர்சாவின் மட்டையை வைத்து ஆறு மேட்சுகள் விளையாண்டால் சரியாகிவிடும்.
கங்குலி: அய்யோ, அது டென்னிஸ் பேட்டாச்சே! வேற பரிகாரமே கிடையாதா?
லிங்கர்: இருக்கிறது. உங்கள் பேட் செய்யப்பட்ட மரத்தில்தான் கோளாறு. அதில் "ஜலதோஷம்' இருக்கிறது.
கங்குலி: அதுக்கு விக்ஸ் ஆக்ஷன் 500 சாப்பிடணுமா?
லிங்கர்: இல்லை. இந்த அதிர்ஷ்டக் கல் மோதிரத்தை அணிய வேண்டும்.
கங்குலி: போட்டுக்கிறேன்.
லிங்கர்: நீங்கள் அணியக்கூடாது. இந்த பச்சைக் கல் மோதிரத்தை உங்கள் மட்டையின் கைப்பிடியில் மாட்டிவிட்டு மைதானத்திற்குள் இறங்குங்கள். இதோ இந்த மஞ்சள் வண்ண தாயத்துக்களை செலக்ஷன் கமிட்டி மெம்பர்களின் சுண்டுவிரலில் கட்டிவிடுங்கள். இந்த சிவப்பு நிற தாயத்தை பந்து போடுபவரின் நெற்றியில் கட்டிவிடுங்கள். இந்த ஊதா நிற அதிர்ஷ்ட கம்மலை அம்பயரின் காதில் மாட்டிவிடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான். ஆட்டத்திற்கு ஆட்டம் ஐம்பது, நூறு என ரன்களைக் குவிப்பீர்கள்.
கங்குலி பயபக்தியோடு எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு தட்சணையாக "காராச்சேவும், கடலை மிட்டாயும்' கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
டெல்லிக்கு சென்று அத்வானிக்கும், மன்மோகனுக்கும் ஜோசியம் பார்த்துவிட்டு, தற்சமயம் திருதிரு. சுபஸ்வரா99லிங்க3, பிகாரில் முகாமிட்டிருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூற மறுக்கின்றன.
கட்டுரை: நிருபர் கூட்டணி
புகைப்படங்கள்: யாருமே எடுக்கவில்லை
Thanks inamani
|
|
|
| நண்டு பிரட்டல் |
|
Posted by: Rasikai - 07-24-2005, 03:49 PM - Forum: சமையல்
- Replies (88)
|
 |
தேவையான பொருட்கள் :
நண்டு 500 கிராம்
வெங்காயம் 4 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
பச்சைமிளகாய் 3 நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
தனியா தூள் 2 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் 2 எண்ணிக்கை
துருவிய தேங்காய் 50 கிராம்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 100 மில்லி
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 'மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றை லேசாக வறுத்து எடுத்து, அதனை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வதக்கிய வெங்காயத்தில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு நண்டை இதிலே போட்டு நன்றாக பத்து நிமிடம் கிளரி, ஒரு மூடியால் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதிலே வறுத்த பொடி, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும், நண்டிலிருந்தே தண்ணீர் வரும். அதனால் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. 15 நிமிடம் அப்படியே நன்றாக மூடி வைத்து வேக வைக்கவும். இப்போது நன்றாக மசாலா வாசனை வரும். நண்டும் நன்றாக வெந்து அப்படியே கிரேவியாக பிரண்டு வரும்போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
கமகம வாசனையுடன் நண்டு பிரட்டல் ரெடி!
|
|
|
|