Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 537 online users.
» 0 Member(s) | 534 Guest(s)
Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  சிக்கன் கட்லெட்
Posted by: Jenany - 08-17-2005, 12:07 PM - Forum: சமையல் - Replies (9)

சிக்கன் அரை கிலோ(கொத்தியது)
உருளைக்கிழங்கு அரை கிலோ
பச்சை பட்டாணி 100 கிராம்(உரித்தது)
பச்சை மிளகாய் 25 கிராம்
வெங்காயம் பெரியது ஒன்று
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு அங்குலம்
பட்டை ஒரு அங்குலம்.
சோம்பு அரை தேக்கரண்டி
முட்டை 4
ரொட்டித் தூள் ஒரு கப்
கொத்தமல்லித் தழை சிறிய கட்டு
எண்ணெய் பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு

சிக்கனை எலும்பு நீக்கி நன்கு கொத்திக் கொள்ளவும். சிக்கன், உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவற்றை தனித்தனியாக உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். பட்டை, சோம்பு இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கை மசித்துக் கொண்டு மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைக்கவும்.
முட்டையை நன்கு அடுத்துக் கொண்டு தட்டி வைத்த கட்லெட்டை முட்டையில் தோய்த்தெடுத்து ரொட்டி தூளில் புரட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

நன்றி:Tamilnaatham

Print this item

  பிருந்தனின் கவிதைகள்
Posted by: Birundan - 08-17-2005, 11:27 AM - Forum: கவிதை/பாடல் - Replies (88)

[/size]அம்மா[size=12]
அம்மா என்காத உயிர் இல்லையே
அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!
எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்
எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!
எம்மை காக்க அரும்பாடுபட்டாள்
எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!
திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்
நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!
எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள்
எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!
தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க
தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு!
நாம் உண்ணும் அழகு கண்டு
தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்!
தன் உயிர் கொடுத்து
எம் உயிர் வளர்த்தாள் அன்னை!
அவள்தான் நான் உலகில் வந்து
கண்ட முதல் தெய்வம்.

Print this item

  உடலுக்கு வெளியே நரம்புக்கலங்கள் வளர்ப்பு..!
Posted by: kuruvikal - 08-17-2005, 10:33 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (6)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41154000/jpg/_41154417_stem_cell203.jpg' border='0' alt='user posted image'>

பிரித்தானிய எடின்பரே பல்கலைக்கழக உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மனித ஸ்ரெம் செல்களில் ( ஒரு வகை மூலவுயிர்க் கலங்கள் ) இருந்து தூய நரம்புக்கலங்களை ஆய்வு கூடத்தில் உருவாக்கி உள்ளனர்..!

நரம்புக் கலங்கள் பழுதடைந்தால் புதுப்பிக்கப்பட முடியாதவை என்பதாலேயே பல நரம்பு மண்டல நோய்களுக்கு தீர்வு எட்ட முடியாது இருந்துள்ளன...! இந்த வகையில் நரம்புக் கலங்களை உடலுக்கு வெளியே உருவாக்கி இருப்பது நரம்புக் கலங்களின் உடற்தொழிற்பாடு தொடர்பில் பல இரகசியங்களை வெளிக்கொண்ர வழி செய்யும்...! பல நோய்களுக்கு தீர்வும் கிட்டும்..!

மேலதிக தகவல் இங்கு... http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4155016.stm

Print this item

  யாழில் சிறிலங்கா காவல்துறையினரால் இளைஞர் கைது
Posted by: mayooran - 08-17-2005, 09:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழில் சிறிலங்கா காவல்துறையினரால் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் கலட்டிச் சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றினை இன்று காலை 9.30 மணியளவில சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கிருந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


இச்சம்பவத்தின் போது கதிரமலை வைதீகன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இக்கைது சம்பவம் தொடர்பாக அவரது தந்தையார் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை இவரைக் கைது செய்து சென்ற வேளை சிறிலங்கா காவல்துறையினர் மீது இனந் தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 சிறிலங்கா காவல்துறையினர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது

<i>puthinam</i>

Print this item

  யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை?
Posted by: தமிழரசன் - 08-17-2005, 09:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கொழும்பில் இருந்து விசேட விசாரனைக்கு யாழ் சென்ற தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை. ?

ஜ புதன்கிழமைஇ 17 ஆகஸ்ட் 2005 ஸ ஜ அருள் ஸ
கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாள்ஸ் விஜயவர்த்தனவின் கொலை தொடான விசாரனைக்கு யாழ் வந்த பொலிஸ் புலனாய்வு பிரிவு உறுப்பினரே கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலதிக தகவல் மிகவிரைவில்.
www.nitharsanam.com

Print this item

  அம்மா செய்த காரியம்!
Posted by: SUNDHAL - 08-17-2005, 04:50 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

""அம்மா' என்று சற்று உரக்கவே கூப்பிட்டபடி வந்தான் வாசு.
""என்னடா, வர்றபோதே "அம்மா'ன்னு சத்தம் போட்டு கூப்பிட்டுண்டுவரே? அப்படி நீ கத்தறபடி என்ன செஞ்சுட்டேன்?'' என்றாள் அவன் அம்மா சாரதா.

""செய்யறதையும் செஞ்சுட்டு "என்னடா செஞ்சுட்டே'ன்னு வேற கேக்கறியேம்மா?''

""செய்யக் கூடாத எதை பெரிசா செஞ்சுட்டேன் நான்?'' என்று திருப்பிக் கேட்டாள் சாரதா.

""ஒரு பிள்ளை போய் ஒரு பெண்ணை பார்த்துட்டு வந்தப்பறம், சம்மதம் தெரிவித்தபுறம், மேற்கொண்டு பேச யார் வீட்டுக்கு யார் போகணும்?'' என்று கேட்டான் வாசு.

""பொதுவா பெண் வீட்டுக்காரா தான் பிள்ளை வீட்டுக்குப் போவா!'' என்றாள் சாரதா.

""அது தெரிஞ்ச ஏம்மா நீ பெண் வீட்டுக்குப் போய் பேசினே?''

""அது வந்து... அது வந்து...''

""சரி போனே, இந்தப் பாக்கம் ஒரு காரியமா வந்தேன், அப்படியே உங்கள, காவ்யாவை எல்லாம் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்னு சொல்லிட்டு கொடுக்கிற காபி, டிபனை சாப்பிட்டு வாயை மூடிண்டு வர வேண்டியது தானே?''

""என்னடா பேசிட்டேன் நான்?'' என்று நெஞ்சில் வலது கைய வைத்து கண்கள் கலங்கக் கேட்டாள் சாரதா.

""வரதட்சணை, சீர் செனத்தி அது இதுன்னு ஒண்ணும் நீங்கள் செய்ய வேண்டாம். உங்கள் பொண்ணு கொண்டு வந்து கொடுத்துத் தான் ரொம்பணும்ன்னு எண்ணம் எங்களுக்கில்லை. நீங்க கல்யாணத்துக்கு செலவழிக்கணும்ன்னு ஒரு தொகையை வைச்சிருப் பேல்லயா?... அதுலே பாதி செலவழிங்க போதும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கே!''

""ஆமாண்டா, வாசு'... அதனாலே என்ன இப்போ?'' என்று கேட்டாள் சாரதா.

கடந்த வாரம் வாசுவை அழைத்துக் கொண்டு காவ்யாவை பெண் பார்க்கச் சென்றிருந்தாள் சாரதா.

சும்மா சொல்லக் கூடாது. காவ்யா ஒரு காவியப் பெண் போல கொள்ளை அழகாக இருந்தாள். இயல்பாகவே அவள் சாதுவானவள் என்பதை அவளுடைய அப்பழுக்கில்லாத அமைதியான முகமே காட்டிற்று. பேசும் பொழுது அவள் வாய் திறந்ததேத் தெரியவில்லை. சிரிக்கும் பொழுது கன்னத்தில் குழி விழுந்தது என்றால் பற்கள் லேசா சிரிக்கும்பொழுது அழகுக்கு அழகை கூட்டுவது போல காவ்யாவின் வதனத்தை வசீகரமாக்கியது.
கூடவே இருந்தாள் காவ்யாவின் தங்கை பானு.

அவள் அக்காவைப் போல இல்லை. ரொம்ப சுமாராக இருந்தாள். காவ்யா அழகாக இருப்பது போல இல்லை பானு. கொஞ்சம் கருப்பாகவும், உடம்பில் கிள்ளக்கூட சதை இல்லாமலும், எலி வால் போன்ற பின்னலும், சற்றே பெரிதான உதடுகளுடனும் இருந்தாள்.

அப்படிப்பட்டவள் அருகிலிருப்பதால் தான் நான் உங்கள் கண்களுக்கு பிரமாத அழகியாக இருக்கிறேன் என்பது முற்றிலும் தவறு என்பது போல காவ்யா இயற்கையாவே அழகாகவும், பார்த்தவர் விரும்பும் வகையிலும் அழகாக இருந்ததை சாரதா கண்டுபிடித்து விட்டாள்.

காவ்யாவை மருமகளாக அடைய அவள் ஆசைப்பட்டது போல மகனும் அவளை மனைவியாக அடைய ஆசைப்படுகிறான் என்பதை அங்கே இருக்கிற போது ஒரு வினாடி காலத்தைக் கூட அங்கே இங்கே பார்த்து வீணடிக்காது வாசு, காவ்யாவையே பார்த்து தன்னுள் பரவசப்பட்டுக் கொண்டிருப்பதை அவன் முக விலாசத்திலிருந்து அறிந்து கொண்டாள் சாரதா.

மகனுக்கும், தனக்கும் காவ்யாவைப் பிடித்து விட்டதால், பெண் வீட்டார் மேற்கொண்டு பேச வருமுன்பே, தான் போய் பேசிவிட்டு வரலாமென்று காவ்யாவின் வீட்டிற்குச் சென்றாள் சாரதா.

வாங்கோ... வாங்கோ... நீங்கள் வந்ததிலே ரொம்ப சந்தோஷம்... நீங்கள் பெரிய இடமா இருக்கேளே, ரொம்ப அதிகமா எல்லாத்தையும் எதிர்ப்பார்ப்பேளோ என்னமோ, அதை நம்மாலே செய்ய முடியுமோ முடியாதோ என்கிற தயக்கத்திலே தான் நானே உங்கள் வீட்டிற்கு வர்றதை தள்ளிப் போட்டுண்டிருந்தேன்...' என்று தான் பேச வராததற்கு மன்னிப்பா கேட்கிற பாவனையில் பேசினார் சங்கரன்.


"நீங்கள் எப்போ லவுகீக விஷயம் பற்றி பேச வராம ரெண்டு மூணு நாளாயிடுத்தோ அப்பவே இது தான் காரணம் இருக்குமோன்னு நெனைச்சு நானே உங்கள்கிட்டே பேசிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்... வாசுவோட அப்பா வீடு, வாசல், நிலம், பணம், நகைன்னு நிறைய சேர்த்து வைச்சுட்டுத் தான் போயிருக்கார்... அதனாலே காவ்யா கொண்டு வந்து தான் எங்கள் கஷ்டம் தீரணும்ன்னோ, எங்க பெண்ணுக்கு கல்யாணம் பண்ணணும்னோ இல்லை... அதனாலே நீங்கள் காவ்யாவை கட்டின புடவையோட அனுப்பி வைச்சாலும் நாங்க அவளை ஏத்துக்க தயாரா இருக்கோம்!' என்றாள் சாரதா.

"நீங்கள் அப்படி சொன்னாலும் நாங்கள் அப்படி எல்லாம் செய்துட முடியுமா?... உங்க மனசு நல்ல தங்கமான மனசு... பொண்ணு வீட்டில முடிஞ்ச மட்டும் பிடுங்கிடணுன்ம்னு நெனைக்காத உயர்ந்த மனசு... இது எல்லோருக்கும் வாய்ச்சிடாது. இவ்வளவு நல்ல மனசு படைச்ச உங்களுக்கு மருமகளா வர எங்க காவ்யா ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்...' என்றார் சங்கரன் குரல் தழுதழுக்க.

"அப்போ ஒண்ணு செய்யுங்கோ... நான் சொன்னபடியாய் நடந்தமாதிரியும் இருக்கும். நீங்க நினைக்கிறபடியும் நடந்ததா இருக்கும்... காவ்யா கல்யாணத்துக்கு எவ்வளவு செலவழிக்கணும்ன்னு நீங்கள் பட்ஜெட் போட்டிருக்கேளோ அதிலே பாதியை அவள் கல்யாணத்துக்கு செலவழியுங்கோ... மீதிப் பணத்தை உங்கள் ரெண்டாவது பெண் கல்யாணச் செலவுக்கு வைச்சுக்கற பணத்தோட சேத்து வைச்சுடுங்கோ... ரெண்டு மூணு வருஷம் கழிச்சு அவளுக்கு கல்யாணம் பண்ணறப்போ விலைவாசி எல்லாம் ஏறிடும்...' அப்போது காவ்யா கல்யாணத்திலே நீங்க மீதம் வைக்கிற பணமும் சேர்ந்து உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்...'' என்றாள் சாரதா.

காவ்யா, அவள் அப்பா, அம்மா, தங்கை எல்லாம் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக சாரதாவை கையெடுத்து கும்பிட்டனர்.

""அப்படி ஏம்மா பேசினே?''

""பேசினா என்னடா?... பிள்ளையை பெத்த ஒவ்வொரு அம்மா மாதிரி இருக்க நான் விரும்பலேடா... ஏழையான எங்கப்பா எனக்கு கல்யாணம் செய்து வைக்க பணத்தை புரட்ட பட்ட கஷ்டங்கøள் எல்லாம் எனக்கு நினைவிருக்குடா... அது மாதிரி என் பிள்ளைக்கு கல்யாணம்ன்னு வர்றப்போ பெண்ணோட அப்பா கஷ்டப்படற மாதிரி எதையும் கேட்கக்கூடாதுன்னு அப்பவே தீர்மானம் பண்ணிண்டவடா நான்... காவ்யா அப்பாக்கிட்டே அவள் கல்யாணத்துக்கு ஒண்ணுமே செய்ய வேண்டாம்ன்னு தான் மொதல்ல நான் சொன்னேன்.

""அப்பவே அவர் யோசிக்க ஆரம்பிச்சிடுவரேம்மா!'' என்றான் வாசு.

""என்னன்னு?...'' என்று கேட்டாள் சாரதா.

""பிள்ளைக்கு ஏதோ வியாதி இருக்கு. அதனாலே அவன் கல்யாணம் நடக்காமலிருக்கு. எப்படியாவது பிள்ளைக்கு கல்யாணமானா போதும்ன்னு நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம்ன்னு சொல்றேன்னு அவர் யோசிக்கலாமே அம்மா,'' என்றான் வாசு.

""யோசிக்க மாட்டார்டா வாசு?'' என்றாள் சாரதா.

""எப்படியம்மா சொல்றே?''

""அதுக்குத் தான் ஒரு சமரச திட்டம்மா காவ்யா கல்யாணத்துக்கு செலவழிக்கிற பணத்திலே பாதியை அவள் கல்யாணத்துக்கு வைச்சுண்டு மீதியை அடுத்தப் பொண்ணு கல்யாணத்துக்கு வைச்சுண்டிருக்கிற பணத்தோட சேர்த்து வைச்சு ரெண்டாம் பொண் கல்யாணத்துக்கு வைச்சுக்குங்கோன்னு நான் சொன்னேன். அதுக்கு காரணம் நான் சொன்ன மாதிரி ரெண்டு மூணு வருஷம் கழிச்சி சின்னப் பொண்ணுக்கு நீங்கள் கல்யாணம் செய்து வைக்கிறப்போ விலைவாசி எல்லாம் டபுள் மடங்காகியிடும். அப்போ நிறைய பணம் உங்களுக்கு வேண்டியிருக்கும்.

""சின்னப் பொண்ணு பானு, காவ்யா மாதிரி இல்லேடா வாசு... மார்க்கெட்டில் ஒரு பொருள் மோசமாவோ, சுமாராவோ இருந்தா அது குறைஞ்ச விலையில் கிடைக்கும். யார்கிட்டேயாவது தள்ளி விட்டுடலாம்... ஆனால், கல்யாண மார்க்கெட், சுமாரான பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கவே நிறைய பணத்தை விலையா கொடுக்கணும்... பானு மாதிரி எல்லா விதத்திலேயும் சுமார்லயும் சுமாரா இருக்கிற பெண்ணுக்கு பணத்தை வாரி இறைச்சாத் தான் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்.

""அதுக்காகத்தான் காவ்யா கல்யாணப் பணத்திலே பாதியை பானுவுடைய கல்யாணத்துக்கு வைச்சுக்குங்கோன்னு மனசுலே அப்படி வைச்சுண்டு பேசினேன். அதை காவ்யா அப்பா மட்டுமல்ல, அவள், அவள் அம்மா, தங்கை எல்லாம் நான் நல்ல மனசோடத்தான் பேசறேன் என்கிறதை புரிஞ்சுண்டுட்டாடா வாசு... நம்மளாலே காவ்யா கல்யாணம் நடக்கப் போற மாதிரி, நம்ம வேண்டாம்ன்னு சொன்ன பணத்தாலே அவளுடைய தங்கை பானுவோட கல்யாணமும் நடக்கப் போறதடா வாசு...'' என்றாள் சாரதா.

""அம்மா... யூ ஆர் கிரேட்!'' என்றபடி அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டான் வாசு.

by:Suganthi
ThanksBig Grininamalar

Print this item

  கடவுளுக்கேன் கருணை இல்லை?...
Posted by: hari - 08-17-2005, 02:54 AM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

கடவுளுக்கேன் கருணை இல்லை?...
தொ. சூசைமிக்கேல்


ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லாரும் கேட்பர்:
என்னையன்றி அஃதறிவார் எவரும் இல்லை!

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!

மாடாக உழைத்துவிட்டோம்; இளமை தன்னை
மாய்த்துவிட்டோம்; என்றாலும் மகிழ்ச்சி இல்லை.
காடாகக் கிடப்பவற்றைக் கழனி யாக்கும்
கனவுகட்குக் கனவில்கூட நனவு இல்லை!



கைநிறையச் சம்பளம்தான்; இருந்தும் என்ன?
கடன்சுமையின் கணக்கினிலே மாற்றம் இல்லை:
மெய்நிறைய நோய்மொய்த்துக் கொண்ட தாலே
மிஞ்சுவது சஞ்சலமே; இதுபொய் இல்லை!

"எத்தனைநாள் இப்படியே வாழ்ந்தி ருப்போம்?"
என்பதொரு கேள்விக்கு விடையே இல்லை:
"அத்தனையும் போதுமடா! போவோம்!" என்றால்
அச்சுறுத்தும் செலவுகட்கோர் அளவே இல்லை!

வங்கிதனில் பணம்செலுத்தி முடித்த பின்னர்
வாய்க்கினிதாய்ச் சாப்பிடவோ காசும் இல்லை;
எங்கிருந்தோ கடன்வாங்கி அவ்வப் போது
இரைபோட்டுக் கொள்வதனால் வலுவும் இல்லை!

பெற்றமகன் பணிதேடிப் பிறிதோர் ஊரில்
பெருஞ்சிரமம் மேற்கொண்டும் விடிவே இல்லை;
உற்றமனை ஒற்றையளாய்த் தனித்த வீட்டில்
உழலுகின்றாள்; வாழ்க்கையிலே பயனே இல்லை!

"கொண்டவளைப் பிரிந்ததெல்லாம் குழந்தைக்(கு)!" என்னும்
கூற்றுக்குப் பிரிவுதினம் வரவே இல்லை:
என்றெனது இல்லாள், தன் கையால் அன்னம்
இட்டென்னை உண்ணவைப்பாள்? விளங்க வில்லை!

ஒவ்வொருநாள் இரவினிலும் உறங்கு தற்(கு)என்
உற்றார்தம்; ஞாபகங்கள் விடுவ தில்லை;
எவ்வளவு தான்புரண்டு படுத்த போதும்
இருவிழிகள் குளமாதல் நிற்ப தில்லை!

இவையனைத்தும் எனக்குமட்டும் நேர்வ தல்ல;
ஏனையர்க்கும் நேர்வதுதான்; ஐயம் இல்லை!
கவலையின்றி சவூதிமண்ணில் ஒருவ னேனும்
கண்துயில்வான் என்றெனக்குத் தோன்ற வில்லை.

தூக்கமிலா இரவுகளின் தொடர்ச்சி யாலே
துக்கமதைத் தாங்குதற்குச் சக்தி இல்லை;
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!

கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

நன்றி: கீற்று ( keetru.com )

Print this item

  கவனம் Computer warm
Posted by: AJeevan - 08-16-2005, 10:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

[b] <span style='color:red'>புதியதொரு கொம்பியுடர் வோர்ம் (வைரசு) பரவியுள்ளது.

கவனம்.
[size=16]
<img src='http://i.a.cnn.net/cnn/2005/TECH/internet/08/16/microsoft.worm.reut/story.computer.jpg' border='0' alt='user posted image'>


SEATTLE, Washington (Reuters) -- A new Internet virus targeting recently uncovered flaws in Microsoft Corp.'s Windows operating system is circulating on the Internet, an anti-virus computer software maker said on Monday.

The ZOTOB virus appeared shortly after the world's largest software maker warned of three newly found "critical" security flaws in its software last week, including one that could allow attackers to take complete control of a computer.

Trend Micro Inc. said that the worm exploits security holes in Microsoft's Windows 95, 98, ME, NE, 2000 and XP platforms and can give computer attackers remote access to affected systems.

"Hundreds of infection reports were sighted in the United States and Germany," Tokyo-based Trend Micro said.

But computer security engineers at Microsoft said that the worm is only targeting Windows 2000 and not the other versions of Windows.

"It only affected Windows 2000," said Stephen Toulouse, a manager at Microsoft's Security Response Center. "So far its has shown a very limited impact -- we're not seeing any widespread impact to the Internet, but we remain vigilant."

The latest virus drops a copy of itself into the Windows system folder as BOTZOR.EXE and modifies the system's host file in the infected user's computer to prevent the user from getting online assistance from anti-virus Web sites, Trend Micro added.

The worm can also connect to a specific Internet relay chat server and give hackers remote control over affected systems, which can be used to infect other unpatched machines in a network and slow down network performance.

"Since most users may not be aware of this newly announced security hole so as to install the necessary patch during last weekend, we can foresee more infections from WORM tZOTOB," it said.

Last Tuesday, Microsoft issued patches to fix its security flaws as part of its monthly security bulletin. The problems affect the Windows operating system and Microsoft's Internet Explorer Web browser.

Microsoft has warned that an attacker could exploit a vulnerability in its Internet Explorer Web browser, lure users to malicious Web pages and could run a software code on the user's PC giving the attacker control of the affected computer.

Computer users should update their anti-virus pattern files and apply the latest Microsoft patches to protect their computer systems, Trend Micro said.

More than 90 percent of the world's PCs run on the Windows operating system and Microsoft has been working to improve the security and reliability of its software.</span>

http://www.cnn.com/2005/TECH/internet/08/1...soft.worm.reut/

<span style='font-size:30pt;line-height:100%'>Breaking News in CNN news</span>

Print this item

  கதிர்காமருக்காக சந்திரிக்கா!?!?!?!?.......
Posted by: cannon - 08-16-2005, 09:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

செய்தி 1:
கதிர்காமர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபின், அவசர சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சந்திரிக்கா தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது, அவசரமாக வைத்தியசாலைக்கு தனது காரில் சென்றதாகவும், அங்கு கதிர்காமருக்கு சிகிச்சை அழித்துக் கொண்டிருந்த வைத்தியர்களின் கைகளைப் பிடித்து, கதிர்காமரை எப்படியாவாவது காப்பாற்றும்படி கதறி அழுததாகவும், அப்போது அங்கிருந்த ஒரு உதவி அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

செய்தி 2:
கடந்த இலங்கையின் தேர்தல் முடிவடைந்தபின், பிரதமர் பதவிக்காக சந்திரிக்காவினால் கதிர்காமர் முன்மொழியப்பட்டிருந்தார்.

சந்திரிக்கா, கதிர்காமர் மீதான இந்த அன்பு/பாசம்/பரிவுக்கு காரணம் என்னவென்று அறியும் பொருட்டு, இச்செய்திகள் தொடர்பாக சில தகவல்களை, சிலரிடம் பெற்றேன்.....

..... இங்குள்ள சில இணையத்தளங்கள் கூறுவது போல, சந்திரிக்காவிற்கு கதிர்காமரை நீலன் திருச்செல்வம்தான் அறிமுகப்படுத்தியது என்பது உண்மைக்குப் புறம்பான தகவலே! ஆனால் நீலம் திருச்செல்வம்தான் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றபின், கதிர்காமரை இயக்கிய பிரதான மனித இயந்திரமாக இருந்தார் என்பது வேறுவிடயம்! கதிர்காமருக்கும், சந்திரிக்காவிற்கும் சிறுவயது முதலே நட்பு இருந்ததாகவும், பின் காலம் செல்லச் செல்ல அவர்களிடையேயான உறவு சாதாரண நட்புக்கு அப்பாற்பட்டதாக மாறியதாம். சந்திரிக்கா பிரான்சில் படித்துக் கொண்டிருந்த காலங்களில், கதிர்காமர் இலண்டனில் இருந்திருக்கிறாராம், இக்காலகட்டத்தில் இவர்களிடையேயான உறவு ஒரு காதலர்களை ஒத்ததாகத்தானாம் இருந்தது. இவர்களின் நட்பு பல அக/புற அழுத்தங்களால் திருமணத்தில் முடியாமல் பின், சந்திரிக்கா வியஜ குமாரணதுங்காவையும் காதலித்து மணமுடித்தது வேறு விடயம்.

கதிர்காமரை சந்திரிக்கா, பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தபோது, தற்போது பிரதமராகவிருக்கும் ராஜபக்ஸவும், அவர் ஆதரவாளர்களும் மூர்க்கமாக எதிர்தார்கள். ஆனால் அதற்கு சந்திரிக்கா அடிபணியவில்லையாம். பின் புத்த மகாநாயக்கர்கள் தங்களது கடும் எதிர்ப்பை சந்திரிக்காவிற்கு தெரிவித்ததாகவும், ஒரு பிறப்பால் தமிழரும், கிறிஸ்தவருமான ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கக் கூடாதென்று உறுதியாகக் கூறி விட்டார்களாம்! இல்லை, அப்படி வழங்குவதாயின் கதிர்காமர் புத்த மதத்திற்கு மாறவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்களாம். அதற்கும் கதிர்காமர் அரை மனத்துடன் சம்மதம் தெரிவித்தாராம்! ஆனால் பிரதமர் பதவிக்காக, கட்சியானது உடையக்கூடிய சந்தர்ப்பம் தோன்றியமையினால், சந்திரிக்காவினால் ராஜபக்ஸவே பின் பிரதமராக்கப்பட்டாராம்.

இவ்வாறு இணைந்தும்/இணையாத காதல் கிழ சிட்டுக்களின் காவிய வரலாற்றை சிங்கள, இலங்கை வரலாற்றாளர்கள் நூலாக்கினால், சரித்திரத்திலுள்ளவாறான இன்னொரு மாகாவம்சமோ, சுழுவம்சமோ, சூழவம்சமோ தோன்றலாம்.

Print this item

  ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா
Posted by: Danklas - 08-16-2005, 08:27 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (22)

[b]ரிஷியின் புலனாய்வு அரசியலின் தகவல் படி சிறிய ரக அனுகுண்டுனை அல்-ஹைதா மெக்ஸிக்கோ - அமெரிக்கன் எல்லையூடக அமெரிக்காவுக்குள் கொன்று சென்றுவிட்டது என்பதே. இதில் வேடிக்கை என்னெ வென்றால் உலகத்தின் முதலாவது வல்லரசுக்கு அதிலும் உலகத்தையே 24 மணி நேரம் கண்கானிக்கிறோம் என்று (புலுட விடும் அமெரிக்கன்) கதை அளக்கும் அமெரிக்கனுக்கு விடயம் இப்பதான் சில கைது செய்யப்பட்ட அல்-ஹைதா உறுப்பினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.. Idea

உலத்தில் தற்பொழுது நிகழ்ந்து கொண்டு இருக்கும் பயங்கரவாத தாக்குதல்களினால் உலகை அச்சுறுத்திகொண்டு இருக்கும் அல்-ஹைதாவின் அடுத்த இலக்கு எதுவென்று உலகமே எதிர்ப்பாத்துக்கொண்டு இருக்கும் வேளையில் அல்-ஹைதாவின் அடுத்த தாக்குதல் மீண்டும் அமெரிக்கவாவில் அதுவும் சாதரன தாக்குதல் அல்ல அனுகுண்டுத்தாக்குதல் (அதவது ஒரு அமெரிக்கன் நகரத்தை அழிக்கும் தாக்குதல்).. இதற்க்கு பெயர் கூட வைத்துவிட்டார்கள் அந்த பெயர்... Confusedhock:

இதனை முழுமையாக கேட்க Idea

Print this item