Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 506 online users.
» 0 Member(s) | 503 Guest(s)
Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும்?
Posted by: aathipan - 08-15-2005, 11:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (19)

தாயகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட(சுனாமி மற்றும் போர் மூலமாக) குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும். அதற்கான விதிமுறைகள் என்ன என்பது யாருக்கும் தெரியுமா?. எனது நண்பர் ஒரு குழந்தையைத்தத்து எடுத்துப் படிக்க வைக்க விரும்புகிறார். உதவ முடியுமா?

Print this item

  உங்கள்பிரதேசப்படங்களை சற்றலைற் படமாகஎடுப்பதற்கு....
Posted by: தமிழரசன் - 08-15-2005, 11:36 AM - Forum: இணையம் - Replies (1)

<img src='http://www.amuthu.5gigs.com/Photo/1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.amuthu.5gigs.com/Photo/2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.amuthu.5gigs.com/Photo/3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.amuthu.5gigs.com/Photo/4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.amuthu.5gigs.com/Photo/5.jpg' border='0' alt='user posted image'>
இந்தமெனபொருளை உங்கள் கணணியில் நிறுவிக்கொள்க
http://earth.google.com/
http://desktop.google.com/download/earth/G...GoogleEarth.exe

Print this item

  திருமண முறைகள்
Posted by: Mathan - 08-15-2005, 09:18 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (7)

தமிழ் கத்தோலிக்கரும் தாலி, குங்குமம் இன்ன பிறவும்..தமிழ் சினிமாவும்

கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்தததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் ஒரு நாள் நண்பர் குடும்பத்தோடு சினிமா போகும் போது ,நண்பருடைய மனைவி என் மனைவியை பார்த்ததும் புருவம் உயர்த்தினாங்க ."நீங்க குங்குமமெல்லாம் வைப்பீங்களா? ".அடடா! அதற்கும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு சீன நண்பரோடும் ,தமிழ் நண்பரோடும் உணவருந்திகொண்டிருந்த போது ,சீன நண்பர் "எங்கே உங்கள் கல்யாண மோதிரம் ?" என்றார் .நான் "கல்யாண மோதிரம் கண்டிப்பல்ல .இந்திய வழக்கம் போல தாலி தான் அணிவிக்கிறோம் .மோதிரம் இரண்டாம் பட்சம் தான்" .அவர் சமாதானமாகிவிட்டார் .தமிழ் நண்பர் புருவம் உயர்த்தி விட்டார் ..

"என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

"ஆமா! .மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு .ஆனால் தாலி தான் பிரதானம் .ஒரே வித்தியாசம் .மஞ்சள் தாலி அல்ல .தங்கத்தாலி .மூன்று முடிச்செல்லாம் இல்லை .தாலியை கோர்த்து விடுவது..அவ்வளவு தான் .இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஊரில் கத்தோலிக்கர்கள் திருமணத்தையே 'தாலிக்கட்டு' என்று தான் சொல்லுவார்கள்"

என்னங்க! பொட்டு வைக்காத ,தாலி அணியாத தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிறீர்களா? என்று உங்களில் பலர் கேட்கலாம் ..இருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் ..தமிழ் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களும் ,தென்னிந்திய திருச்சபையினர் (CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் இருவரும் தான் பெரும்பான்மை .மற்ற சபையினர் மிக மிக சிறுபான்மை (மொட்டை மாடியில் மைக் கட்டிக்கொண்டு ஊரிலுள்ளவர்களையெல்லாம் பாவிகள் என்று சொல்லுவது ..விவிலியத்தை பிட் நோட்டீஸ் மாதிரி வினியோகிப்பது எல்லாம் இவர்கள் தான்.இது பற்றி தனிப்பதிவு பின்னர்).

CSI கிறிஸ்தவர்களின் வழக்கங்களை முழுமையாக அறுதியிட்டு என்னால் கூற முடியாதெனினும் ,கத்தோலிக்க தமிழர்களை பற்றி கண்டிப்பாக என்னால் கூற முடியும் .கத்தோலிக்க தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி கட்டுகிறார்கள் .பொட்டு ,குங்குமம் வைக்கிறார்கள் .

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கிறிஸ்தவ கோவில் என்றால் அது 'மாதாக் கோவில்' தான் .மாதாக்கோவில் என்றால் அது கத்தோலிக்க கோவிலாகத்தான் இருக்க முடியும் .ஆனால் அங்கு நடைபெறும் (தமிழர்)திருமணக்காட்சியில் மட்டும் எல்லாம் தலை கீழாக காட்டப்படும் .மணப்பெண் பாரதிராஜா படத்து தேவதை மாதிரி உடை அணிந்திருப்பார் .மோதிரம் மட்டும் மாற்றிக்கொள்வார்கள் ..தாலி கட்டுவது கிடையாது . மணப்பெண் பொட்டு வைத்திருக்க மாட்டார்.இப்படி தமிழகத்தின் எந்த கத்தோலிக்க கோவிலில் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை .

நான் பார்த்தவரைக்கும் ,தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை .என்னுடைய மூதாதையர்கள் ,ஏன் எங்கள் ஒட்டு மொத்த ஊர் மட்டுமல்ல ,ஒட்டு மொத்த community-யே கத்தோலிக்கர்களாக மாறி 400 வருடங்கள் கழிந்து விட்டன ..மதம் மாறியிருக்கிறதே தவிர மற்ற வழக்கங்கள்( சாதி உட்பட என்பது வருத்ததுக்குரிய விஷயம்) பெரிதாக மாறவில்லை.எது நம்முடைய கலாச்சாரம் சம்மந்தப்பட்டது ,எது நம்முடைய மதம் சம்மந்தப்பட்டது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் (தமிழ் சினிமா தவிர) ..

திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!.அப்துல் கலாம் ,சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும் இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்) நண்பர்களோடு பலமுறை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றதுண்டு .ஒரு முறை நண்பர்களோடு நேராக உச்சிப்பிள்ளையார் சன்னிதி-க்கு சென்றேன் .நண்பர் ஒருவர் அங்கிருந்த அர்ச்சகரிடம் எங்கள் பெயரையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். "ஜோ நமஹா.." என்று அவர் சொன்னது மட்டும் புரிந்தது .முடித்து விட்டு விபூதி கொடுத்தார் .வாங்கிக் கொண்டேன் . விபூதிப் புதனன்று கோவிலில் பாதிரியார் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய் .மண்ணுக்கே திரும்புவாய் .மறவாதே என்றும் " என்று நெற்றியில் இட்டு விடுகிற சாம்பல் நினைவுக்கு வந்தது .நான் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு விபூதியை பூசிக்கொண்டேன்.

வேலை தேடி சென்னையில் எங்கள் ஊர் நண்பர்களோடு தங்கியிருந்தேன் .சொந்தமாக சிறு தொழில் செய்து வந்த நண்பர் எனக்கும் ,அவரோடு வேலை செய்த சகோதரருக்கும் ,இன்னொரு நண்பருக்கும் அடைக்கலம் தந்திருந்தார் .வீடு என்பதை விட அறை என்று சொல்லலாம் ..வீட்டு சொந்தக்காரர் பக்கத்தில் தான் இருந்தார் .அவருக்கு ரெண்டு குடும்பம் .நல்ல நாட்களில் மட்டுமே அவரை இங்கு பார்க்க முடியும் .மற்ற அனைவரும் எங்கள் எல்லோரோடும் நன்கு பழகுவார்கள் .அன்பானவர்கள் ..அன்றைக்கு பொங்கல் தினம் .எல்லோரையும் போல ,பசங்கள் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே நாங்களும் காலையிலயே பொங்கல் போட்டோம் .முதல் காரியமாக கொஞ்சம் பொங்கல் எடுத்து வீட்டுக்காரர் குடும்பத்துக்கு கொடுக்க நான் எடுத்துச்சென்றேன். எதிர்பார்த்த மாதிரி வீட்டுக்காரர் இருந்தார்.

"பொங்கல் போட்டோம்..வாங்கிக்குங்க!"

"என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும் ..நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன்?"

"இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

"அதுக்கு !.பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

"ஓ! எதுவா இருந்தாலும் எங்களுக்கு முன்னால நீங்க பொங்கல் கொண்டு வந்தது சந்தோஷம்"

வீட்டுக்கார அம்மா புன்சிரிபோடு "குடுங்க தம்பி" என்று வாங்கிக் கொண்டார்.

என் நினைவு எங்க ஊருக்கு சென்றது .வருஷம் முழுவதும் காசு சேர்த்து வைத்து வகுப்பு தோழர்களெல்லாம் பொங்கலன்று தென்னந்த்தோப்புக்கு சென்று பொங்கல் போடும் நினைவுகள் வந்தது ..பொங்கல் அன்று எங்கள் தேவாலயத்தின் பலிபீடம் கரும்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் .கோவில் சார்பாக பொங்கல் செய்து ,திருப்பலியின் நடுவே ,எல்லோரும் வரிசையாக சென்று பாதிரியாரிடமிருந்து ஒரு கரண்டி சர்க்கரைப்பொங்கலை கைகளில் பிரசாதம் போல் வாங்கி உண்டது மனக்கண்முன் நின்றது.

எங்கள் ஊர் கன்னியர் மடத்திலுள்ள கன்னியர்கள் செய்த அந்த சர்க்கரைப்பொங்கல் சுவை இன்னும் இனிக்கிறது..

நன்றி - கணியம் ஜோ

Print this item

  இனி வரும் Super*Star யார் ?
Posted by: tamil03 - 08-15-2005, 08:11 AM - Forum: சினிமா - Replies (324)

Arrow இனி வரும் Super*Star யார் ?

<img src='http://star-tamil-1.skyblog.com/pics/200927353_small.jpg' border='0' alt='user posted image'>
1. jeyam Ravi
2. Ajith
3. Vikram
4. Vijay
5. Simbu
6. Srikanth
7. Surya
8. Barath
9. Mathavan
10.?
11.?

Print this item

  கஜினி
Posted by: Mathan - 08-15-2005, 07:30 AM - Forum: சினிமா - Replies (37)

கஜினி

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2005/augest/kajini02.jpg' border='0' alt='user posted image'>

எழுதி வச்சுக்கங்க, கஜினி எத்தனை நாள் ஓடிச்சுன்னு நான் 100-வது நாளில் இருந்துதான் எண்ண ஆரம்பிப்பேன் என்கிறார் அப்படத்தின் டைரக்டர் முருகதாஸ். அதாவது 101-வது நாளைதான் இவரு 1-வது நாள் என்றே கணக்கில் வைப்பாராம். நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். அதுக்காக இம்புட்டு நம்பிக்கையா என்று கேட்டாலும், முருகதாஸ் பட்ட வேதனை அம்புட்டு இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் கதையை சொல்ல அவர் முன்னணி ஹீரோக்களை தேடி போகும் போது அவர்கள் தந்த அவமானத்தில்தான் இப்படி வெறியோடு பேசுகிறாராம் முருகதாஸ். இதற்கு முன் கஜினி கதையை எத்தனை ஹீரோக்கள் கேட்டிருக்கிறார்கள் தெரியுமா? 12 பேர்! அத்தனை பேரையும் ஓட வைத்தது எது தெரியுமா? படத்தின் ஹீரோ மொட்டை போட வேண்டும் என்ற விஷயம்தான்.

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2005/augest/kajini03.jpg' border='0' alt='user posted image'>

இந்த கதையும் மனநோய் கதை போல தெரிகிறதே...? கேட்டால், அதே விறைப்போடு பேசுகிறார் முருகர்.

ரமணா மாதிரி நிறைய கதைகள் தமிழில் வந்திருக்கு. ஆனால் ரமணாவுக்குன்னு தனி ஸ்டைல் இருந்திச்சு. படமும் பெரிய ஹிட் ஆச்சு. அதே மாதிரிதான் கஜினியும். சந்திரமுகி, அந்நியன்னு மனநோய் சம்பந்தப்பட்ட கதைகள் வெளிவந்திருந்தாலும் கஜினி வேற மாதிரி இருக்கும். ஒரு படத்திற்கு திரைக்கதைதான் முக்கியம். கஜினியின் திரைக்கதையை ரொம்ப சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் அமைச்சிருக்கோம். அந்த நம்பிக்கையில்தான் இப்படி பேசுறேன்.

தன்னம்பிக்கைக்கு உதாரணமா சொல்ற பேருதான் கஜினி. உலகில் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவரா இருக்கிற சஞ்சய் ராமசாமி தன்னால் சாதிக்க முடியாது என்று எதிரிகள் சொல்கிற ஒரு காரியத்தை செய்து முடிப்பதுதான் கதையின் கரு. இதை அடிதடி ஆக்ஷன், அழகான லவ் என்று கலந்து கட்டி சொல்லியிருக்கேன் என்கிறார் முருகதாஸ்.

கஜினி சூர்யாவோடு டூயட் ஆடுவது மட்டுமல்ல... நடிப்பிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம் அசின். சுள்ளான், பிப்ரவரி-14 என்று இரண்டு படங்களை எடுத்து, வேறு மாதிரியான அதிர்ச்சியில் இருக்கிற தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரை கஜினி காப்பாற்றுவான் என்று நம்புகிறது கோலிவுட்! கூடவே நாமும்!

தமிழ் சினிமா

Print this item

  IP மெசெஞ்சர் எங்கு எப்படிப் பெறுவது?
Posted by: vijitha - 08-15-2005, 05:23 AM - Forum: இணையம் - Replies (5)

ஐபி மெசெஞ்சர்(IP messnger) தேவைப்படுகிறது எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நெற்வேர்கில் பயன்படுத்துவதற்கு.

Print this item

  களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்
Posted by: வலைஞன் - 08-14-2005, 09:55 PM - Forum: களம் பற்றி - Replies (125)

<b>களஉறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க களவிதிகளை மீறாதவண்ணமும், சககளஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் களஉறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமது பெயர்களை சக களஉறுப்பினர்கள் ஆக்கங்களில் பயன்படுத்துவதை விரும்பாத களஉறுப்பினர்கள் களம்பற்றி பகுதியில் "களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்" எனும் இத்தலைப்பில் தெரிவிக்கலாம். (இவ் யோசனையைத் தந்த நாரதர், வியாசன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்)</b>

Print this item

  நித்தியா கவிதைகள்
Posted by: இளைஞன் - 08-14-2005, 07:49 PM - Forum: கவிதை/பாடல் - Replies (220)

<b><span style='font-size:25pt;line-height:100%'>மறந்துவிட்டாயம்மா...!</span>

<img src='http://www.yarl.com/forum/files/marandhuvidai_176.jpg' border='0' alt='user posted image'>

நானும் கருப்பையில் தான்
கற்பம் தரித்தேன்
என்னையும் பத்து மாதம் தான்
சுமந்து பெற்றாள்
தாய்ப்பால் ஊட்டித்தான்
சீராட்டினாய்
இவர்தான் தந்தை என்றும்
அறிமுகப்படுத்தினாள்

இது ஆண்சாதி என்றும்
இது பெண்சாதி என்றும்
இது தாவரங்கள் என்றும்
இது விலங்கினம் என்றும்
அவள்தான் அன்று இனம்
காட்டினாள்!

ஆனால்...
சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்
அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்
பணம் உறவின் வேடம் என்றும்
மதம் பகையின் தோழன் என்றும்
சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்
அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

[b]எழுதியவர்: நித்தியா</b>

Print this item

  top Swiss award
Posted by: AJeevan - 08-14-2005, 06:47 PM - Forum: குறும்படங்கள் - No Replies

<span style='font-size:25pt;line-height:100%'><img src='http://jahia.pardo.ch/img/intro_main.jpg' border='0' alt='user posted image'>

<b>Nine Lives takes top Swiss award </b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40688000/jpg/_40688168_garcia_300.jpg' border='0' alt='user posted image'>
Garcia's earlier films include Things You Can Tell Just by Looking at Her
Nine Lives by director Rodrigo Garcia has won the top prize at Switzerland's Locarno film festival.
The US movie, starring Glenn Close, Holly Hunter and Sissy Spacek, beat 17 films to the Golden Leopard award.

Jury head and cinematographer Vittorio Storaro said: \"The directing of the film is extraordinary.\"

Known as \"the smallest of the big film festivals\", the Locarno event gave its special award to Un Couple Parfait by Japanese film-maker Nobuhiro Suwa.

It awarded Silver Leopards to Fratricide by Turkish director Yilmaz Arslan, Three Grad Kaelter (Three Degrees Colder) by Germany's Florian Hoffmeister and Ma Hameh Khoubim (We Are All Fine) by Iranian director Bizhan Mirbaqeri.
<img src='http://www.actart.net/comediens/drolet_patrick/drolet_patrick.jpg' border='0' alt='user posted image'>
The award for best performance by a male actor went to Patrick Drolet for his role in the film La Neuvaine by Canadian film-maker Bernard Edmond.

Garcia's Nine Lives tells of key turning points in the lives of nine different women.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40688000/jpg/_40688172_close_203.jpg' border='0' alt='user posted image'>
Glenn Close shared an ensemble award for best female performance
The ensemble of actresses - which also includes Robin Wright Penn, Emily Mortimer and Molly Parker - won a collective award for best female performance.

The 46-year-old director was previously acclaimed for his 2000 movie Things You Can Tell Just by Looking at Her.

Jury head Storaro said he had been struck by the fact that nearly all the films in this year's competition portrayed the conflict between the generations, and a lack of love between parents and children.

The 10-day Locarno film festival ended on Saturday, with film-maker Frederic Maire named as its new director, replacing Irene Bignardi.</span>

http://jahia.pardo.ch/index.jsp

Print this item

  வணக்கம்
Posted by: Kalki - 08-14-2005, 05:30 PM - Forum: அறிமுகம் - Replies (41)

எல்லோருக்கும் அன்பான வணக்கம்.....
உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.....
அன்புடன் கல்கி.......

Print this item