| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 395 online users. » 0 Member(s) | 392 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| செங்கல் அளவு பனிக்கட்டி சம்பூரில் பொழிவு |
|
Posted by: Sriramanan - 08-12-2005, 03:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
திருமலை மாவட்டம் சாம்புூரின் கரையேரப் பகுதிகளில் இன்று பிற்பகல் கடுமையான காற்று வீசியதுடன், பனிக்கட்டி மழையும் பொழிந்துள்ளது. செங்கல் அளவிலான பனிக்கட்டிகள் இதன்போது தொடர்ச்சியாக வீழ்ந்ததாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கடுiமாயன காற்று வடக்கு நோக்கி 10 நிமிடங்களும், தெற்கு நோக்கி ஐந்து நிமடங்களும் வீசியுள்ளது.
இதன்போது வீடுகள் பலவற்றின் கூரைகள் பறந்து சென்றுள்ளதுடன், பல மரங்கள் தெலைபேசிக் கம்பங்கள் என முறிந்து வீழ்ந்துள்ளன.
விடுதலைப் புலிகளின் காரியாலயத்திற்கும் கஜமுகன் வித்தியாலயத்திற்கும் அருகிலிருந்த பாரிய ஆலை மரம் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தின் போது வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மின்னல் தாக்கியதாகவும் அதனால் அவரின் உடல் கருகியுள்ளதாகவும் அவர் சாம்புூரிலிருந்து 2 கிலே மீற்றர் தூரத்திலுள்ள கூனித் தீவு கஜமுகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மக்கள் பயப் பீதியுடன் காணப்படுததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சங்கதி
|
|
|
| என்னை தந்துவிட்டேன் |
|
Posted by: inthirajith - 08-12-2005, 02:54 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
காமத்துக்கு சதைகள் ஆயிரம் உண்டு இன்கே
காதலுக்கு நீ மட்டும்தான் மனதார உன்னிடம்
என்னை கொடுத்து விட்டேன் என்னை நேசித்த யாரரையும்
என்னால் நேசிக்கமுடியவில்லை உன் விம்பம்
என் படுக்கை அறையில் மவுனமாக என் வேதனை
புரியாமல் புன்னகையுடன் நான் மட்டும் தூக்கம்
விலகி உணவு பிடிக்காமல் தனியே நான் மரணித்தால்
அந்த தகவல் கூட உன்னிடம் வாரரது நீ
எனக்காக துளிநீர் உன் விளிகளில் வரரது
எம்மை சேர்த்து வைக்கும் உறவே பிரிக்க நினைபது
கொடுமை தான் உன் சொல்லை நான் கேட்காதது
ஆறுதல் சொல்ல ஆயிரம் உறவு இன்கே
அணைத்த உன்கைககள் போல் வருமா??[/b]
|
|
|
| கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள் |
|
Posted by: SUNDHAL - 08-12-2005, 02:53 PM - Forum: மருத்துவம்
- Replies (14)
|
 |
கணவன்- மனைவி இடையே சண்டை, சச்சரவு ஏற்படுவது சகஜமான விஷயம். அதில் சில பெண்கள் தங்களின் கோப-தாபங்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவர். வேறு சிலர் அனைத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு மவுனமாக இருப்பார்கள். பொதுவாக உணர்வுகளை அடக்கி வைப்பது ஆபத்தையே உண்டு பண்ணும். அந்த வகையில் கோபத்தை வெளிப்படையாக காட்டும் பெண்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதாகவும், உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு குமுறும் பெண்கள் வெகு சீக்கிரத்திலேயே உயிhpழக்க 4 மடங்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தொpவித்து உள்ளனர். இதுபோல வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு டென்சனுடன் வரும் பெண்களுக்கு இருதய நோய்கள் ஏற்பட 2 மடங்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அமொpக்க இருதய சங்கம் தொpவித்து உள்ளது.
கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் அவர்களின் உடல் நலனில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறிய பாஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தொpய வந்தன. திருமணம் ஆகாத ஆண்களைக் காட்டிலும் திருமணமான ஆண்களுக்கு ரத்த அழுத்த பிரச்சினை கடுமையாக இருப்பது தொpய வந்தது. திருமணமாகாத ஆண்களுடன் ஒப்பிடும் போது மணமான ஆண்களில் பாதிக்கு பாதி ரத்த
அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களால் இறக்கிறhர்களாம். அதே சமயம் மணமாகாத ஆண்களில் பெரும்பாலானோருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதாக தொpய வந்துள்ளது
|
|
|
| சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனையா? |
|
Posted by: vasisutha - 08-12-2005, 11:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனையா?</b> <i>ஈராக் அரசு பதில்</i>
முதல் வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மற்ற வழக்குகளை விசாரிக்கும் முன்பே ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படலாம் என்று ஈராக் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று ஈராக் அரசின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில் சதாம் உசேன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட இருந்தாலும், சதாம் உசேனின் மீதான முதல் வழக்கின் விசாரணையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவர் தூக்கிலிடப்படுவார் என்று தெரிவித்தார்.
ஆனால் ஈராக் அதிகாரிகள் இந்த முதல் கட்ட விசாரணைக்கான நாளை இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த விசாரணை கடந்த 1982 ஆம் ஆண்டு பாக்தாதுக்கு மேற்கே துஜைல் என்னும் இடத்தில் 150 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும். இந்த வழக்கு தவிர சதாம் உசேன் மீது வேறு 12 வழக்குகளைப் போடவும் ஈராக் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இவைகளை தனித்தனியாக நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த முதல் வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால், அடுத்த வழக்குகளின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் சதாமை தூக்கிலிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், சதாமை உடனடியாக தூக்கிலிடுவதா அல்லது உலக நாடுகளின் நீதி முறைப்படி மற்ற குற்றச்சாட்டுகள் முழுவதுமாக விசாரித்து முடியும் வரை காத்திருப்பதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
சதாம் உசேன் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 5 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்னும் சில வாரங்களில் கூடி சதாமுக்கு எதிரான முதல் வழக்கு விசாரணை துவங்கும் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை ஈராக் மக்கள் தெரிந்து கொள்வதற்காக பொது இடத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.
viktannews
|
|
|
| சொந்தத்திற்காய்.................... |
|
Posted by: ப்ரியசகி - 08-12-2005, 11:26 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
<img src='http://img365.imageshack.us/img365/9476/sad7it.jpg' border='0' alt='user posted image'>
[b]அவன்...
நான் பிறக்கும் முன்னமே
கடவுள்
எனக்காய் படைத்திருந்த பரிசு அவன்...
அன்று அந்த பிஞ்சுக்கைகளில்
தத்தையாக தவழ்ந்தேன்
இன்றி இந்த வலிய கரங்களுள்
தங்கையாக...
என்றும் இல்லாமல் சென்றான்
என்னை விட்டு...
எதுவும் முடியாமல் என்னை
ஏங்கி நிற்கவிட்டு...
சொன்ன ஜோக்குகளும்
செய்த குறும்புகளும்
நினைவில் வந்து வந்து போக
நிஜம் காணாமல்
நிழலோடு பெசிக்கொண்டிருக்கிறேன்
நிழல் என்ன நிஜமாகிடுமா
இல்லை
நினைவுகள் தான் நிஜமாக்கிடுமா
தேடாமல் வந்த சொந்தம் நிலைப்பதில்லையாம்
சொன்னார்கள்...
நான் கேளாமலே வந்த சொர்க்கம் இது
இப்பொழுது தான் தேடுகிறேன்
காலையில் எழுந்து ஓடினேன்
அவன் குரல் கேட்டதாய்.....
அது நினைவு என்றா தாய்....
வாடியே மனம் சோர்ந்தேன்
தேடுகிறேன்...
அன்பால் எனை ஆதரிக்கும்
அண்ணா என்று தேடுகிறேன்..
நட்போடு என்னை வழிநடத்தும்
நண்பா என்று தேடுகிறேன்
அந்த அழகிய சிரிப்பினை
ரசிகையாய் தேடுகிறேன்
எனக்கென்றிருக்கும் ஒரு சொந்தம் காண
தனிமையில் தவம் இருக்கிறேன்..............
|
|
|
| தமிழ் அறிவிப்பாளர்கள் இருவர் கொழும்பில் சுட்டுக்கொலை |
|
Posted by: மட்டி - 08-12-2005, 10:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>தமிழ் அறிவிப்பாளர்கள் இருவர் கொழும்பில் சுட்டுக்கொலை</b>
பிரபல பெண் அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா மற்றும் அவரது கணவர் சின்னத்துரை செல்வராஜா ஆகிய இருவரும் கொழும்பு வெள்ளவததையில் வைத்து இனந் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இவர்களுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு மற்றும் பயண முகவர் நிலையத்திற்கு சென்றிருந்த இனந் தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளார்கள்.
கணவனும் மனைவியும் வழமை போல் தமது அலுவலகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரேலங்கி செல்வராஜா உள்நாட்டு திரைப்படமான தெய்வம் தந்த வீடு படத்தில் சிறுமியாக இருக்கும் போதே நாட்டியப் பெண்ணாக நடித்தவர். சிறிலங்கா அரச வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றி வந்தார்.
1990 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப் பகுதியில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் மணிக்குரல் சேவையிலும் பணியாற்றியுள்ளார். இவரது கணவரான செல்வராஜா முன்னர் புளொட் அமைப்பில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி புதினம்
|
|
|
| கடலாதிக்கப்பலத்தில் புலிகள் முதலிடம் |
|
Posted by: hari - 08-12-2005, 03:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b> கடலாதிக்கப்பலத்தில் புலிகளுக்கு முதலிடம்
புலனாய்வுப்பிரிவு தெரிவித்ததாக "லக்பிம' தகவல்</b>
சர்வதேச ரீதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஒப்புநோக்கினால் கட லாதிக்கப்பலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அரச புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளதாக "லக்பிம' சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தீவிரவாத அமைப்புகளான பிரிட்டனில் செயற்படும் ஐ.ஆர்.ஏ. மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பு போன்றவை கூட தமது தேவைக்கு வாடகைக் கப்பல்களையே பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 4 கப்பல்களும் 10 றோலர் படகுகளும் ஏற்கனவே மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்காசியக் கடல் பிராந்தியங்களில் சேவையில் ஈடுபட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் வர்த்தக சேவையில் ஈடுபடும் கப்பல்கள் பிரிட்டனில் தலைமையகத்தைக் கொண்ட "வொய்ட்ஸ்' அமைப்பில் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால், அங்கு பதிவு செய்யப் படாத கப்பல்கள் சிலவற்றையும் விடு தலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என்று புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதிவுசெய்யப்பட்ட புலிகளின் கப்பல்களுக்கு பெயரும், வர்ணமும் அவ்வவ்போது மாற்றப்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் சேவையின் தலைவரான குமாரன் பத்மநாதன் (கே.பி) மற்றும் சர்வ தேச ரீதியிலான ஆயுத விநியோகங்களுக்குப் பொறுப்பான லோறன்ஸ் ஆகியோரின் முகாமைத்துவத்தின் கீழ் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய சர்வதேச வர்த்தகங்கள் ஊடாக ஆண்டொன்றில் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுதலைப் புலிகள் அமைப்பு பெறுகிறது. இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|