Yarl Forum
சொந்தத்திற்காய்.................... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சொந்தத்திற்காய்.................... (/showthread.php?tid=3684)



சொந்தத்திற்காய்.................... - ப்ரியசகி - 08-12-2005

<img src='http://img365.imageshack.us/img365/9476/sad7it.jpg' border='0' alt='user posted image'>

[b]அவன்...

நான் பிறக்கும் முன்னமே
கடவுள்
எனக்காய் படைத்திருந்த பரிசு அவன்...

அன்று அந்த பிஞ்சுக்கைகளில்
தத்தையாக தவழ்ந்தேன்
இன்றி இந்த வலிய கரங்களுள்
தங்கையாக...

என்றும் இல்லாமல் சென்றான்
என்னை விட்டு...
எதுவும் முடியாமல் என்னை
ஏங்கி நிற்கவிட்டு...

சொன்ன ஜோக்குகளும்
செய்த குறும்புகளும்
நினைவில் வந்து வந்து போக
நிஜம் காணாமல்
நிழலோடு பெசிக்கொண்டிருக்கிறேன்
நிழல் என்ன நிஜமாகிடுமா
இல்லை
நினைவுகள் தான் நிஜமாக்கிடுமா

தேடாமல் வந்த சொந்தம் நிலைப்பதில்லையாம்
சொன்னார்கள்...
நான் கேளாமலே வந்த சொர்க்கம் இது
இப்பொழுது தான் தேடுகிறேன்

காலையில் எழுந்து ஓடினேன்
அவன் குரல் கேட்டதாய்.....
அது நினைவு என்றா தாய்....
வாடியே மனம் சோர்ந்தேன்

தேடுகிறேன்...
அன்பால் எனை ஆதரிக்கும்
அண்ணா என்று தேடுகிறேன்..
நட்போடு என்னை வழிநடத்தும்
நண்பா என்று தேடுகிறேன்
அந்த அழகிய சிரிப்பினை
ரசிகையாய் தேடுகிறேன்
எனக்கென்றிருக்கும் ஒரு சொந்தம் காண
தனிமையில் தவம் இருக்கிறேன்..............


- shanmuhi - 08-12-2005

<b>நினைவில் வந்து வந்து போக
நிஜம் காணாமல்
நிழலோடு பெசிக்கொண்டிருக்கிறேன்
நிழல் என்ன நிஜமாகிடுமா
இல்லை
நினைவுகள் தான் நிஜமாக்கிடுமா</b>

சொந்தத்திற்காக வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்..


- Niththila - 08-12-2005

கவிதை நல்லாயிருக்கு ப்ரியசகி


- sinnappu - 08-12-2005

கவிதை குட்


ப்ரியமுடன்


- narathar - 08-12-2005

நல்ல கவிதை ,மேலும் எழுதுங்கள்.
<img src='http://www.smileys.ws/sm/action/00000035.gif' border='0' alt='user posted image'>


- hari - 08-12-2005

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..


- Mathan - 08-12-2005

கவிதை நன்றாக இருக்கின்றது


- Nitharsan - 08-12-2005

கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..


- sathiri - 08-12-2005

கவிதை நல்லாயிருக்கு ஒரே காதல்கவிதையை பாத்து புளிச்சு போச்சு இப்பிடி உறவுகளிற்காகவும் இடைக்கிடை யாராவது எழுதுங்கோ


- அனிதா - 08-12-2005

Quote:தேடுகிறேன்...
அன்பால் எனை ஆதரிக்கும்
அண்ணா என்று தேடுகிறேன்..
நட்போடு என்னை வழிநடத்தும்
நண்பா என்று தேடுகிறேன்
அந்த அழகிய சிரிப்பினை
ரசிகையாய் தேடுகிறேன்
எனக்கென்றிருக்கும் ஒரு சொந்தம் காண
தனிமையில் தவம் இருக்கிறேன்..............

கவிதை நல்லாயிருக்கு ப்ரியசகி வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jenany - 08-12-2005

அக்கா கவிதை ரொம்ப நல்லா இருக்கு.தேடாமல் நிறைய சொந்தம் வரும்....ஆனால் எதுவும் நிரந்தரம் இல்லை..
உங்க அண்ணா ரொம்ப குடுத்து வைத்தவர்...hmmm. எனக்கு இப்படி பாசம் வைக்க ஒரு அண்ணா இல்லையே........


- Thala - 08-12-2005

அண்மையில் நான் படித்த கவிதை வரிசையில மனங்கவர்ந்து போனதில உங்களது கவிதையும் ஒன்றாகி விட்டது ப்ரியசகி... நன்றிகள்...


- கீதா - 08-12-2005

நன்றி அக்கா உங்கள் கவிதைக்கு :wink:
அன்புடன்
jothika


- வெண்ணிலா - 08-13-2005

Quote:அவன்...

நான் பிறக்கும் முன்னமே
கடவுள்
எனக்காய் படைத்திருந்த பரிசு அவன்...

அன்று அந்த பிஞ்சுக்கைகளில்
தத்தையாக தவழ்ந்தேன்
இன்றி இந்த வலிய கரங்களுள்
தங்கையாக...

என்றும் இல்லாமல் சென்றான்
என்னை விட்டு...
எதுவும் முடியாமல் என்னை
ஏங்கி நிற்கவிட்டு...

சொன்ன ஜோக்குகளும்
செய்த குறும்புகளும்
நினைவில் வந்து வந்து போக
நிஜம் காணாமல்
நிழலோடு பெசிக்கொண்டிருக்கிறேன்
நிழல் என்ன நிஜமாகிடுமா
இல்லை
நினைவுகள் தான் நிஜமாக்கிடுமா

தேடாமல் வந்த சொந்தம் நிலைப்பதில்லையாம்
சொன்னார்கள்...
நான் கேளாமலே வந்த சொர்க்கம் இது
இப்பொழுது தான் தேடுகிறேன்

காலையில் எழுந்து ஓடினேன்
அவன் குரல் கேட்டதாய்.....
அது நினைவு என்றா தாய்....
வாடியே மனம் சோர்ந்தேன்

தேடுகிறேன்...
அன்பால் எனை ஆதரிக்கும்
அண்ணா என்று தேடுகிறேன்..
நட்போடு என்னை வழிநடத்தும்
நண்பா என்று தேடுகிறேன்
அந்த அழகிய சிரிப்பினை
ரசிகையாய் தேடுகிறேன்
எனக்கென்றிருக்கும் ஒரு சொந்தம் காண
தனிமையில் தவம் இருக்கிறேன்..............


சூப்பர் கவிதை. நன்றி. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 08-13-2005

எல்லோருக்கும் நன்றி