| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 608 online users. » 0 Member(s) | 604 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,238
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| மரணம் உனை அழைக்கும்..... |
|
Posted by: Nitharsan - 08-10-2005, 09:07 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (19)
|
 |
காதலே வாழ்வென்று-பல
காளைகள் கருதுகின்றார்கள்
கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!
கன்னியவள்..... -தாலி
கட்டியவுடன்...-உன்
காதலையும் நினையாள் -உன்
நினைவையும் மீட்டால்....
அவள் நினைவுதனில்-உன்
வாழ்வுதனை ஏன் கருக்குகிறாய்?
காதல் மட்டுமா வாழ்வு?
சாதிக்கப்பிறந்தவன் நீ!...
காதலின் நினைவுகளை...
கடந்த கால சுவடுகளை..
கனவாக்குவது கடினமே!-ஆனால்
கடைசிவரை அதை
எண்ணுவதால்....
எண்ணங்கள் மாறி-உனை
மரணங்கூட அழைக்கலாம் தோழா!
மனிதப்பிறப்பு காதலுக்காய் அல்ல
நிலை நாட்டவே-ஆம்
உன்னை நீ யாரென
நிலை நாட்டிடு.....
நிலை மாறும் உனக்கு...-உனை
நிராகரித்தவள் கூட
உன் மடி நாடி வரலாம்...
எனவே....
காதலி நினைவுதனை
களைந்து விட்டு....
கழிப்புடன் கடமை செய்
காதல் உனை அழைக்கும் வரை....
இல்லையேல் காதலின் நினைவுடன்..
நீயிருக்க...
மரணம் உனை அழைக்கும்.....
|
|
|
| சொல்றது சரி தானே? |
|
Posted by: SUNDHAL - 08-10-2005, 02:25 PM - Forum: புலம்
- Replies (26)
|
 |
வெளிநாட்டில் வசிக்கும் தங்கை, தனது மகளுடன் கொழும்புக்கு வந்து அக்காவின் வீட்டில் தங்கினார்.
ஒரு நாள் அக்கா, தனது தங்கையின் மகளைக் கூப்பிட்டு,"பிள்ளை! எனக்கு அசதியாக இருக்கிறது. ஒரு தேநீர் தயாரித்து வாரும்" என்று சொன்னார்.
அருகில் நின்ற தங்கை, "அவளுக்கு தேநீர் போடத் தெரியாதே!" என்று பெருமையாகச் சொன்னதும் அக்காவுக்கு வந்ததே கோபம்!
"வெளிநாட்டில் இப்படித்தான் பிள்ளையை வளர்க்கிறாயா? நாளை குடும்பப் பெண்ணான பின் ஹோட்டலிலா சாப்பிடுவாள்? அவளுக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடு" என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
அத்துடன், நின்று விடாமல் சமையலறைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று தேநீர் தயாரிக்கும் முறையைக் காண்பித்தார். "நான் சமையல் செய்யும் போது நீ வந்து அதை அவதானிக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.
மகள்மாருக்கு அளவு கடந்த செல்லம் கொடுத்து பொத்திப் பொத்தி வளர்க்கும் தாய்மாருக்கு இது உறைக்க வேண்டும்.
Thanks:Thinakural
|
|
|
| தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக??? |
|
Posted by: selvanNL - 08-10-2005, 11:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (18)
|
 |
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக வாழுமா எங்கள் தமிழினம்???
யாழ்குடா நாட்டில் உள்ள அச்சுவேலி எண்டெரு இடத்துக்கு பக்கத்தில் சில கிராமங்களில் (தம்பாளை, பத்தமேனி, இடைக்காடு) ஒரே பதபதட்டம்.. காரணம் அங்கே தம்பாளை கூட்டம், இடைக்காட்டு இளைஞன் ஒருவரை மிகக்கொடுரமான முறையில் காட்டி மீராண்டி தன முறையில் கொலைசெய்தது..
பிரச்சினை என்ன???
இந்த இரு ஊருக்கும் பல காலமாக வாய் சண்டை நடந்திருக்கின்றது, இரு ஊருக்கும் என்பதை விட இரு ஊரில் உள்ள இளைஞர் கூட்டங்களுக்கும். அச் சண்டை சில வேளைகளில் வாய் சண்டை, சாதரன கைச்சண்டை, அதுவே செல்வச்சன்னதி கோயில் கொடியேற்றத்துடன் விசுபரூபம் எடுத்தது, காரணம் தொண்டமான்ற்றில் உள்ள பாலம் இராணுவ நடவடிக்கையில் சேதமடைந்து அது திருத்தபடமல் இருந்து வந்தது. அதை இடைக்காட்டு மக்கள் தாங்கள் திருத்துகின்றோம் எண்டு சொன்னதிற்கு தம்பாளை மக்கள் மறுத்துவந்திருக்கிறார்கள்....
இடைக்காடு, தம்பாளை உறவு எப்படி??
பலாலியில் இருந்து அச்சுவேலி செல்லவேண்டுமெனில், வசாவிளான், வளலாய், இடைக்காடு, தம்பாளை, பத்தமேனி அச்சுவேலி..உண்மையில் இடைக்காட்டு மக்கள் தம்பாளை மக்களை விட வசதி படைத்தவர்கள், காரணம் அவர்கள் சொந்தமாக விவசாய கானிகளை வைத்து விவசாய செய்பவர்கள், அத்துடன் அங்கே வாழும் குடும்பங்களில் குறைந்த பட்சம் ஒரு அங்கத்தவர் புலத்திலே வாழுகின்றனர். ஆனால் தம்பாளை மக்களிடம் அவ் வசதி இல்லை, அவர்கள் இடைக்காட்டு மக்களிடம் வந்து கூலிக்கு வேலை செய்வார்கள். ஆனாலும் அந்த இரு கிராமத்து மக்களிடம் சுமுகமான உறவு நிலவிவருகிறது, ஆனால் அந்த இரு கிரமாத்து இளைஞர்கள்தான் இவ் பிரச்சினைக்கு அத்திவாரம் இட்டவர்கள்.
என்ன பிரச்சினை..
தம்பாளை இளைஞர்கள் தங்களுக்கு பொழுது போகாவிட்டால் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் புதிய மோட்டார்சைக்கிளில்களில் கூட்டம் கூட்டமாக வந்து இடைக்காட்டு பெண்களை சைட் அடிப்பார்கள். அதுவே பின்பு சண்டைக்கு வழிவகுக்கும்,, இப்படி சிறிய சிறிய சண்டை தொண்டமானாறு பாலம் சம்பந்தபட்ட பிரச்சினையும் தம்பாளை இளைஞர்கள் சிலரை எரிச்சலடைய வைத்திருக்கின்றது.. ஆனால் இங்கே கவனிக்கபடவேண்டிய முக்கியவிடயம் இடைக்காட்டு இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு எண்டு இருப்பார்கள், காரணம் அவர்கள் விவசாயம் செய்பவர்கள், ஓவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பயிர்களை செய்து அதை ஏற்றுமதி செய்வார்கள்
என்ன நடந்தது???
பல முறை இடைக்காட்டு இளைஞர்களுடன் சண்டை போட்டு தம்பாளை இளைஞர்கள் தோற்று உள்ளார்கள். இதனால் இம்முறை தோற்ககூடாது என்று என்னி யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சில இளைஞர்களை பிடித்து இவ் பாரிய சாதனையை செய்திருக்கிறார்கள்.. இடைக்காட்டில் பெரும்பாலும் படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றார்கள்.. அப்படி இருப்பவர்களில் 28 வயது நிரம்பிய இளைஞர் அவர் பெயர் ஆனந்தன் ஆங்கில ஆசிரியாராக பணியாற்றும் இவர் இயற்கையிலே மிகவும் பண்பானவர், எந்தவித வம்புகளுக்கும் செல்லாதவர்,அதிலும் ஆசிரியர் எண்டு சொன்னால் எப்படி எண்டு சொல்லத்தேவையில்லை..
ஆனந்தனுக்கு என்ன நடந்தது.. கவனீங்க இதை காட்டுமிராண்டியிலும் விட காட்டுமீராண்டிக்கூட்டம் என்னம் பூமியில் உயிரோடு இருக்கிறது,
ஆனந்தன் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு அலுவல் காரணமாக அச்சுவேலிக்கு சென்று, இருள்ப்பட்டதும் தம்பாளை வழியாக சைக்கிளில் இடைக்காடு வந்துகொண்டு இருந்தார், அப்பொழுது தம்பாளையில் வைத்து அதுவும் பின்னால் வந்து அவரின் தலையில் (முள்முருங்கை கொட்டனில் பெரிய ஆணிகளை இறுக்கி அந்த கொட்டனால் உச்சந்தலையில் பல முறை ஓங்கி அறைந்துள்ளனர்,,) ஆனந்தன் அப்படியே அடிபட்டு மயங்கு பொழுது கவனீங்க மிளகாய்த்தூளை எடுத்து கண்ணுக்குள் தூவவில்லை கொட்டி இருக்கிறார்கள், விட்டார்களா?? சாரயத்தை பருக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்கள்.. அவரை றோட்டில் கன்னுற்ற சிலர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் கோமாவில் கிடந்திருக்கிறார்,,, பின்னர்?????
அதன் பின்னர் நடந்தது என்ன?? தொடரும்...
இவற்றில் கற்பனை ஏதுமில்லை,, தேவையெனில் அச்சுவேலிக்கு சென்று விசாரிச்சுப்பாருங்கள்.. நிகழ்ந்த கொடுரத்தை..
|
|
|
| இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி |
|
Posted by: Vaanampaadi - 08-10-2005, 08:15 AM - Forum: இணையம்
- Replies (5)
|
 |
இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி
இன்டர்நெட்டில், ஆங்கிலம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிற மொழி. சாட்டிங் போதிலும் சரி, நண்பர்களுக்குள் இமெயில் அனுப்பும் போதும் சரி, ஆங்கிலம் கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி வட்டார வழக்கில் சில வார்த்தைகள் நமக்கு புரிவதில்லையோ அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக கூட இந்த பேச்சுவழக்கு புரிவதில்லை.
இதை புரிந்து கொள்வதற்காக ஓர் அகராதியையே இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் என்னென்ன வார்த்தைகளை இன்டர்நெட்டில் பேசிக்கொள்கிறார்கள் என்று பெற்றோர்களுக்கு புரிய வேண்டும் என்று நினைத்தால் இந்த வெப்சைட்டுக்கு அவசியம் செல்ல வேண்டும்.
www.noslang.com/index.php
இங்குள்ள சர்ச் பாக்சில் உங்களுக்கு புரியாத அந்த சங்கேத மொழியை கொடுத்தால் அதற்குரிய அர்த்தம் விளக்கப்படுகிறது. குறிப்பாக, lol என்ற வார்த்தைக்கு, laughing out loud என்பது அர்த்தம் என்று தெரிய வரும். இதே போல், 10 - thank you, 10x - thanks, 2b - to be, b4n - bye for now, cb - come back, coz - because
உள்ளிட்ட வார்த்தைகள் இன்டர்நெட்டில் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்க மொழி. இது போன்ற ஏராளமான வார்த்தைகளை இந்த வெப்சைட் தொகுத்துள்ளது.
உங்களுக்கு இதே போன்ற வார்த்தைகள் தெரிந்தால் கூட நீங்களும் இந்த வெப்சைட்டுக்கு வழங்க தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நாம் தவறாக பயன்படுத்தும் வார்த்தைகள் எவை என்பதை தனிப்பக்கத்தில் காணலாம். இன்டர்நெட்டுக்கு என தனி வட்டார மொழி உருவாகி விட்டது என்பதை இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
|
|
|
| அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூட்டில் இரு போராளிகள் வீரச்சா |
|
Posted by: தமிழரசன் - 08-10-2005, 06:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
அம்பாறை மாவட்டம் பாவட்டையில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து அரசியற் பணிகளில் ஈடுபட இன்று காலை 7.30 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிககுள் சென்ற இரு போராளிகள் காஞ்சிரங்குடா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:
காலை 7.30 மணியளவில் பாவட்டை சமாதான செயலகத்திலிருந்து படையினரின் ஆக்கிரமிப்புப் பகுதியில் அரசியல் பணியில் ஈடுபடுவதற்காய் உந்துருளி ஒன்றில் சென்ற இரு போராளிகளும், காஞ்சிரங்குடா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து 400 மீற்றர்கள் தொலைவில் உள்ள பகுதியை சென்றடைந்தபோது வெள்ளை நிற ரவுன் ஏசி; ரக வாகனத்தில் சாதாரண உடையில்; காத்திருந்த சிறப்பு அதிரடிப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். இதில் ஒரு போராளி அந்த இடத்திலேயே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாகவும் மற்றைய போராளியின் கைகளை பின்புறமாகக் கட்டிவிட்டு சுட்டுக்கொன்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்;.சங்கதி
இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் குறிப்பிட்ட வாகனத்தில் ஏறி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்குள் சென்றதை தாம் கண்டதாக மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் சின்னக்கடையைச் சேர்ந்த வெள்ளையன் ரமேஸ் (அகவை 32) மற்றும் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சுஜிவேந்தன் (அகவை 18) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறையினர் எமக்கு அறியத் தந்துள்ளனர்.சங்கதி
தற்போது இப்போராளிகளின் வித்துடல்கள் விடுதலைப் புலிகளி;ன் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு அவரிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.சங்கதி
இதேவேளை படையினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.சங்கதி
|
|
|
| அதிரடிப்படையினர் அடாவடித்தனத்துக்கு இருபுலிகள் பலி |
|
Posted by: வன்னியன் - 08-10-2005, 06:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
அம்பாறை மாவட்டம் பாவட்டையில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து அரசியற் பணிகளில் ஈடுபட இன்று காலை 7.30 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிககுள் சென்ற இரு போராளிகள் காஞ்சிரங்குடா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். (திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:
காலை 7.30 மணியளவில் பாவட்டை சமாதான செயலகத்திலிருந்து படையினரின் ஆக்கிரமிப்புப் பகுதியில் அரசியல் பணியில் ஈடுபடுவதற்காய் உந்துருளி ஒன்றில் சென்ற இரு போராளிகளும், காஞ்சிரங்குடா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து 400 மீற்றர்கள் தொலைவில் உள்ள பகுதியை சென்றடைந்தபோது வெள்ளை நிற ரவுன் ஏசி; ரக வாகனத்தில் சாதாரண உடையில்; காத்திருந்த சிறப்பு அதிரடிப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். இதில் ஒரு போராளி அந்த இடத்திலேயே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாகவும் மற்றைய போராளியின் கைகளை பின்புறமாகக் கட்டிவிட்டு சுட்டுக்கொன்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்;.சங்கதி
இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் குறிப்பிட்ட வாகனத்தில் ஏறி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்குள் சென்றதை தாம் கண்டதாக மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் சின்னக்கடையைச் சேர்ந்த வெள்ளையன் ரமேஸ் (அகவை 32) மற்றும் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சுஜிவேந்தன் (அகவை 18) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறையினர் எமக்கு அறியத் தந்துள்ளனர்.சங்கதி
தற்போது இப்போராளிகளின் வித்துடல்கள் விடுதலைப் புலிகளி;ன் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு அவரிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.சங்கதி
இதேவேளை படையினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.சங்கதி
:
|
|
|
| ஓர் அவசர அழைப்பு By பொன். செல்வகணபதி |
|
Posted by: Mahima - 08-10-2005, 01:32 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
ஓர் அவசர அழைப்பு By-பொன் செல்வகணபதி
தீவிரப் படுங்கள்
தீவிரப் படுத்துங்கள்...
சிறுமைகளைக் கண்டு
சினமுறுங்கள்
கொடுமைகளைக் கண்டு
கோபப்படுங்கள்
எல்லாம் நன்மைக்கே
என்று
அமைதியடையாதீர்கள்!
எல்லாம்
நன்மையாய் மலர
எதனையும்
வற்புறுத்துங்கள்;
நாளைய விடியலில்
ஒரு
சிவப்பு சூரியன்
உதயமுற
கிழக்கைக்
கீறிவிடுங்கள்;
எதேச்சாதிகார இருளின்
ஆதிக்கக் கேந்திரங்களில்
கிரணக்கற்றைகளைக்
கொண்டு செலுத்தி
அந்த இருளை
அறுத்தெறியுங்கள்!
இதற்காக
தோழர்களே நீங்கள்
தீவிரப்படுங்கள்
தீவிரப்படுத்துங்கள்-
காலா காலங்களாய்
நாம் நம்பி வந்த
தர்மா தர்மங்களெல்லாம்
செயலற்வை
என்பதைக்
கண்டு கொள்வதில்
காலதாமதம் செய்யாதீர்கள்!
தைரிய ஆகுதியில்
கோழைத் தனத்தைக்
கொழுத்துங்கள்;
செத்து மடியவும்
தயாராகுங்கள்!
வாழ்வதற்கு
வழிபிறக்கும்!!
கோழைக்கு
மரணமொன்று
தனியாக இல்லை.
வீரனுக்கோ
மரணங்கூட
மறுபிறப்பே!
உலகப் பொதுமை கோரி
ஒரு படை நடத்துங்கள்
உலக அமைதிக்காக
ஒரு போரைப்
பிரகடனப்படுத்துங்கள்
இதற்காக
தோழர்களே நீங்கள்
தீவிரப்படுங்கள்
தீவிரப்படுத்துங்கள்...
|
|
|
| அப்பப்பா... |
|
Posted by: SUNDHAL - 08-09-2005, 10:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (24)
|
 |
லிஸன் (Listen) என்கிற ஆங்கில வார்த்தையில் உள்ள அதே 6 எழுத்துக்கள்தான் சைலண்ட் (Silent) என்னும் ஆங்கில வார்த்தையிலும் உள்ளன. இது மாதிரி அதிக எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் அமைவது மிக அபூர்வம்.
|
|
|
| திருப்தி அடையாத பள்ளி நிர்வாகி !!!!!!!!! |
|
Posted by: Vaanampaadi - 08-09-2005, 07:26 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
3 ஆசிரியைகளை திருமணம் செய்தும் 4வது டீச்சரை வளைக்க முயன்ற பள்ளி நிர்வாகி!
ஆகஸ்ட் 09, 2005
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில், தனது பள்ளியில் வேலை பார்த்து வந்த 3 ஆசிரியைகளை திருமணம் செய்த பின்னர், 4வதாக மேலும் ஒரு ஆசிரியையை திருமணம் செய்ய ¬முயன்ற பள்ளி நிர்வாகியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரையும் போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி வருகிறார். பள்ளி நிர்வாகத்தைக் கவனிப்பதை விட பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியைகளை தனது காதல் வலையில் வீழ்த்துவதிலேயே அதிகம் நேரம் செலவிட்டுள்ளார் சிவசங்கரன்.
அவரது காதல் வலையில் சிக்கிய 3 ஆசிரியைகளை யாருக்கும் தெரியாமல் அடுத்தடுத்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார் சிவசங்கரன். அத்தோடு நிற்காமல், இன்னொரு ஆசிரியைக்கும் அவர் ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தார்.
இந்தத் திருமணம் குறித்துத் தெரிய வந்த 3வது மனைவி திருவேணி மற்றும் ¬முதல் மனைவி ஆகிய இருவரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நாடி புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சிவசங்கரனை போலீஸார் அழைத்து விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது. அவருக்கு உடந்தையாக அவரது தாயாரும் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவசங்கரன் மற்றும் அவரது தாயார் குமாரி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
Thatstamil
|
|
|
|