Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 105 online users.
» 0 Member(s) | 102 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  US Ambassador meets SLMM, SLA in Trincomalee
Posted by: kurukaalapoovan - 10-20-2005, 04:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16130

:? :roll:

Print this item

  ஐ.பி.சி இன்னிசைக்குரல்: மண்டபம் மாற்றம்
Posted by: iruvizhi - 10-20-2005, 01:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

ஐ.பி.சி தமிழ் இன்னிசைக்குரல் - 2005 நிகழ்வு மண்டப முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஐ.பி.சி சுவிஸ் கலையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ஐ.பி.சி தமிழ் இன்னிசைக்குரல் - 2005 நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி அன்று Zürich Salman Saal மண்டபத்தில் நடைபெற ஏட்பாடாகியிருந்தது.

எதிர்பாராத சூழ்நிலையால் இன்னிசைக்குரல் - 2005 நிகழ்வானது அதே திகதியில் Bern மாநிலத்தில் Mattenhof, Bernstrasse 4, Gumligen என்னும் மண்டபத்தில் நடாத்துவதாக தீர்மானித்துள்ளோம்.

எனவே இதனால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மனவருத்தமடைவதுடன் உங்கள் ஆதரவை என்றும் எங்களுக்கு வழங்கி இந்நிகழ்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

ஐ.பி.சி தமிழின் வளர்ச்சியிலும் அதன் பணியிலும் அக்கறையுடைய தாங்கள் இதனையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தேசம் சார்ந்த எமது பணிக்கு ஐ.பி.சி தமிழ் தனது காத்திரமான பணியை முன்னெடுக்கும் எனக்கூறி நிகழ்வுகாண அழைக்கின்றோம்.

http://www.eelampage.com/?cn=21005

Print this item

  முன்னேற விருப்பமா?
Posted by: aathipan - 10-20-2005, 11:46 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (12)

முன்னேற விருப்பமா?

சமீபத்தில், 87ல் என்னுடன் +2 படித்த ஆறு நண்பர்களை ஒரு சேர சந்திக்க நேர்ந்தது. வெகு சந்தோஷமாய் அளவளாவிக் கொண்டோம். தற்போது எல்லாருமே நல்ல வேலையில், வசதியாக இருந்தனர் என்னைத் தவிர.

நாள் முழுக்க நாங்கள் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டதில் ஒரு முக்கிய விஷயம் என் மரமண்டையில் உறைத்தது. +2வில் என்னைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மற்ற நண்பர்கள், வாழ்க்கைப் பாதையில் பல படிகள் முன்னேற, நான் மட்டும் பின்தங்கியே இருந்தது ஏன் என தீவிரமாக யோசிக்க, என் மைனஸ்கள் செவிட்டில் அறைந்தன.

இருக்கிற வேலையே போதும், வருகிற சம்பளமே நிம்மதி என்று 17 வருடமாய் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காது போனது, என் திறமைகளை ஒரு புள்ளியில் குவிக்காமல், பலவாய் சிதற விட்டு, எந்த துறையிலும் கொடி நாட்டாது வீணானது. முயற்சியே செய்யாமல் நாளைக்கு என்று எதையும் தள்ளிப்போடும் சோம்பேறித்தனம், நேரத்தை உரிய வகையில் பயன்படுத்தாமல் "டிவி', சினிமா என்று வீண் பொழுதுபோக்குகளில் என் பொன்னான நேரங்களை வீணடித்தது என்று என் குறைகள் தெளிவாக புரிய, எனக்குள் இருந்த கசடுகள் அகன்றன.

மற்றவர்களைவிட எந்த விதத்தில் நான் குறைந்து விட்டேன் என்கிற முனைப்பும், என்னாலும் அவர்களைப் போல முன்னேற முடியும் என்கிற உத்வேகமும் இப்போது உண்டாகியிருக்கிறது. முதல் அடியாக மல்டிமீடியா கோர்ஸில் சேர்ந்திருக்கிறேன். நிச்சயம் ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கையோடு நடைபோடத் துவங்கியுள்ளேன்.

என்னைப் போல், கிடைத்த வேலையும், சம்பளமுமே போதும் என்று இருப்பவர்களே... அந்த வட்டத்தைவிட்டு வெளியே வாருங்கள். இன்னொரு உலகம் நமக்காக காத்திருக்கிறது!

கே.ரவிச்சந்திரன், கோவை

Print this item

  சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி.
Posted by: iruvizhi - 10-20-2005, 11:39 AM - Forum: சினிமா - No Replies

சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி.

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் சிறந்த படைப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கும் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகியுள்ள சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி திரைப்படம்,ஒரு சிறந்த மற்ரும் பார்வையாளரை சிந்திக்கத்தூண்டும் அருமையான திரைபாடமாகவே நான் பார்க்கின்றேன்.

மிகவும் எளிமையான முறையில் எல்லோரையும் சென்றடயக்கூடிய ஒரு அழகிய சிற்பமாக செதுக்கியிருக்கின்றார் தங்கர்பச்சான். இளயராசாவின் இனிய இசையும் படத்திற்கு மேலும் மெருகேற்றி இருக்கின்றது. ஒளிப்பதுவு மிகவும் அற்புதமாக செய்யப்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு ஸோரிய ஒளிக்கீற்று இருண்ட வீDDஇற்குள் விZஉவது போன்ற காட்சி படம் தொடங்கி சில காட்சிகள் நகர்ந்த பின் வரும். அந்த சிறிய விடயமே படத்தின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை காட்டி நின்றது.

தங்கர்பச்சான் இளங்கோவாக இத்திரைப்படத்தில் வாழ்ந்து இருக்கின்றார். தேன்மொழியாகத்தோன்றிய நவ்யாவும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கின்றார். பிரமீடநடராசன் மற்றும் சுந்தரரசன் போன்றவர்களின் நடிப்புக்களும் பாராட்டப் பட வேண்டியவை. குழந்தைகலாக நடித்தவர்கலும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Mஒத்தத்தில் ஒரு சிற்பத்தை செதுக்கிய தங்கர் பச்சானை பாராட்டுவதோடு அவரின் மேலும் பல படைப்புக்களை எதிர்பார்க்கலாம்.

Print this item

  கள தாத்தாக்களின் வீட்டில்.......
Posted by: தூயா - 10-20-2005, 08:57 AM - Forum: நகைச்சுவை - Replies (33)

கள தாத்தாக்களின் வீட்டில்.......

நீங்களும் எழுதுங்கள்...முகம்ஸ் நல்லா எழுதுறாங்க அதை நாங்க எதுக்கு குழப்பனும்... இதில எழுதலாம்..

தனி நபர் தாக்குதல் வேண்டாம்..

முடிந்த வரை சம்பந்த பட்டவர்களிடம் அனுபதி பெற்று செய்தால் நல்லது <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

அண்ணாச்சியின் ஆசிர்வாதத்துடன் இன்று முதல் "கள தாத்தாக்களின் வீட்டில்..." :wink:

Print this item

  புலிகள் ஆதரவுக்கான தடையைஎதிர்த்து அமெரிக்காவில் வழக்கு
Posted by: adsharan - 10-20-2005, 08:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட பூர்வ செற்பாடுகளுக்கு ஆதரவாகக் கூடாது என்று அமெரிக்காவில் விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.
அமெரிக்காவிலுள்ள மனித உரி மைகள் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்பன இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்யவிருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் சேவையாற்றுவதற்கும் அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட அவசரகால பொருளாதார சட்டத்திற்குத் தடையாக இருக்கிறது.
அமெரிக்காவின் மீது 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் புஷ் இந்த அவசரகாலச் சட்டத் தைப் பிரகடனப்படுத்தினார்.
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஒகாலனின் குர்திஸ் விடுதலை அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொருளுதவி மற்றும் சேவைகளை வழங்குவதனையும் இந்தச் சட்டம் தடைசெய்தது.
இத்தகைய சட்டத்தால் எந்தவொரு அமைப்பினதும் சட்டபூர்வ மனிதாபி மான நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் அமெரிக்க குடிமக்கள் பாதிக்கப்படு வதாக ஆட்சேபனைகள் எழுந்தன.
இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அமெரிக்க தமிழ் அமைப்புகள் இலங் கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவும் புலிகளின் நிர்வாகப் பகுதியில் சேவையாற்றவும் தடையாக இருக்கும் இந்த 2001 ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்ய உள்ளன.
சட்டபூர்வ உரிமைகளுக்கான மையத் தினரால் இந்த வழக்குத் தொடரப்பட வுள்ளது.
மற்றோர் அமெரிக்க தேசாபிமான சட்டமானது. ஒகாலனின் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சியளித் தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் சேவையாற்றுதலைத் தடை செய்வதைச் சட்டபூவர்மற்றது என்று கடந்த ஜூலை மாதம் அமெரிக்க நீதிபதி ஒட்றி கொலின்ஸ் அறிவித்திருந்தமை குறிப் பிடத்தக்கதாகும்.

நன்றி உதயன்

Print this item

  மொழியின் முகங்கள்
Posted by: கரிகாலன் - 10-20-2005, 06:03 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (6)

இக்கட்டுரை நான் அண்மையில் படித்தது நீங்களும் படித்தது பயன் பெற இங்கே இணைக்கிறேன்.


- <b>மொழிபற்றி ஓர் அறிவுப்பதிவு</b> -

மொழி என்பது என்ன ?


மொழி என்பது உயிருக்கு நிகரானது; மாந்தனின் அடிப்படை உரிமை மொழியாகும் என்றெல்லாம் உலக மாந்தர் தத்தம் மொழியினைப்பற்றிக் கூறிடுவர். இஃது உணர்வு நிலைப்பட்ட கூற்றாகும் . இதில் தப்பேதும் இல்லை. தாய் தன் பிள்ளைகளைப் பொத்திக் காக்கும் செயற்பாட்டிற்கும் மேலானது; மாந்தன் தான் சார்ந்திருக்கும் மொழியைக் காக்கும் செயல்.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சென்று மிக
இயல்பாய் மொழியும் தமிழர் வாய்ச்சொல்லில் பொருள் பொதிந்துள்ளது. தமிழ் எங்கள் உயிருக்கும் மேலென்று கூறிய பெருமகனாரின் கூற்றில் குறை கிஞ்சித்தும் இல்லை.

தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே என்று கதைத்த பாட்டனின் பூட்டன் பேருள்ளம் வியப்பிற்குரியதாகும் .

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னே முகிழ்த்த மூத்தகுடி, மூத்த மொழி தமிழ் என்பதுவும் தமிழே அனைத்து மொழிகளுக்கும் அன்னை என்பதுவும் உணர்வின் அடிப்படையில் அமைந்த கருத்தூற்றுகள். இதில் உணர்வு உண்டு, தெளிந்து அறிதல் இல்லை. ஆய்ந்தறிந்த நிலைப்பாடில்லை. இவ்வாறான கூற்றுகளில் அறிவும் உணர்வும் ஒன்றுபடவில்லை. ஆனால் இவ்வாறான மொழிச்சிந்தல்களால் தப்பேதும் இல்லை. ஒரு மனிதன் தன் தாய்மொழியின் ஆளுமையையும் ஆற்றலையும் உற்றுணர்ந்து கொண்டிட இதுபோன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றன.

அறிவின் தளத்தில் உற்றுநோக்கின், இவையெல்லாம் உயர்வுநவிற்சியின் பொருட்டான சொல்லாடல்கள். இவற்றால் மொழியின்பம் கூடிடும், மனம் குளிரும். இவ்வகை உணர்வுகளை அனுபவித்திட வேண்டும். மாறாக, அறிவின் தளத்தில் நின்று கொண்டு கேள்விகள் கேட்கலாகாது.

தமிழ் எப்படி உலக மொழிகளுக் கெல்லாம் தாயாகியது?

கல் தோன்றி மண் தோன்றா முன்னே, தமிழர் தோன்றியது எவ்வாறு ?

மொழித் தொடர்பு கருவிதானே, அதைப் பழித்தல் கூடாது ஏன் ?


இதுபோன்ற கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில் இல்லை. இவை பொருட்டான சான்றுகளுடைய ஆய்வு களும் இல்லை. இருந்தும் இவ்வாறு கேட்பதே அறிவிலித்தன்மையாகும். இதில் உணர்வினைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதனை முதலில் அறிந்து தெளிதல் வேண்டும்.

மொழியின் பேராற்றலைக் கண்டு இவ்வாறு கூறுவதெல்லாம் உணர்வு நிலைப்பட்டது. உளவியல் தளத் தினைக் கொண்டியங்குவது. உயிர், உரிமை, உடைமை என்ற சொல்லா டல்களின் கட்டமைப்பில் இயங்கு கின்றது.

இவற்றினைத் தாண்டி , மொழிக்கு அறிவுநிலை சார்ந்த முகமும் உண்டு. மனிதனின் அறிவாற்றல் விரிவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான தெளிவுகளைக் கொடுக்கும் ஆற்றலைக் கொண்டியங்குகின்றது. இங்கு மொழி என்பது உலகளாவிய மொழியியல் சிந்தனைக்குரியதாகும். உலகில் தனிப்பட்ட ஒரு மொழியின்பால் கூறிடும் கருத்தன்று.

மொழி என்பது மாந்தரினத்திற்கான முழுமை பெற்ற தொடர்புக் கருவி என்றே அறிவியல் ஆய்வுகள் முன்மொழிகின்றன. ஒலிகளின் துணையுடன் மொழியாளுமை நிகழ்கின்றது. கால வளர்ச்சியால் மொழியைக் கையாள்வதில் பல்வேறு ஒழுங்குகள் உருவாக்கப்பட்டன; இலக்கண வரையறைகள் உருவாக்கப்பட்டன . இவற்றிற்கு இயற்கை துணை நின்றது. பின்னாளில் குறிப்பிட்ட ஒரு மாந்தர் குழுவினரைக் குறிக்கும் குறியீடாக மொழி மறுஉருமாற்றம் பெற்றது. இது மாந்தரினத்தின் ஒட்டுமொத்த அறிவால் ஏற்பட்டது.

தமிழர்களாகிய நாம் மொழியைப் பெருவாரியாக உணர்வின் அடிப்படையில் கண்டுணர்ந்து பழகிவிட்டோ ம். அதன்பொருட்டான சிந்தனைகளும் செயற்பாடுகளும் உணர்வின் தளத்திலேயே கண்டியங்குகின்றன. எல்லாவற்றிலும் அறிவைவிட உணர்வே முந்தி நிற்கின்றது.

மொழி ஒத்த இனம் சார்ந்துள்ள மக்களிடையே கருத்துப் பரிமாற்றம் செய்திடுவதற்குரிய ஊடகம். ஒரு மனிதன் தன் குழுவைச் சார்ந்துள்ள இன்னொருவனுக்குத் தான் கண்டுணர்ந்தவற்றினை வெளிப்படுத்த மொழி பயன்படுகின்றது. அதன் பயன்பாட்டுத்தளம் விரிவாக்கம் கொள்ளும்போழ்தில் வேறுபட்ட இனத்தாரிடையேயும் கருத்துப் பரிமாறிக்கொள்வதற்குரிய ஊடகமாகவும் மறுஉருப் பெறும். இந்நாட்டில் வழங்கப்படும் மலாய்மொழி, மலாய் இனத்தாரிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தவும் இந் நாட்டில் வாழும் பிற இன மக்களான தமிழர், சீனர் ஆகியோரிடையே தொடர்பினை ஏற்படுத்தும் கருவியாகவும் இருக் கின்றது. இது பயன்பாட்டுத் தளத்தினை விரிவாக்கிய நிலை. ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகள் பயன்பாட்டுத் தளத்தில் உச்சத்தில் இருக்கின்றன. பல்வேறு இன மாந்தரை இணைப்ப தோடு, பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் அம் மொழிகள் விளங்குகின்றன. உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாகவும் அதிகமான துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் ஆங்கிலம் விளங்குகின்றது. இந் நிலைப் பாட்டினை அடைவது எளிதன்று. மிக நேர்த்தியான திட்டங்களாலும் கடின உழைப்பாலும் மட்டுமே இந் நிலையினை அடைய இயலும். இஃது அறிவின் நிலைப்பாட்டில் அடைந்த வெற்றியாகும்.

உலக மொழிகளில் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள மொழியாக நம்மவரால் கருத்துரைக் கப்படும் தமிழ்மொழியின் நிலைப்பாடும் இம் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள வாழ்வியல் தளத்தினையும் சற்று உற்றுணர்ந்து பாருங்கள். நம் மொழிக்குரிய அறிவார்ந்த நிலைப்பாடெங்கே?

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று அடிப்படை யின்பால் உற்று நோக்கின், மொழி நிலைப்பாட்டில் தமிழர்கள் பெரும்பாலும் உணர்வு தளத்தின் அடிப்படையி லேயே செயற்பட்டிருக்கின்றனர். சங்ககால வாழ்வியல் தொடங்கி, நாட்டுடைமைப் போர் முதலாக இன்றைய வாழ்வியல் வரையிலாகத் தமிழர்தம் உள்ளத்தினை உண ர்வே முற்றும் முழுமாக ஆட்கொண்டுள்ளது. உணர்வார்ந்த நிலையும் செயலும் வேண்டியதில்லை என்பது பொரு ளன்று. மாறாக முற்றும் முழுதும் உணர்ச்சியாக இராமல், அறிவும் சரிபாதியாகக் கலந்திருத்தல் வேண்டியதாகிறது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயரிட வேண்டுமென்பது இயற்கையின் இயல்பாய் உள்ளது. இது எந்தவிதமான கேள்விகளுக்கும் இடமில்லாமல், கிஞ்சித்தும் சிந்திக்காமல் செயல்படவும் செயல்படுத்தவும் வேண்டியதாகும். இஃது அறிவின் அடிப்படையில் துலங்க வேண்டியது. இருந்தும் மாற்றுக் கருத்தும் செயலும் தோன்றுவதற்குரிய காரணம் என்ன? தமிழர்கள் அறிவார்ந்த நிலைப்பாட்டில் செயற்படாததே இதற்குரிய முகாமைக் காரணமாகும்.

அரசியல், பொருளியல், சமூகவியல் என்ற மூன்று நிலைப்பாடுகளிலும் தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைப் பிறர் கையில் தாரைவார்த்துக் கொடுத்ததன் விளைவே இன்றைய உணர்வின் விளிம்பான போராட் டங்கள். ஆளுமையும் ஆற்றலுமற்ற தலைவர்களை நம்பி ஏமாந்துப் போகின்றனர், தமிழர்கள். தமிழர்களின் ஏமாற்றம் என்பது தமிழின் ஏமாற்றமாகும்.

ஏதோவொரு காலகட்டத்தில் உணர்வின் உச்ச ங்களின் எதிரொலிகளாய் நிகழ்ந்த தமிழ்மொழிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் என்பதற்காப், பின்னாளில் மொழியின் வளர்ச்சிக்கு மாறாக அவர்கள் ஆற்றிய அறம் துறந்த செயல்களுக்கெல்லாம் அறம் கற் பித்தல் எந்த வகையில் அறமாகும் ? தமிழர்களின் அறிவெங்கே வீழ்ந்துகிடக்கின்றது?

இந்தக் கருத்தின்பால் மாற்றுச் சிந்தனை உடையவர்கள் :

வரலாற்றினை மறப்பதா ?
தமிழ் காத்த ஆன்றோரைத் துச்சமென நினைப்பதா?

தமிழ்பால் ஆற்றும் செயல்பாடுகள் உணர்வு நிலைப்பட்டதா ? என்றவாறெல்லாம் கேள்விகள் எழுப்பலாம்.

இதுகாறும் உலகெங்கும் நிகழ்ந்தேறிய பல்நிலைப்பட்ட மாநாடுகள், பெருங்கூட்டங்கள் இவற்றால் விளைந்த பயன்கள் யாவை ? எட்டு மாபெரும் உலக ளாவிய மாநாடுகளைக் கண்டபின்பு தமிழ்மொழியின் வளர்ச்சி யாது ?

முழுக்க முழுக்க உணர்வின் செயலாக்கத் தளத்தில் நிகழும் மேடைப் பேச்சுகளால் அடைந்த அடைவுகள் என்னென்ன ?

உணர்வும் அறிவும் சமநிலையில் இயங்கிச் செயற்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க. திரு. உ.வே.சாமிநாதனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரின் இயங்குதளத்தினைத் கண்ணுற்றுப் பாருங்களேன். இச் சான்றோர்கள் மொழியினை அறிவும் உணர்வுமாய்க் கண்டுணர்ந்தவர்கள். அதனால் அன்னவர் மொழிக்கு ஆற்றியபாடு பெரும்பாடாயிற்று.

இனி, தமிழர்கள் அறிவுத் தளத்திற்கு மொழியைக் கொண்டு சென்றிட வேண்டும். தமிழின் பயன்பாட்டுத்தளம் விரிவு பெற்றிடல் வேண்டும். சிந்திப்போம்...செயற்படுவோம்


தொடரும்...............

நன்றி செம்பருத்தி.

Print this item

  தண்டூரி சிக்கின்
Posted by: RaMa - 10-20-2005, 05:32 AM - Forum: சமையல் - Replies (15)

1 கோழி (நிறை 3 இறாத்தால்)
1 வெங்காயம்
3 உள்ளி பல்லு
10 அவுன்ஸ் யோக்கட்
1 தேசிக்காய் சீவலும் சாறும்
2 மேசைக் கரண்டி வினகரி
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
2 தேக்கரண்டி கராம் மசாலா
2 தேக்கரண்டி மல்லி தூள்
1 தேக்கரண்டி சீரக தூள்
1 தேக்கரண்டி சிவப்பு கலரிங்

செய்முறை:

கோழியின் தோலை எடுத்து விட்டு இரண்டாக வெட்டவும். பின்னார் கூர்மை வாய்ந்த கத்தியினால் (எமது மட்டுநிறுத்தினார்களிடம் கடன் வாங்கலாம்) ஒரு பெரிய அங்குல நீளமாக இடைவிட்டு விட்டு சரிவாக கீறவும். ஒரு பெரிய அலுமினிய பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் மேற்கூறிய எல்லாவற்றையும் போட்டு கலக்கவும். பின்னார் கோழியை இந்த கலவையினுள் போட்டு கலந்து 8-24 மணித்தியாலாம் ஊற விடவும்....

அவனை 400பாரனைட்டில் சூடு எற்றி விட்டு மேல் தட்டில் கோழிளை ஒரு பேக்கிங் ரேயில் வைத்து அலுமினிய வொயிலால் மூடி 1 மணித்தியாலாம் ரோஸ்ட் பண்ணவும். பின்னார் கலவையை கோழியின் மேல் புசி வோயிலை எடுத்து விட்டு பேக் பண்ணவும்..... பாரிமாற முன்னார் 2மேசைக் கரண்டி நெய்யை கோழிக்கு மெல் ஊற்றி விரும்பின் கொஞ்சம் வேக விடவும்.

பி.கு..... இந்த தண்டூரிச் சிக்கினை நன் அல்லது றொட்டீயுடன் சாப்பிட இன்னும் சுவை அதிகமாக இருக்கும்

Print this item

  அப்ப உள்வீட்டுகொலையள் ஆரம்பமாகப் போகுதுங்கோ....
Posted by: வன்னியன் - 10-20-2005, 04:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

மகிந்த ராஜபக்சவை ஈ.பி.டி.பி தேசவிரோதக் கும்பலின் தலைவர் டக்ளஸ் தேவானந்த, ஆதரிப்பது தொடர்பில் ஈ.பி.டி.பி. கும்பலுக்குள் உள்முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. டக்ளஸ் தேவானந்த இந்த விவகாரம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் அக்கும்பலுக்குள் விசனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் மகிந்தவின் ஜே..வி.பி.யினருடனான ஒப்பந்தத்தின் போது தன்னிடம் கலந்தாலோசிக்காது தன்னிடமிருந்து பல சலுகைகள் பெற்ற டக்ளஸ் தேவானந்த, மேற்படி ஒப்பந்தத்தில் முன்னின்று கைதட்டி வரவேற்றமை அரசு தலைவர் சந்திரிகாவுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்தள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா அரசு தலைவர் சந்திரிகாவை சந்திப்பதற்கு சந்திரிகாவிடம் அனுமதி கோரியிருந்த போதிலும் சந்திரிகா டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ஈ.பி.டி.பி கும்பலின் ஆலோசகராக இருக்கும் ஒருவரை அழைத்துப் பேசிய சந்திரிகா மேற்குறித்த தனது விசனத்தை வெளியிட்டுள்ளார். சந்திகாவின் தீவிர விசுவாசியான அவரும் உடனடியாகவே டக்கிளசை சந்தித்து இது குறித்தும், மற்றும் ஒற்;றை ஆட்சிக்குள் தீர்வு என மகிந்த கூறுகின்றமை ஈ.பி.டி.பி.யின் கொள்கைகளுக்கே எதிரானது எனவும் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்ற ஈ.பி.டி.பியின் கொள்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அதனை நிராகரித்த டக்ளஸ் இன்னும் 20 நாட்கள் அரசு தலைவர் ஆக இருக்கப் போகின்றவர் பின்னால் சென்று இனி எந்தப் பயனும் இல்லை எனவும், மகிந்தவை விட்டால் எம்மை ஆதரிப்பதற்கு யார் உள்ளனர் எனவும், எனக்கு வேறு வழி என்ன இருக்கின்றது என கேள்வி கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 'மகிந்தவின் சிந்தனைகள்" தேர்தல் கொள்கைப் பிரகடன வெளியீட்டிற்கு ஈ.பி.டி.பி. கும்பலின் சார்பில் ஐவருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. டக்ளஸ் தேவானந்த, தவராஜா, மகேஸ்வரி வேலாயுதம், இராசமாணிக்கம், மற்றும் விக்னேஸ்வரன் அகியோருக்கே இது கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் போது மீண்டும் மேற்படி அந்த சந்திரிகாவின் விசுவாசி டக்ளஸிடம் அரசு தலைவருக்கு இது வருப்பமில்லை எனத் தெரிவித்திருக்கின்றார். ஆனால் டக்ளஸோ அதைப ;பொருட்படுத்த வில்லை எனவும், இதனைத் தொடர்ந்தே கட்சிக்குள் டக்ளஸ் தனது சுயநலத்துக்காக செயற்படுவதாக கூறி முரண்பாடுகள் தோற்றம் பெற்றிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

Print this item

  கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? பாகம்-4 ,5
Posted by: வியாசன் - 10-20-2005, 04:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

'ஏழாம் ஆண்டு நிறைவில் ஓயாத அலைகள் -02
ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு?
பாகம்-4


ஓயாத அலைகள்- 02 நடவடிக்கையின் போது அணியொன்றுக்கு பொறுப்பாக நின்று வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு வேவுப் பிரிவு போராளியான சுரேந்திரன்ஃஅல்லது இளம்பரிதி எனும் போராளி தனது வேவு அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். கட்டளைத் தளபதி ஜெயம் அண்ணாவும் வேவுப்பகுதிக்கு பொறுப்பாக நின்ற ஜெரி அண்ணாவும் நாம் வேவுபார்க்க வேண்டிய பகுதிகளை விளங்கப்படுத்தி. என்னோடு நான்கு போராளிகளையும் சேர்த்து செயற்பாட்டில் ஈடுபடுத்தினார்கள்.

குறித்த பகுதியில் பாதையமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு என்னிடமிருந்தது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தப் பகுதியால் பாதை எடுக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருந்தது. அதன்படி சண்டை ஆரம்பிக்கும் நேரத்தில் அணிகளை நகர்த்துவதற்காக கிளிநொச்சி குளத்துக்குள்ளால் மூன்று பாதைகளை எடுத்திருந்தோம். அம்மூன்று பாதைகளும் குளத்து நீருக்குள்ளால்; தான் போக வேண்டும். ஏனென்றால் ஆமியின் மண் அரண்கள் வளைந்திருந்ததால் குளத்திற்குள்ளால் பாதை எடுத்தால் இலகுவாக இருக்கும் என்பதற்காக இந்தப் பகுதியால் பாதைகளை எடுத்திருந்தோம்.

முதல் முறையாக குளத்து நீருக்குள்ளால் சென்று பாதை எடுக்க முயற்சித்த போது நீருக்குள் இருந்த ஒரு நச்சுத்தன்மை எனது முகத்தில் தாக்கியதால் புண்கள் ஏற்பட்டு கதைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து அதனு}டாகவே பாதை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சென்றேன.; குளத்துக்குள் தாமரைக் கொடிகள் உடலைக் கீறிக் கிழித்தன. தண்ணீர் கூடிய பகுதிக்குள்ளால் நீந்தியும் ஏனைய பகுதிகளால் நடந்தும் சென்றுதான் பார்த்தோம்.

இரவு நேரத்தில் வேவு நடவடிக்கையிலும் பகல் வேளைகளில் அவதானிப்பிலும் ஈடுபட்டோம். டிப்போச் சந்தியிலிருந்து 200 மீற்றர் உள்ளே சென்றால்தான் குளத்திற்கு வரலாம் அந்தப்பகுதியால் வரும்போது ஆமி மரத்திலிருந்து குறிபார்த்து சுடுவான். இப்படி எனக்கு இரண்டு முறை சுட்டபோது ஒருதடவை எனது தொப்பியில் பட்டது. அதேநேரம் மாலதி படையணி போராளி ஒருவருக்கு இராணுவம் குறிபார்த்து சுட்டதில் காயமடைந்தார். நாங்கள் மூவிங் பங்கருக்குள்ளால் சென்றுதான் குளத்துக்குள் வருவோம். இவ்வாறு ஏழு நாட்களுக்குள் பாதைகளை எடுத்தோம்.

இரவில் மண் அரணில் ஏறிப்படுத்து அவதானித்துக் கொண்டிருக்கும் போது இராணுவத்தினர் ரோந்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது. பகல் வேளையிலும் மண் அரண் பகுதியில் தடயங்கள் இருக்கின்றதா என அவதானித்தவாறு ரோந்து செய்வதை நாங்கள் து}ரத்திலிருந்து அவதானித்தோம். எதிரியின் அரணில் இருந்து சிறிய இடைவெளியில் தண்ணிக்கு இடையில் பற்றை ஒன்று இருந்தது. அதற்குள் மூன்று நாட்களாக பகல் வேளையில் இரண்டு பேர் நின்று எதிரி எவ்வாறு நிலையெடுத்திருக்கின்றான் அவனது நடமாட்டங்கள் எவ்வாறு இருந்தது என்றெல்லாம் அவதானித்தோம்.

அத்தோடு எதிரியின் காப்பரணுக்கு மிக அண்மையாக நின்று தான் நாங்கள் அவதானித்தோம். ஒவ்வொரு காப்பரண்களுக்கும் இடையில் 35 மீற்றர் இடைவெளிகளே இருந்தன. இராணுவத்தின் பிரதான முகாமான கிளிநொச்சி மகா வித்தியாலய முகாமை கைப்பற்றினால் ஏனைய பகுதிகளை கைப்பற்ற இலகுவாக இருக்கும் என்பதற்காகவும் அதிலிருந்து ஏனைய பகுதிகளுக்கான விநியோகத்தை தடைசெய்ய வேண்டுமென்பதற்காகவுமே இந்த குளத்துப்பகுதி பாதையை தெரிவு செய்தோம்.

ஒன்பது நாட்களுக்குள் வேலைகளை முடித்துவிட்டோம். பின்பு தாக்குதல் அணித் தலைவர்களை அழைத்துச்சென்று அப்பாதைகளைக் காட்டினோம். பின்பு அந்தப்பகுதியால் உள்நுழைவதற்கான அணிகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி வழங்கினோம். இதேபோன்று ஒரு குளத்தினை தெரிவு செய்து அந்த அமைப்பை உருவாக்கி பயிற்சியை வழங்கினோம். இவ்வாறு சண்டையை ஆரம்பிப்பதற்கான நாள் நெருங்கியதும் தளபதி தீபன் அண்ணா எங்களோடு கதைத்து தயார்படுத்தல்களை செய்தார்.

26 ஆம் திகதி இரவு சண்டை ஆரம்பிக்கப்படவிருந்தது. முதல் நாள் இரவு நாங்கள் சென்று இரவு முழுவதும் அவதானித்து விட்டு மறுநாள் பகலிலும் அவதானித்தோம். இருட்டிய பின் திரும்பி வந்து 50 பேர் கொண்ட அணியை அழைத்துக் கொண்டு தண்ணிக்குள்ளால் சென்றோம். செல்லும் போது ஆமி பரா வெளிச்சங்களை அடித்துக் கொண்டிருந்தான் நாங்கள் நீருக்குள் மறைந்துகொண்டு சென்றோம.; 50 பேரும் உள்நகர்ந்து சண்டை தொடங்கும் நேரத்திற்கு சென்று விட்டோம் சென்றவுடன் எதிரிக்கும் எமக்கும் இடையே ஐந்து மீற்றர் அண்மித்திருந்து கொண்டு குண்டு அடித்து சண்டையை ஆரம்பித்தோம். அப்போது துப்பாக்கிகளுக்குள் நீர் சென்றதால் அவை இயங்கவில்லை. அதனால் குண்டுகளையும் டொங்கான்களையும் பயன்படுத்தியே தாக்குதலை நடத்தினோம். தாக்குதல் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குள் அதிலிருந்த ஏழு அரண்களையும் பிடித்து விட்டோம். இரண்டு ஆமி இறந்துவிட ஏனையோர் காயங்களுடன் தப்பி ஓடத் தொடங்கினார்கள். இரவு 1.30 தொடக்கம் காலை 6.00 மணிவரை இப்பகுதியை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம.;

6.00 மணிக்குப்பின் எதிரியிடமிருந்து எதிர்ப்பு வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இரண்டு பகுதிகளாலும் எதிர்ப்பு வர 6.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை குண்டுகளையும் டொங்கான்களையும் அடித்து பிடித்த பகுதியை தக்க வைத்துக் கொண்டிருந்தோம். பிறகு மூன்று பகுதிகளாலும் ஆமி பெருமளவில் எதிர்த்தாக்குதலை நடத்த தொடங்கினான். இதனால் நாங்கள் பிடித்த காப்பரண்களை விட்டு பின்வாங்க வேண்டிய நிலை உருவானது. ஆமி நெருங்கி வந்து எங்களை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு வந்துவிட்டான். அந்த நேரம் எமது போராளிகளில் 40 பேர் வரை வீரச்சாவடைந்துவிட்டனர். அந்த அணிக்கு தலைமை தாங்கிய சித்தா மாஸ்டரும் வீரச்சாவடைந்துவிட்டார். ஏனையோருக்கும் காயம் ஏற்பட்டுவிட்டது. என்னோடு ஒன்பது பேரையும் கூட்டிக்கொண்டு ஆமியின் முகாமிற்குள் கண்டல் பகுதியினு}டாக எங்களுடைய மற்றுமொரு அணியுடன் போய்ச்சேர்ந்தோம். பின்னர் அந்தப் பகுதியை அடுத்த கட்டங்களாக நடைபெற்ற சமரின் போது கைப்பற்றினோம் எனக் கூறினார்.

இதேவேளை கிளிநொச்சி படைத் தளத்தினுள் உட்புகுந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட வேவுப் போராளி கலையழகன் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். 1997 ஆம் ஆண்டு ஏழாம் மாத காலப் பகுதியில் கிளிநொச்சி இராணுவ முகாமை வேவு பார்க்குமாறு பணிக்கப்பட்டது. எனக்கு பரந்தன் பகுதியையும் உள்ளேயிருந்த முகாம்களையும் வேவு பார்க்குமாறு கூறி என்னோடு இன்னும் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் முகாமுக்குள் செல்வதற்காக சுட்டதீவுப் பகுதியில் இராணுவ காப்பரண் பகுதியில் முயற்சிகளை மேற்கொண்டு உட்புகமுடியாத நிலையில் திரும்பி வந்து ஒவ்வொரு பகுதியிலும் பாதை எடுப்பதற்காக முயன்று கொண்டிருந்தோம். அப்போது கண்டாவளையின் நீரேரியினு}டாக உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அதனு}டாக உள்ளே நுழைந்து ஏறத்தாழ 20 கிலோமீற்றர் நகர்ந்துதான் பரந்தன் பகுதியை அடைந்தோம்.

முதல் நாள் வந்து பகல் ஆனையிறவுப் பகுதியில் தங்கிவிட்டு அடுத்த நாள் பரந்தனை நோக்கி நகர்ந்து வர நேரம் போதாமலிருந்ததால் அன்று பகலும் பரந்தனில் ஓரிடத்தில் மறைந்திருந்து விட்டு மறுநாள் தான் வேலை செய்ய ஆரம்பித்தோம். பரந்தன் சந்தியில் ஒரு முகாமும் கெமிக்கலுக்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது. அதேபோன்று பரந்தன் புளியடிப் பகுதியிலும் ஒரு முகாம் இருந்தது. அங்கு வேவு பார்த்தாலும் பகலில் தங்குவதற்கு இடம் இருக்கவில்லை.

பற்றைகள், புல் வெளிகளெல்லாம் எரிக்கப்பட்டிருந்தன. வாய்க்கால்களின் கரைகளில் இருந்த பற்றைகளினுள்ளேயே தங்கினோம். இவ்வாறு நான்கு நாட்களாக பரந்தன் பகுதியில் எத்தனை முகாம்கள் இருக்கின்றதென்பதை பார்த்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டோம். பின்பு பரந்தன் பகுதியின் பிரதான முகாம்கள் இரண்டையும் வேவு பார்க்குமாறு கூறப்பட்டது. அதற்கேற்ப மீண்டும் உள்நுழைவதற்காக சுட்டதீவு பகுதியால் போக முயற்சி செய்தோம்.

மூன்று நாட்களாக நீருக்குள்ளிருந்து அவதானித்து பாதை எடுத்து உள்நுழைய முயன்றபோது முதலாவதாக கம்பிச் சுருள்களைத் தாண்டி சென்றோம். அடுத்து கற்களால் அரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கற்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் தட்டுப்பட்டால் கற்கள் விழக்கூடியவாறு அமைந்திருந்தது. நாங்கள் அதற்கு மேல் ஏறிச்செல்ல வேண்டியிருந்தது. ஏறும்போது கற்கள் விழுந்தால் எதிரி வெளிச்சம் பாய்ச்சி தேடுவான். இவ்வாறு பலமுறை கற்கள் விழ அவற்றை எடுத்து அடுக்கிவிட்டு ஒருவரை ஒருவர் து}க்கித்தான் அடுத்த பக்கம் வைத்து ஒவ்வொருவராக ஏறிக் கடந்தோம். உள்ளே இறங்கினால் அப்பகுதி சேற்றுப்பகுதி அதனுள் இறங்க கடுமையான துர்நாற்றம் வீசியது. அதையும் சகித்துக்கொண்டு வந்து ஆனையிறவுப் பகுதியில் அன்று பகல் தங்கினோம். அடுத்தநாள் இரவு நேரடியாக பரந்தன் பகுதிக்கு வந்து முகாம்களைப் பார்க்கத் தொடங்கினோம்.


அந்த முகாம்களை சுற்றி இருந்த காவல் அரண்களை அவதானித்தோம். பின் முகாமின் சுற்றளவையும் எடுத்தோம். இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்த போது நான்கு நாட்களுக்குப் பின்பு எமக்கு குடிநீர் உணவுகள் எல்லாம் முடிந்து விட்டன. நீரை நாங்கள் கெமிக்கலுக்கு முன் உள்ள கோயில் கிணற்றில் எடுத்துக் கொள்வோம். ஆனால் உணவு இல்லாததால் அடுத்தநாள் அந்தகட்ட வேலையை முடித்துக்கொண்டு வெளியே சென்று பின் அடுத்த கட்ட வேலைக்காக உள்ளே வந்தோம். உள்நுழைந்து பரந்தனை நோக்கி நடந்து வரும்போது அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. அதனால் இராணுவ காப்பரணுக்கு சிறிது து}ரத்தில் இருந்த ஒரு சிறிய பற்றைக்குள் படுத்துக் கொண்டோம். விடிந்தவுடன் எதிரி தேடுதலை ஆரம்பித்தான்.

பரவலாக தேடுதலை நடத்தத் தொடங்கினான். அப்போது ~நாங்கள் இருந்த பற்றையை நோக்கி ஒரு ஆமி வேகமாக வந்துகொண்டிருந்தான். மிக அண்மையில் வந்து நின்று சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு குனிந்து பற்றைக்குள் நோட்டமிட்டவன் எங்களைக் கண்டு விட்டான். உடனே பதற்றமடைந்து பெரிதாக கத்திக் கொண்டு ஓடத் தொடங்கினான். நாங்கள் உடனே அந்த பற்றையிலிருந்து அடுத்த பக்கமாகப் பாய்ந்து ஓட அந்தப் பகுதியால் வந்த ஆறு இராணுவத்தினரும் எங்களைக் கண்டவுடன் ஓடத் தொடங்கினார்கள்.

பிறகு எங்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். நாங்களும் பதிலுக்கு சுட்டுக் கொண்டே ஓடி சிறிய வெளியைக் கடந்து சென்றபோது அடுத்த பகுதியில் குழுவாக நின்ற இராணுவத்தினர் எங்களை கண்டு விட்டார்கள். அவர்கள் எங்களையும் இராணுவம் என நினைத்து கிட்டே வருமாறு கையசைத்தனர். நாங்கள் இந்தப் பக்கமாக வருமாறு சைகை செய்துகொண்டு ஓடி தொடர் காட்டுப் பகுதியொன்றினுள் சென்று நடக்கத் தொடங்கினோம். அப்போது எங்களது தண்ணீர்க் கான்களும் விடுபட்டு விட்டன. நீர்த்தாகம் ஒருபுறமிருக்க கால்களிலிருந்த செருப்பும் விடுபட்டதால் முட்கள் குத்தியதோடு கடுமையான வெய்யில் காலமாகையால் கால்களில் கொப்புளங்களும் ஏற்பட்டு விட்டன.

இதற்கிடையில் எங்களுக்கு முதல் உள்நுழைந்த ஒரு அணியும் எதிரியின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் வெளியே சென்று விட்டனர். இரண்டு பேர் உள்ளே நிற்பதாக முன்னரே அறிந்திருந்தோம். அன்று நாங்கள் வெளியே தொடர்பு கொண்டபோது உள்ளே நின்ற அந்த இருவரிலும் ஒருவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதையும் மற்றவர் தனித்து நிற்பதையும் அறிந்தோம். அவரை எங்களோடு இணைக்குமாறும் வெளியிலிருந்து கட்டளை கிடைத்தது. அவரை எங்கு சந்திப்பதென்ற தகவலும் தரப்பட்டது. அதன்படி அங்கு சென்று பதுங்கியிருந்தோம். அப்போது எமக்கு அருகால் மூன்று இராணுவத்தினர் வந்து நின்று சுற்றிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

பிறகு சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து தனது தோல்ப்பையை கழற்றி வைத்து விட்டு கீழே அமர்ந்தார். நாங்கள் அவரை அவதானித்தபோது அவர்தான் நாங்கள் தேடிவந்த போராளி என அடையாளம் கண்டுகொண்டு அவரையும் எங்களோடு இணைத்துக்கொண்டோம். அவரும் குடிநீரோ உணவோ இல்லாத நிலையில் சோர்வடைந் திருந்ததோடு உப்பு நீரை குடித்ததால் வயிற்றோட்டத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை எங்களோடு வந்த ஒருவருக்கும் வயிற்றோட்டம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் வேலையை செய்ய முடியாமல் திரும்பி வெளியே வந்து விட்டோம். இதற்குப்பிறகு அடுத்தடுத்த சில நகர்வுகளை மேற்கொண்டுதான் பரந்தன் பகுதியின் முகாம்களின் தரவுகளை எடுத்து முடித்தோம். இவ்வாறு விடுதலைப் புலிகளின் வேவு வீரர்கள் தம்மை வருத்தி பல இரவுகள் கண்விழித்து வரைந்தெடுத்த முழுமையான தரவுகள் அடங்கிய வரைபடங்களை அடியொற்றி தாக்குதல் அணிகள் நகரத் தொடங்கின.

16 கிலோ மீற்றர் சுற்றளவையும் 20 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்ட இம் முகாமில் நிலை கொண்டிருந்த சண்டை அனுபவம் மிக்க 4 பற்றாலியன் துருப்புக்களை அழித்தொழித்து நகரைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னரங்கநிலைகளை நோக்கி அணிகள் நகர்கின்றன. நகர்ந்து குறித்த நேரத்தில் நிலைகளை அடைந்த அணிகள் அடுத்த கட்டளைக்காக காத்திருக்கின்றன.

Print this item