Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 117 online users.
» 0 Member(s) | 115 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,044
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  நாட்டு நடப்பு
Posted by: kurukaalapoovan - 10-21-2005, 02:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நாட்டு நடப்பு
<i>நன்றி நிதர்சனம் இணையத்தளம்</i>

வணக்கம் பிள்ளையள்! தயவு செய்து மற்றம்படியை விட இண்டைக்குச் சொல்லிறதை கொஞ்சம் கூடுதல் ஞாபகசக்தியோட உள்வாங்கிக் கொள்ளுங்கோ! ஏனெண்டால் நான் கிழவன், நாளைக்கே செத்துப்போனாலும் எங்கட இனம் பட்ட வேதனை சந்ததி சந்ததியாய் மறக்கப்படாமல் வைச்சிருக்கப்படோணும். கொஞ்ச நாளைக்கு முன்னால விடுவிக்கப்பட்ட எங்கட பிரதேசத்துக்குள்ளை 3 சிறிலங்காப் பொலிஸ்காரர் அனுமதியில்லாமல் உள்நுழைஞ்ச நேரம் பிடிபட்டிருக்கினம். முன்னுக்குப்பின் முரணாய் அவையள் சொல்லிற எல்லாக் காரணமும் ஒப்பந்தத்துக்கு முரணானவையாகவே இருக்கிது. தங்கட கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ளை புலியள் அனுமதி எடுக்கோணும் எண்டு அவையள் கதைக்கிற அதே சட்டத்தைத் தான் எங்கட காவல்துறையும் கதைக்கிது. ஆனாலும், கண்காணிப்புக்குழுவில இருக்கிற ஒரு அம்மணி இது யுத்தநிறுத்த மோதல் எண்டு குதிக்கிறா. அதேன் பாருங்கோ, சிங்களவர் தான் மனுசர், நாங்களெல்லாரும் வேறஏதோ ஜந்துகளே? பிந்துனுவௌ குற்றவாளியளை சாட்சியில்லை எண்டு விடுவிக்கிறது, சுனாமியால உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டு கூடாரங்களில வேதனை வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சனத்துக்கு உதவியள் கிடைக்கிறதை முடக்கிறது. அதேநேரம் 80 மில்லியன் நிவாரண நிதியைச் சுருட்டின மகிந்த ராஜபக்ச மீதான விசாரணை தொடர்ந்து நடக்கவிடாமல் குற்றவாளிக்குப் பகிரங்கப்பாதுகாப்பு வழங்கிறது எண்டு எதுக்கும் கூசாத உச்ச (அ)நீதி மன்றம் இயங்கிற சிறிலங்கா மாதிரியில்லை எங்கட தமிழீழம்.

அவையள் சொல்லிற மாதிரி குழந்தையளோட முறைகேடான நடத்தையில ஈடுபட்ட ஒருத்தரைத் தேடித்தான் வந்தவையெண்டால், எங்கட காவல்துறைக்கு அறிவிச்சுப்போட்டு புளியங்குளத்திலோ, உயிலங்குளத்திலோ ராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்தில இவையள் காத்திருந்தால் எங்கட காவல்துறை அந்த ஸ்மித்தை பிடிச்சுக்கொண்டு போய்க்குடுத்திருக்கும். சிவில்சார் சட்ட மீறல்கள், அதிலையும் குழந்தைப்பிள்ளையள் விசயத்தில பாதிக்கப்படிறது எந்த இனமெண்டாலும், பேதமில்லாமல் செயற்படிற கட்டமைப்பைத்தான் தலைவர் இஞ்சை உருவாக்கி வைச்சிருக்கிறார்.

அப்படி இருக்க ஸ்மித் கொழும்பில சரணடைஞ்சு, 2-3 நாளிலையே சட்டபூர்வமான பாலியலுக்கான வயசை 13ஆக மாற்றியிருக்கினம். நான் 14 வயசில கூட புத்தகத்துக்குள்ளை மயிலிறகு வைச்சுப்போட்டு, குட்டி போடுமெண்டு பார்த்துக் கொண்டிருந்த வெங்காயமாய்த்தான் இருந்தனான். 1995இல சந்திரிகா ஆட்சிக்கு வந்ததில இருந்து இதுநாள் வரைக்கும் செய்த ஒரேயொரு நல்ல காரியம் உந்த வயசெல்லையை 16 ஆக உயர்த்தினதுதான்.

இப்ப போறநேரம் அந்த ஒரேயொரு நல்ல பெயரையும் வாபஸ் பெறுகிற மாதிரி 13 ஆகக் குறைச்சாச்சிது. இப்பிடியொரு சட்டமாற்றம் வரப்போறதை அறிஞ்சுதான் ஓடியொளிச்ச பிரிட்டிஷ் ஸ்மித் சரணடைஞ்சிருக்கிறான் போல!

ஏனெண்டால் இனிமேல் வழக்கெல்லாம் குழந்தைகள் - துஸ்பிரயோகம் எண்டில்லாமல் ~வன்புணர்ச்சி| எண்டளவில தான் பார்க்கப்படும். ஒரு 10 வருசத்துக்கு முன்னால சுவிடன் தலைநகரம் ஸ்ரொக்ஹொல்ம் இல நடந்த சர்வதேச மாநாடு ஒண்டில சின்னனுகளில வக்கிரம் கொள்ளிறதுகளுக்கு எதிராக ஏக மனதாய் கன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதுக்குக் கொஞ்சக் காலம் பிறகு தெற்குக் கடற்கரையில வெள்ளைக் கிழடு ஒண்டு துர்நடத்தையில அகப்பட்டு 20 வருச சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

ஆனாலும், மேலைத்தேய அழுத்தங்களால 2வருசத்தில ஆள் விடுதலை செய்யப்பட்டது. உங்களுக்குத் தெரியும்தானே, தாய்லாந்துக்கு அடுத்த இடத்தில சிறிலங்கா சிறுவர் விபச்சாரத்தில சர்வதேச புகழ் எண்டு. பற்றாக்குறைக்கு பாவங்கள் 6 லட்சம் சிங்களக்குடும்பப்பெண்கள் மத்திய கிழக்கில பணிப்பெண் வேலையளுக்கெண்டு போய்நிக்கிறதால அதுகளின்ரை சின்னப்பிள்ளையளும் மோசமான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங்குடுக்க வேண்டியிருக்கிதாம்.

உந்த வெளிநாடான வெளிநாடுகளிலையே 16 ஆக இருக்கிற வயசெல்லையை 13 ஆகக்குறைக்கிறது தங்கட வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ளிறதுக்காக சிறிலங்காவுக்கு வாற வெளிநாட்டு உல்லாசியளுக்கு வழங்கப்படிற சட்டரீதியான பாதுகாப்பாகத்தான் இருக்கப்போகுது.

எங்கட விடுதலைப்போராட்டத்தை நசுக்கப்பார்க்கிற பேரினவாதம் யுத்தத்துக்கு செலவளிக்கிறதுக்காக எப்படியெல்லாம் கேவலங்கெட்ட வழியில பணம் சம்பாதிக்க விழையிதெண்டு பார்த்தனீங்களே! உதுகளை கொஞ்சம் யுனிசெப் காரர் கவனிச்சால் என்னவாம்! ஆனால், எங்களுக்கெண்டு நீதியான தமிழீழச் சட்டம் இருக்கிது.

மற்றது ஐரோப்பியக்கூட்டமைப்புக்கு புதுசாய் தலைமை தாங்கிற பிரித்தானியா புலியளின்ரை வன்முறைகளைத் தொடர்ந்தும் அனுமதிக்கேலாது எண்டு அறிக்கை விட்டிருக்கிதாம். இல்லை நான் கொஞ்சம் விளக்கம் குறைஞ்சனான், சில விசயங்கள் எனக்கு விளங்கேல்லை: எங்கட இனம் சுனாமியில 26 000 சொந்தங்களைப் பலிகொடுத்திட்டு வீடுவாசலுகளை இழந்து 10 மாதமாக அநாதரவாய் இருக்கிற நிலையில, அவையளுக்குக் கிடைக்க இருந்த உதவியளை கதிர்காமரும், உச்ச (அ)நீதிமன்றமும் சேர்ந்து முடக்கினதுக்கு ஒண்டுமே சொல்லாமல் இருந்தவை, இருந்தாப்போல இப்ப ஏனாம் துள்ளியடிக்கினம். ~~உச்சநீதிமன்றம் பொதுக்கட்டமைப்புக்கு விதிச்ச தடை வருத்தம் தருவதாகும்||, எண்டு கிளின்ரன் சொல்லியிருக்கிறார். சுனாமி, கட்ரீனா, றீற்றா போன்ற இயற்கை அனர்த்தங்கள் வருத்தம் தரலாம். ஆனால், ஊழல் விசாரணையளில இருந்து மகிந்தவுக்கு விடுதலை அளிச்ச உச்ச (அ)நீதிமன்றம் நிவாரணங்களை முடக்கினது திட்டமிட்ட நயவஞ்சகம் பாருங்கோ!

போயும் போயும் நேற்று வைச்ச புத்தர்சிலையை எடுக்காமல் ஏமாத்திற சிங்களப்பேரினவாதத்தின்ரை போக்குகளை விமர்சிக்க முன்வராத தரப்புகளுக்கு, அறிக்கை விடுகிற தகுதி ஏதாவது இருக்கோவெண்டு கேட்கிறன். நாகர் கோவிலில எங்கட சின்னனுகளை சிங்களவன் கொல்லிறதை கண்டும்காணாமல் விட்ட சர்வதேசங்களுக்கு இண்டைக்கு மட்டும் எங்கையிருந்து உந்த அக்கறை வந்தது? இடப்பெயர்வுக்கிள்ளை எங்கட இனம் பட்ட இன்னல்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தையாவது தராத ஐ.நா உட்பட உந்த நாடுகளெல்லாம் நீதி, நியாயம் பற்றிக் கதைக்கிற உரிமை உள்ளவையோ?

அவர் ரணில் வேற ஜேவிபியையும் பேச்சுவார்த்தையில கலந்துகொள்ளச் செய்வாராம். தான் நல்ல பிள்ளை பத்திக்கொண்டு ஜேவிபியைச் சாட்டி இழுத்தடிக்கிறதுக்காக! சீனாவில 4 பேர் கூடிநிண்டு கதைச்சாலேயே ஜனநாயகத்துக்கான போராட்டம் எண்டு தங்கட செய்தியில போட்டு, அங்கை அரசியல் மாற்றம் வேணுமெண்டு கூச்சல் போடிற உவையளுக்கு எங்கட மக்கள் எழுச்சிகள் கண்ணுக்குள்ளை குத்தேலையோ!

ஈராக்கில எந்த அதிகாரப்பங்கீடு அவசியம் எண்டு உவையள் வலியுறுத்தினமோ அதே அதிகாரப் பங்கீட்டுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எங்கட விசயத்தில எடுக்கப்பார்க்கினம்.

பட்டப்பகலில பிந்துனவௌவில 12 வயசுப்பொடியன் தலை நசிச்சுக் கொல்லப்பட்டதுக்கு சாட்சியுமில்லை, குற்றவாளியும் இல்லை. ஆனால், கதிர்காமரை மட்டும் புலியள் சுட்டவை எண்டு ஜேம்ஸ் பெண்டு 008 சந்திரிகா சொல்லிறதை நம்பிடுவினம். ஒண்டுமில்லை பாருங்கோ! முதுகெலும்பு உள்ள மூன்றாமுலக நாட்டை பணக்கார நாடுகளுக்கு பெரிசாய் பிடிக்கிறேல்லை.

எங்களிட்டை பலமான படையும், நாங்கள் எல்லாரும் பெருமை கொள்ளத்தக்க நிகரற்ற தலைவரும் இருக்கேக்கிளை தயங்காமல் எல்லாரும் சேர்ந்து உழைச்சால் பொருளாதார வல்லமை படைச்ச நாடாக தமிழீழமும் ஆகலாமோ இல்லையோ!

அதிலையும் வன்முறையைப் பற்றி பிரிட்டன் விமர்சிக்கிறது எனக்கு வேதனையிலயும் சிரிப்பாயிருக்கிது பாருங்கோ! ஆசிய, ஆபிரிக்க நாடுகளெண்டு யுத்தம் நிலவிற 20இற்கும் குறையாத நாடுகளின்ரை இண்டைய நிலமைக்கு ~~சூரியன் அஸ்தமிக்காத புகழ்|| பிரித்தானிய சாம்ராச்சியம் தானே காரணம்! 2000 வருசத்துக்குப் பிறகு பைபிளில பழைய வேதாகமத்தில குறிப்பிடப்பட்டிருக்கிறதை அடிப்படையாக வைச்சு யூதர்களுக்கு தனிநாட்டுரிமை இருக்கிதெண்டு சொன்ன நாடுதானே பிரிட்டன்.

இல்லைப்பாருங்கோ 20ஆம் நு}ற்றாண்டின்ரை ஆரம்பகாலப் பகுதியில யூத மக்கள் தங்களுக்கு எதிராய் ஐரோப்பிய நாடுகளில உருவான எதிர்ப்புணர்வைத் தொடர்ந்து பழைய வேதாகமத்தில குறிப்பிட்டதை வைச்சு பலஸ்தீனத்தில அமைஞ்சிருக்கிற இஸ்ரேலுக்கு குடிபெயரத் தொடங்கிச்சினம்.

கொஞ்சக்காலத்தில ஏற்கெனவே அங்கை வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில பிரச்சினையள் முத்திக்கொண்டு வந்திட்டிது. அந்த நேரம் பிரித்தானிய சாம்ராச்சியத்தின்ரை நிர்வாகத்துக்கு உட்பட்டிருந்த பலஸ்தீனத்தை பிரிட்டன் உடன ஐ.நாவோட (ஐ.நா உருவானது 1945இல்) சேர்ந்து 1948 இல இரண்டாய்ப் பிரிச்சு இஸ்ரேலை அமைச்சுக் கொடுத்திது. 2000 வருசக் கதையை வைச்சு அங்கை அப்பிடி செய்த பிரிட்டன் 238 வருசத்துக்கு முன்னால எங்களுக்கு இருந்ததையும் கெடுத்து குழப்பம் உருவாகிறதுக்கு காரணமாய் அமைஞ்சது மட்டுமில்லாமல், தொடர்ந்தும் பிழையளை விடவெல்லே பார்க்கிது. எங்கட தாயக உரிமைக்கு ஒண்டில்லை ஓராயிரம் ஆதாரங்கள் எங்களிட்டை இருக்கிது.

எங்கட தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒரு நிபந்தனையும் வைக்கேல்லை. அரசாங்கம் தான் தங்கட கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில வைக்கோணுமெண்டு நிபந்தனை விதிச்சிருக்கிது. இல்லை தங்கட வெளிநாட்டமைச்சருக்கே பாதுகாப்பு வழங்கேலாத அரசாங்கத்தை நம்பி, என்னண்டு நாங்கள் எங்கட ஆட்களை அனுப்பிறது! ஆ... சொல்லுங்கோ பார்ப்பம். பக்கத்தில இருக்கிற பாரத பூமியிட்டையும் ஒரு சந்தேகம் கேட்கோணும். தங்களுக்கெதிராய் செயற்படிற ஆயுதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறதை நிறுத்தி, இதய சுத்தியோட பேச்சுவார்ததையளிலை கலந்துகொள்ளாததைக் கண்டிக்கிறவைக்கு, இஞ்சை எங்கட எதிர்பார்ப்பும் அதுதான் எண்டிறதை விளங்கிக்கொள்ளேலாமல் இருக்கோ?

என்ரை குஞ்சுகள் ஒண்டு நான் உங்களுக்கு சொல்லிறன்: அடுத்தவை தந்துதான் சுதந்திரத்தை அனுபவிக்கோணும் எண்ட தலைவிதி எங்களுக்கில்லை. தமிழினம் உலகத்தில இருக்கிறதும், இல்லாமல் போறதும தமிழீழத்தில இருக்கிற எங்கட கையளில தானிருக்கிது. குழந்தையளை அடகு வைச்சு யுத்தம் நடக்கிற பேரினவாத அரசை எதிர்க்கிறதுக்கு குஞ்சு, குருமன் எல்லாம் சேர்ந்து துணிஞ்செழுந்தால் எந்தப் பகையும் எரியும் சிறு து}சாய்! நெல்சன் மண்டேலாவையே பயங்கரவாதி எண்டு சொல்லிக்கொண்டிருந்தவைதான் இண்டைக்கு தங்களை சர்வதேச சனநாயகங்களாக விளம்பரப்படுத்திற ஆக்கள் எல்லாரும்!

இல்லைப் பிள்ளையள்! நாங்கள் வாழிறது அறிவியல் யுகத்தில. ஆங்காங்கை ராணுவத்தை நோக்கி வெடிக்காத கிரனைட்டுகளை வீசிற சம்பவங்களை புலியள் மேல பழி சுமத்தி, தொடரும் வன்முறை பற்றிக் கதைக்கிற தரப்புகளைப் பார்த்து சின்னதொரு கேள்வி: புலியள் என்ன சில்வர் சட்டி வாங்கினால் இனாமாய் குடுக்கிற தீபாவளி சீஸன் கிரனைட்டுகளை வைச்சே போராடினம்!

ஆனானப்பட்ட ஆனையிறவை வென்றெடுத்த எங்கட பிள்ளையள் லேசில எறியாதுகள், அப்படி எறிஞ்சாலும் அது எறிஞ்ச மாதிரித்தான் இருக்கும். ராணுவப்புலனாய்வுத்துறை சும்மா சீண்டிறதுக்காகத்தான் உப்பிடியெல்லாம் செய்யிது எண்டது சின்னப்பிள்ளைக்குக் கூட விளங்கும்.

ஐரோப்பியக்கூட்டமைப்பின்ரை அறிக்கையால உசாரடைஞ்சிருக்கிற சிங்களப்பேரினவாதம் எடுக்கப்போகிற மோசமான முடிவுகளுக்கும், அதின்ரை கடந்தகாலம் உட்பட சகல மனிதப்படுகொலையளுக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பு பொறுப்பு ஏற்கத்தயாரா எண்டு கேட்கிறன்.

போர்த்துக்கேயருக்கு சங்கிலியன் பயங்கரவாதி, ஆங்கிலேயருக்கு பண்டார வன்னியன் பயங்கரவாதி எண்டால் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களுமே பயங்கரவாதியளாவே இருந்திட்டுப்போறம்.

செல்லங்கள்! எங்கட நாட்டுக்கான விடுதலையை வென்றெடுக்கிறதுக்காக ஒரு பலமான படை, உறுதியான மக்கள் வெள்ளம் இரண்டையும் வழிநடத்த சிறந்ததொரு தலைவர் கிடைச்சிருக்கேக்கிளை நாங்கள் விடுதலைக்காக எவரிட்டையும் கையேந்தி நிற்கத்தேவையில்லை! கடற்புலித்துணைப்படைக்குப் போன சனங்கள் ~~ நீங்கள் பயிற்சியை மட்டும் தாங்கோ! ஆயுதங்களை நாங்கள் ஆமியிட்டை இருந்து பறிச்செடுத்து அடிக்கிறம்|| எண்டு இயக்கத்திட்டை கேட்டிச்சினமாம். அந்த ஓர்மம் ஒண்டே போதும் பாருங்கோ, எதையும் நாங்கள் எதிர்கொள்ளலாம். வாறமுறை சந்திப்பம்!

நன்றி: வெள்ளிநாதம் (14-20 -10 - 2005)- (ஈழநாதத்தின் வாரவெளியீடு)
கணனித் தட்டச்சு: திருமகள் (ரஷ்யா)
http://www.nitharsanam.com/?art=12442

Print this item

  பிரஸெல்ஸ் பேரணிக்குத் தடை?கோருகிறார் ஆனந்தசங்கரி
Posted by: வினித் - 10-21-2005, 01:10 PM - Forum: புலம் - Replies (3)

<b><span style='font-size:30pt;line-height:100%'>பிரஸெல்ஸ் பேரணிக்குத் தடை விதிக்க கோருகிறார் ஆனந்தசங்கரி!</b> </span>
[வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2005, 18:10 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<b>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையை நீக்கக் கோரி பிரஸெல்சில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெற உள்ள பேரணிக்கு தடை விதிக்க வி.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துத் தலைவர்களுக்கும் எழுத்து மூலம் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள வேண்டுகோள்:

இலங்கையின் வடகு கிழக்கில் படுகொலைகள் தொடர்வதால் எதிர்வரும் 24 ஆம் திகதி பிரஸெல்ஸில் நடைபெறவுள்ள விடுதலைப்புலி ஆதரவு பேரணிக்கு இடமளிக்க வேண்டாம்.

ஒவ்வொரு நாளும் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குறைந்த பட்சம் ஒருவரேனும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

கடத்தல், சித்திரவதை செய்தல், கைது செய்தல், படுகொலை செய்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபடுகின்றனர்.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான தடையை நீக்கிக் கொள்ளும் நோக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி பிரஸெல்ஸில் பேரணியொன்றை நடத்துமாறு தங்களுடன் தொடர்புடைய அமைப்புகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் சிறுவர் கடத்தல்களை இவர்கள் ஒருபோதும் கண்டிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
</b>

www.puthinam.com

Print this item

  வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள்
Posted by: aathipan - 10-21-2005, 12:44 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள்



இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இன்று டென்னிஸ் வீராங்கனை சான்யா மிர்ஸhவும், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனும் திகழ்வதைப் பார்க்கின்றேhம். வெற்றியின் உச்சிக்கு அவர்கள் இன்னும் போகவில்லை. ஆனாலும், அவர்கள் நெம்பர் ஒன் இடத்திற்கு நிச்சயம் வருவார்கள் என்றும், மிகப் பெரிய அளவில் புகழ் பெறுவார்கள் என்றும் பத்திரிகைகளும், தொலைக்காட்சி
களும், வர்த்தக நிறுவனங்களும் இப்போதே கணித்து விட்டன. இதனை எப்படி கணிக்க முடிந்தது?

இதற்கான விடை மிகவும் எளிதானது. ஏனென் றhல், வெற்றிப் பெறப் போகின்ற எவரிடமும், தனித்துவமான அடையாளங்கள் இருக்கும். இந்த அடையாளங்கள், அவர்களிடம் தெரிவதற்கு முன்பாக அவர்கள், இந்த வெற்றிக்காக அவர்கள் உழைத்த உழைப்பு, திட்டமிடல் இவற்றை எல்லாம் அளவிட்டுக் கூறிட முடியாது. தனக்கு என்ன வேண்டும் என்று மனத் தௌpவு முதல் தேவை. தனக்கு என்ன வேண்டும் என்று தெரியாதவர் அதை அடைவது கடினம். முடியாது...
வாழ்க்கையின் முதல் பாதியை நாம் எப்படி எவ்வளவு சீக்கிரம் கடந்திருக்கிறேhம் என்பதில்தான் இரண்டாவது பகுதியின் வெற்றியே அமைந்திருக் கிறது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி, டாக்டர் ரெட்டி லேபோரெட்ரீஸ், நிறுவனர் ஆஞ்சி ரெட்டி போன்றவர்கள் எல்லாம் தங்களின் சாதனைகளை ஒருநாள் ஒரு பொழுதில் நிகழ்த்தி விடவில்லை.

வெற்றி பெற்று விருது பெறும் அவர்களின் சிரித்த முகங்களுக்குப் பின்னே எவ்வளவு சிரமங்கள் இருந்தன என்பதை உலகம் அறிந்திருக்க வாய்ப் பில்லை. வெற்றிகரமான வாழ்க்கை என்பதும் ஒரு திரைப்படம் போன்றதுதான். துவக்கத்திலிருந்தே கதை விறு விறுப்பாக செல்ல வேண்டும். ஒரு திரைப்படத்திற்கு துவக்கம், இடைவேளை, சுபம் என்று இருப்பதுபோல், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இத்தனையும் நிச்சயம் இருந்தே தீரும்.

ஏனென்றhல் வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. திட்டமிட்ட உழைப்பு, சரியான உழைப்பு, உரிய சந்தர்ப்பம் இவைதான் ஒருவரது வெற்றிக்கு காரணமாகின்றன. பல சமயங்களில் வாய்ப்புகள் கையருகிலேயே இருந்திருக்கும் அடுத்தவர் செய்த பிறகுதான் அடடா... இதை நாமே செய்திருக்கலாமே என்று தோன்றும். நீங்கள் கலந்துகொள்ளப் போகும் போட்டியைக் குறித்த அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாம்தான் தயாராக இருக்கவேண்டும். ஜhதகத்தில் 3 கிரகங்களாவது ஆட்சி உச்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள்.
இதனையொட்டிய ஒரு கருத்தினை தான் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சொன்னார்கள். அதாவது இந்திய ஆட்சித் துறையின் எல்லா என்ஜpன்களும் சரியான வேகத்தில் இப்போது செயலாற்றுகின்றன என்று கூறினார்.

ஒரு காரின் என்ஜpன், ஆக்ஸிலேட்டர், பிரேக், கிளெட்ச், ஸ்டியரிங், கியர் என்று எல்லாம் சிறந்த வேலை செய்வதாக இருக்க வேண்டும். வெற்றி என்பது தோல்விகளே இல்லாதது அல்ல.

வெற்றி என்பது இறுதி இலக்கை அடைவது என்கிறhர் எட்வின் பிலிஸ். வெற்றி என்பது ஒவ் வொரு போராட்டத்திலும் வெல்வதென்பதல்ல. இறுதிப் போரில் வெல்வதாகும். ஆறுகள் தாங்கள் ஓடும் பாதையில் இங்கும், அங்கும் தடைகள் இருந்தால் சுற்றிப்போகும். ஆனால் செல்லும் திசையை அடைய வேண்டிய இலக்கைத் தவற விடாது. நாமும் வெற்றி பெறுவதில் ஆற்றினைப் போலத்தான் செயல்படவேண்டும்.

தன்னம்பிக்கை இருப்பவனை யாராலும் தோற்கடிக்கவே முடியாது. இரு கைகளைக் காட்டிலும் நம்ப வேண்டியது தன்னம்பிக்கை.
வெற்றிக்கும், தோல்விக்கும் பல சமயங்களில் இடைவெளி மிகக் குறைவு. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்கும் என்ன வித்தியாசம் பல நேரங்களில் ஒரு விநாடிக்கும் குறைவு. இவ்வளவு செய்தவர் இன்னும் கொஞ்சம், கொஞ்சம் செய்திருந்தால் அவர்தானே முதல் அவருக்குத்தானே தங்கம்.
உண்மை அதுதான். இறங்கியாயிற்று. வெற்றி பெற்று விட வேண்டும். எதையும் விட்டுவிடக் கூடாது.

உங்களிடம் உள்ளது முழுவதையும் பயன்படுத் துங்கள். வெற்றி உங்களுக்குத்தான். உதாரணமாக 10 கிண்ணங்களை வரிசையாக சுற்றி விடவேண்டும். பத்தும் ஒரே சமயத்தில் சுற்ற வேண்டும். ஐந்தாவது கிண்ணத்தை சுழற்றும் போது முதலாவது கிண்ணம் தனது சுழற்சியை நிறுத்திவிடக்கூடாது.

இந்த பத்து கிண்ணங்கள்.

1. திறமை, 2.ஆரோக்கியம், 3.தொழில் அறிவு, 4. பண பலம், 5.சுயகட்;டுப்பாடு, 6. நட்பு வட்டம், 7. கவனம், 8. மாறுதலுக்கு தயாரான மனம்,9. இட மறிதல், 10. சமயோஜpத புத்தி. இந்த பத்து கிண்ணங்களும் ஒரே சீராக சுற்றி வரும் என்றhல் எவரும் நிச்சயம் வெற்றி வீரராகலாம்.

-எஸ். கதிரேசன்.

Print this item

  நந்தவனத்தில் ஒரு நொந்தகிளி
Posted by: vikadakavi - 10-21-2005, 11:22 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

அழகழகாய்..
சிரிக்கும் ..
சிங்காரிக்கும்..
சிறகடிக்கும்..
சில்மிஷம் செய்யும்..
ஆயிரம் கிளிகள் - இந்த நந்தவனத்தில்
சிரிப்பிழந்து..
சிங்காரம் கலைந்து..
சிறகு ஒடிந்த
கிளியே உன்னை நான்
பார்த்தேன்..
எனக்குத் தெரியும் நீயும்
இதைப்படிக்கலாம்..
உன் அனாதரவுக்கு..
என் அரவணைப்பு..
ஒரு அண்ணணாய்.....
என் சோடிக்கிளியை..உன்
துணைக்கிளியாக்குகிறேன்..
சிலகாலந்தான்
இந்த வாழ்க்கை..
சிரி..சிறகடி.. சந்தோஷமாயிரு.

Print this item

  யாருக்காக இது யாருக்காக
Posted by: ravi_dk - 10-21-2005, 08:09 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<b>இன்றைய பாடல் அனுரா பண்டார நாயக்கா.</b>


<img src='http://www.tamilnet.dk/net/anura.jpg' border='0' alt='user posted image'>
( உரை... )
நாட்டுக்காக என் அக்கா கண்ணைக் கொடுத்தாள்,
நான் மண்ணைக் கொடுத்தேன்,
என் தாய் பொன்னான குடியுரிமையைக் கொடுத்தாள்,
என் தந்தை கண்ணான உயிரையே கொடுத்தார்.


<b>பாடல் ஆரம்பம்.</b>

யாருக்காக இது யாருக்காக ( உற். உற்.... இருமல் )
ஜனாதிபதி பதவியே
யாருக்காக ?

மரணம் என்னும் து}து வந்தது
அது பதவி என்னும் வடிவில் வந்தது !
சொர்க்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது.

மகிந்தவே போ போ !
ரணிலே வா ! வா !

தேர்தல் என்னும் நரகம் வந்தது
எங்கள் குடும்ப ஆட்சி காற்றில் போனது
இனிமேல் நாங்கள் என்ன செய்வது
ஆட்சி கவிண்ட பிறகு ஆரைப் பிடிப்பது

யாருக்காக இது யாருக்காக ( உற். உற்.... இருமல் )
ஜனாதிபதி பதவியே
யாருக்காக ?

எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று !
பாடுங்கள் என் கல்லறையில் இவன் ஒரு பைத்தியக்காரனென்று

மகிந்தவே போ போ !
ரணிலே வா ! வா ! ( உற். உற்.... இருமல் )

www.alaikal.com

Print this item

  தேர்தல் பாதுகாப்பிற்காக 55 காவல்துறை மோப்ப நாய்கள் இறக்குமதி
Posted by: வியாசன் - 10-21-2005, 07:27 AM - Forum: நகைச்சுவை - Replies (1)

தேர்தல் பாதுகாப்பிற்காக 55 காவல்துறை மோப்ப நாய்கள் இறக்குமதி!


எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தல் பாதுகாப்பிற்காக 55 மோப்ப நாய்களை ஜேர்மனியில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது. இந்த தகவலை கண்டி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி லால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறியும் பயிற்சி பெற்ற 55 நாய்களை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம் இந்த நாய்கள் பெல்ஜீயம், மலோனை போன்ற இனங்களை சேர்ந்தவை.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் பரப்புரை கூட்டங்களை நடாத்தும் இரு வேட்பாளர்களின் அனைத்துக்; கூட்டங்களுக்கும் இந்த நாய்கள் சிறப்பு ஊர்திகள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்த நாய்களுக்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் லால் செனவிரட்ன தெரிவித்தார்.

எங்கடை டண்ணிடம் புலநாய்கள் இருக்கிறது உவைக்கு தெரியாதோ.அவற்றை புலநாயள் எண்டால் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  பதில் தாருங்கள்
Posted by: Eelavan - 10-21-2005, 05:59 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (91)

பதில் தாருங்கள்

அண்மையில் டி.சே எழுதிய கவிதை நண்பர் ஒருவரால் களத்தில் இடப்பட்டதைத் தொடர்ந்து ஆங்காங்கே இடம்பெற்ற சர்சைகளையும் வாதங்களையும் விதண்டாவாதங்களையும் கவனித்தேன்.

அவற்றுக்குப் பதிலளிக்க முயன்றால் ஒவ்வொரு களமும் பூட்டப்படுகிறது.
கெட்ட வார்த்தைகள்,தலித் இலக்கியம் பின்னவீனத்துவம் பற்றி அரைகுறையான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன கள உறுப்பினர்கள் இவற்றைப் பற்றி விவாதிப்பதும் அவற்றைப் பற்றி அறிவதும் முக்கியம் என நினைக்கிறேன்.வெறுமனே களத்தைப் பூட்டிவிடுவதால் சண்டையைத் தவிர்க்க முடியும் ஒழிய அறிவைப் பெற்றுக்கொள்ள முடியாது

இந்தத் தலைப்புகளினை விவாதிப்பதற்கு களத்தின் எந்தப் பகுதி பொருத்தமானது என்று யாராவது சொல்லுங்கள்
இவற்றை விரும்பாதவர்களுக்கு இந்தத் தலைப்புகளின் கீழ் இன்னின்ன கருத்துகள் விவாதிக்கப்படும் என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருப்பதால்.அவற்றைப் படித்து ஆட்சேபணை தெரிவிப்பதில் காலத்தை வீணாக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.


எங்கே ஆரம்பிக்கலாம்

Print this item

  நீங்களும் செய்யலாம் ஆளில்லாத விமானம்.
Posted by: narathar - 10-20-2005, 09:51 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (12)

இந்தத் தலைபுக்குள்ளே இணயத்தில் இருக்கும் சில தொழில் நுட்பத் தகவல்களை இடலாம் என்று இருக்கிறேன்.வர்த்தக ரீதியாக புலத்திலே கடைகளில் விக்கும் பொருட்களைக் கொண்டே எப்படி ஒரு தன்னியக்க விமானத்தை பரீட்ச்சார்த்தமாகச் செய்யலாம் என்பது பற்றிய தகவல்களை இங்கே இட உள்ளேன்.மேலும் முக்கியமான விசயம் இது பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லாது விடின் தயவு செய்து இதை ஏன் வெட்டி ஒட்டிறாய் என்ன எல்லாருக்கும் படம் காட்டிறியோ எண்ட கதை வேண்டாம்.
விருப்பமில்லாட்டி களத்தின் வேற பகுதிக்குள் போய் படம் பார்க்கவும் .எனக்கு இருக்கும் ஒரு நோக்கத்திற்காகவே இதை இங்கே இடுகிறேன்.ஆர்வம் உள்ள வர்களை.தொழில் நுட்பம் படிக்கும் இழஞர்களை இந்தத் துறை நோக்கி நகர்த்துவதுவே என் நோக்கம்.அது எவ்வளவு சுவாரசியமானது என்பதை விட வருங்காலத்தில் எமக்கு மிகவும் அவசியமானது.தொழில் நுட்ப விருத்தியே எமது பலத்தின்,ஆற்றலின் முதுகெலும்பு.

இதில் இடப்படும் சில யோசனைகளை உங்கள் கடைசி வருச ப்ரோஜெக்ட்டுக்கு ஒரு விடயமாகப் பயன் படுத்துவதன் மூலமும் நீங்கள் இதனால் பயன் பெறலாம். முக்கியமாக control sysytems.logic programming,mechanical,aeronautical,avionics,simulation,robotics.etc

Print this item

  கனடா
Posted by: Rasikai - 10-20-2005, 08:54 PM - Forum: புலம் - Replies (28)

<b>கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு.</b>

வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது. கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கனடா கிழக்கில் இருந்து மேற்கே சுமார் 5,380 கிலோ மீட்டர் வரை நீண்டும் வடக்கில் இருந்து தெற்கே சுமார் 4600 கிலோ மீட்டர் அகன்றும் இருக்கிறது.

கனடாவின் விஸ்தீரணம் 9,970,610 சதுர கிலோ மீட்டர்கள் வடக்கே துருவ மாகடல், தெற்கே ஜக்கிய அமெரிக்கா, கிழக்கே அத்லாந்திக் மாகடல், மேற்கே பசுபிக் மாகடலும் ஜக்கிய அமெரிக்க மாநிலமான அலாஸ்காவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2001ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி கனடாவின் சனத்தொகை 31 மில்லியனாக இருந்தது. இந்தத் சனத்தொகையில் 3 சதவீதத்தினர் பூர்வீக குடிகளாவர். இரண்டாவது உலகப் போர் ஆரம்பமாவதற்கு முன் கனடா வந்த குடிவரவாளர்களில் பெரும்பாலனவர்கள் பிரித்தானியா அல்லது கிழக்கு ஜரோப்பாவில் இருந்தே வந்தார்கள். 1945ம் ஆண்டின் பின் தெற்கு ஜரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் குடிவரவாளர்கள் கனடா வர ஆரம்பித்தார்கள்.

<b>பெயர் வந்த விதம்? </b>
கனடா ஒரு இளைய நாடுதான். ஆனால் அது பழமையில் வேர் ஊன்றியுள்ளது. கனடா என்ற பெயர் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பூர்விக குடிகளில் இருந்து பெறப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களில் பலர் கருதுகின்றார்கள். 1535 - 36 காலப் பகுதியில் பிரெஞ்சுக்காரரான ஐக்குயிஸ் கார்டியர் என்பவர் சென்ட் லாறன்ஸ் நதிக்கு வடக்கே இருந்த பிரதேசத்திற்குச் சூட்டிய பெயரே கனடா. அந்தப் பகுதியில் வாழ்ந்த பூர்வ குடிகள் சிலரிடம் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டும்படி காட்டியர் கேட்டுள்ளார். அவர்களுடைய மொழியில் கிராமம் என்பதை "kanata" என்று அழைப்பது வழக்கம். தொலைவில் இருந்த தங்கள் கிராமத்தை அவர்கள் சுட்டிக்காட்டி அதுதான் தங்கள் கனடா என்று கூறியதை தவறாகப் புரிந்து கொண்ட கார்டியர் அந்தப் பிரதேசம் முழுவதற்கும் கனடா என்று பெயரிட்டுவிட்டார். ஜரோப்பிய தேச பட வரைஞர்கள் "kanata" என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டை "Canada" என குறிப்பிட ஆரம்பித்தார்கள்.

எனினும் கனடா என்ற பெயர் எப்படி வந்தது என்பது இன்னும் கூட சர்ச்சைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஆய்வாளர்கள் சிலர் பொருள் தேடும் சாக்கில் புதிய இடங்களைத் தேடித்திருந்த ஜரோப்பியர் இந்த நாட்டிற்கு வைத்த பெயரே கனடா என்கிறார்கள். கனடாவில் பொன்னும் மணியும் குவிந்து கிடக்கின்றன என்ற நம்பிக்கையில் வந்த ஸ்பானியர் அல்லது போர்த்துக்கேயர் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதுவும் இங்கு கிடைக்காததால் நாட்டை அகா கனடா (aca Canata) அல்லது க"னடா (Ca"nada) என்று திட்டித் தீர்த்தார்கள். அகா கனடா அல்லது க"னடா என்பதற்கு இங்கு ஒரு மண்ணும் கிடையாது என்று ஸ்பானிய அல்லது போர்த்துக்கேய மொழியில் அர்த்தப்படுவதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள் கனடா என்ற பெயர் சமஷ்கிருதம் அல்லது இத்தாலிய மொழியில் இருந்து வந்தது என்கிறார்கள். ஆக கனடா என்று ஏன் இந்த நாடு அழைக்கப்படுகின்றது என்பதற்கு சரியான விடை இன்னும் கண்டறியப்படவில்லை.

<b>இரண்டு மில்லியன் நன்னீர் ஏரிகள் </b>
கனடாவின் நிலவமைப்பை பல பகுதிகளாகப் பிரிக்கலாம். ஹட்சன் குடாவை மையமாகக் கொண்ட வடிகால் பகுதி, கனடியன் ஷீல்ட் என்று அழைக்கப்படும் பகுதி, உள்நாட்டு சமவெளி, பெரிய ஏரிகள், சென்ட் லாறன்ஸ் தாழ்நிலங்கள், மலைத் தொடர்கள் என்று கனடாவின் இயற்கை அமைப்பு பிரிக்கப்படுகின்றது. ஹட்சன் விரிகுடாவைச் சுற்றியிருக்கும் மிகப் பெரிய பாறை அமைப்பு மார்புக் கவசம் போன்று இருப்பதாலேயே அது கனடியன் ஷீல்ட் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவின் சுமார் 8 சத வீதமான நிலமே விவசாயம் செய்வதற்கும் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகின்றது. இருந்த போதிலும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலத்தின் விஸ்தீரணம் 738,000 சதுர கிலோ மீட்டர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ட் லாறன்ஸ் நதிக்கும் பெரிய ஏரிகளுக்கும் இடையில் சிறந்த விவசாய பூமி அமைந்துள்ளது. கனடியன் ஷீல்டுக்கும் ரோக்கி மலைகளுக்கும் இடையில் தட்டையான பரந்த வெளி உண்டு. இது பிரேயரீஸ் என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் முதல்தரமான கோதுமை விளைகின்றது. கோதுமை இங்கு பெருமளவில் உற்பத்தியாவதால் கனடா கோதுமை உற்பத்தியில் உலக நாடுகளிடையே முன்னணியில் நிற்கின்றது.

மரங்கள் குறைவான பரந்த புல்வெளிக்கும் பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையில் பிரசித்தி பெற்ற மலைகள் இருக்கின்றன. இவையே ரோக்கி (rocky) மலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மலைகளே கனடாவின் அதி உயர்ந்த மலைகளாகும். அவற்றுள் மிகவும் உயரமான மலைச்சிகரம் லோகன். இதன் உயரம் 5,951 மீட்டர்கள். கனடாவின் வடபகுதிக்குச் செல்லச் செல்ல மரங்கள் குட்டையாகவும் குறைவாகவும் இருப்பதைக் காணலாம். மரங்கள் தென்படும் பகுதிக்கு அப்பால் உள்ள வடபுலத்தில் மிகவும் குளிர் என்பதால் அங்கு மரங்கள் வளர்வதில்லை. வடதுருவ சமுத்திரம் வரை மரங்களற்ற மிகவும் குளிரான பிரதேசமாகும்.

மக்கென்ஸி கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர். உலகில் உள்ள நன்னீரில் சுமார் பத்தில் ஒரு பங்கு கனடாவில் இருக்கின்றது.
கனடாவில் ஏறக்குறைய 2 மில்லியன் வாவிகள் இருக்கின்றன. நாட்டின் 7.6 சதவீத நிலப் பகுதியில் அவை அமைந்துள்ளன. ஜந்தில் இரண்டு பகுதி காடாகும்.

கனடா மக்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தென்பகுதியில் வசிக்கிறார்கள். தென்கனடாவின் தட்பவெப்ப நிலை அதிக குளிரானதும் அல்ல, அதிக வெப்பமானதும் அல்ல. மிதமான ஒன்று. இதுவே கனடியர்களில் அதிகமானவர்கள் தென் பகுதியில் வசிப்பதற்கான முக்கிய காரணம். கனடாவில் வசந்தம், கோடை, இலை உதிர்காலம், குளிர்காலம் என நான்கு பருவ காலங்கள் உண்டு. இந்த பருவகாலங்கள் ஏறக்குறைய ஒரே அளவான கால அளவினைக் கொண்டவையாகும். இது நாட்டின் தென் பகுதியில்தான். வடபுலத்தில் அல்ல. அங்கு குளிர் காலம் நீண்டதாகவும் மிகவும் குளிரானதாகவும் இருக்கும். ஏனைய மூன்று பருவகாலங்களும் குறைந்த கால அளவினைக் கொண்டதாகவிருக்கும். ஹட்சன் விரிகுடா, சென்ட் லோறன்ஸ் நதி ஆகிய இரண்டு பிரதான நீர்வழிகள் இருக்கின்றன. இவற்றின் ஊடாக உலகத்தில் எந்தப்பகுதியிலிருந்தும் கப்பல்கள் நாட்டின் நடுப்பகுதி வரை வரமுடியும். கனடாவின் சரித்திரத்தில் நீர்வழிகள் முக்கியமான இடத்தை வகித்துள்ளன. வீதிகள், புகையிரத பாதைகள், விமானங்கள் உதயமாவதற்கு முன் மக்கள் பிரயாணம் செய்யவும் பொருட்களைக் கொண்டு செல்லவும் நீர்வழிகள் தான் உதவின. சமுத்திரத்தினூடகப் பிரயாணம் செய்யும் கப்பல்கள் இந்த நீர்வழிகள் மூலம் வந்து சென்றன. சென்ட் லோறன்ஸ், மக்கென்ஸி, பிராஸர், சஸ்காட்சேவன், ஒட்டாவா, சென்ட் ஜோன் ஆகிய நதிகள் முக்கிய நீர்வழிகளாகச் செயல்பட்டன. பிரயாணம் செய்யவும் பொருட்களைக் கொண்டு செல்லவும் ஆறுகள் உதவியதால் கனடியர்கள் அவற்றின் கரைகளை அண்டியே வாழத்தொடங்கினார்கள். 75 சதவீத கனடியர்கள் நகரப் புறங்களில் வசிக்கிறார்கள். சுமார் 30 சதவீதமானவர்கள் டொரோண்டோ , மொன்றியல், வன்கூவர் ஆகிய மூன்று நகரங்களிலும் அவற்றைச் சுற்றியும் வசிக்கிறார்கள்.

<b>ஒட்டாவா-பல்கலாசாரத் தலைநகர் </b>
கனடாவின் தலைநகரான ஒட்டாவா (Ottawa) ஒண்டாரியோ மாகாணத்தின் தென்கிழக்கெல்லையில் அமைந்துள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் அதிக அளவில் பேசப்பட்ட போதிலும் முழுக் கனடாவையும் பிரதிபலிக்கும் வகையில் பல்கலாசார மையமாக அது திகழ்கின்றது. ஒட்டாவா, காட்டினேயூ, ரிடியூ என்ற மூன்று ஆறுகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள ஒட்டாவாவின் நகரப் பகுதி ஒண்டாரியோ - கியூபெக் மாகாண எல்லையையும் கடந்து செல்கின்றது. நகரின் விஸ்தீரணம் 4660 சதுர கிலோ மீட்டர்கள். ஒண்டாரியோவில் இருக்கும் பகுதியின் விஸ்தீரணம் 2720 சதுர கிலோ மீட்டர்கள். கியூபெக்கில் இருப்பது 1940 சதுர கிலோ மீட்டர்கள்.
15ம் 16ம் நூற்றாண்டு காலப் பகுதியில் ஆறுகள் மூலமாகவே போக்குவரத்து பிரதானமாக இடம் பெற்று வந்தது. புதிய இடங்களைக் கண்டு பிடிக்கும் ஆர்வலர்கள் மற்றும் விலங்கின் மென்மயிர் தோல் வர்த்தகர்கள் ஆறுகள் மூலமாகவே பிரயாணம் செய்தார்கள். பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் இடம் பெற்ற நெப்போலிய யுத்தத்தின் போது கப்பல் கட்டும் மரங்கள் இங்கிலாந்திற்கு அதிக அளவில் தேவைப்பட்டது. அப்பொழுது ஒட்டாவா பள்ளத்தாக்கில் இருந்து தேவையான மரங்கள் ஒட்டாவா நதி மூலமாகவே அனுப்பப்பட்டன. 1812ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ரிடியூ நதி மூலம் போக்குவரத்து செய்வதே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது.

நதிகள் மூலமான போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக ஒட்டாவா துரித கதியில் வளர்ச்சி அடைந்தது. 1848ம் ஆண்டு ஒண்டாரியோவும் கியூபெக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டன. அந்தச் சமயம் இணைக்கப்பட்ட கனடாவின் தலைநகராக எது இருக்க வேண்டும் என்ற சிக்கல் ஏற்பட்டது. பிரேஞ்சுக்காரர் பெரும்பான்மையாக வசித்த கியூபெக் மாகாணத் தலைவர்கள் தமது மாகாணத் தலைநகரான கியூபெக் சிட்டியே கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேயரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒண்டாரியோ மாகாணத் தலைவர்களோ தங்கள் மாகாணத் தலைநகரான டொரோண்டோவே கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்றார்கள். இரு பகுதியினரும் விட்டுக் கொடுக்காத நிலையில் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் அல்லது ஒண்டாரியோவில் உள்ள கிங்ஸ்டன் கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. இறுதியில் இரு பகுதியினரும் இங்கிலாந்தின் அரசியான விக்டோ ரியாவிடம் விண்ணப்பித்தார்கள். அவர் பிறப்பித்த பிரகடணத்தின் மூலம் 1857ம் ஆண்டு ஒட்டாவா கனடாவின் தலைநகராக வந்தது. கனடா கூட்டரசாக 1867ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட போதும் ஒட்டாவாவே தலைநகராக இருத்தல் வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. உலகில் உள்ள நகரங்களில் மிகவும் அழகானது ஒட்டாவா. மிகவும் சுத்தமானதும் கூட. பழமையும் புதுமையும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதை ஒட்டாவாவின் எந்தப் பகுதியிலும் காணலாம்.

<b>மாகாணங்களும் பிரதேசங்களும்</b>
கனடாவில் 10 மாகாணங்களும் 3 பிரதேசங்களும் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான தலைநகருண்டு.

மாகாணம்: அல்பேர்டா (Alberta)
தலைநகர்: எட்மன்டன் (Edmonton)

மாகாணம்: பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia)
தலைநகர்: விக்டோ ரியா (Victoria)

மாகாணம்: பிரின்ஸ் எட்வேர்ட் ஜலண்ட் (Prince Edward Island)
தலைநகர்: சார்லட்டவுன் (Charlottetown)

மாகாணம்: மணிடோபா (Manitoba)
தலைநகர்: வினிப்பெக் (Winnipeg)

மாகாணம்: நியூ பிரன்ஸ்விக் (New Brunswick)
தலைநகர்: பிரடெரிக்டன் (Fredericton)

மாகாணம்:நோவோ ஸ்கோஷியா (Nova Scotia)
தலைநகர்: ஹாலிபாக்ஸ் (Halifax)

மாகாணம்: ஒண்டாரியோ (Ontario)
தலைநகர்: டொரோண்டோ (Toronto)

மாகாணம்: கியூபேக் (Quebec)
தலைநகர்:கியூபேக் சிட்டி (Quebec City)

மாகாணம்: ஸாஸ்காட்சேவன் (Saskatchewan)
தலைநகர்: ரெஜைனா (Regina)

மாகாணம்: நியூபெளவுன்லாந்து (Newfoundland)
தலைநகர்: சென்ட் ஜோன்ஸ் (St.Johns)

பிரதேசம்: நோர்வெஸ்ட் டெரிட்டரீஸ் (Northwest Territories)
தலைநகர்: ஐலோநைவ் (Yellow Knife)

பிரதேசம்: யூகோன் டெரிட்டரீஸ் (Yukon)
தலைநகர்: வைட்ஹோர்ஸ் (White Horse)

பிரதேசம்: நுனாவுட் (Nunavut)
தலைநகர்: இக்வாலுயிட் (Igaluit)
கனடாவுக்கே உரித்தான மூஸ் (Moose)
பலதரப்பட்ட வன விலங்குகள் கனடாவில் காணப்படுகின்றன. கனடாவிற்கே உரித்தான மூஸ் என்று அழைக்கப்படும் மான்வகை விலங்கு, பீவர் (Beaver) என்று அழைக்கப்படும் நில நீர்வாழ் எலி உருவ விலங்கு, கனடா லிங்ஸ் (Canadian lynx) என்று அழைக்கப்படும் பூனை போன்ற மிருகம் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

<b>மூலவளம் நிறைநாடு </b>
செம்பு, நிக்கல், துத்தநாகம், காட்மியம், நிலக்கரி, பேற்றோலியம், இயற்கை வாயு, யூரேனியம், தங்கம். இரும்பு, ஈயம், மரம், நீர் ஆகியன பிரதான மூலப் பொருட்களாகும். மோட்டார் வாகனங்கள், அவற்றின் உதிரிப் பாகங்கள், இயந்திரவகைகள், உயர் தொழில் நுட்பத்துறைப் பொருட்கள், எண்ணெய், இயற்கை வாயு, வனம் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் ஆகியன கனடாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.

தித்திப்பான பாணி தரும் மேப்பில் மரத்தின் இலை தேசிய இலட்சனை
நீண்டகாலமாக மேப்பில் இலை (Maple) கனடாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. 1868ம் ஆண்டு ஒண்டாரியோ மற்றும் கியூபேக் மாகாணங்களின் மரபுரிமைச் சின்னமாக மேப்பில் இலை வந்தது. இரண்டாம் உலக மகா யுத்தங்களின் போது மேப்பில் இலை கனடிய படைகளின் சிறப்புக்குறீயிடுகளில் இடம் பெற்றது. 1965ம் ஆண்டு கொடியில் இடம் பெற்றதை அடுத்து மேப்பில் இலை கனடாவின் மிக்கிய சின்னமாக வந்துள்ளது.



நன்றி கனடாமுரசு

Print this item

  TRO becomes International NGO
Posted by: kurukaalapoovan - 10-20-2005, 05:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16132

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item