| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 370 online users. » 0 Member(s) | 368 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,317
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,070
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| மனதுமட்டும் |
|
Posted by: inthirajith - 11-17-2005, 09:46 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
சந்தோசத்துக்கும் அதை பகிரவும் மட்டும் தானா
சகியே உன் மனது உன்சந்தோசம் கண்டு புன்னகை
சகிதம் வரவேற்கும் மனது புரிந்தால் உன்வார்த்தைகள்
சுகமாய் வருடும் தென்றல் மனதின் வலிபுரியா உறவும்
மங்கையரை புரியாது தவிக்கும் வாலிபங்களும்
மனதைபடிக்கமுடியா தனிமையும் எப்போதுமே
மனதின் வலிபுரியா உன் வார்த்தைகளும் என்
மயக்கங்களும் எப்போதும் என் வார்த்தைகள்
மதிக்கப்படாதபோது வரும் வலி உனக்கு
புரியாது உன்னை சுற்றி உறவு இருக்கும் என்னை
புரியாது உன்மனம் புரிந்தால் மனதுமட்டும் அழுவது
புரியும் பகிரவும் ஆறுதல் கிடைக்கவும் அதற்கோர்
புரிந்த உறவு வேண்டும் கிடைத்தவர் மட்டும்
அதை அறியாமலே புன்னகை யின்றி வாழ்வை தொலைத்து
அன்பும் புரியா மனதுடனும் வாழும் தனி மனித
அவலங்கள் எம் தலைவிதி மாறா ரணங்களும்
அருகில் இல்லா மனதும் அலைகின்ற போது நீ வேண்டும்
|
|
|
| 4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை |
|
Posted by: Vaanampaadi - 11-17-2005, 09:35 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.dinakaran.com/daily/2005/Nov/17/photos/Child.jpg' border='0' alt='user posted image'>
[b]இது 4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை. இடம் நொய்டா (உ.பி.)
<img src='http://www.dinakaran.com/daily/2005/Nov/17/photos/Monkey.jpg' border='0' alt='user posted image'>
வாரிசு வந்தாச்சு
[b]பாசம்... மனிதர்களுக்கு மட்டும்தான் சொந்தமா? விலங்குகளுக்கு இருக்கக் கூடாதா. அமெரிக்காவின் புரூக்லின் நகரில் உள்ள புராஸ்பெக்ட் பார்க் மிருகக் காட்சி சாலையில் பபூன் இனத்தைச் சேர்ந்த குரங்குக் குடும்பத்தில் புதிதாக குட்டி ஒன்று பிறந்தது. புது வரவை குடும்பத்துடன் கொஞ்சி மகிழ்சின்றன குரங்குகள். (இடமிருந்து வலமாக) அக்கா பிந்தி, அண்ணன் நியாலி, அம்மா மதரா, அப்பா சைமன்.
தினகரன்
|
|
|
| நீங்களும் முன்றுபாருங்கள் |
|
Posted by: Vaanampaadi - 11-17-2005, 09:20 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
காயின் (coin) போனில்
காசு போடாமல் பேசும் நூதன கும்பல்
அவனியாபுரம், நவ. 17-
ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் காயின் போனில் காசு போடாமலேயே பேசும் நூதன கும்பல் அதிகரித்து வருகிறது.
திரும்பிய இடமெல்லாம்
நகரங்களிலும், கிராமங்களிலும் எந்த பக்கம் திரும்பினாலும், ஒருரூபாய் நாணயத்தை போட்டு பேசும் காயின் போன்கள் காணப்படுகின்றன. கடைகள், வீட்டு வாசல்களில் கூட இந்த போன்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த போனில் பேசும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நூதன மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு ரூபாய் நாணயத்தை போடுவதற்கு பதில் வாசரை நூலில் கட்டி பயன்படுத்தி பேசி வந்தனர்.
நூதன மோசடி
<span style='font-size:25pt;line-height:100%'><b>இப்போது புதிய மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது காயின் போனின் ரிசீவரை தனது செல்போனில் வைத்து தான் தொடர்புகொள்ள வேண்டிய போன் எண்களை அழுத்தினால் போதும், உடனே இணைப்பு கிடைத்துவிடும். இவ்வாறு காசு போடாமலேயே பலமணி நேரம் பேசலாம்.</b></span>
இந்த மோசடி பரவலாக நடந்து வருகிறது. காயின்போன் வைத்திருப்பவர்கள் மிகவும் உஷாராக இருந்து கண்காணித்து மோசடியை தடுக்க வேண்டும்.
தினதந்தி
|
|
|
| எங்களுக்கும் மூளை இருக்குங்க! |
|
Posted by: SUNDHAL - 11-17-2005, 05:05 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்று சார்லஸ் டார்வின் கூறிய கூற்று பல நூற்றாண்டை கடந்து விட்டது. இருந்த போதிலும் அதன் சர்ச்சை மட்டும் குறையவே இல்லை. உண்மையிலே மனிதனின் முன்னோடி குரங்கு இனத்தில் இருந்து தான் வந்ததா? என்பது பற்றி தீவிரமாக பல நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
மனிதனின் சந்ததி நிச்சயமாக குரங்கு இன வழி தோன்றல் போல தான் உள்ளது என்று காங்கோ நாட்டை சார்ந்த விஞ்ஞானி கோட்டிபிராய்டு ஹக்மேன் கூறியுள்ளார்.
காங்கோ நாட்டில் சமுக விரோதிகள் சிலரால் சில மாதங்களுக்கு முன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த கொரில்லா மனித குரங்கு ஒன்றை அந்நாட்டு காவல் துறையினர் மீட்டு அங்கு உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சேர்த்திருந்தனர். இந்த கொரில்லாவிற்கு இரண்டரை வயது.
மனித குரங்களை பற்றியும் அவற்றின் குணநலன்களை பற்றியும் ஆராய்வதற்காக கோட்டி பிராய்டும் அவரது குழுவினரும் வந்திருந்தனர். அவர்களுக்கு சிறிய கொரில்லாவின் நடவடிக்கைகளை காண ஆசை ஏற்பட்டது. அதன்படி அவர்கள் கொரில்லாவின் நடவடிக்கைகளை கவனித்தனர். கிட்டதட்ட மனிதனை போலவே நடந்து கொண்ட கொரில்லா மீது அவர்களுக்கு வியப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது.
கொட்டைகளை உடைத்து சாப்பிடுகிறது. ஆழமான நீரில் குச்சியை வைத்து பார்த்து நீரில் இறங்குகிறது என மனிதனின் நடவடிக்கைகளை செய்வதைக் கண்டு திகைத்து போயிருந்தனர். மனித குரங்களை பற்றி விரிவான ஆய்வுகளை செய்ய தீர்மானித்தனர்.
மனித குரங்குகளில் கொரில்லா, சிம்பென்சி, ஏப் என்ற வகைகள் உண்டு. இந்த மூன்று இன குரங்குகளும் மனிதனின் குணங்களை கொண்டு உள்ளது. இவற்றை கொண்டு மனித தொடர்பு ரகசியங்களை கண்டு பிடித்து விடலாம் என்று கூறுகிறார்.
Thanks:Thanthi..
|
|
|
| வலி தெரியாக் காயங்கள் |
|
Posted by: inthirajith - 11-17-2005, 12:46 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (112)
|
 |
<b>வலி தெரியாக் காயங்கள்....</b>
முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம்.
அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொழும்பில் இருந்து வந்த புதிய குடும்பம் டெக்னிக்கல் காலேஜ் படிக்கும் சிவில் இஞ்சினியர் பொடியன்" என்று சொன்னாள்.
"ஓ; சரி எங்கே இருக்கினம்" என்று ஆர்வமில்லாதவள் போல் அக்கறையாக கேட்டாள். "புதுவீடுகட்டினவை தானே அது இவர்கள் தான்" என்று சொன்னாள்.
ஒரு நாள் ரீயூசன் போய்வரும்போது பஸ்சை தவறவிட்டுவிட்டாள் நடந்துவந்து கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அவன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். "என்ன இனி பஸ் இல்லை நடந்தாபோகப் போறீங்கள்?" அவள் பதில் பேசவில்லை அவன் கண்ணியமாக "இஞ்ச பாருங்கோ நான் இந்த சினேகிதன் சைக்கிளில் வாறேன் நீங்கள் என் சைக்கிளில் வாங்கோ" என்று சைக்கிளை கொடுத்தான்.
10 கீ.மீ நடக்க நடுச்சாமம் ஆகும் என்று நினைத்து சைக்கிளை வாங்கி நன்றி சொல்லி விட்டு ஓடத் தொடங்கினாள். பின்னாலே பாதுகாப்பாக இடைத்தூரம் விட்டு அவனும் சினேகிதனும் யாரும் தப்பாக நினைக்காதபடி வந்தார்கள். வீட்டுக்கு கிட்டவந்ததும் அவளிடம் சொன்னான் "சரி நாங்கள் போறோம்" என்று அப்போ தான் வேணி "இல்லை கொஞ்சம் பொறுங்கோ" என்று கூறி அவர்களை தடுத்த நிறுத்தினாள்.
வீட்டு வாசலில் இருந்தபடியே "அப்பா இங்கை வாங்கோ" என்று தகப்பனை அழைத்தாள் என்ன பிள்ளை என்று கேட்டபடியே வந்த தகப்பன் முகம் சுருக்கினார் "யார் இந்த பொடியங்கள்? என்று யோசித்தபடி அப்பா இவர்கள் தான் நான் பஸ்சை விட்டு விட்டபோது தங்கள் சைக்கிளை தந்து உதவி பண்ணியவை" என்று அறிமுகபடுத்தினாள்
"ஓ மெத்த பெரிய உதவி தம்பியவை உள்ள வாங்கோ ரீ குடித்து விட்டு போங்கோ தம்பியவை" என்று அன்புடன் அழைத்தார் உள்ளே வந்து முற்றம் பார்த்த அவன் திகைத்துவிட்டான். அழகான முற்றம் குரோட்டன், மல்லிகை, கனகாம்பரம் என்று ஒரு நந்தவனத்தினுள் இருப்பது போன்ற ஒர் உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.
"தம்பி நீங்கள் நடா அண்னை மகன்தானே.? இதுயார் புது பையன்? என்று வேணியின் அப்பா கேட்டார். "அது வந்து இப்போ புதுவீடுகட்டி வந்து இருக்கும் கொழும்பு மகேந்திரன் டொக்டரின் மகன் பேர் சண்" என்று சொன்னான் அப்போ தேனீரும் தட்டில் பிஸ்கெட்டும் கொண்டுவந்த வேணிக்கும் அவன் பெயர் சொன்னது கேட்டது. அப்போ சண் கேட்டான் "அங்கிள் எங்கடவீட்டில் பூமரங்களே இல்லை எனக்கு கொஞ்சம் பதியன் தருவிங்களா?" என்று "கடவுளே தம்பி இது என்னோடது இல்லை என் மகள் தான் வைத்து இருக்கிறா அதில சாமிக்கு கூட என் மனிசி பூ பிடுங்கவிடமாட்டா எதுக்கும் அவளிடம் கேளுங்கோ ஆனால் தராவிட்டால் கவலைப் படவேண்டாம் கோண்டவிலில் ஒரு இடம் பூகன்றுகள் விற்கும் இடம் இருக்கு இடத்தைச் சொன்னால், நீங்களே போய் வாங்கலாம்" என்று வேணியின் அப்பா சொன்னர்.
|
|
|
| சமூகவிரோதிகளா? உசார் அடித்தே கொன்றிடுவோம் |
|
Posted by: வன்னியன் - 11-16-2005, 08:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (17)
|
 |
சமூக விரோதச் செயல்களில் hடுபட்டவர் மக்களால் அடித்துக்கொலை
யாழ். கொக்குவில் பகுதியில் பல்வேறு சமூகவிரோதச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இன்று காலை 8.30 மணியளவில் மக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லு}ரிக்கு அண்மையில் உள்ள விளையாட்டரங்கில் வைத்தே இவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டது சங்கதியிலிருந்து
|
|
|
| 16 மாணவர்கள் கைது... |
|
Posted by: Nilavan. - 11-16-2005, 06:32 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
16மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரொரன்ரோ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 வயதுடைய அதே கல்லு}ரி மாணவி கொடுத்த தகவலை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர். தன் மீத பாலியல் இம்சையில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளர். சம்பந்தப்பட்டவர்கள் தன்னுனை கடந்த ஒருவருடங்களுக்கு மேலாக பாலியல் இம்சைப்படுத்தியதாக கடந்த வாரமத் அவர் தனது ஆசிரியர் ஒருவருக்கு தெரிவிக்க அவர் அதை காவில் துறையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனடிப்படையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களின் இருவர் பெண்கள். இருவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்கள் என்பதால் இது திட்டமிட்டு கறுப்பினத்தவர் மீது இருக்கு காழ்ப்புணர்ச்சியால் உருவாக்கப்பட்ட சுூழ்ச்சி என்று பல கறுப்பினத்தவர்கள் வாதாடுகின்றனர். அவர்களின் கேள்வி... இதை யாராவது நம்புவார்களா? உண்மையில் எனது கருத்தின் படி இதை யாரும் நம்பமுடியாது இது திட்டமிட்ட சதியாகக் கூட இருக்கலாம். காரணம் கைது செய்யப்பட்ட மாணவர்கள் எந்த குழுக்களுடனும் தொடர்பற்றவர்கள்.
I never knew that anything like this is going on. I'm like totally in shock," said the 31-year-old woman, who is also related to one of the girls charged. "There's no question in my heart that this is totally false. My son has had nothing to do with this."
"எனக்கு என்ன இங்கே நடை பெறுகின்றது என்று தெரியவில்லை. ஆனால் எனது மகன் இதில் ஈடுபட்டிருக்க மாட்டர் அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை" என்று நேற்று காவல் நிலையத்துக்கு வந்த ஒரு மாணவனின் தாயார் சொன்னர். இவர் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினருமாவார்.
காவல் துறை தொடர்ந்து மாணவியின் நண்பர்கள் மற்றுமு; கைது செய்யப்பட்டவர்களின் நண்பர்களை விசாரித்து வருகின்றது. அத்தொடு பாடசாலை ஒளிப்படக்கருவியில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்படங்களையும் பார்க்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
|
|
|
| இலங்கையில் நாய் குரைத்ததால் நாயின்உரிமையாளர்,மனைவிமகள் கொலை |
|
Posted by: Vaanampaadi - 11-16-2005, 05:52 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
இலங்கையில் நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளர்,மனைவி,மகள் கொலை
நாய்குரைத்ததால் ஆத்திரமடைந்து பக் கத்து வீட்டுக்காரர், அவ ரது மனைவி மற்றும் குழந்தையை அடித்துக் கொன்றார் ஒருவர்.
இலங்கையின் தென் பகுதியில் உள்ள கடலோர கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்தனர். அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் W. Janaka, 20. தெருவில் போகும் போது அவரை பார்த்து அந்த நாய் அடிக்கடி குரைப்பது வழக்கம்.
சம்பவத்தன்று அவர் குடி போதையில் தள்ளாடிய படியே தெருவில் வந்தார். இதைபார்த்ததும் நாய் குரைத்தது. குடிபோதையில் இருந்தவருக்கு ஆத்திரம் அதிகமானது.
அவர் தன் வீட்டுக்கு சென்று ஒரு இரும்பு தடியை எடுத்து வந்தார். தன்னை பார்த்து குரைத்த நாயின் உரிமையாளர் K.W. Diaris, 70, அவரது மனைவி Podi Menika, 65 மற்றும் மகளை D. Samyalata, 18 இரும்புத் தடியால் அடித்து கொன்று விட்டார்.
அந்த வீட்டில் இருந்த மேலும் 2 மகள்கள் ஓடி ஒளிந்து கொண்டதால் உயிர் பிழைத்துக் கொண்டனர். நாயும் பிழைத்துக்கொண்டது ................
<b>Barking dog provokes man to kill its owner's family in Sri Lanka</b>
COLOMBO, Sri Lanka -- A resident of Sri Lanka's southern coast was so enraged by his neighbors' constantly barking dog that he killed the husband, wife and one of their daughters with an iron rod, police said Tuesday.
Two other daughters escaped by hiding in the backyard. The dog also survived.
"The accused was drunk, and when he was passing by his neighbor's house, the dog barked at him and kept on barking," said Badureilya Police Sgt. Julian Mendis of Sunday's incident.
The accused, identified by police as W. Janaka, 20, went home, collected an iron rod and killed K.W. Diaris, 70, his wife Podi Menika, 65, and their daughter D. Samyalata, 18.
Janaka was arrested and will be charged with murder, police said. If convicted he could be hanged or spend rest of his life in prison.
The area is about 40 kilometers south of Colombo.
The Health Ministry says there is one dog for every seven humans in this island nation of 19 million people, far more than its target ratio of one dog to every 25 humans. (AP)
November 15, 2005
http://mdn.mainichi-msn.co.jp/internationa...0in019000c.html
|
|
|
|