Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெஞ்சினுள் முள்ளாய்.....
#1
<b>நெஞ்சினுள் முள்ளாய்.....</b>
==============

<img src='http://img405.imageshack.us/img405/9521/jothika111105122ys.jpg' border='0' alt='user posted image'>

<b>கண்ணே மணியே என்றான்..
கண்டவுடன் எனக்கு காதல் வரவில்லை..
உன்னை காணாமல் நான் ஏங்கினேனே...
அப்போதே காதல் என்னுள் கருத்தரித்தது என்றும் சொன்னான்...
நீ அழுதால் உன் இரு விழி துடைக்க மாட்டேன்..
நானும் சேர்ந்து அழுவேன் என்றான்!

நட்ட நடு மழையில்
தன்னிடம் இருந்த ஒற்றை குடையை நீட்டி...
நீ பிடி... நான் நனைவேன்..
என் வாழ்வு முடியும் வரை.. உனக்காய் என்றான்!

கால நதி வாழ்வு விருட்சத்தின் ஆணி வேர்வரை அலசி செல்ல..
என் காதலனும் எங்கோ தொலைந்தான்..!

பிறர்க்கு சலனமற்று இருந்த இரவுகள் பல எனக்கு மட்டும்...
சஞ்சலத்தை மணம் முடித்து வைக்க..
கண்ணீருக்குள் தற்கொலை செய்து என் கால நிமிடங்கள் தொலைந்தன! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஒரு மாலை...
மஞ்சள் சேலை கொண்டு வானம் மௌனமாய் .. உடை மாற்றும் வேளை..
கண்டேன் அவனை....
தன் காதலி(???) கரம் இறுக்கிப் பிடித்து கொண்டே
அவன் எங்கோ சென்று கொண்டிருந்தான்..<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அவள் கண்ணை மூடி சிரிக்க..
இவன் அவள் காதில் ஏதோ சொன்னபடி நகர்ந்து கொண்டிருந்தான்...
அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்...பொட்டு வைத்த விதவை என்றானேன்..

என்ன சொல்லி இருப்பானோ?
என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ?
அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சேர்ந்திருந்த நாட்கள்..
நாம் சிரித்திருந்த நாட்கள்..
சிந்திய மழைத்துளி எனக் காலம் சிதறியே மறைந்தாலும்..
நெஞ்சினுள் முள்ளாய் அந்த நினைவுகள் என்னை கொல்லுமடா!</b>
<b> .. .. !!</b>
Reply
#2
<b>இரசிகை இது நிஜத்தின் குமுறலா அல்ல நிழலின் பிரதியா</b>
முட்களை நினைத்தால் ரோஜாவைப் பறிக்க முடியுமா??
வாழ்வின் வலிகளை நினைத்து வரும் வாழ்வை உதற முடியுமா??
<b>இயற்கைக்கே இரவு பகல் என இரண்டு பக்கம் அதுபோல் வாழ்வினிலும் இன்ப துன்பம் என இரண்டும் உண்டு
வாழ்க்கையை புரிந்து விட்டால் வாழ்விலும் நாம் ஞானி ஆவோம்.</b>
Reply
#3
என்ன ரசிகை நடந்திச்சு.. கவிதை ஒரே சோகமா போகுது ம்ம்ம் .. கவிதை நன்றாக இருக்கு வாழ்த்துக்கள் .
[b][size=18]
Reply
#4
என்ன சொல்லி இருப்பானோ?
என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ?
அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சேர்ந்திருந்த நாட்கள்..
நாம் சிரித்திருந்த நாட்கள்..
சிந்திய மழைத்துளி எனக் காலம் சிதறியே மறைந்தாலும்..
நெஞ்சினுள் முள்ளாய் அந்த நினைவுகள் என்னை கொல்லுமடா!
_________________

ரசிகை சூப்பர் வரிகள். என்ன சோகமா? பொட்டு வைத்த விதவை... நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள் இப்படி சோகமாய் அல்ல.. சந்தோசமாய் வாழ்த்துக்கள்

Reply
#5
ரசிகை.... உருக்கமான கவிதை. பார்ப்போர் கண்களையும் கலங்க வைத்து விட்டது.... வாழ்வில் இன்பங்களுடன் கவலைகளும் ஏனோ கூடவே வந்துவிடுகிறது... Cry Cry Cry Cry Cry

மேலும் பல கவி படைக்க வாழ்த்துக்கள். ஆனால் சந்தோசமாக.... :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
மேற்கோள்:

<b>என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ?
அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
</b>


யாராவது பாடம் எடுக்கிறார்களா ஆண்களுக்கு காதல் வசனம் பேச..

ம ம் விட்டுவிட்டு சென்றவனை - நினைவுகள்
தொட்டு நின்று பலன் தான் ஏது..??
தொலைந்து விட்ட சனியனை
து}பமிட்டு நினைப்பதுவே பாவம்.
விட்டு விடு மெல்லவே
போலியாய் புழுகிய அவனை மட்டுமல்ல
அவன் நினைவையும் தான்.
வட்டமிடும் வழமான வாழ்க்கை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
கவிதை வரிகளில உள்ள சோகம் கற்பனை தானே ரசி அக்கா கற்பனையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்

கவிதை நல்லாயிருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சரி கிட்டடில யாழில வாற பெரும்பாலான ஆக்கங்கள் சோக மயமா இருக்கே என்னாச்சுப்பா எல்லாருக்கும் :சழடட:
. .
.
Reply
#8
நெஞ்சில் முள் வலிக்கிறது..! இப்படி முட்களை விதைப்பதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பங்களிப்புச் செய்கின்றனர்..!

வசனம் பேசுவது பொதுவில் நிகழ்ந்தாலும்...வரும் வசனங்களின் தன்மை (புழுகா..நிஜமா அன்பிலான என்று) அறிவது ஆணினது பெண்ணினதும் கடமை...! வசனத்தை அப்படியே நம்புவதுதான் ஏமாற்றங்களுக்கு வித்திடுகிறது..! நீண்ட நோக்கில்..பல காலம் பழகி செயலைக் கொண்டு ஆளை அளவிடுங்கள்..ஆணோ பெண்ணோ..! :wink: Idea

நன்றி ரசிகை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
நிலவை பற்றி பேசணும் என்றால்.. நிலவுக்கு போய் வரணுமா என்ன?
நீங்கள் நினைக்கிறமாதிரி எல்லாம் இல்லை. கவிதை களம் என்ற இடத்தில் உங்களோடு சேர்ந்து நானும் ஒரு அம்பெய்தினேன் அவ்வளவே!!

அப்புறம் வசம்பு நித்திலா தமிழினி குருவிகாள், விஷ்ணு றமா, கவிதன் அனவருக்கும் நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply
#10
இரசிகை இந்த கவிதை அனுபவித்து எழுதியதுபோல இருக்கின்றது. ஒரு அருமையான கவிதையை படித்த நிறைவு
நிலவைப்பற்றி கவிதை எழுத நிலவுக்குபோகத்தேவையில்லை. ஆனால் நிலவிலுள்ள குண்டு குழிகளைப்பற்றி கவிதை எழுத நிலவைப்பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#11
கவிதை நன்று ரசிகை நெருப்பில் சுடாமலும் வெப்பத்தை உணரலாம் வாழ்த்துக்கள்
inthirajith
Reply
#12
கவிதை நல்லாயிருக்கு ரசி அக்கா... வாசித்தவுடன் நெஞ்சினுள் வலிக்கிறதுதான்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்...

Quote:என்ன சொல்லி இருப்பானோ?
என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ?
அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கற்ப்பனையாய் வந்த கவி என்றாலும் ...இப்பாடியும் நடக்குதுதானே..சரி நாங்கள் கொஞ்சம் உசாரா இருப்பம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#13
<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->
கற்ப்பனையாய் வந்த கவி என்றாலும் ...இப்பாடியும் நடக்குதுதானே..சரி நாங்கள் கொஞ்சம் உசாரா இருப்பம்  :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இருங்க இருங்க... :roll: :roll: :roll: எல்லோரும் அப்படி இல்லீங்கோ
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
ரசிகை இப்படி எல்லாம் கவிதை எழுதுவீங்களா..
நல்லா இருக்கு...
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
ரசிகை தான் ஒரு கவிஞர் என்பதனையும் அடிக்கடி எமக்குத் தெரியப்படுத்துகின்றார். மனதில் எழுகின்ற கருக்களை வைத்து மரபுக்கவிதைகளையும் எழுதுங்கள். மேலும் சுவையாக இருக்கும்.
புலமைக்கு எனது பாராட்டுக்கள்! தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!
நன்றி

Reply
#16
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin-->
கற்ப்பனையாய் வந்த கவி என்றாலும் ...இப்பாடியும் நடக்குதுதானே..சரி நாங்கள் கொஞ்சம் உசாரா இருப்பம்  :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இருங்க இருங்க... :roll: :roll: :roll: எல்லோரும் அப்படி இல்லீங்கோ<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ம்ம் நீங்க சொன்னா சரிங்கோ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#17
வாவ்..அக்கா..கவி அருமை..என்ன சோகமா இருக்கு..ஏன் சோகம் என்று நான் கேட்டால்..நான் சொன்ன அதே பதில் தான் திரும்பி நமக்கே வரும்..சோ, கேட்கல..:wink: ஆனாலும்...

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நிலவை பற்றி பேசணும் என்றால்.. நிலவுக்கு போய் வரணுமா என்ன? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது நல்ல பதில்..தொடருங்கள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#18
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ம்ம் நீங்க சொன்னா சரிங்கோ... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Confusedhock: அப்போ..நான் சொன்னா பிழை எண்டுறீங்களா அனி??? :roll: :roll: :wink:
..
....
..!
Reply
#19
ப்ரியசகி Wrote:
Quote:ம்ம் நீங்க சொன்னா சரிங்கோ...

Confusedhock: அப்போ..நான் சொன்னா பிழை எண்டுறீங்களா அனி??? :roll: :roll: :wink:

சே சே அப்படி சொல்லுவேனா... :wink: சரி நீங்க என்ன சொன்னீங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#20
வாழ்த்துச்சொன்ன பிரயசகி & செல்வமுத்து நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)