| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 263 online users. » 0 Member(s) | 261 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,061
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| கண்ட நாள் முதல் |
|
Posted by: AJeevan - 12-21-2005, 12:00 AM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
<img src='http://www.vikatan.com/av/2005/dec/25122005/p1.jpg' border='0' alt='user posted image'>
மழை நேரத் தேநீர், பின்னிரவின் மெலடி, ஸ்வீட்டான எஸ்.எம்.எஸ். போல இதமான சுகங்களின் வரிசையில் புதிதாக... கண்ட நாள் முதல்!
மோதல்&காதல் கதைதான். தந்த விதத்தில் இது ஃப்ரெஷ் லவ் ஜூஸ்!
கலகலப்பான கல்யாண வீட்டில், ஒரு பொடிய னுக்கும் சிறுமிக்கும் நடக்கிற டிஷ்யூம் டிஷ்யூமில் துவங்குகிறது கதை. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, ஒரு கல்லூரிக் கலை விழாவில் அவர்கள் இருவரும் (பிரசன்னா, லைலா) சந்திக்கும்போதும் அதே ஈகோ யுத்தம்!
<img src='http://www.vikatan.com/av/2005/dec/25122005/p2a.jpg' border='0' alt='user posted image'>
பிரசன்னாவின் நண்பனான அமெரிக்க ரிட்டர்ன் கார்த்திக்குக்கு பெண் பார்க்கப் போகும் இடத்தில், மணப்பெண்ணாக வந்து நிற்பது லைலா. இந்தப் பெண் வேண்டாம் என்று பிரசன்னா மல்லுக்கட்டியும் கேட்காமல், ஓ.கே. சொல்கிறார் கார்த்திக். உடனே நிச்சயதார்த்தம்!
அதன்பின், ஓரிரு சந்திப்புகளில் கார்த்திக் குக்கு ஏனோ லைலாவைப் பிடிக்காமல் போக, இந்தக் கல்யாணம் நடக்காது என்று லைலாவிடம் அறிவித்துவிட்டு அமெரிக்கா பறந்து விடுகிறார். அதே நேரத்தில், லைலாவின் தங்கை தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போக, பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு பிரசன்னாதான் தன் வாழ்க்கையுடன் விளையாடுகிறார் என்று நினைக்கிறார் லைலா. மோதல் வலுக்கிறது.
லைலாவுக்குத் தன்னைப் புரியவைக்கவும், கார்த்திக் & லைலா திருமணத்தை நடத்தவும் பிரசன்னா எடுக்கிற முயற்சிகளும், செய்கிற உதவி களும் லைலாவின் மனதை மாற்றுகின்றன. இருவருக்கும் இடையே இஞ்ச் பை இஞ்ச்சாக மலர்கிற நட்பு, காதலாகக் கனிகிற தருணம்.. மனம் மாறி லைலாவை மணக்க வந்து இறங்குகிறார் கார்த்திக். களேபரமான எமோஷனல் ரகளை... வெரி ஸ்வீட் க்ளைமாக்ஸ்!
இன்றைய இளைய தலைமுறையின் ரசனையை, வேகத்தை, கோபத்தை, இதயத்தை ஜில்லென்று காதல் கோத்துத் தந்திருக் கிறார் அறிமுக இயக்குநர் ப்ரியா. பெண் படைப் பாளிகள் அபூர்வமாக இருக்கிற திரைத்துறையில் ப்ரியாவின் வரவுக்கு ஒரு வெல்கம் பொக்கே!
கார்த்திகைத் தீபங்கள் ஏற்றிய ஹைகிளாஸ் அப்பார்ட்மென்ட் மாதிரி ஜொலி ஜொலிக்கிறது ஒவ்வொரு காட்சியும்!
காலேஜ் கல்ச்சுரல்ஸ§க்கு எத்திராஜ் கல்லூரி மாணவிகளை நாய் வண்டியில் அழைத்து வருகிற காட்சி... அமர்க்களமான ஆரம்பம். சமர்த்துக் குட்டியாக கார்த்திக் முன் நடிக்கிற லைலாவுக்குள் உறங்குகிற மிருகத்தை உசுப்ப பிரசன்னா முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சியும் கலகலா! இருவருக்குமான ஈகோ மல்லுக்கட்டல்களில் ஜாலிக் கோழி சீறல்கள்!
படத்துக்குப் படம் பிரமாதப்படுத்து கிறார் பிரசன்னா. மிக இயல்பான நடிப்பு. லைலாவிடம் அங்கங்கே அறை வாங்கி அதிர்ந்து நிற்கிற இடங்கள்... ஜிலீர் பகீர்!
சின்னக் கண்ணும், சிங்கப் பல்லும், கன்னக் குழியுமாக... சுடிதார் போட்ட தூள் சொர்ணக்காவாக லைலா. மூக்கின் மேல் கொடி கட்டி நிற்கிற கோபப் பறவையாக லைலா எத்தனை படம் வந்தாலும் பார்க்கலாம் போல!
கார்த்திக்... ஜெனரேஷன் நெக்ஸ்ட் பையனை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். சற்றே அலட்சியமான அவர் குரல், இன்னும் ப்ளஸ்!
காட்சிக்கு காட்சி குறும்பு கொப்பளிக்கும் ஈ. ராமதாஸின் வசனங் கள், ஐஸ்க்ரீமாக வழியும் பி.சி. ஸ்ரீராமின் விஷ§வல்கள்,கிறங் கடிக்கும் யுவன் ஷங்கரின் மியூஸிக், தாமரையின் அழகுத் தமிழ் என மிதக்கிறது படம்!
மகள் ஓடிப் போனதும் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வருவது போன்ற சென்டிமென்ட் டிராமாக்கள் கொஞ்சம் போர்! லைலாவும் பிரசன்னாவும் எந்த நேரமும் காதலில் விழக்கூடும் என்பதை முதல் காட்சியிலே யூகிக்க முடிவதால், கார்த்திக் கல்யாணம், நிச்சயதார்த்தம் என்பதில் த்ரில் குறைச்சல். அதேபோல், க்ளைமாக்ஸில் கார்த்திக் வந்தாக வேண்டுமே என நினைக்கும்போது கரெக்டாக வந்து இறங்குகிறார் சார்.
ஆழம் அதிகமில்லை. ஆனாலும், அவர்களே விளம்பரப் படுத்திக்கொள்வது போல, அதிகாலை காபி மாதிரி, இது அழகான சினிமாதான்!
\ விகடன் விமர்சனக் குழு
|
|
|
| கனேடிய கொடி விற்பனையில் முன்னிலை தமிழீழத் தேசியக் கொடி |
|
Posted by: sanjee05 - 12-20-2005, 07:00 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
கனடாவில் கோடைகாலம் மற்றும் பனிக்குளிர் காலங்கள் ஆகியவற்றின் போது விடுமுறை தினங்கள் மற்றும் கொண்டாட்ட காலங்களில் முக்கிய சந்திப்புக்களில் தெருவோரக் கடைகளின் வியாபாரம் களைகட்டிவிடும்.
அந்தக் கடைகளில் பெரும்பாலும் தேசிய கொடிகள்இ அன்பளிப்புப் பொருட்கள்இ கம்பளிகள் மற்றும் சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் ஆகியன இடம்பெறும்.
அந்த வகையில் கடந்த கோடைகாலம் மற்றும் தற்போதைய குளிர்காலம் ஆகியவற்றில் ரொறன்ரோவில் அதிகளவில் விற்பனையாகும் ஒரு பொருளாக தமிழீழத் தேசியக் கொடி உள்ளது.
ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் வியாபாரங்களிலே தமிழீழத் தேசியக் கொடி வியாபாரமும் பரந்தளவில் நடத்தப்படுகிறது.
இது குறித்து இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் முகாமையாளரிடம் கேட்ட போதுஇ
தமிழர்களைத் தவிர ஆங்கிலேயர் உள்ளிட்ட பலராலும் நினைவுப் பொருளாகஇ ஆபூர்வப் பரிசாக தமிழீழத் தேசியக் கொடிகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் நல்ல விற்பனை நடப்பதாலேயே தாங்கள் தமிழீழத் தேசியக் கொடியை முதன்மைப்படுத்தி வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகிய ஒரு தேசியக் கொடியென்றால் அது தமிழீழத் தேசியக் கொடியே என்றும் இப்போதைய வியாபாரத்தில் கூட தாங்கள் அதனை முதன்மைக் கொடியாகப் பறக்கவிட்டிருப்பது அது இன்னமும் முன்னிலை வியாபாரத்தில் இருப்பதினாலேயே என்றும் தெரிவித்தார்.
இந்த வியாபாரம் வழமையான வியாபாரச் சந்தையில் எவ்வாறுள்ளது என்பது குறித்து கொடிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிரந்தர நிறுவன உரிமையாளரிடம் வினவிய போதுஇ
ஆம்.. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமிழீழத் தேசியக் கொடியை விற்று வருகிறோம். தமிழர்களின் கொடியெனவே அனைவரும் இதனை அடையாளம் காண்கிறார்கள் என்றார் அவர்.
|
|
|
| உயர் பாதுகாப்பு வலய மக்கள்படை தாக்குதல் |
|
Posted by: நர்மதா - 12-20-2005, 06:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினன் ஒருவர் உயர்பாதுகாப்புவலய மக்கள்படையால் கத்திகுத்திற்கு இலக்கியுள்ளார். இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அஜத் குமார என்ற இராணுவத்தினனே படுகாய மடைந்துள்ளார். இவர் தற்போது பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை மணற்காடு, குடத்தனைப் பகுதிகளில் சிறீலங்கா கடற்படையினர் தேடுதல்களை நடாத்தியுள்ளனர். வீடு வீடாகச் சென்று கடற்படையினர் மேற்கொண்ட இந்த தேடுதலினால், அப்பகுதி மக்கள் பல்வேறு துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
| யாழில் இன்று ஓட்டோ சாரதிகள் மீதும் இராணுவம் கொடூரத் தாக்குதல |
|
Posted by: கீதா - 12-20-2005, 06:04 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
யாழில் இன்று ஓட்டோ சாரதிகள் மீதும் இராணுவம் கொடூரத் தாக்குதல்!!
யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை கொடூரத் தாக்குதலை நடத்தி ஓட்டோக்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஓட்டோ சாரதியை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்த ஓட்டோ தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக யாழ். நகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் தங்களது வாகனங்களுடன் யாழ். நகரில் குவிந்தனர்.
ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி ஆகியவற்றை ஓட்டோ சாரதிகள் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் ஓட்டோ சாரதிகள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
நூற்றுக்கும் மேலதிகமான படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு அந்த இடத்தை இராணுவத்தினர் போர்க்களமாக்கினர். இந்தத் தாக்குதலில் ஓட்டோ சாரதிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகி உள்ளன.
இராணுவத்தினரின் இந்த வன்முறைச் செயல்களால் யாழில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே மணற்காடு, குடத்தனை, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவ வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த அஜித்குமார என்பவர் படுகாயமடைந்ததா செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 10 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் ஆபத்தான நிலையில் பலாலி மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!! |
|
Posted by: Snegethy - 12-20-2005, 05:45 PM - Forum: நகைச்சுவை
- Replies (48)
|
 |
<span style='color:indigo'><b>நாஸ்ரி ஈமெயில்</b>
[size=18]ஹலோ...
ஹலோ லூசு என்ன நித்திரையா?
யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு.
பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா.
ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம.
ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார்.
ஆ அதை நான் டிசைட் பண்ணனும்.
உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது.
எ வட்?
காதென்ன றென்ருக்கு விட்டாச்சே?
காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்?
ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன்.
நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வராததுக்கு மற்றவையை நிம்மதியா படுக்க விடாதாம்.
அடியேய் நான் சீரியசாய் சொல்லுறன்.ஐ வோஸ் சொக்ட் இவளா இப்பிடியெல்லாம் (all ***) அனுப்பினவள் எண்டு.
ஐயோ கடவுளே இப்ப என்ன நான் செய்யிறது. ஓ ம காட்.சத்தியமா நான் அனுப்பேல்ல.
சரி பெட்டை ரென்ஸனாயிட்டுது.
ஏய் சொன்னதெல்லாம் அப்ப பொய்யா?
ஹி ஹி
சரியான வெருளியொண்டு.
பொய்யில்ல மெயில் வந்தது உண்மை ஆனா உன்னட்ட மட்டுமில்ல என்ர அட்றஸ் புக்ல இருக்கிற நிறையபேரின்ர ஈமெயில் ஐடில இருந்து வந்தது.பிரன்ட் சொன்னான் என்ர ஸ்பைவெயர் நாத்திப்போட்டுது எண்டு .கணனி வேலை செய்யல என்று சொன்னான் எல்ல. ஸ்பைவெயர் எல்லாத்தையும் trace பண்ணிப்போட்டுது.ஆனால் உன்ர மெயில்தான் முதல் வந்தது.
அட கடவுளே நான் பயந்திட்டன்.வேற யாருக்கும் உப்பிடி போயிருந்தா என்ர நிலமை.
ஹி ஹி
காணும் லூசு போய் முதல் computer ஐ திருத்துற வழியைப்பார்.
ஒ.கே குட்நைற்.
நல்ல நித்திரையைக் குழப்பிப்போட்டு குட் நைற்றாம்.காலம போன் பண்றன் bye.
bye g.night.</span>
|
|
|
| இன்று கா.வே.பாலகுமாரன் அவர்களின் உரை |
|
Posted by: sri - 12-20-2005, 01:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ Áì¸Ùì¸¡É ÁÉ¢¾§¿ÂôÀ½¢ ±ýÈ ¦À¡¢ø ÒÄÉ¡ö×ì¸ÕŢ¡¸ ÀÄ¿¢ÚÅÉí¸û ¦ºÂüÀ¼ ÅóÐÅ¢ð¼É ±É§Å Áì¸û ¾ÁÐ ¦º¡ó¾ì¸¡ø¸Ç¢ø ŢƢôÀ¡¸ þÕ츧ÅñÎõ ±É Ţξ¨ÄôÒÄ¢¸Ç¢ý ãò¾ ¯ÚôÀ¢É÷ ¸.§Å À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û ¦¾¡¢Å¢ò¾¡÷. þýÚ À¢üÀ¸ø 3.30 Á½¢ìÌ ÒÄ¢¸Ç¢ý ÌÃø ¿¢ÚÅÉò¾¢ø þ¼õ¦ÀüÈ ¬Æ¢ô§ÀÃ¨Ä þ¨ºô§À¨Æ ¦ÅǢ£ðΠŢơŢø ¸ÄóÐ ¦¸¡ñÎ º¢ÈôҨáüÚõ§À¡Ð À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û þùÅ¡Ú ¦¾¡¢Å¢ò¾¡÷.þýÚ ¯Ä¸õ ÓØÅЧÁ ¸¼ó¾ ÅÕ¼ ÍÉ¡Á¢Â¡ø Á£ðÎôÀ¡÷ìÌõ «Ð ¦¾¡¼÷À¡É ¿¢¨É×ôÀ½¢¸¨Ç §Áü¦¸¡ûÙõ Å¡ÃÁ¡¸ þùÅ¡Ãõ ¸¨¼ôÀ¢Êì¸ôÀðÊÕó¾Ð. «ó¾ Ũ¸Â¢ø ¾Á¢Æ÷ ¾¡Â¸ò¾¢ø þ¼õ ¦ÀÚ¸¢ýÈ ¿¢¸ú׸Ǣø þó¾ þ¨ºô§À¨Æ ¦ÅǢ£Îõ ´ýÚ ÍÉ¡Á¢ ¾¡ì¸ò¾¢É¡ø ÀøÄ¡Â¢Ãì¸½ì¸¡É ¯Â¢÷¸¨Ç ¿¡í¸û þÆó¾¢Õ츢ýÈ ¿¢¨Ä墀 3000 §ÀÕìÌ §ÁüÀð¼Å÷¸û ¸¡ÂÁ¨¼ó¾ ¿¢¨Ä¢Öõ 50000 òÐìÌõ §ÁüÀð¼Å£Î¸¨Ç þÆó¾¢Õ츢ýÈ ¿¢¨Ä¢Öõ; ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ Áì¸Ç¢ý ¯ÇôÒñ¨½ ¬üÚõ À½¢Â¢ø þýÛõ ¦¾¡¼÷óÐ ¯ÇÅÇòШÈôÀ½¢¸û þ¼õ¦ÀüÚ ÅÕÅÐ À¡Ã¡ð¼ò¾ì¸Ð ±É§Å ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ ±ÁÐ Áì¸Ç¢ü¸¡É À½¢ þýÛõ ÓüÚô¦ÀÈ Å¢ø¨Ä ¦¾¡¼÷óÐ À½¢¸û ¿¨¼¦ÀÈ §ÅñÎ ¦ÁýÚõ ÌÈ¢ôÀ¢ð¼¡÷.
சங்கதி
|
|
|
| கனேடியத் தேர்தல் குறித்து தமிழ் உணர்வாளர்கள் விழிப்பாக |
|
Posted by: நர்மதா - 12-20-2005, 10:20 AM - Forum: தமிழீழம்
- Replies (2)
|
 |
கனேடியத் தேர்தல் குறித்து தமிழ் உணர்வாளர்கள் விழிப்பாக இருத்தல் அவசியம்!
" ரொரன்ரோவைத் தளமாகக்கொண்டு இயங்கும் இரண்டு சிங்கள மாதாந்தப் பத்திரிகையின் முக்கிய விளம்பரதாரர். .."
"ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களின் வழிநடத்தலில் ஆரம்பிக்கப்பட்ட Sri Lanka Business Council ல் Director பதவி வகித்து வருகிறார்..."
கடந்த மாதம் ஸ்ரீலங்காவில் முடிவடைந்த தேர்தலில் தமிழர்களால் வகுக்கப்பட்ட மதிநுட்பமான நடவடிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களை நாம் நன்கு அறியக்கூடியதாகவுள்ளது.
இதேபோல, எதிர்வரும் ஜனவரி மாதம் கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அல்லது நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்? கனடிய மண்ணில் வாழ்ந்துவரும் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான தமிழீழ மக்களின் வாக்குப்பலம் கனடிய அரசியலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்? இவற்றை நாம் ஆராய்வது பொருத்தமானது.
கனேடிய அரசியலில் தமிழர்களின் செல்வாக்கினை அதிகரிக்க வேண்டுமாயின், எம்மவர்கள் சகல கட்சிகளிலும் அங்கத்தவராக இருக்க வேண்டியது மிக முக்கியமானதும் அவசியமானதொன்றாகும்.
எனினும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும், எதுக்கு ஆதரவு அளித்தாhல் எமது நோக்கம் நிறைவேறும் என்பதை துல்லியமாக கணிக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அமைப்புக்களுக்குள்ள முக்கிய கடமையாகும். இந்த வரலாற்றுப் பொறுப்பை எங்கள் அமைப்புக்கள் சரிவரச் செய்வார்கள் என நம்புகிறோம்!
அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனேடியத் தேர்தலில் தேசிய அரசியல் கட்சியான பழமைவாதக் கட்சியின் சார்பாகத் சிறீலங்காத் தமிழர் என்று சொல்லப்படுகின்ற ஒருவர் போட்டியிடுகின்றார்.
இவரது வெற்றியினை உறுதிப்படுத்தம் முகமாக பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழ் மக்களுக்குக் கனேடிய அரசியல் குறித்த நெழிவு சுழிவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வேட்பாளரின் பகுதியில் கணிசமான கனடியத் தமிழர்கள் வாழ்கின்றனர். எனவே இவர்களின் வாக்குகளைக் கவரும் முகமாகவும், ஒரு குறுகிய பார்வையுடனான அரசியல் ஆதாயத்திற்காகவும் எங்கள் அமைப்புக்களில் சிலர் இவரை ஆதரிப்பதற்கு முடிவுசெய்து, பிரச்சாரங்களை இவருக்காக வழங்கி வருகின்றனர்.
இவருக்கு வாக்களிப்பதற்கு முன்னர், இவர் யார்? எமது தமிழ்ச் சமூகத்திற்கு என்ன செய்தார்? இவ்வளவு காலமும் எங்கிருந்தார்? தமிழீழம் தொடர்பான இவரது நிலைப்பாடு என்ன? எம் தேசியத் தலைவனின் மீது இவர் கொண்டுள்ள கருத்து என்ன என்பதனையும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்மவர்கள் எமது மக்களுக்கு தெரிவிப்பது முக்கியம்.
ஒருவேளை எங்கள் அமைப்புக்களினால் இவர் பற்றிய விபரங்கள் சேகரிக்க முடியாமல் போயிருந்தால், இந்த ஆய்வின்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிறீலங்காத் தமிழரான இவர் பெயர் வின்சென்ட் வீரசுந்தரம், ரொரன்ரோவில் சுவாரகா ரவல்ஸ் என்னும் நிலையத்தின் உரிமையாளரும், விமானச்சீட்டு முகவராகவும் உள்ளார்.
ரொரன்ரோவைத் தளமாகக்கொண்டு இயங்கும் இரண்டு சிங்கள மாதாந்தப் பத்திரிகையின் முக்கிய விளம்பரதாரர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் ஆதரவுடன் ரொரன்ரோ வாழ் சிங்கள இனவாத அமைப்பின் அரவணைப்பில், ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களின் வழிநடத்தலில ஆரம்பிக்கப்பட்ட Sri Lanka Business Council Director பதவி வகிகத்து வருகிறார்.
இந்த அமைப்புத் தொடர்பாக இணையத் தளத்தில் கார்திகை தாதம் 12 ஆம் திகதி வெளியான செய்திகளையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்:
கனடாத் தமிழ் வர்த்தக சம்மேளனம் என்ற கனடியத் தமிழர்களின் அமைப்பைப் பிளவுபட வைத்து சிறிலங்காத் தூதரகத்தின் முழு அனுசரணையுடன் உருவாக்கப்பட்டதே இந்த கனடிய சிறிலங்கா வர்த்தக சம்மேளனம். இவர்கள் கடந்த காலத்தில் இலங்கை ஒரு நாடாளுமன்றக் குழுவுடன் விஐயம் செய்திருந்தனர்.
|
|
|
| குமுதத்தில் வந்த இலங்கையில் மீண்டும் போர் மேகங்கள் திரும்புக |
|
Posted by: SUNDHAL - 12-20-2005, 09:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
இலங்கையில் மீண்டும் போர்மேகங்கள் திரள்கின்றன. ஈழத் தமிழர்களின் சாதாரண உரிமைகளைக்கூட அடியோடு மறுக்கும் சக்திகளின் பிரதிநிதி மகிந்தா ராஜபட்சே, குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் சந்திரிகாவின் சுதந்திரக் கட்சி வேட்பாளர். அவரை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே போட்டியிட்டார். முன்னவர் ஒரு லட்சம் வாக்குகள்தான் கூடுதலாகப் பெற்றிருக்கிறார். நாடு தழுவிய அளவில் நடந்த தேர்தலில், ஒரு லட்சம் என்பது பெரிய வேறுபாடல்ல.
இந்தத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் வாக்களிக்கவில்லை. முப்பது லட்சம் பேரில் நூற்றுக்கணக்கில்தான் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர் என்று செய்திகள் வந்தன.
நாடாளுமன்றத் தேர்தல் என்றால் அவர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருவர். தமிழர் இயக்கங்களின் தங்கள் பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவர்.
சிங்களர் ஒருவர்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், இனவாதம் என்று வரும் போது, ஈழத்திலிருந்து தனியாகத் தங்களுக்கு எல்லைக்கோடு போட்டுக் கொள்வார்கள். நடந்து முடிந்த தேர்தலில் தமிழர் பகுதிகளுக்கு வந்து ரணில் விக்ரமசிங்கே கூட வாக்குக் கேட்கவில்லை. காரணம், சிங்களவர்களின் சீற்றத்திற்கும், புத்தத் துறவிகளின் அக்கினிக் கண்களுக்கும் ஆளாக வேண்டும் என்று அச்சம் கொண்டார்.
போர்முனையில் நின்ற ஈழத் தமிழர்கள் சமாதானத்திற்கும் தயாராக இருந்தனர். அவர்கள் தூக்கிய துப்பாக்கியில் குண்டு மட்டுமல்ல; வெண்புறாவும் கூடு கட்டி இருக்கிறது. எனவே தான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நார்வே எடுத்த முயற்சியின் காரணமாகப் போர் நிறுத்தம் செய்தனர். அப்போது ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தார். அவரே போர் நிறுத்த உடன்பாட்டில் அரசு சார்பாகக் கையெழுத்திட்டார். அவரிடமிருந்து ஈழத் தமிழர்கள் நிரம்ப எதிர்பார்த்தனர்.
ஈழத் தமிழர்களின் வடக்கு, கிழக்கு மாநிலப் பள்ளிகள், ஆலயங்கள், மாதாகோயில்களில் இன்றைக்கும் ராணுவ முகாம்கள் உண்டு. அந்த முகாம்களை மூடி ராணுவத்தை அதன் முகாமுக்கு அனுப்புவது என்பது உடன்பாட்டில் ஓர் அம்சம். ஆனால், அந்தச் சாதாரணக் கோரிக்கை கூடச் செயலுக்கு வரவில்லை. அங்கிருந்து ராணுவம் வெளியேற மறுக்கிறது என்றார் ரணில்.
தற்போது தங்களிடம் நவீன ஆயுதங்கள் இருப்பதாக இலங்கையின் புதிய ராணுவத் தளபதி கூறுகிறார். இதன் பொருள் என்ன? போர் நிறுத்த காலத்தில் இலங்கை அரசு தமது ராணுவத்தை நவீனப்படுத்திவிட்டது. நாசகார ஆயுதங்களை வாங்கிக் குவித்து விட்டது என்று அர்த்தம்.
இலங்கை அரசியல் திசையைத் தீர்மானிப்பது குடியரசுத் தலைவரோ, பிரதமரோ அல்ல. ராணுவம்தான். அதனால்தான், அமைதி உடன்பாட்டையே குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தது. அந்த ராணுவத்தில் ஈழத்தமிழர்கள் எந்தப் பொறுப்பிற்கும் வரமுடியாது. தமது பராக்கிரமத்தைக் காட்ட ஈழத்தை இலங்கை ராணுவம் மயான பூமியாகப் பயன்படுத்திக் கொள்ளும்.
வழியில் போகிறவனை அண்ணா என்று அழைத்தானாம். ஏண்டா! மடையா! என்னோடா பிறந்தாய்? முட்டாள்! என்றானாம் வழிப்போக்கன். அப்படித்தான் ஈழத்தமிழர்களை சிங்கள இனவாதிகள் பார்க்கிறார்கள்.
அந்த ராணுவத்திற்கு இசைவான ஓர் அரசு இப்போது அமைந்திருக்கிறது. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்தா ராஜபட்சே நாடாளுமன்றத்தில் முதல் உரை நிகழ்த்தினார்.
இலங்கை அரசு, சிங்கள இனவாதப் பேரரசுதான் என்பதனை அவர் தெளிவாக அறிவித்தார். இதுவரை சந்திரிகாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஈழத்தமிழர்களுக்கு அளித்த உறுதிமொழியையும் உதறித் தள்ளினார்.
இலங்கைக்கு, சிங்களவர்களின் ஒற்றை ஆட்சிதான், கூட்டாட்சி என்பது இல்லை என்றார். ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். இது ஈழ மக்களுக்கு விடுத்த போர் பிரகடனமாகும்.
இந்தப் பிரகடனம் கேட்டு ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி அடையவுமில்லை. வியப்படையவும் இல்லை. சிங்கள இனவாதிகள் தங்களுக்கு எந்த உரிமையும் தரமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். உரிமையைப் போராடித்தான் பெற முடியும் என்பதனை அவர்கள் அறிவார்கள்.
ஆனால், இலங்கை அரசுடன் ஏன் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்? தங்கள் விடுதலை இயக்கத்திற்கு சர்வதேச அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். உரிமைகளை அவர்கள் பெற முடியவில்லையென்றாலும் உலக அரங்கில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது. கெரில்லாப் போருக்கு மட்டுமல்ல; சமாதானத்திற்கும் தயார் என்பதனை அவர்கள் உலகிற்கு உணர்த்திவிட்டார்கள்.
சமரசத்திற்கோ, சமாதானத்திற்கோ, உடன்பாட்டிற்கோ தயாராக இல்லை என்பதனை ராஜபட்சே தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் இனி எந்தத் தாக்குதலையும் ராணுவம் எதிர்கொள்ளும் என்று, இலங்கையின் புதிய தளபதி தெரிவித்திருக்கிறார். சூரியனுக்குப் பனிக்கட்டிகள் சவால் விடுகின்றன.
நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய முதல் உரையில் ராஜபட்சே ஓர் நச்சுக் கருத்தை நட்டு, இலங்கைச் சுழலுக்குள் இந்தியாவை இழுத்திருக்கிறார். என்ன சொல்கிறார்?
ஐ.நா. மன்றத்தின் உதவியோடு ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். வேடிக்கை.
நார்வே நாட்டின் முன் முயற்சியால் ரணில் விக்ரமசிங்கேயுடன் ஈழ விடுதலை இயக்கம் உடன்பாடு கண்டது. அதன் பின்னர் சந்திரிகாவுடன் உடன்பாடு கண்டது. இந்த உடன்பாடுகளை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை. ஆனால், ஈழமக்கள் பொறுமையின் பெட்டகமாக இருந்தனர்.
இப்போது இந்தியாவை ஏன் புதிய குடியரசுத் தலைவர் ராஜபட்சே அழைக்கிறார்? அதன் மூலம் ஈழ மக்களை அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். அந்தக் கூண்டில் நிற்க வேண்டியது இலங்கை இனவாத அரசுதான். உலகம் அறிய நடுநிலை நாடான நார்வேயின் முன்னிலையில் கையெழுத்திட்ட இரண்டு உடன்பாடுகளையும், எட்டிக்காயாகக் கருதியது அந்த அரசுதான்.
எந்தக் காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும், ஈழத் தமிழர்களை இலங்கையின் மைந்தர்களாக சிங்கள இனவாதம் ஏற்றுக் கொள்ளாது. அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் கருதுகிறது. இனியும் கருதும். போராடித்தான் தங்கள் நியாயத்தை, உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற நிலைக்கு ஈழத்து மக்களைத் தள்ளுவது சிங்கள இனவாதம்தான். அவர்கள் மகாவம்சப் பரம்பரையினராம். புத்த புராணங்களில் ஆதாரங்களைத் தேடுகிறார்கள். ஈழத் தமிழர்கள் நசுக்கப்பட வேண்டிய பொட்டுப் பூச்சிகளாம்.
இந்த முருங்கைப் பந்தலில் நின்று எதற்காக இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள்?
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராக சமர வீரா பொறுப்பேற்றிருக்கிறார். அண்மையில் அவர் டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தார்.
ஈழப்பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண புதிய அரசு தயாராக இருப்பதாகப் பிரதமரிடம் தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தை திறந்த மனதுடன் நடைபெற வேண்டும் என்று, புதிய ஜனாதிபதி ராஜபட்சே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஈழ விடுதலை இயக்கத்துடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவுகளை அதன் ராணுவமே புதை குழிக்கு அனுப்பியது. இது வரலாறு.
இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை என்று சமர வீரா புதிய திரை விரிக்கிறார். ஆனால், ராஜபட்சேயின் நாடாளுமன்ற உரையில் அதற்கான அறிகுறியே இல்லை.
ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காணும் முறையில் ராஜபட்சேயின் உரை அமையவில்லை. போருக்குத் தயார் என்று புதிய ராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி மூலம் தான் ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது, இந்திய அரசின் நிலைப்பாடு. வாஜ்பாய் வகுத்த இந்தக் கொள்கைகளை, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இலங்கையில் ஒற்றை ஆட்சிதான்; கூட்டாட்சி இல்லை என்று, நாடாளுமன்றத்தில் ராஜபட்சே அறிவிக்கிறார். பின்னர் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற முடியும்?
இலங்கையில் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் சம்மட்டி அடியாகத் தெரிவித்திருக்கிறார். வரவேற்கத்தக்கது.
கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு என்பதனை இலங்கை அரசு ஏற்க வேண்டும். ராஜபட்சேயின் உரை திருத்தப்பட வேண்டும். அதுவரை இலங்கை அரசுடன் இந்தியா எந்த உடன்பாடும் கொள்ளக்கூடாது.
ஏனெனில் ஈழப் பிரச்னை என்பது முப்பது லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை. அவர்களுடைய அரசியல் உரிமைகள், பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதில், ஆறுகோடித் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர்.
யுத்தம் என்றால் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடந்தது. இனி போர் என்றால் கொழும்பில்தான் நடைபெறும்.
Thanks:Kumudam..
|
|
|
|