Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 341 online users.
» 0 Member(s) | 338 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,061
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ¡ú ¸Çõ - Å¢Õиû
Posted by: ¦ÀâÂôÒ - 12-21-2005, 02:06 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (200)

<img src='http://img491.imageshack.us/img491/340/yarl4ug.jpg' border='0' alt='user posted image'>
<b>þó¾ ¬ñÎ ÓÊÂô§À¡Ìõ ¾Úš¢ø, þó¾ ¬ñÎ ¸Çò¨¾ ¸Ä츢 ¯È׸ÙìÌ Àð¼í¸Ùõ Å¢ÕиÙõ ÅÆí¸ôÀ¼ ¯ûÇÉ. ¾¸¨ÁÔûÇ ¯ÚôÀ¢É÷¸¨Ç ¿£í¸û Óý¦Á¡Æ¢¾ø §ÅñÎõ. «¾¨É þý¦É¡ÕÅ÷ ÅÆ¢¦Á¡Æ¢Â×õ §ÅñÎõ. þÚ¾¢ò¾£÷ôÒ ¦ÀâÂôÒ & º¢ýÉôÒÅ¡ø ±Îì¸ôÀÎõ. «Ð§Å ÓÊÅ¡ÉÐ</b>

[size=14]<b>ÅÆí¸ôÀ¼×ûÇ º¢Ä Àð¼í¸û</b>

> º¢Èó¾ ÁðÎÚòÐÉ÷
> º¢Èó¾ ¦ÅðÎÚòÐÉ÷
> º×ñÎô À¡÷ðÊ
> ¦¼ý„ý À¡÷ðÊ
> ¬ø þó¾¢Â¡ §Ãʧ¡
> ¸¡½¡Áø §À¡§É¡÷
> ¬Ê «Á¡Å¡¨º
> º¨À ÌÇôÀ¢ :evil:

þýÛõ ÀÄ..
¿£í¸Ùõ Àð¼í¸¨Ç º¢À¡Ã¢Í ¦ºöÂÄ¡õ.

Print this item

  பலாலிக்கு உதவினால் தமிழ்நாடு காஸ்மீராகும்:
Posted by: நர்மதா - 12-21-2005, 01:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

பலாலிக்கு உதவினால் தமிழ்நாடு காஸ்மீராகும்: இந்தியாவுக்கு வைகோ எச்சரிக்கை

பலாலி சிறிலங்கா இராணுவ விமான தளத்தைச் சீரமைக்க இந்திய அரசாங்கம் உதவினால் தமிழ்நாடு காஸ்மீராகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.


ஈரோட்டில் கடந்த திங்கட்கிழமை பேராசிரியர் சு.ப. வீரபாண்டியனின் "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்" நூலை வெளியிட்டு வைகோ பேசியதாவது:

பழங்காலத்தில் இருந்தே ஈழத்தில் தமிழர்கள் தனி இனமாக வாழ்ந்ததற்கு சான்று உள்ளது. சிங்கள மொழி பிரதானப்படுத்தப்பட்டபோது தான் தனி ஈழப்பிரச்சினை எழுந்தது. தனி ஈழம் அமைப்பது தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.

இந்தியா-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாக இருந்தபோது அதற்கு எதிராக பிரதமர்இ சோனியா காந்திஇ பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் பேசினேன். அதையடுத்து ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

இப்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை இந்தியா உதவியுடன் சீரமைத்து வருவதாக சிறிலங்கா விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். இந்திய அதிகாரிகள் விரைவில் பார்வையிட வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலாலி விமானதளத்தைப் பயன்படுத்தி தமிழர்களை சிறிலங்கா இராணுவம் கொன்றது. எனவே இந்த விமானதளம் சீரமைக்கப்பட்டால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழர்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்கெனவே இந்தியா உதவி செய்துள்ளது. மீண்டும் இதுபோல இந்தியா அந்த நாட்டு இராணுவத்துக்கு உதவக்கூடாது.

இலங்கையிலே போர் மேகம் சூழ்ந்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வெளியாகின்றன.

சிறிலங்காவுக்கு உதவி செய்யும் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கமாட்டார். ஆனால் ஒரு சில இந்திய அதிகாரிகள்இ சிறிலங்காவுக்கு உதவ தயாராக இருப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.

அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையும் வகையில் நான் சொல்வதை இங்கே உள்ள உளவுத்துறையினர் கவனமாகக் குறிப்பெடுத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. ஆனால் சிறிலங்காவுக்கு நீங்கள் உதவி செய்தால் எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு இன்னொரு காஸ்மீரமாகிவிடும். இதை அப்படியே அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையுமாறு குறிப்பெடுத்து அனுப்புங்கள்.

இந்தியா என்பது நாடு அல்ல உபகண்டம். இக்கருத்தை நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். தேசிய மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லையென்றாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் தமிழுக்கு ஆபத்து வந்தால் தேசிய இனத்தின் உரிமைக்காக போராட வேண்டிய சூழல் உருவாகும்.

மதத்தால் பாகிஸ்தானும்இ இனத்தால் அயர்லாந்தும்இ மொழியால் வங்காளதேசமும் பிரிந்தது. அப்படியொரு நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது.

இந்தக் கருத்து அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றார் வைகோ.

இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்இ தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன்இ திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதினம்

Print this item

  மன்னித்துவிடு....மன்னிக்கிறேன்...
Posted by: kpriyan - 12-21-2005, 12:40 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

உன்னை அதிகமாக காதலிப்பதிற்கு மன்னித்துவிடு
என்னை உனக்கு பிடிக்காமல் போனதிற்கு மன்னிக்கிறேன்

என் இதயத்தின் வேண்டுகோள்களை மன்னித்துவிடு
அதை நீ செவிமடுக்காததிற்கு நான் மன்னிகிறேன்

உன்னை உயர்வாக வைத்ததிற்கு மன்னித்துவிடு
என்னை ஆழ தள்ளியதிற்கு மன்னிக்கிறேன்

உன்னை பிரியமுடியாமல் தவிப்பதிற்கு மன்னித்துவிடு
பிரிய எண்ணிய உன்னை மன்னிக்கிறேன்

நம்பிக்கையையும் கனவுகளையும் சுமந்ததிற்கு மன்னித்துவிடு
மன்னிகிறேன் அனைத்தயும் நீ நெஞ்சோடு நசித்ததிற்கு

Print this item

  தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு கண்காணிப்புக்குழு செல்வதை தவ
Posted by: Vaanampaadi - 12-21-2005, 12:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு கண்காணிப்புக்குழு செல்வதை தவிர்த்துக்கொள்ளும்?
(எஸ்.என்.ஆர். பிள்ளை)


அம்பாறை அறுகம்பை பகுதியில் வைத்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலி மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து நாம் வழங்கிய தீர்ப்பை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளõவிட்டாலும் எமது தீர்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லையென யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹொக்லண்ட் நேற்று கேசரிக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என நாம் தீர்ப்பு வழங்கினோம். ஆனால், அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அவரது நீண்ட கடிதத்தில் மறுத்துரைப்பதற்கான காரணங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் வழங்கியுள்ள தீர்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லையென தமிழ்ச்செல்வனுக்கு அறிவித்துள்ளேன்.

புலிகள் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், புலிகளே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் ஹொக்லண்ட் தெரிவித்தார்.

அதேவேளை, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதால் அதற்குப் பின்னர் யாழ். மாவட்டத்தில் பரவலான பேரணிகள், கலவரங்கள் நடைபெறலாம் என யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை மோதல்கள், தாக்குதல்கள் இடம்பெறும் வேளைகளில் அவ்விடத்துக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் தமது கடமையை செய்யும் அதேவேளை, தமது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.


Virakesari

Print this item

  எந்த பகுதியிலும் விமானப்படை விமானங்கள் பறக்கலாம்
Posted by: Vaanampaadi - 12-21-2005, 12:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

இலங்கையின் வான்வெளியின் எந்த பகுதியிலும் விமானப்படை விமானங்கள் பறக்கலாம் விமானப்படை தளபதி
20.12.2005 (திவயின பத்திரிகை)


வான் வெளியில் எந்த ஒரு எல்லைகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாமையினால் இலங்கையின் வான் வெளியில் எந்த ஒரு பகுதியிலும் பறக்கக் கூடிய உரிமை விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களுக்கு இருப்பதாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா தெரிவித்தார்.

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என நிலப் பரப்பினை பிரித்து இருந்தாலும் வான் வெளி அவ்வாறு பிரிக்கப்படவில்லை.

எனவே அதன் பூரணமான உரிமை இலங்கை விமானப் படையிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்படாத தரைப் பகுதியின் மேலாக விமானங்கள் செலுத்தப்படுவது போர் நிறுத்த ஒப்பந்தம் மீறலாகாது என்றும் அவற்றின் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதானது போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Virakesari

Print this item

  இலங்கை பெண் ரியாத்தில் தற்கொலை
Posted by: Vaanampaadi - 12-21-2005, 12:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கை பெண் ரியாத்தில் தற்கொலை வெளிவிவகாரஅமைச்சு அறிக்கை
(நமது நிருபர்)


இலங்கையிலிருந்து ரியாத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றவர் தற்கொலை செய்துகொண்டதாக ரியாத்தின் இலங்கைக்கான தூதுவராலயம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர் ரம்புக்கனை முஸ்லிம் பள்ளி ஒழுங்கை இல 69/2 என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஜெசிமா ஸ்மையில் சித்தி என இனங்காணப்பட்டுள்ளார்.

தற்கொலை தொடர்பாகவும் அவரின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட முயற்சிகள் கை கூடவில்லை.

எனவே அவரின் பூதவுடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொது மக்களின் உதவியை நாடுகின்றது. விபரம் தெரிந்தோர் 0112437635 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது அவரது உறவினர்களுக்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


Virakesari

Print this item

  யாழ். புங்குடுதீவில் பாரிய சுற்றிவளைப்பு:
Posted by: Vaanampaadi - 12-21-2005, 12:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ். புங்குடுதீவில் பாரிய சுற்றிவளைப்பு: 12 பேர் கைது
[புதன்கிழமை, 21 டிசெம்பர் 2005, 16:15 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். புங்குடுதீவில் இன்று புதன்கிழமை காலை சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் 12 பேரை கைது செய்துள்ளனர்.


புங்குடுதீவு பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதிகளில் படையினர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் இந்த சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டு வீடுகளிலும், வீதிகளிலும் நின்றோரை படையினர் கைது செய்துள்ளனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த பத்மநாதன், ஜீவகுமார், கணேஸ், பவா, சிறீஸ்காந்தன், ராசா, ஜெயந்தன், குமார், பிரபாகரன், கோடீஸ்வரன், சிறீஸ்கந்தராசா, சிறிகாந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் யாழ். அரியாலை அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப்படை காவலரண் ஒன்றின் மீது இன்று காலை 10 மணியளவில் அடையாளம் தெரியாதோர் நடத்திய கைக் குண்டுத் தாக்குதலில் சிறிலங்காப்படை சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Puthinam

Print this item

  Feeding a Sri Lankan school for a year
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:53 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Feeding a Sri Lankan school for a year
By Jacqueline Theodoulou

A CYPRIOT charity is to support the children of a Sri Lankan school who fell victim of last year’s tsunami.

The initiative by Medecins du Monde Cyprus involves feeding the 1,200 children of the Hegala Mahavijyalaya Kosgoda School every day for 12 months.

It will cost an estimated £55,000 to realise the plan, which will cover expenses involving the food product company, the transportation of the food to the school, the administration costs and other possible costs.

Medecins du Monde-Cyprus is part of the worldwide organisation and has so far offered its medical help to numerous communities that were struck by the tsunami.
From December 2004 until February this year, 45 volunteers visited Bentota in Sri Lanka and treated more than 5,800 patients for free. They also distributed food.
Equipment was bought for three regional schools and pharmaceutical materials for eight hospitals.

They also helped victims in the Maldives, Seychelles and Tanzania where many died and thousands needed medical attention.

For donations in aid of the doctors’ task, the public can use one of the following accounts:

l Bank of Cyprus 0114–01-016785
l Laiki Bank 015-21-008116
l National Bank of Greece (Cyprus) 525 / 519602-9
l Arab Bank 1301–093320-500
l Hellenic Bank 121-10-326760-00
l ALPHA BANK 202–101–000274–1
l Central Co-Op Bank (all branches) 50–007964
l Strovolos Co-Op 2042994–8
l Co-Op Building society 2011101-4
l Aglandja Co-Op 38110807

Donors can also send cheques to the following address:
Medecins du Monde – Cyprus
PO Box 28817
2083 Nicosia
For more information contact 22-452390 or 70009990

http://www.cyprus-mail.com/news/main.php?i...=23445&cat_id=1

Print this item

  Thugs attack aid buses
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:49 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Thugs attack aid buses

21 December 2005
BUSES damaged by vandals at Ballymena bus station last week were destined for Sri Lanka as part of the Tsunami Appeal.

Over 60 windows were smashed on seven buses, causing around £40,000 of damage last Friday.

It has now emerged four of the buses were bound for south east Asia as part of the relief effort.

Sam Todd, the depot's district manager, said: "Translink are sending a lot of old buses out to the region and the damaged ones were waiting to be sent out and obviously they will have to be fixed now before they can go."

Sinn Fein MLA for North Antrim Philip McGuigan said: "Not only does Translink provide a service that everyone in the community here can avail of and which is a necessity for many people, but the company also sends buses to Asia to help those whose lives were devastated by the Tsunami. The fact it was these buses that were attacked is terrible."



http://www.belfasttelegraph.co.uk/news/sto...sp?story=673585

Print this item

  சூதும் வாதும் வேதனை தரும்!
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:27 AM - Forum: நகைச்சுவை - No Replies

<img src='http://www.thinakural.com/New%20web%20site/Logos/dr.gif' border='0' alt='user posted image'>
கொழும்பிலுள்ள ஒரு நிறுவனத்தின் நிருவாகி வங்கியில் மாற்றுவதற்காக ஒரு காசோலையைத் தனது கார்ச் சாரதியிடம் கொடுத்ததுடன், திரும்பும் வழியில் காரின் `பிரேக்'கை கராஜில் பரிசோதித்து வரும்படியும் அவரைக் கேட்டுக் கொண்டார்.

பகல் சென்ற சாரதிக்காக நிருவாகி காத்திருந்தார். பின்னிரவாகியும் காரையும் சாரதியையும் காணோம்.

மறுநாள் முற்பகல் நிருவாகி பரபரப்புடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று காருடன் சாரதியைக் காணவில்லையென்று முறைப்பாட்டை பதிவு செய்தார்.

அதே நேரத்தில் அந்தச் சாரதி`கூலாக' மேற்படி நிறுவனத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து கார் ஒரு குறிப்பிட்ட கிளப்பில் கிடப்பதாகவும் ஒரு இலட்சம் ரூபாவுடன் வந்து அதைக் கொடுத்து காரை மீட்டுச் செல்லும் படி நிருவாகிக்கு தெரிவிக்கும் படியும் தகவல் கொடுத்தார்.

நிருவாகி சீற்றத்துடன் பொலிஸார் சகிதம் அங்கு சென்ற போது குறிப்பிட்ட சாரதி காசோலைப் பணத்தை சூதாட்டத்தில் இழந்த பின் காரைப் பணயம் வைத்து ஒரு இலட்சம் ரூபா பெற்று அதனையும் சூதாட்டத்தில் இழந்துவிட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியது.

அந்தப் பலே ஆசாமி இப்போது மோசடிக் குற்றச்சாட்டில் பொலிஸ் வலையில் வகையாகச் சிக்கியுள்ளார்.

சூதும் வாதும் வேதனை தரும்!

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...ember/21/DR.htm

Print this item