Yarl Forum
இலங்கை பெண் ரியாத்தில் தற்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கை பெண் ரியாத்தில் தற்கொலை (/showthread.php?tid=1906)



இலங்கை பெண் ரியாத்தில் தற்கொலை - Vaanampaadi - 12-21-2005

இலங்கை பெண் ரியாத்தில் தற்கொலை வெளிவிவகாரஅமைச்சு அறிக்கை
(நமது நிருபர்)


இலங்கையிலிருந்து ரியாத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றவர் தற்கொலை செய்துகொண்டதாக ரியாத்தின் இலங்கைக்கான தூதுவராலயம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர் ரம்புக்கனை முஸ்லிம் பள்ளி ஒழுங்கை இல 69/2 என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஜெசிமா ஸ்மையில் சித்தி என இனங்காணப்பட்டுள்ளார்.

தற்கொலை தொடர்பாகவும் அவரின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட முயற்சிகள் கை கூடவில்லை.

எனவே அவரின் பூதவுடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொது மக்களின் உதவியை நாடுகின்றது. விபரம் தெரிந்தோர் 0112437635 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது அவரது உறவினர்களுக்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


Virakesari