Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 335 online users.
» 0 Member(s) | 332 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,302
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,057
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  "துடிதுடிக்கும் தொப்புள் கொடி உறவுகள்"
Posted by: Nellaiyan - 12-27-2005, 10:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்: டிச.29-ல் ஒரே மேடையில் நெடுமாறன், வைகோ,வீரமணி,ராமதாஸ் பங்கேற்பு!!
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 23:18 ஈழம்] [புதினம் நிருபர்]
திராவிடர் கழகம் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது.


சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை வகிக்கிறார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலை வகிக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் என்று திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

http://www.eelampage.com/?cn=22898

Print this item

  தேசிய தலைவர்
Posted by: ஈழமகன் - 12-27-2005, 08:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு தேசிய தலைவர் அஞ்சலி.....

Print this item

  பட்டிமன்றம் தொடர்வோமா???
Posted by: Rasikai - 12-27-2005, 04:07 PM - Forum: போட்டிகள் - Replies (1278)

[b]யாழ்கள உறவுகளே!!!

முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா??

நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்

இதற்கு நீதிபதியாக யாரை தெரிவிக்கலாம் எனவும் கூறவும். பங்கு பற்ற விரும்புவோர் உங்கள் பெயர்களை இங்கு பதியவும். உங்களுக்கு விருப்பமான தலைப்பையும் சொல்லவும் இல்லாதவிடத்து தலைப்பை நான் சொல்கிறேன்.

Print this item

  ஆசிய கடல்கோளைத் தொடர்ந்து உலகின் பல பிராந்தியங்களை
Posted by: நர்மதா - 12-27-2005, 03:37 PM - Forum: தமிழீழம் - No Replies

ஆசிய கடல்கோளைத் தொடர்ந்து உலகின் பல பிராந்தியங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் இயற்கை


இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் கடலுக்கடியில் கடந்த வருடம் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட ரிச்டர் 9 அளவிலான பாரிய பூகம்பமும் அதனால் உருவான கடல்கோள் அனர்த்தமும் (சுனாமி) காரணமாக தெற்காசிய நாடுகள் உட்பட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 2- 1ஃ2 இலட்சத்திற்கு இடைப்பட்ட மக்கள் பலியானதுடன் ஏராளமானோர் காணாமல் போயும் உடல் ஊனமுற்ற நிலைக்கும் தள்ளப்பட்டு அநாதைகளாகியுள்ளனர்.

முழு உலகையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி சோகத்தில் ஆழ்த்திய இந்த பாரிய அனர்த்த நிகழ்விற்கு ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது.

இயற்கையின் கோர விபத்துக்களுக்கு முகம்கொடுக்க மனிதர்கள் சக்தி மிக்கவர்கள் அல்லர் என்பதும் இயற்கைக்கு மாறாக நடப்பது பாரிய விபரீதங்களை உண்டுபண்ணும் என்றும் விஞ்ஞான முன்னேற்றம் மூலம் இயற்கையை வெல்ல முடியாது என்றும் உலகில் ஏற்படும் அழிவு நடவடிக்கைகளுக்கு நாமே பொறுப்பு எனவும் இந்த கோர சம்பவம் முழு உலகத்திற்கும் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளது.

இப்போதும் இயற்கை மாற்றங்களினால் பல்வேறு அனர்த்தங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நிகழ்காலத்தில் போல் எதிர்காலத்திலும் தெற்காசியா உட்பட உலகம் முழுவதும் பல பாரிய இயற்கை அழிவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென பூகோளவியல் ஆய்வாளர்கள்இ விஞ்ஞானிகள் ஆகியோர் தமது ஆராய்ச்சி கணிப்பீடுகள் மூலம் எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் ஆராய்ச்சிகள் முழுவதினதும் கூற்றுகளின் படி இன்றோ நாளையோ அல்லது அடுத்த வருடத்திலோ 50 வருடங்கள் தள்ளியோ மீண்டும் கடல்கோள் அனர்த்தமொன்று நிகழும் வாய்ப்பும் பாரிய பூகம்ப அழிவுகள் இடம்பெறும் அவதான நிலைமையும் தென்படுவதாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

இவ்வாறான செய்தித் தகவல்கள் மக்களை அச்சத்திற்குள்ளாக்கவோ அச்சுறுத்தவோ கூறுபவை அல்ல. இயற்கை அழிவுகளிலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகின்றவை.

உலக வரலாற்றில் 1755 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி (போர்த்துக்கல்) அத்லாந்திக் சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய கடல் அலைகள் ஐரோப்பாவின் லிஸ்மன் நகரத்தை தாக்கி அழித்துள்ளது. பூகோளவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதன்படி ரிச்டர் 8.7 அல்லது 9 அளவிலான கடலுக்கடியில் பூகம்பமொன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் 250 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தம் அந்த நாட்களின் மக்கள் தொகைக்கு அமைய ஒரு சில விநாடிகளில் 10 ஆயிரத்திற்கும் 30 ஆயிரத்துக்கும் இடைப்பட்டவர்கள் இதில் பலியாகியுள்ளதாக குறிப்புகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இது அச்சந்தர்ப்பத்தில் பாரிய மனித இழப்பாகவும் பெரும் அழிவு ஏற்பட்ட முதல் சம்பவமாகவும் பதிவாகியிருக்கிறது. ஸ்பானிய நாட்டுக்கும் வடஆபிரிக்காவிற்கும் இடையிலும் இந்த கடல் அலை அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர். அன்றைய அந்தக் கடல் அலை பெல்ஜியம்இ பிரித்தானியாஇ பிரான்ஸ்இ அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தையும் தாக்கி இருந்தது. பாதுகாப்பு தேடி கட்டிடங்களுக்குள் அடைக்கலம் தேடிய பலர் அந்த கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சோகக் கதை மேலும் தெரிவிக்கிறது.

கடந்த வருடம் நாம் முகம் கொடுத்த கடல்கோள் அனர்த்தத்திற்கு ஒத்த கடல் அலை அனர்த்தமே அன்றும் நிகழ்ந்துள்ளது. கடல் நீர் வற்றி திடீரென பெருக்கெடுத்து கரையே தாண்டி சொற்ப நேரத்திற்குள் அழிவை ஏற்படுத்தி விட்டு அமைதி கொண்டுள்ளது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தினதும் மக்கள் இந்த அழிவிற்கு முகம் கொடுத்திருந்தனர்.

1963 ஆம் ஆண்டில் சிலி நாட்டிலும் கடல் பெருக்கெடுத்து கடல்கோள் அனர்த்தமொன்று ஏற்பட்டு பாரிய அழிவொன்று ஏற்பட்டுள்ளது.

1970 ஜனவரி 5 ஆம் திகதி சீனாவின் யூஷான் என்ற இடத்தில் ரிச்டர் 8.0 அளவிலான பூகம்பம் ஒன்று இடம்பெற்று அதில் 15இ621 பேர் பலியாகியுள்ளனர். 1974 மே 11 ஆம் திகதி ரிச்டர் 7.1 அளவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 10 ஆயிரம் பேரும்இ 1976 இல் டெக்ஷாஸில் 7.8 ரிச்டர் அளவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 42 ஆயிரம் பேரும் சொத்து சேதங்களும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரண்டாம் தடவை டெக்ஷாஸ் பூகம்பத்தில் 3இ700 பேர் இறந்துள்ளனர்.

1994 டிசம்பர் 24 ஆம் திகதி பாகிஸ்தான் பட்டானில் ரிச்டர் 6.2 அளவில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 5இ300 பேரும்இ 1993 செப்டம்பர் 30 ஆம் திகதி மஹாராஸ்டிராவில் ரிச்டர் 6.4 அளவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 7இ601 பேரும்இ 1996 ஜனவரி 17 இல் ஜப்பான் கோபேயில் 7.2 அளவில் உருவான பூகம்பத்தில் 6இ424 பேர் பலியாகியும் 1999 செப்டெம்பர் 21 ஆம் திகதி தாய்வானில் இடம்பெற்ற ரிச்டர் 7.6 அளவு பூகம்பத்தில் 2இ400 பேரும்இ 2001 ஜனவரி 26 ஆம் திகதி குஜராத்தில் 9 ரிச்டர் அளவு பூகம்பத்தில் 20 ஆயிரம் பேரும்இ 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்திராவில் 9 ரிச்டர் அளவு கடல் பூகம்பத்தில் 2 இலட்சம் பேர் வரையிலும் பலியாகினர்.

2005 அக்டோபர் 2 ஆம் திகதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இச்சம்பவத்தின் போது ஆப்கான் இந்திய எல்லைகளும் பாதிக்கப்பட்டன.

வரலாற்றில் 2003 ஆம் ஆண்டு அதிகளவான இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ள ஆண்டாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் 700 சம்பவங்கள் உலகம் முழுவதும் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் ஏற்பட்ட அழிவுகளைவிட 2004 டிசம்பர் 26 ஆம் திகதி பூகம்பம் இயற்கை அழிவு சாதனை பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு சூறாவளி கரிபியன் மெக்ஸிகோ மற்றும் பிலா போன்ற பகுதிகளில் வில்மாசூறாவளி. அமெரிக்காவின் பாரிய இயற்கை அழிவு கத்தரீனா சூறாவளி மூலம் ஏற்பட்டது. ரீட்டா என்ற சூறாவளி அதனைத் தொடர்ந்தது. வெள்ளம் காரணமாக அழிவுகள் அதிகரித்துக் கொண்டு போயின.

இதற்கிடையில் கௌதமாலாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 2 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதேவேளைஇ போர்த்துக்கல்லிலும் சூறாவளி உருவாகி பாரிய இயற்கை அனர்த்தம் ஒன்றை உருவாக்கியது.

உலகில்இ முன்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் இப்போது ஆண்டு தோறும் சில சந்தர்ப்பங்களில் அடுத்த அடுத்த நாட்களிலும் இடம்பெற்று வருகின்றன.

இவற்றுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் பலவற்றை முன்வைத்து வரும் நிலையில் பூமியில் உருவாக்கப்பட்டுள்ள தகடுகள் அதிக உஷ்ணம் காரணமாக அதிக அசைவுகளை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஞ்ஞான முன்னேற்றமும் இராசாயன பாவனை அதிகரிப்பும் ஓசோன் படல ஓட்டைகளும் எரிபொருள் மூலம் உருவாகும் புகை மற்றும் காடு அழிப்பு போன்றவையே உலகில் ஏற்படும் இயற்கை அழிவுகளுக்கு வழி வகுத்துள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புவி 12 தட்டுக்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 8 தகடுகள் அவ்வப்போது உரசிக் கொள்கிறது. இதனால் பொருத்துக்கள் காணப்படும் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளில் பூமி அதிர்வுகள் கடல் கொந்தளிப்புகள் உருவாகின்றன. எரி குழம்புகள் வெளியேறுகின்றன. தகடுகளின் அதிக நகர்வுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பூமிக்கடியிலிருக்கும் தகடுகளின் அசைவுகள் மூலம் ஏற்படும் நில அதிர்வு பூகம்பங்கள் ரிச்டர் அளவில் மதிப்பிடப்படுகின்றன.

1.9 அளவு கடலுக்குள் மாத்திரம் தாக்கத்தை உண்டு பண்ணும்.

2.9 தொங்கும் பொருட்களை அசையச் செய்யும்

3.9 உழவு இயந்திரமொன்றில் பயணம் செய்யும்போது ஏற்படும் நடுக்கத்தை போன்ற தாக்கத்தை உண்டு பண்ணும்.

4.9 ஜன்னல்கள்இ கண்ணாடி பொருட்களை உடைக்கும்.

5.9 தளபாடங்கள் வீசி எறியப்படும் சுவர்களில் வெடிப்பு ஏற்படும்.

6.9 கட்டிடங்கள் சேதமாகும்.

7.9 அத்திவாரங்களுடன் கட்டிடங்கள் பிடுங்கி எடுக்கப்படும். நிலத்தில் வெடிப்பு உருவாகும்.

8.9 உறுதியான பாலங்கள் உடைந்து அழியும்

9 க்கும் மேல் எல்லாம் இல்லாமல் போகும்

நில நடுக்க அளவு மானிகளை ஜப்பான்இ அமெரிக்கா போன்ற நாடுகள் தம் வசம் வைத்துள்ளன. அந்த சாதனங்கள் ஆபத்தை முன்கூட்டியே அறிவித்து விடும். ஆபத்து எப்போது எவ்வாறு இடம்பெறும் என்பதனை கூற யாராலும் முடியாதுள்ளது. எமது விஞ்ஞான முன்னேற்றம் இன்னும் அந்த இடத்தை எட்டிப் பிடிக்கவில்லை.

இதனாலேயே நாம் அவ்வப்போது திடீர் அழிவுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். இன்றைய கண்டுபிடிப்புகளை நாம் புறக்கணித்து விட முடியாது. அதனாலேயே தான் இப்போது நாம் அழிவுகளை குறைத்துக் கொள்ள தயாராக இருந்து வருகின்றோம். எமது நாடுகள் போன்ற நாடுகளில் இவ்வாறான வசதிகள் இல்லாததே அழிவுகளுக்கு முகம் கொடுக்க சந்தர்ப்பத்தை உருவாக்கி வருகிறது.

இலங்கை கடற்பரப்பு ஆபத்து நிறைந்த இந்திய கடற் பரப்பின் நிலத் தகடுகளின் பொறுத்து அமைந்துள்ள பகுதிக்கு சமீபமாக இருக்கின்றதென்பதை நாம் மறுக்க முடியாது. எமக்கு நேரடி பாதிப்புகள் ஏற்படாத போதும் சுமாத்திரா நிகழ்வு போன்ற ஓர் சம்பவத்தின் போது நாம் பாதிப்புகளை எதிர்நோக்கலாம்.

எமக்கு இன்றுள்ள எதிர்வுகூறல் மிருகங்களின் திடீர் அசாதாரண நடவடிக்கைகள் மாத்திரமே. இதனை மனதில் வைத்து இயற்கை சவால்களை எதிர்நோக்க நாம் தயாராக வேண்டும்.

தினக்குரல்

Print this item

  இராமெஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
Posted by: narathar - 12-27-2005, 02:04 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (16)

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்கள், மீனவர்களின் கைக் கடிகாரங்கள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் 30 படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த அவர்கள் இரவு அங்கேயே தங்கியுள்ளனர்.

இன்று காலை அவர்கள் கரை திரும்ப தயாராகிக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை வீரர்கள் அங்கு வந்து அவர்கைள சுற்றி வளைத்தனர்.

பின்னர் தமிழக மீனவர்களைத் தாக்கிய கடற்படை வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் மீனவர்கள் அணிந்திருந்த கைக் கடிகாரங்களைப் பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியுள்ளனர்.

தட்டுத்தடுமாறி கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்கள் இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

வழிப்பறிக் கொள்ளையர்கள் போல மீனவர்களின் மீன்கள், கைக் கடிகாரங்களை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றுள்ளது ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thatstamil <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



[b]
***** தணிக்கை

Print this item

  மீண்டு(ம்) வந்திருக்கிறேன். நண்பர்களுக்கு வணக்கம்....
Posted by: Luckyluke - 12-27-2005, 01:05 PM - Forum: அறிமுகம் - Replies (3)

மீண்டு(ம்) வந்திருக்கிறேன். நண்பர்களுக்கு வணக்கம்....

Print this item

  சூர்யாவுக்கும், எனக்கும் விரைவில் திருமணம்: ஜோதிகா பேட்டி
Posted by: SUNDHAL - 12-27-2005, 11:27 AM - Forum: சினிமா - Replies (3)

ஜோதிகா `ஈநாடு' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-

கே: தெலுங்கில் நீங்கள் நடிக்கும் `ஷாக்' படம் பற்றி சொல்லுங்களேன்.

ஜோதிகா: `ஷாக்' படத்தில் எனது ஜோடி ரவி தேஜா. அவர் நல்ல நடிகர். எனக்கு நல்ல நண்பர். எப்போதும் கலகலப்பாக பேசுவார். ராம்கோபால் வர்மா தயாரிக்கும் இந்த படத்தில் நடிப்பது பெருமையான விஷயம்.

கே: தெலுங்கு படங்க ளில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற வர்களிடம் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையே?

ஜோதிகா: ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில் நடிக்கவில்லை.

எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். அடுத்து டைரக்டர் பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்கு கதைதான் முதலில் `ஹீரோ' மற்றவை அதற்குப்பிறகுதான.

கே: `சந்திரமுகி' படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றி?

ஜோதிகா: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை.

கே: அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள்தான். எப்படி உங்களை தேர்ந் தெடுத்தார்கள்?

ஜோதிகா: அந்த படத்தில் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததைவிட அது நன்றாக வந்தது. இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.

கே: வெற்றி யாருக்கு, அந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்ன?

ஜோதிகா: வழக்கம்போல்தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோப னாவும், சவுந்தர்யாவும் நடித் திருந்தார்கள். அëந்த படத்தை பல முறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.

கே: படத்தின் வெற்றியில் யாருக்கு பங்கு அதிகம்?

ஜோதிகா: ரஜினிசாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகர்களும் வெற்றிக்கு காரணம்.

கே: உங்களை சுற்றித்தான் கதை வருகிறது. இதில் ரஜினிக்கு வெற்றி என்பது எப்படி பொருந்தும்?

ஜோதிகா: ரஜினிசாரின் படத்தில் அவரது பெயருடன் படத்தின் தலைப்பு பெயராக எனது பெயரும் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இதற்காக ரஜினிசாருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

கே: உங்கள் கண்கள் அவ்வளவு பெரிதாக தெரிகிறதே எப்படி?

ஜோதிகா: ஏற்கனவே என்னுடைய கண்கள் பெரியவை தான். மேலும் கொஞ்சம் பெரிதாக்க முடியும். டைரக்டரும், கேமராமேனும் அந்த காட்சியை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பது அதைவிட முக்கியம்.

கே: சூர்யாவுடன் உங்களுக்கு திருமணம் எப்போது?

ஜோதிகா: அதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும். நான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன. அவரும் பிசியாக இருக்கிறார்.

கே: எப்போது என்று சொல்ல முடியுமா?

ஜோதிகா: விரைவில் நடக்கும். எல்லோரிடமும் சொல்லிவிட்டுத்தான் நாங்கள் திருமணம் செய்வோம்.
கே: `ஜில்லுன்னு ஒரு காதல்' படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கிறீர்களே அதைப்பற்றி...

ஜோதிகா: அவருடைய சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார் ஆகிறது. தெலுங்கிலும் இது வெளியாகும்.

இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.
Thnaks;Malaimalar...

Print this item

  தினமணி
Posted by: MEERA - 12-27-2005, 10:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு புலிகளை குற்றம் சாட்டுவதா?: மகிந்தவுக்கு 'தினமணி' நாளேடு கேள்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச அவசர கோலத்தில் குற்றம் சாட்டுகிறார் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.


தினமணி நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

அரசியல் படுகொலைகள் வாடிக்கையாகிவிட்ட இலங்கையில்இ தமிழர் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மட்டக்களப்பு தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்றபோது இவ்விதம் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடும் என்று எதிர்பார்க்காத காரணத்தால் அந்த எம்.பி.யின் பாதுகாவலர்களால் அவரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது. பரராஜசிங்கம் முதலில் தேவாலயத்துக்கு வருவதாக இல்லை என்றும் பிறகு தொலைபேசி மூலம் வற்புறுத்தப்பட்டதன் பேரில்தான் வந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆகவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றே தோன்றுகிறது.

அரசியல் படுகொலையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிற வன்முறை அமைப்புக்கள்இ ஒருவரைக் கொன்ற பின்னர் தாங்கள் ஏதோ சாதித்து விட்டதைப்போல காட்டிக் கொள்ள அக் கொலையைத் தாங்கள்தான் செய்ததாக அறிவிப்பு விடுப்பது வழக்கம். ஆனால் பரராஜசிங்கம் விசயத்தில் இவ்வித அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

அமைதிக்கும் அன்புக்கும் உறைவிடமான தேவாலயத்தில் தாங்கள் நடத்திய படுகொலை மோசமான இழிசெயல் என்பதை உணர்ந்து வெட்கி அவர்கள் அவ்விதம் கள்ள மௌனம் சாதிக்கலாம். இலங்கையில் கடந்த பல ஆண்டுகளில் எவ்வளவோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால் வழிபாட்டுத் தலத்தில் அரசியல் படுகொலை நடப்பது இதுவே முதல் தடவை.

பரராஜசிங்கம் படுகொலையை இலங்கை அதிபர் ராஜபக்ச வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று அவர் அவசரக்கோலத்தில் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை ராணுவமோஇ நேரடியாக விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பரராஜசிங்கம் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்தவர்.

விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து கருணா கோஷ்டியினர் தனியே பிரிந்த பிறகும் அவர் தொடர்ந்து பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பைத்தான் ஆதரித்து வந்தார்.

ஆகவேதான் உயிர் நீத்த பரராஜசிங்கத்துக்கு "மாமனிதர்' என்ற பட்டத்தை பிரபாகரன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரராஜசிங்கத்தை இலங்கை ராணுவத்தின் ரகசியத் தகவல் பிரிவும் அவர்களின் கைப்பாவையாக உள்ள ஆயுதம் தாங்கிய கும்பல்களும்தான் படுகொலை செய்துள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பரராஜசிங்கம் எளிய மனிதர். தமிழர்கள் சார்பில் உரக்கக் குரல் எழுப்பி வந்தவர். மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் செயல்களைக் கண்காணிப்பதற்கென்றே தனி அமைப்பு உள்ளது. அதில் அவர் முக்கிய உறுப்பினராகத் திகழ்ந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக அவர் மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பட்டியலிட்டு அவற்றை உலக சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

மேற்கூறிய அமைப்பைச் சேர்ந்த சந்திரநேரு கடந்த பிப்ரவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரராஜசிங்கம் காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்திலும்இ சார்க் நாடுகளின் நாடாளுமன்றச் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

இப் படுகொலையானது இலங்கையில் 2002 பிப்ரவரியிலிருந்து அமலில் இருந்து வரும் சண்டை நிறுத்தத்தைக் குலைத்து மறுபடி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுப் படைகளுக்கும் இடையே போர் மூள வழிவகுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இவ்வித நிலைமை ஏற்படுவதைத் தடுத்துஇ பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படிச் செய்யஇ நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் முயன்று வருகின்றனர்.

இப்போது இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் இந்தியாவும் இதையே வலியுறுத்தும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி - புதினம்.

Print this item

  பருத்தித்துறையில் 10 படையினர் பலி
Posted by: அருவி - 12-27-2005, 09:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

பருத்தித்துறையில் இன்று (Dec. 27) இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 10 படையின் பலியானதுடன் 7 படையினர் காயமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

மூலம் தமிழ்நெட்

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16656

Print this item

  ¿¢¨ÉôÀÐñ¼¡ ?
Posted by: N.SENTHIL - 12-27-2005, 04:54 AM - Forum: கவிதை/பாடல் - Replies (31)

<b>¿¢¨ÉôÀÐñ¼¡ ?</b>


þ¨Á ¾¢Èó¾ ¸É׸ǡö - ¿¨Á
ÁÈóÐ ¸¼ó¾ «ó¾ ¸¡Äí¸¨Ç
¿¢¨ÉÅ¢Õ츢Ⱦ¡ ¯ÉìÌ

§Á¡¾Ä¢ø ¯ñ¼¡Ìõ ¸¡¾ø¸¨¾
º¢É¢Á¡ì¸¨Ç Óð¼¡û¾É¦ÁÉ - º¢Ã¢òÐ
Åó¾ ¿¡ý §Á¡¾Ä¢ø ÐÅí¸¢Â ¿õ - ¸¡¾¨Ä
º¢Ã¢ò¾Àʧ ¿¢¨ÉòÐ À¡÷츢§Èý

ŢʠŢÊ ¸ñŢƢòÐ ¯ý - Å¡ºÄ¢ø
§¸¡ÄÁ¢ðÎ즸¡ñÊÕó¾¡ö ´÷ §À¡¸¢ þÃ× - ¦À¡í¸¨Ä
ÅçÅüÚ þÃ¦ÅøÄ¡õ °÷ ÍüÈ¢ ţΠ¾¢ÕõÀ¢Â - ±ý
Á¢¾¢ÅñÊ ¯ý §¸¡ÄÁ£§¾È - §À¡÷째¡Äõ
âñ¼¡§Â ! ¿¢¨ÉÅ¢Õ츢Ⱦ¡ ?

«§¾¡ §À¡Åо¡ý ±ý «ñ½ñ - ±É
¿£ ¸¡ð¼ Ó¾ø ¿¡û «Å¨½ «ÊòÐ ÒÃðÊÂÐ -±ý
¿¢¨ÉÅ¢ø ÅóÐ À󦾡ýÚ - ±ý Å¢üÈ¢ø
¯Õñ¼¨¾ ¦ÁøÄ¢Â Òýɨ¸Ô¼ý
¿¢¨ÉòÐ À¡÷츢§Èý

¯ý ¾ó¨¾ ±Îò¾ À¢üº¢ - ÅÌôÀ¢ø
±ÉìÌ À¢Ê측¾ þó¾¢ ÀÊì¸ - ¿¡û
¾ÅÈ¡Áø ÅóÐ ¿¡ý ¿¢ýÈ - ¿¡ð¸û
¿¢¨ÉÅ¢Õ츢Ⱦ¡ ¯ÉìÌ ?

±ý «ñ½½¢ý ÅñÊ ¾¢ÕÊ - ¯ý
Å£ðÎò¦¾ÕÅ¢ø º¡¸ºõ - ¦ºöÂ
ºÃ¢Â¡ö ¯ý Å¡ºÄ¢ø Å¢ØóÐ - ¯ý
ÌÎõÀ§Á Åó¦¾ÉìÌ ¨Åò¾¢Âõ - À¡÷ò¾¨¾
¿¢¨ÉòÐ ¿¢¨ÉòÐ º¢Ã¢ô§Àý.

´÷ Á¨Æì¸¡Ä Á¡¨Ä þó¾¢Ã¡ ¿¸Ã¢ý - ¡ÕÁüÈ
¿£ñ¼ Å£¾¢¸Ç¢ø Ţâò¾ ̨¼¨Â ¯Â§Ã - à츢
À¢ÊòÐ §ÅñΦÁý§È ¿¼óÐ ¦ºýÈ -¿¡û
µù¦Å¡Õ Á¡Ã¢ì¸¡ÄÓõ ¯ý ¿¢¨ÉÅ¢ø ÅÕÁ¡?

¿£ ÁÕòÐÅõ ÓÊòÐ - À¢üº¢ìÌ ¦ºýÚ
´Ã¡ñÎ ÓÊóÐ ÅóÐ - ¿õÁ ¸¡¾ø
ºÃ¢ÅáÐôÀ¡ ' ¿¡Ûõ ¿øÄ¡ §Â¡º¢òРŢð§¼ý - º¡Ã¢
±É¡øÄ¢î ¦ºýÈ ¿¡¨Ç ¯ÉìÌ À¢Êò¾ ±ý - Òýɨ¸Ô¼ý
¿¢¨ÉòÐÀ¡÷츢¦Èý ,±ô§À¡§¾Ûõ ¯ý Å£¾¢¸¼ì¨¸Â¢ø[b]

Print this item